Search This Blog

26.5.09

இராணுவத்தில் மூடநம்பிக்கை மண்டிப் படர அனுமதிக்கலாமா?

எலுமிச்சைப் பழம் ஏன்?

இந்திய போர்ப்படையின் 43 ஆம் பிரிவுக்குப் புதிதாக 16 எம்பிடி அர்ஜூன் "டாங்க்" களை (கவசப்போர் வண்டி) ஒப்படைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்தியவிலேயே தயாரிக் கப்பட்ட கவசப் போர் வண்டி என்பது பெயரைப் பார்த்தாலே விளங்கும்.

இந்த போர் வண்டிகளை ஒப்படைக்கும் விழாவிலும் இந்தியத் தனம் அல்லது இந்துத் தனம் தெரிந்தது. வண்டிகள் இயங்க உதவும் சக்கரங்களுக்குக் கீழே இன்னொரு கருவி பொருத்தப்பட்டு அதன்பின் அவை இயக்கப்பட்டு நகர்ந்தன. புதிய கருவி, வண்டிகள் நகர்ந்தபோது நசுங்கி விட்டன. அவை என்ன?

எலுமிச்சைப் பழங்கள்! ஒவ்வொரு சக்கரத்தின் கீழும் வைக்கப்பட்டு நசுக்கப் பட்டதன் மூலம் எதிரிகளை விரட்டுகிறார்களாம்! வண்டியில் உள்ள பீரங்கிகள் பின் எதற்காக வைக்கப்பட்டன? எலுமிச்சைப் பழங்களே போதுமே!

இராணுவத்தில் மூடநம்பிக்கை மண்டிப் படர அனுமதிக்கலாமா? இராணுவ அமைச்சர் நம்பிக்கை அற்றவராயிற்றே!


இதைக் கவனிப்பாரா?


------------------நன்றி: "விடுதலை" 26-5-2009

0 comments: