Search This Blog

28.8.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -8

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (8) மூக்கறுபடும் ஆச்சாரியார்!


1919ஆம் ஆண்டில் ஈ.வெ.ரா. காங்கிரஸில் சேர்ந்தார். 1923-ஆம் ஆண்டு வரையில் காங்கிரஸ் மகாசபையின் கொள்கைகளான கதர்த் திட்டம், மது ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிரவேசம், அனைவருக்கும் சம உரிமைகள் முதலியவற்றை ஆதரித்து ஈ.வெ.ரா. தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

அன்றைய காங்கிரஸ் மகாசபையில் ஈ.வெ.ரா. சேர்ந்த மிகவும் குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற மிக உயர்ந்த பதவி அவருக்கு அளிக்கப் பெற்றது. காங்கிரஸில் ஓர் உயர்ந்த அந்தஸ்தும் அவருக்குக் கிடைத்தது.

ஈ.வெ.ரா.வுக்கு அந்தப் பெருமைகள் கிடைக்குமாறு செய்தவர் ராஜாஜியே! இந்த உண்மையைப் பல வருடங் களுக்குப் பின்னர் ஈ.வெ.ரா.வே பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

என்னை ராஜாஜி அவர்கள்தான் முதலில் கோயம்புத்தூர் ஜில்லா காங்கிரஸ் செக்ரட்டரி ஆக்கினார். பிறகு, அவர்தான் என்னைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஆக்கினார். என்னிடம் முழு நம்பிக்கை வைத்து, என்னையே அவர், நமது தலைவர் நாயக்கர் என்று அழைத்ததோடு, பார்ப்பனரில் வெகு பேரை என்னைத் தலைவர் என்று அழைக்கும்படி செய்தார் என்று ஈ.வெ.ரா. விடுதலை நாளிதழின் தலையங்கத்தில் (26.12.1972) எழுதியிருந்தார். அந்தத் தலையங்கம், ராஜாஜி அவர்கள் மறைந்தபோது ஈ.வெ.ரா. எழுதியது ஆகும் என்கிறது துக்ளக்

ராஜாஜி மறைந்தபோது தன் ஆப்த நண்பர் குறித்து எழுதிய வாசகங்கள் இவை! கொள்கைக் கோட்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும் மனிதத்தன்மை என்னும் பண்பில் தந்தை பெரியார் சிகரத்தில் இருக்கிறார் என்பதுதான் உண்மை.

தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தபோது ஈரோடு மாநகரில் மங்கா ஒளி விளக்காகத் திகழ்ந்து கொண்டிருந்தவர். அந்த அளவுக்கு ஆச்சாரியார் சேலத்தில் விளங்கினார் என்றுகூட சொல்ல முடியாது - 29 பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு தான் காங்கிரசில் சேர்ந்தார் என்பது நினைவில் இருக்கட் டும். நகராட்சித் தலைவராக இருந்து அருந்தொண்டு ஆற்றியமைக்காக ராவ்பகதூர் பட்டம் அளிக்கப்பட இருந்த நிலையிலும், அதற்கெல்லாம் மசியாமல் பதவிகளை விட்டு வெளியேறி நாட்டுத் தொண்டுக்குத் தன்னை அர்ப்பணித்தவர் ஈரோட்டு வேந்தர்.

அதுபற்றி நவசக்தியில் திரு.வி.க. எழுதியது கவனிக்கத்தக்கது.

ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டில் அயர்ந்தவர் உண்டாட் டில் திளைத்தவர் வெயில் படாது வாழ்ந்தவர். ஈரோட்டு வேந்தரென விளங்கியவர். ஸ்ரீமான் நாயக்கர் தமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியார்போல் எளிய உடை தரித்து, எளிய உணவு உண்டு, இரவு பகல் ஓயாது தேசத் தொண்டிற்கே தமது வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளதை எவரே அறியார்? என்று 24.5.1924இல் ஈ.வெ.ரா. சிறைபட்டபோது நவசக்தி யில் எழுதினார் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் (நூல்: தமிழர் தலைவர் - சாமி.சிதம்பரனார்)

இந்த நிலை ராஜாஜிக்கு உண்டா? ஆகஸ்ட் போராட்டத்தில் அண்டர் கிரவுண்டாகி, அதன்பின் கொல்லைப்புறம் வழியாக காங்கிரசில் புகுந்து, காந்தியாரின் சம்பந்தியாகி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆகியவரா யிற்றே! பெரியாரோ தன்னைத் தேடி வந்த பதவிகளையும் சமூகப் புரட்சிக்காக உதைத்துத் தள்ளியவராயிற்றே! ஒப்பிட முடியுமா பெரியாருடன்? ராஜாஜிபற்றி பெரியார் எழுதியது இருக்கட்டும்!

பெரியார்பற்றி ராஜாஜியின் கணிப்பு என்ன?

முக்கியமான தமிழக தேச பக்தர்கள்மீது வழக்குத் தொடரப் பெற்று வந்த காலம் 1924 ஜூன், அவ்வாறு வழக்குத் தொடரப் பெற்றவர்களில் பெரியார் ஈ.வெ. இராமசாமி ஒருவர். பம்பாய்க்குச் சென்றிருந்த ராஜாஜி, பெரியார் ஈ.வெ. இராமசாமிமீது தொடர்ந்த வழக்கு விசாரணை அக்டோபர் 18ஆம் தேதியன்று வருகிறது என்பதற்காக, அவசரமாகத் திரும்பி வந்தார். தேவதாஸ்காந்தி மேலும் ஒரு நாள் தங்கியிருந்து விட்டுப் போகுமாறு சொன்னதைக்கூட அவர் ஏற்கவில்லை. சென்னைக்கு நான் 18ஆம் தேதி போயாக வேண்டும். அன்று தான் இராமசாமி நாயக்கரின் வழக்கு இறுதி விசாரணை. அவர்மீது அரசத் துரோகக் குற்றம் சாட்டப் பெற்றிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு நீண்ட காலச் சிறைத் தண்டனை கிடைக்கலாம். எங்களுடைய காங்கிரஸ் நடவடிக்கைகளுக்குத் தீவிரம் நிறைந்த தலைவராக (HEad And Active Master) அவர் இருந்து வருகிறார் என்று ராஜாஜி ரயிலிலிருந்து 16.10.1924ஆம் தேதி காந்திஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். (நூல்: தமிழ் நாட்டில் காந்தி - நூற்றாண்டு வெளியீடு - ஆசிரியர் அ. இராமசாமி பக்கம் 391 - 392).

