Search This Blog

18.5.09

பார்ப்பனிய ஊடகங்களின் ஏமாற்று நாடகம்; பஞ்சமில்லாத ஜோதிடர்களின் புளுகுகள்






நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு கிடைக்கும்? யார் ஆட்சி அமைப்பார்கள்? குறிப்பாக தமிழ்நாட்டின் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? இவை பற்றி மணிக்கணக்கில் பார்ப்பனிய காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகத்தினரும் மற்றும் ஜோதிடர் களும் போட்டி போட்டு தகவல்களை வெளியிட்டு பொது மக்களை குழப்பி வந்தனர்.ஆனால் தேர்தல் முடிவோ அதற்கு நேர்மாறாக வெளிவந்து அவர்களின் முகங்களில் கரி பூச வைத்து விட்டது.

தேர்தல் ஆணையம் தடை

தேர்தல் கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை போட்டிருந்தது அதனால் நாட்டின் 543 தொகுதிகளிலும் தேர்தல் முடியும் வரை அமைதி காத்த 'அவாள்களின்' ஊடகங்கள் மே 13 - ஆம் தேதி கடைசியாக தேர்தல் முடிந்தவுடன் தங்களின் பொய் மூட்டைகளை கடை விரிக்க ஆரம்பித்து விட்டனர்.

தேசிய அளவில் அனைத்து ஊடகங்களின் பார்வையும் தமிழ்நாடு நோக்கியே இருந்தது. இதற்காக கூட்டணி ஆட்சி அமைக்கும் பேச்சு வார்த்தை நடத்த அம்மையார் ஜெயலலிதா டெல்லி செல்ல விமான டிக்கெட்டுகள் எடுத்துக் கொடுக்காத குறையாக சில ஊடகங்கள் தங்கள் பொய்ப் பிரச்சாரத்தை போயஸ் தோட்டத்துக்கு ஆதராவாக ஓதின.

மே 13க்குப் பிறகு

கடைசிக் கட்டத் தேர்தல் மே13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முடிந்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் என்ற போர்வையில் வழக்கம்போல் தங்களின் போலி முகங்களையும், பொய் பிரச்சாரத்தையும் காட்டத் தொடங்கின.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் பார்ப்பனிய தொலைக் காட்சிகளும், பத்திரிகைகளும் படுத்திய பாடு போட்டியிட்ட வேட் பாளர்களையும், பொது மக்களையும் அளவுக்கு அதிகமாகவே குழப்பி விட்டன. சொல்லப் போனால் மக்களின் நிம்மதி குலைத்து தூக்கம் கெடுக்கும் பணியைச் செவ்வனே செய்தன அந்த பார்ப்பனிய ஊடகங்கள். அவர்களின் நோக்கம் எல்லாம் பார்ப்பனியம் அரியணை ஏறவேண்டும் என்பதுதான்.

காட்சி ஊடகங்களின் கைவரிசை

'நியூஸ் எக்ஸ்' தொலைக் காட்சி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 199 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 191 இடங்களும், மூன்றாவது அணிக்கு 104 இடங்களும், இதரக் கட்சிகளுக்கு 48 இடங்களும் கிடைக்கும் என்று பரபரப்பாக தகவல் வெளியிட்டது.

மேலும் இந்த தொலைக் காட்சி காங்கிரஸுக்கு 155 இடங்கள்தான் கிடைக்கும் என்றும்,பாஜகவுக்கு 153 இடங்களும் கிடைக்கும் என்றும் தம்பட்டம் அடித்தது குறிப்பிடத் தக்கது.

அதேபோல் 'யுடிவி அய்' தொலைக் காட்சியும், 'நியூஸ் 24' தொலைக் காட்சியும் தங்கள் பங்குக்கு நிறையவே பொய்த் தகவல்களை கருத்துக் கணிப்பு என்ற போர்வையில் மக்களிடம் கொண்டு சென்றன.

"நியூஸ் 24" தொலைக் காட்சி காங்கிரஸ் கூட்டணிக்கு 218 இடங்கள் தான் கிடைக்கும் என் றும், பாஜக கூட்டணி 194 இடங்களை கைப்பற்றும் என்றும் கூவியதை யாரும் மறந்திருக்க முடியாது. அதைவிடக் கொடுமை, மூன்றாவது அணி 110 இடங்களில் வெற்றிக் கொடி நாட்டும் என்று கூறியதுதான்.

'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி தனது கருத்து கணிப்பில் காங்கிரஸ் கூட்டணிக்கு 198 இடங்களும், பாஜகவுக்கு 183 இடங்களும் கிடைக்கும் என்று கூறி பரபரப்பின் அளவை உச்சிக்கு கொண்டு சென்றன. மூன்றாவது அணிக்கு 'டைம்ஸ் நவ்'- தொலைக் காட்சி தெரிவித்த கருத்துக் கணிப்பு 112 என்பது குறிப்பிடத்தக்கது.

'ஸ்டார் நியூஸ்' தொலைக் காட்சி, காங்கிரஸ் கூட்டணிக்கு 199 இடங்கள்தான் கிடக்கும் என்றும், பாஜக கூட்டணிக்கு 196 இடங் களும், மூன்றாவது அணிக்கு 100 இடங்களும் கிடைக்கும் என்றும் தன்னுடைய கருத்துக் கணிப்பாக வெளியிட்டிருந்தது .

ஆனால் இவை எல்லாவற்றையும் ஓரம் கட்டும் அளவுக்கு தமிழ் நாட்டில் அதிமுக கூட் டணி 24 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று குறிப்பிட்டிருந்ததுதான் கொடுமையின் உச்சம்.40 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 11 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற முடியும் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டு அம்மையாரை அற்ப மகிழ்ச்சிக்கு ஆளாக்கியது.

தமிழக அச்சு ஊடகம்

அதேபோல் தமிழ்நாடு பார்ப்பனிய அச்சு ஊடகம் ஜீனியர் விகடன் '40 தொகுதிகளின் நச் முடிவு' - என்ற தலைப்பில் தேர்தலுக்கு முதல் நாள் ஒரு கருத்து திணிப்புக் கொடுமையை 'கவர் ஸ்டோரியாக' அரங்கேற்றியதை யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால் இறுதியாக தேர்தல் முடிவு, அவை வெளியிட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புகளுக் கும் நேர்மாறானவையாக இருந்தன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஒவ்வொரு தேர்தலிலும் வழக்கம் போம் ஆரியக் கூட்டத்தக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பார்ப்பனிய ஊடகங்கள் நடந்து முடிந்த தேர்தலிலும் அந்தப் புளுகுப் பணியை சிறப்பாகச் செய்து முடித்துள்ளன.

வெகுமக்கள் ஊடகம் என்ற போர்வையில் தாங்கள் திணிக்கும் பொய்களையும், புரட்டு களையும் இனியும் நம்ப மக்கள் தயாரில்லை.

ஜோதிடர்களின் பொய்கள்

அதே போல் தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே கருத்து கந்தசாமிகளாய் அவதாரம் எடுப் பவர்கள், புளுகுகளை மட்டுமே தொழிலாகக் கொண்ட ஜோதிடர்கள்தான். அவர்களின் ஆரூடத்தால்தான் இந்திய அரசியலையே இயங்குவதாக அவர்களுக்கு நினைப்பு. அப்படி நடந்து முடிந்த தேர்தலில் ஆரூடம் என்ற போர்வையில் பிரதமர் நாற்காலியை ஜெயலலி தாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர் டெல்லியைச் சேர்ந்த புளுகு மன்னன் அசோக் சனோ ரியா என்பவர். இவர் சொன்னது என்ன தெரியுமா? இந்தியப் பிரதமராக ஒரு பெண்மணிதான் வருவார். அதற்கான ஜாதக வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் உண்டு என்று கூறி இருந்தார்.அதேபோல் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த சோதிடர் ஜகன்னாத் மிஸ்ரா என்பவர் தேர்தல் நடக்கும் கால கட்டம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டங்களுக்கு ஆதரவாக கிரக நிலைகள் இல்லை என்றும் இதனால் தேர்தலில் பெரும் வன்முறை ஏற்படும் என்றும், இயற்கைப் பேரழிவுகளால் தேர்தலே ந்டத்த முடியாது என்றும் இவர் கூறி இருந்த பொய்யை மக்கள் மறக்கவில்லை.

இந்தப் புளுகுணி களின் பட்டியலில் டெல்லியைச் சேர்ந்த பிரபலமான சோதிடர் ஒருவர் பிரதமர் நாற்காலியில் அமரப்போவது ஒரு கறுப்புக் குதிரைதான் என்றும், அவ்வாறு அமை யும் ஆட்சி ஒன்றரை ஆண்டுகள்தான் நீடிக்கும் என்றும் கடைசியாகத் தெரிவித்து மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்கினார்.

ஆனால் தேர்தல் முடிவு எப்படி அமைந்துள்ளதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளோம். எனவே இனி வரும் காலங்களில் ஆருடங்களையும், ஜோதிடர்களையும் அடித்து துரத்துவதும், கருத்துக் கணிப்பு என்ற போர்வையில் பார்ப்பனியக் கூட்டத்தின் புளுகுகளையும், பொய்களையும் புறம் தள்ள வேண்டியது மானமுள்ள நம்மவர்களின் கடமை.

----------------"விடுதலை" 17-5-2009

0 comments: