Search This Blog

25.10.08

திராவிடர் கழகச் சொத்துகளை "அட்டாச்" செய்ய வேண்டுமாம் சு.சாமியின் அடவாடித்தனம்!



மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு திராவிடர் கழகச்
சொத்துகளை "அட்டாச்" செய்ய வேண்டுமாம்




மதுரை: மதுரையில் உள்ள சு.சாமியின் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை அறிந்த சு.சாமி டெல்லியிலிருந்து தி இந்து பத்திரிகைக்குத் தொலைப்பேசியில் பேசி, திராவிடர் கழகச் சொத்துகளை ஜப்தி (அட்டாச்) செய்ய வேண்டும் என வழக்கு போடப் போவதாகக் கூறியுள்ளார்.

அவருடைய கட்சி அலுவலகம் நேற்று மதுரையில் தாக்கப்பட்டதாம். அது தொடர்பாக தமிழ்த் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரையும், மேல்முருகன், மாயழகு என்கிற சட்டக் கல்லூரி மாணவர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாகவும் தி இந்து ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இதுபற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப் போவதாகவும், தனக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வரை திராவிடர் கழகச் சொத்துகளை அட்டாச் செய்யும்படி கோரப் போவதாகவும், தமிழ்நாடு அரசைக் கலைக்க வேண்டும் எனவும் கோரிக்கையை வழக்கில் சேர்க்கப் போவதாகவும் அவர் இந்து ஏட்டுக்குத் தெரித்துள்ளதாகவும் அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் சு.சாமி டில்லியில் இருந்து தெரிவித்தாராம்.

அவருடைய கட்சி அலுவலகம் தாக்கப்பட்டால் திராவிடர்கழகச் சொத்து எதற்காக அட்டாச் செய்யப்பட வேண்டும் என்பது வழக்கு போட்டால் தெரியவரும்.


----------------"விடுதலை" 25-10-2008

0 comments: