Search This Blog

23.8.10

ஓணம் பண்டிகையும் - பார்ப்பனர்கள் சூழ்ச்சியும்


வாமனாவதாரம்!

விஷ்ணு பத்து அவதாரம் எடுத்தான் என்று பார்ப்பனர்கள் கதை கட்டி வைத்துள்ளார்கள். இந்த அவதாரங்கள் எல்லாம் அசுரர்களை அழிக்கத்தான் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்.

அசுரர்கள் என்றால் வேறு யாருமல்லர் சூத்திரர்களாகிய திராவிடர்கள்தாம். சுரர்களாகிய பார்ப்பனர்களுக்காக அவதாரம் எடுத்து அசுரர்களான நம் மக்களை வதம் செய்வதுதான் இந்த அவதாரச் சூழ்ச்சிக் கதைகள்.

வராக அவதாரம் (பன்றி) என்றால், அசுரனாகிய நரகாசுரனை அழித்ததாக இருக்கும்.

மச்ச அவதாரம் என்றால், (மீன் உருவம்) வேதங்களைத் திருடி ஒளிந்துகொண்ட கோமகா சூரன் என்பவரை வதம் செய்ததாகக் கதைத் துள்ளனர்.

இரண்யாட்சதனை வதம் செய்ததாக நரசிம்ம அவதாரம் (சிங்க ரூபம்) கூறுகிறது.

கடவுளே படைத்து, கடவுளே அழிக்கும் விசித்திரமும், விபரீதமும் இந்து மதத்திற்கே உள்ள விசேஷமான வைபவங்கள்!

ஓணம் பண்டிகை என்று இன்று கொண்டா டப்படுகிறது. இப்பண்டிகை கேரள மாநிலத்தில் களைகட்டக் கூடியதாகும்.

இதில் பொதிந்துள்ள சூழ்ச்சியைக் கவனித்தால் அந்த முறையை இன்றுவரை பார்ப்பனர்கள் பல வடிவங்களில் பின்பற்றி வருகின்றனர் என்பதை எளிதிற் புரிந்துகொள்ளலாம்.

மாவலி என்னும் சக்ரவர்த்தி மூன்று உலகையும் கட்டி ஆண்டானாம். குடிமக்களுக்கு எல்லாவகையிலும் நன்மைகள் புரிந்த காருண்ய ஆட்சியை அவன் நடாத்திக் கொண்டு வந்தானாம்.

பொறுக்குமா தேவர்களுக்கு? அவனை அடக்கவேண்டும் அழிக்கவேண்டும் என்று மகா விஷ்ணுவிடம் மனு போட்டார்களாம் தேவர்களாகிய பார்ப்பனர்கள். அவனும் காசிப முனிவன் என்னும் பார்ப்பானுக்குக் குள்ள வடிவத்தில் மகனாகப் பிறந்தானாம்.

மாவலி சக்ரவர்த்தி யாகம் நடத்தித் தான தருமங்களைச் செய்தபோது, விஷ்ணுவின் அவதாரமான இந்த வாமனன் என்ற குள்ளப் பார்ப்பான் தனக்கு மூன்று அடி மண் தானமாகத் தரவேண்டும் என்று யாசித்தானாம். ஆகட்டும் என்று அரசன் மாவலி கூற, உடனே அந்தக் குள்ளப் பார்ப்பான் விசுவ ரூபம் எடுத்து, ஒரு அடியை ஆகாயத்திலும், மற்றொரு அடியை பூமியிலும் பதித்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று கேட்க, மாவலி சக்ரவர்த்தி தன் தலையைக் காட்டினானாம். (மூன்றாவது அடியைப் பாதாளத்தில் வைக்க வேண்டியதுதானே?) மாபாதகனான அந்தக் குள்ளப் பார்ப்பானாகிய விஷ்ணு, மக் களுக்கெல்லாம் வாரி வழங்கி மக்களின் இதயத்தில் எல்லாம் நிறைந்திருந்த அந்த மாவலியை அழுத்திச் சிறை வைத்தானாம்.

அந்த நாளில் மாவலி சக்ரவர்த்தி ஒவ்வொருவர் வீட்டுக்கும் வருகை தருவதாக அய்தீகமாம். கேரள மாநிலத்தில் வீட்டுக்கு வீடு கோலம் போட்டு, மாவலியின் வருகைக்காக அலங்காரம் செய்து வைத்திருப்பார்களாம்.

நரகாசுரனை வதை செய்த நாளில் தமிழ்நாட்டில் தீபாவளி என்று கொண்டாடுவதில்லையா அதுபோல, கேரள மாநிலத்தில் மாவலியை அழித்த நாளில் ஓணம் பண்டிகையாம். (எல்லாம் ஒரே மாதிரிதான்).

கதை எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். அறிவுக்குப் பொருத்தமற்றதைத் தான் ஆரியப் பார்ப்பனர்களால் கிறுக்க முடியும். பக்தி என்னும் மயக்க மருந்துக்கு ஆட்பட்ட நம் மக்கள் கடவுள், மதத்தின் பெயரால் எவற்றைக் கிறுக்கினாலும், அவற்றைக் கிரீடமாகக் கருதித் தலையில் அணிந்து கொள்வார்களே அந்தக் குருட்டுத் தைரியத்தில் தான் இந்த மூடத்தனக் குப்பை மேடுகள்!

அதேநேரத்தில், இந்தப் புராணங்களில், பண்டிகைகளில் உள்ளீடாக இருக்கும் ஒரு மய்யக் கருத்தைக் கவனிக்கத் தவறக்கூடாது.

திராவிடர்கள் நல்லவர்களாக இருந்தாலும், நல்லாட்சி புரிந்தாலும் அவற்றைக் கண்டு பொறாதவர்களாக ஒழித்துக் கட்டவேண்டும் என்று கருதுகின்றவர்களாக ஆரியப் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அந்த மய்யப் புள்ளியாகும்.

கலைஞர் அவர்கள் சூத்திரராக இருந்து நல்லாட்சி புரிந்து வந்தாலும், பார்ப்பன ஊடகங்கள் அவர்மீது சேற்றை வாரி இறைக்கும் அவலத்தை அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டே இருக்க வில்லையா!

தமிழ் செம்மொழி என்று அறிவிக்க கலைஞர் காரணமாக இருந்தால், அதனைப் பாராட்ட மனம் இல்லாது, தமிழ் செம்மொழி ஆனால், வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா? என்று எழுதக் கூடிய பார்ப்பன ஏடுகள் இருக்கத்தானே செய் கின்றன. பண்டிகைகள் கொண்டாடும் தமிழர்கள் அவற்றிற்குள் படிந்து கிடக்கும் பாஷாணத்தை சூழ்ச்சியைப் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா?

-----------------------"விடுதலை” தலையங்கம் 23-8-2010

3 comments:

அ.முத்து பிரகாஷ் said...

பேரன்பு தோழருக்கு மாலை வணக்கங்கள்!

பெரும்பாலான பண்டிகைகளை மக்கள் எதன் பொருட்டு கொண்டாடுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் தான் வழமையான ஒரு நிகழ்வாக இயந்திரத்தனமாக கொண்டாடிவருகின்றனர். அதன் பின்னாலுள்ள சூழ்ச்சிகளை உங்களை போன்றவர்கள் எடுத்து சொல்லும் போது புரிந்து விலகிச் செல்லும் எங்கள் இளைய சமுதாயம்.

நன்றிகள் தோழர் !

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர்.

என்னை அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Kannan Rangarajan said...

Hinduism is a Philosophy. It says if u do good u will get good. In ur blog, it is found that always u criticise a sect of people. Instead of doing that do some constructive work.

No point in bluntly balming the Hindu gods. It is far beyond ur grasp to understand it.


Half baked people only do these blasphmey.