Search This Blog

8.9.11

திருப்பதி கோயில்-புத்தர் விகாரமே!



பாபர் மசூதி இருக்கும் இடம் ராமன் பிறந்த இடம்; ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான், அந்த இடத்திலே பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று பார்ப்பனர்கள் கூறி, பாபர் மசூதியை இடித்துவிட்டு, அதே இடத்திலே ராமர் கோயில் எழுப்பப்பட வேண்டும் என்று வெறிப் பிரச்சாரம் செய்து, நாட்டில் மதத்தின் பெயரால் ரத்த வெள்ளத்தைப் பெருக்கோடச் செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ‘‘Tirupati Balaji was a Buddhist Shrine’’ என்ற ஒரு நூல் வெளிவந்துள்ளது. மராட்டியத்தைச் சேர்ந்த டாக்டர் கே. ஜமனாதாஸ் F.R.C.S. என்பவர் எழுதியுள்ளார்.

இந்நூலைப் பற்றிய குறிப்புரை இதோ: ‘‘Lord Venkatesvara, the presiding deity on the famous Tirumalai Hills, popularly known as Balaji of Tirupati, is an important Vaishnava Shrine of South India. The Nature of Lord Venkatesvara has always been a matter of dispute for centuries. Some consider Him as Vishnu some as Siva, Some as Sakti, some as Skanda and some as Harihara. In fact it was an old Buddhist shrine, murthi itself being Buddhist; and it was taken over for Brahmanic worship during the general fall of Buddhism. He was a god of tribal Buddhist and was,Vaishnavized by saints and later sanskritized and brahmanized by pundits to his present form. The weapons on Him are not original but provided at a later date.

How this was brought about, is explained with all historical and archaeological evidences. Cults of Vitthala of Pandharpur, Jagannatha of Prui, Ayyappa on Sabarimala etc., which were originally Buddhist are discussed and many other Buddhist shrines which were hinduized are described and the history of India in general and South India in particular, from seventh to tenth century, during the period of fall of Buddhism and rise of Brahmanic Tirupati, is traced.”

வெங்கடாசலபதி கடவுள் இருக்கும் திருப்பதி கோயில் என்பது தென்னகத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவக் கோயிலாகும். வெங்கடாசலபதியின் வடிவம் பல நூற்றாண்டுக் காலமாகப் பிரச்சினைக்குரியதாகவே இருந்து வந்திருக்கின்றது. சிலர் அந்தக் கடவுளை விஷ்ணு என்றும், வேறு சிலர் சிவா என்றும், சக்தி என்றும், ஸ்கந்தா என்றும், ஹரிஹரன் என்றும் பலவாறாகக் கருதுகிறார்கள். உண்மையிலேயே திருப்பதி கோயில் என்பது துவக்கத்தில் புத்தர் கோயிலாகவே இருந்தது; உள்ளே இருக்கும் மூர்த்தி சிலை என்பது புத்தபிரானே ஆவார்.

புத்த மார்க்கம் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்தபோது, அது பார்ப்பனீயத்தால் தங்களுடைய வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றப்பட்டது.

புத்தர் கோயில் வைணவக் கோயிலாக இப்போதுள்ள தன்மையில் பார்ப்பன மயமாக்கப்பட்டது - அப்பொழுது இருந்த பார்ப்பனப் பண்டிதர்களால்!

தொல்பொருள் ஆய்வு, வரலாற்று ஆய்வு அடிப்படையிலே இந்தக் கருத்தை இந்நூலில் நூலாசிரியர் நிறுவியுள்ளார். பந்தர் பூர். பூரி செகந்தநாதம், சபரிமலை அய்யப்பன் இவையெல்லாமே ஒரு காலத்தில் புத்தவிகார்களாக இருந்து பிற்காலத்தில் இந்துக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை புத்த மார்க்கம் வீழ்ச்சி அடைந்த காலகட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலும், சிறப்பாக தென்னிந்தியாவிலும், புத்த விகாரங்கள் எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளது பற்றி இந்நூல் விவரிக்கிறது.

-------------------"விடுதலை” 7-9-2011


0 comments: