Search This Blog

1.5.09

புரட்சிக்கவிஞரின் பொருள்மிகுந்த துணுக்குகள்!

புரட்சிக் கவிஞரின் பொருள்மிகுந்த துணுக்குகள்!

(புரட்சிக் கவிஞர் என்றவுடன் அவரது கவிதைதான் நமக்கு நினைவு வரும்.ஆனால் நமது புரட்சிக்கவிஞர் அவர்கள் உரையாடல்கள், கட்டுரைகள், நகைச்சுவைத் துணுக்குகள் இப்படி எல்லா வழிகளிலும் பகுத்தறிவைப் பரப்பினார் என்பதற்கு சான்றாக இதோ உங்கள் சிந்தனைக்குச் சில)

மேல்நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர்:-

(தோட்டியைக் காட்டி) இவர் யார்?

உள்ளூரார் : இவர், வீட்டில் உள்ள அசுத்தங்களை எடுத்துப்போகிறார்.

மே.இந்; (வண்ணானைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர், வீட்டில் உள்ள அழுக்குத் துணிகளை எல்லாம் எடுத்துப் போகிறார்.

மே.இந்: திரும்பவும் சலவைசெய்து வந்து கொடுப்பாரா?

உள்: ஆஹா!

மே இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர் வீட்டில் உள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டைகட்டிக்கொண்டு போகிறார்.

மே.இந்: சமையல் செய்து கொண்டு வந்து கொடுப்பாரா?

உள்: திரும்பக் கொடுப்பதில்லை.

மே.இந்: அடித்துக் கொண்டா போகிறான்?

உள் : ஆம்!

மே இந்: அடித்துக்கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டா இருப்பார்கள்?
உள்: ஆம்! ஆம்!

மே.இந் : அடித்துக்கொண்டா.....

உள் : எத்தனை தரம் சொல்லுவது? அடித்துக்கொண்டுதான் போகிறான்! அடித்துக்கொண்டுதான் போகிறான் ஆயிரம் வருடமாக இப்படி!

--------------------------------------------------------------------------------------

ராமு : சீனு சூத்திரன் திடீரென்று இறந்தான், ஒரு பிராமணன் அதற்காக வருந்தினான். சூத்திரப் பிரேதத்தைக் கட்டியழுத பிராமணனை நான் இன்றைக்குத் தான் பார்த்தேன்.

குண்டு : சரி,அப்படியானால் பிரேதத்தில் காணாமற்போன பொன் அரைஞாண் கயிற்றை, அய்யர்தான் அமுக்கியிருப்பார்!

---------------------------------------------------------------------------------

அர்ச்சகர் : பர்த்தாயாதில்லை கோவிந்த ராஜ ஸ்சுவாமி படுத்தபடி இருக்கிறார்! பார்த்தாய்விட்டதா?

பக்தன் : இருங்கள் ஸ்வாமி! அவர்

அர்ச்சகர் : அது

பக்தன் : மகா சக்தி வாய்ந்தவர் என்கிறீர்களே - எழுந்திருப்பதே தகராறோ!

-------------------------------------------------------------------------------------
-
பிராமணன் : பிராமணன் மகன் பிராமணன். நீ அறியாதவன். உன் தகப்பனாரைக் கேள்!

சூத்திரன் : பிராமணனுக்கே பிராமணன் பிறக்கிறானா? இதை உன் தாயாரைக் கேட்டுப்பார்!


-------------------------------------------------------------------------------------------

ஒருவன் பல கொலைக் குற்றம் செய்து வந்ததன் பயனாய்ச் சர்க்காரால் தூக்கிலிடப்பட்டான். அவன் மகன் வெளியிட்ட கருமாதிப் பத்திரிகையின் படி அந்தக் கொலைகாரன் வைகுண்டம் போனதாய்த் தெரிகிறது. தக்க போலீஸ் காபந்து இருந்தாலொழிய, வைகுண்டத்திற்கு எவரும் போகவேண்டாம்!

------------------------------------------------------------------------------------


சைவன் சுயமரியாதைக்காரன் ஆன பின் அவனை நிறுத்துப் பார்த்ததில் நிறையில் கால்பலம் - குறைவு ஏற்பட்டது, விபூதியிடுவது நீங்கியதால்!

-----------------------------------------------------------------------------------

பாதிரி : நீ ஏதாகிலும் பாபம் செய்தாயா? சொல்லி விடு, நான் சாமியிடம் சொல்லித் தீர்த்துவிடுகிறேன்.

கிறிஸ்தவர் : ஆம்! சுவாமி, ஆம்! பெரிய பாவம்!

பாதிரி : என்ன அப்படி!

கிறிஸ்தவர் : பாதிரிகள் ஏழைகள் மட்டில் இரக்கம் உள்ளவர்கள் என்று நினைத்துவிட்டேன்!

-------------------------------------------------------------------------------


சுயராஜ்யவாதி : காங்கிரஸ் ஒன்றே சுயராஜ்யத்திற்கு ராஜபாட்டை!

சுயமரியாதைக்காரன் : சுயமரியாதை இயக்கம், அந்த ராஜபாட்டையை உண்டாக்கும் முனிசிபாலிட்டி.

------------------------------------------------------------------------------------

புரட்சிக் கவிஞர் பிறந்த நாளையொட்டி 29.4.1891 "விடுதலை" ஞாயிறுமலர் 25-4-2009 வெளியிட்டதிலிருந்து

0 comments: