Search This Blog

7.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை -டிரினிடாட் மற்றும் டொபாகோ-டுனிசியா




டிரினிடாட் மற்றும் டொபாகோ

1498இல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் இத் தீவுகளுக்கு வந்தபோதே, அத்தீவுகளில் டிரினிடாடில் வாழ்ந்த ஆதி குடிகள் அரவாக் இனத்தினர். டொபாகோ தீவில் வாழ்ந்தவர்கள் கரிப் இனத்தினர். தீவுகள் 1802 வரை ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதன் பிறகு பிரிட்டிஷாரின் கைக்கு மாறியது. இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டு வேலை வாங்கப்பட்ட சம்பவங்கள் 1845 முதல் 1917 வரை நடந்தன. 1889இல் இரு தீவுகளும் ஒன்றாக்கப்பட்டன.

வரையறுக்கப்பட்ட சுயாட்சி 1925இல் இத் தீவுகளுக்கு வழங்கப்பட்டது. 1958 முதல் 1962 வரை மேற்கிந்தியக் கூட்டரசின் பகுதிகளாக இருந்தன. 1962இல் விடுதலை பெற்றன. 1976இல் குடியரசு நாடானது.

கரீபியத் தீவுக் கூட்டத்தில் உள்ள இந்நாட்டின் பரப்பு 5 ஆயிரத்து 128 சதுர கி.மீ. மக்கள் தொகை 11 லட்சம். மக்களில் 29 விழுக்காடு ரோமன் கத்தோலிகர். 24 விழுக்காடு இந்து. ஆங்லிகன் பிரிவுக் கிறித்துவம் 11 விழுக்காடு. முசுலிம் 6 விழுக்காடு. ஏனைய நம்பிக்கையாளர்கள் மீதிப்பேர்.

இவர்களின் ஆட்சி மொழி இங்கிலீஷ். இந்தி, பிரெஞ்ச், சீனம், ஸ்பானிஷ் மொழிகளை மக்கள் பேசுகின்றனர். மக்களில் 99 விழுக்காடு படிப்பறிவு பெற்றவர். இந்நாட்டைச் சேர்ந்த வி.எஸ்.நைபால் எனும் இந்திய மரபுவழி இங்கிலீஷ் எழுத்தாளர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.

31-.8-.1962இல் விடுதலை நாளைக் கொண்டாடும் இந்நாட்டில், குடியரசுத் தலைவர் உள்ளார். ஆட்சித் தலைவராகப் பிரதமர் உள்ளார். 21 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 8 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.

இருப்புப் பாதை இந்நாட்டில் கிடையாது.

டுனிசியா

இன்றைய டுனிசியா நாட்டில் போனிசியர்கள் குடியேறி 12ஆம் நூற்றாண்டுக் காலத்தில் வாழத் தொடங்கினர். நாட்டின் கார்த்தேஜ்நகர் (இன்றைய டுனிஸ்) பகுதிகளிலும் குடியேற்றம் நிறைந்திருந்தது. கார்த்தேஜ் நகர்ப் பகுதிகளுக்கும் ரோம் நகருக்கும் புனிக் போர்கள் நடைபெற்றன. போரினால் கார்த்தேஜ் நகரமே அழிக்கப்பட்டது.

1600இல் துருக்கி ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக டுனிசியா ஆனது. 1881இல் பிரான்சு நாட்டுப் படையினர் டுனிஸ் தலைநகரத்தைப் பிடித்து விட்டனர். நாட்டின் பொருளாதார நடவடிக்கை களிலும் வெளிநாட்டுத் தொடர்பு நடவடிக்கைகளி னாலும் பிரான்சு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. டுனிசியா பிரான்சின் ஆதிக்கத்திலும் கட்டுப் பாட்டிலும் 1883இல் வந்துவிட்டது. 1956இல் டுனிசியாவுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. மறு ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு நாடு குடியரசானது.

மத்திய தரைக்கடல் கரையில் ஆப்ரிகாவின் வட பகுதியில், அல்ஜீரியாவுக்கும் லிபியாவுக்கும் இடையில் அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 610 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை ஒரு கோடியே 2 லட்சம். மக்களில் 98 விழுக்காடு முசுலிம்கள். கிறித்துவர்களும் யூதர்களும் தலா ஒரு விழுக்காடு உள்ளனர்.

அரபி மொழி ஆட்சி மொழி. பிரெஞ்ச் மொழி வணிக மொழி. மக்களில் 74 விழுக்காடு மட்டுமே படிப்பறிவு பெற்றவர்.

20-.3.-1956இல் விடுதலை நாள். குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர். 14 விழுக்காடுப் பேர் வேலை கிட்டாதோர். 7 விழுக்காடுப் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்.

-------------------"விடுதலை" 6-8-2009

0 comments: