Search This Blog

29.11.08

மூட நம்பிக்கைகளை முறியடித்த கலைவாணர்


கலைவாணர்

இன்று - நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் (1908).

மக்கள் மத்தியில் நடமாடும் நச்சரவமான மூட நம்பிக்கைகளைக் களையும் ஒரு ஊடகமாகக் கலையை பயன்படுத்திய பகுத்தறிவாளர் அவர். அதனால் தான் கலைவாணர் - ஒரு சூழ்ச் சிக்குப் பலியாகி சிறைப்பட்ட போது, கலைவாணரே உமக்கா இந்த நிலை? என்று கண்ணீர் அறிக்கையை வெளியிட்டார் தந்தை பெரியார்.

சிறையிலிருந்து விடுதலையாகி - தந்தை பெரியாரை கலைவாணர் சந்திக்கச் சென்ற தருணத்தில், தந்தை பெரியார் தம் கண்களில் நீர்மல்க என் கண்ணே, ஒன்றும் கவலைப் படாதே! உனக்கு ஒரு குறையுமில்லை என்று கூறினார் என்றால், கலைவாணரின் மதிப்பு - எவரஸ்டு உயரத்தையும் விஞ்சிட வில்லையா?

திரைப்படத்தில் பகுத்தறிவுக் கருத்துகளையும், இயக்க வளர்ச்சிக் கண்ணோட்டத்திலும் அவர் புகுத்திய காட்சிகளும், பாடல்களும் (பொருத்தமாக உடுமலை நாராயணகவியும் அவருக்குக் கிடைத்தார்) தனித் தன்மையானவை.

தீனா - மூனா - கானா - எங்கள் தீனா - மூனா - கானா அறிவினைப் பெருக்கிடும். உற வினை வளர்த்திடும் திருக்குறள் முன்னணிக் கழகம் (தீனா...) பகுத்தறிவோடு நாட்டினர் வாழ திருக்குறள் தந்தவர் பெரியார்.

வள்ளுவப் பெரியார்! தங்கைகளுக்கு ஒரு தமக்கையைப்போலே,

தம்பியோருக்கொரு அண்ணாவைப் போலே

சரியும், தவறும் இதுவெனக் காட்டும்

தமிழன் பெருமைகளை நிலைநாட்டும்

தீனா - மூனா - கானா

இந்தப் பாடலின் மூலம் தந்தைபெரியார், அறிஞர் அண்ணா, தி.மு.க., பகுத்தறிவு என்பனவற்றை எவ்வளவு இலாவகமாகப் பயன்படுத்திப் பாடியிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

கலை என்பது களையாகிவிட்டதோ என்று கவலைப்படும் இந்தக் காலகட்டத்தில், கலை வாணர் என்.எஸ்.கே. நூற் றாண்டு விழா வந்திருக்கிறது.

கலைவாணரைப் போற்றாத கலைஞர்கள் கிடையாது.

உண்மையிலேயே அவரை மதிப்பது என்பது கலையை மக்களின் வளர்ச்சிக்குப் பயன் படுத்துவதே!

சிந்திப்பார்களாக!

---------------- மயிலாடன் அவ்ர்கள் 29-11-2008 "விடுதலை" யில் எழுதியது.

0 comments: