Search This Blog

27.8.11

தமிழில் அர்ச்சனை என்பது விதண்டாவாதமா?இரட்டை வேடம் ஏன் தினமணியே?


இரட்டை வேடம் ஏன் தினமணியே?

நல்ல சட்டமாகத்தான், சத்தமாகத்தான் பேசுகிறார் தினமணி ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர்வாள்.

திண்டிவனத்துக்கு அடுத்த மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமி கள் தமிழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மிகவும் வக்கனையாகவே பேசியுள்ளார்.

தமிழ் வேறு, சைவம் வேறு என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசி யம் இல்லை. இரண்டும் ஒன்றோடு பிணைந்து நிற்பவை. தமிழையும், சைவத்தையும் வளர்ப்பதற் காக ஏற்பட்டவைதான் சைவத் திருமடங்கள். தமிழ் மட்டுமே ஒரு கட வுள் மொழி என்று தமிழ் மொழிக்கு ஒரு தனிச் சிறப்புண்டு.

இறைவனைக் கடவுள் என்று குறிப்பிட்டு ஆண்ட வனுக்குக் காரணப் பெயர் சூட்டிப் போற்றிய மொழி நமது தமிழ் மொழி மட்டுமே. ஆழ்வார்களும், நாயன்மார் களும் தமிழை வளர்த் தார்கள்

என்று சாங்கோ பாங்க மாகப் பேசி இருக்கிறார் தினமணி ஆசிரியர்வாள் (தினமணி 20.8.2011, பக்கம் 6)

இதே தினமணியில் இரண்டு நாள்கள் கழித்து (22.8.2011) கருத்துக் களத்தில் எதை இடம் பெறச் செய்துள்ளார்? சென்னை அண்ணாநகர் கிழக்கு என்ற முகவரியோடு லா.சு. ரங்கராஜ அய்யர்வாள் என்ன எழுதியிருக்கிறார்?

தமிழில்தான் அர்ச்சனை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போன்ற விதண்டாவாதக் கொள்கைகளும் மறுபரிசீலனைக் குரியவை - என்று
எழுதி இருக்கிறார்.

தமிழ் மட்டுமே கடவுள் மொழி என்று தினமணி ஆசிரியர் கூறிய கூற்று 20 ஆம் தேதியதினமணியில் இடம் பெறுகிறது - அப்படிக் கூறுவது விதண்டா வாதம் என்று 22 ஆம் தேதி தினமணி கூறுகிறது.

ஏனிந்த இரட்டை வேடம்? யாரை ஏமாற்ற இந்த இரட்டை வேடம்?

தமிழும் கடவுளும் ஒன்றே என்று ஆகிவிட்ட பிறகு அந்தத் தமிழில் வழிபாடு நடத்தக் கூடாதா? அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார் என்று சேக்கிழார் எழுதி இருப்பதெல்லாம் பிரமாதம்தான்.

ஆனால் அது ஏட்டுச் சுரைக்காய்தானா? தமிழில் அர்ச்சனை என்பது விதண்டாவாதம் என்று தினமணி கூறுகிறதே.

சிதம்பரம் நடராசன் கோயில் சைவக் கோயில் தானே? சைவமும், தமிழும் வேறு வேறு அல்ல என்று கூறும் திருவாளர் வைத்திய நாதய்யர்வாளே!

திருவாசகத்துக்கு உருகாதார் வேறு எதற்கும் உருகார் என்று சொல்லப் படும் அந்தத் திருவாசகத் தைத்தானே ஓதுவார் ஆறுமுகசாமி என்ற பக்தர் - முதியவர் சிதம்பரம் சிற்றம்பலத்தில் பாடினார்?

அவருக்குக் கிடைத்த பரிசு என்ன? அடி உதை தானே! ஒரு முறையா, இருமுறையா? பலமுறை உதைபட்டுள்ளாரே!

அந்தத் தில்லைக் கூத் தாடிதான் ஓடி வந்து தடுத் தாரா? அல்லது இந்தத் தினமணிதான் கண்டித்து எழுதிற்றா?

தினமணி ஆசிரிய ரின் குருநாதர் திருவாளர் சோ ராமசாமி அய்யரும் என்ன எழுதினார்?

மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்ற தலைப் பில் துக்ளக்கில் (18-11-1998) தலையங்கமே தீட்டித் தள்ளினாரே.

நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ் கிருதத்தில் மொழி பெயர்த் தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும், பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருதத் துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும். புனிதம் இருக் காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு என்று எழுதவில்லையா?

அர்ச்சனை செய்ய ஸம்ஸ்கிருதத்திலிருந்து தான் மொழி பெயர்க்க வேண்டும் என்று யார் சொன்னார்? தமிழில் அர்ச் சனைப் பாட்டு இல்லையா? அர்ச்சனைப் பாட்டேயாகும் என்று சேக்கிழார் எழுதி யுள்ளதன் அர்த்தம் என்ன?

ஒலிக்குத்தான் முக்கி யத்துவமாம். இது கடவுளையே கொச்சைப்படுத்து வது ஆகாதா?

அப்படிப் பார்க்கப் போனால் ஸம்ஸ்கிருத மொழியின் ஒலியைவிட தமிழின் ஒலி இசை அருவி போன்றதல்லவா?

அடி வயிற்றிலிருந்து மாரிக்காலத் தவளை போல கத்துவதுதானே ஸம்ஸ் கிருதம்?

அருட்பா பாடிய வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் என்ன கூறு கிறார்?

இடம் பத்தையும், ஆர வாரத்தையும், பிரயாசத்தையும் பெருமறைப்பையும் உண்டு பண்ணுகிற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது. பயிலுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வளத்தாற் கிடைத்த தென்மொழி யொன்ற விடத்தே மனம் பற்றச் செய்து அத்தென் மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளுவீர்

என்கிறார் வடலூரார்.

(திருவருட்பா 6 ஆம் திருமுறை - வசன பாகத் தில் சத்தியப் பெருவிண் ணப்பம் என்ற தலைப் பின் கீழ் வருவது)

இரட்டை வேடம் ஏன் தினமணியே?


----------------------- “விடுதலை” 24-8-2011

4 comments:

காந்தி பனங்கூர் said...

புரியாத மொழியில் அர்ச்சனை பண்ணும் இவர்கள் தமிழர்களா?

Thamizhan said...

உஞ்சவிருத்தி செய்து வயிற்றை நிரப்ப மட்டும் தமிழ் வேண்டும். ஆனால் மாமா வேலை செய்வதற்குத் தமிழ் வேண்டாம், தேவ பாஷை தான் !

கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே ஏன் இந்த மாமாக்கள் ?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
காந்தி பனங்கூர்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Thamizhan