Search This Blog

3.8.09

பால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா? மதப்பிரச்சினையா- 4




சிசு மணத்திற்கு மீண்டும் ஆரியர் சூழ்ச்சி




தெள்ளமுதம் பெய்து வளர்ந்தாலும் பேய்ச் சுரைக்காய் கசப்பு மாறாது. அதுபோல, இந்த ஆரிய வைதிகப் பிண்டங்களின் மனப்போக்குகளும் இருந்து வருகின்றன.

வைதிகமென்றாலே, அறிவுக்கும், நேர்மைக்கும், காலத்திற்கும், ஒவ்வாத முரட்டுப் பிடிவாத முடக்குவாதக் கொள்கை என்றே கூறி விடலாம். இவர்களுடைய கொள்கையிலோ, வாதத்திலோ, சமூதாய முன்னேற்றப் போக்கோ, மக்கள் நலமோ மருந்துக்கும் அகப்படுவதில்லை. கடவுள் பெயரையும், மதத்தின் பெயரையும், சாத்திரச் சாக்கடை கட்டுத் திட்டங்களையும், கூறிக் கொண்டு மனித வர்க்கச் சுகபோக, சுக வாழ்க்கைக்குப் பேரழிவைத் தேடி வருகின்றனர்.

இந்த வைதிகக் கொடுமைகளில் இணையற்ற படுபாதகப் போக்குக் கொண்டது சிசுமணம் என்பதை உடல் கூறு அறிவாளர்களும், மனிதவர்க்க சுகநல முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட உலகம் யாவும் ஒப்புக் கொள்ளும் உண்மை.


பால்மணம் மாறாப் பச்சிளங் குழந்தைகளுக்குக், கலியாணம் என்ற கடுவிலங்கு பூட்டிப் பிஞ்சிலே பழுத்து வெதும்பி அழியச் செய்யும் கொலை பாதகத்தைக் கண்டு எந்தக் கருணை உள்ளம் தான் சகித்தக் கொண்டிருக்க முடியும்? இது நாட்டின் எதிர்கால ஜீவன்களை, அவர்களைக் கொண்டே கொல்லும் ஈவிரக்கமற்ற படுபாதகச் செயல் என்றே நேர்மையாளர் அனைவரும் தீர்ப்புக் கூறுவர்.


இதனால் மனிதவர்க்க அழிவிற்கு ஏற்பட்டு வரும் படுபாதகத்தை உணர்ந்து தான் இந்தியச் சர்க்காரும் சிசு மணக் குற்றவாளிகளுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.


ஆனால், இதைக் கண்டு பகுத்தறிவற்ற ஆரிய வைதிக உலகம் "மதம் போச்சே! சாஸ்திரம் கொலை செய்யப்படுகிறதே!" என்று ஓலமிட்டனர். சாஸ்திரச் சாக்கடையின் ஊழலில் ஊறிய சிலர், இச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னாளில் பால் குடிக்கும் பசுங்குழந்தைகள் கழுத்திலும் தாலி சுறுக்கிவிட்டனர்.

மணம் என்பது ஆணும் பெண்ணும் மனமொன்றி, உயிரொன்றி, உடலொன்றி, இணைந்து மகிமை பெற்று உலகிற்கு மகிமை கூட்டச் செய்யும் உலக விருத்திச் சேவையாகும்.

முதிர்ந்த விதைகளைப் பதன்பட்ட நிலத்தில் பயிரிட்டால் தானே சிறந்த மகிமை பெற்று உலகிற்கு மகிமை கூட்டச் செய்யும் உலக விருத்திச் சேவையாகும்.


இவ்விதம் பச்சிளம் பதர்கள் கொண்டு பயிர் செய்வதால் மனித வர்க்கம், நலிந்து நசியும் என்பது பற்றியும் இவர்கள் கவலைப்படுவதில்லை.


இளஞ்செடி காயப் பூ விட்டால், கிள்ளி விட இவர்கள் மனமும், கையும் முந்துகின்றன. ஆனால் மனிதவர்க்க மூளைத்தண்டுகள் பிள்ளைப் பெற வேண்டுமென நிர்ப்பந்தக் கட்டுப்பாடு செய்கின்றனர்.

இவ்விதக் கொடுமையால் சிசுக்கள் மரணமும், பிரசவத் தாய்மார் இறப்பும், ஆஸ்துமா, வலிப்பு, மூளைக் கோளாறு, கண்ணூனம் முதலிய கண்றாவிகள் ஏராளமாகத் தோன்றுவதை இவர்கள் எண்ணிப் பார்த்தார்களில்லை. சிசுமணம் செய்து வைக்கப்பட்ட ஆரியப் பெண்களில் ஆஸ்துமா, நரம்பு நலிவு நோய் கொண்டு கண் பார்வை மந்தப்பட்டு கண்ணுக்குக் கண்ணாடிகள் அணிந்து கொண்டும் இருப்பவர்கள் கிட்டதட்ட நூற்றுக்கு நூறாக இருப்பது அன்றாடம் காணுவதாகும். அய்ந்து, பத்து வயது ஆரியச் சிறுவர் சிறுமிகளும் கண்ணாடிகள் அணிந்திருக்கும் காட்சி நாடெங்கும் தெருவெங்கும் காணக் கிடைக்கிறது. இந்தக் கண்ணூனத்திற்குச் சிசு மணமே காரணமென்பதை மருத்துவ உலகமும் எடுத்துக்காட்டி எச்சரிக்கிறது.


இந்தக் கேடு, இத்துடன் போகிறதா? பெண்ணுலகம் பாழ்படுத்தப்படுகிறது. ஏராளமான குழந்தை விதவைகள் உற்பத்தி செய்யப்படுகிறன. இந்தக் குழந்தை விதவைகள் வயதேற இவர்கள் இயற்கை உணர்ச்சியால் தூண்டப்பட்டுக் கர்ப்பமாகிப் பத்து மாதம் நொந்து, மரண வேதனைப் பட்டுப் பெற்றெடுத்துச் சிசுக்களை வைதிகக் கட்டுப்பாடு கொடுங்கோன்மைக்குப் பயந்து தங்கள் கைகளாலேயே கொலை செய்ய வேண்டிய கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்தக் கொலைக்கு மூலகாரணம் வைதிகம் பேசும் மதியீனர் என்பதும், எண்ணிப் பார்த்தும், அவ்வைதிகர்களைத் தண்டிப்பதும், நேர்மையாக இருக்க அவர்களை தண்டிக்கச் சாஸ்திரம் மதில் கட்டி நிற்கிறது.


எனவே, இந்தச் சாஸ்திரக் கட்டுப்பாட்டைச் சட்ட மூலம் தகர்த்தெறிய வேண்டியது அரசினர் கடமையாகின்றது. இக்கடமையைச் செய்ய முந்தும் நாட்டுக் காவலர்களுக்குத் தடை கோலுவது புத்திசாலிகள் போக்காகுமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.


இந்திய சிசுமணத் தடைச் சட்டம் ஏற்பட்டு இதுவரை பெண்ணுலகம் பெற்றுள்ள நன்மைகளும், சுகமும் எண்ணற்றன என்பதை அப்பெண்ணுலகமே பறைசாற்றி வருகிறது.


அவ்விதமிருந்தும் எருதின் வலியை உணராது, புண்ணுதிரத்தைக் கொத்தியுறுஞ்சும் காகங்களைப் போன்றவர்களான ஆண் மக்களில் சிலர் சிசுமணத்தை மீண்டும் வைதீக வெறிக் கொண்டு பேயாட்டம் ஆடித்திரிவது ஆண்வர்க்கத்திற்கே படுமோசமான கேட்டையும், நீங்காத பழியையும், கூட்டும் கோரச் செய்கை என்றே துணிந்து கூறலாம்.


இத்தகைய கொலை வெறியர்கள் தலை காட்டாது மட்டம் தட்டுவது மனிதவர்க்க நலத்தில் கருத்துள்ளவர்கள் ஒவ்வொருவர் செய்கையாகும்.


பிரிட்டிஷ் இந்தியாவில் இந்த ஆரிய வைதிக நச்சுப் பிச்சுகளின் கைச்சரக்குச் செல்லும்படியாகாது போகவே, இப்போது சமஸ்தானங்களில் தங்கள் விஷயங்கள்களை அடிக்கடி காட்டி வருகின்றனர்.