இதன் மூலம் தந்தை பெரியார் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவராக காங்கிரசின் உயிரும், தலையுமாயிருந்து ஒளிவீசினார் என்பது விளங்க வில்லையா? ராஜாஜி அவர்களே தந்தை பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தார் என்பது தானே உண்மை!

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் (4.8.1965) தந்தை பெரியார் உரையாற்றி விடுதலையில் (15.8.1965) வெளிவந்த ஒரு தகவல் இதோ:

தோழர்களே, பார்ப்பனர்கள் தனியாக வீதியில் நடக்க அஞ்சிய காலத்தில், காங்கிரஸ் கூட்டம் வீதியில் போட்டுப் பேச முடியாத காலத்தில் அந்நிலைமையை மாற்றி, காங்கிரசுக்கு வீதியில் கூட்டம் போட்டுப் பேசவும், பார்ப்பான் வீதியில் நடக்கவும், ஆதிக்கத்தில் இருந்த ஜஸ்டிஸ் கட்சி, வீதியில் கூட்டம் போட முடியாத நிலையையும் ஏற்படுத்திக் கொடுத்தவன் நான் தானே?

அதற்கு முன்பு பார்ப்பனர்கள் கூட்டம் போடுவதென்றால் ஜஸ்டிஸ் கட்சி செல்வாக்குக்குப் பயந்து கொண்டு ரானடே ஹால், அந்த ஹால், இந்த ஹால் என்றுதான் போடுவார்கள். பார்ப்பான் ஆற்றுப் பாலத்தில் நடந்து செல்லும்போது அதிர்ச்சி தரும் சங்கதிகள் கேட்டு எட்டித் தண்ணீரில் குதித்த காலமும் உண்டு. வீட்டுக் கதவுகளை டப் டப் என்று தாளிட்டுக் கொண்டு வீட்டில் அஞ்சி வாழ்ந்த காலமும் உண்டு.

அந்தக் காலத்தில் தான் நான் தெரிந்தோ தெரியாமலோ முட்டாள் தனமாக காங்கிரசில் சேர்ந்தேன். இப்போது எப்படி முழு நேரமும் ஊர் ஊராகச் சுற்றிப் பிரச்சாரம் செய்கின் றேனே, அது போலவே செய்தேன்.

நான் தமிழ்நாடு காங்கிரஸ் செகரெட்டரியாக, தலைவனாக மட்டும் இல்லாமல், காங்கிரசில் முக்கிய மானவனாகவும் இருந்தேன்.

ஆச்சாரியார், சத்தியமூர்த்தி, ராஜன் போன்ற பார்ப்பனத் தலைவர்கள் எல்லாம் நம் தலைவர் நாயக்கர் என்று கூப்பிடும்படியான நிலையில்தான் இருந்தேன்.

எனக்கு ஒரு சமயம் ஈரோட்டில் உடம்பு சவுக்கியம் இல்லை. ஆச்சாரியார், ராஜன், சந்தானம் அய்யங்கார் ஆகியோர் எல்லாம் வந்துவிட்டார்கள்.

இவர்கள் எனது அருகிலேயே இரவு பூராவும் கண் விழித்து இருந்து, ஒரு நர்சைவிட அதிக அக்கறையாகப் பணிவிடை செய்தார்கள்.
அன்று ராஜாஜி ஒரு முக்கிய வேலையாக வெளியூர் போக வேண்டி இருந்தது. அவருக்கு என்னை விட்டு விட்டுப் போக மனம் இல்லை. சந்தானம் அவர்களை அழைத்து சந்தானம், நாயக்கர் உயிர் சாதாரண உயிர் அல்ல, Don’t think Naicker’s life is ordinary life ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். நானும் வந்துவிடுகின்றேன் என்று கூறிவிட்டுப் போனார். உண்மையாகவே காங்கிரசுக்கு உழைத்தேன். என்று பேசியுள்ளார்.

காங்கிரசில் தந்தை பெரியார் இருந்தவரை அவரே முதல் நிலையில் இருந்திருக்கிறார் - ராஜாஜியின் இந்தக் கருத்துக்குப் பதில் என்ன?

தமிழ்நாட்டில் காந்தி எனும் - காந்தி நூற்றாண்டு நினைவாக வெளியிடப்பட்ட அதே நூல் (பக்கம் 392) பகரும் சான்று என்ன?

காந்தியார்மீது நான் காங்கிரசில் இருந்தபோது எனக்கு விசுவாசம் இருந்தது. 1921ஆக இருக்குமென்று நினைக்கிறேன். ஈரோட்டிற்கு காந்தியார் வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கும் வந்தார். அப்போது தான் நான் அவரை முதன்முதலில் சந்தித்த தாகும்.

காந்தியார் எனக்கு இரண்டு முறை கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஒரு முறை என்னுடைய தொண்டைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். மற்றொரு முறை அவர் எனக்குக் கடிதம் எழுதியது என்னுடைய கையில் வலி ஏற்பட்டு நான் துன்பப்பட்ட சமய மாகும். நீங்கள் இராட்டையை அதிக நேரம் சுழற்றியதால் இந்த வலி ஏற்பட்டிருக்கலாம் என்று தோன் றுகிறது. ஆகையால் வலி குறையும் வரை சிறிது காலத்திற்கு இராட் டையைச் சுழற்றுவதை நிறுத்தி வையுங்கள் என்று அவர் எழுதி யிருந்தார்.

சட்டமறுப்புப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு காலம். ஆயிரக்கணக்கில் ஆண் களும் பெண்களும் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறைக்குச் சென்று விட்டார்கள். அந்தச்சமயம் இந்திய அரசுடன் சமாதானப் பேச்சு நடத்தி அரசியலில் அமைதியான நிலையை ஏற்படுத்தக் கருதி சர். சங்கரன் நாயர் ஒரு சமாதான மாநாடு கூட்டினார். சமாதானப் பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு போராட்டத்தைக் காங்கிரஸ் கைவிட வேண்டுமென்று அவர் ஒரு நிபந்தனை கூறினார்.

அதை காந்தியார் ஏற்கவில்லை. இந்தப் போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை; ஈரோட்டில் ஈ.வெ. இராமசாமியின் தங்கை, மனைவி, ஆகியோர் கையில் இருக்கிறது என்று அந்த மாநாட் டிலேயே கூறினார் என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளதே!. காந்தியார், மோதி லால் நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண் அலி சகோதரர்கள் என்று அத்தனைத் தலைவர்களும் ஈரோட்டில் தந்தை பெரியார் இல்லத்துக்குச் சென்று ஆலோசனை செய்யாத தலைவர்களே இல்லையே! தந்தை பெரியார் தான் பார்ப்பன எதிர்ப்பாளர் என்று குற்றப் பத்திரிகை படிக்கிறார்கள் - திரு.வி.க. அப்படிப் பட்டவரா?

அவர் என்ன சொல்கிறார்? தமிழ் நாட்டில் சத்தியாக்கிரகப் போருக்கு உரிய களனாக வேதாரண்யம் குறிக்கப் பட்டது. இராஜகோபாலாச்சாரியார் தண்டுகளுடன் திருச்சியினின்றும் புறப்பட்டார்.

சிதம்பரத்தினின்றும் ஒரு தண்டை நடாத்திச் செல்லத் தண்டபாணி பிள்ளை உள்ளிட்ட சிலர் முயன்றனர். அதற்கு என் தலைமை விரும்பப் பட்டது. அவ்விருப்பத்தைக் குலைக்க என் மனம் எழவில்லை. அதே சமயத்தில் இராஜகோபாலாச்சாரியார் பிடிபட்ட தும் தொடர்ந்தபோருக்கு யான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று கேள்வியுற்றேன். இராஜகோபாலாச்சாரி யார் கடிதமும் எழுதவில்லை. வேறு வழியாகத் தெரியப்படுத்தவுமில்லை. எனது நியமனம் வெறும் வதந்தி என்று கருதினேன். எதற்குஞ் சித்தமாயிருக்கலா மென்று எண்ணினேன்.

திருச்சியினின்றும் புறப்பட்ட படையையன்றி வேறுபடைகள் யாண்டும் திரளலாகாதென்றும், அவை வேதாரண்யம் நோக்கலாகாதென்றும் ஓர் அறிக்கை இராஜகோபாலாச் சாரியாரிடமிருந்து வெளிவந்தது. ஆச்சாரியாருக்குப் பின்னர் கே. சந்தானம் நியமிக்கப்பட்ட செய்தியும் எட்டியது. சிதம்பர முயற்சி சிதறியது. எழுந்த என் உள்ளமும் விழுந்தது. நிகழ்ந்தன இவ்வளவே.

பத்திரிகை உலகம் திருவிளையாடல் புரியத் தொடங்கியது. சில பத்திரிகை கள். கலியாணசுந்தர முதலியார் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சித்தமாயிருந்தார்; ஏமாற் றப்பட்டார். ஒரு பிராமணரல்லாதார் தலைமைபூண்டு படையைத் திரட்டிச் செல்லப் பிராமணர் கண் பார்க்குமோ என்று எழுதின. வேறு சில பத்திரிகைகள், முதலியார் வேதாரண்யம் புறப்பட்டு விட்டார் என்று திரித்தன. மற்றுஞ் சில பத்திரிகைகள் உண்மையை வெளியிட்டன. பத்திரிகைச் செய்திகள் நாட்டைக் குழப்பின. போர் முடியுந் தறுவாயில் எனக்கு அழைப்புகள் வந்தன. அவைகள் என் மனத்தைக் கவரவில்லை

(திரு.வி.க. எழுதி வைத்த வாழ்க்கைக் குறிப்பு - மி பக்கம் 318 -319)

மிதவாதியான திரு.வி.கவே மனம் புழுங்கும் அளவில் ஆச்சாரியாரே பார்ப்பனர் உணர்வோடு நடந்து கொண்டு இருக்கிறாரே! எவ்வளவுப் போர்வையைப் போட்டு மூடினாலும் பார்ப்பனர்களின் பூணூல் குணம் முண்டியடித்துக் கொண்டுதானே மேலே எழுந்து நிற்கிறது.

சென்னைக்கு வந்த காந்தியாரை 1.2.1946 அன்றுதான் முதன் முதலாக ம.பொ.சி. காந்தியாரைச் சந்திக்கிறார். திருவாளர் சி. ராஜகோபாலாச்சாரியார் ம.பொ.சி.யை அழைத்துச் சென்று காந்தியாரிடம் அறிமுகம் செய்து வைக்கின்றார்.
எப்படி சொல்லி அறிமுகம் செய்து வைக்கின்றார் என்பதுதான் இதில் முக்கியமானது.

எதற்கெடுத்தாலும் ம.பொ.சி.யைத் துணைக்கழைக்கும் துக்ளக்குக்கும் கே.சி. லட்சுமி நாராயணருக்கும் ஒரு சேதி... அந்த ம.பொ.சி.யைக் காந்தியாரிடம் அக்ரகாரத் தலைவர் ராஜாஜி எப்படி அறிமுகப்படுத்தினார் தெரியுமா?

கள் இறக்குவோர் சமூகத்தைச் சேர்ந்தவர் இவர் என்று அறிமுகம் செய்து வைக்கின்றார்

(ஆதாரம்: தமிழ்நாட்டில் காந்தி - பக்கம் 918)

எதிலும் ஜாதி பார்க்கும் குணம் ஆச்சாரியாரைச் சார்ந்தது.

வழக்கை வாபஸ் வாங்கிய சி.ஆர். ஆச்சாரியார்

1938ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த ஆச்சாரியார் அவர்கள் செய்த நெஞ்சத்துணிவான அக்கிரமங்களில் ஒன்று மட்டப்பாறைக் கலவர வழக்கை திரும்பப் பெற்றதாகும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சாதிபதி ஆரியர் ஒருவர் மதுரை வட்டத்திலுள்ள மட்டப் பாறை கிராமத்தில் ஏழைக்குடி மக்களை அடித்தும் பல குடிசைகளுக் குத் தீ வைத்தும் அட்டகாசம் புரிந்தார். கட்சி பலமும் பண பலமும், ஆட்சி ஆதரவும் காலித்தனமும் ஒன்று சேர்ந்து விட்டால் போலீசும், நீதியும் நெருங்க முடியுமா? இந்த லங்காதகன வேலையை அப்படியே அழுத்தி விடுவதற்கான முயற்சி நடைபெற்றது. ஆனால் அப்போது இப்பகுதியில் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த ஆர்.வி. ராஜன் என்ற நேர்மையாளர் (கீவளூரில் ஓய்வு) ஆட்சிக்கும் பணத் துக்கும் அஞ்சாமல் தீ வைத்த ஆரியர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கி விட்டார். அப்பொழுது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த வெள்ளையரும் இல்வாழ்க்கைத் தொடர்ந்து நடக்கு மாறு உத்திர விட்டார். ஆனால் போலீஸ் மந்திரியான முதலமைச்சர் ஆச்சாரியார் அவர்கள் தம் இனத்தார் ஒருவர்மீது வழக்குத் தொடர சம்மதிப்பாரா? சர்க்கார் இவ்வழக்கை வாபஸ் செய்து விட்டனர் என்று உத்தரவு பிறப்பித்துவிட்டார்.
(- விடுதலை 31.10.1955 தலையங்கம்)

தன் இனத்தவரைக் காப்பாற்ற அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடியவர்தான் ஆச்சாரியார் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

பிரதமர் நேரு மறைந்தபோது அகில உலகமும் நேருஜிக்குச் செலுத்த வேண் டிய புகழ் மாலைகள் யாவும் அவரது தனிப்பட்ட குண விசேஷங்களுக்குத் தானேயன்றி, அவரது கொள்கைக்கு அல்ல என்பதை அவர் (புதிய பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி) முக்கிய மாக உணர வேண்டியது. என்றார் ராஜாஜி.

மேலும், அதே வழியில்தான் நாங்களும் செல்வோம் என்று புதிய மந்திரி சபையினர் முடிவு செய்தால் அதுவே விவேகமாகாது. நேருஜிக்கு செய்யும் மரியாதையும் ஆகாது. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது தான் நேருஜியின் ஒரே ஆசை. அதற்காக அவர் குறிப்பிட்ட மார்க்கத்தைப் பின்பற்றினார். அவற்றில் கண்ட குற்றங் களை அகற்றி, நல்ல மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்துத் தேச சுபீட்சத்தை - பெற்றுத் தர முடியுமானால் அதுவே நேரு அவர்களின் ஆன்ம சாந்திக்குரிய சிரார்த்தமாகும். என்றார்.

மறைந்த ஒரு தலைவரைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதுபோல ஆரம்பித்து, அவர் கொள்கையை மட்டம் தட்டிப் பேசுவது எந்தத் தரத்தைச் சேர்ந்தது? நேரு கொள்கைக்கு விரோதமாக அவரது ஆன்மா சாந்திக்குச் சிரார்த்தம் என்று பேசுவதெல்லாம் ராஜாஜி பெரிய மனிதர் என்ற போர்வையில் செய்யும் குசும்புதானே!

பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியோ நேரு கட்டிய அஸ்திவாரத்தின்மீது நமது கட்டடத்தைக் கட்டுவோம் என்று கூறிவிட்டார் என்பது வேறு சங்கதி.

அந்த லால்பகதூர் சாஸ்திரியைப் பற்றியும் என்ன கூறினார் ராஜாஜி?

ஸ்ரீலால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பெயருக்குப் பின்னால் வரும் சாஸ்திரி என்ற பட்டப் பெயர் அவருடைய சாதியைக் குறிக்கும் சொல்லாகவோ குடும்பப் பெயராகவோ சாதாரணமாகக் குறிப்பிடப்படவில்லை என்பதையும், காசி வித்யாபீடத்தில் அவர் சாஸ்திரங்களைப் படித்துத் தேர்வு பெற்றதாக அவரால் பெறப்பட்ட படிப்புப் பட்டமே! என்பதையும் முதலில் மக்கள் அறியச் செய்ய வேண் டியது அவசியமாகிறது.

அவர் சாதாரண லால்பகதூரே ஆவார். பி.ஏ., எம்.ஏ., போன்ற படிப்புப் பட்டங்களைப் பெற்றவர் போன்றே இவர் வித்யாபீட சாஸ்திரி ஆவார். திரு. சாஸ்திரி என்று குறிப்பிடுவதும் திரு பி.ஏ., திரு எம்.ஏ. என்று குறிப்பிடுவது போன்றதாகவே ஆகும்.

மற்றும் லால்பகதூர் என்பதில் உள்ள பகதூர் என்பதும் ஒரு பட்டமோ அல்லது தகுதி காட்டும் கவுரவமோ அல்ல. அது அவரது சொந்த பெயரே ஆகும் என்று சி.ஆர். என்ற கையொப் பம் இட்டு எழுதினார் என்றால் (சுயராஜ்யா 1.2.1964).

இதன் பொருள் என்ன? சாஸ்திரி பூணூல் போட்ட நம்பளவாள் அல்ல; ஏமாந்து விடாதீர்கள் என்று பார்ப் பனர்களுக்கு அடையாளம் காட்டும் அசல் அக்ரகார குணம்தானே!

ஆச்சாரியார் அப்பட்டமான பார்ப்பன ஜாதி வெறியர் - என்பதற்கு இன்னுமொரு ஆதாரப்பூர்வமான தகவல் உண்டு - சுயவிமர்சனம்கூட.!

Infact, in one occasion Rajaji Proudly said that he valued his Brahmin hood more than his chief Minister ship (CARAVAN -- APRIL (1) 1978 Gandhiji’s carusade against Casteism)

முதலமைச்சர் என்ற பதவியைவிட பிராமணன் என்ற தகுதியையே நான் அதிகமாக மதிக்கிறேன் என்று ராஜாஜி கூறினார். என்றால், அவர் என்ன பெரிய மனிதர் பண்பாளர் - பொது நலத் தலைவர்?

ராஜாஜியின் இந்த ஜாதி உணர்வை நேரிடையாக அறிந்தவர் என்ற முறையில்தான் சென்னை உயர்நீதிமன் றத்தில் தந்தை பெரியார் மீது போடப் பட்ட நீதிமன்ற அவதூறு வழக்கில், கீழ்க்கண்ட கருத்துகளையும், தகவல் களையும் தந்தை பெரியார் பதிவு செய்தார்.


பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சி யாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான். எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா? என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து நான் சொல்லுவதைத் தவறு என்று கருதலாம். நம் நாட்டில் இன்றைய தினம் உள்ள பார்ப்பனர்களில் ஆச் சாரிய புருஷர்களாய் இருக்கிறவர் களைத் தள்ளிவிட்டு, எல்லோரையும் ஒன்றுபோல் பாவித்து பொதுஜன நன்மைக்காகப் பாடுபடுகிற பார்ப்பனர் கள் என்று எண்ணியிருக்கின்ற தன் மையில், உயர்ந்த சீர்திருத்தக்காரர் - நாட்டின் விடுதலைக்காக பெரிய தியாகங்களைச் செய்தவர்கள் என்ற தன்மையில், இதுவரையில் எந்த இந்தியனும் வகித்திராத உயர்ந்த பதவி வகித்தவர்கள் என்கிற தன்மையில், முதல் வரிசையில் முதல்வராக இருக்கும் மாஜி கவர்னர் ஜெனரல் உயர்திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சொல்லுகிறார்கள்: நான் வேத, சாஸ்திர, புராண, இதிகாச, உபநிஷத் தர்மங்களில் முழு நம்பிக்கை உடை யவன்; ஜாதிப் பிரிவில் அதாவது, வர் ணாஸ்சிரம தர்மத்தில் மிக்க நம்பிக் கையும் கவலையும் உடையவன்; அவைகளைப் பரப்பவும். நிலை நிறுத்த வுமே நான் பாடுபடுகிறேன்; இனியும் அதற்காகவே பாடுபடுவேன் என்று சொல்லுகிறார்: எழுதுகிறார்: அதற்கு வேண்டி காரியங்களையும் செய்கிறார் என்றால், இனி யாரை மனதில் வைத்துக் கொண்டு எல்லா பார்ப்பனர்களும் இப்படித்தான் இருப்பார்களா? என்று நினைப்பது? வாயில் _ நாக்கில் _ குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது. பிறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைத் தின்னாது. அதுபோல வாக்கும் நம் பார்ப்பனர்கள் தன்மை என்பது உயர்நீதிமன்ற வரலாற்றில் இதற்கு முன் யாரும் பதிவு செய்திராத அரிய கருத்துரையை ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்து விட்டாரே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
(நூல்: நீதி கெட்டது யாரால்?)

ராஜாஜிபற்றி நேரு

ஆச்சாரியாருக்கும் (C.R.) உலகத் திற்கும் இன்று சம்பந்தம் இல்லை. அவர் ஒரு கண்டெம்டு மெஷின் _ வேலைக்கு லாயக்கற்றவர். அவர் பேச்சு செயல்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் பழுதாகி வெளியில் போடப்பட்ட இயந்திரமே! என்று ஜவகர்லால் நேரு (20.6.1964) சரியாக எடை போட்டுத் தூக்கி எறிந்து விட்டாரே!

அக்கிரகார உணர்ச்சியுடன் அக்கிரமமாக எழுதுகோல் பிடிக்கும் லட்சுமி நாராயண அய்யர்கள் இதைப்பற்றியெல்லாம் என்ன கூற முடியும்?

பெரியாருக்கு எதிராக ஏதேதோ சந்தர்ப்பத்தில் எழுதுகோல் பிடித்தவர் களையெல்லாம் தேடி அழைத்து வந்து பந்தியில் உட்கார வைப்பவர்கள் - நேரு வையே அழைத்து வந்து ஆச்சாரியாரை அம்பலப்படுத்தி விட்டோமே _ என்ன பதில்?

ஆச்சாரியார்பற்றி அண்ணல் அம்பேத்கர்

தாழ்த்தப்பட்டோருக்காக நீதிக் கட்சியும், திராவிட இயக்கமும் தந்தை பெரியாரும் ஆற்றிய அருந்தொண்டு களை பட்டியலிட்டுக் காட்டியிருந் தோம். அக்கிரகாரத்தின் ஆனந்த பைரவி ராகமாகிய ஆச்சாரியார்பற்றி அண்ணல் அம்பேத்கர் படம் பிடித்துக் காட்டியது மிகவும் முக்கியமானது.

நான் அந்தக் காலத்தில் எக்சிகி யூட்டிவ் கவுன்சில் மெம்பராக இருந்த போது வெள்ளைக்கார வைசிராயுடன் பேசி, விளக்கி, தாழ்த்தப்பட்ட இனத் திலிருந்த திறமைமிக்க மாணவர்களைப் பொறுக்கி எடுத்து, மேல் நாட்டுக்கு அனுப்பி, கல்வி பெற வசதியளிக்கும் திட்டத்தை சர்க்கார் செய்ய வேண்டும் என்பதை அவர் ஒப்புக் கொள்ளும்படிச் செய்தேன்.

அதன்படி அப்பொழுது ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாயை ஒதுக்கினார்கள். இது தொடர்ந்து நடந்து வந்தது. நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகியவுடன் என் நண்பர் ராஜகோபாலாச்சாரியார் இதை ஒழித்துக் கட்டிவிட்டார் (Report of Backward Calsses Commission Vol III பக்கம் 75 பாரா 2) என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சி மிக்க தலைவர் அண்ணல் அம்பேத்கரும் ஆச்சாரியாரின் பூணூல் புத்தியை அதிகாரப்பூர்வமாக அம்பலப் படுத்தி விட்டாரே! என்ன பதில்?

மூக்கறுபட்டார் ராஜாஜி

அண்ணா மறைந்த நிலையில் சென்னை கடற்கரையில் இரங்கல் கூட்டம் 8.2.1969 அன்று நடைபெற்றது. தந்தை பெரியார், பிரதமர் இந்திரா காந்தி, ராஜாஜி, கலைஞர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டனர். ஓர் இரங்கல் கூட்டத்தில் எதைப் பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் பேசி, பெரியாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாரே!

ராஜாஜி என்ன பேசினார்?

அண்ணா அவர்கள் சிறுவயதில், கடவுள் - மத நம்பிக்கையற்றவராக இருந்தார். வயதானதும் கடவுள், மத நம்பிக்கை உடையவராகி விட்டார் என்று குறிப்பிட்டார். (ஆச்சாரியார் இப்படிப் பேசியதை - திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் அப்படியே எழுதி தந்தை பெரியாரிடம் கொடுத்தார்)

ஆச்சாரியாருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தந்தை பெரியார் அந்தக் கூட்டத்திலேயே பேசினார்.

அண்ணா அவர்கள் ஓர் பகுத்தறிவுவாதி. கடவுள், மதம், சாஸ்திரம் சம் பிரதாயங்களில் நம்பிக்கையில்லாதவர். அவர் பதவிக்கு வந்த போதும் கடவுளை நம்பாதவர் அவர். அதனை அவர் காரியத்தில் காட்டினார். எனக்குச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன். இந்த மந்திரி சபையையே எனக்குக் காணிக்கையாக வைத்திருப்பதாக முதல் அமைச்சர் அண்ணா சொன்னார்.

அரசாங்க அலுவலகங்களில் இருந்த கடவுள் படங்களை அகற்ற அண்ணா உத்தரவு போட்டார். இதன் மூலம் தனக்கு மூடநம்பிக்கை இல்லை என்பதைக் காட்டிக் கொண்டார். சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக் கினார். அதிலே கடவுள் மதம் புகக் கூடாது என்பதற்கு வழி செய்ததுதான் முக்கியமாகும். அவர் சிறந்த பகுத்தறிவு வாதி, அவ்வளவு பெரிய மேதைக்கு 30 லட்சம் பேர் பின் தொடர்ந்தார்கள் என்றால் (இறுதி ஊர்வலத்தில்) இந்தநாட்டு மக்களை அவர் அவ்வளவு தூரத்திற்குப் பயன்படுத்தி விட்டார் என்று அர்த்தம் (விடுதலை 13.2.1969 பக்கம் 3)

என்று அருமையாக அண்ணாவைப் படம் பிடித்துக் காட்டி, லட்சோப லட்ச மக்கள் மத்தியில் ஆச்சாரியாரின் மூக்கை அறுத்தாரே அய்யா! பெரிய மனிதன் - ஆச்சாரியார் இப்படி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டு விட்டாரே என்று தலையில் அடித்துக் கொண்டனர் பொது மக்கள்.

நீதிக்கட்சியும், பெரியாரும் தேசத் துரோகம் செய்துவிட்டதாகப் பொங்கி வழிகிறார்களே! (அது உண்மையல்ல என்பதுவெளிப்படை)
இதே ஆச்சாரியாருக்கு பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் வாழ்த்து அனுப்ப வில்லையா? அப்பொழுது ஆச்சாரியாரின் கொடும்பாவி நாடு தழுவிய அளவில் எரிக்கப்படவில்லையா?

சீன ஆக்ரமிப்பின்போது இந்தியத் தரப்பில் எத்தனைப் பேர் செத்தார்கள் என்று கேட்கப் போய் கடும் கண்டனப் புயலுக்கு ஆளாகவில்லையா - ஆச் சாரியார்?

அரசியலில் முதிர்ச்சி கண்டவர் என்றும் ஆள்வதில் அசகாயசூரர் என்றும் அக்ரகாரம் மடியில் தூக்கி வைத்துத் தாலாட்டிக் கொஞ்சுகிறதே - ஒரு யுத்தக் காலத்தில் எதைப் பேச வேண்டும் _ எதைக் கேட்க வேண்டும் என்கிற அடிப்படை ஞானமின்றி நடந்து கொண்டதற்கு என்ன பதில்?

1971 சனவரி 23இல் சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில், ராமன் படம் செருப்பால் அடிக்கப்பட்டது என்று கூறி, பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனரே! அந்தத் தேர்தலில் இதனை சாக்காகக் கொண்டு (அத்தேர்தலில் தி.மு.க. _ காங்கிரஸ் கூட்டு; ராஜாஜி - காமராசர் கூட்டு) பார்ப்பன ஊடகங்களின் உச்சக் கட்டப் பிரச்சாரமும் செய்து திமுகவைத் தோற்கடிக்க நிர்வாணமாக நின்றனரே!

1967 தேர்தலில் 138 இடங்களைப் பெற்ற தி.மு.க., ராமன் செருப்படிப் பிரச்சாரத் தேர்தலில் (1971இல்) 183 இடங்களைக் கம்பீரமாகப் பெற்று வெற்றி உலா வந்ததே - நினைவில் இருக்கிறதா? ஆச்சாரியாரின் புலம்பல்!

தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது, மதம் சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்பவரின் ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரி சபை.

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் என்று பாடி வைத்ததை நினைவு கொண்டு தர்மம் நிச்சயமாக வெல்லத் தான் போகிறது என்று உறுதி பெறுவோம். நம்முடைய பண்டைய பாவங் களுக்காக இன்று கூலி தருகிறோம் என்ற உணர்வுடன் இறைவனை உளம் நெகிழ்ந்து பிரார்த்தித்து அவரவர் கடமையைச் செய்து வந்தால் இறைவன் நிச்சயம் செவிசாய்ப்பான். தமிழகத்தின் பொல்லாத சாபத் தீட்டு நீங்கி இங்கு தெய்வீகம் மீண்டும் பொலியும். இனி தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்து விட்டது இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறி விட வேண்டும் என்று சில மகாபுருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர் புனிதத் தமிழ் மண்ணுக்கு இந்த இழுக்கும் அழுக்கும் நீங்கும் வண்ணம் நாம் அனைவரும் உறுதியான பக்தி செலுத்தி இறைவன் உள்ளத்தை உருக்கி அவனருள் பெற்று, இந்த நாட்டைத் தர்ம பூமியாக்க வேண்டும்.

ஸ்ரீராம நவமி வருகிறது. சத்திய, தர்மமூர்த்தியாக வந்த பரமனே ஸ்ரீராமன், அந்த ராமனை முன் வைத்தே - அந்த ராமனை உள்ளத்தில் உறைவித்தே _ காந்தியடிகள் சுதந்திரம் பெற்றுத் தந்தார். ராமராஜ்யமாக சுயராஜ்ய இந்தியா திகழ வேண்டும் என்பதே மகாத்மாவின் கனவாக இருந்தது. அந்தக் கனவு பகற்கனவாகி விடக் கூடாது நூற்றுக்கு நூறு மெய்யாக வேண்டும். அந்த அளவுக்கு நாம் உண்மை ஆஸ்திகர்களாவதற்குத் தர்மமூர்த்தியான ராமனைச் சரண்புக வேண்டும். இந்த ராமநவமியன்று இந்த திவ்ய விரதத்தைத் தொடங்குவோம். (கல்கி 4.4.1971)

உடம்பெல்லாம் மூளை என்று உலகுக்கெல்லாம் பார்ப்பனர்களும் அவர்தம் ஊடகங்களும் பறைசாற்றும் குல்லூகப்பட்டர் ஆச்சாரியார் - தந்தை பெரியார் முன் சரணடைந்தார் - தோல்வியை ஒப்புக் கொண்டார் என்பதைப் பார்ப்பனர்கள் மரியாதையாக ஒப்புக் கொள்வார்களா?

---------------- சந்திப்போம்! ---" விடுதலை” ஞாயிறுமலர் 27-8-2011 இல் தி.க. பொதுச் செயலாளர் மானமிகு, கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை

2 comments:

vijayan said...

1971 -இல் இந்திரா பெற்ற வெற்றி ஊழல் செய்து பெற்ற வெற்றி என்று ஆகவே அது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்பளித்தது.அந்த தேர்தலில் கருணாநிதி தான் இந்த்ராவின் தமிழ்நாட்டு கூட்டாளி,எனவே தமிழ்நாட்டில் அந்த தேர்தல் எந்த யோகிதையில் நடந்திருக்கும் என தெரிகிறது.இவர்களுக்கு உண்மையிலேயே மக்கள் ஆதரவு இருக்குமானால்அடுத்தவருடமே வந்த திண்டுக்கல் இடைதேர்தலில் ஏன் கருணாநிதி மூன்றாவது இடத்திலும் (அதாவது காமராஜருக்கும் பின்னால்)இந்திரா பதினோராவது இடத்திலும் வந்தார்கள்.ஆகவே 1971 -இல் கருணாநிதி ஜெயிக்க காரணம் இந்திராவின் பணமும் mgr -இன் அரிதாரமும்தான்.

நம்பி said...

//Blogger vijayan said...

1971 -இல் இந்திரா பெற்ற வெற்றி ஊழல் செய்து பெற்ற வெற்றி என்று ஆகவே அது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்பளித்தது.அந்த தேர்தலில் கருணாநிதி தான் இந்த்ராவின் தமிழ்நாட்டு கூட்டாளி,எனவே தமிழ்நாட்டில் அந்த தேர்தல் எந்த யோகிதையில் நடந்திருக்கும் //

ப்பா....அரசியல் பார்வை "புல்லாவே" புல்லரிக்கிறது....இந்திய நாட்டின் அன்றைய மக்கள் தொகை 55 கோடி!

அதில் வாக்காளார்கள் என்று தோராயமாக கணக்கிட்டால் ஒரு 25 கோடி என்று எடுத்துக்கொள்ளலாமா?

அதிலும் வாக்களித்தவர்கள் என்று கணக்கிட்டு 20 கோடி என்று எடுத்துக்கொள்ளலாமா?
எல்லாம் தோராயமாகத்தான்...

இவ்வளவு பேருக்கும் எப்படி ஒருவர் பணம் கொடுக்க முடியும்? அப்படிப்பட்ட கேனையன் அன்றைய நிலையில் எவன் இருந்தான்?

அப்படியே பணம் கொடுத்தாலும், அந்த வீண் செலவு, செய்த பணத்தை எப்படி திரும்ப மீட்டு எடுக்க முடியும்?

அப்படியே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தாலும் பணம் வாங்கியவர் எப்படி? பணம் கொடுத்தவர்களுக்கே வாக்களிப்பார்கள்?

இது எதுவுமே சாத்தியமில்லை...உறுதியாக கூறப்படுவதற்கு ஆதாரமுமில்லை..

.வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறது, அது ஒட்டு மொத்தமாக அல்ல...வாக்கின் சதவீதம் எந்த இடத்தில் குறையுமோ? அல்லது அந்த குறைவினால் அந்த தொகுதியில், நெருக்கத்தில் இருக்கிற வெற்றிவாய்ப்பு அடிபடுமோ? அந்த இடத்தில் மட்டுமே பல கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணம் கொடுக்கும். பொருளாகவும் கொடுக்கும்.

அதுவும் குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு மட்டும் தான் கொடுக்கும். எல்லோருக்கும் கொடுக்காது.


அப்படி பணச் செல்வாக்கு பயன்படுத்தப்பட்ட இடத்தில் குறிப்பிட்ட சதவீத வாக்குகள் மட்டுமே பலனாக கிடைக்கும்.


அன்றைய நிலையில் தேர்தல் என்பதே வேறு வாக்களிப்பதற்கு மக்கள் வாக்குச்சாவடி செல்வதற்கு, வீட்டிற்கே கார் வரும்!

ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் விதிவிலக்கில்லாமல்...கார், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, எல்லாம் வரும்..

மொண்டி, முடவன், குருடன், செவிடன் ஏன் தொடவே அருவருப்பாக, குளிக்காமல் இருக்கும மனிதனைக்கூட பாசத்தோடு தூக்கி கொண்டு வந்து வாக்களிக்க வைக்கும் நிலை அன்று இருந்தது...

இதில் இவர் யோக்கியம், அவர் செய்யவில்லை என்பது எல்லாம் கிடையாது

எல்லோரும் பின்பற்றுகிற நிலைதான்..அதிகமாக செலவு செய்பவரின் நிலை வெளியேத் தெரிய வருகிறது...

.அவர் செல்வு செய்கிறார் என்றால் அந்தக்கட்சி ஆட்சிக்கு வரும் என்ற உறிதி நிலை முன்கூட்டியே தெரியவரும் நிலையில் தான் பணத்தை செல்வு செய்வார்.

ஆட்சிக்கு வரமுடியாதுன்னா, செல்வு செய்யமாட்டார்கள். வந்தா தான் போட்ட பணத்தை எடுக்க முடியும்.
*************

ஏனென்றால் எல்லாக் கட்சிக்கும் தான் மக்கள் பிரிந்து பிரிந்து வாக்களிக்கிறார்கள்...இதில் எந்த கட்சிக்கு கூடுதலாக வாக்குகள் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவர். இந்த மிக மிக குறைந்த சதவீத எண்ணிக்கையிலான ஒட்டு வெற்றியை நிர்ணயிக்க கூடியதாக இருந்தால் அங்கு பணம் வாரி இறைக்கப்படும். மற்றபடி ஒட்டுமொத்தமாக கூறுகிறார்களே! சும்மா ....உளுவளாம்ம்காட்டியும்.....இதுதான் எல்லா கட்சிகளும் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற பின்பற்றும் நடைமுறை....

(இணையத்திலே இதை பத்தியெல்லாம் தெரியாதவங்க நிறையப் பேர் இருப்பாங்கன்னு சகட்டு மேனிக்கு கருத்தை தெரிவிக்கிற மேதாவிங்க இருப்பானுங்க...சிலபேரு விஷயம் ஒன்னும் தெரியாம தெரிவிப்பானுங்க! இல்லைன்னா எவனுக்கு இதையெல்லாம் பத்தி தெரியவாப்போகுதுன்னு! குருட்டாம் போக்கில அடிச்சி விடுவானுங்க! இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!)

இன்று அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது அதற்கு முன் நடைபெற்ற ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற எந்த இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிப் பெறவேயில்லை. கடந்த 2010 ஆண்டு, அதாவது ஒரு ஆண்டுக்கு முன் நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் கூட அ.தி.மு.க டெப்பாசிட் இழந்து தோற்றது. அதுவும் மூன்றாம் இடத்தில். தே.மு.தி.க வும் டெப்பாசிட் இழந்து தோற்றது. (30 மார,ச்..2010)

அப்படி என்றால் இப்போது ஒரு வருடத்திற்குள்ளேயே ஜெயித்தற்கு காரணம் அ.தி.மு.க மிக அதிகமாக பணம் கொடுத்து ஜெயித்துள்ளது என்று எடுத்து கொள்ளலாமா?

**************

இந்திரா காந்தியின் வெற்றி குறித்து அலாகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ஆதாரமில்லாத வழக்கு என்று தோல்வியுற்றது.
அப்படி என்றால் அலகாபாத் நீதிபதி துட்டு வாங்கியிருப்பாரோ? ஹி ஹி வாங்கியிருந்தாலும் வாங்கியிருப்பார்!