Search This Blog

23.6.10

குற்றவாளிக் கூண்டில் மருத்துவர் கேதன் தேசாய்

குற்றவாளிக் கூண்டில் மருத்துவர் கேதன் தேசாய்

- ராமச்சந்திரன் -

(இந்திய மருத்துவக் கல்வித் துறை தொடர்பான விவகாரங்களில் 20 ஆண்டு காலமாக ஒரு தனிநபரான கேதவ் தேசாய் அதிகாரம் செலுத்தி வர அனுமதிக்கப்பட்டுள்ளது விந்தையே. குஜராத் மாநிலம் அகமதாபாத் அரசினர் மருத்துவக் கல்லுரி மற்றும் மருத்துவ மனையில் சிறுநீரகத் துறைத் தலைவராக இருந்தவர் இவர். 2000 ஆம் ஆண்டில் தேசிய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்த இவர் மீது லஞ்ச ஊழல் வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கிய உயர்நீதிமன்றம் கவுன்சிலை நிருவகிக்க ஒரு தற்காலிகக் குழுவை நியமித்தது.

ஆனால், கவுன்சில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் தேசாய் மீதான லஞ்ச ஊழல் வழக்கையே நீர்த்துப் போகச்செய்தது. தேசாயின் பினாமியான கேசவன்குட்டிநாயர் என்பவர் கவுன்சிலின் தற்காலிகத் தலைவராக ஏழு ஆண்டு காலம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ஏழு ஆண்டு காலமும் கவுன்சிலின் செயல்பாடுகள் அனைத்துமே தேசாயின் கட்டுப்பாட்டில்தான் நிகழ்ந்துள்ளன.

அண்மையில் தேசாய் வீட்டில் இருந்து 1500 கோடி ரூபாயும், 1500 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதில் வியப்பேதும் இருக்கமுடியாது. இந்தியாவில் ஒரு முக்கியமான துறையான மருத்துவக் கல்வித் துறையையே வளைத்துப்போட்டு ஒரு தனிநபர் இவ்வாறு கொள்ளை அடித்துள்ளதைத் தடுக்கவோ, கண்காணிக்கவோ அரசு தரப்பில் இந்த 20 ஆண்டு காலத்தில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வியப்பைத் தருகிறது.

(ஃப்ரண்ட் லைன் இதழில் இராமச்சந்திரன் இது பற்றி எழுதியுள்ள மிக விரிவான கட்டுரையின் மொழியாக்கம் இங்கே தரப்படுகிறது.)

லஞ்சக் குற்றச்சாற்றுகளின் பேரில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாயைக் கைது செய்தது விரைந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல் அல்ல. பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றிற்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூபாய் 2 கோடி லஞ்சம் வாங்கியபோது, மத்தியப் புலனாய்வுத் துறையினர் தேசாயை ஏப்ரல் 22 அன்று கைது செய்தனர். இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஜே.பி.சிங் மற்றும் கன்வல்ஜித் சிங் என்ற இருவரும் உடன் கைது செய்யப்பட்டனர். முன்னவர் இந்த லஞ்சவிவகாரத்தில் நடுமனிதராக நின்ற தரகர். பின்னவர் பாட்டியாலாவில் உள்ள ஜியான் சாகர் மருத்துவக் கல்லூரியின் துணைத் தலைவர் ஆவார். இக்கல்லூரியுடன் தொடர்புடைய மற்றொரு நபரான சுக்வந்திர்சிங் பின்னர் கைது செய்யப்பட்டார். குற்றம்சாற்றப்பட்டவர்களிடையே நடைபெற்ற தொலை பேசி உரையாடல்களை தெற்கு டில்லி-யில் உள்ள தரகரின் வீட்டுத் தொலைபேசியை புலனாய்புத் துறையினர் ஒட்டுக் கேட்டதன் மூலம் ஜே.பி.சிங்கும், கன்வல்ஜித்சிங்கும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நால்வரையும் 13 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மே 1 ஆம் தேதியன்று டில்லி நீதிமன்றம் உத்தர-விட்டது. மே 3 ஆம் தேதி தேசாயின் ஜாமீன் மனுவை அந்நீதிமன்றம் நிராகரித்தது. தேசாயின் ஜாமீன் மனுவைப் பற்றி கேள்வி கேட்ட டில்லி உயர்நீதிமன்றம் அது பற்றி மத்தியப் புலனாய்வுத் துறை தனது பதிலை அளிக்கும்படி உத்தரவிட்டது. அகமதாபாத் அரசினர் பி.ஜே.மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகத் துறைத் தலைவராக இருந்த பதவியில் இருந்து குஜராத் அரசு தேசாயைப் பணிநீக்கம் செய்தது.

தேசாய் மீது 2001-லேயே டில்லி உயர்நீதிமன்றத்தில்
லஞ்ச ஊழல் வழக்கு நடந்தது

தேசாயின் லஞ்ச விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்திருப்பது இதுவே முதன் முறையல்ல. இந்திய மருத்துவக் கவுன்சிலில் அதிக அளவு லஞ்சம் நிலவுகிறது என்று 2001 நவம்பர் 23 அன்று டில்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அப்போது கவுன்சிலின் தலைவராக இருந்த தேசாயின்மீது குற்றவியல் வழக்குத் தொடர போதிய ஆதாரங்கள் இருப்ப-தாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த உயர்நீதிமன்றம் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டது. இதுபோன்ற-தொரு நபர் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் போன்ற பெரிய பொதுப் பதவியில் இருப்பதற்கு தகுதி படைத்தவர் அல்ல என்று நீதிபதிகள் அருண் குமாரும், ஆர்.சி. சோப்-ராவும் கூறியுள்ளனர். வெளிச்சத்திற்கு வந்துள்ள குற்றச்-சாற்றுகளின் அடிப்படையில் குற்றவியல் வழக்கு தொடுக்க மத்தியப் புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனிஅதிகாரம் கொண்ட தனது பதவியைத் தவறாகப் தேசாய் பயன்படுத்தியதை உறுதிபட நிலைநாட்டியதுடன், இந்திய மருத்துவக் கவுன்சில் செயல்படும் முறையையும் நுணுகி பரிசீலித்த உயர்நீதிமன்றம் பல செய்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. கவுன்சிலின் தலைவரும் துணைத் தலைவரும் உறுப்பினர்களாக உள்ள நிருவாகக் குழுவின் 1998,1999 மற்றும் 2000 ஆண்டுகளுக்கான கூட்ட நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்த நீதிமன்றம், மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குதல் போன்ற விஷயங்களை கவுன்சிலின் தலைவரின் முழுமையான அதிகாரத்துக்கு விட்டுவிடுவது என்ற தீர்மானங்களே இந்த நிருவாகக் குழுக் கூட்டத்தின் நடவடிக்கைகளில் நிறைந்துள்ளன என்று கூறியுள்ளது. மிகக் குறுகிய ஒரு காலத்திற்குள் 40 முதல் 50 வழக்குகள் வரை கையாளப்பட்டுள்ளன. கவுன்சிலின் அனைத்துச் செயல்பாடுகளும் தலைவரின் கட்டுப்பாட்டில், நிருவாகத்தில் இருந்துள்ளன என்பதையே இந்தத் தீர்-மானங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கவுன்சிலின் விவகாரங்கள் அனைத்தையும் தனது முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் வண்ணம் கவுன்சிலின் விவகாரங்களை தலைவர் வழி-நடத்திச் சென்றுள்ளார். அவரது செயல்களை நியாயப்-படுத்தவே நிருவாகக் குழு பயன்படுத்தப்பட்டுள்ளது. தலை-வரோ தவறான முறைகளில் தனக்குப் பொருள் ஆதாயம் கிடைக்குமாறு செய்து கொண்டார். இதில் மத்திய அரசாங்-கத்தின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது.

மருத்துவக் கல்லூரி தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்வு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

1956 இந்தியன் மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் 10ஏ பிரிவின்படி ஒரு புதிய மருத்துவக் கல்லூரியோ, ஒரு புதிய மருத்துவப் பாடமோ துவங்க கவுன்சிலின் அனுமதி தேவை. மருத்துவ பாடத்திலோ அல்லது பயிற்சியிலோ மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயர்வுக்கு அரசின் அனுமதி சட்டப்படி தேவை என்பதை இந்தப் பிரிவு கூறுகிறது. கல்லூரி தனது விண்ணப்பத்தை அரசுக்கு அளிக்கிறது; அந்த விண்ணப்பத்தை அரசின் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் பரிசீலனை செய்து, பரிந்துரைக்க அரசு அதனை மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்புகிறது. தனது பரிந்துரைகளை அளிக்கும் முன் தணிக்கையாளர் குழு ஒன்றை கல்லூரியைப் பார்வையிட்டு தகவல்களை நேரடியாகப் பெற கவுன்சில் அனுப்பி வைக்கிறது. இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கவுன்சிலின் பரிந்துரைகள் இருக்கும் என்பதால், தணிக்கையாளர்களின் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நடைமுறையில் சுதந்திரமான எந்த வித தணிக்கையோ சரிபார்த்தலோ இடம் பெற்றிருக்கவில்லை. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு இடத்திற்கும் 25 லட்ச ரூபாய் நிருவாகத்திற்கு கிடைக்கிறது என்பதால், நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு மேலான எண்ணிக்கை கொண்ட இடங்களை அனுமதிப்-பதற்கு லஞ்சம் போன்ற காரணங்கள் இருக்கக் கூடும். அயல்-நாட்டில் வாழும் இந்தியருக்கான ஒதுக்கீடு என்றால், இன்னும் கூடுதலான பணம் கிடைக்கும். படியாலா கல்லூரி வழக்கிலிருந்து அங்கீகாரத்திற்கான இது போன்ற லஞ்சம் பல கோடிக் கணக்கில் இருக்கக்கூடும் என்பது நமக்கு தெரிய வருகிறது. கல்லூரிகளுக்குச் செல்லும் தணிக்கை-யாளர் குழுவில் யார் யாரை அனுப்புவது என்பதை முடிவு செய்வது தேசாயின் கையில் இருப்பதால், தனது கட்டளைக்கு ஏற்ப, அக்கல்லூரியில் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்திக்-காட்டவோ, அல்லது மறைத்துக் காட்டவோ கூடிய அறிக்கைகளை தணிக்கைக் குழுவிடமிருந்து பெறுவதற்கு தேசாயால் இயலும்.

சில கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்டுள்ளதை தேசிய மருத்துவக் கவுன்சிலும் தேசாயும் மறுக்கவில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அது போலவே, தணிக்கை களைத் தொடர்ந்து அங்கீகாரம் அளிப்-பதற்கான மறு தணிக்கைகளும் நடந்துள்ளன. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் வாங்கப்படுகிறது என்று நன்கு அறியப்பட்ட உண்மையி-லிருந்து, இந்த நடைமுறையைக் கட்டுப்படுத்துபவர்கள் பெரும் அளவிலான பணத்தை லஞ்சமாகப் பெறுகின்றனர் என்பது மெய்ப்பிக்கப் படுகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதில் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது என்னவென்றால், சட்டதிட்டங்களிலேயே இல்லாத தீடீர் தணிக்கைகள் நடைபெற்றுள்ளன என்பதுதான் என்று தேசிய தேர்வுக் கழகத்தின் முன்னால் துணைத் தலைவரும், மேகாலயா மார்டின் லூதர்கிங் பல்கலைக் கழகத்தின் தற்போதைய வேந்தருமான கே.எம். சியாம் பிரசாத் கூறுகிறார். மருத்துவத் துறைப் பின்னணி இல்லாத மேஜர் ஜெனரல் எஸ்.பி.ஜிங்கான் என்ற ஒருவரை, இந்திய மருத்துவக் கவுன்-சிலின் தலைவரின் பணிகள் அனைத்தையும் ஆற்றவும், அதன் நிருவாகக் குழுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தவும் டில்லி உயர் நீதிமன்றம் நியமித்தது. ஆலோசனை தேவைப்படும் போது மருத்துவத் தொழிலில் உள்ள ஒருவருடன் இணைந்து செயல் படவும் அவருக்கு நீதிமன்றம் அதிகாரம் அளித்தது. தேசாய் மீதான வழக்கை உச்சநீதிமன்றம் நீர்த்துப்போகச் செய்தது

ஆனால், இந்த தீர்ப்பினை எதிர்த்து தேசிய மருத்துவ கவுன்சில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தேசா-யால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிருவாகக் குழு ஜிங்காலைச் செயல்பட அனுமதிக்கவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கவுன்சிலின் செயல்பாடுகளை நேர்மையானவையாகவும், எவரும் எளிதில் காணத் தக்க-வையாகவும் ஆக்க ஜிங்கால் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வந்துள்ளன. இறுதியில் உச்சநீதிமன்றத்தில் அவர் மீது இட்டுக் கட்டி உரைக்கப்பட்ட குற்றச்சாற்றுகளுக்குப் பின் அவர் பதவி விலகவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார். தேசிய மருத்துவக் கவுன்சி-லின் துணைத் தலைவர் கேசவன் குட்டியை ஜிங்கானிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகளைக் கண்காணிக்க நான்கு மருத்துவர்கள் கொண்ட ஒரு அட்ஹாக் குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்தது.

உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட பருவ அறிக்கைகளில் இந்தக் குழு தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகளுக்கு நற்சான்று அளித்து வந்தது. தற்போது வெளிப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் அனைத்துத் தவறுகளையும் பொதுமக்கள் மற்றும் நீதிமன்றப் பார்வையில் இருந்து இந்தக்குழு பாதுகாத்திருக்கிறது என்று சியாம்பிரசாத் சுட்டிக்காட்டுகிறார். தேசிய மருத்துவக் கழகத்தில் லஞ்ச ஊழல் நிலவுகிறது என்பது: நன்கு அறியப்-பட்ட ஒரு செய்தி என்றாலும், அதன் செயல்பாடுகளில் இந்தக் குழு எந்த முறை கேட்டையோ, தவறையோ காணவில்லை. இதற்காக இந்தக் குழு சரியான விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும். இக் குழுவின் இத்தகைய நடவடிக்கை, தேசிய மருத்துவக் கவுன்சிலில் மறுபடியும் காலடி எடுத்து வைத்து, கடந்த ஆண்டு மறுபடியும் அதன் தலைவராக வருவதற்கு தேசாயை அனுமதித்துள்ளது.

இடைப்பட்ட ஏழாண்டு காலமும் கவுன்சிலின் செயல்பாடுகளை தேசாய்தான் தீர்மானித்தார் இந்த ஏழு ஆண்டு இடைக் காலத்திலும் கூட, தனது பினாமி மூலம் தேசாய் தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்-பாடுகளை வழி நடத்திக் கொண்டிருந்தார். கல்லூரி தணிக்கை-கள் குறித்த ஆவணங்கள், மாற்றி அமைக்கப்பட்ட தணிக்கை அறிக்கைகள், அங்கீகாரம் கேட்ட கல்லூரிகள் தேசாய்க்கு அனுப்பிய கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களும், நிருவாகக் குழு தேசாய்க்கு அனுப்பிய ஈ-மெயில் கடிதங்களும், இந்த இடைக் காலத்திலும் தேசாய்தான் தேசிய மருத்துவக் கவுன்-சிலினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதற்கான ஆதா-ரங்களாக விளங்குகின்றன. இந்த இடைக்காலத்தில் பாடத்-திட்ட மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும் ஆக்கப்பட்-டுள்ளார். அவரை ஏதோ ஒரு பதவியில் தேசிய மருத்துவக் கவுன்சிலில் நியமிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பணி உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தேசாய் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை உறுதிப் படுத்துவதற்கு, 2000 ஆம் ஆண்டு ஜூலை 18 மற்றும் 20 தேதி-களில் தேசாயின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை முடிவு பற்றி நீதிமன்றத்-திற்கு மனுதாரர் ஹரீஷ் பல்லா அளித்த ஆவண நகல்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. டில்லியில் உள்ள ஒரு வியாபார நிறுவனத்திடமிருந்து தேசாயும் அவரது குடும்-பத்தினரும் 65 லட்ச ரூபாய் பரிசு என்ற பெயரில் பெற்றிருந்-தனர் என்பதை இந்த சோதனை வெளிப்படுத்தியிருந்தது. தவறான வழியில் லஞ்சமாகப் பெற்ற கணக்கில் வராத பணத்தை முறைப்படுத்தி கணக்கில் கொண்டு வருவதற்காக இவ்வாறு பரிசு பெறப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. பிம்ப்ரி டி.ஒய்.படீல் மருத்துவக் கல்லூரி மற்றும் காஜியாபாத் சந்தோஷ் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் தணிக்கை அறிக்கைகளில் காணப்பட்ட கடுமையான முறைகேடுகள் இருப்பதைக் கவனித்த உயர்நீதிமன்றம், இந்த நிறுவனங்களுக்கு ஆதரவு காட்ட அளிக்கப்பட்ட லஞ்சப் பணம்தான் இது என்று மனுதாரர் கூறுவதை நம்புவதற்குப் போதிய காரணம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டது.

மத்திய புலனாய்வுத் துறை முழுமையான விசாரணையை நடத்தவில்லை

இத்தகைய கடுமையான கண்டனங்களுக்குப் பிறகும், மத்தியப் புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை முறைப்படி இறுதிவரை விசாரணை செய்யாமல் போனதால், தேசாய் எந்த வித தண்டனையும் இன்றி இந்த வழக்கிலிருந்து சுலபமாக விடுவித்துக் கொண்டார். வருமான வரித்துறையினர் சுட்டிக்-காட்டிய முக்கியமான ஒரு சான்று என்னவென்றால், மேற்படி இருவரும் பரிசு கொடுத்ததாகக் கூறப்படும் தேதிகளை அடுத்து வந்தசில நாள்களில் இந்தப் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்-பட்டுள்ளது என்பதாகும். இந்தப் பணங்கள் எப்படி வந்தது என்பது பற்றி விசாரணை செய்யாமல், தேசாயின் வருமானவரி அறிக்கையில் இந்த பணங்கள் காட்டப்பட்டுள்ளன என்பதால், இந்த பிரச்சினையை அப்படியே முடித்துவிட்டனர். தேசிய மருத்துவ கவுன்சில் தணிக்கை செய்த கல்லூரிகள் லஞ்சம் கொடுத்-தனவா என்ற விவகாரத்தைப் பற்றியும் அவர்கள் விசாரணை செய்யவில்லை.

தேசாய் மீதான வழக்கே முடித்துக் கொள்ளப்பட்டது

இந்தப் பணப்பரிமாற்றங்கள் எல்லாம் நன்கொடையாளர் நல்ல எண்ணத்தில் தேசாய்க்கு வீட்டு வசதிக்காகக் கொடுத்த பணம்தான் என்று கூறி, பணத்தைப் பரிசாகக் கொடுத்த நன்கொடையாளர்களுக்கு தேசாய் எந்த வித சலுகையையாவது காட்டினார் என்று காட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால், மத்தியப் புலனாய்வுத் துறை இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் அக்டோர் 2003 இல் பதிவு செய்துள்ளது. மத்தியப் புலனாய்வு நீதிமன்றம் ஆரம்பத்தில் மத்திய புலனாய்வுத் துறையின் இந்த கருத்தை நிராகரித்திருந்த போதும், வேறொரு நீதிபதி அக்டோபர் 2005 இல் வழக்கின் தகுதிகள் பற்றி விரிவாகப் பரிசீலிக்காமல், வழக்கை முடிக்கும் மத்தியப் புலனாய்வுத் துறையினரின் கருத்தை ஏற்றுக் கொண்டார்.

வழக்கை முடிப்பதற்கு அரசோ, மனுதாரரோ ஆட்சேபணை தெரிவிக்கவில்லை

தேசிய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக தேசாய் நியமிக்கப் பட்டதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்த மருத்துவர் ஹரீஷ் பல்லா இந்த வழக்கை முடிக்கும் அறிக்கை பற்றி எந்த ஆட்சேபணையும் தெரிவிக்க-வில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது கவனிக்-கத்தக்கது. எந்த அளவுக்குத் தனது செல்வாக்கைப் பயன்படுத்த தேசாயால் இயலும் என்பதையே இது காட்டுகிறது. இந்த வழக்கை முழுமையாக விசாரிக்காத அளவுக்கு மத்தியப் புல-னாய்வுத் துறைக்கு அழுத்தம் கொடுக்க அவரால் முடிந்திருக்-கிறது. இந்த வழக்கை முடித்துக் கொள்ளும் அறிக்கையை ஆட்சேபிக்காமல், மனுதாரர் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளச் செய்யவும் தேசாயால் இயன்றுள்ளது. இந்த மனுவின் வாதிகளில் ஒருவராக அரசும் தேசாய் மீதான இந்த வழக்கை முடிப்பதை எதிர்க்கவே இல்லை. மத்தியப் புலனாய்வுத் துறை தனது விசாரணையை முடித்துக் கொண்ட பிறகு, இந்த வழக்கை முழுமையாக முடிக்க டில்லி உயர்நீதிமன்றத்துக்கு மேலும் சில ஆண்டுகள் பிடித்தன. இதில் ஏற்பட்ட பெரும் கேடு என்னவென்றால், பெஞ்சில் ஏற்பட்ட மாற்றத்தின் ஆதர-வால், இறுதித் தீர்ப்பில் அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் தேசாய் விடுவிக்கப்பட்டார் என்பதுதான்.

தேசாய் மறுபடியும் மருத்துவ கவுன்சில் உறுப்பினரானார்

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தேசிய மருத்துவக் கவுன்சிலின் திறமையான செயல்பாட்டுக்கு முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அமைப்பு தேவை என்பதால், தேர்தலை நடத்த அனுமதிக்கும்படி உச்சநீதிமன்ற அமிகஸ் குரியாவுக்கு தற்காலிக நிருவாகக் கமிட்டியின் உறுப்பினர்கள் நால்வரும், ஒரே மாதிரியான கடிதங்களைத் தனித்தனியே எழுதினர். இறுதியாக 2009 பிப்ரவரி 5 அன்று இந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் தேசிய மருத்துவக் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்த அனுமதி அளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்க்கும் வேறு எந்த மனுதாரரும் இல்லை என்பது ஒரு பேரிழப்பாகும். 2001 தீர்ப்பின் படி மருத்துவக் கவுன்சிலில் தேசாயின் உறுப்பினர் தகுதி திரும்பப் பெறப்பட்டது. மத்தியப் புலனாய்வுத் துறை வழக்கை முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து கவுன்சிலில் தனது உறுப்பினர் பதவிக்கு அனுமதி அளிக்கும்படி தேசாய் உச்சநீதிமன்றத்தை அணுகினார். தேசாய் மீது வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்தை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மருத்துவக் கவுன்சிலில் தேசாயை உறுப்பினராக அறிவிக்கும்படி 2008 ஆம் ஆண்டின் துவக்கத்தில் மத்திய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சக பிரதிநிதி ஒரு தவறான அறிவிக்கையை நீதிமன்றத்தில் அளித்து உண்மை-களைத் தவறாக எடுத்துக் கூறினார். 2005 டிசம்பர் 12 அன்று மத்தியப் புலனாய்வுத் துறை நீதிமன்ற தனி நீதிபதி வழக்கை முடித்துக் கொள்ளும் அறிக்கையை ஏற்றுக் கொண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு ஒன்று இன்னமும் நிலுவையில் இருந்தது. தேசாயை மருத்துவக் கவுன்சிலின் உறுப்பினராக அறிவிக்க அரசுக்கு உத்தரவு பிறப்-பித்ததற்குப் பின்னர்தான், மார்ச் 2008 இல் டில்லி உயர் நீதி-மன்றம் இந்த மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது. உயர்-நீதிமன்ற கணினி தளத்தில் இந்த குறிப்பிட்ட உத்தரவு இப்போது காணப்படவில்லை என்பது ஆர்வம் அளிக்கும் ஒரு செய்தியாகும்.

தேசாய் மறுபடியும் கவுன்சில் தலைவரானார்

தேசிய மருத்துவக் கவுன்சிலுக்குத் தேர்தல்கள் நடத்த அனுமதி அளித்த உச்சநீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து,2009 மார்ச் 1 அன்று கவுன்சிலின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு கவுன்சில் தேர்தலை நடத்தியது. போட்டியின்றி தேசாய் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை கேசவன்குட்டி நாயரின் மனைவியும், திருவனந்தபுரம் டாக்டர் சோமர்வேல் நினைவு சிஎஸ்அய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவனையின் மருத்துவருமான ராணி பாஸ்கரன் மற்றும் நாக்பூர் டட்டா மேகே மருத்துவ அறிவியல் நிறுவன மருத்து-வரான வேதபிரகாஷ் மிஸ்ராவும் முன்மொழிந்ததில் வியப்-பேதுமில்லை. மிஸ்ரா முன்பு முதுகலைப் பட்ட கமிட்டியின் தலைவராகவும் அதன் பின் நிதிக் கமிட்டியின் தலைவராகவும் இருந்தவர். இவர் மறுபடியும் தேசிய மருத்துவக் கழகத்தின் உறுப்பினராக அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த முறை நாக்பூர் பல்கலைக் கழகத்தின் மூலம் இவர் நியமனம் பெறவில்லை; இம்முறை மத்திய சுகாதார மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தினால் அரசு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

கவுன்சிலின் தற்காலிக தலைவர் ஏழு ஆண்டுகள் பதவி வகிக்க அனுமதிக்கப்பட்டதேன்?

இதில் ஆர்வம் தரும் செய்தி என்னவென்றால், நீதிமன்றமும் அரசும் தேசிய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் பதவிக் காலத்தை விட அதிக காலமான ஏழு ஆண்டு காலம்வரை தற்காலிகத் தலைவராக கேசவன்குட்டி நாயரைச் செயல்பட அனுமதித்ததுதான். தலைவராக வருவதற்கு மருத்துவத் தொழிலில் வேறு எவர் ஒருவருமே தகுதி பெற்றிருக்கவில்லை என்பது போலவும், தேசாய் திரும்ப வருவதை எல்லோரும் எதிர்பார்த்து இருந்தது போலவும் இருந்தது இச் செயல்பாடுகள். தேசிய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் பதவியில் தேசாய் 20 ஆண்டு காலம் இருந்து ஒரு சாதனை படைத்துவிட்டார்.

ஆலோசனை அமைப்பான மருத்துவக் கவுன்சில் அதிகார அமைப்பாக ஆனது எப்படி?

மதிப்பிற்குரிய நீதிமன்றங்களும், மருத்துவத் தொழிலில் உள்ள சம்பந்தப்பட்டவர்களும் மேற்கொண்டதை விட மிகப் பெரிய அளவில் தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்-பாடுகளைப் பற்றிய முழுமையான ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அதன் கட்டமைப்பு முற்றிலுமாக மாற்றி அமைக்கப் படவேண்டும். 1933 இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் கீழ் 1934 இல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. இந்த சட்டம் போதுமானதாக இல்லை என்பதால், 1956 இல் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் புதிதாக இயற்றப்-பட்டது. மருத்துவராகப் பதிவு செய்து கொள்வதற்கான தகுதிகள் பற்றிய விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனை கூறும் ஓர் அமைப்பாகவே அது உருவாக்கப்பட்டது. ஆண்டு-கள் செல்லச் செல்ல, சட்டத்தில் வரையறைக்கு அப்பாற்-பட்ட பல அதிகாரங்களை இந்த கவுன்சில் தானா-கவே கைப்பற்றிக் கொண்டது. சட்டத்திற்கு திருத்தங்கள் கொண்டு வந்ததன் மூலமும், அரசின் பின்னேற்பு தேவைப்படும் சட்டதிட்டங்களை உருவாக்கியதன் மூலமும் இது சாத்தியமாயிற்று.

முதுகலை மருத்துவப் படிப்பு பற்றிய சட்டதிட்டங்கள் இயற்றப் படுவதற்கு எதிராக சட்டத்தின் பிரிவு 19கி இருந்த போதிலும், 2000 ஆம் ஆண்டில் முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பு சட்ட திட்டங்கள் இயற்றப்பட்டன. இன்று முதுகலை மருத்துவ பட்டப் படிப்பில்தான் அதிக அளவு பணம் விளையாடிக் கொண்டு இருக்கிறது. ஓர் இடத்திற்கு 76 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. சில வழக்குகளில் மருத்துவக் கவுன்சிலின் அதிகாரங்களைப் பலப்படுத்திக் கொள்ள நீதிமன்றத் தீர்ப்புகளும் பெறப்பட்டுள்ளன. தேசிய மருத்துவக் கவுன்சிலை நீதிமன்றத்தில் எதிர்க்க இயன்ற ஒரே அமைப்பு அரசு மட்டுமே. ஆனால் பல வழக்குகளிலும், 2001 இல் இருந்தது போலவே, கவுன்சிலை அரசு எதிர்க்காமல் இருந்தது அல்லது தெரிவித்த எதிர்ப்பும் பலமுள்ளதாக இல்லை.

மிகவும் தீங்கு பயக்கும் திருத்தம் ஒன்று 1993 இல் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் 10கி என்ற புதிய பிரிவு அறிமுகப் படுத்தப்பட்டது. புதிய மருத்துவக் கல்லூரி துவங்குவது மற்றும் புதிய மருத்துவ பாடங்களை அறிமுகப்-படுத்துவதற்கு அனுமதி வழங்குவது பற்றிய பிரிவாகும் இது. இந்தத் திருத்தத்தின் மூலம், ஒரு மருத்துவக் கல்-லூரியை புதிதாக அமைப்பது அல்லது புதிய பாடத்தை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றின் அனைத்து நடை-முறைகளின் மீது முழுமையாக கட்டுப்பாட்டை மருத்துவக் கவுன்சில் ஏற்படுத்திக் கொண்டது. அதுவரை இந்த நடை-முறையை செயல்படுத்துவதில் மாநில அரசுகள் பங்காற்றி வந்திருந்தன. இந்த புதிய திருத்தத்திற்குப் பின்னர் இந்த நடைமுறையில் ஒரு மாநில அரசின் பங்கு ஆட்சேபணை இல்லை என்ற ஒரு சான்றிதழை அளிப்பதுடன் முடிந்து போகிறது. பாடதிட்டம், ஆசிரியர் தகுதி நிர்ணயம், நியமனம், மருத்துவக் கல்லூரிகளைத் தணிக்கை செய்யும் அதிகாரம் போன்ற பல பிரச்சினைகளில் இந்தத் திருத்தத்தின் அடிப்-படையில் தொடர்ந்த பல சட்டதிட்டங்கள் உருவாக்கப்-பட்டன.

பணபலமே மருத்துவக் கல்வி நடைமுறையில் மய்யமாக ஆகிவிட்டது

இதன் விளைவாக, தலைவர் மற்றும் பொறுப்பாளர்களின் நேர்மையே கேள்விக்குறியாக இருக்கும் ஓர் அமைப்-பினால், அவர்களின் சுயநலத்துக்காக தவறாக உருவாக்-கப்பட்ட ஒரு நடைமுறை கொண்ட மருத்துவக் கல்வியை இன்று நாம் பெற்றிருக்கிறோம். மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் தேவைக்கு ஏற்ற அளவு எண்-ணிக்கையிலான இடங்கள் இல்லாத நிலையில், மருத்துவக் கல்வியை ஒரு வியாபாரமாக ஆக்கி லாபம் ஈட்டும் முயற்சி-யில் தவறான நடத்தைப் பின்னணி கொண்ட தனிப்பட்ட-வர்கள் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கத் தொடங்கியதால், பணபலமே இந்த மருத்துவக் கல்வி நடைமுறையின் மய்யமாக ஆகிவிட்டது. ஒவ்வொரு தடை-யைக் கடக்கவும், புகழ்பெற்ற நிறுவனங்களை சீரழிக்கவும் அனைத்து நிலைகளிலும் பணம் பயன்படுத்தப் பட்டதால், லஞ்ச லாவண்யம் தேசிய மருத்துவக் கவுன்சிலில் ஊடுருவி நீக்கமற நிலைபெற்றது.

பல மாநில மருத்துவக் கவுன்சில்களில் பதிவு செய்துள்ள 6,33,108 மருத்துவர்கள் இன்று நமது நாட்டில் பரவியுள்ளனர். பெரும் அளவிலான பொருளாதார-_சுகாதார தேசிய ஆணை-யம் 2004 இல் அளித்த தனது அறிக்கையில், நன்கு நிர்வகிக்கப்படாத மாநிலங்களில் 1000 மக்களுக்கு எத்தனை மருத்துவர்கள் இருக்கிறார்களோ, அதனைப் போன்ற மூன்று மடங்கு மருத்தவர்கள் நன்கு நிருவகிக்கப்படும் மாநிலங்களில் இருப்பதாகக் கூறியுள்ளது. 1000 மக்களுக்கு 2.25 மருத்-துவர்கள் இருக்கவேண்டும் என்ற தேசிய அளவு-கோலுக்-கும் குறைவான அளவு மருத்துவர்கள் அசாம், பிகார், ஜார்-கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், அரியானா, மகாராஷ்ரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்-ளனர். மருத்துவக் கல்லூரிகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று பார்த்தாலும், மருத்துவ வசதிகள் மக்களுக்கு அதிக அளவில் மறுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மருத்துவக் கல்-லூரிகள் அதிக அளவில் இல்லை. இந்தியா முழுமையிலும் உள்ள மருத்துவக் கல்வி மாணவர் இடங்களில் 70 விழுக்-காடு இடங்கள் தென் இந்தியாவின் அய்ந்து மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே உள்ளன. அதனால் அதிக அளவு பணம் சம்பாதிப்பதும் இங்கேயே நடக்கிறது. மருத்துவக் கல்வி பற்றி மத்திய அரசுக்கு அறிவுரை வழங்-குவதற்கு எவரும் இல்லாத வெற்றிடத்தில் நுழைந்த தேசிய மருத்துவக் கவுன்சில் இதுபற்றி எடுத்துக் கூறி, அதனை சரி செய்வதற்கான யோசனைகளை அரசுக்கு அளிக்கத் தவறி விட்டது. தேசிய மருத்துவக் கவுன்சில் செயல்பட்டு-வரும் முறையினால் குடிமக்களின் நலன்களுக்காக பெரும் அளவிலான விலை கொடுக்க வேண்டி நேர்ந்துள்ளது என்று ஒரு மூத்த அரசு அதிகாரி கூறினார்.

தேசாய் கைது செய்யப்பட்ட பின், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பி.ராஜிவ் மே 4 அன்று மாநிலங்களவையில் தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகளில் காணப்-படும் முறைகேடுகள் பற்றி விவாதிக்க ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

(தொடரும்)

நன்றி: ஃப்ரன்ட் லைன், ஜூன் 4
தமிழில்: த.க. பாலகிருட்டிணன் "விடுதலை” 20-6-2010


குற்றவாளிக் கூண்டில் மருத்துவர் கேதன் தேசாய்

- ராமச்சந்திரன் -

தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாட்டில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அமைச்சர் குலாம் நபி ஆசாத் பதிலளித்தார். கவுன்சிலின் செயல்பாடு-களில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் அளித்துக் கொள்ளும் நோக்கத்துடன்தான் அரசு தேசிய மருத்துவக் கவுன்சில் திருத்த சட்ட(2005)த்தை அறிமுகப் படுத்தியது.

தேசிய மருத்துவக் கவுன்சில் தலைவர் பதவியை தேசாய் வகிப்பது இப்போது முதல் முடிவுக்கு வருகிறது. தேசிய மருத்துவக் கவுன்சில் அலுவ-லகப் பொறுப்பு வகிக்கும் ஒருவரை தகுதி இழக்கச் செய்வ-தற்கு சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். ஆனால், அதே போல அவரது பதவிக் காலம் முடியும் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்-பாளர் ஒருவரை நீக்குவதற்கு எதிராகவும் சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் 2001 நவம்பர் 23 அன்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு சட்டத்தில் எதுவும் கூறப்-படாமல் (வெற்றிடமாக) உள்ள நிலையில், நீதிமன்றத்தால் தலையிட்டு செயல்பட முடிகிறது என்னும்போது, அரசி-னால் ஏன் அவ்வாறு செய்ய முடியாது?

குறிப்பாக, கவுன்சிலின் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் பதவிக்-காலத்தை வரம்புக்குட்படுத்தவும், தலைவரையோ, துணைத் தலைவரையோ, உறுப்பினரையோ தவறான நடத்தை அல்லது திறமையின்மை காரணங்-களுக்காக பதவிக்காலம் நிறைவடையும் முன்னரேயே நீக்குவதற்கான அதிகாரங்-களை அரசுக்கு அளிக்க வகைசெய்வதே இந்தத் திருத்தங்களின் நோக்கமாகும்.

இந்த மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள்பற்றி அறிவிக்கை கூறுவதாவது:

கவுன்சிலின் செயல்பாட்டை மறுபரி-சீலனை செய்தபின்... பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்ததன் காரணமாக, கொள்கை அளவிலும், பொதுநலன்களின் முக்கியத்துவத்தை உத்தேசித்தும் தேவைப்படும் அளவில், முறையில் கவுன்-சிலுக்கு உத்தரவு இடுவதற்கும், அதனிடம் ஒப்படைக்கப்பட்ட கடமை-களை நிறைவேற்றுவது பற்றி சரியான பதில் அளிக்கும் கடமையை அது சரியாக செய்கிறதா என்பதை உறுதிப்-படுத்திக் கொள்வதற்கும், மத்திய அரசுக்கு அதிகாரம் தேவை என்று உணர்ந்துள்ள காரணத்தால், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், கவுன்சிலின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்-பினர்களை நீக்கவும், நிருவாகக் குழு-வையோ வேறு எந்த ஒரு குழுவையோ கலைக்கவும் அரசு தனக்குத்தானே அதிகாரம் அளித்துக் கொள்ள உத்தேசிக்கப் பட்டுள்ளது. மேலே தடித்த எழுத்துக்களில் குறிப்பிடப் பட்டுள்ளது 2001 நவம்பரில் டில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பற்றி குறிப்பிடுவதாகும்.

சட்டதிருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு எதிர்ப்பு

இந்த சட்டதிருத்தமசோதா 2005-_07 இல் அமர்சிங் தலைமையிலான சுகா-தாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு பரிசீல-னைக்கு அனுப்பப்பட்டது. மசோதாவில் அரசுக்கு அளிக்கப்பட உத்தேசித்திருந்த அனைத்து அதிகாரங்களும் தேவை-யற்றவை என்று நிலைக்குழு பரிந்துரை செய்தது; கவுன்சிலுக்கு ஒரு வரை-யறைக்குட்பட்ட அளவில் அரசு உத்தரவு பிறப்பிக்க அனுமதிக்கலாம் என்ற ஒரு பிரிவு மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கவுன்சிலின் ஜனநாயகச் செயல்பாடு இந்தத் திருத்தங்களால் பாதிக்கப்படும் என்று அவற்றை நிராகரிக்க நிலைக் குழு காரணம் கூறியது.

அண்மையில் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, அமைச்-சர் இந்தப் பிரச்சினையில் மீண்டும் தலையிட்டு நாம் பார்க்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை மதிப்-பிற்குரிய உறுப்பினர்களுக்கு நான் தெரி-வித்துக் கொள்கிறேன் என்று கூறினார். தனது கடமைகளைப் பாராட்டும் வகையில் செய்து முடிப்பதற்கு, கவுன்சில் போன்ற எந்த கட்டுப்பாட்டு அமைப்புக்-கும் சுயஅதிகாரமும், தனித் தன்மையும் தேவை என்ற நிலைக் குழுவின் கண்ணோட்டத்தை மறுப்பதற்கு எந்தக் காரணமும் இருக்க முடியாது. கட்டுப்-பாட்டுடன் தன்னைத் தானே நிருவகித்-துக் கொள்ளும் கவுன்சிலின் ஆற்றலில் வைத்துள்ள நம்பிக்கையைத்தான் 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்-சில் சட்டம் எதிரொலிக்கிறது. நாட்டில் மருத்துவக் கல்வியை நிருவகிக்கும் கட்ட-மைப்புகளின் அனைத்து அம்சங்களையும் மேலும் சீர்திருத்தம் செய்யவேண்டிய தேவை உள்ளது என்பதை அண்மையில் நடந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. விவாதத்தின் போது அமைச்சரின் இக்கருத்தை மற்ற சில உறுப்பினர்களும் ஆதரித்தனர்.

தனது செயல்களுக்கு பதில் சொல்லும் கடமையே தன்னாட்சியை விட முக்கியமானது இப்பிரச்சினையில் தன்னாட்சி என்று கூறப்படுவது முக்கியமானதே அல்ல. தனது செயல்பாடுகளுக்கு பதில் சொல்ல-வேண்டிய கவுன்சிலின் கடமை பற்றியதுதான் முக்கியமான பிரச்சினை-யாகும். இதைச் சரியாகச் சொல்ல வேண்டு-மானால், தன்னாட்சிக்கும் செயல்பாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைக்கும் இடையில் நடக்கும் மோதல் என்று கூறலாம். கவுன்சில் தனது செயல்பாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கோட்-பாடு அரசினால் காற்றில் பறக்கவிடப்-பட்டது. திறமையற்ற முறையிலும், சில நேரங்களில் கவுன்சிலுடன் கூட்டு சேர்ந்தும் அரசு செயல்பட்டிருக்கிறது. சிலரிடமிருந்து, குறிப்பாக தேசிய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்களால் முன் வைக்கப்படும் தன்னாட்சி வாதம் என்னும் புகைத் திரையின் ஊடே அதன் தவறான செயல்பாடுகளைக் காண முடியாமல் நிலைக் குழு இருப்பது பெரிய இழப்புதான். உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மட்டுமே கவுன்சிலை சீர்திருத்திவிடுமா என்பது சிந்தனைக்குரிய ஒரு கேள்வி-தான். கவுன்சில் அலுவலரின் செயல்-பாடு உள்ளிட்ட கவுன்சிலின் எந்த விஷயத்தையும் விசாரிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு இந்தச் சட்டத்தின் 30 ஆவது பிரிவின் கீழ் நியமிக்கப் படலாம். வெளிச்சத்துக்கு வந்துள்ள முறைகேடுகளை சரி செய்யவும், கவுன்சிலை தனது செயல்-களுக்கு பதில் கூறச் செய்வதற்கும் இந்த விதியை அரசு எப்போதாவது பயன்-படுத்தி இருக்கிறதா என்பது தெரிய-வில்லை.

பதிவு செய்த மருத்துவர் பட்டியலே 1993-க்குப் பின்னர் பேணப்படவில்லை நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் பதிவேட்டை 1993_க்குப் பின் பராமரிக்க கவுன்சில் தவறி விட்டது என்று 2005 இல் மதிப்-பீட்டுக் குழு குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

ஆனால் மிக முக்கியமாக, முன்பு சுட்டிக்-காட்டியது போல, கவுன்சிலில் நிலவும் இந்த லஞ்ச லாவண்யத்துக்கு மூல காரணமே புதிய மருத்துவக் கல்லூரிகளை துவக்கவும், புதிய பாடப் பிரிவுகளைத் துவக்கவும் பரிந்துரைக்கும் அதிகாரங்களை கவுன்சிலுக்கு அளிக்கும் 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரிவு 10கி. பற்றிய சட்டதிருத்தம்தான்.

கவுன்சிலுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரங்கள் பறிக்கப்பட-வேண்டும் என்றும், மருத்துவத் தொழிலில் நன்னெறியை உறுதிப்படுத்திக் கொள்ளத் தேவையான ஆலோசனை-களை அரசுக்குத் தெரிவிக்கும் தனது அசல் பணிக்கு கவுன்சில் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்றும் மருத்துவத் தொழிலில் உள்ள பலரும், அரசு அதிகாரிகளும் கூட கூறுகின்றனர். மருத்துவக் கல்வி மற்றும் மனித வளம் பற்றிய விவகாரங்கள் புதிதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை-யில் மனித வளம் பற்றிய தேசிய கவுன்-சிலின் செயல்பாட்டுக்கே விடப்படலாம். கடந்த ஆண்டு தனது நாடாளுமன்ற உரையில் இதற்கு தனது ஒப்புதலை மேதகு குடியரசுத் தலைவர் அளித்-துள்ளார். இந்த மசோதா மிகவும் மோச-மாக வரையப்பட்டிருப்பதே பெரிய இழப்-பாகும்; பல பகுதிகளிலிருந்தும் எழுப்பப்-பட்டுள்ள பிரச்சினைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த மசோதா திருத்தி எழுதப்பட வேண்டும்.

அமைச்சரின் முரண்பட்ட நிலைப்பாடுகள் இந்த விஷயத்தில் அமைச்சரின் அறிக்கைகள் முரண்பாடு கொண்டவை-யாகவே தோன்றுகின்றன. மருத்துவக் கல்வித் துறையில் கவுன்சில் இழந்து-விட்ட பெருமையை மீட்கவேண்டும் என்று ஒரு பக்கம் அவர் விரும்புகிறார்; மற்றொரு பக்கத்தில் சுகாதாரத்துறையில் மனித வளம் பற்றிய தேசிய கவுன்சில் மசோதாவை விரைவில் அவையில் தாக்கல் செய்வதாக உறுதி அளித்து உள்ளார். மருத்துவக் கவுன்சில் பற்றிய அமைச்சரின் இத்-தகைய சந்தேகத்திற்கிடமான நிலை, அண்மையில் ஏற்-பட்ட கருத்து வேறு-பாடிலிருந்தும், உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமப்புற சுகாதாரசேவைக்கான குறுகிய கால மருத்துவப் படிப்பு பற்றிய நீதிமன்ற வழக்கிலிருந்தும் தெரிய வருகிறது. (ஃப்ரண்ட் லை பிப்ரவரி 26 மற்றும் ஏப்ரல்9).

தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்-துக்கான சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளைப் பின்பற்றுவதற்கு மாறாக, தேசிய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த மூன்றரை ஆண்டு கிராமப்புற மருத்-துவ_அறுவைசிகிச்சைப் படிப்பை அமைச்சர் ஆதரித்துள்ளார்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்-கும்போது, நன்னெறி உள்ளிட்ட மருத்-துவத் தொழில் பற்றிய அம்சங்களைப் பற்றி ஆலோசனை அளிக்கும் அமைப்பு என்ற அள-விலேயே தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயல்-பாடுகளைக் வரையறைப்படுத்துவதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்திற்கு ஒரு புதிய திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்-படவேண்டியது இன்றியமையாதது.

ஆறு லட்சம் மருத்துவர்கள் கவுன்சிலின் பொறுப்பாளர்களை நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும் நாட்டில் சேவையாற்றும் ஆறு லட்சம் மருத்துவர்களை பாதிக்கும் முடிவுகளைச் மேற்கொள்ளும் பணியை தங்-களுக்குள்ளாகவே ஏற்பாடு செய்து கொண்டு தேர்ந்-தெடுத்-துக் கொண்ட ஒரு சில உறுப்பினர்களிடம் ஒப்படைக்கும் ஒரு நடைமுறையை நிருணயித்துள்ள சட்டம் உடன-டி-யாகத் திருத்தப்பட-வேண்டும்.. இதற்கான தேர்தலில் மருத்-துவராகப் பதிவு செய்திருக்கும் ஒவ்-வொரு மருத்து-வருக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கவேண்டும்.

இந்த கணினி யுகத்தில், ஆறு லட்சம் உறுப்பினர்களில் ஒவ்வொருவரும், மின்னணு இயந்திரம் மூலம் வாக்களித்து தங்களின் செயல்களைக் கண்காணிக்கும் அமைப்புக்கு சரியான ஒரு தலைவரைத் தேர்ந்து எடுப்பது என்பது மிகவும் எளி-தானதே என்று அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். புதிதாக அறிமுகப்-படுத்தப்பட உள்ள தேசிய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்த மசோதாவிலும் இதற்கான பிரிவு சேர்க்கப்படவேண்டும்.

(நன்றி: ஃப்ரன்ட் லைன், ஜூன் 4
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்).”விடுதலை” 21-6-2010

0 comments: