Search This Blog

30.12.09

பூணூல் பாசத்துடன் தினமணி வெளியிட்ட செய்தி


பூணூல் பாசம்

ஆந்திர மாநிலத்தின் ஆளுநராகயிருந்த என்.டி. திவாரி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக சட்டீஸ்கர் மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி தினமணி (29.12.2009, பக்கம் 9) செய்தியை எப்படி வெளியிடுகிறது?

ஆந்திரத்தில் ஆளுநராகப் பதவி வகித்த நாராயண் திவாரி உடல்நலக் குறைவு காரணமாக திடீரென விலக நேர்ந்ததால் ஆந்திர மாநில ஆளுநர் பொறுப்பையும் சேர்த்து வகிக்குமாறு நரசிம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

இதுதான் தினமணி வெளியிட்ட செய்தி.

எப்படி செய்தி? புரிகிறதா? உடல்நலம் சரியில்லாமல் திவாரி பதவி விலக நேர்ந்ததாம்!

தினமணி என்னும் பூனை கண்களை மூடிக்கொண்டு விட்டது. அதனால் அதன் கண்களுக்குப் பூலோகமே இருண்டு விட்டதாகத் தெரிகிறது. இந்தத் தினமணி பூனை தன் கண்களை மூடிக்கொண்டது மட்டுமல்ல, திறந்திருக்கும் பொதுமக்களின் கண்களிலும், வாசகர்களின் கண்களிலும்கூட மிளகாய்ப் பொடியைத் தூவப் பார்க்கிறதே அதனை நினைத்தால் விலா நோக சிரிப்புதான் வெடித்துக் கிளம்புகிறது!

86 வயது நிறைந்த என்.டி. திவாரியின் தேவநாதன் லீலைகள் விலாவாரியாக ஏடுகளில் வெளிவந்துள்ளன; தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பி மானத்தை வாங்குகின்றன.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோயில் அர்ச்சகன் தேவநாதனின் கோயில் கர்ப்பக் கிரக (ஃபுளு பிலிம்) சேட்டைகள் லீலைகள்பற்றி பொதுமக்கள் காரித் துப்புகின்றனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு வந்த தேவநாதனுக்கு தமிழினப் பெண்மணிகள் துடைப்பத்தாலும், காலணிகளாலும் அபிஷேக ஆராதனைகள் (கோயில் அர்ச்சகர் அல்லவா!) செய்தனர்.

அந்தச் செய்தி ஆடி அடங்குவதற்குள் 86 வயதான ஒரு மாநில ஆளுநரே மன்மத லீலைகளில் அன்றாடம் குளியலாடினார், நீச்சலடித்தார் என்ற செய்தி அங்கு இங்கு எனாதபடி எங்கு பார்த்தாலும் பிரவாகித்துவிட்டது.

ஒரு புரோக்கர் ஒரு ஆளுநரை வெளியேற்றினார் என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்றே!

இவ்வளவு நடந்திருக்கிறது ஊர் உலகமே சிரிக்கிறது. ஆனால், தினமணியின் வைத்தியநாதய்யரோ உடல்நலக் குறைவு காரணமாகப் பதவி விலக நேர்ந்தது என்று செய்தி வெளியிடுகிறார்.

இதன்மூலம் தினமணியின் நம்பகத்தன்மையை இதுவரை தெரிந்துகொள்-ளாதவர்களும் இப்பொழுது தெரிந்து கொண்டுவிட்டனர். தினமணி இப்படி ஏன் மூடி மறைக்கிறது?

காரணம் என்ன தெரியுமா? சம்பந்தப்பட்டவர் திவாரி என்பதுதான்.

ஹி... ஹி.... ஹி..... ஹி..... பூணூல் பாசம் எவ்வளவு பொல்லாதது பார்த்தீர்களா? -

----------------மயிலாடன் அவர்கள் 30-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: