Search This Blog

27.10.08

மகாராட்டிரா, குஜராத் மாநிலங்களில் R.S.S. வைத்த வெடி குண்டு - பெண் சாமியார் கைது




மகாராட்டிரா, குஜராத் மாநிலங்களின்
இசுலாமியர் பகுதிகளில் குண்டு வெடிப்பு

ஓய்வு பெற்ற 2 ஆர்.எஸ்.எஸ். ராணுவ
அதிகாரிகளுடன் ஆர்.எஸ்.எஸ். பெண் சாமியார் கைது


புனே, அக். 27- மகாராட்டிர மாநிலம் மலேகானில் கடந்த மாதம் 29 ஆம் தேதி சிமி அலு வலகத்துக்கு முன்பு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்; 90 பேர் படுகாயமடைந்தனர்.

நாசிக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மோட் டார் சைக்கிளில் மர்ம மனிதர் கள் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து வெடிக்க வைத் திருப்பது தெரிந்தது. டைமர் கருவி பொருத்தப் பட்டிருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அம்மோனியா நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டிருந்தது.

தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இது பற்றி பல்வேறு கோணங்களில் விசா ரணை நடத்தினர். வெடிகுண்டு கொண்டு வரப்பட்ட மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்த போது, அது மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சியாம் சாகு, திலீப் நாசர், சிவநாராயண்சிங் ஆகிய 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். குண்டு வெடிப்புக்குப் பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பெண் சாமியார் சாத்விபிரக்யா பெயரில் வாங்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதனால் பெண் சாமியார் பிரக்யா பற்றிய தகவல்களைத் திரட்டி காவல்துறையினர் விசாரித்தனர்.

பெண் சாமியார் பிரக்யா வின் சொந்த ஊர் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் என்ற கிராமம். ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே ராமஜென்மபூமி போராட்டங்களில் ஈடுபட்டவர். பிறகு இந்து ஜக்ரான் மஞ்ச் எனும் அமைப்பில் தீவிர உறுப்பினராக இருந்தார். அப்போது சாமியார் ஆனார்.


சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தே மாதரம் எனும் அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்புக்கு குஜராத் மாநில அரசு நிதி உதவி செய்து ஆதரித்தது. இதனால் பிரக்யா குஜராத் மாநிலம் சூரத் நகரில் குடியேறினார். பா.ஜ.க., விசுவ இந்து பரிசத் தலைவர்களுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது.


பெண் சாமியார் பிரக்யாவுக்கும், குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான கூடுதல் ஆதாரங்கள் திரட்டப்பட்டன. குறிப்பாக மலேகானில் குண்டு வெடித்த தினத்தன்று குஜராத் மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்பும் ஒரே மாதிரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிமி இயக்கத்தினரைப் பழி வாங்க இந்த குண்டு வெடிப்புகளை பெண் சாமியார் உள்ளிட்ட குழுவினர் நடத்தி இருக்கலாம் என்று கருதி பிரக்யாவைக் காவல் துறை இன்று கைது செய்தது. இது இந்து பரிவார் அமைப்பு நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குண்டு வெடிப்புக்குப் பயன் படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து மற்றும் டைமர் கருவியை இந்து அமைப்பினர் எங்கிருந்து, எப்படி பெற்றனர் என்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பெண் சாமியார் பிரக்யாவுடன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 வீரர்கள் நெருக்கமாக இருப்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் நாசிக் அருகே ராணுவப் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார்கள். இப்பள்ளியை இந்து ராணுவக் கல்விக் கழகம் நடத்தி வந்தது. இந்தப் பயிற்சிப் பள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி, வெடிகுண்டுகளைக் கையாள்வது எப்படி என்ற பயிற்சியையும் ஆயுதப் பயிற் சியையும் இந்த இரு ராணுவ முன்னாள் அதிகாரிகள் அளித்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதான ராணுவ வீரர் களில் ஒருவர் பிரபாகர் குல்கர்னி; மற்றொருவர் பெயர் உபாத்யா. இவர் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றியவர். 2 ராணுவ வீரர்களும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் என்று தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு தயாரிக்க இவர்கள் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தை சேகரித்து அனுப்பி இருக்கின்றனர்.

தற்போது கைதான பெண் சாமியார் பிரக்யா உள்பட 2 ராணுவ அதிகாரிகளையும் விசாரணை செய்வதற்காகக் காவல்துறையினர் மும்பை கொண்டு சென்றுள்ளனர்.

மலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக பெண் சாமியாரும், 2 முன்னாள் ராணுவ வீரர்களும் கைதாகி இருப்பது வடமாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


---------------------நன்றி: "விடுதலை" 27-10-2008

0 comments: