Search This Blog

29.8.10

சோ இராமசாமியின் திடீர் ஞானோதயம்!



பிராமணர்கள் தமிழ் நாட்டிற்குத் தேவையில்லை; அதற்கு மேல் எதுவும் நான் சொல்ல மாட்டேன். சோ இராமசாமி, ஓர் ஆங்கில இதழில் பேட்டியில் பார்ப்பனர் பற்றிய பேட்டியில்.

பலே, பலே, சோ அவர்களே, சரியாகச் சொன்னீர்கள்!

ஆம், தமிழ்நாடு பெரியார் அவர்களால் பக்குவப் படுத்தப்பட்ட சுயமரியாதை இயக்க பூமி ஆனதால்,

இங்கு பிராமணர் தேவையில்லை. சூத்திரர் பஞ்சமர் எவரும் தேவையில்லை. மனிதர்கள் மட்டும்தான் தேவை! மக்களை மனிதர்களாக மட்டும் பார்க்கத் தெரியாத பிராமணர்கள் தேவையில்லை என்பது எங்கே பிராமணன் எழுதிய சோவுக்கு இப்போதாவது புரிந்ததே! நன்றி! நன்றி!

முன்பு 1971 இல் பொதுத் தேர்தலில். நீங்கள் போட்ட இராமனைச் செருப்பால் பெரியார் அடிக்க, கலைஞர் வேடிக்கை பார்த்த துக்ளக் கார்ட்டூனுக்குப் பிறகும், தி.மு.க. 184 இடங்களைப் பெற்றவுடன், இனி தமிழ்நாடு ஆஸ்திகர்கள் வாழ இலாயக்கற்ற பூமி என்று கல்கியில் ஆச்சாரியார் எழுதினார்; இப்போது 39 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கும் ஞானோதயம் வருகிறது. பலே! பலே!

------------------ நன்றி: - “விடுதலை” 28-8-2010

0 comments: