Search This Blog

1.3.10

சோ - ஒரு பழைமைவாதியா?


பழைமைவாதிகள்!

நீங்கள் ஒரு பழைமைவாதியா என்ற கேள்வி ஒன்றுக்கு திருவாளர் சோ ராமசாமி இவ்வார துக்ளக்கில் கீழ்க்கண்டவாறு பதிலை எழுதியுள்ளார்.

ஆமாம், உண்மைதான். பல பழைய விஷயங்கள் திரும்பவேண்டும் என்று விரும்புகிறவன்தான் நான். ஊழல் இல்லாத நிலை; நீதித்துறை உள்பட எல்லாத் துறைகளிலும் நேர்மை; அரசு அதிகாரிகள் ஆளும் கட்சி ஊழியர்களாகவும், போலீஸார் ஆளும் கட்சியின் அடியாட்களாகவும் செயல்படாத நிலை; மாணவர்கள் ஒரு கட்டுப்பாட்டோடு நடந்துகொண்ட நிலை; ஆசிரியர்கள் பணியைப் புனிதமாகக் கருதிய நிலை.... இப்படி பல பழைய விஷயங்கள் திரும்பி வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.

(துக்ளக், 3.3.2010).

ஏன் அதோடு நிறுத்திவிட்டார் அக்கிரகாரத்தின் ஸ்வீகார புத்திரர்?

பழைய வர்ணாசிரமப்படி, மனுதர்ம சாஸ்திரப்படி சூத்திராள் படிக்கக் கூடாது; பிராமணாளுக்குத் தொண்டூழியம் செய்து கிடப்பதே அவாளின் மோட்சத்திற்கு மார்க்கம்.

ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படவேண்டும்.

பழைய சென்னை மவுண்ட் ரோடில் பிராமணாள் உணவு விடுதிகளில் தொங்கிய விளம்பர போர்டுகள் மறுபடியும் இடம்பெறவேண்டும்.

பஞ்சமர்கள், தொழுநோயாளிகள், நாய்கள் உள்ளே நுழையக்கூடாது என்ற அந்தப் பழைய வாசகங்கள் அதில் இடம்பெறவேண்டும்.

ரயில் நிலையங்களில் பிராமணாள், சூத்திரா ளுக்குத் தனித்தனி உணவுக்கான இடங்கள்.

உயர்ஜாதிக்காரர்கள் வீதியில் பஞ்சமர்கள் நடக்கக்கூடாது.

கல்லூரி விடுதிகளிலும், நீதிமன்றங்களிலும் பிராமணாள், சூத்திராளுக்குத் தனித்தனி தண்ணீர்ப் பானைகள் வைக்கப்படவேண்டும்.

மனைவியைப் புருஷன் அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பு சொன்னாரே நீதிபதி முத்துசாமி அய்யர் வாள் _ அதெல்லாம் சட்ட ரீதியாகக் கொண்டு வரப் படவேண்டும்.

தமது பிறந்த வயதைத் திருத்தி தலைமை நீதிபதியாக பதவியை நீட்டித்துக் கொண்டாரே ஜஸ்டிஸ் ராமச்சந்திர அய்யர் _ நீதித்துறைக்கு அத்தகைய வரைத்தான் எடுத்துக்காட்டாகக் கொள்ளவேண்டும்.

கொலைக்குற்றம் சாற்றப்பட்ட மட்டப்பாரை வெங்கட்ராமய்யர் மீதான வழக்கை ஆச்சாரியார் வாபஸ் வாங்கியதுபோல பார்ப்பனர்கள் எந்தக் குற்றம் செய்தாலும் அவர்கள்மீது வழக்கு _ கிழக்கு என்று போடப்படக்கூடாது.

சங்கராச்சாரியார் கொலை செய்திருந்தாலும், அவாளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும்.

ஆச்சாரியார் ஆட்சியில் (1937_39) அமைச்சர் டி.எஸ்.எஸ். ராஜன் அய்யங்கார் 200 மூட்டை நெல்லை வெளி ஜில்லாவுக்குக் கொண்டு போய் விற்பனை செய்தார். அதையும் அமுக்கினார். பிரதம அமைச்சர் ஆச்சாரியார்; நேர்மை என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும்.

முந்திரா ஊழல் போன்ற பெரிய பெரிய ஊழல் களில் அல்லவா அமைச்சர்கள் ஈடுபடவேண்டும். அதை விட்டுவிட்டு அற்ப சொற்ப ஊழல்களில் ஈடுபட லாமா?

அதனால்தான் பழைமை என்பது எப்பொழுதுமே நல்லது.

பழைமை விரும்பி என்று தம்மீது முத்திரை குத்திக் கொள்ளும் திருவாளர் சோ ராமசாமி இவற்றையெல் லாம் சேர்த்துக் கொள்ளவேண்டியது தானே _

அவசரத்தில் மறந்துபோய்ட்டாளோ!

---------------கருஞ்சட்டை 28-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

ராமுடு said...

literally laughing how good thoughts are interpreted in such a bad way like you did.. You people just bluffing and make use of ppl's literacy.. NOBODY can help you people..

Still you clean the shoes of mu ka.. but wont let your people to come up.. Common man's mind is attractive towards non-sense items. So many people born and did and still doing good things to all the community. Personally I am helping 2 kids for their education and FYI it is not from my community so called "Brahmanal".. I know so many people from my community starving for food and education. But i never tried to focus on community when I help. Every year I spend 5% of my income towards orphanage and kid's education. But still you people take some non-sense items and show to the public that "see how brahmins looted others.."...

Useless crap. I wasted 3 minutes of my time.