Search This Blog

12.6.10

இ(எ)ப்பொழுதும் பார்ப்பனர்கள்! ஊன்றிப்படித்து உண்மையை உணருங்கள்!

இ(எ)ப்பொழுதும் பார்ப்பனர்கள்!


இந்த கருப்புச் சட்டைக்காரர்களுக்கு இதுதான் வேலை! எதற்கெடுத்தாலும் பார்ப்பான் பார்ப்பான் என்ற பாட்டினைப் பாடாவிட்டால் இவர்களுக்குத் தூக்கமே வராது. ஒரு காலத்தில் எப்படியோ இருந்திருக்கலாம் இப்பொழுது அவர்கள் முழுக்கவே மாறிவிட்டார்கள்; முனியாண்டி ஓட்டலில் கூட சாப்பிடுகிறார்கள்.

இப்பொழுதெல்லாம் யார் உச்சிக் குடுமி வைத்திருக்கிறார்கள் மாடர்னாக கிராப் வெட்டிக் கொள்கிறார்கள், பஞ்சகச்சமா கட்டுகிறார்கள் கோட்டு சூட்டுகளில் அமர்க்களமாகக் காட்சி அளிக்கிறார்கள் மாமி கூட மடிசார் கட்டுவதில்லை என்று அக்கிகாரத்து வக்கீல்களாக தமிழர்களில் பலர் அதுவும் மெத்தப்படித்த பலர் வக்காலத்துப் போட்டுப் பேசுவதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

அவர்களால் முன்பு போல் நடந்து கொள்ள முடியாதுதான் பேசமுடியாதுதான் உச்சிக் குடுமி வைத்துக் கொள்ள முடியாதுதான் பஞ்சகச்சம் கட்ட முடியாதுதான். அவ்வாறு நடந்து கொண்டால் கோலி விளையாடும் கோவணம் கட்டாத சிறுவன்கூடக் கேலி செய்வான் ஏன், பைத்தியக்காரர்கள் என்று கல்லால் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கால தேச வர்த்தமானம் என்பார்களே, அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்ளக் கூடியவர்கள்தான் மறுக்கவில்லை.

ஆனால் சிந்தனையில், வாழ்க்கைக் கலாச்சாரத்தில், வீட்டு நடப்புகளில், பெயர்களைச் சூட்டிக் கொள்வதில், அவாள் வட்டாரத்துச் சடங்கு ஆச்சாரங்களில் அவர்கள் அக்கிரகாரவாசிகளா ? அல்லது நம்மவர்களா? என்பதை ஒரு கணம்ஒரே ஒரு கணம் சிந்தனையைச் செலவிட்டு, கண்களை அகலத் திறந்து விட்டுப் பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே பளிச்சென்று புலப்பட்டுவிடுமே! ஆமாம், ஆமாம் வெளிவேஷம் உத்திராட்சப் பூனைகள் பசுத்தோல் போர்த்திய ஓநாய்கள் என்பதை புரிந்து கொண்டு விடலாமே!

ஜூன் 4 ஆம் தேதி (2010) தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையைக் கையில் எடுங்கள்.

அதில் முழு பக்கம் விளம்பரம்!

Educate

Enlighten

Empower

என்ற தலைப்பிட்டு ஒரு முழு பக்க விளம்பரம்

இடது பக்கத்தில் மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரின் படம். வலது புறத்தில் ஜெயேந்திர சரஸ்வதியின் படம்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

காஞ்சி சங்கர மடம் நடத்தும் வேத பாடம் கலந்த பொதுக்கல்வி அளிக்கும் பள்ளி. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பிராமணப் பையன் வேதப் பாட சாலை யில் பயில வரவேற்கப் படுகிறான். வேதபாடம் மட்டுமே வாழ்க்கையை நடத்துவதற்கான வருவாயைத் தராது என்பதால், இந்த ஈடு இணையற்ற செயல் திட்டத்தில் மதச் சார்பற்ற தற்போதைய கல்வியும் சேர்த்து அளிக்கப் படுகிறது. பிராமணச் சிறுவர்கள் வேதங் களைக் கற்றுக் கொள்வதுடன் அதே நேரத்தில் முறையான கல்வியையும் பெற லாம்.

