Search This Blog

30.3.10

சாமியார்களுக்கெல்லாம் இது கெட்ட நேரம்




(மார்ச் 18 ஆம் தேதி தான் பிடாடி ஆசிரமத்திற்கு கட்டா யம் வருவேன் என்று சாமி நித்யானந்தா உறுதிபடக் கூறினார்; ஆனால் அவ்வ று வரவேயில்லை - மாய மாக மறைந்துவிட்டார்!)

நான் கோயில்களுக்கெல்லாம் அதிகமாகப் போவதில்லை. கடந்த முறை அமெரிக்க நாட்டின் சீட்டிலுக்கு நாங்கள் சென்றிருந்தபோது உங்களின் பிறந்தநாளன்று, கடவுளின் ஆசி பெற ஒரு கோயிலுக்கு நாம் செல்ல வேண்டும் என்று என் மனைவி கல்யாணி கூறினார். 2009 ஆகஸ்ட் 27 தேதி எனது 70 ஆவது பிறந்த நாள்.

சீட்டில் நகரத்து நித்யானந்தசாமி வேதகோயில்

போயிங் விமான நகரமாக சீட்டில் நகரின் ரெட்மாண்ட் பகுதியில் உள்ள நித்யானந்தா வேத கோயில்தான் அருகில் உள்ள கோயில் என்று எனது மருமகள் மஞ்சுளா கூறினார். இந்தப் பெயரை அப்போதுதான் முதன் முதலாக நான் கேட்-டேன். கிர்க்லேண்டில் வசிக்கும் எங்-களது இளைய மகன் கவுரங்கும், மரு-மகள் மஞ்சுளாவும் மாலை 6 மணிக்குப் பிறகு அவர்களது டயோடா பியரிஸ் காரில் எங்களை அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது அங்கு வந்திருந்த எங்களது மூத்த மகன் கவுரவ்கும் சேர்ந்து கொண்டார். ஒரு சில நாட்களுக்கு முன்புதான் அந்தக் காரை வாங்கியிருந்த கவுரங், தான் ஒரு நாத்திகன் என்றும், கவுரவ் கோயில்களுக்கும் திருவிழாக்களுக்கும் அங்கு கொடுக்கப்படும் சாப்பாடு அயிட்டங்களுக்காகத்தான் செல்கிறார் என்றும் கூறினார்.

நித்யானந்த வேதக் கோயிலின் வாசலில் இருந்த உயரமான பெண் தொண்டர் ஒருவர் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். வாழ்க்கைக்கு வேதப் பேரறிவைக் கொண்டு வரும் நோக்கத்தில் நித்யானந்த பரமஹம்சர் கட்டியுள்ள நான்கு கோயில்களில் இதுவும் ஒன்று என்று அவர் கூறினார். நாங்கள் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்தவுடன், தானும் பெங்களூருவுக்கு அருகில் பிடாடியில் உள்ள ஆசிரமத்தில் சில வார காலம் தங்கிவிட்டு இப்-போதுதான் திரும்பியிருப்பதாக அப்பெண் தொண்டர் கூறினார்.

புன்னகையுடன் கூடிய இளைஞரான நித்யானந்த சாமியின் புகைப்படம் வருபவர்களை வரவேற்பது போல் தோற்றமளித்தது. அவரது சிறிய உடலுக்கு அவர் அணிந்திருந்த காவித் தலைப்பாகை பொருத்தமில்லாதது போலத் தோன்றியது. தரைதளத்தில் ஆசிரமம் அமைந்திருந்த அந்தக் கட்டடம் நகரின் மிகவும் முக்கியமான வணிக வளாகப் பகுதியில் அமைந்திருந்தது. நித்யானந்தா வேத மய்யம் என்ற பெயர்ப்பலகை தனது செயல்பாடுகளைப் பற்றி விளக்குவதாக நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக இருந்த வரவேற்பறையை அடுத்து உள்ளே சற்று பெரிய அறை ஒன்று இருந்தது.

