Search This Blog

24.12.10

தந்தை பெரியார் பற்றி தலைவர்களின் புகழாரங்கள்



தந்தை பெரியார் மறைந்தபோது தலைவர்கள் தந்தை பெரியார் பற்றி கூறியவை சில

குடியரசுத் தலைவர் வி.வி.கிரி

காலஞ்சென்ற திரு.ஈ.வெ.ராமசாமி நயம்மிக்கதோர் தலைவர், வீரம் மிக்கதோர் போராட்டக்காரர். அன்னாரது மறைவுச் செய்தி கேட்டு நான் மிக்க வருத்தமுறுகின்றேன். அவர் எப்பொழுதுமே சிறந்ததோர் போராட்டக்காரராக நிகழ்ந்திருக்கிறார். தேச விடுதலைக்கான போராட்டத்தில் அவர் முக்கியமான பங்கினை வகித்திருக்கிறார். பின்னர், அவர் முக்கியமான பங்கினை வகித்திருக்கிறார். பின்னர், அவர் தாம் கண்ட கருத்துக்கிசைய சமூக சீர்த் திருத்தங்களுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். அன்னாரை இழந்து துயருறுகின்றவர்களுக்குத் தயவு செய்து எனது ஆழ்ந்த அனுதாபத்தைக் கூறுங்கள்.

பிரதமர் இந்திராகாந்தி

பெரியாரது மறைவுபற்றி அறிந்து துயருற்றேன். சர்ச்சைக்குரியனவற்றில் ஈடுபாடு கொண்டு, அதில் களிப்பெய்திய முனைப்பாற்றல் மிக்க மனிதர் அவர். ஏற்றுக் கொள்ளப்பட்ட பல கருத்துகளை எதிர்த்து அறைகூவி நின்றவர் அவர். அவருடன் சேர்ந்து பணியாற்றிய அவர் இயக்க ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

ஜெயப்பிரகாஷ் நாராயண் (சர்வோதயத் தலைவர்)

பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஜாதி மூட நம்பிக்கை களை முழுமூச்சாக எதிர்த்த பெருந்தலைவர்.

இந்தியாவில் அவரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது. கொடுமைக்கு எதிராகப் பெரும் போர் தொடுத்தவர் அவர்.

தமிழக ஆளுநர் கே.கே.ஷா

ஆர்வம் மிக்க சமூகச் சீர்த் திருத்தவாதியான திரு.ஈ.வெ.ராமசாமி யின் மறைவு குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்

பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கம், கடைசி மூச்சு வரை சமுதாயப் பணியை நடத்திய சரித்திரத்தை யாரும் மறக்க முடியாது. இன்று தமிழ்நாடு தன்மான உணர் வோடு தலைதூக்கி நிற்பதற்குக் காரணமாக இருந்த மாபெரும் தலைவர் அவர். அவரால் சமுதாய அந்தஸ்து பெற்ற லட்சோப லட்சம் மக்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்கள் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாது. எங் களை எல்லாம் ஆளாக்கிய எங்கள் வழிகாட்டியின் இந்தப் பிரிவு பற்றி என்ன சொல்வதென்றே புரியாமல் திண்டாடுகின்றேன். இந்தியாவின் தலைசிறந்த சீர்த்திருத்தப் புரட்சிக் காரரை இழந்துவிட்டோம். அவர் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்; நாம் தொடர்வோம்.

டாக்டர் நாவலர் (கல்வித்துறை அமைச்சர்)

யாருக்கும் அஞ்சாமல், எதற்கும் அஞ்சாமல் தமிழகம் எங் கணும் வீர நடை போட்டு வந்த பகுத்தறிவுச் சிங்கம் இன்று சாய்ந்து விட்டது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும். பெரும் துக்கத்தையும் அளிக்கின்றது.

பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் நாட்டு விடுதலைப் போராட்டத்திலும், சமூகச் சீர்த் திருத்தக் கிளர்ச்சிகளிலும், மொழி யுரிமைப் போராட்டத்திலும் பங்கு கொண்டு அவர் புரிந்த சாதனைகள் பலவாகும்.

பொதுத்தொண்டு புரிபவர்களுக் குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக அவர் திகழ்ந்து வந்தார். பொதுவாக, தமிழ்ப் பெருங்குடி மக்களுக்குக் குறிப்பாகத் தமிழக அரசுக்கும் அவர் பெரும் துணையாக இருந்து அருந் தொண்டு ஆற்றி வந்தார். அவரது இழப்பு திராவிட முன்னேற்றக்கழ கத்துக்கு, ஆட்சிக்கும் பேரிழப்பு ஆகும்.

அவர் பரப்பிவந்த பகுத்தறிவு நெறியை, அறிவியலின் துணை கொண்டு தொடர்ந்து பரப்புவதில் ஈடுபடுவதுதான் நாம் அவருக்குக் காட்டக் கூடிய நன்றிக்கடனாகும்.

வளம்மிகுந்த தமிழ்நாடு, வளர வொட்டாமல் தடுத்து வருகின்ற மூடப்பழக்க வழக்கங்களையும் அவர் கூறிய அறிவுரைகளை ஏற்று, அவற்றை ஒழித்து, சிறந்த தமிழ கத்தைக் காண நாம் அனைவரும் ஈடுபடுவோமாக. வாழ்க பெரியார் புகழ்!

வெல்க அவருடைய பகுத்தறிவு நெறி!

கு.காமராஜர்

நமது நாட்டின் லட்சோப லட்சம் மக்களால், பெரியார் என்று பாசத்துடன் அழைக்கப் பட்டு வந்த திரு. ஈ.வெ. ராமசாமி இன்று நம்மைவிட்டு மறைந்தார். அன்னாரது மறைவு பொது வாழ்க்கைக்குப் பெரிய இழப்பு.

நாம் ஆர்வத்துடன் நம்பிய இலட்சியங்களுக்காக அவர் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலா கத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணி புரிந்துவந்தார்.

நமது நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சமூக விழிப்பு ஏற்பட அவர் ஆற்றிய பணி, அவர் வகித்த பாத்திரம் மிகப் பெரியது. அவர் ஒரு மாபெரும் தேச பக்தர்.

ஆரம்பத்தில் அவர் இந்திய தேசிய காங்கிரஸ் தீவிர உறுப்பி னராக இருந்து காந்தியார் துவக்கிய இயக்கங்களில் பங்கேற்றார்; பல முறை அவர் சிறையேகினார்.

பின்னர், தீவிரமான சமூக சீர் திருத்தப் பிரச்சாரப் பணியைத் தமக்கென வரித்துக் கொண்டார்.

பெரியார் நமது சமூகத்துக்கு ஆற்றிய சேவைகள் நம் மனத்தில் நீண்டநெடுங்காலம் நிலைத்து நிற்கும். தமது கருத்துகளைப் பயம் துளியுமின்றி எடுத்துக்கூறியவர் களில் பெரியாரும் ஒருவர். கடைசி வரை அவர் விடாமுயற்சியுடன் சலி யாத கடும் பணியில் ஈடுபட்டிருந் தார்.

அன்னாருக்கு எனது மரியாதை கலந்த இரங்கல்.

சி.சுப்பிரமணியம் (மத்திய தொழிலமைச்சர்)

தந்தை பெரியார் மறைவு பற்றி செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மனித சமுதாயம் முழுமைக்குமே இது பெரும் இழப்பாகும்,

பி.இராமச்சந்திரன் (த.நா.கா.க.தலைவர்)

திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்களின் மறைவு இந்த நாட்டின் பொது வாழ்க்கையில் குறிப்பாக, தமிழ் நாட்டின் பொதுவாழ்க்கையில் மாபெரும் இழப்பாகும்.

அவர் தீவிர காங்கிரஸ்காரராக இருந்தார்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்; விடு தலை இயக்கத்தின் முன்னணியில் அவர் இருந்தார்; அவர் வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைச்சாலை ஏகினார்.

தேசத்தின் விடுதலைக்கும், சமூகச் சீர்த்திருத்தத்துக்குமாக வேண்டி நடத்திய போராட்டங்கள் அவரது பொதுவாழ்வில் நிரம்பியிருந்தன. தாழ்த்தப்பட்ட மக்களை முன் னேற்றுவதற்காக அவர் ஆற்றிய பணிகள் மக்களால் என்றும்

நினைவில் நிறுத்திக் கொள்ளப் படும்.

மறைந்த தலைவருக்கு நான் எனது மரியாதை கலந்த அஞ்சலி யைச் செலுத்துகிறேன்.

ம.பொ.சிவஞானம் (தமிழரசுக் கழகத் தலைவர்)

பெரியார் ஈ.வெ.ரா. உலகில் தோன்றிய சமுதாய சீர்திருத்தப் புரட்சியாளர்களில் தலைசிறந்த வராகத் திகழ்ந்தார். தனக்கெனப் புதிய சரித்திரம் படைத்து, உலக சரித்திர நாயகர்கள் வரிசையில் சிறப்பிடம் பெற்று விளங்கியவர் பெரியார்.

உயிர் விடும்வரையில் தம்மு டைய குறிக்கோள்களில் பெரியார் கொண்டிருந்த உறுதியும், எதிர்ப் புக்கு அவர் ஈடுகொடுத்த தீரமும், இன்னொருவரை இணை சொல்ல முடியாது.

பெரியாரோடு தமிழக அரசியல் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது.

தவத்திரு. குன்றக்குடி அடிகளார்

தமிழகத்தின் காவலர், புரட்சி கரமான சிந்தனையாளர் தலைவர் பெரியார் மறைந்தது இன்றைய தமிழகத்தில் ஈடுசெய்ய முடியாத இழப்பு. வாழ்நாள் பெரும் பகு தியை தலைவர் பெரியார் போல் பொதுப்பணியில் ஈடுபடுத்தியவர் அருமையிலும் அருமை. தமிழகத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றில் அவர் முத்திரை பதியாத துறையே இல்லை எனலாம். கலக்கமில்லாத, கருத்துப் பிடிப்பு, உண்மையான உழைப்பு அவருக்கே உரிய குண நலன்கள்.

தமிழன் என்ற இனஉணர்வை முன்னிலைப்படுத்தி, அயராது உழைத்த பெரியவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடுமையான கருத்து வேற்றுமை உடையவர் இருந்தும் கூட, அவர் காட்டிய கண்ணியம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கு எடுத்துக் காட்டாகும்.

தமிழர் என்ற இன உணர்வைத் தூண்டி வளர்த்து, அது செழித்து வளர்ந்து, பூத்துக் காய்க்கின்ற போது அவர் நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். ஆயிரம் கருத்து வேற்றுமை இருந்தாலும் அவர் மனித குலத்தின் மீது கங்கு கரையற்ற அன்புடையவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது ஜாதி வேறு பாடற்ற சமுதாய அமைப்பு. தமிழர் இனத்தின் முன்னேற்றம் ஆகியவை அவர் நமக்கு வீட்டுச் சென்றிருக்கிற பணிகள். அந்தப் பணிகளைச் செய்து நிறைவேற்று வது தலைவர் பெரியாருக்குச் செய்யும் கடமையாகும்.

தமிழினத்தின் பகையைக் கண்டு, சிம்ம முழக்கம் செய்த ஒரு ஆன்மா ஓய்ந்துவிட்டது. ஆனால், அவர் ஏற்றி வைத்த விளக்கு, எடுத்துத் தந்த லட்சியம் ஓயாது பயணம் செய்யும்.

பி.இராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்)

பெரியார் ஈ.வெ.ரா. தமிழ் நாட்டில் மட்டுமின்றி, இந்தியா பூராவிலும் தனித்தன்மை கொண்ட தலைவராகத் திகழ்ந்தார்.

அரசியலைப் பொறுத்த வரையில் ஒருவருக்கு, அவருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அவர் நாட்டின் வைதிகத்தின் காழ்ப்பையும், வெறுப்பையும் தீரத்துடன் எதிர்த்து நின்று மக்களை ஒடுக்கிக் கேவல நிலையில் வைத் திருந்த ஜாதிக் கொடுமை, மூடநம்பிக்கை ஆகியவற்றையும் மக்களை நிரந்தரமாக அடிமைத்தளையில் வைத்திருக்க மக்களிடம் ஊட்டப் பட்ட கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்து சமூக நீதிக்காக 50 ஆண்டு களுக்கும் மேலாக அயராது போரா டியவர். இது இந்நாட்டின் வரலாற்றில் என்றென்றும் சிறப்பான அத்தியாயமாகத் திகழ்ந்துவரும், பிறப்பில் தாங்கள் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று பிராமண சமூகத்தினர் கருதிக் கொண் டதை பெரியார் எதிர்த்துப் போராடினார். ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டியது கிடை யாது.

சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்கள், பெரியாரின் மறைவின் மூலம் சமூகக் கொடுமைக்கு எதிராகப் போரிட்டு வந்த ஒரு மாபெரும் வீரரை இழந்து விட்டனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு களாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமூகச் சீர்த்திருத்த இயக்கம் துவக்கி நடத்திய பெரியார் மறைவு அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது.

எம்.ஜி.இராமச்சந்திரன் (அ.தி.மு.க.தலைவர்)

தமிழர் சமுதாயம் தனது பாது காவலனை இன, மொழி உயர் வுகளுக் காக அரசியல், பொருளாதார விடுதலைக்காகப் போராடி, போராட்டத்திலேயே தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்த விடுதலை வீரரை இன்றைக்கு இழந்து விட்டது.

இந்தியத் துணைக்கண்டம் ஒரு நூற்றாண்டு வரலாறு படைத்த பேராண்மையும், பேராற்றலும் மிக்க மாவீரர்களின் வரிசையிலே கடைசிச் சின்னத்தை இழந்துவிட்டது. திராவிடர் இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்ட லட்சோப லட்சம் குடும்பங்கள் தங்களது தந்தையை இழந்து தவித்து நிற்கிறது.

உலகம் ஓர் ஆற்றல் மிக்க சிந்தனையாளரை, மக்கள் சமுதாய வழி காட்டிகளில் ஒருவரை இழந்து விட்டது.

பரூக் மரைக்காயர் (புதுவை முதல்வர்)

தந்தை என்று உரிமையோடு அழைக்கப்பட்டு வந்த தனிப்பெருந் தமிழகத் தலைவர் தந்தை பெரியாரின் மறைவுச் செய்தி கேட்டு மீளாத் துயருற்றேன்.

தமிழ்ச் சமுதாயத்தின் அறிவுக் கண்ணைத் திறந்து மக்களிடையே மலிந்து கிடந்த மூடப்பழக்கவழக் கங்களையும், அர்த்தமற்ற வழிமுறை களையும் தூக்கி எறிந்து பகுத்தறிவு உணர்ச்சியைத் தோற்றுவித்த பெருமை பெரியாரையே சாரும்.

எண்ணற்ற இளம் தலைவர்களை உருவாக்கியும், சமுதாயத்தில் புதிய தோர் விழிப்புணர்ச்சியைத் தோற்று வித்தும், ஜாதியின் பெயரால் கொடு மைகளுக்கு ஆளான சமுதாயத்தின ருக்குப் புதுவாழ்வு தந்தும் பெரியார் என்ற தனி மனிதர் தமிழரின் வரலாற்றில் ஈடற்ற ஓர் சகாப்தமாகத் திகழ்கின்றார்.

வாழ்நாள் முழுமையும் சமுதாய சீர்த்திருத்தங்களுக்காகவே அர்ப்பணித்து, இறுதி வரையில் தான் நிறுவிய திராவிடர் கழகம் அரசிய லில் ஈடுபடாமல், சமுதாய முன் னேற்றத்துக்காகப் பாடுபட்டு வரும் நிகழ்ச்சி, இந்திய வரலாற்றிலேயே போற்றுதற்குரியதாகும்.

தந்தைபெரியாரின் மறைவு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு ஆகும். அவரது சீர்திருத்தக்கருத்துகளையும், சுயமரியாதை எண்ணங்களையும் மக்களிடையே பரப்புகின்ற நற்பணி யில் நம்மை மேலும் ஈடுபடுத்தி, பெரியாரின் அரிய நினைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

தந்தை பெரியாரின் இறப்பினால் வருந்துகின்ற எண்ணற்ற தமிழ் நெஞ் சங்களோடு நானும், என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பக்தவத்சலம் (தமிழக முன்னாள் முதல்வர்)

யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் என்ன நினைக்கிறாரோ அதை ஒளிக்காமல் சொல்லக்கூடிய அஞ்சா நெஞ்சம் படைத்தவர் ஈ.வெ.ரா.

பெரியார் ஒரு தனி மனிதரல்ல; அவர் ஒரு பெரிய ஸ்தாபனம்.

ஆரம்பகாலத்தில் பெரியார் காங் கிரசின் தீவிர தலைவராக இருந்தார். ராஜாஜியின் நெருங்கிய நண்பராகவும் இருந்துவந்தார்.

பெரியாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்.

தேவராஜ் அர்ஸ் (கருநாடக முதல்வர்)

தமிழ்நாட்டு அரசியலில் பல் லாண்டு காலம் புரட்சிப் புயலாய் விளங்கியவர் பெரியார். அவர் பிரச் சாரம் செய்த எல்லாக் கொள்கை களையும் நாம் ஏற்கமுடியாமல் இருக்கலாம்; அவர் கையாண்ட வழி முறைகளையும் நாம் ஏற்கமுடியாமல் இருக்கலாம். என்றபோதிலும் ஏழை, எளியவர்களுக்காகவும், தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும் அவர்காட் டிய இரக்க உணர்ச்சியைப் பாராட் டாமல் இருக்க முடியாது. இம் மக்களின் பொருளாதார, சமூக நிலை மேம்பாடடைய அவர் நடத்திய மாபெரும் போராட்டங்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.

பெரியார் இலட்சியத் தலைமை பூண்ட ஓர் நாயகன். தமது வாழ் நாளிலேயே காவிய நாயகனாகத் திகழ்ந்தவர்.

-----------------------”விடுதலை” 24-12-2010


0 comments: