Search This Blog

30.1.10

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தொடர்பான அரசு நடவடிக்கைகள் சரியா?

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தொடர்பான அரசு நடவடிக்கைகள் குறைபாடுள்ளவை மக்களாட்சியில் தனியார் நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் இணைந்தே செயல்படவேண்டும் பிரிட்டன் கல்வி நிபுணர்கள் கருத்து

(இடமிருந்து வலம்) பிரிட்டன் கல்வியாளர்கள் பவுலர், டாக்டர் முகமது பார்மர் மற்றும் பேராசிரியர் லெஸ்லி ஹாப்சன்.


44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது என்று அவசர கோலத்தில் இந்திய அரசு எடுத்த முடிவு பற்றி இங்கிலாந்து நாட்டிலிருந்து வருகை தந்துள்ள கல்வித்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கும்போது, எதைச் செய்தாலும் சிறப்பான தரம் அமைந்திருக்கும் வகையில் அந்தத் திட்டத்தின் அடிப்படையான நோக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

செவ்வாய்க் கிழமையன்று (26.01.2010) தி இந்து ஏட்டுக்குப் பேட்டியளித்தபோது கிளாமார்கன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் உதவித் துணை வேந்தரும், தற்போது பிரிட்டிஷ் தொழில்நுட்ப, மின்னணுவியல் வணிக நிறுவனத்தின் இயக்குநரும் ஆன பேராசிரியர் லெஸ்லி ஹாப்சன், ஜனநாயகத்தில் தனியார் துறை மற்றும் அரசுத் துறை நிறு-வனங்கள் இணைந்தே இயங்க வேண்டும் எனக் கூறினார். ஆனால், கல்வி நிறுவனங்களின் தரம் சிறப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பாகும் என்றார்.

அண்மைக்காலமாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைப் பார்க்கும்போது, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் செயல்பாட்டுக் குறைவு காணப்படுவதாக அறியமுடிகிறது என்றார் அவர். ஆனால், சட்டப்படி அமைக்கப் பட்டுள்ள பல்கலைக் கழக மான்யக் குழுவினால் அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மீது ஒரு நான்கு உறுப்பினர் குழு கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறைபாடுள்ளதாகவும், பிளவு உண்டாக்குவதாகவும் அமைந் துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது அந்நிறுவனங்களின் நம்பகத்தன்மையைப் பறிக்கும். அரசின் திடீர் முடிவு 2 லட்சம் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், மற்றும் நிறுவனங்களின் பணியாளர்கள், ஆசிரியர்கள் முதலியோரின் நலனைப் பாதிப்பதாகவும் ஏராளமான துன்பங்களை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

பைட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரிட்டன் தொழில் நுட்ப இ-வணிக நிறுவனத்தின் தற்போதைய இயக்குநராக இருக்கும் பேராசிரியர் லெஸ்லி ஹாப்சன், இங்கிலாந்தில் நிலவும் நிலை பற்றிக் கூறும்போது, அங்கே விதிமுறைகள் மிகவும் இறுக்கமாக இருப்பதால், சில நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்டார். அடிப்படை வலுவுள்ளதாக இருக்குமேயானால், மேல் கட்டுமானம் இலகுவாக அமைக்கப்பட முடியும் என்றார்.

சிறந்த பல்கலைக் கழகங்கள் அவை அமைந்துள்ள பகுதியில் உள்ள நிறுவனங்களின் தரத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்கலாம். அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் உலகத் தரமான பயிற்சியும் பங்கேற்பும் நிறுவனங்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

கல்வி நிறுவனங்கள் நல்ல நிலையை எட்டுவதற்கு, வெகுகாலம் பிடிக்கும் என்று பைட் நிறுவனத்தின் இயக்குநர் முகம்மது பார்மர் கூறினார். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமேயானால் அவற்றைச் சுட்டிக் காட்டுவதும் அவற்றை நிவர்த்தி செய் வதற்கான உதவிகளை அளிப்பதும் தான் அரசு செய்யவேண்டிய நட வடிக்கையாக இருக்க வேண்டும்.

எல்லாப் பல்கலைக் கழகங்களும் உயர்ந்த நிலையில் செயல்படவேண்டும் என நினைப்பதற்குப் பதில், பல்கலைக் கழகப் படிப்பின் தரம் பல்வேறு நிலைகளிலும் சிறப்பாக அமைந்திட அரசு பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அல்லது, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின்-அளவுக்குக் கிழக்கு லண்டன் பல்கலைக் கழகம் இல்லை என்றாலும்,அனைத்துப் பல்கலைக் கழகங்களின் பட்டமும் சமமாகவே உள்ளன. அத்தகைய சிறப்பான செயல்பாடு நிலவிட நாம் பணி ஆற்ற வேண்டும்.

(இந்திய)அரசு, அயல் நாட்டுப் பல்கலைக் கழகங்களை (இந்தியாவில்) செயல்பட அழைக்க இருப்பதாகத் தெரிகிறது என்று கூறிய அவர், அதற்காகத்தான் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மீது நடவடிக்கை எடுத்துள்ளதோ எனும் சந்தேகத்தை தனியார் நிறுவனதாரர்களின் மனதில் ஏற்படுத்தி உள்ளது என்றும் குறிப் பிட்டார்.

எல்லா நிகர்நிலைப் பல்கலைக் கழங்களையும் ஒழித்துவிடுவது என்கிற அரசின் உத்தேச நடவடிக்கையானது தெளிவாகத் தெரிவிக்கப்படாத நிலையில், தற்போதுள்ள நிறுவனங்களின் மனதில் மேலும் சந்தேகங்களை அது அதிகப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகள் எல்லாம் பல்கலைக் கழகங்களாக 1992 இல் உயர்த்தப்பட்ட போது அதன் கல்விக் குழுவினரும் ஆசிரியர் மற்றும் பணியார்களும் அது பற்றிக் கருத்து தெரிவிக்குமாறு கோரப்பட்டனர் என்று பைட் நிறுவனத்தின் திட்ட இயக்குநரான ஆலன் பவ்லர் கூறினார்.மேலும் இதுபற்றி தனியார் கல்வி நிறுவனங்களும் கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

(நன்றி: தி இந்து, நாள் 28-.01-.2010)

வெளிநாட்டு கல்வியாளர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் எடுத்தேன், கவிழ்த்தேன் பாணியில் முடிவு எடுக்கும் இந்திய ஆட்சியாளர்களின் கருத்துக் கண்களைத் திறக்குமா?

------------------------" விடுதலை” 29-1-2010

1 comments:

மதி.இண்டியா said...

இங்கிலாந்து ஏகாதிபத்யம் ஒழிக ...