Search This Blog

1.8.09

பாவேந்தரின் நகைச்சுவை உணர்வும் - வைணவ உணவும்




வைணவ உணவு

பாவேந்தர் ஒரு சமயம் கடலூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார்.

அதே கூட்டத்தில் டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனமும் கலந்து கொண்டார்.

அன்று இரவு சுமார் 8 மணி அளவில் கடலூரில் இருந்து பாண்டிக்கு வந்த பேருந்து நடத்துநர் ஒருவர், பாவேந்தரின் பழனியம்மா அச்சகத்திற்கு வந்து, இதைக் கவிஞர் சாமி பழனியப்பனிடம் கொடுக்கச் சொன்னார்கள், என்று கூறி, என்னிடம் ஒரு கடிதத்தைத் தந்தார்.

நான் கடிதத்தைப் பிரித்துப் படித்தேன்.

அன்புள்ள பழனியப்பனுக்கு, இரவு கூட்டம் முடிந்ததும், தோழர் டார்பிடோவும் நானும் கடைசி வண்டியில் வருகிறோம்;

எங்களுடன் இன்னும் இருவரும் வருவார்கள். எனவே, நான்கு அல்லது அய்ந்து பேருக்கு வைணவ உணவு தயாரித்து வைக்கச் சொல்லவும்.

கடிதத்தைப் படித்து முடித்ததும், பாவேந்தரின் நகைச்சுவையை எண்ணிச் சிரித்தேன்.

ஆம். அசைவ உணவைத்தான், அவர் வைணவ உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.

பாவேந்தர் வீட்டிற்குச் சென்று விஷயத்தைச் சொல்லி நான்கு பேருக்கு அசைவச் சாப்பாடு சமைத்து வைக்கும்படி அம்மா அவர்களிடம் சொல்லி ஏற்பாடு செய்தேன்.

பிறகு, பாவேந்தரும், டார்பிடோவும், இன்னும் இருவரும் வந்தனர்.

டார்பிடோ என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறே, என்ன சாப்பாடு? என்றார்.

நான் சிரிப்பை அடக்கிக் கொண்டு வைணவம்தான் என்றேன்.

அப்புறமென்ன? இந்த நகைச்சுவை விருந்தில் அனைவருமே கலந்து கொண்டோம்.


--------------------- கவிஞர் சாமி பழனியப்பன் எழுதிய நினைவு மலர்கள் நூலிலிருந்து

5 comments:

Unknown said...

Oviya,

is this supposed to be humour.you have my sympathies.This just shows that dravidian tamil swines just do not have an iota of sophistication;after all they are canibals and tribals of a very inferior kind.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

மாசிலா said...

இந்த புரட்சிக் கவிஞர் பிறந்த பாண்டிச்சேரியைத்தான் இன்று அரவிந்தர் ஆசிரம பைத்தியங்கள் முற்றுகையிட்டு நாசப்படுத்தி வருகின்றன.
பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர் மாசிலா

Unknown said...

Oviya,

Why is this bastard baaradidaasan sporting a hitler type moustache?he looks positively repulsive just like so many dravidian tamils.