Search This Blog

31.5.09

உலக நாடுகள் -தூரப்பார்வை-ஆஸ்திரியா- அஜர்பைஜான் - பஹாமாஸ்


ஆஸ்திரியா

அய்ந்தாம் நூற்றாண்டு வாக்கில் ஹூன் வமிசத்தினரும் ஜெர்மானியர்களும் டான்யூப் நதிக் கரையில் அமைந்திருந்த நாடுகளைத் தாக்கி அழித்தனர். ரோம சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இவை விளங்கின. ஜெர்மனிய இனத்தைச் சேர்ந்த கோத், ருகில், ஹெருலி, லங்கோபார்டி போன்ற பழங்குடியினர் இந்தப் பகுதியில் குடியேறினர். ரோமானிய சக்ரவர்த்தியாக வந்த கார்ல்மாகன் என்பவர் 788 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியைக் கைப்பற்றினார்.

13 ஆம் நூற்றாண்டி லிருந்து ஹப்ஸ்பர்க் வமிசத்தினர் ஆஸ்திரியாவை ஆண்டு வந்தனர். இந்த ஆஸ்திரிய அரச வமிசம் முதல் உலகப் போர் நடந்த காலம் வரை ஆட்சியில் இருந்தது.

நெப்போலியன் காலத்திய போர்களுக்குப் பிறகு, வியன்னா காங்கிரஸ் 1814-15இல் நடந்து அய்ரோப் பியக் கண்டத்தில் அரச எல்லைகளையே மாற்றி அமைத்தது. ஆஸ்திரிய நாடு, பெரும் பயனடைந்த நாடுகளில் ஒன்றானது. அய்ரோப்பாவில் வலிமை மிக்க சக்தியாக இந்நாடு வளர்ந்தது. 1867 முதல் 1918 வரை ஹப்ஸ்பர்க் அரசவமிசம் ஆஸ்திரிய ஹங்கேரிய சாம்ராஜ்யமாக ஆயிற்று.

ஆஸ்திரிய மன்னர் பிரான்சிஸ் பெர்டினான்டு 1914இல் கொலை செய்யப்பட்ட சம்பவம் முதல் உலகப் போருக்குக் காரணமானது. ஜெர்மனி, பல்கேரியா, ஒட்டாமான் அரசு ஆகியவற்றுடன் ஆஸ்திரியா அணி சேர்ந்து மத்திய சக்தியாக விளங்கிப் போரிட்டது. உலகப் போரின் முடிவில் ஆஸ்திரிய ஹங்கேரிய பேரரசு வீழ்ந்தது.

ஜெர்மன் நாஜிகளில் சிலரை 1934இல் சிறையிலடைத்த செயலால், ராணு வப்புரட்சி ஏற்படுத்தப்பட்டு அதிபர் டோலிபஸ் கொலை செய்யப்பட் டார். 1936இல் ஜெர்மனி நாட்டின் ஒரு பகுதியா கவே ஆஸ்திரியா தன்னை வெளிப்படுத்திக் கொண் டது. இட்லர் இந்நாட்டைத் தன் நாட்டுடன் இணைத்துக் கொண்ட வேளையில், 1938இல், அன்ஸ்சலஸ் அல்லது ஆஸ் திரிய அரசியல் அமைப்பு ஏற்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், 1945 இல் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருந்த ஜெர்மனியப் படைகளை சோவியத் தோற்கடித்த பிறகு ஆஸ்திரியா நேசநாடுகளின் ஆதிபத்யத்தில் வந்தது. 1955 ஆம் ஆண்டில் பிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் ஆகிய நேச நாடுகளிடம் ஆஸ்திரியா உறுதி தந்தது; நாடு எப்போதும் அணி சேரா நாடாகவே சுதந்திரமாக இயங்கும் எனக் கூறியது. அதன்படி அதற்கு விடுதலை அளிக்கப் பட்டது. அதே ஆண்டில் ஆஸ்திரியா அய்.நா. சபையில் அங்கத்தினராகிவிட்டது.

1986இல் அய்.நா. சபையின் செக்ரடரி ஜெனரலாக இருந்த கர்ட் வால்ட் ஹீம் ஆஸ்திரியாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1995 இல் அய்ரோப்பிய ஒன்றியத்தில் ஆஸ்திரியாவும் இணைந்துள்ளது.

83 ஆயிரத்து 870 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டில் 82 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். இவர்களில் 72 விழுக்காடு ரோமக் கத்தோலிக்கர்கள். புரொடஸ்டன்ட் கிறித்துவர்கள் 5 விழுக்காடும், இசுலாமியர்கள் 4 விழுக்காடும் பெரும்பான்மையாக உள்ளனர்.

அஜர்பைஜான்

அஜர்பைஜான் நாட்டுப் பகுதியில் நாகரிமற்ற துருக்கிப் பழங்குடியினர், குர்து இனத்தவர், ஈரான் மொழி பேசுவோர், அல்பேனியா நாட்டின் காகாசிய இன மக்கள் முதலியோர் வாழ்ந்தனர். இப் பகுதி காகாசியாவுக்கு இடைப்பட்ட பகுதி எனப்பட்டது. ஏழாம் நூற்றாண் டில் அரபியர் படையெடுப்புக்குப் பிறகு ஷா என்ஷா எனப்பட்ட உள்ளூர் மன்னர்கள் இசுலா மிய ஆட்சியை அமைத்தனர். 16 ஆம் நூற்றாண்டில் காகாசிய இசுலாமியர்கள் ஷியா முசுலிம்களாயினர்.

1828இல் ரஷியாவுக் கும் பாரசீகத்துக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, ரஷ்ய அஜர் பைஜான் என்றும் தெற்கு அஜர்பைஜான் என்றும் இரண்டாகப் பிரிக்கப் பட்டது. (ரஷ்ய அஜர்பை ஜான் சோவியத் அஜர்பை ஜானாகிப் பிறகு தற்போது தனி அஜர்பை ஜான் நாடாகியுள்ளது.) தென் பகுதிய அஜர்பைஜான் பிரிவினையின் பிறகு தற்போது ஈரான் நாட் டின் பகுதியாக உள்ளது.

1918இல் சோவியத் புரட்சிக்குப் பின் (ரஷ்ய) அஜர்பைஜான் தன் விடுதலையைப் பிரகடனப் படுத்தியது. என்றாலும் 1920இல் செஞ்சேனை இந்நாட்டைத் தாக்கி சோவியத் ஒன்றியத்து டன் சேர்த்துவிட்டது.

1988 இல் அஜர்பைஜான் தன் அண்டை நாடான ஆர்மீனியாவுடன் எல்லைத் தகராறில் இறங்கியது. தகராறுக்குரிய பகுதியான நகோர்னோ - கரபாக் பகுதியில் வாழும் மக்கள் ஆர்மீனியக் கிறித்துவர்கள் என்பதால் அவர்கள் ஆர்மீனியாவுடன் இணைய விரும்பினார்கள். இசுலாமிய நாடான அஜர்பைஜான் இதனை எதிர்த்தது. இறுதியில் 1994 இல் போர் நிறுத்தம் ஏற்பட்டதே ஒழிய தகராறுக்கு முடிவு ஏதும் ஏற்படவில்லை.

1991 இல் சோவியத் யூனியன் சிதைந்த பிறகு அஜர்பைஜான் சுதந்திர நாடாகியது. என்றாலும் எல்லைத் தகராறு தீரவில்லை. மதங்கள் ஒழிந்தால்தான் தீரும் போலிருக்கிறது!

86 ஆயிரத்து 600 சதுர கி.மீ. பரப்பு உள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 80 லட்சம். 93 விழுக்காட்டுக்கு மேல் இசுலாமியர்கள். பழமைவாதக் கிறித்துவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 5 விழுக்காடு உள்ளனர்.

பஹாமாஸ்

இந்தியாவைக் கண்டு பிடிக்கிறேன் என்று கிளம்பிய கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492 அக்டோபர் மாதத்தில் இறங்கிய நிலப்பகுதிதான் கான்சால் வடார் என்று அழைக்கப்பட்ட பஹாமாத் தீவுகள். 17 ஆம் நூற்றாண்டில் இத்தீவுகளில் பிரிட்டன் தன் குடியேற்றத்தைத் தொடங்கி தன் நாடாக ஆக்கிக்கொண்டது.

1717 முதல் 1964 வரை பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தது. 1964 இல் சுய ஆட்சி உரிமை வழங்கப்பட்டது. 1973 இல் சுதந்திர நாடாக ஆக்கப் பட்டது.

கியூபாவுக்கு அருகில் கரிபியன் தீவுக் கூட்டத்தில் அடங்கியது பஹாமாஸ் தீவுகள். 13 ஆயி ரத்து 940 சதுர கி.மீ. பரப்பு உள்ள இந்த நாட்டின் மக்கள் தொகை 3 லட்சத்திற்கும் சற்றுக் கூடுதல். கிறித்துவ மதத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் இங்கு ஆள்கள் உண்டு. வேறு மதத்தினர் என்று யாரும் இல்லை.

இங்கிலாந்தின் அரசி தான் நாட்டின் தலைவர். கவர்னர் ஜெனரலும் உண்டு. பிரதமரும் உண்டு. குடிக்கோனாட்சி முறை.

பஹ்ரைன்

பஹ்ரைன் தீவுகளை ஆதியில் பாரசீகர்கள் ஆண்டனர். இடையில் அராபியர்களும் போர்த்து கீசியர்களும் பலகாலம் ஆண்டு கொண்டிருந்த போது 1602 ஆம் ஆண்டில் பாரசீகர்கள் மீண் டும் சொந்தம் கொண்டாடினர். கலிஃபா அகமது என்பார் 1783 இல் பஹ்ரைனைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினார். கலிஃபா என்பவர் இசுலாமிய மத குரு. அவரேதான் அரசரும் கூட.

1820 இல் பிரிட்டிஷ் பாதுகாப்பில் இருக்கத் தொடங்கி 1971 இல் விடுதலை அடைந்தது. பின்னர் 1975 இல் ஷேக் இசாபின் சல்மான் எனும் கலிஃபா ஆட்சியைக் கைப்பற்றி சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு, தாமே ஆளத் தொடங்கிவிட்டார்.

அமெரிக்க நாட்டின் முக்கிய நட்பு நாடு. 1991 இல் வளைகுடாப் போர் நடந்தபோது அமெரிக் காவுக்கு விமான தளமாக இந்த நாடுதான் பயன் பட்டது. அமெரிக்காவின் அய்ந்தாம் கடற் படை நங்கூரமிட்டிருப்பதும் இங்குதான்.

சவூதி அரேபியாவுக்குக் கிழக்கே உள்ள இந் நாட்டில் எண்ணெய் வளமும் எரிவாயும் மிகமிக அதிகம். முத்துக்களும் ஏராளமாக விளைகிறது. மிகப் பணக்கார நாடு.

வெறும் 665 சதுர கி.மீ. பரப்புள்ள நாட்டின் மக்கள் தொகை 7 லட்சம். ஷியா, சன்னி பிரிவுகளைச் சேர்ந்த இசுலாமியர்கள் தான் 81 விழுக்காடு உள் ளனர்.கிறித்துவர்கள் 9 விழுக்காடு உள்ளனர். அரபி, இங்கிலீஷ், உருது, பார்சி ஆகிய மொழி பேசுகின்றனர்.

பரம்பரை மன்னராட்சி முறை இன்னும் இருக்கிறது; மதகுருக்களின் கட்டுப்பாட்டில் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். மதத்தின் பிடிப்பு அவ்வளவு இறுக்கமானது.

--------------------நன்றி:-"விடுதலை"30-5-2009

0 comments: