Search This Blog

3.9.09

சிலைதிருட்டும் பார்ப்பனர்களும்





கோபுரம்


கோயில்களுக்கும், கோயில்களில் உள்ள சாமி சிலைகளுக்கும் ஆபத்து ஆபத்து என்ற ஒரு நிலை நாட்டில்! சாமி சிலை திருட்டுப் போவதைத் தடுக்கவும், கண்டுபிடிக்கவுமே காவல் துறையில் ஒரு தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, கூடுதல் டி.ஜி.பி. என்கிற தகுதியில் அதற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என்பதிலிருந்தே, கோயிலில் உள்ள கடவுள் சக்திபற்றி கோவணம் கட்டத் தெரியாத சிறுவன்கூடப் பின் பொறியால் சிரிக்கிறான்.

சாமி சிலையைத் திருடினால் கண் போகும், கால் விளங்காது என்று கரடி விட்டனர். இப்பொழுது கோயில் அர்ச்சகப் பார்ப்பானே திருட ஆரம்பித்துவிட்டான்.

தமிழ் நாவலர் சரிதை என்ற ஒரு நூல் கூறும் தகவல்:

விஜய நகர நாயக்கர் மன்னன் ஆட்சிக்காலம், மன்னன் கிருஷ்ண தேவராயன். திருவாரூர் தியாகராயர் கோயிலில் இருந்த 63 நாயன்மார்கள் சிலைகளுள் இரண்டு சிலைகளை நாகராஜ நம்பி என்ற பார்ப்பான் திருடி விற்று விட்டான். இதை அரசனிடம் சொல்ல அமைச்சர்கள் அஞ்சினர். புலவர் ஒருவர் கிளி ஒன்றுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து அதன்மூலம் மன்னனுக்குத் தெரியப்படுத்த எண்ணினார் (சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை அல்லவா!).

அந்தப் பாடல் வருமாறு:

முன்னாள் அறுபத்து மூவர் இருந்தார் _ அவரில் இந்நாள் இரண்டு பேர் ஏகினார். கண்ணான் நறுக்குகின்றான். விற்றுவிட்ட நாகராஜ நம்பி இருக்கின்றான் கிருட்டினராயா என்பதுதான் அந்தப் பாட்டு.


கோயிலில் பார்ப்பான் திருடுவது என்பது இன்று நேற்று நடப்பதல்ல. பல காலமாக நடந்து வருவதுதான். காரணம், அவனுக்கு மற்றவர்களைவிட மிக நன்றாகவே தெரியும். கடவுளாவது புடலங்காயாவது அது ஒரு கல் அல்லது உலோகம் என்பதை அன்றாடம் அதனிடம் புழங்குகின்ற அய்யருக்குத் தெரியாமல் வேறு யாருக்குத்தான் தெரியப் போகிறது?

சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் அரசு அமைத்த குழுவே கோயில் திருட்டில் அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு இருந்த உறவை அம்பலப்படுத்தி விட்டது.


நேற்று மாலை ஏடு ஒன்றில் ஒரு செய்தி. கோயில் கோபுர கலசங்களுக்கு அபூர்வ சக்தியிருக்கிறது என்றும், அவற்றை விற்றால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்றும் தமிழகம் எங்கும் ஒரே வதந்தியாம். அந்தக் கலசத்தில் இருடியம் இருக்குதாம். அதை விற்றால் பெரும் பணம் கிடைக்குமாம். கிளப்பி விட்டவர்கள் யார் என்று தெரியவில்லை.



இந்து அறநிலையத் துறைக்கு இப்பொழுது இந்த வேலை கூடுதலாகிவிட்டது. கருவறையில் உள்ள கடவுளைக் காப்பாற்றுவது போல கோபுரக்கலசத்தையும் காப்பாற்றும் வேலை வேறு.

மனிதனைக் காப்பாற்றுவான் கடவுள் என்பது சுத்தப் பொய் - புரட்டு, கடவுளைக் காப்பாற்றுவதுதான் மனிதன் வேலை. கடவுளுக்குப் பேச சக்தியிருந்தால் காவல்துறையே என்னைக் காப்பாற்று காப்பாற்று! என்று மனு போடுவார் என்று நம்பலாம்.

-------------- மயிலாடன் அவர்கள் 3-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: