Search This Blog

29.1.10

சோ - கூட்டத்தில் கைதட்டிய விபீஷணத் தமிழர்கள் சிந்திப்பார்களாக!


எந்தக் கலாச்சாரம்?

துக்ளக் ஆண்டு விழாவில் திருவாளர் சோ ராமசாமி மீண்டும் தனது அழுத்தமான பார்ப்பனர் அடையாளத்தை சாங்கோபாங்கோமாகக் காட்டிக் கொண்டுவிட்டார்.

சோ: அனைவருக்கும் வணக்கம். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

(ஒரு வாசகர்: புத்தாண்டு வாழ்த்து இல்லையா? என்று கேட்டார்).

அதை மூன்று மாதம் கழித்துச் சொல்கிறேன் (கைதட்டல்) நாளைக்குத் திடீரென தீபாவளியை பிப்ரவரி மாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவு வந்தது என்றால், அதற்காக எங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று நீங்கள் கூறினால், அதைச் சொல்வதற்கு நான் தயாராக இல்லை (கைதட்டல்). எந்தப் பண்டிகை வழக்கமாக, நம்பிக்கையின்படி கொண்டாடப்பட்டு வருகிறதோ அந்தப் பண்டிகையைத்தான் நான் ஏற்றுக்கொள்கிறேனேயொழிய (கைதட்டல்) இந்த மாதிரி விஷயங்களில் ஒரு முதல்வரோ, ஒரு அரசோ உத்தரவிட்டு எதையும் சொல்வதை நான் ஏற்கத் தயாராக இல்லை. இதெல்லாம் வழக்கத்திற்கு விரோதமானது, நம்பிக்கைக்கு விரோதமானது, கலாச்சாரத்துக்கு விரோதமானது (பலத்த கைதட்டல்). நான் இதை ஏற்கவில்லை.

---------------------------------(துக்ளக், 27.1.2010)

தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லை. சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு நம்பிக்கைக்கு விரோதமாக நான் ஏற்கவில்லை என்கிறார் திருவாளர் சோ.

பிரபவ, விபவ என்று 60 வருடங்களில் ஒரு ஆண்டின் பெயர்கூட தமிழில் இல்லையே! இது எப்படி வழக்கமாக தொடங்கும் தமிழ் ஆண்டுகளாக வந்திருக்க முடியும்? தமிழர்களின் வழக்கத்துக்கு மாறாகத்தானே பார்ப்பன சமஸ்கிருத மயமாக ஆக்கப்பட்டிருக்கவேண்டும்? அவர் கூறும் வழக்கமாக, நம்பிக்கையின் அடிப்படையில் என்பதெல்லாம் பார்ப்பனர்கள் சார்பாகக் கூறப்படுவதுதானே! இதனைக்கூடப் புரிந்துகொள்ளாமல் தமிழர்களும் சேர்ந்து பலத்த கைத்தட்டல் தட்டுகிறார்கள் என்றால், பார்ப்பனர்கள் கூறும் அந்த வழமைப்படி, பழக்கப்படி சூத்திரர்கள் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்று ஏற்றுக்கொள்வதாகத்தானே பொருள்?

நாரதன் என்கிற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகள்தான் 60 தமிழ் வருடங்கள் என்பதை ஏற்றுக்கொண்டால்தான், வழமைக்கு மரியாதை செய்வது, நம்பிக்கைக்கு உகந்தது என்று ஒரு பார்ப்பான் கூறுவதும், அதனைத் தமிழர்கள் சிலர் ஏற்று கைதட்டுவதும் வெட்கப்படத்தக்கதே!

நமது கலாச்சாரத்துக்கு விரோதமானது என்கிறாரே சோ, அவர் சொல்லும் நமது என்பது பார்ப்பனர்களா? தமிழர்களா? இந்தக் கேள்வியையும் கேட்டிருக்க வேண்டுமே!

தமிழ் செம்மொழி என்பதால் வீட்டுக்கு வீடு பிரியாணி தட்டு வரவா போகிறது என்று எகத்தாளம் செய்தது பார்ப்பனத் தினமலர் என்பதையும் மறந்துவிட முடியுமா?

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தபோதும், தொடக்கத்தில் பிடிவாதமாக அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்தான் இந்த சோ. அதே, சோ, இப்பொழுது துக்ளக்கில் தந்தை பெரியார் அவர்களின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுத் தீரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாரே சோ; கூட்டத்தில் கைதட்டிய விபீஷணத் தமிழர்கள் சிந்திப்பார்களாக!

-------------------- மயிலாடன் அவர்கள் 29-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

Ashok D said...

சோவின் உளறலை ஏன் பெரிசு படுத்துகிறீர்கள்? அப்புறம் பார்ப்பன துவேசம் ஏன்? எல்லா பார்ப்பனர்களும் அப்படியா இருக்கிறார்கள். அவர்களில் மென்மையானவர்களும் மேன்மையானவர்களும் நிறய பேர் இருக்கின்றார்களே...

தமிழ் ஓவியா said...

விதி விலக்கெல்லாம் விதியாக ஆகிவிடாது நண்பரே