Search This Blog

25.6.10

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிந்தனை - 3


சென்னை மாகாண 3 ஆவது தமிழர் மகாநாடு திறப்பு விழா பேருரை
கா.சுப்பிரமணிய பிள்ளை விளக்கம்

நேற்றையத் தொடர்ச்சி...

பண்டைத் தமிழர்கள் வாழ்க்கை சிறப்பும் ஆடல் பாடல் கூடல் வனப்பும் இன்பம் வீரம் முதல் எண்வகைச் சுவையும் நாடக மேடையிலும், பேசும்-படச்சாலைகளிலும் பொங்கி ததும்பிப் பூரணமாதல் வேண்டும். ஓவியமும் சிற்பமும் ஒன்டமிழ் முறையில் அமை-தல் வேண்டும். அவற்றை விளக்கும் நூல்கள் தமிழின் கண்ணே மிகுதல் வேண்டும் . தமிழ் கல்லாத தமிழரும் தமிழ் நூலில்லா வீடும் தமிழகத்திருத்-தல் கூடாது. சுருங்கக் கூறின் தமிழ் தமிழ் என்ற முழக்கம் நாடெங்கும் செழித்தல் வேண்டும்.

மொழிப்பற்றில்லாதார் அதிகாரிகளாதல் கூடாது

தமிழ்மொழி பேணாத் தகுதியில்-லார்க்கு அரசியல் அதிகாரம் கிட்-டிடுதலாகாது. பல்கலைக்கழகங்களிலும் அவர்களுக்கு ஆதிக்கம் இருத்தல் கூடாது. எவ்வகைப் பொது நிலை-யங்-களிலும் அவர்களுக்கு மதிப்பு ஏற்-படுதல் கூடாது. இது பாமரர் மனத்-திலும் பண்டிதர் உள்ளத்திலும் பசு-மரத்தாணிபோற் பதிதல் வேண்டும். தாய் மொழிப் பகைவர்க்கு உரிமைச்சீட்டு உதவி உயர்வு கொடுத்தல் தமிழன்-னைக்கு செய்யும் நன்றியில் பெருங் கேடாகும். தமிழ் நலம் நாடும் தமக்-கென வாழா பிறர்க்குரியாளர்க்கே மதிப்பும் மாண்பும் அரசியலாற்றலும் கல்லுரித் தலைமையும் திண்ணமாக அமைதல் வேண்டும். தமிழ்ப் பொதுமக்கள் கண்ணுங் கருத்துமாகத் தமிழ்த் தொண்டர்க்கே எவ்வகை உரிமைச் சீட்டையும் உதவுதல் வேண்-டும். அங்ஙனம் உதவத் தவறுதல் மன்-னிக்காத பெருங் குற்றமாகும். இக்-கருத்தினை தமிழர் என்பார் யாவருள்-ளத்தும் நிலைபெற்றுப் பயனுறச் செய்தல் தமிழர் மகாநாட்டின் தலைக்-கடமையாகும்.

தமிழ்ப் பெரியார்கள் திருநாள்

தமிழுக்குழைத்து உயிரை அளித்த தமிழ்ப் பெரியார் திருநாள் எங்கும் கொண்டாடப்படுதல் வேண்டும். தமிழர் வீடுதோறும் தமிழ்ப் பெரியார் திரு-வுருவப்படங்கள் திகழ்தல் வேண்டும். அவர் திருநாள் கொண்டாடாது பிற-நாட்டு தலைவர் திருநாள் மாத்திரமே கொண்டாடுதல் தமிழரின் உணர்ச்சி-யின்-மையைக் காட்டும் இழிச் செயலாகும். எந்நாட்டுப் பெரியாரினும் நம்நாட்டுப் பெரியார் கழிபெருஞ்-சிறப்புடையாரென்பதைக் கருதுதல் வேண்டும். அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், திருமூலர், நாயன்-மார்கள், ஆழ்வார்கள், சங்கப்புலவர்கள், பிற்கால பெரும்புலவர்கள், அருள்-வள்ளல்கள் முதலியோர்க்கு ஈடாக பிறநாட்டு பெரியாரைக் கூறுதல் ஒண்-ணுமோ! தமிழ்ப் பெரியார்க்கு தனிச்-சிறப்புச் செய்து பிற பெரியாரையும் பேணுதல் நன்றே.

தமிழரது மொழிமாண்புடனே பிற மாண்பினையும் தமிழர் மகாநாடு நாடுதல் வேண்டும். தமிழரின் சமுதாய ஒற்றுமைப் பொருட்டு, நாகரிகத்திற்கு மாறில்லாமல், பல இனத்தாரும் உடன் உண்ணுதல் வேண்டும். மகற் கோடல் என்பனவற்றை யாரும் மறுத்துரைத்-தல் கூடாது. அவ்வாறே ஒரு கட-வு-ளுண்மை, உயிர்க்கிரங்குதல், மறு-பிறப்பு, உருவழிபாடு, ஒழுங்கரசியல் என்பவற்றையும் பொதுக்கூட்டங்களில் மறுத்தலின்மை ஒற்றுமைக்கு உரஞ் செய்யும் தமிழரின் பொருள் வசதியின் பொருட்டு பாங்கு முதலியன நடத்தல், தங்கிடம், உணவு, வசதியின் பொருட்டு மாணவர்கள் விடுதி, பொதுவிடுதிகள் அமைத்தல், சமய முன்னேற்றத்திற்காகத் திருத்தப் பிரசாரம் பயிற்றுதல், தொழில் வளர்ச்-சிக்காக கல்லுரிகள், கழகங்கள் நிறுவுதல், வேறெவ்வகை வளர்ச்சிக்கும் உரிய திட்டங்கள் வகுத்தல், முதலியன படிப்படியாக, ஆட்சிக்கு வருதல் வேண்டும். கல்வித்துறை, செல்வத்-துறை, தொழிற்த்துறை, அரசியற்றுறை, சமயத்துறை முதலியன எல்லாத்-துறைகளிலும் தமிழர் ஒற்றுமையுற்றுப் பெரு நலம் பெறுதற்கு ஆவனயாவும் ஆற்றுதல் கடனே. தனித் தமிழ் மாகாணம் தோன்ற வேண்டும்

.தமிழர்க்கு மாகாணம் தனியே அமைதல் நன்மைகள் பலவற்றிற்கும் அடிப்படையாகும். யாவற்றிற்கும் அடிப்படை மொழி பேணுதலே, ஆதலின் அதனை விரித்திங்குரைத்தாம். உலகம் முழுவதும் ஒரு குடைக் கீழாண்ட உயர் தமிழ் மொழிக்கே இந்திய நாடு முற்றிலும் உரியது. நேற்று தோன்றிய வரம்பிலா மொழிகள் தமிழ்க்கு முன்னர்த் தலையெடுக்காமல் அடங்கிச் செல்லப் பணித்தல் வேண்டும். அன்னையை மீறும் அகந்தை மொழி-களை அகற்றி ஒழித்தலே அறிஞர் கடமை. போலிப்பற்றை ஒழித்து நடு-நிலை நின்று பொது நலம் நாடின் இந்தி மொழியினும் எங்கும் பரவிய ஆரிய மொழியாம் ஆங்கில மொழியே பொது-மொழியாக அவைதற்பாலது, ஆயி-ரத்திலொரு தமிழன் வடநாடு சென்றால் செல்லுங்காலை வேண்டுமாயின் இந்தி கற்க. அதற்காகத் தாய் கொலை செய்தல் சால் புடைத்தன்று. இந்த கருத்தை எல்லா தமிழரும் கடைபிடித்தல் ஆகிய ஒரு பெருங்கடமை முற்றிலும் நிறைவேறின், இடையூறு யாவையும் எளிதில் விலக்கி அழியாப் பேரறிவும் அந்தமில் இன்பமும் எந்தநாளும் தமிழர் பெறுவர். ஆதலின் இப்-பெருங்கடமையும் பிற எப்பெருங் கடமையும் இறைவன் அருள்கொண்டு செவ்விதின் இயற்றுவான் தமிழர் இபக்கம் தழைத்தல் வேண்டும். தமிழர் இயக்கம் நீடுழி நிலவ, இத்தமிழர் மகாநாடு திறப்புற்றுச் சிறப்புற்றோங்குக.

நிறைவு ------(குடிஅரசு, 2.1.1938)

2 comments:

Ivan Yaar said...

If you have real guts you should oppose all gods and all religions. But you are only against Hindus and Only against one community Brahmins. Hindus are tolerant people who keeps on silent always. I feel D.K. is the party which has no real guts to oppose other religions than Hinduism. If DK is atheist party they should protest against ISLAM too. Muslims are great people who have real faith on their god. They wont like others speaking bad about their god and their religion. If DK publishes one article against Islam or Allah, Muslims will surely teach DK party a lesson.

தமிழ் ஓவியா said...

அனைத்து மதங்களைப் பற்ரியும் தி.க. விமர்சித்துள்ளது . நூல்கள் வெளியிட்டுள்ளது. பல கட்டுரைகள் விடுதலை உண்மை இதழ்களில் வெளிவந்துள்ளது.
தமிழ் ஓவியா வலைப்பூவிலும் இது தொடர்பான பல கட்டுரைகள் உள்ளது.