Search This Blog

20.11.09

கர்மபலன் என்பதுதானே இந்துத்துவாவாதிகளின் சித்தாந்தம்!


கர்மயோக்

இந்தியாவில் மொத்த சொத்தில் நான்கில் ஒரு பங்கு 48 பணக்காரர்களிடம் உள்ளது. 80 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு ஈட்டும் வருமானம் ரூ.20. உலகில் உள்ள கோடீஸ்வரர்கள் முதல் 10 பேர்களில் நான்கு பேர் இந்தியாவில் உள்ளனர்.

இந்தியாவில் பெரிய வசதி படைத்த நிறுவனங்களிலிருந்து வரி பாக்கி ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்.

இந்தியாவில் உள்ள கறுப்புப் பணம் ரூ.75 லட்சம் கோடி.

இந்தியாவின் மொத்த கடனே ரூ.34 லட்சம் கோடிதான்.

உலகில் மனித வள வளர்ச்சியில் இந்தியாவுக்கு 127 ஆம் இடம்.

சுகாதாரமான நிலையில் குடிநீர் வசதியில்லாத கிராமங்கள் இந்தியாவில் 2.17 லட்சம்.

இந்தியாவில் சொந்த வீடுகள் அற்றவர்கள் 2 கோடியே 40 லட்சம்.

ஊழல் நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு உரிய இடம் 74.

வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழும் மக்களிடம்கூட இலஞ்சமாக வாங்கப்படும் தொகை ரூ.28,068 கோடியாம்.

ஊட்டச்சத்தின்றி அவதிப்படும் குழந்தைகள் 50 விழுக்காடாம்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வங்கிகளில் வைப்பு நிதி ரூ.1835 கோடியாம்.

இந்தியாவைப்பற்றிய வித்தியாசமான முரண்பாடான ஒரு புள்ளி விவரக் கொத்து இது.

இது எப்படியோ இருக்கட்டும். தலைகுனிய வேண்டிய ஒரு தகவல் இருக்கிறது.

இந்தியாவில் போதிய கழிப்பறை வசதியில்லாத மக்கள் 60 கோடி என்பதுதான் அந்தப் புள்ளி விவரம்.

வனாந்தனரமான இடங்களிலும், இரயில் தண்டவாளங்களின் வெளிப்பகுதிகளிலும் காலைக் கடன்களைக் கழிக்கின்றனர். பெண்களோ இரவுவரை காத்திருக்கவேண்டியுள்ளது.

ஒருமுறை ருசிய அதிபர் குருச்சேவ் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்தக் காட்சியைப் பார்த்து தகவல் அறிந்து தம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

மூன்று வேளை சாப்பாடு இல்லாதவர்களுக்குக் கழிவறை ஏன் என்ற கேள்வியைக் கேட்காமல் இருந்தால் சரி.

இன்னொரு கொடுமை மலத்தை அள்ளும் மக்கள் 6.7 கோடியாகும். இது கர்மயோக் தெய்வத் திருப்பணி என்று கூறுகிற முதலமைச்சர் மோடிகளும் இருக்கிறார்களே!

கர்மபலன் என்பதுதானே இந்துத்துவாவாதிகளின் சித்தாந்தம்!

---------------------- மயிலாடன் அவர்கள் 20-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: