Search This Blog

23.8.10

பூணூல் என்னும் கோவணக் கயிற்றின் மகாத்மியம்!


பூணூல்!

நாளை (ஆவணி 8 ஆகஸ்ட் 24) ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

இந்தப் பூணூல் வந்த விதம் குறித்து அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தின் பிரதாபங்களைப் பீரங்கியாக முழங்கி வந்த விவேகானந்தர் என்ன சொல்லுகிறார்?

முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு, ஜீவனுடைய சோகங்களையும், துன்பங் களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்தில் சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத் துக்கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி, அவனுக்குத் தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரி யாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக்கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்துகொள்ளும் வழக்கம் பின்னாளில் வந்து விட்டது.

மேலும், வேதங்களில் பூணூலைப் பற்றிய குறிப்பு ஏதுமில்லை என்றும் விவே கானந்தர் கூறியுள்ளார் (ஆதாரங்கள்: சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை, பக்கம் 2628).

கோவணம் கட்டுவதற்குப் பயன்பட்ட நூல்தான் திரிநூல் என்பதைக் காண்க!

சரி... நான் ஒரு இந்து சனாதனி என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவரான காந்தியாரின் பூணூலைப்பற்றிய கருத்து என்ன? அவர் ஏன் பூணூலை அறுத்து எறிந்தார்?

லட்சக்கணக்கான இந்துக்கள் பூணூல் தரிக்காமலிருக்கும்போது அது எனக்கு அவசியமென்று தோன்றவில்லை. ஆதலால், நான் அதை அணியவில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு மாசற்ற வாழ்வு வாழவேண்டும். ஆத்மார்த்திக மான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்கவேண் டும் இப்பூணூல். இன்றுள்ள இந்துக்கள், இன்று இந்து மதம் உள்ள நிலையில், இப் பூணூலை அணிந்து கொள்வதற்குத் தகுதி உள்ளவர்களா என்பது எனக்குச் சந்தேகம். இந்து மதத்திலுள்ள தீண் டாமை, உயர்வு, தாழ்வு, வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம் யாவும் ஒழிந்த பிறகுதான் இந்துவுக்குப் பூணூல் அணி யும் உரிமை உண்டு. ஆகை யால், பூணூல் அணிவதை என் மனம் எதிர்க்கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழி என்று எனக்குத் தோன்றவில்லை. (காந்தியாரின் சுயசரிதம், பக்கம் 480).

காந்தியார் கூற்றில் முரண்பாடுகள் உள்ளன என்பது உண்மையாகும். இந்து மதத்தில் தீண்டாமை இல்லாததுபோலவும், அதற்கு மாறாக தீண்டாமையை அனுசரிப்பது போலவும் எழுதுவது சரியானதல்ல.

காந்தியார் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பாலக்காட்டில், மாட்டுக் கொட்டகையில் சந்தித்தபோது, தீண்டாமை சாத்திர சம்பிரதாய வழிபட்டது என்று முகத்துக்கு முகம் சொல்லிவிட்ட பிறகு (சங்கராச் சாரியாரைவிட சாஸ்திரம்பற்றி யார் கூறவேண்டும்?) காந்தியார் இந்து மதம் குறித்துக் கணித்திருப்பது தவறாகும்.

காஞ்சி மச்சேஸ்வரர் கோயில் குருக்கள் பார்ப்பான் தேவநாதன்கூட நாளை கண் டிப்பாகப் பூணூல் தரித்துக் கொள்வான் என்பதில் அய்யமில்லை.

என்னே பூணூல் என்னும் கோவணக் கயிற்றின் மகாத்மியம்!

------------------------மயிலாடன் அவர்கள் 23-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

கவி அழகன் said...

ஆஹா என்ன ஒரு தகவல்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர் யாதவன்.