பத்தினிப் பெண்டிர் கூட்டத்திலே, விபசாரத்தின் மேன்மையைப் பற்றிப் பிரச்சாரம் செய்யும் மதியீனப்போக்கில் அகில இந்திய வருணாசிரம சுயராஜ்ய சங்கத்தலைவர் என்று குறிப்பிடும் ஒரு வைதிகப் பிழம்பு, சமூதாய சீர்திருத்த கர்த்தரும், உலகப் பேரறிவாளருமான சர். சண்முகம் அவர்கள் நேர்மையாட்சிக்குட்பட்ட கொச்சின் சமஸ்தானத்தில், தனது விஷப் பூண்டிற்கு விலைப் பேச முயற்சித்து, "இந்தியத் தார்மீகச் சக்ரவர்த்தியாக விளங்கும் கொச்சி மகாராஜாவுக்கு" என்று விண்ணப்பம் ஒன்று சமர்ப்பித்திருக்கிறாராம்.

சட்ட ஆக்கப் பொறுப்பாளரான திவானிடம் இவர்கள் குருட்டு வாதம் செல்லுபடியாகாதென்று அறிந்து தான் இவர்கள், "தார்மீகச் சக்கரவர்த்திக்கு" மனுச் செய்திருக்கின்றனர் போலும். ஆனால், அந்தத் தார்மீகச் சக்கரவர்த்தி எனக்குச் சம்பளம் தருவது கூட சர்.சண்மூகம் தான். சட்டதிட்ட நிர்வாகப் பொறுப்பு அவருடையது என்று கூறியதாக டாக்டர். பட்டாபி பத்திரிகையில் வெளியிட்டதை இந்த வைதிகத் தலைவர் படித்திருந்தும் மறந்து விட்டார் போலும்.


கேரள நாடு படுமோசமான குருட்டு வைதிகச் சாக்கடைக் குழியில் விழுந்து தத்தளிக்கும் மக்ககை அதிகமாகக் கொண்டதென்பது ஒப்புக் கொள்ள வேண்டியதே. ஆயினும், சர். சுண்மூகம் அவர்கள் பகுத்தறிவு ஆட்சி ஜோதியால் இந்த வைதிக அறிவீனம் அகற்றப்பட்டு வருவதை இவர் அறிந்து கொள்ளாது கண்ணைத் திறந்து கொண்டு குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளும் போக்கில் "சிசு மணத்திற்கு"த் தடை பேச வந்திருக்கிறார்.

இச்சமஸ்தான சட்டசபையில் சிசுமணத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது மிகமிக பாராட்டற்பாலதே; இது உடனே சட்டமாக்கப்பட்டுக் கண்டிப்பான முறைகளில் அமுலுக்குக் கொண்டு வர வேண்டும். ஆரியர் வைதிகக் கொடுங்கோன்மைக் கட்டுப்பாட்டினால் இக்கேரள நாட்டில் சிசுமணம் ஏராளமாக நடக்கிறது. பேசச்சக்தி பெற்றிராக் குழந்தைகளும், பிறந்த சிசுக்களுக்கும், ஆரியப்பட்டர்கள் தாலிக்கட்டிப் பெண்டாள வைத்து உரிமைப்படுத்திக் கொள்வது இங்கு வழக்கமாக இருக்கிறது. இந்தக் கொடுமை உடனே அகற்றப்படுவது இன்றியமையானதே. இப்போதே பல்லாண்டுகள் விரயமாக்கப்பட்டு விட்டன.

ஆகவே, ஓர் ஒத்தை ஆதரவுபெற முடியாத ஒரு வைதிகக் கும்பலின் பேய்க் கூச்சல் கேட்டு, கொச்சி அரசவை மன்றத்தினர் மனந்தளர்ந்து இந்தச் சிசுமணத் தடை முயற்சியை நெகிழவிட்டு விடக்கூடாதென்றே வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். உலகப் புகழ் பெற்ற மாவீரர் சர். சண்மூகம் ஆட்சித் தளபதியாக இருக்கும் வரை இத்தகைய சிசுமண அவக்கேடு இச்சமஸ்தானத்தில் விளைய இடம் கிடைக்காதென்பது உறுதியிலும் உறுதி. வீண் கிளர்ச்சியில், கண்மூடித்தனமாக நுழைந்துள்ள வைதிகப் பிழம்புகள் தங்கள் சுயமரியாதையையும் காத்துக் கொள்ள விரும்பினால் இப்போதே எதிர்க்கும் போக்கைக் கைவிடும்படி புத்தி கூறுகிறோம்.

-----------------தந்தைபெரியார் - "குடிஅரசு" 17-11-1940

1 comments:

அசுரன் திராவிடன் said...

பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பாம்பை விட்டிட்டு பார்ப்பானை அடிக்க வேண்டும் -தந்தை பெரியார்

ஏன் என்றால் பார்ப்பான் பாம்பை விட விசமானவன்.