Search This Blog

25.12.10

பெரியார் மீது தினமணிப் பார்ப்பானுக்கு என்ன அக்கறை?


தினமணி அய்யர்வாளும் - வால்களும்!


தந்தை பெரியார் நினைவு நாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அய்யா அவர்களின் சிந்தனைகளை, கொள்கைகளைப் பரப்பும் நாளாகவும், கூர்தீட்டிக் கொள்ளும் நாளாகவும், உறுதி எடுக்கும் நாளாகவும் கடைப்பிடிக்கின் றனர்.

சென்னையில் திராவிடர் கழகத் தலைமை இடத்தில் நூல்கள் வெளியீட்டு விழாவும், கருத்தரங்கமும் நடைபெற்றன. தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் நினைவு நாளில் கொள்கை வழிப்பட்ட செயல்பாடு களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வரலாற்றுக் குறிப்பு நாளில் - பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரரும், திருவாளர் சோ ராமசாமியின் சீடருமான ஒருவரை ஆசிரியராகக் கொண்ட பார்ப்பன நாளேடு ஒன்று தந்தை பெரியார் நினைவு நாளைக் கொச்சைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. இயக்கத்திலிருந்து ஒழுங்கு கட்டுப்பாட்டின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட சிலரை இதற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதுபோன்றவர்கள் தமிழகத்தில் மலிவாகக் கிடைப்பார்கள் என்பதுதான் தெரிந்த செய்தியாயிற்றே!

தந்தை பெரியார் இறுதியாகப் பயன் படுத்திய வேன் புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை வளாகத்தில் குப்பைபோல கிடக்கிறதாம் - அடடே, பெரியாரின் வேன் மீது இந்த ஆர்.எஸ்.எஸ். பத்திரிகைக் காரருக்கு எவ்வளவு பெரிய அக்கறை - எத்தகைய கரிசனம்!

திருச்சி பெரியார் மாளிகையில் பெரியார் வேன் ஒன்றும் குப்பை போல கிடக்கவில்லை. அதற்கென்று ஷெட் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில்தான் நிறுத்தப் பட்டுப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் நேரில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். அந்த ஷெட்டின் முகப்பில் தந்தை பெரியார் இறுதியாகப் பயணம் செய்த வேன் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பக்கத்திலேயே அய்யா - அம்மா படிப்பகம் இருக்கிறது.

இதில் உள்ள பார்ப்பனத்தனம் என்ன தெரியுமா? அந்த எழுத்துகள் தெரியாமலும், பக்கத்தில் உள்ள படிப்பகத்தை மறைத்தும் நிழற்படத்தை வெளியிட் டுள்ளது.

அதேநேரத்தில் பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன் என்ற பெயர்ப் பலகை தெரியும் வகையில் அந்தப் படத்தை வெளியிட்டு பார், பார்! பெரியார் கடைசியாகப் பயன் படுத்திய வேன் எப்படி இருக்கிறது? பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன் எப்படி இருக் கிறது? என்று விளையாட்டு காட்டுகிறது. இதில் என்ன பெரிய பிரச்சினை இருக் கிறது? பெரியார் வேன் பெரியார் மாளிகை யில் இருக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக இருக்கிறது - சர்வீஸ் ஸ்டேஷன் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறது. இதில் எந்தப் புதிரைக் கண்டுபிடித்துவிட் டார் இந்தப் புதிய பூணூல் வாஸ் கோடகாமா?

பெரியார் கற்றுத் தந்த புத்தி என்று ஒன்று இருக்கிறது. பார்ப்பான் ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்கிறான் என்றால், அதுவும் தந்தை பெரியார் பற்றிப் பேச வருகிறான் என்றால், அதில் ஏதோ வஞ்சகம் இருக்கிறது, வன்மம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டாமா?

தந்தை பெரியார் மீதோ, அவர்தம் கொள்கை மீதோ - இந்தத் தினமணிப் பார்ப்பானுக்கு என்ன அக்கறை?

தந்தை பெரியார் சொல்லுவார் - இராமாயணத்தில் இராமனுக்கென்று இருந்த சொந்தப் படை என்ன? ஒன்றும் கிடையாது - வானரப் படையைக் கொண்டே இராவணனை எதிர்த்துச் சண்டை போட்டான்; ஒரு பார்ப்பனர் இராமாயணத்தில் செத்தான் இல்லை என்பார்கள்.

பார்ப்பனர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இராமாயணத்தைப் படித்துக் கொள்ளவேண்டும் என்று சர்.சி.பி. இராமசாமி அய்யர் சொன்னது தான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

அந்த இராமாயண யுக்தியை அனுசரித்தே இந்த மூன்று பேர்களைப் பிடித்து தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, அவர் விட்டுச் சென்ற பணிகளை வீரியத்துடனும், விவேகத்துடனும் நடத்தி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர்மீது சேறு வாரி இறைக்கச் செய்கிறது ஒரு பார்ப்பன ஏடு என்றால், இதன் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் என்ற வார்த்தையை உச்சரித்தால் மட்டும் போதாது. ஒரு பார்ப்பன ஏடு எந்த நோக்கத்தில் தங்களைக் கையாளாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்கிற அடிப்படையைக் கூடப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், ஒரு காலத்தில் எப்படித்தான் கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு கழகத்தில் இருந்தனர் என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

எப்படியோ விளம்பரம் கிடைத்து விட்டது - போட்டோவும் வெளிவந்து விட்டது பார்ப்பன ஏட்டில் - அதுபோதும் என்கிற மலிவான நிலைக்கு ஆளான வர்களைக் கண்டு பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

அய்யயோ பெரியார் சொத்துகளை விற்கிறார்கள், விற்கிறார்கள் என்று மாரடித்து ஒப்பாரி வைக்கிறார்கள்.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துகள் என்ன? பெரியார் மறைவிற்குப் பிறகு அவை வளர்ந்திருக்கிறதா - தேய்ந்து இருக்கிறதா என்பது கருத்துக் குருடர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருக்குமே தெரிந்த விடயம்.

பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றம் எப்படி இருந்தது? இப்பொழுது அது எப்படி இருக்கிறது? விடுதலைப் பணிமனை எப்படி இருந்தது - இப்பொழுது அதன் பொலிவு என்ன?

விடுதலை அச்சுக்கூடம் எப்படி இருந்தது? இப்பொழுது எந்த அளவுக்கு நவீன மயமாகி உள்ளது? விடுதலை யின் அச்சும், வடிவமும் எப்படி இருந்தது? (விடுதலையைப் படிப்பதற்கே ஒரு தனிப் பயிற்சி வேண்டும் என்ற நிலைதான் அன்று) இப்பொழுது அதன் எழிலும், தெளிவும் வாசகர்களை எப்படிக் கவர்ந் திருக்கிறது. உண்மை இதழும் அப்படியே!

தந்தை பெரியார் காலத்தில் வெளி வந்த இயக்க வெளியீடுகளையும், இப்பொழுது வெளிவரும் வெளியீடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கட்டும். அறிவு நாணயம் உள்ளவர்கள் உண்மையை ஒப்புக்கொள்வார்கள்.

டில்லியில் கம்பீரமாக நிற்கும் பெரியார் மய்யம் எதிரிகளையும், துரோகிகளையும் பார்த்து எள்ளி நகையாடும். டில்லியில் பெரியார் மய்யம் கொள்கிறார் என்றால், தினமணிக் கூட்டத்துக்கு நெரி கட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது; விபீடணர்களுக்கு வாந்தியும், பேதியும் ஏற்படுவானேன்?

பெரியார் படிப்பகங்கள்பற்றியெல்லாம் கிறுக்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களிலும் நிரந்தரமான கான்கிரீட் கட்டடங்களாக அவை உருமாறியிருக்கின்றன என்ற உண்மையைக் கூடத் தெரியாமல், உளறுகிறார்களே, என்ன செய்ய! புதிய இடங்களில்தான் எத்தனை எத்தனை பெரியார் படிப்பகங்கள் - நூலகங்கள்!

பெரியார் திடலில் இயங்கும் நூலகம் - ஆய்வகம் உலகத் தரத்தில் ஓங்கி நிற்கிறதே! 52333 நூல்கள் அணி வகுக்கின்றனவே - தமிழர் தலைவர் அரிதில் சேர்த்து வைத்த தமது சொந்த 10,277 நூல்களை அளித்து உதவினாரே! பன்னாட்டைச் சேர்ந்தவர்களும் ஆய்வுக்காக இங்கே தானே வந்து கொண்டிருக்கின்றனர்!

வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று எழுதலாமா?

ஒரு பெரியார் மய்யத்தை பி.ஜே.பி. ஆட்சியில் இடித்தார்கள் என்றால், அதன் பலன் என்ன? ஒன்றுக்குப் பதில் இரண்டு பெரியார் மய்யங்கள் - புதுடில்லியில்.

பெரியார் மய்யத்தின் அருமை - அதனால் ஏற்படப் போகும் விளைவு பார்ப்பனர்களுக்கும், சங் பரிவார்க் கூட்டத்துக்கும் நன்கு தெரிந்திருக்கிறது. பெரியார் அங்கு சுற்றி இங்கு சுற்றி இந்தியாவின் தலைநகரான டில்லிக்கே வந்துவிட்டாரே என்கிற ஆத்திரப் புயலில் அவதிப்படுகிறார்கள்.

இவர்களுக்கு என்ன வந்தது? பெரியார் மய்யம் இடிக்கப்பட்டபோது ஒருக்கால் இவர்களும் லட்டு சாப்பிட்டு இருப்பார்களோ!

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் பழைய நிலையையும், புதிய பொலிவையும் பார்த்துப் பூரித்துப் போகிறார்கள்; பொறாமைக்காரர்களோ புழுங்கிச் சாகிறார்கள்.

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தமது கவிதை (ஒரு துளி வானம் ஒரு துளி பூமி!) நூல் விற்பனை இலாபத்தை நாகம்மையார் இல்லத்திற்கு அளித்து மகிழ்ந்தார். நல்லவர்கள் பாராட்டுகிறார்கள்; நல்லவர்களாக இருக்க முடியாதவர்கள் தங்களின் அருங் குணங்களைக் காட்டிக் கொள்கி றார்கள், அவ்வளவுதான்!

ஒவ்வொரு காலகட்டத்திலும் இயக்கத்தால் விளம்பரம் ஆனவர்கள். அவ்வப்போது துரோகிகள் ஆகாமல் தப்பிக்க முடியாதவர்களாகவே ஆகி யிருக்கின்றனர். தமிழர்களின் யோக்கியதை இதுதான் போலும்!

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் மறைவிற்குப் பிறகு கழகத்தின் பணிகள், தமிழர் தலைவர் தலைமையில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்ற சாதனைகள் அளப்பரியன.

திராவிடர் கழகம் - பெரியார் திடல் விடுதலை என்ன வழிகாட்டுகிறதோ அதுதான் உண்மையான பெரியார் பாட்டை என்பது உலகம் பூராவும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.

இந்தத் தலைமை, அமைப்பின் மூலம் தான் தந்தை பெரியார் என்ற அங்கீ காரத்தோடு காரியங்களைச் சாதித்துக் கொடுக்க முடியும்; தமிழர்களின் உரிமை களை மீட்டுக் கொடுக்க முடியும்; சமூகநீதிக் கொடியை வெற்றிகரமாகப் பறக்க விட முடியும்; பகுத்தறிவுப் பணியை வலுவாகச் செய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட ஒன்று. தினமணிகள் நற்சான்று கொடுக்கத் தேவையில்லை.

கிராமப் பிரச்சாரம், கல்வி நிறுவனங்கள் முன் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், புத்தகக் கண்காட்சி, பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை, பெரியாரியல் பயிற்சி முகாம்கள், குழந்தைகள் பழகு முகாம், சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம், பெரியார் சமூகக் காப்பு அணி, பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் சடுகுடுப் போட்டிகள், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனி பேச்சுப் போட்டி; தலா முதல் பரிசு ஒரு லட்சம்; இரண்டாம் பரிசு 75 ஆயிரம்; மூன்றாம் பரிசு 50 ஆயிரம்; 2010 இல் மாணவ, மாணவிகள் பங்கேற்பு 20 ஆயிரம்.

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை, பெரியார் திரை குறும்படப் போட்டி, பெரியார் வலைக்காட்சி, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் உருவாக்கம், தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழா (புரட்சிக்கவிஞர் விழா), முத்தமிழ் மன்ற விழா,

பெரியார் திரைப்படம் சாதாரணமா? (தெலுங்கிலும் வெளிவந்துவிட்டது). உலகப் புகழ்பெற்ற நாத்திக நெறி நூலான கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற பெயரில் தமிழில் வெளியிடும் உரிமை பெற்று வெளியிடப்பட்டது.

குடியரசுத் தொகுப்பு இதுவரை 25.

4 பக்கங்களாக வெளிவந்த விடுதலை இப்பொழுது எட்டுப் பக்கங்கள்;

சென்னையில் மட்டும் இருந்த பதிப்பு, மேலும் திருச்சியிலும் ஒரு பதிப்பு.

தந்தை பெரியார் காலத்தில் மாதம் ஒரு முறை வெளிவந்த உண்மை இதழ் இப்பொழுது மாதம் இருமுறை.

நிறுத்தப்பட்ட தி மாடர்ன் ரேசனலிஸ்ட் மீண்டும் தொடங்கி வெளிவருதல்;

புதிதாகக் குழந்தைகளுக்காகப் பெரியார் பிஞ்சு மாதப் பத்திரிகை.

அலை அலையான மாநாடுகள்; அண்மைக் காலத்தில் மட்டும் சென்னை யில் மாணவர் கழக மாநாடு; மதுரையில் மாணவர் கழக மாநாடு; கரூர், வாலாஜா, சீர்காழி, திருப்பத்தூர், திருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடுகள்;

இந்தியப் பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் (ஃபெரா) 7 ஆவது இந்திய மாநாடு - சென்னையில்!

ஒரு ஆறு மாத காலத்துக்குள் இத்தனை இத்தனை மாநாடுகளையும், மாநாடுகளை ஒட்டிய மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிகளையும் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த அமைப்பு கள் நடத்தியுள்ளன என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

போராட்டங்கள்தான் கொஞ்சமா, நஞ்சமா?

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம் (16.2.2010).

மத்திய அரசின் புதிய கல்வி மசோ தாவை எதிர்த்து திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் சென்னையில் பேரணி (23.2.2010).

சாமியர்களின் கயமத்தனங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (11.3.2010).

ஜாதிவாரிக் கணக்கெடுப்பைக் கோரி மத்திய அரசை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் (10.5.2010).

சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டத்தை உடனடியாகச் செயல்படுத்தக் கோரி ரயில் மறியல் போராட்டம் (5.6.2010).

என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்று நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் (30.6.2010).

தமிழக மீனவர்கள் சிங்களவர்களால் தாக்கப்படுவதைக் கண்டித்து

நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் (14.7.2010).

நாடாளுமன்ற முடக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் (10.12.2010).

நுழைவுத் தேர்வை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் கழக மாணவரணி - இளைஞரணி சார்பில் வரும் 29 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம். இப்படி அலை அலையாகப் போராட்ட நிகழ்ச்சிகள்! சாதனைகள்தான் கொஞ்சமா?

எம்.ஜி.ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணை ஒழிக்கப்பட்டதற்கு யார் காரணம்? அதன் விளைவாக 49 சதவிகிதமாக இருந்து வந்த இட ஒதுக்கீட்டின் சதவிகிதம் 68 ஆக உயர்ந்ததற்குக் காரணம் யாருடைய முயற்சி?

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு அறவேயில்லை என்பதை மாற்றி, மண்டல் குழுப் பரிந்துரைப்படி 27 சதவிகித இட ஒதுக்கீடு இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத் திடக் காரணமாக இருந்தது யார்?

(42 மாநாடுகள், 16 போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியுள்ளது!).

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை (கலைஞர் அவர்கள் 5 ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நிலையில், மீண்டும் இதற்காக மசோதா நிறைவேற்றம் - உச்சநீதிமன்ற முட்டுக்கட்டையால் தீர்ப்பின் தாமதத்தால் நிலுவையில் நிற்கிறது).

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு.

சிதம்பரம் நடராஜன் கோயில், தீட்சதர்ப் பார்ப்பனர்கள் கையிலிருந்து இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

(பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் கழகம் நடத்தியது!).

இவ்வளவையும் தொகுத்துப் பார்த்தால், இவை நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த கழகத் தினருக்கே மலைப்பாகத் தோன்றுகிறது!

பார்ப்பனர்களுக்கு இதன் தன்மை நன்கு புரிந்தே இருக்கிறது. அதனால்தான் பழனியில் மாநாடு கூட்டி தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைப் பார்ப்பனர்கள் பாடை கட்டித் தூக்கிச் சென்றனர். இதுதான் முக்கியமான அளவுகோல்.

தினமணியின் பூணூல்தேள் கொடுக்கை நீட்டிக் கொண்டு அலைவதற்குக் காரணமே, தமிழர் தலைவர் தலைமையிலான திராவிடர் கழகத்தின் இத்தகு ஓய்வறியா மலை மலையான, அலை அலையான நடவடிக்கைகளே!

இந்தக் காரணத்துக்காகப் பார்ப்பனர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள் - கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால்,

கழகத்தால் வெளியேற்றப்பட்டவர்கள் கடை விரித்தேன் கொள்வாரில்லை; கட்டிக் கொண்டோம் என்ற வெறுமையில், இயலாமையில் பார்ப்பனர்களோடு கூட்டணி சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். விளம்பர சடகோபம் எத்தனை நாளைக்கு?

வெட்கம்! வெட்கம்!! மகா வெட்கம்!!!

1974 இல் மூன்று தொகுதிகளை வெளியிட்டு, அதற்குப்பின் 36 ஆண்டுகள் கழித்து அடுத்த பதிப்பைக் கொண்டு வந்த சாதனை சக்ரவர்த்தி ஒருவரும் சேர்ந்துகொண்டு மண்ணை வாரி இறைக்கிறார்.

அரசாங்கத்திடம் இடம் வாங்கி அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளாரே - அரசிடம் எந்தக் காரணங்களைப் பணிகளைச் செய்வதற்கு இனாமாக இடம் வாங்கினாரோ அந்தப் பணிகள் நடைபெற்றுள்ளனவா என்ற கேள்வியை எழுப்பினால், அந்த டிரஸ்ட் அரசாங்கத்தின் கஜானாவுக்குள் முடங்கிவிடுமே!

திருச்சி அருகில் (நாத்திகக் கல்லூரிக்காக) அரசிடம் நிலம் வாங்கி தனிச் சொத்தாக்கி விற்றுக் கடன் கட்டப்பட்டதா இல்லையா?

தோழர்களே,

1971 நிலை தமிழ்நாட்டில் மீண்டும் சுழன்று வீசிக்கொண்டு இருக்கிறது.

2011 சட்டப் பேரவைத் தேர்தலும், 1971 தேர்தலின் மறு அச்சாக நடைபெற உள்ளது.

1971 தேர்தலில் இதே தினமணி அய்யப்பனையும், வினாயகனையும் வேண்டிக் கொள்ளவில்லையா - தி.மு.க. தோற்கவேண்டும் என்று!

அந்த நிலையை இப்பொழுதும் பார்ப்பனர்கள் கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்!

மானமிகு கலைஞர் அவர்களும் ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சந்திக்கத் தயார் என்று தோள் தட்டிவிட்டார்!

ஆரியத்தின் படைக்கலன் வரிசையிலே தினமணி பூணூலை முறுக்கி முண்டா தட்டுகிறது.

இந்த நிலையில், திராவிடர் கழகத்தைக் கொச்சைப் படுத்தித் தீரவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டு இருக்கிறது.

யுத்த இரகசியத்தில் எப்பொழுதும் அந்தக் கால இராமாயண சுக்ரீவன், விபீஷணன்கள், இந்தக் கால கருணாக்களும் தேவைப்படுவார்கள்.

அய்ந்தாம் படைதானே ஆரியத்துக்குத் தேவை. அதில் ஒரு கட்டம்தான் தினமணி கட்டுரையின் (24.12.2010) சாரமாகும்.

தினமணி அய்யர்வாளுக்கு வால்களும் கிடைத்திருக்கின்றன.

நமது செயல்பாடு என்கிற எரிமலை வீச்சுக்கு முன்னே இந்தப் பஞ்சு மூட்டைகள் எம்மாத்திரம்!

குறிப்பு: இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான்.

- தந்தை பெரியார்

(விடுதலைமலர், 17.9.1969).


----------------------------25-12-2010 “விடுதலை” யில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

3 comments:

Thamizhan said...

சுப்பிரமணி சாமி கூட தா.பாண்டியன் ஒரே மேடையிலா ? பார்ப்பனருடன் சேர்ந்து தமிழனை எதிர்த்துப் பேசும் யாரும் தமிழினத்திற்கு எந்த நல்லதும் செய்து விட முடியாது.பச்சோந்திகளுடன் பங்காளித் தனம் வேண்டாம்.

நல்லதந்தி said...

அடேங்கப்பா! இத்தனைப் போராட்டம் இந்த ஆறு மாதத்திற்குள்ளாகவா?. மெத்தமகிழ்ச்சி!.
ஆனால் இந்தப் போராட்டம் நீங்கள் ஆதரிக்கும் தி.மு.க வை எதிர்த்தா?. அல்லது தி.மு.க. ஆதரித்து, மந்திரி சபையில் பங்கேற்று இருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை எதிர்த்தா?. இதற்கு பதில் அளிக்க உங்களால் முடியுமா?a

சி.பி.செந்தில்குமார் said...

குட் போஸ்ட் இண்ட்லியில் இணைக்கவில்லையா?