Search This Blog

31.7.11

நிருபமாராவுக்கு ராஜபக்சே விருந்து


இந்தியாவின் வெளி யுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் இன்று ஓய்வு பெறுகிறார். வெளியுறவுத் துறைக்குப் பெண் ஒருவர் என்று பெண்ணியவாதிகள் பெருமைப்பட்டதுண்டு. மேற்கொண்டு அமெரிக்கா வுக்கு இந்தியாவின் தூதராகப் பதவியேற்கவும் இருக்கிறார்.

அந்த நிருபமாராவ் இன்றைக்கு எங்கிருக்கிறார். தெரியுமா? இலங்கையிலே இருக்கிறார்? அலுவல் நிமித்தமா? அல்ல அல்ல; சிறப்பு விருந்தினராக - சிறப்பு அழைப்பின் பேரில் சென்று இருக்கிறார். அன்பழைப்புக் கொடுத்த அந்தப் பிதா மகன் யார்? இட்லரின் மலிவுப் பதிப்பான, இடி அமீனின் அசல் நகலான ராஜபக்சேதான் இந்த அழைப்பைக் கொடுத்தவர்.

பதவி ஓய்வு பெறும் நாளில் அப்படி என்ன அவசரம் என்ற ஆவலான கேள்வி எழுமே!


இலங்கைப் பீடாதிபதி சிறப்பு விருந்து கொடுத்து பாராட்டுத் தெரிவிக்கிறராம்; அதில் கலந்து கொள்ளத்தான் இந்த அம்மையார் சென்றுள்ளார்.

ராஜபக்சே விருந்து கொடுத்து உபசரிக்கிறார் என்றால் இதன் பொருள் என்ன? ஈழத் தமிழர்கள் விஷயத்தில் இலங்கை அரசுக்கு விசுவாசமாக நடந்திருந்தால்தான் - ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட பல வகைகளிலும் நேசக்கரத்தை நீட்டியிருந்தால்தான் ராஜபக்சேவிடமிருந்து இந்தப் பாராட்டு, உபசரிப்பு நடக்க முடியும் என்பது எளிதாகப் புரிந்து கொள்ளப்படும் ஒன்றே.

நரவேட்டை ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்ற குரல் உலக அரங்கில் ஓங்கி ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கும் ஒரு கால கட்டத்தில், இந்தியாவின் வெளியுறவுச் செயலர், ராஜபக்சேவின் சிறப்பு விருந்தினராகச் செல்லுகிறார் என்றால் இதன் பொருள் என்ன? ராஜபக்சேக்கள், பெண் உருவத்தில்கூட இருப்பார்களோ! என்று தானே நினைக்கத் தோன்றுகிறது.

இந்திய அரசின் அனுமதியோடுதான் இதில் கலந்து கொண்டு இருக்கிறாரா என்று தெரிய வில்லை. இந்தியா அப்படி ஓர் அனுமதி கொடுத்திருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை! மனித உருவத்தில் நட மாடும் சிங்கள வெறியர் ராஜபக்சே என்ற கொடூரனுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பை இந்திய அரசு கொடுப்பதில்லையா!


சோ என்ற நரிப் பார்ப்பனர் ஒருமுறை ஜெயவர்த்தனே விருந்தாளி யாகச் சென்று தங்கிய துண்டு.

சந்திரிகா குமாரதுங்கே அளித்த சிங்கள ரத்தினா என்ற விருதை இந்து ஏட்டின் ஆசிரியர் என்.ராம் பெறவில்லையா?

சிங்களவனுக்குத்தான் தமிழன் மாமிசப் பிரியாணி பிடிக்கும் என்று பொருளல்ல - இந்தியாவில் உள்ள ஆரியர்களுக்கும்கூட தமிழனின் மாமிசக் கொத்துக் கறியிலும், பிரியாணியிலும் அமோகமான ஆசை வெறியுண்டே!

--------------- மயிலாடன் அவர்கள் 31-7-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: