Search This Blog

30.5.09

அய்.அய்.டி.யும் - ஒடுக்கப்பட்ட மாணவர்களும்




அய்.அய்.டி.யில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுதியவர்களுக்கான முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 3 லட்சத்து 84 ஆயிரத்து 977 மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதினார்கள். அய்.அய்.டி.,யில் உள்ள மொத்த இடங்களே 8295 தான். இதில் முதல் கட்டமாக 10 ஆயிரத்து 35 பேர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டைவிட 24 சத விகிதம் அதிகமாக மாணவ மாணவிகள் நுழைவுத் தேர்வு எழுதியுள்ளனர்.

இந்த முறை பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு இருப்பதால் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது என்று கருதலாம். இலட்சக்கணக்கான மாணவர்கள் அய்.அய்.டி.,களில் சேருவதற்காக நுழைவுத் தேர்வு எழுதினர் என்பதே ஒரு நல்ல செய்தியாகும். இந்த எண்ணிக்கை உயர்ந்ததற்கு முதன்முதலாக பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது காரணமாக இருக்கலாம். இதன்மூலம் இட ஒதுக்கீடு எவ்வளவு அவசியம் என்பதை எடுத்த எடுப்பிலேயே தெரிந்துகொள்ள முடிகிறது.

தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவன் மூன்றாவது இடத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அய்.அய்.டி., எய்ம்ஸ், அய்.அய்.எம்., போன்ற கல்வி நிறுவனங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நினைத்துப் பார்க்க முடியாத உயரமான இடங்களில் இருந்தன.

எங்கே இந்த நிறுவனங்கள் இருக்கின்றன? எங்கு விண்ணப்பம் வாங்குவது? விண்ணப்பிப்பதற்கான தகுதி மதிப்பெண்கள் என்ன? என்பது போன்ற அடிப்படையான தகவல் கள்கூட அறியாதவர்களாய் இருட்டிலே தடுமாறிக் கொண்டிருந்தனர் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும்.

இதை வைத்துப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவிகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் நுழைவுத் தேர்வு எழுதியிருக்கின்றனர் என்று எண்ணும்போது பெருமிதமாக இருக்கிறது. அகில இந்திய அளவில் முதன்மையான இடங்களில் தேர்வாகியிருக்கின்றனர் என்கிற போது, அந்தப் பெருமிதத்தில் மேலும் கூடுதலான உணர்ச்சி மெருகேறுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முதன்முதலாக இப்பொழுது தான் இந்தக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டுள்ளது. 27 விழுக்காடு இடங்களையும் ஒரே ஆண்டில் கொடுக்காமல், அதிலும்கூட ஆத்திரத்தைக் காட்டும் வண்ணம் ஆண்டுக்கு 9 விழுக்காடு என்ற முறையில்தான் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 58 ஆண்டுகள் ஓடிய பிறகு முதன்முதலாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் நேரத்தில் அதில்கூட பார்ப்பனர்கள் தங்களின் ஆற்றாமையை, கீழறுப்பு வேலையைச் செய்வது வெட்கக் கேடானதாகும்.

அய்.அய்.டி.யைப் பொறுத்தவரை அதன் இயக்குநர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்களே! சென்னை அய்.அய்.டி போன்ற இடங்களில் சட்ட விரோதமாக தங்கள் பதவி காலத்திற்குள் எவ்வளவுக் கெவ்வளவு பார்ப்பனர்களை விரிவுரையாளர்களாக, பேராசிரியர்களாக, துறைத் தலைவர்களாகத் திணிக்க முடியுமோ அந்த அளவுக்கு, சட்டத்துக்குப் புறம்பான வகையிலும் ஈடுபடுகிறார்கள்.

சென்னை அய்.அய்.டி. இயக்குநராக இருக்கும் அய்யங்கார், அந்தப் பதவிக்கான கல்வித் தகுதி உள்ளவர்கூட அல்ல - அவர் பேராசிரியராக இருக்கும் 28 ஆண்டுகளில் அவர் ஒட்டுமொத்தமாக எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பத்துக்கும் கீழேதான்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்கிறபோது தகுதி - திறமை பேசும் பார்ப்பனர்களின் தகுதி - திறமை இந்த யோக்கியதையில்தான் உள்ளது.

இவர் பதவியில் நீடிப்பது செல்லாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடையைப் பெற்றுள்ளார். இப்படி நீதிமன்ற சந்து பொந்துகளில் நுழைந்து ஓடி தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம், முடிவான தீர்ப்பு வரும் இடைக்காலத்தில் எந்தவித பதவி நியமனங்களையும் செய்யக்கூடாது என்று தெளிவாகத் தீர்ப்புக் கூறி இருந்தும், அதனையும் அலட்சியப்படுத்தி, பார்ப்பனர்களைத் தேடித் தேடி தட்டிப் பார்த்து பதவிகளில் அமர்த்தியுள்ளார். இன்னும் 25 ஆண்டுகளுக்குத் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத் தப்பட்டோரும் அதற்குள் நுழைவதுபற்றி கனவுகூடக் காண முடியாது என்பதுதான் உண்மையான நிலை.

இப்படி பார்ப்பன வன்மத்தோடு செயல்படும் ஆசிரியர்கள் ஆதிக்கம் நிறைந்த நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உள்ளே நுழைந்த ஒடுக்கப்பட்ட மாணவர்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்ச மாகவிருக்கிறது. உள் மதிப்பீடு மதிப்பெண்கள் இவர்களின் கைகளில்தானே இருக்கிறது.

டெல்லி எய்ம்ஸில், தாழ்த்தப்பட்ட மாணவர்களின் விடைத் தாள்கள் உயர்ஜாதிப் பார்ப்பனர்களால் எப்படியெல்லாம் மதிப்பீடு செய்யப்பட்டன என்கிற திடுக்கிடும் தகவல்கள் எல்லாம் வெளியில் வந்தனவே!

வகுப்புவாதம் தலைதூக்கி நிற்கும் ஒரு சமூக அமைப்பில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பயில்வதற்கான ஒரு சூழல் கல்வி நிறுவனங்களில் அமைவது மிகமிக அவசியமாகும். பயிற்றுவிப்போர் (Faculty) பயில்வோர்க்கிடையே வேறுபாடான கண்ணோட்டம் இல்லாதிருக்க இந்த இரு இடங்களிலும் இட ஒதுக்கீடுமுறை ஒழுங்காக, கறாராக இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

---------------------"விடுதலை" தலையங்கம் -27-5-2009

1 comments:

AJAX said...

It gives me immense pleasure that a boy from backward has scored third rank.But at the same time,look at the marks of other students that are admitted on caste basis.when others have scored above 90 marks,these guys would have scored only 50 marks.since because they are from some caste, they will get through.according to u, there becomes SOCIAL EQUALITY! u will celebrate it!!

what happens after that? he joins IIT.He cant bear the hectic schedule of IIT.He cant cope up with pressure.he forms the bottom 10% of the class.eventually, he gets frustrated.he gets arrears.he cant get placed during final year. RESULT::: DROPOUT RATE IN IIT 10%

what happens to guy who scores 95 and didnt get a seat.there are 1000s of such ppl.go and see the list.they get frustrated with system.they do their higher studies outside india. if u dont agree with this point,ask me. i studied in ANNA university.ALL THE TOPPERS OF OUR CLASS APPLIED FOR FOREIGN UNIVERSITIES.they admitted them.they didnt see their caste.they even provided scholarships.ALL THESE PEOPLE GOT TOP 50 RANKS IN TNPCEE FOR 12th STANDARD out of 2 lakh people. RESULT:: TAMILNADU LOSES TOP 50 ENGINEERS!.HAil ur reservation system!

if a SC/ST boy doesnt score marks, give him teaching.have special classes.raise the standard of education.Instead, these fools decrease the marks for certain castes.finally the elite people sits out. this ordinary guy suffers by competing with the cream of india. Also,the college quality comes down. result: all are suffering .NO LONGER U CAN CALL IITs the best in india...

U CANNOT understand these points bcoz u are seeing from outside.I have seen this from inside(in college of engg.guindy).many of friends who scored low marks and came to our college bcoz of quota,suffered.they failed,couldnt get placed in companies and even one guy is working as a labour! the top students tried for MBA.the quota system in IIMs prevented them from entering.but foreign universites embraced them. One guy even got admission in MIT,BOSTON. DO u know that this college is the top 5 engineering college in the WHOLE WORLD!!! they took an Indian student and he will settle there only because the quota system drove him out of india.
Not only him,nearly 40-50 students from our anna university(mostly all department toppers) got admitted in foreign colleges while nearly 40-50 students could not get placed/complete the course,thanks to reservation.
This is STATS.not truth twisted according to my wish.
UR RESERVATION system is making the quality of education poorer and poorer.REservation is best suited for government jobs only. reservation sucks!!

from,
frustrated indian