Search This Blog

10.7.11

பார்ப்பனர்களுக்குப் பதிலடி!ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். பேசியது என்ன?


பார்ப்பனர்களுக்குப் பதிலடி! பிரித்தாளும் நரியே,போற்றி!


பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற சதிகாரத் தலைவர் இப்பொழுது திருவாளர் சோ ராமசாமி அய்யர்தான். அவருடைய துக்ளக் இதழும் பார்ப்பன சங்கத்தின் அதிகார பூர்வமற்ற வார இதழாக வெளி வந்து கொண்டிருக்கிறது.

தமிழக அந்தணர் வரலாறு என்னும் நூலை எழுதிய கே.சி. இலட்சுமிநாராயணன் என்ற பார்ப்பனர், தேசத் துரோக அமைப்பு எனும் தலைப்பில் நீதிக்கட்சியையும் திராவிட இயக்கத்தையும், அதன் ஒப்புயர்வற்ற தலைவர் களையும் கொச்சைப்படுத்தி எழுதும் தொடர் ஒன்றை துக்ளக்கில் (6.7.2011) தொடங்கியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே பார்ப்பனர்களுக்கே உரித்தான பிரித்தாளும் நரித் தந்திரம்!

திராவிட இயக்கத்தைப் பற்றித் தாக்க ஆரம்பித்தால், அண்ணா என்ற பெயரையும், திராவிட என்ற சொல்லையும் தாங்கியுள்ள அண்ணா தி.மு.வையும் சேர்த்துத் தாக்குவதாக ஆகிவிடுமே -அது கூடாதே, - தங்கள் இனத்தைச் சேர்ந்த ஜெயலலிதா அம்மையாரைக் காப்பாற்ற வேண்டுமே, தூசு ஒன்று அவர் மேனியில் விழுந்துவிடலாமா என்பதில் சர்வ ஜாக்கிரதையாக இருக்கக் கூடியவர்களாயிற்றே! அதற்காக என்ன ஜாலம் தெரியுமா?

எம்.ஜி.ஆர்.நிறுவிய அ.இ.அ.தி.மு.க. வைத் திராவிடக் கட்சிகளில் ஒன்றாகக் கருதுவது சரியல்லவாம்.

ஹிட்லர் ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கொலை செய்தைப் போல் குற்றமற்ற பிராமணர்களைத் துவேஷிப்பது திராவிடக் கட்சிகளின் தலையாய தீய குணாம்சங்களில் ஒன்று. இந்தக் குணம் எம்.ஜி.ஆரிடம் சிறிதுகூடக் கிடையாது.

தனித்திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாக 1963 ஆம் ஆண்டில் அறிவித்த பிறகும் இன்று வரையில் தமிழ்நாட்டில் பிரிவினை இயக்கங்களுக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருவது திராவிடக் கட்சிகளின் மற்றொரு குணாம்சம். இந்தக் குணாம்சம் எம்.ஜி.ஆரிடம் காணப்பட்டதில்லை.

இவர்களின் பகுத்தறிவுக்குப் பொருந்தாதவை என்று சொல்லப்படும் இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்களின் பண்டிகைகளையும், சம்பிரதாயங்களையும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக் கொண்டு, ஹிந்து சமயத்தின் சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை மட்டும் இகழ்வது திராவிடக் கட்சிகளின் இன்னொரு தீய குணாம்சம். இதனையும் எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஏற்றுக் கொண்டவர் அல்லர்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசான ஜெயலலிதாவும், இந்தத் தீய குணங்களில் ஒன்று கூட இல்லாதவர். எனவேதான் அ.இ.அ.தி.மு.க.வை ஒரு திராவிடக் கட்சியாகக் கருதுவது பிழையானது என்று இந்தத் தொடரில் முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன் என்ற பீடிகையுடன் தொடரைத் தொடங்கியுள்ளார்.

இதில் அ.இ.அ.தி.மு.கவை புகழ்கிறாரா? இகழ்கிறாரா? அ.இ.அ.தி.மு.க திராவிடக் கட்சி அல்ல என்று அய்யர்வாள் எழுதுவதை அ.இ.அ.தி.மு.க தலைமை ஏற்றுக் கொள்கிறதா?

ஏற்றுக் கொள்கிறது என்றால் முதலில் அண்ணாவின் பெயரையும், உருவத்தையும், திராவிட என்ற இனச் சுட்டுப் பெயரையும் கட்சியிலிருந்தும், கொடியிலிருந்தும் தூக்கி எறிய வேண்டுமே, செய்வார்களா?

இல்லை - இல்லை. அ.இ.அ.தி.மு.க. அசல் திராவிட இயக்கம்தான்; அண்ணா எங்கள் வழிகாட்டிதான் என்று சொல்லுவார்களேயானால், துக்ளக்கில் வெளி வந்திருக்கும் இந்தத் தொடரை எதிர்த்து முதல் குரல் கொடுத்திருக்க வேண்டும் - அவர்களின் அதிகாரபூர்வ நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் மறுப்பும் தெரிவித்திருக்க வேண்டுமே -இதுவரை செய்ய வில்லையே - ஏன்?

அ.இ.அ.தி.மு.க.வில் கொள்கை உள்ள ஒரே ஒரு தோழர் கூட இல்லாதபடி அற்றுப் போய்விட்டனர் என்பதுதான் பரிதாபகரமான பெரும் உண்மை!

சட்டமன்றத்திலேயே தன்னை ஒரு பாப்பாத்தி என்று பிரகடனப்படுத் தியவர் எப்படி திராவிட முத்திரையைக் குத்திக் கொள்ள ஆசைப்படுவார்?

எம்.ஜி.ஆரைப் புகழ்வது போல இகழும் இடக்கரடக்கலையும் காணத் தவறக்கூடாது. தமிழ்நாட்டில் பிரிவினை இயக்கங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருவது திராவிடக் கட்சிகளின் மற்றொரு குணாம்சம். இந்தக் குணாம்சமும் எம்.ஜி.ஆரிடம் காணப்பட்டதில்லை என்று பேனா பிடிக்கிறாரே - அது உண்மைதானா?

மாநில சுயாட்சிக்காக இந்தியாவின் இராணுவத்தையும் சந்திக்கத் தயார் என்று சொன்னவர் எம்.ஜி.ஆர். அல்லவா? இதில் நேரிடையாக பிரிவினை வாதம் இருக்கிறதா அல்லது மறைமுகமாகப் பிரிவினை வாதம் கமழ்கிறதா என்பதை திருவாளர் லட்சுமி நாராயண அய்யர்வாளுக்கே விட்டுவிடுவோம். தன் கருத்தை இன்னொருவர் மீது சுமத்துவது என்பது நாலாந்தரமான குணாம்சமாகும்.

பெரும்பாலானவர்கள் தீர்ப்புப்படி மக்களாட்சி அமைகிறது. ஆனாலும் வடபுலம் அளிக்கிற ஒரு தீர்ப்புக்குத் தான் தென்னாடு கட்டுப்பட வேண்டி யிருக்கும் என்று அண்ணா கூறியது உண்மை என்று இப்பொழுது நிரூபிக்கப் பட்டுவிட்டது என்று பாளையங் கோட்டையில் பேசியவரும் இதே எம்.ஜி.ஆர்.தான் (9-6-1977).

இதில் நேர்முகமாக பிரிவினை வாடை வீசுகிறதா என்பதை முடிவு செய்வதையும் இந்த அய்யர்வாளுக்கே விட்டுவிடுவோமாக. இதே துக்ளக் இதழை வம்பில் இழுத்துவிடும் ஒரு வேலையை விவரம் தெரியாமல் லட்சுமி நாராயணன் செய்துள்ளார்.


ஹிந்து மதத்தின் சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை மட்டும் இகழ்வது திராவிடக் கட்சிகளின் இன் னொரு தீய குணாம்சம். இதனையும் எம்.ஜி.ஆர். ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர் அல்லர் என்று நீட்டி முழங்குகிறாரே _ அதற்கும் ஒரு ஆப்பு! சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மாண்பு மிகு எம்.ஜி.ஆர். ஒரு சூடு கொடுத்தார் பாருங்கள். மருத்துவத்தால் குணமாகாத நோய்களைஅய்யப்பன் கோயில் திருநீறு குணமாக்கிவிடும் என்ற நம்பிக்கையை சிலர் பரப்பி வருகின்றனர். இந்த எண்ணம் வலுப் பெறுமானால், பிறகு மருத்துவமனைகளை இழுத்து மூடிவிட்டு, டாக்டர்களை விபூதி விற்பனையாளர்களாக நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடவுள் நம்பிக்கை அறிவியல் துறையில் தலையிட்டு பாமர மக்களைக் கெடுத்துவிடக் கூடாது. படித்தவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள் . இப்படி கோவிலுக்குச் செலவழிக்கும் பணத்தை மருத்துவமனைகளுக்குக் கொடுத்துதவினால் எத்தனையோ ஏழை நோயாளிகள் குணம் அடை வார்கள். டாக்டர்களின் திறமைக்கு உத்தர வாதம் வேண்டும்; அவர்களின் திறமையைக் கேவலப்படுத்தும் வகையில் திருநீறு குணமாக்கிவிடும் என்று சொல்பவர்களை என்ன சொல்லுவது? என்று பேசினாரே. இது இந்துமதக் கடவுள் அய்யப் பனைப் பற்றியும், இந்து மதத்தின் திருநீறு குறித்தும் எம்.ஜி.ஆர். கேலி செய்வதாக ஆகாதா? என்ற கேள்வியும் அய்யர்வாளுக்கே அர்ப்பணம்!

இன்றைக்குத் துக்ளக்கில் எம்.ஜி.ஆரைத் தூக்கிப் பிடித்து, திராவிட இயக்கத்திலிருந்து அவரைத் தனிமைப்படுத்தி, இந்து மத சம்பிர தாயங்களை ஏற்றுக் கொண்டவர் என்று ஜிகினா வேலை செய்ய, படாத பாடு படுகிறாரே; இதே துக்ளக் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தெரிவித்த கருத்து குறித்து எவ்வளவு துள்ளு துள்ளியது தெரியுமா? ஒரு முதல்வர் இப்படிப் பேசலாமா? என்று எகிறிக் குதித்ததே. ஒரு படி மேலே போய் (துக்ளக் 1_2_-1979) எம்.ஜி.ஆர். தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துக்ளக் சிறப்புக் கட்டுரையும் எழுதியதே!

மக்கள் மறந்தாலும், கருஞ்சட்டைக்காரன் மறக்க மாட்டானே!

குற்றமற்ற பிராமணர்களைத் துவேஷிப்பது திராவிடக் கட்சிகளின் தலையாய தீயகுணங்களில் ஒன்று. இந்தக் குணம் எம்.ஜி.ஆரிடம் சிறிது கூடக் கிடையாது என்றும் கதைக்கிறார். பிராமணன் என்று சொல்லுவதே அடுத்தவர்களைத் துவேஷிப்பதுதானே! பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன்,காலில் பிறந்தவன் சூத்திரன்! சூத்திரன் என்றால் வேசி மகன் என்பது (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) அடுத்தவர்களை இழிவுபடுத்துவது தானே! உலகத்தின் எந்த நாட்டிலாவது, எந்த மதத்திலாவது தங்களைத் தவிர மற்றவர்களைப் பார்த்து பிறவியிலேயே வேசி மக்கள் என்று கூறுவதுண்டா? இந்த யோக்கியதை உள்ளவர்கள் குற்றமற்ற பிராமணர்களாம். இந்த இழிவைப் பொறுக்காது எதிர்த்துக் கேட்டால் அதற்குப் பெயர் துவேஷிப்பதாம். தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து துவேஷிகள் என்று சொல்லுவார்கள் என்று லாலா லஜபதிராய் சொன் னாரே, அதுதான் நினைவுக்கு வருகிறது. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்னும் தன்மான இயக்கப் புயல் மய்யம் கொண்ட பிறகுதானே சூத்திரச்சி வேலைக்கு வந்தாளா? என்று கேட்கும் ஆணவத்தின் முது கெலும்பு முறிக்கப்பட்டது. இன்றைக்குக் கூட தாழ்த்தப்பட்ட வர்கள் உட்பட இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து ஜாதியினரும் உரிய பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை பார்ப்பனர்கள் சென்று தடை வாங்குகிறார்கள் என்றால் அவர்கள் உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் அந்தத் துவேஷ நஞ்சுதானே காரணம்? இந்த வெட்கக்கேட்டில் குற்றமற்ற பிராமணர்கள் என்ற அடைமொழி வேறு. கண்ணற்றவருக்குக் கண்ணாயி ரம் என்று பெயர் வைப்பதில்லையா -_ அதுபோல்தான் இதுவும்.

கடவுளுக்கு மேலே பிராமணர்கள் என்று மார்தட்டும் அவர்களின் லோகக் குருகூட ஒழுக்கவாதியாக இருக்க முடியவில்லையே! கொலைக்குற்றம் - அத்து மீறிய பாலியல் குரூரம் என்ற கொச்சைத் தனத்தை மூட்டை கட்டிக் கொண்டு தோளில் போட்டுக் கொண்டு அல்லவா வெட்கமில்லாமல் திரிகிறார். ஜெயேந்திரர்! இவ்வளவு நடந்துள்ள போதிலும் இன்னும் அவர் சுவாமிகள் தானாம்!

இந்த யோக்கியதை உள்ளவர்களுக்குப் பேனா பிடிப்பு ஒரு கேடா?

சென்னை பாலர் அரங்கில் ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் (28-6-1970 ஞாயிறு). நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த எல். ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே. ரகுபதிக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றது. பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களும் அவ் விழாவில் கலந்து கொண்டார்.

அப்பொழுது எம்.ஜி.ஆர்.பேசினார்.

இந்த மணவிழா அய்யா முன்னிலையில், அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெற வேண்டியதாகும். எவ்வளவு தான் சட்டம், கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால்தான் அது பயன்படும். தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியை துவக்கிய காலம். பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ்நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார்கள். சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது. ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பை சமாளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறுதல் ஏற்படுத்துவது என்பது பெருஞ்சாதனை யாகும். உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம். இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்குத் தக்க அடையாளமாகத் திகழ்கிறார்கள். அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவதுதான், மரியாதை செலுத்து வதுதான் இத்தகைய விழாவில் நம் கடமையாகும் என்று பேசியவர் எம்.ஜி.ஆர். இதில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை, கோட் பாடுகளை எந்த அளவு உள்ளத்தில் தாங்கி இருந்தார் என்பது விளங்க வில்லையா? உயர்ஜாதி ஆதிக்கம்பற்றியும், ஒழுக்கத்திற்கும் உயர் ஜாதிக்கும் சம்பந் தம் இல்லை என்றும் சொல்கிறாரே - அந்த உயர்ஜாதி என்று யாரைக் குறிப்பிடுகிறார். உயர்ஜாதி ஆதிக்கம் என்று அழுத்திச் சொல்லுகிறாரே - இதற்கு என்ன பொருள் என்று முடிவு கட்டுவதையும் திருவாளர் லட்சுமி நாராயண் அய்யர் வாளுக்கே சமர்ப் பணம்!

எம்.ஜி.ஆர். அவர்களை, திராவிட இயக்கத்திலிருந்து பிரித்து, நம்மோடு மோதவிடப் பார்க்கிறது அக்கிரகாரம். அதன் நிலை என்ன? அவர்கள் மனித உருவில் திரியும் நரிகள் என்று இப்பொழுது அம்பலப்பட்டதுதான் மிச்சம்.

-------------------தொடரும்--”விடுதலை” ஞாயிறுமலர் 9-7-2011

ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். பேசியது என்ன?

(ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். 10.4.1976 அன்று கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரை குறித்து சிலர் எகிறிக் குதிக்கிறார்கள். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை விவாதத்துக்கு அழைத்து அவர்கள் கருத்தைக் கேட்டு பதில் கூறும் ஆற்றல் பகுத்தறிவாளர்களுக்கே உண்டு என்பதை எத்தனையோ நிகழ்ச்சி நடத்தி நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திக சமாஜத்தில் வந்து பேசுகிறவர்கள் எல்லாம், பட்டை அடித்துக் கொண்டு, காவிஉடை தரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்றால், அதற்கு எம்.ஜி.ஆர். போன்றவர்களை அழைத்திருக்கவே வேண்டாமே!

அவரவர்கள் கருத்தைக் கூறினாலே, மதத்தைப் புண்படுத்தும் பேச்சு என்று கூறுவார்களேயானால், மதம் சுயசிந்தனையை தடுக்கிறது என்ற பகுத்தறிவாளர்களின் கருத்துக்கு அவர்கள் கட்டியங் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்!

ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். பேசியதுதான் என்ன? அவர் பேசிய பேச்சுக்களில் ஒரு சில பகுதி களையும், ஆஸ்திக சமாஜத்தில் நடந்த நிகழ்ச்சியையும் கீழே தந்துள்ளோம்.)

ஆஸ்திக சமாஜத்தில் நாத்திகத்துக்காக வாதாடுகிறவர்களைச் சார்ந்தவன் என்று பெயர் தரப்பட்டிருக்கிற எம்.ஜி. ராமச்சந்திரனை அழைத்துள்ளீர்கள். ஆத்திக சமாஜத்தில் எம்.ஜி. ராமச்சந்திரனா?.. இந்தக் கேள்வி சிலருக்கு திகைப்பாக இருக்கக்கூடும். ஆத்திகம் பற்றியும் நாத்திகம் பற்றியும் இதே மேடையில் நிறையப் படித்தவர்கள், நன்கு ஆராய்ந்தவர்கள் நிறையப் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் அதைக் கேட்கும் வாய்ப்பை நான் பெற்றதில்லை. இவர்களும் அந்த வாய்ப்பை எனக்குத் தந்ததில்லை. இனிமேல் தருவார்கள் என்று கருதுகிறேன் என்று மட்டுமல்ல பொது மக்களுக்கும் தருவார்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால் பொது மக்களுக்குத் தெரியாத எந்தக் கருத்தும், எத்தகைய தத்துவமும் வரவேற்பு பெற முடியாது.

பரலோகத்தில் நம்பிக்கை உண்டா?


பரலோகத்தை நம்பாதவர்களையும், ஈஸ்வரனை வணங்காதவர்களையும், நாதப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் நாத்திகர்கள் என்று குறிப்பிட்டார்கள். பரலோகத்தை நம்பப் போகிறோமா, நாதப் பிரமாணத்தை ஏற்கப் போகிறோமா - அதுவல்ல பிரச்சினை. கருமம், நாதோபாசம், ஞானம் இவற்றை ஆத்திகக் கோட்பாடுகளாகக் கூறினார்களே அதை ஏற்றுக் கொண்டவர்கள் அவற்றைக் கடைப்பிடிக் கிறார்களா?

கருமம் எது?


நான் இங்கே மனம் திறந்து சில கேள்விகளை வெளிப்படையாகக் கேட்க விரும்புகிறேன். கருமம் என்று குறிப்பிட்டிருக்கிறார்களே, எதை? இன்றைய தினம் இந்த 76ஆம் ஆண்டிலும் அவரவர் கருமத்தை யார் ஒழுங்காகச் செய்கிறார்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் ஆத்திகன் என்று சொல்லிக் கொள்பவர்களில் எத்தனை பேர் அதற்குரிய கருமத்தை ஒழுங்காக நிறைவேற்றுகிறார்கள்?

வேஷம் போடுவதா?


நான் வேதனையோடு சொல்கிறேன்; ஆத்திகர் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களில் நூற்றுக்கு 95 பேர் கடவுளை நம்புவதாக வேஷம் போடுகிறார்கள். எம்.ஜி.ஆர். இவ்வாறு பேசி முடித்ததும், அந்த சமாஜத்தின் தலைவரான ரத்தினம் அய்யர் என்பவர் பேச வந்தார்.
அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். எத்தனையோ தருமங்களை செய்துள்ளார். அவர் நாத்திகராக இருந்தால் தருமம் செய்ய வேண்டும் என்ற சிந்தனையே வராது. நிச்சயமாகச் சொல்கிறேன், சத்தியமாகச் சொல்கிறேன்.

நாத்திகர்கள் கடவுள் இல்லை. இல்லை என்று சொல்லத்தான் ஆத்திகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறிவிட்டு, தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவங்களை மிகவும் தாக்கிப் பேசினார்.

எம்.ஜி.ஆர். குறுக்கீடு


அப்போது எம்.ஜி.ஆர். எழுந்து ஒலி பெருக்கியை பிடித்துக் கொண்டு இடைமறித்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறி ரத்தினம் அய்யர் நான் கொடுப்பதாகப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நாத்திகர்கள் தரமாட்டார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் என்னை நினைத்து இதைச் சொல்லவில்லை. பொதுவாகவே இதைச் சொல்கிறேன்.

நாத்திகம் பரவப் பரவத்தான் ஆத்திகமும் பரவுகிறது என்று கூறிய அவர், பிறகு பெரியாரின் நாத்திகக் கருத்துகளை ஏன் தாக்க வேண்டும்? (சமாஜத் தலைவர் உண்மைதான்... உண்மைதான்...)

எம்.ஜி.ஆர். பேசுகிறார்: ஆஸ்திகம் என்ற சொல்லில் உள்ள ஆஸ்தி என்பதற்கு உள்ளது என்று ஒருபொருள் கூறப்படுகிறது. உள்ளது என்று கூறுவதற்கு ஒரு ஆள் இருந்தால் இல்லை என்று மறுப்பவர்களும் இருக்கவே செய்வார்கள். (சமாஜத் தலைவர்: உண்மைதான், உண்மைதான்).

எம்.ஜி.ஆர். பேசுகிறார்: ஜாதி உண்டு என்று சொல்பவர்கள் இருக்கும் வரை, ஜாதி இல்லை என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். பணக் காரர்கள் வேண்டும் என்று சொல்பவர்கள் இருந்தால் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருப்பார்கள்.

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

(நன்றி: தென்னகம்)
(விடுதலை 19.4.1976)

இதற்குப் பதிலென்ன லட்சுமி நாராயணரே?


--------------கலி.பூங்குன்றன் அவர்கள் 9-7-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

செய்தி: தி.மு.க., முன்னாள் எம்.பி., இரா.செழியனின், 22 ஆண்டுகால பார்லிமென்ட் உரை தொகுப்பு, "மக்களுக்காக பாராளு மன்றம்' என்ற புத்தகமாக வெளி யிடப்பட்டது. புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்தது.சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி நடராஜன், "இந்து' ராம், பத்திரிகையாளர் சோ உட்பட பலர் பங்கேற்றனர். இதில், சோ பேசும்போது, "செழியனை 40 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். அவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் இல்லை... "டிவி' நெட்வொர்க் இல்லை... சுவிஸ் வங்கியில் அக்கவுன்ட் இல்லை... அரசியல் வாதிக்கான அடிப்படை தகுதிகளான இவை இல்லாமல், இவர் எப்படி, 20 ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்தார் என்றே எனக்கு தெரியவில்லை' என, தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசியதும், அரங்கமே கைதட்டியது.அப்போது, பார்வையாளர் வரிசையில் இருந்த ஒருவர், "அதனால தான் இவரது பேச்சு புத்தகமாக வருது... வேறு சிலரது பேச்சு, கோர்ட், "ரெக்கார்டுல' வாக்குமூலமா ஏறுது...' என, "கமென்ட்' அடித்தார்.

(தினமலர் - 13.7.2011)

சிந்தனை: திரு. இரா.செழியன் அவர்கள் திராவிட இயக்கத்துக்காரர். சமரசம் இல்லாத பகுத்தறிவுவாதி. இந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பனர்களால் பாராட்டிப் பேசமுடியாது.

அதே நேரத்தில் செழியன் அவர்களைக் கருவியாகப் பயன்படுத்தி, பார்ப்பனர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

அந்தக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் தொண்டன் நான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு செழியன் அவர்கள் தனது பகுத்தறிவுச் சிந்தனைகள் பற்றியும், திராவிட இயக்கக் கோட்பாடுகள் பற்றியும், எல்.அய்.சி.யில் நடைபெற்ற கொள்ளை - உயர் ஜாதி அதிகார வட்டாரத்தில் தகுதி திறமை இதுதான் என்று அவர் கொடுத்த அறிக்கை பற்றியும் ஒரே ஒரு துளி அளவில் வெளிப்படுத்தியிருந்தால்.

அந்த அக்மார்க் காக்கைக் கூட்டத்தில் ஒரு கல் எறியப்பட்டதாக ஆகி பறந்து ஓடியிருக்காதா? முகம் சுருங்கிப் போயிருக்காதா? பார்ப்பனர்கள் நம் தமிழர்களைப் பாராட்டினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இரா.செழியன் அவர்களுக்குத் தெரியாதா, என்ன?
---"விடுதலை” 13-7-2011