கோயிலின் கருவறைக்குச் செல்லும் வழியில் இருந்த ஹால் பெரியதாக இருந்தது. அழகான, நல்ல நிறம் கொண்ட ஒரு பூசாரி, வழிபாடு சடங்குகளைச் செய்து கொண்டும் மேற்பார்வையிட்டுக் கொண்டும் இருந்தார். அவருக்கு வயதில் இளைய பயிற்சித் தொண்டர்கள் உதவி செய்து கொண்டிருந்தனர். ஊதுவத்தி எரியும் வாசம் வந்து கொண்டிருக்க, கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டு, தீர்த்தமும், குங்குமமும், பூக்களும் பிரசாதமாக வழங்கப்பட்டன. அங்கு வந்திருந்த பக்தர்களில் சில அயல்நாட்டினரும் இருந்தனர். வெளியே வரும் வழியில் இருந்த சிறு அறை ஒன்றில் இலைகளால் ஆன கோப்பைகளில் பிரசாதங்கள் வைக்கப்பட்டிருந்தன. குறைந்த அளவு நன்கொடை 1 டாலர் என்று பெயர்ப்பலகை தெரிவித்தது.

சோதனை செய்து வெற்றி கண்ட ஆன்மீக வியாபாரம்

சில வார காலத்தில் சுவாமிஜி வர இருக்கும்போது நடத்தப்பட இருக்கும் பயிற்சி முகாமுக்கு ஆள்களை சேர்ப்பதில் தொண்டர்கள், குறிப்பாக பெண் தொண்டர்கள் மும்முரமாக இருந்தனர். தங்குமிடம், உணவு உள்ளிட்ட இந்த முகாமுக்கான நன்கொடைக் கட்டணம் 6,000 டாலர்கள். மற்ற ஆன்மிகத் தலைவர்களால் சோதனை செய்து வெற்றி பெற்ற ஆன்மிக வியாபாரம் இது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அவரது ஆசிகளையும், தங்களைக் குணப்படுத்தவேண்டும் என்று கோரியும் வரும் இமெயில் கடிதங்களைக் கையாளக்கூட இயலாத அளவுக்கு அவரைப் பின்பற்றும் தொண்டர்கள் கூட்டம் பெருகியது. தனது ஆசிகளைக் கோரும் இத்தகைய தொண்டர்கள் தினமும் காலை 7 மணி முதல் 7.20 வரை வரதமூர்த்தியைத் தொழ வேண்டும் என்று ஆலோசனை கூறி சாமிகள் கேட்டுக் கொண்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த கணினியில் எங்கள் வருகையைப் பதிவு செய்த பின் நாங்கள் வெளியேறினோம்.

நாங்கள் இந்தியாவிற்குத் திரும்பிய பின் சிறிது காலம் சென்றபின், தனது நகைச்சுவைப் பேச்சுக்குப் பெயர் போன ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி ஒருவரைப் பார்த்து, சாமி நித்யானந்தாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டேன். கேள்விப்பட்டது மட்டுமல்ல; பிடாடி அருகே உள்ள அவரது ஆசிரமத்திற்கும் நான் சென்றிருக்கிறேன். நான் சென்றிருந்தபோது அவர் அங்கிருக்கவில்லை; ஆனால் விருந்தோம்பல் நன்றாகவே இருந்தது என்று கூறிய அவர், பாமர மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

கள்ளக் காதல் மட்டுமா?
கள்ள நோட்டுகளுமா?

சாமி நித்யானந்தாவுடன் தமிழ் சினிமா நடிகை ஒருவர் சல்லாபம் செய்த வீடியோ காட்சிகள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்தது இது. யூடியூப் மற்றும் கூகுல் ஆகியவற்றின் மூலம் அவருக்குக் கிடைத்த விளம்பரத்தைவிட மிகப் பெரிய விளம்பரம் இந்த தொலைக் காட்சி ஒளிபரப்பின் மூலம் நித்யானந்தாவுக்குக் கிடைத்தது. பாலியல் திறமை மட்டுமல்லாமல், கள்ள நோட்டு அடிக்கும் திறமையும் அவருக்கு இருக்கிறது என்று பேசப்படுவதற்குக் காரணமாக, அவரிடமிருந்து பணத்தைத் திருடிக் கொண்டு போன ஒருவனிடம் இருந்த அந்தப் பணம் கள்ள நோட்டுகள் என்று கண்டு பிடிக்கப்பட்டது அமைந்தது.

தற்போது நடைபெறும் கும்பமேளாவிற்குப் பிறகு மார்ச் 18 ஆம் தேதிதான் பிடாடி ஆசிரமத்திற்குக் கட்டாயமாக வருவேன் என்று உறுதிபடக்கூறிய நித்யானந்தா அவ்வாறு வரவில்லை என்பதுடன் மாயமாக மறைந்துவிட்டார். கற்பழிப்பு, முறையற்ற பாலியல் உறவு போன்ற ஏழு குற்றச்சாற்றுகள் அவர் மீது காவல்துறையால் பதிவு செய்யப்-பட்டுள்ளன. அவரது பக்தர்களும் மற்ற பொதுமக்களும் அவரது வருகைக்-காகக் காத்திருக்கின்றனர்.

இப்போதெல்லாம் சாமியார்களுக்குக் கெட்ட காலம்தான். ஒன்று வானத்து நட்சத்திரச் சேர்க்கைகளாலோ, அல்லது திரை நட்சத்திரச் சேர்க்கைகளாலோ அவர்களுக்குக் கெட்ட பெயர்தான்.

விபசார தரகர் டில்லி திவேதி சாமியார்

அதிகம் படிக்கவே செய்யாத 39 வயது திவிவேதி டில்லியில் செக்யூரிடி பாதுகாவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் மசாஜ் பார்லர் பணியாளராக மாறினார். சதைத் தொழில் நடத்தியதற்காகவும், திருட்டுக் குற்றத்துக்காகவும் பல முறை கைது செய்யப்பட்ட இவர் தன்னைத்தானே சந்த் சாமி பீமானந்த்ஜீ மகராஜ் சித்ரகூட்வேல் என்று அழைத்துக் கொண்டார். உயர்ரக விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்த அவரது ஆசிரமத்தில் இல்லாமல், இப்போது அவர் சிறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார். ஆளுக்குத் தகுந்தபடி ஒழுக்கக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் உடுப்பி மடம்

இது போன்று எவரோ ஒருவரை வைத்துக் கொண்டு மொத்த ஆன்மிக பெருமக்களையும் குறைகூறக்கூடாது என்று சிலர் கூறுவர். ஆனால் இது தவறான கருத்தாகும். மிகவும் தொன்மை வாய்ந்ததும், பாரம்பரியம் மிக்கதுமாகக் கருதப்படுவதுமான மாத்வ பிரிவைச் சேர்ந்த உடுபி ஷிரூர் சாமி லட்சுமிவார தீர்த்த மடத்துக்கு மூன்றாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரய சாமிக்கு 15 ஆண்டு காலமாக ஒரு பெண்ணுடன் பாலியல் தொடர்பு உள்ளது என்று தெரிந்த பிறகும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்றால் என்னவென்று சொல்வது?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மடத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் கடல் கடந்து பயணம் செய்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கிரஷ்ண விக்ரகத்தைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை. அதற்கு முன்பு, தனது பக்தர் ஒருவரின் மகளின் மீது தான் காதல் கொண்டு விட்டதாகவும், அவரை மணந்து கொள்ள இருப்பதாகவும் வித்யா பூஷண சாமி கூறியபோது, அவருக்கு எதிராக மாதவ மடம் திரண்டு எழுந்தது. அவர் தனது துறவைக் கைவிட்டு-விட்டார் என்ற போதும், அவரது நேர்மைக்காகப் பாராட்டப்பட்டார். அவரது பஜனைகளுக்கு மக்கள் கூட்டம் குவிந்தது; அவரது நிகழ்ச்சிகளின் குறுந்தகடுகள் பெரும் அளவில் விற்பனை ஆயின.

பெண் துறவிகளை கருவுறச் செய்த ஜைனத்துறவி

யார் அதிக அளவு எண்ணிக்கையிலான பக்தைகளைக் கெடுத்தது என்பதில் ஜெய்பூரில் இருந்த இரு ஜைன முனிவர்களிடையே போட்டி ஏற்பட்டது. இதுபற்றி பக்தர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தபோது, ஒரு முனிவர் தற்கொலை செய்து கொண்டார். வேறு இடத்தில் இருந்த மற்றொருவர் புலியையும் சைவமாக வளர்க்க முடியும் என்று சொல்லி வந்தவர். இந்த முனிவர், இரண்டு பெண் ஜைனத் துறவிகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்தார். பல முறை அவர்-கள் கருவுற்று, பின்னர் அவரால் கருக்கலைப்பு செய்யப்பட்டவர்கள். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து எழுந்த கூச்சலும், எதிர்ப்பும் அதிக நாள்கள் நீடிக்கவில்லை. தவறு செய்தவர்களைத் தண்டித்து வெளியேற்றுவது என்பது இல்லாமல், பணபலத்தினால் இந்த நிகழ்ச்சி பற்றிய விவரமே மூடி மறைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.

பாதிரியாரின் ஒழுக்கக் கேட்டை பார்த்ததால் கொலை செய்யப்பட்ட பெண்

அதனைஅடுத்து, கேரளாவில் பாதிரியார் ஒருவரால் நடத்தப்பட்ட கிறித்தவ அமைப்பைச் சார்ந்த கன்னியாஸ்திரீ ஒருவரும் ஓர் ஆணும் கொலை செய்யப்பட்ட வழக்கு ஒன்று எழுந்தது. பாலியல் உறவு கொண்டிருந்ததைக் கண்டதுதான் கொலையுண்ட பெண் செய்த குற்றம். இந்த வழக்கை மூடி முறைக்க அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்தியப் புலனய்வுத் துறை அதிகாரி ஒருவரின் தீவிர விசாரணையில் முழு உண்மையும் வெளிவந்தது.

வெளிச்சத்துக்கு வரும் நிகழ்ச்சி ஒன்று என்றால், வெளியே வராதவை நூறு இருக்கின்றன

வெளிச்சத்துக்கு வரும் ஒவ்வொரு வெட்கப்படத்தக்க நிகழ்ச்சி ஒன்று என்றால், இது போன்ற செய்தி வெளி-வராத நிகழ்ச்சிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அப்படியிருக்கும்போது மக்கள் கூட்டம் ஏன் சாமியார்களையும், சாமியாரிணிகளையும் தேடிச் செல்கிறது? ஆன்மிக ஆறுதலைத் தேடிச் செல்கிறோம் என்று அவர்கள் கூறுவதே ஒரு ஏமாற்றுவேலை. தங்களின் உண்மையான அல்லது கற்பனையிலான பிரச்சினைகள் இது போன்ற சாமியார்களின் பக்கத்தில் இருந்தால் தீர்ந்துவிடும் என்று இந்தப் பக்தர்கள் (இவர்களும் சிலநேரங்களில் கயவர்களே) கருதுவதுதான் உண்மையான காரணமாக இருக்கக்-கூடும்.


------------நன்றி: தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், 29.3.2010 இல் என். நரசிம்மன் அவர்கள் எழுதியகட்டுரை -தமிழில்: த.க.பாலகிருட்டிணன் “விடுதலை” 29-3-2010

0 comments: