Search This Blog

25.5.12

பூணூல்வெறித்தனத்தோடு எய்ம்ஸ்மருத்துவமனையில் ஜாதிவேறுபாடு



டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக ஜாதி ரீதியாக வேறுபாடு காட்டப்படுகிறது என்கிற பிரச்சினை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது.

மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது அய்க்கிய ஜனதாதள உறுப்பினர் மங்கானிலால் மந்தல் பேசுகையில் அதிர்ச்சி தரும் சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

1) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட் டோருக்கான பணியாளர் தேர்வு, இடஒதுக்கீட்டின்படி நடப்பதில்லை - கொல்லைப்புற வழியாக நடக்கிறது.

2) இம்மாணவர்களுக்கு உணவு வழங்குவதில்கூட வேறுபாடு காட்டப்படுகிறது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் புனியா அவர்கள் கூறுகையில், மருத்துவர்களிடையே ஜாதி ரீதியான வேறுபாடு இருப்பது - பலரை தற் கொலைக்கு தூண்டியுள்ளது. இது அவமானத் துக்குரியது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர் உத்தரப்பிரதேசம் சத்ரபதி சாகுமகராஜ் மருத்துவக் கல்லூரியிலும் இதே போன்ற நிலை நீடிக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 26 மாணவர்களில் 24 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தாராசிங் கூறுகையில் நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர்ந்த மாணவர்களும்கூட தற் கொலைக்குத் தூண்டப்படுகின்றனர். செய்முறைத் தேர்வில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இவையெல்லாம் தெருமுனைகளில் கூறப்பட்டவை யல்ல; நாடாளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளால் பகிரங்கமாக எடுத்துக் கூறப்பட்டவையாகும்.

சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டு 65 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இந்நாட்டில் 25 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான இந்தக் கொடுமை, அநீதி, பாரபட்சம் நீடிப்பது வெட்கப்படத்தக்கது அல்லவா?

இந்தப் பிரச்சினை இப்பொழுது மட்டுமல்ல; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநராக வேணு கோபால் என்ற பார்ப்பனர் இருந்தபோது இந்தப் பாரபட்சம் ஓகோவென்று கொடி கட்டிப் பறந்ததே! தாழ்த்தப்பட்ட மாணவர்களிடத்தில் உயர் ஜாதி பேராசிரியர்கள் எப்படியெல்லாம் ஓர வஞ்சனை காட்டுகிறார்கள் என்று கூறப்படவில்லையா! அந்தப் பிரச்சினைக்கு அப்பொழுதே தீர்வு காணப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தால் இப்பொழுது அத்தகைய கொடுமைகள் நடப்பது பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காதே!

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை எளிதாக கிடைக்கப் பெற்றதல்ல! அவை போராடி போராடி பெறப்பட்ட உரிமை வாய்ப்புகள் என்பதை மறந்து விடக் கூடாது.

அப்படிப்பட்ட உரிமைகளை அவர்கள் அனுபவிக்கும் தருணத்தில் கைக்கு எட்டியது - வாய்க்கு எட்டப்படவில்லை என்கிற தன்மையில் உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் சட்ட விரோதமாக சமூகநீதியைச் சவக் குழிக்கு அனுப்பும் வகையில் பூணூல் வெறித் தனத்தோடு பாரபட்சம் காட்டுகிறார்கள் என்றால், இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா? சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு படித்த இந்தக் குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமா?

கிராமங்களில் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை பற்றி நாம் குமுறுகிறோம். ஆனால் மருத்துவக் கல்லூரிகளிலேயேகூட நடக்கும் இந்த இரட்டை அளவுகோல்மீது என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்தட்டு இடங்களில் ஜாதிவெறியோடு நடந்து கொள்பவர்கள்மீது சட்ட ரீதியாகக் கொடுக்கப்படும் அடி, அது கிராமத்துத் தேநீர் கடை வரை எதிரொலிக்க வேண்டாமா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குற்றச்சாற்றை வைத்து இருக்கிறார்கள். இவற்றின் மீது சம்பந்தப்பட்ட துறைகள் எடுக்கும் நடவடிக்கை களை இந்த உறுப்பினர்கள் அணுக்கமாகக் கண் காணிக்க வேண்டும். உரிய நடவடிக்கை இல்லை என்றால், பிரச்சினையை வீதிக்குக் கொண்டு வருவோம்! எச்சரிக்கை!

----------------"விடுதலை” தலையங்கம் 24-5-2012

1 comments:

தமிழ் ஓவியா said...

இதுதான் தமிழ்நாடு


தமிழ்நாட்டில் கடந்த 60 வருடங்களாக நாத்தி கக் கருத்துகள் பரவி இருப்பதால் எங்களுடைய பீடத்தைத் தமிழ்நாட்டில் அமைப்பதில் நாங்கள் வெற்றி பெறவில்லை என்று திருவாளர் நித்யானந்தா கூறி இருக்கிறார்.

பெரியார் பிரச்சாரம் செய்தாலும், திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்தாலும், தமிழ்நாட்டில் பக்தி வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டு தானிருக்கிறது என்று சில மே(ல்)தாவிகள் சொல்வதுண்டு. நடைமுறையில் எது உண்மை என்பது திருவாளர் நித்யானந்தாவின் கூற்றில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் சாமியார்கள் கடை விரிக்க ஆசைப் பட்டாலும் கூட போணியாகவில்லை - கட்டிக் கொண்டோம் என்ற நிலைதான்; அல்லது அந்தச் சாமியார்களைத் தோலுரிக்கும் பகுத் தறிவுப் பிரச்சாரம் தமிழ்நாட்டில்தானே வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

பிரேமானந்தா என்னும் சாமியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதும் தமிழ் நாட்டில்தானே!

ஜெகத்குரு என்று போற்றப்படும் சங்கராச் சாரியார் கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் கூட தமிழ்நாட்டில்தான் நடக்க முடியும். அந்த அளவுக்கு மக்கள் மத்தி யில் பகுத்தறிவு அடித்தளம் உருவாக்கப் பட்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா?

புட்டபர்த்தி சாயி பாபா கூட தொடக்கத்தில் தமிழ் நாட்டுப் பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சித்தாலும் கூட, அதில் வெற்றி பெற முடியாமல்தான் ஆந்திரப் பகுதி யிலும், கருநாடகப் பகுதியிலும் தன் கூடாரத்தை வைத்துக் கொண்டார்.

தொடக்கத்தில் அவரைப் பற்றிக் கட்டிவிடப் பட்ட புனை சுருட்டுகள், இருந்த இடம் தெரியாமல் புதைந்து போயின.

அவரது அற்புதப் பிரச்சாரம் எல்லாம் அடி பட்டுப் போயின என்பதுதான் உண்மையாகும்.

பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும் சாயிபாபாவை சந்திப்பார்கள் என்ற நிலைக்கு மாறாக சாயிபாபாவே பறந்து வந்து முதல் அமைச்சரைச் சந்தித்ததும் தமிழ்நாட்டில்தானே!

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களால் உண்டாக்கப்பட்ட இயக்கமும் சரி, பிரச்சாரமும் சரி, அவை வெறும் ஆன்மீக எதிர்ப்பு மட்டுமல்ல - அதனோடு நகமும் சதையுமாக ஒட்டிக் கொண்டு உறவாடும் சமூகப் பிரச்சினைகள் மக்கள் மத்தியில் அக்கக்காக அலசப்பட்டதால் - இங்கு ஆத்திகம் என்பதே உயர் ஜாதியினரின் நலம், நாத்திகம் என்பதே பெரும்பான்மை மக்களின் நலம் என்று மடாதிபதியான குன்றக் குடி அடிகளாரையே சொல்ல வைத்ததன் பின்ன ணியைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

வைதிக - ஆத்திக நம்பிக்கை கொண்டவர் கள் கூட தந்தை பெரியாரை மதித்ததும், போற்றியதும், பாராட்டியதும் எந்த அடிப்படையில் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

திருவண்ணாமலையில் பீர் சாமியார் என்று கூறி ஒரு பெண்மணி ஆட்டம் போட்டதைச் சுட்டிக் காட்டிய நிலையில் இரண்டொரு நாட் களிலேயே, அந்த ஆட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது மானமிகு கலைஞர் அவர்களின் ஆட்சியில்.
மற்ற மற்ற மாநிலங்களில் ஆட்சியில் இருப் போர் சாமியார்களின் முகவரிகளைத் தேடிச் சென்று காலில் விழும் கலாச்சாரம் உண்டு. தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை என்பது யதார்த்தம்.

இவற்றையெல்லாம் உள்ளடக்கியதுதான் திருவாளர் நித்யானந்தாவின் கருத்தாகும்.

தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய ஆன்மிகவாதி களுக்கு இடையே கூட பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார் என்ற வேறுபாட்டு உணர்வு உண்டு என்பது ஒரு கூடுதல் தகவலாகும். 25-5-2012