புராணங்கள், இசை, வரலாறு, கலை போன்ற இந்திய கலாச்சாரப் பாடங்களைக் கற்க ஈடு இணையற்ற ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்குக் கலாச்சார மறுபயிற்சி செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படு கின்றன. ஒவ்வொரு குழந்தையும் அதன் குடும்ப வருவாய் பற்றிய விவரங்கள் அறிந்தபின் சேர்த்துக் கொள்ளப்படும். குறைந்த வருவாய் உள்ள குடும்பங்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும் என்பதுதான் இந்த விளம்பரம்.

வேதங்கள் பிராமணப் பையன்களுக்கு

புராணங்கள் பிராமணர் அல்லாத வர்களுக்கு

ஏனிந்த வேறுபாடு? ஏனிந்த பாட பேதம்?

பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு ஏன் வேதங்களைக் கற்றுக் கொடுக்கக்கூடாது?

பார்ப்பன மாணவர்கள் ஏன் புராணங்களைப் படிக்கக்கூடாது?

கொஞ்சமாவது அறிவைச் செலுத்து பவர்களுக்கு இந்த வினாக்கள் எழாமல் போகாது.

வேதங்களை ஏன் பிராமணர் அல்லாதாருக்கு சூத்திரர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக்கூடாது?

அவர்களின் மனுதர்மம் அவ்வாறு கூறுகின்றது!

வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும், மெழுகையும் உருக்கி ஊற்ற வேண்டும்.

சூத்திரன் நடமாடுகிற இடம் சுடலையானதால், அவன் பக்கத்தில் வேதமோதக்கூடாது.

வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். அதன் பொருளை உணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்கவேண்டும்.

என்பது பார்ப்பனர்கள் சுருதி, ஸ்மிருதிகளின் கட்டளை.

இதனைத் தெரிந்து கொண்டால், காஞ்சி மடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வெளியிட்டுள்ள முழு பக்க விளம்பரத்திற்கான தாத்பரியம் என்ன என்று புரியும்.

சூத்திரர்களுக்கு வேதம் கற்பிக்கலாகாது என்று மனு கட்டளையிட்ட பிறகு மறு வார்த்தை ஏது?

வேதம் விளக்கிய பிறகு, வேறு சிந்தனை சங்கர மடத்துக்கு வருமா-?

சூத்திரன் வேதங்களைப் படிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல சூத்திரனுக்கு வேதத்தைச் சொல்லிக் கொடுக்காதே என்று பார்ப்பனர்களுக்கு மனுவால் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுவிட்டதே! (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 103).

இதன் அடிப்படையில்தான் பிராமணப் பையன்களுக்கு வேதமும், பார்ப்பனர் அல்லாத சூத்திரர்களுக்கு புராணமும் சொல்லிக் கொடுக்கப்படும் என்ற சங்கர மடத்தின் விளம்பரமாகும்.

முனியாண்டி ஓட்டலில் பார்ப்பனர் சாப்பிடும் அளவிற்கு வந்து விட்டார்கள், இப்பொழுதெல்லாம் உச்சிக் குடுமி வைப்பதில்லை என்று வக்காலத்து வாங்கும் பார்ப்பனர் அல்லாத வக்கீல்கள் இந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகாவது தலையைக் கொஞ்சம் குலுக்குவார்களா? மூளைக்கு ரத்த ஓட்டத்தை உண்டாக்க முயற்சிப்பார்களா?

பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள் என்பதற்காகவும் ஒரு முடிவுக்கும் வரவேண்டாம். கருஞ்சட்டைத் தோழர்களின் கனமான கருத்து இது என்பதற்காகவும் சஞ்சலப்படவேண்டாம்.

இரண்டு தரப்பு தகவல்களும் எடுத்துக் கூறப் பட்டுள்ளது. எது சரி என்ற முடிவுக்கு வரவேண்டியது பார்ப்பனர் அல்லாத மக்களின் கடமை இதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.

பார்ப்பனர்களை, சங்கர மடங்களின் சரிதங்களை, நடப்புகளைச் சரியாக உணர்ந்தவர்களுக்கு இந்தத் தகவல்கள் எல்லாம் ஆச்சரியத்தைக் கொடுக்காது; அவாளின் புத்தி அப்படித்தான். சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்ற டாக்டர் டி.எம். நாயரின் கருத்து நூற்றுக்கு நூறு சரியே என்பதை ஒப்புக் கொள்வர். பக்தியின் போதை ஏறி பார்ப்பனீயத்தின் மடியில் வீழ்ந்து கிடப்பவர்கள் போதை தெளியும் வரை கடைத் தேறமாட்டார்கள்.

ஜெயேந்திரர் தங்கியுள்ள கலவையில் சங்கர மடத்தால் நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 160 பேர்களும் பிராமணர்கள். வேதபாடசாலையில் பயிலும் 21 சிறுவர்களும் பிராமணர்களே. சொல்லுவது விடுதலை ஏடு அல்ல சங்கர மடத்தின் செல்லப் பிள்ளையான தினமணி (16_1_2005)

காஞ்சி சங்கர மடத்தால் காஞ்சியையடுத்த ஏனாத்தூரில் நடத்தப்படும் பல்கலைக் கழகத்தில் கூட பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற பாரபட்சம் உண்டு.

நக்கீரன் இதழுக்கு (31_8_2001) மாணவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

காலேஜ் அட்மிஷன்போதே நான்பிராமின் மாணவர்களிடம் லட்ச ரூபாயிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் வரை நன்கொடை வசூல் பண்றாங்க . . . அதே சமயம் பிராமின் மாணவர்கள்ட்ட வெறும் பத்தாயிரம், பதினைந்தாயிரம் மட்டுமே வாங்கிக்கிறாங்க.

முதல்ல கடிகாஸ்தானம், அன்னபூரணிங்கற ரெண்டு ஹாஸ்டல் மட்டும்தான் இருந்தது. கடிகாஸ்தானத்தில் சமஸ்கிருத வேதம் படிக்கிற மாணவர்கள் மட்டுமே தங்க வைக்கப்பட்டாங்க. மற்ற பிராமின், நான்பிராமின் மாணவர்களை அன்னபூரணி ஹாஸ்டல்ல தங்க வச்சாங்க.

அதற்குப் பிறகு மூணாவது விசாலாட்சி ங்கற பேர்ல ஒரு ஹாஸ்டலைக் கட்டினாங்க. அதன் பிறகு போன நவம்பர், டிசம்பரில் எங்கள்ட்ட ஒரு ஃபாரத்தைக் கொடுத்து அதில் எங்கள் கேஸ்டையும் சப்கேஸ்டையும் தெளிவா எழுதிக் கொடுக்கச் சொன்னாங்க. இதன் அடிப்படையில் பிராமின் மாணவர்களை மட்டும் தனியே பிரிச்சி அவங்களை விசாலாட்சியில் தங்க வைச்சிட்டாங்க.

ஹாஸ்டல் மாத வாடகையில் கூட இந்த இரண்டு கேட்டகரிக்கும் வித்தியாசம் உண்டு. மார்க் போடுவதிலும் பாரபட்சம்தாங்க.

உதாரணத்துக்குச் சொல்றோம். எங்க கூட படிச்ச பிராமண நண்பன் 14 பேப்பரில் 4 பேப்பரில் மட்டுமே பாஸ் பண்ணினான்; ஃபோர்த்து செமஸ்டர்ல அவனை கடிகாஸ்தானத்தில் தங்க வைச்சிட்டாங்க. அதுக்குப் பிறகு அவன் எல்லா பேப்பரையும் எழுதி கிளியர் பண்ணிட்டான். எப்படின்னா . . . இண்டர்னல் மார்க்கை இவனை மாதிரி பிராமின் மாணவர்களுக்கு முழுசா போட்டு பாஸாக்கிடுவாங்க. நான் பிராமின் மாணவர்களுக்கு மினிமம் மார்க்கான 11 மார்க்கை மட்டுமே பெரும்பாலும் போடுவாங்க. அதே மாதிரி காலேஜ் காம்பஸ்ல உள்ள இன்டர்நெட் ப்ரவுசிங் சென்டரை பிராமின் மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். யாராவது நான் பிராமின் மாணவர்கள் சொந்தமா ஹாஸ்டல்ல கம்ப்யூட்டர் வச்சிருந்தா அவர்களிடமிருந்து வருடம் 500 ரூபாயை வசூலிச்சுக்குவாங்க. பிராமின்களுக்கு இந்தக் கட்டணம் கிடையாது. என்று பாதிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கொடுத்த பேட்டி நக்கீரனில் விலாவாரியாக வந்ததே. (31_8_2001)

இதற்குப் பிறகும் பிராமின் _ நான்பிராமின் பிரச்சினை எல்லாம் அவுட் டேட்டடு என்று யாராவது சொல்வார்களானால் அவர்களை விட சற் சூத்திரர்கள் (பார்ப்பனர்களின் அசல் வைப்பாட்டி மக்கள்) வேறு யாராகத்தான் இருக்க முடியும்?

வேத ரக்ஷண டிரஸ்ட்

ஷஷ்டியப்த பூர்த்தி டிரஸ்ட்

வேத ரக்ஷணநிதி டிரஸ்ட்

வேதபாட நிதி டிரஸ்ட்

கன்னிகாதான டிரஸ்ட்

இந்த எல்லா டிரஸ்டுகளுமே காஞ்சி சங்கர மடத்தால் நடத்தப்படுபவைதான். பார்ப்பனப் பிள்ளைகளுக்கு வேதம் சொல்லிக் கொடுப்பது, பார்ப்பனர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுப்பவர்களுக்கு உதவி செய்வதற்கே.

சரி, கன்னிகாதான டிரஸ்ட் என்று சொல்லப்படுகிறதே. அதிலாவது கல்யாணம் ஆகாத பார்ப்பனர் அல்லாத பெண்களுக்கு ஏதாவது உதவி செய்யப்படுகிறதா என்றால், அங்கும் பூச்சியம்தான்.

இதுபற்றி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரலில் (இரண்டாம் பாகம் - பக்கம் 903) ஜெகத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்ன எழுதுகிறார்?

மற்ற ஜாதிகள் பிராம்மணர்களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷணைக் கொடுமையோ, பெண்கள் இத்தனை பெருவாரியாக காலேஜ் படிப்பு உத்தியோகம் என்று போய் சுயேச்சையாகத் திரியும்படி தண்ணித் தெளித்து விட்டிருக்கிற நிலைமையோ இல்லை. ஆதலால் ஏழை பிராம்மணப் பெண்களை உத்தேசித்தே இந்த டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்படிச் சொல்கிறவர்தான் இந்த லோகத்துக்கே குருவாம் சூத்திர ஜாதியினருக்கு உள்பட.

என்னதான் லோகக் குரு என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் புத்தி மட்டும். எதையோதான் மேயப்போகிறது என்பதை மறந்துவிடக்கூடாது

இத்தனை டிரஸ்டுகளுக்கும் பணத்தை அள்ளிக் கொடுப்பது பார்ப்பனர்கள் மட்டும்தானா? எத்தனை எத்தனை சூத்திரத் தமிழர்கள் கொட்டிக் கொடுக்கிறார்கள்? காணிக்கை என்று கூறி பணத்தை வாரி இறைக்கிறார்கள்?

சூத்திரர்களுடைய பணமும், நிதியும் மட்டும் வேண்டும். ஆனால் உதவி மட்டும் அக்கிரகாரக் கும்பலுக்கே!

தமிழனின் பக்திப் போதை தலைக்கேறி ஏமாந்த சோணகிரியாக இருக்கு மட்டும் அக்கிரகார மேனிகள் ஏன் தமிழன் தலைகளைத் தடவ மாட்டார்கள் தொடையில் கயிறு திரித்துத் தூங்கவிடமாட்டார்கள்?

காஞ்சி சங்கர மட முழு பக்க விளம் பரத்தைக் கொஞ்சம் கூர்மையாகக் கவனிக்க வேண்டும்.

ஒவ்வொரு பிராமணன் வீட்டிலிருந்தும் ஒரு பிராமணப் பையன் வேதம் படிக்க வேண்டும் என்று சொல்லுவதைக் கூடப் புரிந்து கொள்ள முடிகிறது காரணம் வேதம் அவாளுக்காகவே உள்ளது.

சாஸ்திர சம்பிரதாயத்தை வலியுறுத்தும் காஞ்சி மடம் வேதத்தை மட்டுமேதான் பிராமணர்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் அல்லவா? ஏன் அவ்வாறு வலியுறுத்தவில்லை?

வேதபாடம் மட்டுமே வாழ்க்கையை நடத்துவதற்கான வருவாயைத் தராது என்பதால்... என்று இழுப்பானேன்? வேதபாடத்தாடு தற்கால கல்வியைப் போதிக்க திட்டமிடுவது ஏன்?

தங்கள் வசதிக்காக தங்கள் குல தருமத்தை மாற்றிக் கொள்வது ஏன்? வேத மரபையும் விட்டு விடக்கூடாது, தற்கால லவுகிக நாகரிக ஆடம்பர வாழ்வையும் அனுபவிக்கவேண்டும் என்பதிலே அவர்கள் குறியாக இருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது. அடேயப்பா! எவ்வளவு சாமார்த்தியக்காரர்கள்!

இன்னொன்றும் முக்கியமானது; கன்னிகாதான டிரஸ்ட் கல்யாணம் ஆகாத பிராமணப் பெண்களுக்கு என்று சொல்லும்போது சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?

மற்ற ஜாதிகள் பிராமணர்களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷணைக் கொடுமையோ, பெண்கள் இத்தனை பெருவாரியாக காலேஜ் படிப்பு, உத்தியோகம் என்று போய் ஸ்வயேச்சையாகத் திரியும்படி தண்ணி தெளித்து விட்டிருக்கிற நிலைமையோ இல்லை என்கிறாரே பார்க்கலாம். பார்ப்பனப் பெண்கள் பெருவாரியாகக் காலேஜில் படிப்பது பெருவாரியாக உத்தியோகம் பார்ப்பது என்கிற அவர்களின் வசதியான வாய்ப்பைக் கூட குறை கூறுவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கும் பார்ப்பனீய சாமர்த்தியத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பார்ப்பனப் பெண்கள் அதிகமாகப் படிப்பது உத்தியோகம் பார்ப்பது கிரிசை கெட்டத்தனம் என்றால் சங்கராச்சாரியாரின் கடமை என்ன?

பிராமணப் பெண்களே படிக்காதீர்கள் உத்தியோகத்துக்குப் போகாதீகள் என்று அதட்டிச் சொல்ல வேண்டியதுதானே அது போன்ற சாஸ்திரத்தைக் கட்டிக்காக்கத்தானே சங்கராச்சாரியார் இருக்கிறார்?

அவர் பாவம் பணக்காரர்! அவருக்கு ஏழடுக்கு மாளிகை. எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பத்து கார் சொந்தத்தில் வைத்துள்ளார். எவ்வளவு சிரமம்,

காதில் வைரக் கடுக்கண். எவ்வளவு கஷ்டம்... என்று ஒருவர் சொன்னால் அவனைச் சூதன் சூழ்ச்சிக்காரன் என்று சமுதாயம் சொல்லும். அதே பாணியில் அதிகப் பார்ப்பனப் பெண்கள் படிக்கிறார்கள் உத்தியோகத்துக்குப் போகிறார்கள் _ இவை எவ்வளவுக் கிரிசை கெட்டத்தனம் என்று சொல்லும் சங்கராச்சாரியாரை ஏமாற்றுக்காரர் என்று சொல்வதில்லை. மாறாக ஜெகத்குரு என்று சொல்கிறார்கள் என்றால் சொல்லுகிறவர்களின் மண்டையில் பார்ப்பனிய அடிமைத்தனம் என்ற களிம்பு அளவுக்கு மீறி ஏறி இருக்கிறது என்றுதானே பொருள்?


உள்நோக்கம்

பார்ப்பனர்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தலைப்பாக மூன்று ஆங்கில சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

Educate

Enlighten

Empower

கற்பி

மேலும் தெளிவாக்கு

அதிகார மளி!

பார்ப்பனர்களுக்கு வேதங்களைக் கற்பிக்கப் போகிறார்கள். அதையும் தெளிவாகக் (Enlighten) கற்பிக்கப் போகிறார்கள். வேதங்களில் கறுப்பர்களை திராவிடர்களை கருவறுக்கும் சுலோகங்கள்தானே!

இன்றைய நிலவரப்படி திராவிடர்களான பார்ப்பனர் அல்லாதார்தான் தம் எதிரிகள் என்று பார்ப்பனர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. இப்படி தயாரிக்கப்படுபவர்கள் இந்த நாட்டின் அதிகாரப் பீடங்களில் (Empower) அமர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கம் இதன் திரைமறைவில் உள்ளது.

புராணங்கள்

பார்ப்பனர் அல்லாதாருக்கும் புராணங்கள் கற்பிக்கப்படும். புராணங்கள் என்றால் பக்தி செலுத்துவது பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருப்பதே பார்ப்பன வடிவம் தாங்கி வரும் சிவனடியார்களுக்கு மனைவியைக் கூட விட்டுக் கொடுப்பது என்கின்ற அளவுக்கு பார்ப்பனர் அல்லாதார் தயாரிக்கப்பட வேண்டும் என்பதுதான் புராணங்களை இவர்களுக்குக் கற்பிக்கும் தந்திரம்.

புரோகிதம் - புராணம் என்பது சூத்திரர்களுக்கு வைதிகம் என்பது பிராமணர் களுக்கு புரிகிறதா?

(தந்தை பெரியார் - விடுதலை 18.5.1968 பக்கம் 2)


புராணங்களை பார்ப்பனர் அல்லாதாருக்கு போதிப்பது -ஏன்?

காஞ்சி சங்கர மடம் வெளியிட்டுள்ள விளம்பரத் தில் பார்ப்பனர் அல்லாதாருக்குப் புராணங்கள் கற்றுக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பது ஏன்?

புராணங்கள் என்றாலே புளுகு மூட்டைகள்தான். அந்தப் புளுகு மூட்டைகள் கூட எதைத் திணிக்-கின்றன என்பதுதான் முக்கியம்.

பார்ப்பனீயத்தை எதிர்த்த அரசர்களை அசுரர்களை அச்சுறுத்தி அடக்கப் புனையப்பட்ட கட்டுக்கதைகள்-தான் புராணங்கள் எனப்படுபவை.

ஸ்ரீசிவமூர்த்தியினிடம் புராணங்களைக் கேட்ட நந்திமாதேவர் சநற்குமார முனிவருக்கு உபதேசிக்க, அவர் வியாசருக்கு உபதேசிக்க வியாச பகவான் சூதருக்கு உபதேசித்தனர் . . .

திரிமூர்த்திகள், எழுவகைத் தோற்றம், பிரமாண்டம் இவற்றின் நிலைகளையறிவித்துத் தான் கெடாமல் இருப்பதால் புராணமே பிரமம் என்பன. அப்புராணங்கள் சொல்லியவற்றைத் தவறி நடப்பதே பந்தம். இவை நீங்கிப் புராணம் சொன்ன வழியில் நடப்பது மோக்ஷம்.

(அபிதான சிந்தாமணி (1984) பக்கம் 1169_ -1170)

இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும் எனும் நூலின் முன்னுரையில் (பக்கம் 8) கே.எம். முன்ஷி என்ற பார்ப்பனர் (இந்திய அரசமைப்பு சட்ட உருவாக்கக் குழுவிலும் இடம் பெற்றவர் இவர்) புராணங்கள் பற்றிக் கூறும் கருத்தும் கவனிக்கத்தக்கது:

புராணங்களும் இதிகாசங்களும் மக்களின் மெய்ச் சரித்திரமல்ல. இவைகள் மக்கள் வரலாற்றை அறிவதற்கோ சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாகாது இவைகள் வெறும் இலக்கியத் தொகுப்புகளே என்று குறிப்பிட்டுள்ளார்.

(விரிவான தகவல்களுக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள புரட்டு இமாலயப் புரட்டு எனும் நூலைப் படிக்கலாம்!)

புராணங்கள் பார்ப்பனர்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்துவதற்கு ஒரு புறம் இன்னொரு பக்கம் பார்ப்பனீய அடிமைத்தன உணர்ச்சியைப் பார்ப்பனர் அல்லாதார் மூளையில் ஆழமாகப் பதிவு செய்வதற்கே யாகும்.

புராணங்களில் கூறப்படும் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளைக் கவனித்தால் இதன் உண்மை வெள்ளையாகும்.

தில்லைவாழ் அந்தணர் புராணம் என்றால் சுந்தரருக்கு சிவபெருமானால் முதல் அடி எடுத்துக் கொடுக்கப்பட்டது என்று வருகிறது.

தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் இந்த அடியைத்தான் சிவபெருமான் எடுத்துக் கொடுத்தானாம்.

தில்லையில் வாழும் பார்ப்பனர்களுக்குச் சிவபெருமானே அடியேன் என்றால், புராணம் எழுதுவதன் நோக்கம் புரியவில்லையா?

பெரிய புராணம் முழுவதும் அடியார்களின் வரலாறு; அடியார்கள் பார்ப்பனர்களின் அடிமைகளாகவும், கடவுளுக்காக மனைவியை கூட்டிக் கொடுத்தவனாகவும் (இயற்பகை நாயனார்) பெற்ற பிள்ளையையே தாயும், தந்தையும் அரிந்து கறி சமைத்துச் சிவனடியாருக்குக் கொடுத்ததாகவும் (சிறுத்தொண்டர்) என்றுதானே புகழ்கின்றன.

கோட்புலி நாயனார் சோழ மன்னன் சேனாதிபதி. கோயில் சிலைக்குத் தளிகை பூசைக்காக நெல்லை வாங்கித் தன் வீட்டில் சேர்த்து வைத்திருந்தான். இவன் படை எடுத்துச் சென்றிருந்தபோது பஞ்சம் காரணமாக சுற்றத்தார் இந்த நெல்லை எடுத்துப் பயன்படுத்தி, பஞ்சம் பட்டினி கொடுஞ்சாவிலிருந்தும் தப்பித்தனர்.

ஆனால் கோட்புலியார் போர்க்களத்திலிருந்து திரும்பியதும் கோயில் நெல்லைச் சுற்றத்தார் உண்டு விட்டது அறிந்தார். வீடு சேர்ந்தார்.

இது குறித்து திரு.வி.க. எழுதுகிறார்:.

சுற்றத்தாருக்குப் பரிசில் வழங்கல் வேண்டும் என்று சொல்லி அவரை அழைப்பித்தார். கோட்புலி என்னும் தம் பெயருடைய சேவகன் ஒருவனை வாயில் காக்குமாறு செய்தார். அடாது செயல் புரிந்த இவனைக் கொல்லாது விடுவதோ என்று உருத்து எழுந்தார். எழுந்த தந்தை, தாய், உடன் பிறந்தோர், தாரம், துரோகத்துக்குட்பட்ட மற்றவர் ஆகிய எல்லாரையும் வெட்டி வீழ்த்தினார். ஓர் ஆண் குழந்தை மட்டும் எஞ்சி நின்றது.

நாயனார் அதன் மீது பாய்ந்த பொழுது, வாயில் காப்போன் அவரைப் பார்த்து, பெருமானே, இக்குழந்தை என்ன செய்தது? இது சிவ சோற்றை உண்ணவில்லையே! ஒரு குடிக்கு ஒரு பிள்ளை. அருள் செய்யும் என்று வேண்டினான். அதற்குக் கோட்புலியார் இக்குழவி சிவசொத்தை உண்ண-வில்லை. ஆனால் அதை உண்டவளுடைய முலைப்-பாலை உண்டது என்று கூறி அக்குழந்தையையும் வாளுக்கு இரையாக்கினார்.

(திரு.வி.க.வின் நாயன்மார் வரலாறு, பக்கம் 306_-307)

புராணங்களைப் பார்ப்பனர் அல்லாதாருக்குச் சொல்லிக் கொடுக்க சங்கரமடம் திட்டமிட்டிருப்பதன் சூட்சமம் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே.

பார்ப்பனர் அல்லாத நாயன்மார்களின் கதை இப்படி இருக்க, பார்ப்பனப் பக்தர்களின் கதையோ வேறு மாதிரி.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மதுரையில் சிவன் எப்படி மோட்சம் கொடுத்தான்? பொற்றாமரைக் குளத்தில் குளிக்கச் சொன்னான் பசுமாட்டுக்குப் பசும்புல்போடச் சொன்னான் தீர்ந்தது தாயைப் புணர்ந்த பாவம். திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலம் இதுதான்.

இந்தப் புராணங்கள்தான் பார்ப்பனர் அல்லாதாருக்கு! பார்ப்பனர்களுக்கோ வேதங்கள்!


------------------- மின்சாரம் அவர்கள் 12-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

7 comments:

AkashSankar said...

இனி இதெல்லாம் எடுபடாது...எனக்கு தெரிஞ்சு வரைக்கும் அவங்க திருந்தியே ஆகணும்...

adiyaarkku adiyavan said...

உங்களுக்கு வேண்டாம் என்றால் அந்த படிப்பில் சேர வேண்டாமே? அந்த பாடசாலையின் விதி முறைகள் வேறுபட்டவை என்று எடுத்துக் கொள்ளுங்களேன். இது கவர்மென்ட் கல்லூரி இல்லையே

vino said...

கொஞ்சம் பொதுநலத்துடன் பேசுங்கள் 'திரு'.

தமிழ் ஓவியா said...

//இது கவர்மென்ட் கல்லூரி இல்லையே//

கல்லூரி கட்டுவது முதல் தண்ணீர் குழாய் வரை அனுமதி அரசிடமிருந்துதானே வாங்கியுள்ளார்கள். அனைத்தும் அரசிடம் அனுமதி பெற்றுத்தான் செய்ய முடியும்.

இது உடமைப் பிரச்சினை அல்ல உரிமை பிரச்சினை Thiru .

தமிழ் ஓவியா said...

இது குறித்த தெளிவான பார்வைக்கு கீழ் கண்ட சுட்டியை சுட்டிப் படிக்கவும்

http://thamizhoviya.blogspot.com/2010/06/blog-post_6644.html

adiyaarkku adiyavan said...

அரசாங்க அனுமதி பெற்றாலும், அந்த பாடசாலையின் விதி முறைகள் வேறுபட்டவை என்று எடுத்துக் கொள்ளுங்களேன். அரசாங்க அனுமதி பெற்று கட்டிய ஆஸ்பத்திரியாக இருந்தாலும் அப்போல்லோ ஆஸ்பத்திரியில் எல்லோராலும் சிகிச்சை எடுத்து கொள்ள முடியுமா? அங்கே போய் 'உரிமை' , 'உடமை' என்று பேசுவதுதானே?

Ivan Yaar said...

If you have real guts you should oppose all gods and all religions. But you are only against Hindus and Only against one community Brahmins. Hindus are tolerant people who keeps on silent always. I feel D.K. is the party which has no real guts to oppose other religions than Hinduism. If DK is atheist party they should protest against ISLAM too. Muslims are great people who have real faith on their god. They wont like others speaking bad about their god and their religion. If DK publishes one article against Islam or Allah, Muslims will surely teach DK party a lesson.