Search This Blog

27.5.09

உலக நாடுகள் - தூரப்பார்வை - ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்


(உலக நாடுகள் மன்றத்தில் 192 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இவைபற்றி சுருக்கமாகச் சில செய்திகள். நாள்தோறும் அகர வரிசையில் இவை வெளிவரும்).

பொது ஆண்டு கணக்குக்கு (கி.பி.) முன் 400 ஆண்டுகளுக்கு முன், மகா அலக்சாண்டர் எனப்படும் கிரேக்க மன்னன் இந்தியாவுக்குள் நுழையும் வழியாகப் பயன்படுத்திய நாடு. கைபர், போலன் கணவாய்ப் பகுதிகள் இங்குதான் உள்ளன. இசுலாமிய மன்னர்களும் 7-ஆம் நூற்றாண்டு வாக்கில் இதன் வழியாக வந்தனர். 13-ஆம் நூற்றாண்டில் செங்கிஸ்கானும். 14-ஆம் நூற்றாண்டில் தாமர்லேனும் இந்தியாவுக்குள் நுழைந்ததும் இந்த நாட்டின் வழியாகத்தான்.

இங்கிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானத்திற்கும் சண்டைகள் நடந்த துண்டு. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த இங்கிலாந்தின் நாடு பிடிக்கும் ஆசை சண்டைகளை ஏற்படுத்தியது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, சண்டைதான். இந்நிலையில் 1893-இல் இந்திய - ஆப்கானிஸ்தானிய எல்லை வகுக்கப்பட்டது. டுரான்ட் கோடு (Durand Line) என இதற்குப் பெயர்.

1919-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, எமிர் அமா னுல்லாவின் தலைமையில் மன்னராட்சி ஏற்பட்டது. அவர், காலத்திற்கு ஏற்ப, பல சீர் திருத்தங்களைச் செய்ய முனைந்தார். இப்போது இருப்பதைப்போலவே அப்போதும் இசுலா மியப் பழமைவாதிகளால் எதிர்ப்புகள் ஏற்பட்டன. உள்நாட்டுப் போர்கள் மதவாதிகளால் ஏற்படுத் தப்பட்டன. ஒரே குழப் பம், கலவரம். மன்னர் நாட்டை விட்டு ஓடி னார் 1929-இல்.

1953-இல் முகம்மது தாவூத் எனும் போர்ப் படைத் தளபதி பிரதமரானார். அண்டை நாடான சோவியத் ஒன்றியத்திடம் ராணுவ உதவிகளைக் கேட்டுப் பெற்றார். இசுலாமியப் பெண்களுக்கு இழைக்கப்படும். கொடுமையான பர்தா முறையை ஒழித்துச் சட்டம் போட் டார். ஆனால் பத்தாண்டுகளுக்குள் அவரும் பதவி விலகும்படி நிலைமைகள் உருவாக்கப்பட்டன. 1964-இல் சட்டமன்றத் துடன் கூடிய முடியாட்சி மீண்டும் ஏற்படுத்தப்பட் டது.

1973-இல் தளபதி முகம்மது தாவூத் மீண்டும் நாட்டைக் கைப்பற்றினார். ராணுவப் புரட்சி யின் மூலம்! ஆப்கானிஸ்தானைக் குடியரசு நாடு எனப் பிரகடனப்படுத்தி ஆண்டார். ஆனால் 1978-இல் இடதுசாரிகள் எனக் கூறிக் கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சி அவரைக் கொலை செய்து விட்டது. அதைத் தொடர்ந்து கல்க் பிரிவினரும் பர்ச்சம் பிரிவினரும் தங்களுக்குள் மோதிக் கொண்ட கலவரம் தோன்றியது. இதன் விளைவாக பர்ச் சம் இனத்தினர் கொன் றழிக்கப்பட்டனர்; நாட்டைவிட்டு விரட்டப்பட்டனர். அந்தச் சந்தர்ப் பத்தில் இசுலாமிய மத வெறியர்களும் இனக் குழுத் தலைவர்களும் சமூக மாறுதல்களை எதிர்த்து ஆயுதப் புரட்சி யில் ஈடுபட்டனர்.

இடதுசாரித் தலைவர்கள் எனப்படும் ஹபிசுல்லா அமீனுக்கும் நூர் முகமது தாராகிக்கும் மோதல். அமீன் வெற்றி பெற்றார். ஆனாலும் கலவரங்கள் ஓயாமல் போர்ப்படை கலகலத்து விட்டது. 1979 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் அமீனை அகற்றுவதற்காகத் தம் நாட்டுப் படைகளை ஆப்கானிஸ்தானத்திற்குள் நுழைத்தது. அமீனைப் பதவியிலிருந்து அகற்றி உயிரைப் பறித்தது. பர்ச்சம் பிரிவின் தலைவரான பப்ராக் கர்மல் என்பவரை ஆட்சிப் பீடத் தில் அமர்த்தியது. சோவியத் படைகளின் பலத்தில் இவர் நிருவாகம் செய்தார்.

இருந்தாலும் மதவாத அமைப்பான முஜாகிதீன்கள் வலுவுடன் விளங்கினார்கள். ஒரு லட்சம் சோவியத் துருப்புகள் நகர்ப்புறப் பகுதிகளைக் கட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்றால் ஊர்ப் புறங்களில் முஜாகிதீன்களில் செல்வாக்குதான். சோவியத்தின் போர்ப்படை பலம் அவர்களை ஒன்றும் செய்ய முடிய வில்லை. இந்நிலையில் அமெரிக்கா தன் மூக்கை நுழைத்தது. முஜாகிதீன்களுக்கு பணமும் நவீன போர்க் கருவிகளையும் வழங்கியது. அவர்களும் சோவியத் படைகளை எதிர்த்துப் போர் செய்தார்கள். இரு தரப்பிலும் அழிவு ஏற்பட்டாலும் பெருமளவில் இறந்தவர்களும் இழந்தவர்களும் ஆப்கன் மக்கள்தான்.

இதற்கு முடிவு கட்டும் வகையில் 1988-இல் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அமெரிக்கா, சோவியத், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. அதன்படி சோவியத் படை முழுவதுமாகத் திரும்பிச் சென்றது மறு ஆண்டில்.

ஆனாலும் 1992 ஏப்ரலில், பாழ் செய்யும் உட்குழுக்கள் கலவரம் செய்து காபூல் நகரைத் தாக்கி சோவியத் ஆதரவாளரான அதிபர் முகம்மது நஜிபுல்லாவைப் பதவியிலிருந்து அகற்றினர். மறுஆண்டில் எல்லா இனக் குழுக்களும் ஒன் றிணைந்து பர்ஹனுடின் ரப்பானி என்பாரை அதிபராக்கினர். ஆனாலும் ஆங்காங்கே கலவரங்கள் தோன்றி நடந்து கொண்டே இருந்தன. இந்நிலையில் ரப்பானி அரசுக்கு வலுவான எதிர்ப்புச் சக்தியாக தாலிபான்கள் உருவாகினர். அதன் மதவெறித் தலைவனின் பெயர் முல்லா முகம்மது உமர். பழைய முஜாகிதீன் படையில் தளபதியாக இருந்தவன்.

1996-இல் தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றினார்கள். இசுலாமிய மதச் சட்டங்களை அப்படியே அமலாக்கினார்கள். வீட்டை விட்டு வெளியே எங்கும் பெண்கள் வேலை செய்யக் கூடாது. இசுலாமியக் குற்றவியல் சட்டமான பல்லை உடை, கண்ணைத் தோண்டு, கையை வெட்டு என்பனவற்றைப் புகுத்தினார்கள். உலக நாடுகள் மன்றக் கட்டடத்தில் இருந்த முன்னாள் அதிபர் நஜிபுல்லாவை யும் அவரின் தம்பியை யும் வெளியே இழுத்துப் போட்டுக் கொலை செய்தனர் தலிபான்கள். வடக்கே ஒரு மாகாணம் தவிர, ஏனைய ஆப்கானிஸ் தானின் பகுதிகள் முழுவதும் தாலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பாகிஸ்தானும் சவூதி அரேபியாவும் தாலிபான்களை ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களாக 1997-இல் அங்கீகரித்தனர்.
ஆனால் வேறு பல நாடுகள் ரப்பானியின் தலைமையை ஆதரித்தன. ஒசாமா பின்லேடன் எனும் அல்கொய்தா தீவிரவாதி ஆப்கன் நாட்டில் அடைக்கலம் புகுந்திருப்பதாக அமெரிக்கா கூறி அவனை ஒப்படைக்குமாறு கோரியது. 1999-இல் உலக நாடுகள் மன்றம் பொருளாதாரத் தடைகளை இந்நாட்டின் மீது விதித்தது. 2001-இல் அவை மிகவும் கடுமையாக்கப் பட்டன.

எனினும் தாலிபான்களின் மதவெறிச் செயல்கள் கூடிக் கொண்டே போயின. பாமியான் பகுதியில் இருந்த சிறந்த வரலாற்றுச் சின்னமான புத்தர் சிலைகளைச் சிதைத்தது. இசுலாமியர் அல்லாதவர்கள் அனைவரும் தாங்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதற்கு அடையாள அட்டையைத் தம் கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும் என்கிற ஆணையிடுமள வுக்கு மதவெறியுடன் நடந்து கொண்டனர். எல்லா மதப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் என்றனர். தாலிபான்களை எதிர்த்தவர்களின் தலைவரான அகமது ஷா மசூத் செய்தி யாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் இரட்டைக் கட்டடங்கள் இடிக்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா, இங் கிலாந்து நாடுகள் வான் வழித் தாக்குதலையும் தரை வழித் தாக்குதலையும் மேற்கொண்டதில் தாலிபான்கள் 2001 கடைசியில் ஓடி ஒழிந் தனர். ஆனாலும் தாலிபான்களின் தலைவரோ அல்கொய்தாவின் தலைவரோ அகப்படவில்லை.

இந்நாட்டின் பல் வேறு குழுக்களும் 5.12.2001-இல் ஜெர்மன் நாட்டின் தலைநகர் பான் நகரில் கூடிப் பேசி இடைக்கால அரசு ஒன்றை அமைத்தனர். 22-12.2001-இல் ஹமித் கர்சாய் எனும் பஷ்டுன் இனத்தைச் சேர்ந்தவர் 30 உறுப்பினர்கள் கொண்ட இடைக்கால அரசின் தலைவராக அமர்த்தப்பட்டார்.

ஆப்கன் மன்னர் ஜாகிர் ஷா நாட்டுக்குத் திரும்பி வந்தார். ஆனாலும் தாம் அரசுரிமை கோரப் போவதில்லை என உறுதி அளித்தார். அனைத்து நாட்டு அமைதி காக்கும் படை வந்து சேர்ந்தது. எனினும் மீண்டும் கலவரங்கள் வெடித்தன. நாட்டோ அமைப்பு அய்ரோப்பாவுக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் முதன்முறையாகத் தன்னை ஈடுபடுத்தி காபூல் நகரப் பாதுகாப்பை மேற் கொண்டது.

2004-இல் மக்களவை புதிய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்து ஏற்றுக் கொண்டது. 9.10.2004-இல் ஹமித் கர்சாய் அதிபராகப் பதவி ஏற்றார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் குடியரசுத் தலைவரான இவர், ஆப்கன் அரச வமிசத்தைச் சேர்ந்தவர் தேசிய சட்ட சபை 19-12-2005-இல் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. 6 லட்சத்து 47 ஆயிரத்து 500 சதுர கி.மீ பரப்புள்ள இந்நாட்டில் 3 கோடியே 10 லட்சத்து 56 ஆயிரத்து 997 (2006-இல்) மக்கள் வசிக்கின்றனர். சன்னி முசுலிம்கள் 80 விழுக்காடும் ஷியா முசுலிம்கள் 19 விழுக்காடும் உள்ளனர். பஷ்டு மொழி பேசுவோர் 35 விழுக்காடும், தரி எனப் படும் பாரசீக மொழி பேசுவோர் 50 விழுக் காடும், டர்கிக் மொழிக் காரர் 11 விழுக்காடும் உள்ளனர். மீதி மக்கள் சுமார் 30 மொழிகளைப் பேசுவோர்.

ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இனக் குழுக்களின் அடிப்படையில் மோதிக் கொள்கின்றனர். இங்கு மதம் எங்கே மக்களை ஒழுங்கிணைக்கிறது? ஒழுக்கத்தை வளர்க்கிறது? தற்காலக் கண்டுபிடிப்புகளான போர்க் கருவிகளை வைத்து சண்டையிடும் தாலிபான்கள் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய மதக் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் திணிப்பது எப்படி ஞாயம்? சண்டைக் குணம் கொண்ட இந்நாட்டு மக்கள் ஏ.கே. 47, ஏ.கே. 50 போன்ற பலவித நவீன ரகத் துப்பாக்கிகளையும் தாங்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள் - எந்திரங்கள் இல்லாமலே!

மதவெறி மட்டும் இல்லாமல் இருக்குமானால்...



----------------நன்றி:-"விடுதலை" 25-5-2009

0 comments: