Search This Blog

12.6.08

குறி பார்த்தல் (2)

பதர் நெற்களை கதிர் விடச் செய்யலாமே! சில சமயங்களில் குறி கேட்கப் போனவர் களுடைய கோரிக்கைகளைக் குறி சொல்லுகின்றவன் அவர் கள் அவனிடம் சொல்லாமலே அவன் தெரிந்துகொண்டவன் போல் தெரிவிக்கிறான். இதை மாயாவாதத்தில் எண்ணத்தைத் தெரியப்படுத்தாமலே தெரிந்துகொள்வததென்று கூறுவர். இதனை மறைவான ஞானமெனவும் கூறுவர். இந்தக் குறி வித்தையில் சில மோசங்கள் நடக்கின்றன. சில இடங்களில் ரகசிய ஆள்களைக் கொண்டு விசாரித்துத் தெரிந்து கொண்ட பிறகு குறி சொல்லு கிறார்கள்.

சாதாரணமாகக் குடுகுடுப்பைக்காரர்கள் இந்த மோசத்தைச் செய்கிறார்கள். சிலர் தங்களுடைய குறைகளை உதடு அசைவதாலும், கை விரல்கள் ஆடுவதாலும், மெதுவாகத் தங்களுக்குள்ளே பேசிக் கொள்வதாலும், தங்கள் முகப்பார்வையாலும் தெரியும்படி செய்கின்றார்கள். கூர் மையான பார்வையுடையோ னாகிய குறி சொல்வோன், இந்தக் கைகளைக் கொண்டே அவர்களுடைய எண்ணங் களைத் தெரிந்து கொள்கின் றான். குறி சொல்லுகின்றவன் கேட்கும் கேள்விகளுக்குக் கொடுக்கும் விடைகளாலே யும், தங்களுக்குத் தெரியாமலே தங்கள் கோரிக்கைகளை வெளியிட்டு விடுகின்றார்கள்.

இத்தியாதி தந்திரங்களால் குறி சொல்லுகின்றவன் தன் னைப் பிறர் நம்பும்படி செய் கின்றான். இந்தச் சூழ்ச்சிகளை அறியாத பாமர மக்கள் குறி காரன் சொல்வதெல்லாம் மது ரைவீரன் அருளாலென்றும், தெய்வீகத் தன்மையாலென் றும், மதி மயங்கி மூடநம்பிக் கையை வளர்த்து வருகின் றார்கள். இந்தக் குறி மேடை களில் எத்தனைபேர் தங்கள் பொருளை இழந்தவர்கள், மதியை இழந்தவர்கள், மானத்தை இழந்தவர்கள். இவைகளுக்குக் கணக்கில்லை! ஆனால் நமக் கும், நமது நாட்டுக்கும் நன்மை பயக்க நமது சுயமரியாதை யோர் அதிர்ஷ்ட வசமாகத் தோன்றி இத்தியாதி மோசங் கள் வெளிப்படுத்திவரும் நமது நாட்டின் பாக்கியமே பாக்கியம்.

அதாவது கை பார்த்துக் குறி சொல்லும் வித்தையொன்றுள்ளது. கை ரேகைகளைப் பார்த்துக் குற வர்கள் சாதாரணமாகக் கிராமங்களில் குறி சொல்வதுண்டு, குடுகுடுப்பைக்காரனும் இவ் விதக் குறிகளைச் சொல் கின்றான். பண்டார வேஷம் போட்டுக் கொண்டு, ஓலைச் சுவடியொன்றை கையிலேந்தி, கையைப் பார்த்துக் குறி சொல்லும் வேஷக்காரர்களைச் சென்னைத் தெருக்களிலும், நாட்டுப்புறங்களிலும் பார்க்க லாம். நமது சென்னை மூர் மார்க்கெட்டுக்கு அருகில் அநேகர் ஆரூடம் அதாவது ஒருவிதக் குறி சொல்லிப் பிழைக்கின்றார்கள். கையைப் பார்கின்றான், ஓலைச் சுவ டியோ, அல்லது காகிதச் சுவ டியையோ திருப்புகின்றான். உடனே உனது காரியம் கை கூடுமென்கின்றான். உனது மகன் திரும்பி வருவான் என்கின் றான். உனது புருஷனுக்கு வேலை கிடைக்குமென்கின்றான்.

இத்தியாதி அற்ப விஷயங் களைத்தான் தெரிந்து சொல் வதுபோல நடித்து இந்தக் குறி சொன்னதற்கு கால் அணா அதாவது மூன்று பைசா பெறு கிறான். இந்த ஏழை சொல்லும் குறிக்கும், இந்து முதலிய பேப்பர்களில் விளம்பரப்படுத்தும் பிரசண்ட சோதிடருக்கும் ஒன்றும் வித்தியாசமில்லையென அறிக; ஒரே வித்தியாசமுண்டு. அதா வது, ஒருவன் காலணாவுக்குக் குறியோ, சோதிடமோ, ஆரூடமோ சொல்கின்றான். மற்றொருவன் ஒரு ரூபாய் முதல் 5, 10, 15 வரை பெறுகின் றான் இரண்டு நபரும் சொல் லும் சோதிடங்களில் ஒன்று மெய்யில்லை. எல்லாம் மன மயக்கே பொய்யை நம்புவதற்கு வெறும் நம்பிக்கை தான் வேண்டும். லண்டன் பட்டணத்தில் சில பெரிய தெருக்களில் கொட்டை கொட்டையான எழுத்துகளால் இங்கு கைபார்த் துக் குறி சொல்லப்படும். இங்கு எல்லாக் குறைகளும் நிவர்த் திக்கப்படும் மென்று விளம் பரமிடும் விளம்பரப் பலகை களைப் பார்க்கலாம். அங்கும், இங்கும் எங்கும் பாமர ஜனங் கள் தங்கள் சஞ்சலங்களை சிரமமான வழிகளில் போக்கிக் கொள்ளாமல் மூட சோதி டனிடம் குறிகேட்டு மயங்கு கின்றார்கள். அறிவை இழந்தவர்கள்தான் இத்தியாதி பித்தலாட்டங்களுக்கு இடம் கொடுப்பார்களே யொழிய அறிவுடையோர் இந்த மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடார்கள். உலகில் கோடானு கோடி மக்கள் காலை முதல் இரவு வரை உழைத்து தங்கள் ஜீவனத்தைச் செய்து உயிர் பிழைத்து வருகின்றார்கள். ஆனால், சிலர் வேலையொன் றும் செய்யாமல் சோம்பல் கொண்டு அறிவையும் வளரச் செய்யாமல், பகுத்தறிவையும் கொன்று சிற்சில மோச வார்த்தைகளைக் கேட்டு ஒருவித ஆறுதலை அடைகின் றார்கள். சோதிடம், ஆரூடம், குறி முதலிய வித்தைகள் ஒரு வகுப்பார் பிழைக்க ஏற்படுத் திக் கொண்ட உபாயங்களென அறிக.

விஞ்ஞான முறையால் இனிவரும் சம்பவங்களை அறி வது போல் இந்தக் குறிகளா லும், சோதிடத்தாலும் கைகுறி களாலும், ஒன்றும் தெரிந்து கொள்ள வகை இல்லை. எங்கும் தெரிந்துகொண்டவரு மில்லை. சோம்பேறிகள் மனத் திருப்திக்காக உண்டாக்கிக் கொண்டது இந்த வித்தை களேயொழிய பொதுமக்களுக் குப் பொதுப் பிரயோசனத் துக்கு ஏற்பட்ட வித்தைகள் அல்லவென அறிதல் வேண்டும்.

கையிலுள்ள கோடுகளைப் பார்த்து ஜோஸ்யம் சொல்வது உலகம் முழுமையும் பரவி யுள்ள ஓர் வித்தையாகும். அது வெறும் பழக்கமே அல்லாது உண்மையல்ல. நமது கையி லுள்ள கோடுகளைப் போல் நமக்கு ஒரு காலத்து பூர்வப் பங்காளிகளாகிய வாலில்லாக் குரங்குகளுக்கும் உண்டு. இன் னும் தூரப் பங்காளிகளாகிய வாலுடைய குரங்குகளுக்கும், கையில் கோடுகள் இருக் கின்றன. ஆனால், காட்சி சாலைகளில் வசிக்கும் காட்டு மனிதக் குரங்குகளின் கைகளைப் பார்த்து சோதிடம் சொல்வார் யாருமில்லை! நமது கைகளில் இருக்கும் கோடுகள் பூர்வ காலத்தில் நமது குரங்கு மூதாதையர்கள் மரத்தில் தாவிப் பிடித்துத் தாண்டும் காலை யிலுண்டான தோல் மடிப்புகள், அந்த வம்சத்திலிருந்து வந்தவர்களாகிய நமக்கும் அந்த மடிப்புகள் பரம்பரை யாக தோன்றுகின்றன. நமது கைகோடுகள் காட்டுக் குரங்கு களின் வம்ச பரம்பரையாக வந்தவை. பல கோடி வருஷங் களாக நமது மூதாதைகள் மரங்களில் வாழுங்காலை தாவுவதற்குத் தங்கள் கைகளை உபயோகித்து வந்து இருக்க வேண்டும்.

----------- ம. சிங்காரவேலர் அவர்கள் எழுதியது

0 comments: