Search This Blog

2.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - சூடான்-சுரிநாம்-சுவாசிலாந்து




சூடான்

350ஆம் ஆண்டுவரை எகிப்திய நாகரிகமும் நூபிய நாகரிகமும் இணைந்து வளர்ந்த பகுதி சூடான். அரேபியர்கள் வந்து ஆக்ரமித்து இசுலாத்தைப் பரப்பினர். ஆங்கில எகிப்திய சூடான் என்று இப்பகுதி 1898 முதல் 1955 வரை அழைக்கப்பட்டது. 1953இல் இங்கிலாந்தும் எகிப்தும் இந்நாட்டுக்கு சுயாட்சி உரிமை வழங்கின. பிறகு 1956இல் சூடான் விடுதலை அடைந்தது.

ஆப்ரிகாவின் வடபகுதியில், செங்கடல் பகுதியில் எகிப்துக்கும் எமிரேட்சுக்கும் இடையில் உள்ள இந் நாட்டின் பரப்பு 25 லட்சத்து 5 ஆயிரத்து 810 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 4 கோடி 13 லட்சம். சன்னி முசுலிம்கள் 70 விழுக்காடு. உள்ளூர் பழமைவாத நம்பிக்கை கொண்டோர் 25 விழுக்காடு. அரபி மொழி ஆட்சி மொழி. 61 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள்.

1-.1-.1956 இல் விடுதலை நாள். குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராக உள்ளார். ராணுவத் தளபதிதான் குடியரசுத் தலைவராக உள்ளார். 19 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

சுரிநாம்

1651ஆம் ஆண்டில்தான் அய்ரோப்பியர்கள் இந்நாட்டில் தோட்டப் பயிர்களை வளர்த்தனர். 1667இல் டச்சு நாட்டுக் கடற்படை சுரிநாமைக் கைப்பற்றியது. 1975ஆம் ஆண்டு வரை ஆண்டு வந்தது. 25-.11.-1975இல் நாட்டுக்கு ஆலந்து விடுதலை அளித்தது.

வடஅமெரிக்க நாடான சுரிநாமின் பரப்பு 1 லட்சத்து 63 ஆயிரத்து 270 சதுர கி.மீ. மக்கள்தொகை 4 லட்சத்து 40 ஆயிரம். மக்களில் இந்துக்கள் 27 விழுக்காடு. இசுலாமியர்கள் 20 விழுக்காடு. ரோமன் கத்தோலிக்கர் 23 விழுக்காடு. புரொடஸ்டன்ட் கிறித்துவர் 25 விழுக்காடு.

டச்சு மொழியும் இங்கிலீசும் பேசும் மக்களில் 88 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள். குடியரசுத் தலைவர்தான் ஆட்சித் தலைவர். 10 விழுக்காடுப் பேர் வேலை கிட்டாதோர். 301 கி.மீ. தொலைவு மட்டுமே இருப்புப்பாதை உண்டு.

சுவாசிலாந்து

மொசம்பிக் நாட்டிலிருந்து வெளியேறிய பாண்ட்டு இனக் குழுவினர் 18ஆம் நூற்றாண்டில் குடியேறிய நாடு சுவாசிலாந்து. ஜுலு குழு மக்களிடம் ஏற்பட்ட சிக்கலான கலவரங்களின் விளைவாக மன்னர் பிரிட்டிஷ் அரசுக்குப் பாதுகாப்பு கோரி 1840இல் கேட்டுக் கொண்டார். 1881இல் நாட்டுக்கு விடுதலை அளிப்பதாக பிரிட்டிஷ் அரசு கூறியது. தென் ஆப்ரிகாவின் பாதுகாப்பில் இருந்த சுவாதிலாந்தைத் தன் பாதுகாப்பில் 1902 இல் எடுத்துக் கொண்ட பிரிட்டன் 1968 இல் சுவாசிலாந்துக்கு விடுதலை அளித்தது.

தென் ஆப்ரிக நாடான சுவாசிலாந்தின் பரப்பளவு 17 ஆயிரத்து 363 சதுர கி.மீ. மக்கள் தொகை 11 லட்சத்து 50 ஆயிரம். பழைய நம்பிக்கைகளுடன் கிறித்துவ நம்பிக்கையும் கலந்த ஜியானிய மதத்தினர் 40 விழுக்காடு. ரோமன் கத்தோலிக்கர் 20 விழுக்காடு, முசுலிம்கள் 10 விழுக்காடு உள்ளனர்.

இங்கிலீஷ்தான் ஆட்சி மொழி. சிஸ்வாடி எனும் ஆப்ரிக்க மொழியும் ஆட்சி மொழியாக உள்ளது. மக்களில் 82 விழுக்காடு மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்கள்.

மன்னராட்சி நடக்கும் இந்நாட்டின் விடுதலை நாள் 6.9.1968. பிரதம மந்திரி ஆட்சிப் பொறுப்பை நிருவகிக்கிறார். 69 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 40 விழுக்காட்டினர் வேலை கிட்டாமல் உள்ளனர். 301 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை உண்டு.

------------------நன்றி:-"விடுதலை" 1-8-2009

0 comments: