Search This Blog

28.3.10

நட்சத்திர ஓட்டலில் கடவுள் கல்யாணம்



வருகின்றன 29 ஆம் தேதி பங்குனி உத்திரமாம். அன்றைய நாளில்தான் கடவுள்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டதுகளாம். சிவன்_ பார்வதி, முருகன்_ தெய்வானை, ரங்கமன்னார்_ஆண்டாள் என்று பலதுகளும் வாழ்க்கை இணை ஏற்பு விழாவை நடத்திக் கொண்டது இந்த நாளில்தான் எனக் கதை.

சிவனின் உடல் வியர்வையில் ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்களே ஒட்டு மொத்தமாகப் பிறந்ததாகவும் ஒரு கதை. வியர்வையில் விந்தும் சினை முட்டையும் சேர்ந்து இருந்ததா என்பதற்கு விவரம் யாரும் தரவில்லை.

இந்தக் கதைகளுக்கு மாறாக சிவன்_ பார்வதி விவாகம் மகா சிவராத்திரி நாளன்று நடந்ததாம். ஷிவ்விவாஹ் இம்மாதம் 12 முதல் 14 தேதிகளில் வடக்கே நடந்ததாம். நீலப்பட்டு வேட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருந்த சிவன், சிவப்புப் பட்டுச் சேலை கட்டிய பார்வதியை விவாகம் செய்து கொண்டதாம். எல்லாக் கடவுள்களும் வந்திருந்தனவாம்.

விவாக வைபவத்தைக் காண பிரம்மன், விஷ்ணு, இந்திரன் ஆகியவை வந்ததாகச் செய்தி. எழுதியிருப்பது தி இந்து ஏடு. பார்த்து அறிந்து உறுதி செய்த பிறகுதான் வெளியிட்டிருக்கும்(?) என நம்பலாமா?

சிவன்_பார்வதி திருமணத்திற்குப் புரோகிதம் பார்த்த பிரம்மாவின் காமவெறி நினைப்பினால் நெருப்பே அவிந்துவிட்டதாகச் சேதி கூறுகிறது புராணம். இந்தக் கல்யாணத்தில் எப்படி நடந்தது என்று ஏடு எழுதவில்லை. அய்ந்து நட்சத்திர ஓட்டலில் நடந்ததாகவும் சூட் அணிந்தவர்கள் கலந்து கொண்டதாகவும் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் பெண் வீட்டாராகத்தான் இருப்பார்கள் என்று யூகம். மணமகனே புலித்தோலை அரைக்கசைத்து இருக்கும் ஆள்தானே! தந்தை பெரியார் சொன்ன மாதிரி நூல், ஆடை போன்றவை கண்டுபிடிக்கப் படாத காலக் கடவுள்தானே!

----------------------- சு.அறிவுக்கரசு அவர்கள் 28-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: