Search This Blog

4.9.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -9

பெரியாரைத் தூற்றினோர் போற்றினரே!


காங்கிரசைச் சேர்ந்த எம். பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம் மற்றும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்த கோவை அய்யாமுத்து, ப.ஜீவானந்தம், திராவிடர் கழகத்தில் இருந்த அறிஞர் அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் போன்ற வர்கள் பெரியார் அவர்களிடம் முரண்பட்டுச் சென்றது, - குறை கூறியதையெல்லாம் பொத்தாம் பொதுவில் எடுத்துச் சொல்லிப் பெரியாரைக் கொச்சைப் படுத்திவிடலாம் என்று துக்ளக்கும் கே.வி. லட்சுமி நாராயண அய்யரும் மனப்பால் குடிக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்களின் மிக நீண்ட பொது வாழ்வில் எத்தனை எத்தனையோ பேர்களின் சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. சக தோழர்களாக இருந்திருக்கின்றனர். தொண்டர்களாகப் பணி புரிந்திருக்கின்றனர்.

உடன்பாடான நிகழ்வுகளும் உண்டு- முரண்பட்ட நிகழ்வுகளும் உண்டு. அதை வைத்துக் கொண்டு தந்தை பெரியார் அவர்களை எடை போடக் கூடாது முடியாது.

அப்படிக் குறை சொன்னவர்கள் எல்லாம் கூட பிற்காலத்தில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள்தான், அவரால்தான் அடிப்படை மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்று ஒப்புக்கொண்டு மனந்திருந்தியிருக்கிறார்கள்..

பழம்பெரும் காங்கிரசுக்காரரும், முதலமைச்சராக இருந்தவருமான எம்.பக்தவத்சலம் தந்தை பெரியார் அவர்களிடம் மாறுபட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அவர் பிறந்து வளர்ந்த சூழல் - சுற்றுக் கிரகங்கள் அப்படி! ஆச்சாரியாரின் சீடராக இருந்து காமராசருக்கு எதிர் அணியில் கச்சை கட்டி நின்று, முதல் அமைச்சர் தேர்தலில் கூட காமராசருக்கு எதிராக சி.சுப்பிரமணியத்தை ஆதரித்தவர்தான் இந்த பக்தவத்சலம். பச்சைத் தமிழர் காமராசரின் பெருந்தன்மை காரணமாக பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம் ஆகியோரைத் தம் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்.

தந்தை பெரியாரைத் தாக்கி எனது நினைவுகள் என்ற நூலில் பக்தவத்சலம் குறிப்பிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாரே திருவாளர் லட்சுமி நாராயண அய்யர்; அதே நூலிலேயே பெருந்தன்மையாகத் தமக்கு அமைச்சர் பதவியைத் தந்தார் காமராசர் என்பதைப் பற்றிச் சிறிதும் நினைக்காமல், காமராசர் மீது அவதூறுகளையும் வீண் பழிகளையும் சுமத்தி எழுதியுள்ளாரே- பக்தவத்சலம்!

இது போன்றவர்கள்தான் பார்ப்பனர்களுக்கு மலிவாகக் கிடைக்கிறார்கள் - என் செய்வது?

அத்தகைய பக்தவத்சலம் அவர்களே கூட மனந்திறந்து தந்தை பெரியார் அவர்கள் பற்றி மடை திறந்த வகையில் கருத்துகளைக் கொட்டி, தந்தை பெரியார் அவர்களை தன் மனமேடையில் நிறுத்தி வைத்திருந்ததை ஆதாரத்துடன் கூறமுடியும்.

துக்ளக்கில் எழுதுவது போல - எந்த வித ஆதாரக்குறிப்புக்கும் இடமில்லாமல் மானாங்காணியாக எழுதிடவில்லை.

உண்மை இதழுக்காக (15-1-1980) அவரிடம் பேட்டி காணப்பட்ட பொழுது மனந்திறந்து அவர் கூறியது என்ன?

தந்தை பெரியார் அவர்களின் பார்ப்பன எதிர்ப்பு ஏன் என்பதை விளக்கிக் கூறி இருக்கிறாரே!

அதில் ஒரு சில பகுதிகள் இதோ:-

கேள்வி: பெரியாருடைய கொள்கைகளிலே நீங்கள் எந்தக் கொள்கையை மிகவும் ஆதரிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

பதில்: அவர் கொள்கைகளிலே தவறு என்று எதையும் சொல்ல முடியாது. பகுத்தறிவு தேவை என்று சொன்னால், யார்தான் வேண்டாம் என்று சொல்ல முடியும்? ஆனால் எது பகுத்தறிவு என்பதில்தான் கருத்து வேறுபாடு. மூடநம்பிக்கைகள் கூடாது என்ற கருத்துகள் எல்லாம் நல்ல கருத்துகள்தான். மூடநம்பிக்கைகள் கூடாது தான்.

உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று வந்த ஒரு பேராசிரியர் - அவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் - என்னைச் சந்தித்தார். பிரான்ஸ் நாட்டிலே ஒரு கிணறு இருக்கிறது. அந்தக் கிணற்றை எல்லோரும் ஒரு முறை எட்டிப்பார்த்துவிட்டுப் போவார்கள். அந்தக் கிணற்றைப் பார்த்தால் அழகாகிவிட முடியும் என்று ஒரு மூட நம்பிக்கை. அந்தக் கிணற்றுக்குப் பெயரே Look Well யாரோ சொல்கிறான்; அதை எப்படியோ எல்லோரும் பின் பற்றுகிறார்கள். இங்கே கூட மரத்திலே கந்தல் துணி கட்டப்படுகிறது.

ஒருவன் கந்தல் துணியைக் கட் டினால் போதும்! உடனே அந்த மரம் முழுவதும் எல்லோரும் கட்டி விடுவார்கள். எதற்குக் கட்டினான்? இது பயித்தியக் காரத்தனமாக இருக்கிறதே என்று ஒருவரும் நினைப்பது இல்லை. பலவீன மனதுதான் இதற்கெல்லாம் காரணம். இவை எல்லாம் மறைய வேண்டியதுதான். இவைகளினால் சமுதாயத்துக்குப் பெரிய கேடுகள் கிடையாது; இருந்தாலும் ஒழிய வேண்டியதுதான். இதற்கெல்லாம் சமுதாயத்தின் அடிப்படை மாறவேண்டும் என்பதுதான் என் கருத்து. இதில் எல்லாம் மாணவர்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும்.

கேள்வி: இந்தக் கொள்கைகளில் எந்த இடத்தில் நீங்கள் மாறுபடுகிறீர்கள்?

பதில்: இதெல்லாம் நல்ல கொள்கைகள்தான் ஆனால் “Negative’’ கூடாது; எதிர் மறையான நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது என்று நான் கருதுகிறேன். பெரியாருடைய கொள்கைகளில் Fundamental (அடிப்படை) மிக நல்லது. அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது; Details களுக்குள்ளே போகக் கூடாது. உலகே மாயம் என்பதில் அர்த்தமில்லை

கேள்வி: சாதி ஒழிப்புப் பற்றி . . .

பதில்: அதெல்லாம் நல்ல கொள் கைகள்தான்! சாதி ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் சாதி ஒழிப்பை எப்படி சட்டம் போட்டு அழிக்க முடியும்? உள்ளத்திலிருந்து அந்த எண்ணம் மறையவேண்டும்.

இப்போது பிராமணன் சாப்பிடுவதிலிருந்து எல்லாவற்றிலும் எது செய்யத் தகாததோ அத்தனையும் செய்கிறான்! எனக்கு நன்றாகத் தெரியும்; நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

ஆனால், உள்ளத்தில் எது பிராமணன் உள்ளம் என்று நினைக்கிறோமோ - அதே உள்ளமுள்ளவனாக கம்யூனலாகத்தான் இருக்கிறான். எந்த பிராமணன் தன்னைத் தீவிரவாதியாகக் காட்டிக் கொள்கிறானோ அவன்தான் மற்ற பிராமணர்களை விட அதிக கம்யூனலாக இருக்கிறான். வெளியிலே வந்து, நான் எல்லாவற்றையும் விட்டு விட்டேன் என்பான். எனவே, உள்ளத்திலிருந்து அந்த எண்ணம் மறையவேண்டும்.

கேள்வி: பெரியாருடைய இயக்கத் தினால் - தமிழ் நாடு பயன் பெற்றிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: பொதுவாக ஒரு விழிப் புணர்ச்சி தமிழ் நாட்டில் பெரியாருடைய இயக்கத்தால் ஏற்படுத்தப் பட் டிருக்கிறது. அவர் காங்கிரசிலிருந்த போது பிராமணரல்லாதார் இயக்கத்தை ஆரம்பித்தார். நான் அப்போது அவரிடம் இரண்டு மூன்று முறை கேட்டிருக்கிறேன். இந்தக் கொள்கைகள் தேசியத்துக்கு விரோதம்; சுதந்திரத்துக்கு விரோதம் என்று நாங்கள் சொன்னோம். அந்த இயக்கத்தின் மேல் காங்கிரஸ் காரர்களுக்கு ஒரு வெறுப்பே உண் டாகியது. ஆனால், எதைச் சொன்னாலும் உள்ளத்தில் எதை நினைக்கிறாரோ அதை அப்படியே ஒளிவு மறைவில்லாமல் சொல்வது; மேடையிலே எவ்வளவு கடுமையாகப் பேசினாலும் தனியாக சந்தித்தால் காட்டும் மரியாதை அந்த மனுஷத்தனம் இருக்கிறதே இந்த இரண்டும் அவருக்குள்ள சிறப்பு. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுகிறாரே. அதுதான் அவர் மீதுள்ள தனி அட்மிரேஷன். அவரது கருத்தைப் பிடிக்காதவர்கள் கூட பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

கேள்வி: பார்ப்பனரல்லதார் இயக்கம் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று சொல்ல முடியுமா?

பதில்: பிராமணர்கள் கம்யூனல்களாக (வகுப்பு வாதிகளாக) இருந்த காரணத் தினால்தான் - பிராமணரல்லாதார் இயக்கமே வந்தது! பிராமணர்களாலேயே பிராமணரல்லாதார் கம்யூனலாக வேண்டியிருந்தது. அப்போது நாங்கள் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தோம். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இரண்டாம் பட்சம், - முதலில் நாட்டை விட்டு வெள்ளைக்காரன் போகவேண்டும் என்றோம். பெரியார் இயக்கத்தால் பிராமணரல்லாத மக்கள் இன்றைக்கு ஏராளமாகப் படித்து - உத்தியோகத்துக்குத் தகுதி பெற்றவர்களாக ஆகி உள்ளார்கள். - என்று தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் - பார்ப்பனர் எதிர்ப்பு இவற்றின் அவசியத்தை ஆழமாகக்கூறி இருக்கிறாரே. இதற்குப் பதில் என்ன?

கோவை அய்யாமுத்து

கோவை அய்யாமுத்து அவர்கள் வைக்கம் போராட்டத்திலேயே தந்தை பெரியாரோடு தொண்டராகக் களம் கண்டவர்தான். குடிஅரசு இதழில் பொறுப்பாசிரியராக இருந்தவர்தான். அடிக்கடி முரண்டு பிடிப்பவர்தான்.

அதே கோவை அய்யாமுத்து அவர்கள் வானொலிக்கு தந்தை பெரியார் அளித்த பேட்டியைக் கேட்டு எழுதி அனுப்பிய கவிதை இதோ:- வானொலி தன்னில் மாறன்

வழுத்திய கேள்விக் கெல்லாம்
வான்மழை போன்ற தாங்கள்
வழங்கிய சொற்கள் கேட்டு
நானுமென் மனையாள் தானும்
நல்மன நிறைவுற் றோமே!
நீங்கிலா நினைவு பூண்டு
நித்தமும் நினைப்ப தோடு
ஓங்குமுன் புகழைக் கேட்டு
உள்ளமும் மகிழ்வுற் றோமே!
எண்ணிய கருத்தைத் தாங்கள்
எவரெல்லாம் எதிர்த்த போதும் திண்ணிய மாகச் சொல்லும்
திறத்தினை எண்ணி எண்ணிச்
சிறியனேன் இறும்பூ தெய்தித்
திளைத்திடல் இன்றும் உண்டே!
உத்தமி நாகம் மாவும்
உயிருடன் இருந்த காலை
எத்தனை நாட்கள் அங்கு
இன்னமு துண்டோம் நாங்கள்!
அத்தனே! அந்த நாட்கள்
அருந்தவப் பேறாம் அன்றோ?
இத்தரை மீதில் சாதி
இழிபடும் சமயம் சாமி
முத்திரை கிழிக்கும் போரில்
முற்றிலும் மோடு நின்றேன்
எத்துணை துன்பம் ஏற்று
இடர்ப்பட நேரிட்டாலும்
சுத்ததன் மானம் காக்கத்
துணிந்துயிர் ஈவே னய்யா!
நாற்பது ஆண்டாய் தங்கள்
நட்பினை இழந்தா போனேன்?
சீர்ப்பதம் எதுவுற் றாலும்
சிறுமையில் உழன்றிட்டாலும்
சிந்தையில் உம்மை யென்றும்
சிறப்புற ஏத்து வேனே!
பன்னெடுங் காலம் தங்கள்
பகுத்தறி வியக்கம் வாழ்ந்து
நன்னெறி சூழ்ந்து மக்கள்
நலமுடன் வாழ்க! வாழ்க!!
கோவை அய்யாமுத்து அவர்கள் கவிதையில் கையாண்ட ஒவ்வொரு சொல்லும் ஒளி வீசும் முத்துக்கள் அல்லவா?
சிறுமையில் உழன்றிட்டாலும்
சிந்தையில் உம்மை யென்றும்
சிறப்புற ஏத்து வேனே!

என்று எவ்வளவு உணர்ச்சி பொங்க உணர்ச்சிப் பிழம்பாகி உந்தப்பட்டு இதயத் தாமரையை விரிக்கின்றார்.

தந்தை பெரியாரை கோவை அய்யாமுத்து குறை கூறியிருக்கிறார் என்று எந்த நூலில் இருந்து (எனது நினைவுகள்) எடுத்துக் காட்டுகிறாரோ, அதே நூலில் தலைவர் தந்தை பெரியார்பற்றி எப்படி எப்படி யெல்லாம் போற்றிப் புகழ் பாடுகிறார்.

பார்ப்பனர்களுக்கே உரித்தான அற்பத்தனத்துடன், நரிக்குணத்துடன் அவற்றையெல்லாம் இருட்டடிக்கிறது துக்ளக்!

கோவை அய்யாமுத்து கூறுவது என்ன?

ஈ.வெ.ராமசாமி நாயக்கர்

திருப்பூரிலிருந்த தமிழ்நாடு காதி போர்டின் தவைராக ஈ.வெ.ரா. இருந் தார். க. சந்தானம் அதன் காரியதரிசி.

தெருத்தெருவாய் கதர் சுமந்து கொண்டு போய் விற்பதற்கு அய்யா சாமியும், நானும் நாயக்கரிடம் கதர் கடனாகக் கேட்டோம். அவரா கடன் கொடுப்பவர்! அய்நூறு ரூபாய் ரொக்கமாகக் கொடுத்துக் கதர் எடுத்து வந்து விற்பனை செய்தோம்.

அதன் பின்னர் கோவை காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவில் கோவை ராஜவீதியில் தேர்முட்டிக்கு எதிர்ப்புறம் ஒரு கதர் கடை ஆரம்பித்து அதற்குக் கிருஷ்ண்மூர்த்தி என்பவரை நிருவாகியாகப் போட்டோம். அதற்குப் பிறகு சி.பி.சுப்பையாவை அவ்வேலையில் நியமித்தோம். அங்கிருந்து பிரதிதினமும் கதர் எடுத்துச் சென்று வீடுகள் தோறும் விற்பனை செய்தோம்.

காங்கிரஸ் பிரச்சாரத்துக்கு நாயக்கர் சென்ற விடங்கெட்கெல்லாம் நாங்களும் போனோம்.
நாயக்கர் ஒரு சிறந்த உழைப்பாளி. அவரது அயராத உழைப்பும் ஊக்கமும் எங்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாய்த் திகழ்ந்தன.

சோறு, தண்ணீர், உறக்கமாகியவற்றை அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. எந்த இடத்தில் எது கிடைத்ததோ அதைச் சாப்பிட்டு விட்டுத் தெருவிலோ, திண்ணையிலோ, மரத்தடியிலோ, எங்கு வேண்டுமானாலும் அவர் துப்பட்டியை விரித்துப் படுத்துறங்கினார். நாயக்கர் ஒரு கர்மயோகியாகவும், தன்னலமற்ற தியாகியாகவும் அந்நாட்களில் விளங்கினார்.

ஒரு சமயம் நாயக்கரும் நானும் சேலம் ஜில்லாவில் உள்ள மல்லசமுத்திரம் என்ற ஊரில் நடைபெற்ற கூட் டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந் தோம்.

காலையில் தூங்கியெழுந்தவுடன், ஊரைச் சுற்றிப் பார்க்க நாயக்கரும் நானும் புறப்பட்டோம். சிறிது தூரம் சென்றதும், அங்கொரு வீட்டுத் திண்ணையில் ஒரு பெண் புட்டு சுட்டு விற்றுக் கொண்டிருப்பதை நாயக்கர் பார்த்தார். பார்த்ததும் மளமளவென்று உள்ளே நுழைந்தார்.

நாயக்கரையும் என்னையும் காணோமென்று தேடி அலைந்த மகாநாட்டு நிருவாகிகள் எங்களிருவரையும் அங்கே கண்டு பிரமித்துப் போனார்கள். நாளடைவில் நாயக்கருக்கும் எனக்குமிடையே ஆழ்ந்த நட்பும் தோழமையும் ஏற்பட்டது. நாயக்கர் எனக்கொரு ஆதர்ஸ புருஷராக விளங்கினார். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாத தோழர்களானோம்.

(கோவை அய்யாமுத்து அவர்களின் எனது நினைவுகள் பக்கம் 205-206)

தந்தை பெரியார் அவர்களின் சீடராக இருந்து குறிப்பிட்ட கால கட்டத்தில் மாறுபட்டு, சோசலிஸ்டு, பொதுவுடைமைக் கட்சி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண் டது உண்மைதான். அதே ஜீவா பிற்காலத்தில் தந்தை பெரியாரைக் குறித்துக் கணித்துக் கூறியதென்ன?

இதோ ஜீவா பேசுகிறார்:-

பணக்காரத் தன்மையையும், வைதீகத் தையும் ஆளத் தெரியாத அரசாங்கத் தையும், கடவுளையும் கண்டித்தே வந்திருக்கிறார், இந்த 25 ஆண்டுகள் ஓய்வு ஒளிவுமின்றி.

மாபெரும் காரியங்களை எல்லாம் சாதித்து வந்து இருக்கும் அய்யா அவர்களைப் பற்றிப் பேசும்போது கொஞ்சம் நிதானமாகத்தான் பேச வேண்டும். இஷ்டம் போல சொல்லும் போது யாரையும் வானளாவப் புகழ்ந்து கூறலாம். ஆனால், பெரியார் அவர்கள் செய்த பெரும் சாதனைகள் மக்கள் கண்முன் நின்று கொண்டிருக்கும் போது அப்படிப் புகழ்ந்து கூற நிதானம் மிகவும் தேவைதான். ஏனென்றால், அரசியல் தெளிவோடு ஆராய்ந்து பார்க்கும்போது பெரியார் அவர்கள் 25 ஆண்டுகளாக விடாமல் ஒரு பெரும் கூட்டத்தாருக்குத் தலைவராகவே இருந்து வருகிறார் என்பது தெரியும்.

மற்ற தலைவர்களில் பெரும்பாலோர் கட்சியின் தலைவராக இருந்துதான் வந்திருப்பார்கள். ஆனால், அய்யா அவர்கள் மாத்திரம் இயற்கையாய் வெகுநாள்களாக மக்களுடைய தலைவராகவே இருந்து வருகிறார்கள். என்றைய தினமும் அய்யாவை மக்கள் பிரிந்தது கிடையாது. தமிழ் மக்களின் வாழ்க்கையின் அடிப்படையில் பெரியார் அவர்களின் நினைப்பு வேரூன்றித்தான் இருக்கும். இருபது ஆயிரம் பேர்கள் கூட்டத்திலே பேசியும் இருக்கலாம். லட்சம் பேர் கூட்டத்திலேயும் பேசி இருக்கலாம். இருநூறு பேர் கூட்டத் திலேயும் பேசி இருக்கலாம். ஆனால், மக்களின் மனதிலே வேறுபாடின்றி எப்போதுமே மக்களின் தலைவராகவே விளங்கி வந்திருக்கிறார். வாழ்க்கையின் போக்கிலே ஏற்றத் தாழ்வு இருக்கலாம். ஆனால், கொள்கையிலே ஏற்றத் தாழ்வு காண முடியாது.

இப்படிப்பட்ட ஒரு கட்சி உலக சரித்திரத்திலே இந்தியாவிலே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அதிலே உழைத்து வந்திருக்கிறார்.

லெனின் சொல்லுகிறார். மக்களுடைய இதயத் துடிப்பை நேர்மையாகத் தேடிப் பிடித்து எவன் தெரிந்து கொள்ளுகிறானோ அவன் உண்மை யான கம்யூனிஸ்டாக முடியுமென்று கூறுகிறார். அதைப் போல பெரியார் அவர்களும் மக்களின் போக்கு எப்படி இருக்கிறது என்று பார்த்து, யாரை முன் னுக்குக் கொண்டு போகவேண்டுமோ அந்த சமூகத்தினரை முன்னுக்குக் கொண்டுவரப் பாடுபடவேண்டுமென் கிறார். ஆகவே, தந்தை பெரியார் அவர்கள் நம் நாட்டிற்கு மட்டுமல்ல. இந்திய நாட்டிற்கே ஒரு பெரும் மக்கள் தலைவர் எனக் கூறவேண்டும்.

(பெரம்பூர் - செம்பியம் பொதுக் கூட் டத்தில் 23-11-1951 அன்று தோழர் ஜீவானந்தம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.)

ஜீவா அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி இதற்கு முன் எப்படியெல்லாம் விமர்சித்திருந்தாலும், ஜீவாவின் இந்த உரைக்கு முன் - இந்த உரையில் பயன்படுத்தப் பட்ட பளபளக்கும் தங்கம் போன்ற ஒவ்வொரு சொல்லும் அவற்றிற்குப் பதில் அளிக்கும் என்பதில் அய்யமில்லை!

தந்தை பெரியார் கண்ட இயக்கம் உலக சரித்திரத்திலேயே காண முடியாதது என்று அவருக்கே உரித்தான முறையிலே சொல்லிவிட்டாரே!

பெரியாரைப் பற்றிப் பேசும்போது நிதானம் தேவை என ஜீவா சொல்லியிருப்பது துக்ளக் கூட்டத்திற்கும் சேர்த்துத்தான். ஜீவாவைப் பெரியாருக்கு எதிராகத் துணைக் கழைத்தால், அவர் கொடுக்கும் உதை அக்கிரகாரத்தின் முகத்தில் பாயும் - எச்சரிக்கை!

யார் இந்த சி. சுப்பிரமணியம்

திராவிட இயக்கத்துக்கோ தந்தை பெரியாருக்கோ எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத சி.சுப்பிரமணியத்தைக் கொண்டு வந்து முட்ட விடுகிறது துக்ளக்.

யார் இந்த சி.சுப்பிரமணியம்?. ஆச்சாரியார் (ராஜாஜி) அமைச்சரவையில் இருந்து குலக் கல்வித் திட்டம் கொண்டு வருவதற்குக் கருவியாக இருந்தவர்.

தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும், தமிழர்களும் கிளர்ந்தெழுந்து தீப்பந்தத்தைக் கையில் ஏந்த வேண்டிய அவசியமான ஒரு கால கட்டத்தில் பதவியை விட்டு ஓடியவர் ஆச்சாரியார். ஆனால் சி.சுப்பிரமணியமோ கெட்டி யாகப் பதவி நாற்காலிக் காலைப் பிடித்துக் கொண்டவர். (முதல் அமைச்சர் பதவிக்குக் காமராசரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி கண்டவர். காமராசருக்கு 93 வாக்குகளும், சி.சுப்பிரமணியத்துக்கு 41 வாக்குகளும் கிடைத்தன). காமராசர் மிகப் பெருந்தன்மையாக சுப்பிரமணியத்துக்கும் மந்திரி பதவி கொடுத்தார்.

காமராசர் ஆட்சிக்கு வந்து குலக் கல்வித் திட்டத்தை ஒழிப்பதற்கு ஆமாம் சாமி போட்ட, அப்பட்டமான பதவியின் காதலர் ஆயிற்றே! 1942 ஆகஸ்டு போராட்டத்திலிருந்து விலகி நின்று காங்கிரஸ் துரோகி என்று தூற்றப்பட்ட ஆச்சாரியாரின் அமைச்சரவையில் இடம் பிடித்த சி.சுப்பிரமணியமா திராவிடர் கழகத்தைப் பார்த்துத் துரோகக் கூச்சல் போடுவது?

அவரை எதற்குத் தேவையில்லாமல் கொண்டு வரவேண்டும்? சரி. அப்படி என்னதான் அந்தச் சி.சு. சொல்லுகிறார்? பார்ப்பனர்கள் வழக்கமாகச் சொல்லும் கிளிப்பிள்ளைப் பாடம்தான். இரண் டாம் உலக மகாயுத்தத்தில் திராவிடர் கழகம் - விடுதலை யுத்தப் பிரச்சாரத்துக்குப் பயன்பட்டது என்பதுதான்.

இருக்கட்டும். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் தோற்று ஜெர்மனிக்காரன் ஹிட்லர் அச்சு நாடுகள் வெற்றி பெற்று இந்தியாவைப் பிடித்திருந்தால், இந்தியாவின் நிலை என்ன? இவர்கள் கூறும் அந்தச் சுதந்திரம்தான் எளிதில் கிடைத்திருக்குமா?

ஹிட்லர் ஆட்சி தேவையா? வெள்ளைக்காரன் ஆட்சி தேவையா? இருவரில் யார் குரூரன், கொடூரன்? பார்ப் பனர்களுக்கு ஹிட்லர் வரவேண்டும் என்று கொள்ளை ஆசை! ஏனெனில் ஆரியர்தான் உலகில் உயர்ந்த இனம் என்றும், ஆரிய ரத்தம்தான் சுத்தமான ரத்தம் என்றும் கூறும் நாஜிதான் ஹிட்லர்.

அவன் வருவதை விட வெள்ளைக் காரன் இருப்பது நல்லது என்று நினைத்தது தவறா?

ஆரியப் பார்ப்பனர்கள் அடால்ப் ஹிட்லர் வரவேண்டும் என்று ஆசைப் பட்டதில் அதியமில்லை.

இயற்கை அன்னை ஆரியருக்குத்தான் அத்துணை வளங்களையும் கொடுத்திருக் கிறாள். அவ்வளவு மகத்தானவன் இந்த ஆரியன். எப்படி இந்த நிலையை அடைகிறான் அவன்? மற்றவர்களின் உரிமையைப் பறிப்பதிலிருந்து பெறுகிறான்.

இதுதான் ஹிட்லரின் தாரக மந்திரம். அந்த ஆரிய இனத்தைச் சேர்ந்த இந்திய நாட்டுப் பார்ப் பனர்களும் அடுத்தவர்களின் உரிமைகளைப் பறித்துத்தானே பளபளப்பாக வாழ்கிறார்கள்? நெற்றி வியர்வை நிலத் தில் விழுவது என்றால் என்னவென்று இவர்களுக்குத் தெரியுமா?

எப்படியும் ஹிட்லர்தான் வெற்றி பெறப் போகிறான் என்ற மோகத்தில் இந்நாட்டுப் பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? ஜெர்மன் மொழியை அவசரம் அவசரமாகப் படிக்க ஆரம்பித்தனர். இதனைப் பல பொதுக் கூட்டங்களில் தந்தை பெரியார் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இந்திய அரசில் அதிகாரியாகப் பணியாற்றிய பெர்சிவல் ஸ்பீயர் என்பவர், 1981 ஆம் ஆண்டு வெளியிட்டுளள் தமது இந்திய நினைவுகள் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:

(1940 ஜூன் மாதம்) பிரான்ஸ் வீழ்ந்தபொழுது தென்னாட்டில் சில தந்திரக்காரப் பார்ப்பனர்கள் ஜெர்மானியர்கள் விரைவில் இந்தியாவைப் பிடித்துவிட இருப்பதால், அதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற் காக (வேறு எதற்கு?) ஜெர்மானிய ருடைய கைக்கூலிகளாக, கங்காணிகளாக இருக்கத்தான் ஜெர்மன் மொழியைக் கற்று வருவதாகச் சொல்லப்பட்டது.

(When France fall, some clever Brahmins in the south were said to be learning German to be ready for the forthcoming takeover. PP 74-75 of ‘India Remembered’ by Percival andMagaret Pear, Orient Longman, 1981)

பின்னர் 1942 முற்பகுதியில் இட் லரின் கூட்டாளிகளான ஜப்பானியப் போர் வெறியர்கள் சிங்கப்பூர் பர்மா ஆகியவற்றையெல்லாம் பிடித்து முன்னேறி வருகிறார்கள் என்றவுடன் அந்த ஜெர்மன் (!) பார்ப்பனர்கள் ஜப்பானிய மொழியையும் படிக்கத் தொடங்கி விட்டார்களாம்.

(The ‘German Brahmins’ of Madras were indeed said now to be learning Japanese (after Pearl Harbour and fall of Singapore and Burma) - P 78 of the above book.)

பாவம். பார்ப்பனர்கள். அவர்களுடைய கூட்டாளிகளான ஜெர்மானிய, ஜப்பானிய போர் வெறியர்கள் இரண்டாம் உலகப் போரில் தோற்றுப் போய் விட்டனர் கடைசியாக! (அவர்கள் சரியாக யக்ஞங்கள் நடத்தவில்லை போலும்!)

இவர் மட்டுமல்ல. அக்ரகாரத்து மனிதராகிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அலை ஓசை என்னும் நாவலிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்லர் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்ஜெர்மன் மொழியைப் படிக்கத் தொடங்கினார்கள் என்று எழுதியுள்ளாரே?

************************************************************************************

இரண்டாம் உலகப் போரில் பெரியார் இங்கிலாந்தை ஆதரித்தது - ஏன்?

ஜெர்மனியில் போர் துவக்கி நடத்தி வெகுவேகமாக முன்னேறிய ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ஃப் இட்லர், தான் ஜெர்மானியன் என்பதைவிட ஆரிய இனத்தின் பெருமைமிக்க பிரதிநிதி என்று பிரகடனப்படுத்தியதோடு, ஆரிய இனத்தின் மேன்மைக்குப் பாடுபட்ட அவர்களை உலகின் முதல் நம்பர் குடிமக்களாக்குவதே தமது நாடு பிடிக்கும் நோக்கம் என்று ஆணவத்துடன் பிரகடனப்படுத்தினார். ஜெர்மனியில் சமஸ்கிருதத்தினை கட்டாயப் பாடமாக்கி அரசு ஆணைகள் பிறப்பித்தார் இட்லர். நாசிசத்தின் உயிர்நிலையே அதில்தான் உள்ளதாகப் பிரகடனம் செய்தார் இட்லர்! ஆரிய இனம் கலப்பின்றி பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆகவே, வேறு இனக் கலப்புள்ள திருமணங்கள் நடைபெறவே கூடாது என்ற அவைகளுக்குத் தடை விதித்தார். (அவரது சுவஸ்திக் சின்னம்தான் இன்றைய இனவெறி ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் சின்னம் ஆரிய வர்த்தம், சமஸ்கிருத கலாச்சாரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி இவைகளுடைய லட்சியமும்கூட)

பிரிட்டிஷ் அரசு கல்வி மற்றும் ஜாதி ஒழிந்த பல சீர்த்திருத்தங்கள், சதி என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் போன்றவைகளைச் செய்து ஆரிய (மனு) தத்துவங்களுக்கு விரோதமான வகையில் செயல்பட்டதால், பார்ப்பனர்கள் தேச பக்தி என்ற பெயரால் மனுபக்தி, பார்ப்பன மேலாண்மையை பாதுகாக்கச் செய்தனர்!

ஜப்பான்காரன் பர்மாவைப் பிடித்து கல்கத்தா வரையில் வந்தபோது, சென்னை மயிலாப்பூர், மாம்பலத்தில் உள்ள பார்ப்பனர்கள் அந்த இரண்டு மொழிகளையும் படிக்கவே ஆரம்பித்தனர் என்பது யாருக்குத்தான் தெரியாது? விடுதலை ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்களே அரசு ஏடாக அது தொடர்ந்தபோதும் ஆசிரியராகத் தொடர்ந்தார். நமது பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தளபதி அண்ணன் அழகிரி அவர்கள் எல்லாம் போர்ப் பிரச்சாரகர்களாக (War Propagandists) நியமனம் பெற்றே பணி புரிந்தார்கள்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய இட்லர் வெற்றி பெற்று இருந்திருப்பாரே யானால், இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதை நடுநிலை வரலாற்று ஆசிரியர்களேகூட இப்போதும் ஒப்புக் கொள்கிறார்கள்.

தனது கொள்கையான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து திராவிட சமுதாயத்தை நாட்டைக் காப்பாற்ற இது சிறந்த வழி என்பதை, எதையும் முன்னோடியாக சிந்திக்கும் தந்தை பெரியார் அவர்கள் இப்படிச் சிந்தித்துச் செயல்பட்டார்கள்.

பாமர மக்கள் வழியிலே சென்று சிந்திப்பதைவிட அவர்களுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று அறிவுறுத்தும் வகையிலேயே அவரது அணுகுமுறைகள் எப்போதும் அமையும் என்பதற்கு இரண்டாம் உலகப் போரில் அவர் பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைத்ததே சிறந்த எடுத்துக்காட்டாகும். அதுதான் உண்மையான நாட்டு நலத்தில், மக்கள் நலத்தில் அக்கறையுள்ள ஒரு செயல்! விடுதலை ஏன் அரசு ஏடாக ஒரு கால கட்டத்தில் வெளிவந்தது என்பதற்கான மூலகாரணம் இப்போது விளங்குகிறதா?

(திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய விடுதலை போர்ப் பிரச்சார ஏடு ஆனது ஏன்?

- விடுதலை பவள விழா மலர் பக்கம் 84-86
*************************************************************************************


இவற்றிற்குப் பதில் உண்டா? சி.சுப்பிரமணியம் எழுதினார் என்று வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எழுதுவது பார்ப்பனர்களுக்கு அழகுதான்!

அறிஞர் அண்ணா, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர்க்கும் தந்தை பெரியார் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன என்று விவரிக்கிறார் ஸ்ரீமான் லட்சுமி நாராயண அய்யர்வாள்.

உண்மைதான். சரி, அண்ணா முதல் அமைச்சர் ஆனதும் தம் தலைவர் இருந்த திருச்சியை நோக்கிச் சென்று தானே தனது நன்றி உணர்வை வெளிப் படுத்தினார். இந்த ஆட்சியே தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கை என்றாரே (20.6.1967). அதற்கு மேல் என்ன வேண்டும்?

ஈ.வெ.கி. சம்பத் அவர்களும் தி.மு.க.வை விட்டுப் பிரிந்து, தமிழ்த் தேசியக் கட்சியை ஆரம்பித்த நிலையில் அய்யாவிடம் மீண்டும் நெருக்கமாகி விடவில்லையா? அவர் நடத்திய மாநாடுகளுக்கெல்லாம் அய்யாவைத்தானே முக்கியமாக அழைத்தார்?

எந்த ஒரு கட்சியிலும் தலைவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவ துண்டு. காந்தியாருக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் ஏற்படவில்லையா? நேருவுக் கும் ஆச்சாரியாருக்கும் ஏற்பட்ட தில்லையா? காங்கிரசுக்குள் காமராசர் - ராஜாஜி கோஷ்டிச் சண்டை சாதாரண மானதுதானா? சத்தியமூர்த்தி அய்யருக்கும் ;ராஜாஜிக்கும் இடையே பிணக்குகள் ஏற்படவில்லையா? தமது அமைச் சரவையில் சத்தியமூர்த்திக்கு இடம் தருவதாகக் கூறி கடைசியில் தன் அய் யங்கார் புத்தியை - அதாவது குழைத்து நாமம் போடவில்லையா?

காமராசருக்கும் ராஜாஜிக்கும் ஏற்பட்ட லடாய் குறித்து பிரதமர் நேரு மிக அழகாகப் படம் பிடித்தாரே.

இன்று ராஜாஜிக்கு ஏற்பட்டுள்ள அரசியல் ஏமாற்றம்தான் அவரைக் காங்கிரஸ் எதிரியாக்கியிருக்கிறது. ராஜாஜிக்கும் வேதனை தருவது இதுதான். அதாவது - நாகரிகமற்ற, படிப்பில்லாத பட்டிக்காட்டுப் பேர்வழி (Illiterate Poor) என்று தாம் கருத்திக் கொண்டிருக் கும் ஒருவர் தாம் முன்பு இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டு, நன்றாக நிர்வாகம் நடத்தி வருகிறாரே என்ற மனவேதனைதான் ராஜாஜியை வாட்டுகிறது

என்று காங்கிரஸ் பார்லிமெண்டரி கட்சி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நேரு பேசினாரா இல்லையா?

(தினமணி சித்தூர் பதிப்பு 25-3-1960 பக்கம் 2)

நாகர்கோயில் மக்களை இடைத் தேர்தலில் காமராசர் அவர்கள் வெற்றி பெற்ற போது, அவர் இந்தியாவின் உதவிப் பிரதமர் ஆவார் என்று ஏடுகள் எழுதிய போது ராஜாஜி என்ன சொன்னார் - நினைவிருக்கிறதா?

டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் ஆபீசில் ஒரு குமாஸ்தா வேலைக் குத்தான் அவர் லாயக்கே தவிர வேறு எந்தப் பொறுப்புக்குமல்ல என்று பேசினாரா - இல்லையா?

தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக காமராசர் இருந்தும் காந்தியார் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தபோது காமராசரைப் பல வகைகளிலும் அவமானப் படுத்தியவர்தானே குல்லுக பட்டர் ராஜாஜி?

காந்தியார் எங்கு வருறார்? எப்படி வருகிறார்? என்கிற தகவல்களைக் கூட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராசருக்குத் தெரிவிக்கப்படவில்லையே!

இவ்வளவையும் செய்துவிட்டு ஹரிஜன் பத்திரிகையில் ராஜாஜிக்கு எதிராகக் காமராசர் தலைமையில் ஒரு கும்பல் (Clique) இருக்கிறது என்று காந்தியாரை எழுத வைத்தாரே.

இந்தப் பார்ப்பனச் சூழ்ச்சியெல்லாம் அவாளுக்குத் தெரியாது பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? அவாளின் கடைக்காலை முறித்தவர் ஆயிற்றே அரிமா பெரியார்? அவாளின் ஆதிக்கபுரியின் ஆணிவேரைப் பிடுங்கி எறிந்தவராயிற்றே ஈரோட்டு ஏந்தல்! அவிட்டுத் திரியுடன் வீதியில் நட மாடமுடியாது. அப்படி நடமாடினால் கோலி விளையாடும் சிறுவன் கூட கேலி செய்து துரத்துவானே! -இந்த நிலைக்கு இந்த ஈரோட்டு ராவணன் தானே காரணம் என்ற ஆத்திரத்தில் அய்யோ பாவம் அலமருகின்றனர்.

அதே ராஜாஜியும், காமராசரும் 1971 தமிழ் நாட்டு சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி வைத்துப் போட்டி யிட்டு படுதோல்வி அடைந்ததுனரே!

இந்தியாவிலும் சரி, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களிலும் சரி கட்சிக்குள் பிளவு தலைவர்களுக்குள் கருத்து மாறுபாடு, வேறுபாடு ஏற்படுவது சர்வசாதாரணம்.

மாறுபட்டுச் சென்றவர்கள் அந்தக் கால கட்டத்தில் சொன்னவற்றை எடுத்து வைத்துக் கொண்டு, பார்த் தீர்களா, பார்த்தீர்களா? பெரியாரைப் பற்றி அய்யாமுத்து இப்படி சொல்லி இருக்கிறார்; ஜீவா இப்படி பேசியிருக்கிறார். பக்தவத்சலம் புலம்பித் தள்ளியுள்ளார். சி.சுப்பிரமணியம் சீறியிருக்கிறார். அண்ணாவும், சம்பத்தும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள் என்று சொல்வதில் ஏதாவது பொருள் உண்டா?

ஆனால் ஒன்று. மற்ற மற்ற தலைவர்களுக்கும் தந்தை பெரியார் அவர்களுக்கும் இதில் கூட கனத்த வேறு பாடு உண்டு.

தந்தை பெரியாரை விமர்சித் தவர்கள், குற்றப்பத்திரிகை படித்த வர்கள் எல்லாம் கடைசியில் தந்தை பெரியாரிடம் நெருங்கித்தான் வந்துள்ளார்கள். தந்தை பெரியாரின் பெருமைகளைப் பேசாத நாள்களை எல்லாம் பிறவா நாளாகத்தான் கருதி ர்கள் என்பதை மறக்க வேண்டாம் - மனுதர்மக் கூட்டத்தாரே!

--------------------------------------------இன்னும் வளரும் --கலி.பூங்குன்றன் அவர்கள் ”விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை 3-9-2011

2 comments:

Thamizhan said...

சோமாரியுன் துக்ளக், பார்ப்பனத் தினமலம் இவை தமிழர்களால் தீண்டப் படாதவையாகட்டும்.

தமிழில் எழுதி பொய்யும் புரட்டும் எழுதும் இவற்றைத் தொடாதீர்கள்.

தமிழனின் பிச்சையில் வாழ்ந்து கொண்டு தமிழையும், தமிழினத்தையும் கொச்சைப் படுத்தும் இந்த அசிகங்களை மானமுள்ளத் தமிழர்கள் தொடக் கூடக் கூடாது.

Unknown said...

இப்போது துக்ளக்கை யார் வாங்குகிறார்கள்?.குறிப்பிட்ட கும்பல்தான்.துரித ஸ்கலித,சொப்பன ஸ்களித விளம்பரங்களால்தான் அது உயிர் வாழ்கிறது.உலகத்திலேயே பெரியயயயயயய அறிவாளி அதை நடத்துபவர்,என சிலாகித்து என்று அவா”தான் புகழுவார்கள்.குஜராத்தில் திட்டம் போட்டு முஸ்லிம் சகோதரர்களை கொன்ற மோடி இந்த அறிவாளியின் அளவுகோலின்படி சிறந்த முதலமைச்சர்.இனக் கொடுமையை எதிர்த்து போராடிய விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள்.இதை அவர் 1980 லேயே தீர்க்க தரிசனமாக சொல்லி விட்டாராம்.