Search This Blog

17.12.13

மாலைகளை கழற்றி எறிந்து பக்தி சனியனிலிருந்து விடுபட்ட அய்யப்பப் பக்தர் !


திராவிடர் கழக வெளியீடுகளாக இருந்தாலும் சரி, பிரச்சாரக் கூட்டங்களாக இருந்தாலும் சரி, அவற்றைக் கொண்டு சேர்ப்பது மாத்திரமே நமது வேலை; கொண்டு சேர்த்து விட்டால், அவை அவற்றின் வேலையைக் கண்டிப்பாகச் செய்தே தீரும்.

சங்கராச்சாரி யார்? எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிய உரை நூலாக  வெளி வந்தது; ஆங்கிலத்திலும் Saint of Sectarian என்று வெளியி டப்பட்டது. அதனைப் படித்து சிங்கப்பூரைச் சேர்ந்த தோழர் திரு டி. கோவிந்தசாமி என்பவர்  உங்கள் நூல் என் கண்களைத் திறந்துவிட்டது (Your Book has Opened My Eyes) என்று மின்னஞ்சல் மூலம் மனந்திறந்த மடல் ஒன்றை அனுப்பினாரே! (9.8.1997).

புதுவை பெரியார் பெருந் தொண்டர் மறைந்த கனக லிங்கம் அவர்களின் தந்தை யார் பசுவ லிங்கம் என்ற பெரியவர் தந்தை பெரியாரின் உரையைச் செவி மடுத்து, நீண்ட காலமாக தான் அணிந்து வந்த தங்கத்தி னாலான சிவலிங்கக் கொட் டையைத் தூக்கி எறிந்தாரே! மரணத்துக்குப்பின் தன் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைக்கும் அளவுக்கு அவர் உள்ளத்தைத் தந்தை பெரியாரின் உரை பக்கு வப்படுத்தியதே!

இதே போல எத்தனை எத்தனையோ  நிகழ்வுகளை எடுத்துக் காட்ட முடியும்!

கரூரிலிருந்து விடுதலை செய்தியாளர் தோழர் அலெக்ஸ் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். கரூர் மாவட்டம் வெள்ளியணையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கழகச்சொற்பொழிவாளர் மானமிகு இராம அன்பழகன் உரையாற்றினார். மூட நம் பிக்கைக் கருத்துக்களை நகைச்சுவையுடன், பாடல்கள் மூலமாகவும் வெளிப்படுத் தினார்.

அந்தக் கூட்டத்தை அய்யப்பப் பக்தர் (அதற்கே உரிய உடையுடனும், மாலையுடனும்) ஆர். அண்ணாதுரை என்ற தோழரும் கேட்டுக் கொண்டி ருந்தனர்.  கழகச் சொற்பொழிவாள ரின் உரையைச் செவி மடுத்த அந்த  அய்யப்பப் பக்தர், தான் கழுத்தில் அணிந்திருந்த மாலைகளையெல்லாம்  கழற்றி எறிந்து கழகப் பேச்சாளர் மானமிகு இராம. அன்பழகன் அவர்களின் கைகளைப் பிடித்துக் குலுக்கி மகிழ்ச்சியைத் தெரி வித்ததுடன் இன்று முதல் இந்தப் பக்தி சனியனிலி ருந்து விடுபட்டேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்புகூட புதுக் கோட்டை தோழர் மானமிகு தருமராசன் அவர்களும்கூட கழகப் பிரச்சாரத்தைக் கேட்டு தான் அணிந்திருந்த அய்யப்பப் பக்தருக்குரிய அடையாளமான மாலையைக் கழற்றி எறிந்து அய்யப்பன் கறுப்புடைக்குப் பதிலாகக் கழக கறுப்புடை அணிய தலைப்பட்டு, இன்று புதுக் கோட்டை ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளராகப் பணி யாற்றிக் கொண்டு இருக்கிறார்.

மதம், பக்தி, கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் ஊதி உப்பிய பலூன் போல; கழகப் பிரச்சாரம் என்பது குண்டூசியின் ஒரு முனை போல என்று சொல்லுவது வார்த்தையழகல்ல - ஆழ மான கருத்தழகு என்பதற்கு இது ஒன்று போதாதா?

 --------------------- மயிலாடன் அவர்கள் 17-12-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

32 comments:

தமிழ் ஓவியா said...


நடவடிக்கை

பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

- (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/page-2/72165.html#ixzz2nk012Thc

தமிழ் ஓவியா said...


பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலிமீது சட்டம் கடமையைச் செய்யட்டும்!

வீசியது மோடி அலை அல்ல - வலை! காங்கிரஸ் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளட்டும்!

டிசம்பர்24ஆம்தேதிசென்னையில்ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவரின் அறிக்கை

பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலிமீது நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து, சில காலம் முன்பு ஓய்வு பெற்ற - மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஜஸ்டிஸ் ஏ.கே. கங்குலி அவர்கள்பற்றி, பயிற்சி பெண் வழக்குரைஞர் கொடுத்த பாலியல் புகார்பற்றி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மூவர் (ஒருவர் பெண் நீதிபதி உட்பட) விசாரணை நடத்தி தலைமை நீதிபதியிடம் தங்களது விசாரணை அறிக்கையைத் தந்தனர்.

தேவை தக்க தண்டனை!

இவர்மீது சொல்லப்பட்ட புகார்களுக்கு முகாந்திரம் உள்ளது என்பதை விசாரணை செய்த மூன்று நீதிபதிகளின் அறிக்கை தெளி வாக்கி விட்டது.

இதனை ஒளிவு மறைவின்றி உண்மைகளை விசாரித்து தக்க தண்டனையை குற்றம் புரிந்த வருக்கு வழங்கி நீதியை நிலை நாட்ட வேண்டியது - நாட்டின் நிர்வாகத் துறையின் தலையாய கடமையாகும்.

டில்லியில் பாலியல் நீதிக்காக பல நாள் நிர்வாகமே நிலை குலையும் அளவுக்கு மக்கள் திரண்டு கிளர்ச்சிகள் நடந்தன.

வளர் இளம் பிராய வாலிபர்களுக்குக் கூட - துள்ளித் திரியும் பொறுப்பற்ற வயது என்றால் கூட - சட்டம் அவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை.

குற்றங்கள் நாட்டில் நடைபெறாது தடுக்க வேண்டிய பெருங் கடமை நீதித் துறைக்கே உண்டு; மக்களின் கடைசி நம்பிக்கையே இன்றைய நிலையில் நீதித்துறைதான்!

பேத்தி வயதுள்ள பெண்ணை...

நீதியரசர்கள், ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி வழங்கினால்தான் நாட்டில் பொது ஒழுக்கமும், ஒழுங்கும் காப்பாற்றப்பட முடியும்.

இந்த கங்குலி விவகாரத்தில் இதுவரை மறைத்து வைக்கப்பட்ட பல செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத்தொடங்கியுள்ளன. பல தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

தனது பேத்தி வயதுள்ள - பயிற்சி வழக்குரை ஞரை தன்னுடைய அறையில் தங்கும்படி நீதிபதி கங்குலி வற்புறுத்தினார். உரையாடும்போது இரட்டை அர்த்தமுள்ள பேச்சாகவே அவரது பேச்சிருந்தது; தன்னுடன் மது அருந்தவும் அப்பெண்ணை வற்புறுத்தினார் என்றெல்லாம் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வரு வதைக் கேட்கும் போது, வெட்கமும் வேதனையும் படமெடுத்து ஆடுகின்றன!


தமிழ் ஓவியா said...

பதவி நீக்கம் செய்க!

இந்த ஏ.கே. கங்குலி இப்போது மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவராகவும் உள்ளார். அவரை உடனே பதவி நீக்கம் செய்து, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் வற்புறுத்தி வருகிறார்.

இன்று வந்துள்ள பல செய்திகளைக் கண்டு மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் அவர்கள், அவர்மீது உடனே நடவடிக்கையை எடுக்க உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நேற்று (16.12.2013) பேட்டி கொடுத்துள்ளார்!

மகளிர் அமைப்புகள் பலவும் கிளர்ச்சிகளுக்கு முன்னோட்டமாகக் குரல் கொடுக்கத் துவங்கி விட்டன! ஆனால், இதுவரை எந்த நடவடிக்கை யும் அவர்மீது பாயாமல் அவர் ராஜ நடை போட்டு, நான் பதவி விலக மாட்டேன் என்று பிடிவாத மாகக் கூறுகிறார்!

நீதி பரிபாலனத்தின் இலக்கணம்

நீதி பரிபாலனத்தில், நீதியை வழங்கினால் மட்டும் போதாது; நீதி வழங்கப்பட்டுள்ளது என்று மற்றவர்களுக்குத் தெரியும் வகையில் அமைய வேண்டும் என்று கூறுவது உண்டு; (Not only Justice done; it is also important Justice appears to be done) இப்பிரச்சினை மேலும் நாடு தழுவிய கிளர்ச்சியாக, பெருந்தீயாக ஆகுமுன்பே நீதிபதி கங்குலி மீது கிரிமினல் நடவடிக்கைகள் உடனடி யாக எடுக்கப்பட வேண்டும்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பால் இருக்க வேண்டும் அவர் நிரபராதி என்று காட்டி நிரூபித்துப் பிறகு வெளியே வரட்டும். அடிக்கடி நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரைகளில் எழுதுவார்களே சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று.

வெறும் சந்தேகத்திற்கே அவ்வளவு முக்கியத்துவம் அச்சொற்றொடரில் இருக்கையில், அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்கள் மூன்று நீதிபதி களின் விசாரணை மூலமே வெளியாகியுள்ள நிலையில், மவுனமாக நீதித்துறையும் உள்துறையும் இருக்கலாமா?

அன்று ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதியை என்ன செய்தனர்?

அரசு இடத்தை ஆக்கிரமித்ததாகக் குற்றம் சுமத்தி உச்சநீதிமன்ற நீதிபதியாக வந்திருக்க வேண்டிய ஒரு தாழ்த்தப்பட்ட (கிறித்துவ) நீதிபதியை அவருடைய தீர்ப்புகள் பலவும் மிகவும் சிறந்தவை என்ற நிலை இருந்தாலும், கட்டுப் பாடான பிரச்சாரத்தின் மூலமே அவரை விரட்டினரே!

உயர் ஜாதி என்பதால் தயக்கமா?

இங்கே என்ன அளவுகோல்? இந்தக் குற்றம் புரிந்ததாக குற்றச் செயல்கள் பற்றி பிரஸ்தாபிக்க படும் நபர் உயர் ஜாதி என்பதால் அவருக்கு இப்படி ஒரு மென்மையான அணுகுமுறையா?

நாட்டில் மனுதர்ம ஆட்சியா பச்சையாக நடை பெறுகிறது என்று மக்கள் கேட்க மாட்டார்களா?

எனவே நீதியின் மாண்பைக் காப்பாற்ற உடனடியாக சட்ட நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்; அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்மீது நடவ டிக்கை சார்பின்றி நடைபெற வாய்ப்பு ஏற்படும்.

உடனே செய்ய வேண்டும்; இதை வற்புறுத்தி திராவிடர் கழக மகளிரணியினர் சென்னையில் தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மானமிகு க. பார்வதி அவர்களின் தலைமையில் நடைபெறும்.

ஆங்காங்கே தொடர் பிரச்சாரமும் நடைபெறக் கூடும்.

கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/e-paper/72159.html#ixzz2nk0G4N4I

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் கோயில் தரிசனச் சீட்டில் மோசடி!

திருவனந்தபுரம், டிச. 17- சபரிமலை அய்யப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன. சபரிமலையில் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்களால் எளிதில் தரிசனம் செய்ய முடிந்தது. இந்நிலையில் பக்தர்கள் போலி ஆன்லைன் டிக்கெட்களுடன் சபரிமலை வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பயன்படுத்திய டிக்கெட்டில் புகைப்படத்தை மாற்றி ஒட்டியும், தேதியை திருத்தியும் பக்தர்கள் பயன் படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தென்மண்டல ஏடிஜிபி ஹேமச்சந்திரன் கூறுகையில், இவ்வருடம் பக்தர்கள் போலி ஆன்லைன் தரிசன டிக்கெட்டை கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சில கணினி மய்யங் களில் இதுபோன்ற டிக்கெட்களை எடுத்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு போலி ஆன்லைன் டிக்கெட் கொண்டு வரும் பக்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது. ஆனால் சில கணினி மய்யங் களில் இதற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். இவ்வாறு கட்டணம் வசூலிக்கும் கணினி மய்யங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

தமிழ் ஓவியா said...


தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்களுக்கு வரவேற்பும் பாராட்டும் - சுப. வீரபாண்டியன் அறிக்கை!

சென்னை, டிச.17- காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய இரு கட்சிகளையும் விட்டு சம தூரத்தில் விலகி நிற்பது என தி.மு.க., பொதுக் குழுத் தீர்மானங்களை வரவேற்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கைவருமாறு:

15.12.2013 அன்று சென்னையில் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழு, தமிழக மக்களின் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இறுதியில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பு பெரும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக உள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய இரு கட்சிகளையும் விட்டு சமதூரத்தில் விலகி நிற்பது என்னும் தி.மு.கழகத்தின் முடிவு மிகுந்த பாராட்டிற்கும், வரவேற்பிற்கும் உரியது. காங்கிரஸ் போன்ற கட்சிகளை கால காலமாக தூக்கிச் சுமந்ததும் போதும், மதவாதக் கட்சிகளோடு உறவும் ஒரு நாளும் வேண்டாம் என இரு திசைகளிலும் எடுக்கப்பட்டிருக்கும் நல்ல முடிவு இது. தி.மு. கழகத் தொண்டர்களிடம் புதியதோர் எழுச்சியை உருவாக்கியிருக்கும் இவ்வறிவிப்பு, பொது மக்களிடமும் ஏற்றதொரு வரவேற்பைக் கண்டிருக்கிறது. வழக்க மாகவே ஊக்கம் குறையாமல் தேர்தல் பணியாற்றும் தி.மு.கழகத் தொண் டர்கள் இம் முறை முழு மூச்சில் களத்தில் இறங்கிப் பணியாற்றுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தி.மு.க. பொதுக்குழுவின் தீர்மானங்கள் அனைத்தையும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை மீண்டும் ஒரு முறை மகிழ்வுடன் வரவேற்கிறது.

தமிழ் ஓவியா said...

ஒரு பக்தரின் திறந்த மடல்

பக்தர்களே இதுவா பக்தி - சிந்திப்பீர்! விநாயகர் சதுர்த்தி முடிந்து, மூன் றாம் நாள் பிள்ளையாரை ஆற்றிலோ, கடலிலோ கரைக்கும் இந்து அமைப் பினர் இதை ஒரு சடங்காக வருடா வருடம் செய்கின்றனர். அந்த மூன்றாம் நாளில் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை, துன்பங்களைப் பற்றியோ யாரும் கவலை கொள்வதாக தெரிய வில்லை.

11.9.2013 அன்று திருச்சி நகரத்தில் மட்டும் 844 பிள்ளையார்கள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டதாக பத் திரிகைச் செய்தி. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். அனைத்து வெளியூர் நகரப்பேருந்துகளும் அன்று மாலை 4 மணிக்கு மேல் வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டன. தூவாக்குடி, பாய்லர் போன்ற ஊர் களுக்கு செல்லும் பேருந்துகள் சத்திரத்திலிருந்து தில்லை நகர் மார்க்கமாக புறப்பட்டு தலைமை தபால் அலுவலகம் வழியாக பை-பாஸ் சாலையைக் கடந்து பழைய பால் பண்ணை வழியாகவும், லால்குடி, சமயபுரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் நகரப்பேருந்துகளும், பெரம் பலூர், அரியலூர், துறையூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் வெளியூர் பேருந்துகளும் மாம்பழச்சாலை வரை தடுத்து நிறுத்தப்பட்டு அங்கிருந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். இந்த மார்கத்திலிருந்து பணிக்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் துறை பணி செய்யும் ஆண் களும், பெண்களும் சத்திரத்திலிருந்து மாம்பழச்சாலை வரை காவிரி ஆறு வழியாக நடந்து சென்று மாம்பழச் சாலையில் பேருந்து ஏற வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்படும் எவ்வளவு பெரிய கொடுமை இது. இப்படி பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்து, துன்பம் கொடுத்து ஏன் இப்படி செய்ய வேண்டும். இதுவா பக்தி?

தமிழ் ஓவியா said...

நான் ஒரு கிறிஸ்டியனோ அல்லது முஸ்லிமோ அல்ல! நானும் ஒரு இந்து அன்று என் கண் முன்னால் பொது மக் களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் அனைத் தையும் கண்கூடாக காண நேர்ந்தது. நான்கு பக்கங்களிலிருந்தும் வாகனங் களில் சிலைகள் வந்துக் கொண் டிருந்தன. இரவு 8 மணிக்கு மழை கொட்ட ஆரம்பித்து மழை விடுவதற்கு இரவு 9.30 மணி ஆகிவிட்டது.

அந்த மழையிலும் ஆண்களும், பெண்களும் சாரை சாரையாக மாம்பழச்சாலை நோக்கி பணி முடிந்து, பேருந்துக்கு சென்று கொண்டிருந்தனர். இளம் பெண்கள் பலர்தம் துப்பட்டாவை தலையில் போட்டு நனைந்தபடி சென்று கொண்டிருந்தனர்.

எதிர்த் திசையிலி ருந்து அதாவது சிறீரங்கம், திருவானைக் கோவிலிலிருந்து வாகனத்தில் பிள்ளை யாரை சுமந்து வந்துக்கொண்டிருந்த பல இளைஞர்கள், இளம் பெண்களை பார்த்து கூப்பாடு போடுவதும், ஆய்... ஊய்... என விசிலடித்தும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். அத்தனை இளைஞர்களும் 20 வயது கொண்ட வாலிப வயதினர்.

இதைக்கண்ட பல இளம் பெண்கள் கூனி குறுகிப்போயினர். இவை அனைத் தையும் காவிரி பாலத்தின் முகப்பில் மேடை அமைத்து சிலைகளை வரவேற் றுக் கொண்டிருந்தனர். இந்து அமைப்பினர் அவர்களின் கண்களுக்கு இந்த அநியாயங்கள் தெரியாமலா போய் விட்டன? வெளியூர்களி லிருந்து தனியார் கம்பெனிகளுக்கு இளம் பெண்களை பணிக்கு அனுப்பும் பல ஏழை பெற்றோர் தன் பிள்ளைகள் இந்த கொட்டும் மழை யிலும் இன்னும் வீடு வந்து சேரவில் லையே என எப்படி கவலை கொண்டி ருப்பர்? இப்படி பொதுமக்களுக்கு பல சிரமங்களை கொடுத்துதான் பிள்ளை யார் சிலைகளை கரைக்க வேண்டுமா? பல இளைஞர்களும், இந்து அமைப் பினரும் சிந்திக்கவே மாட்டார்களா?

காவிரி பாலத்திற்கு கிழக்குப் பக்கம் அதே காவிரி ஆற்றில் பை-பாஸ் பாலம் ஒன்று உள்ளது. அங்கு இந்த சடங்கு களை செய்யலாமே! ஒரு தெருவில் ஒரு பிள்ளையார் சிலையை வைக்க வேண்டு மானால் 20 வயதிற்குட்பட்ட பல இளைஞர்கள் இரவு பகலாக வேலை செய்கின்றனர். தினம் சிலைக்கு பூஜை, அன்னதானம், துண்டறிக்கை, சுவ ரொட்டி விளம்பரம், கடைசி நாளன்று வாகன ஏற்பாடு. சீரியல்செட் பல்புகள், தாரை தப்பட்டை வழி நெடுகிலும் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம்! எங்கே போய் கொண்டிருக்கின்றனர் இந்த இளைஞர்கள்?

ஒரு பிள்ளையார் சிலையை ஆற்றில் கரைக்க வேண்டுமானால் ஒவ்வொரு சிலைக்கும் குறைந்த பட்சம் ரூ. 15,000/- செலவாகும். (பூஜை, அன்னதானம், பிட்நோட்டிஸ், சுவரொட்டி, வாகன ஏற்பாடு, சீரியல் செட், தாரை தப்பட்டை, சிலையின் விலை உட்பட)

இந்த வருடம் திருச்சி நகரத்தில் கரைக்கப்பட்ட சிலைகளின் எண் ணிக்கை 844 (மாவட்ட கணக்கு தனி) 844 00 15,000 = 1,26,60,000 (ஒரு கோடியே இருபத்தாறு லட்சத்து அறுபதாயிரம்) எந்த பிரயோஜனமும் இல்லாத, பயனற்ற ஒரு சடங்கின் மூலம் வேலையற்ற இளைஞர்களை பயன் படுத்தி, ஒரு கோடியே இருபத்தாறு லட்சம் ரூபாய் காவிரி ஆற்றில் கரைக்கப்படுவதை நினைக்கும்போது, இருபத்தியோராம் நூற்றாண்டின் எந்த மய்யப்புள்ளியில் நாம் நின்று கொண் டிருக்கிறோம்? இதுவும் அல்லாமல் அன்று ஒரு நாள் அரசின் பங்காக காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுக்காப்புக்காக, அரசுப்பணம் வீண் விரயம். இந்து அமைப்பினரே, இளை ஞர்களே நீங்கள் வண்டிகளில் பிள்ளை யார் சிலைகளை சுமந்து வரவில்லை. பொதுமக்களின் பாவத்தை சுமந்து வருகிறீர்கள். சிலை கரையவில்லை எனில் தடி கொண்டு தாக்குகிறீர்களே இதுவா பக்தி? இந்த இளைஞர்கள் காணி நிலம் போன்றவர்கள், அவர்களை நல்ல முறையில் பக்குவப்படுத்தி, பயன்படுத் தப் போவது யார்? எப்போது? சிந் திப்பீரா?

மிகுந்த மனவலியுடன்

- எஸ்.வடிவேல், திருவானைக்கோவில்

தமிழ் ஓவியா said...


மதக் கலவரத் தடுப்புச் சட்டத்தை எதிர்ப்போர் யார்?


தஞ்சை வல்லத்தில், கடந்த14ஆம் தேதி கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத் தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒன்று - மதக் கலவரத் தடுப்புச் சட்டத்தை வரவேற்றதாகும். மத்திய அரசு கொண்டுவரும் மதக் கலவரம் மற்றும் குறி வைத்து மேற்கொள்ளப்படும் வன் முறைத் தடுப்பு (நீதி மற்றும் மறுவாழ்வு பெறுதல்) சட்ட வரைவு (Prevention of Communal Violence (Access to Justice and Repatriation) Bill) எனும் சட்டம் விரிவான பொருள்கொண்ட நியாயமான, தேவையான வரவேற்கப் படவேண்டிய சட்டம் ஆகும்.

அவசியம் கருதி இந்தச் சட்டத்தினைச் செயல் படுத்தும் போது மாநில அரசுகளின் உரிமைகளுக்குப் பங்கம் இல்லாமல், மாநில அரசுகளின் ஒப்புதலுடன் செயல்படுத் தும் வகையில், சட்டத்தில் சரத்துகளை இணைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது என்பதுதான் அந்தத் தீர்மானமாகும்.

மாநில உரிமைக்கு எதிரானது என்ற ஒரு கருத்து எழுந்துள்ளது - மாநில அரசின் அனுமதியையும், ஒத்துழைப்பையும் பெற்று இந்தச் சட்டத்தை செயல்படுத்தலாம் என்பது ஒரு நியாயமான கருத்தாகும். அதை விட்டு விட்டு, இந்தச் சட்டமே கூடாது என்று ஒரு அமைப்புக் கூறுகிறது என்றால் அதன் உட்பொருள் என்ன? அப்படியொரு சட்டம் செயல்பட்டால் தங்களுக்குப் பாதகமாக இருக்கும் என்று கருதுவது - குற்றமுள்ள நெஞ்சுடையாரின் குறுகுறுப்பேயாகும்.

காரணம் நாடு தழுவிய அளவில் மதக் கலவரங் களை உண்டாக்கிக் குளிர்காய்வதுதான் ஆர். எஸ்.எஸ். சங்பரிவார் உள்ளிட்ட (பி.ஜே.பி.யும்) குழுமத்தின் வழிமுறைகள்!

மக்களை இந்துக்கள் - சிறுபான்மையினர் என்று கூறு போட்டால் பெரும்பான்மையான இந்துக்களின் வாக்குகள் (Polarisation) தங்களுக்குக் கிடைக்கும் என்ற தந்திரமாகும்.

குஜராத்தில் மதக் கலவரத்தை உருவாக்கி அப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்தவில்லையா? பாபர் மசூதியை இடித்தவர்கள் அல்லவா!

கோத்ராவில் ரயில் பெட்டி எரிந்து பலர் மாண்டனர் என்பது வேதனையான ஒன்றே! பொறுப்புள்ள முதல்வராக இருந்தால் நரேந்திரமோடி என்ன செய்திருக்க வேண்டும்?

இதனை வைத்து மக்களுக்குள் மோதல், கலவரம் வந்து விடக் கூடாது என்பதில் அல்லவா கவனம் செலுத்தி இருக்க வேண்டும்? அதற்கு மாறாக, அவரின் சிந்தனை யும், அணுகுமுறையும் இருந்தன உள்ளுக்குள்ளிருந்த இந்துத்துவா வெறியல்லவா அவரை உசுப்பி விட்டது!

பலியானவர்களை அடையாளம் கண்டு, உடல்களை அந்தந்த ஊருக்கு அனுப்புவது என்று தான், முதலில் முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட் டத்தை மாற்றி, பலியான அத்தனை உடல்களையும் ஒரே இடத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லுவது என்று முடிவு செய்தவர்தான் முதல் அமைச்சர் நரேந்திரமோடி.

அதன் விளைவு என்ன ஆகும் என்பது, கடுகளவு சிந்திப்பவர்கள்கூட உணர்ந்து கொள்வார்கள். பலியான பிணத்தைக் காட்டி பெரும்பான்மையான இந்துக்களை வெறியேற்றி சிறுபான்மை மக்கள்மீது வன்முறையை ஏவுவதுதான் மோடியின் திட்டம்; அதன்படியே நடந்தது.

அப்பொழுது குடியரசு தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் அவர்கள் பிரதமர் வாஜ்பேயிடம் பல முறை தொடர்பு கொண்டு, இராணுவத்தை அனுப்பிக் கலவரத்தை அடக்க வேண்டும் என்று வலியுறுத் தியும் அதனைப் பிரதமர் வாஜ்பேயி செய்யவில்லையே! இவ்வளவும் நடந்த பிறகு எந்தமுகத்தை வைத் துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று நீலிக் கண்ணீர் வடித்தவர்தான் இந்த வாஜ்பேயி.

குஜராத்தில் ஓர்அரசே முன்னின்று கலவரத்தைத் தூண்டி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்கள் கொல்லப்பட்ட பிறகுகூட, இப்படி யொரு மதக் கலவரத் தடுப்புச் சட்டம் கூடாது என்று சொல்லுபவர்கள் யாராக இருக்க முடியும்?

இது, சிறுபான்மை மக்களைத் தாஜா செய்வ தற்குக் கொண்டு வரப்படும் சட்டம் என்று, இந்துத் துவாவாதிகள் சொல்லுகிறார்கள் என்றால் இதன் பொருள் எளிமையாக அறியப்படக் கூடியதே.

இந்தச் சட்டத்தைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டு வேண்டுமென்றே விமர்சிக்கிறார்கள் என்று கருத வேண்டியுள்ளது.

இந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமல்ல; காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் இந்துக்களுக்கும் பயன் உடையதாக இருக்கும். கருநாடகம், மும்பை போன்ற மாநிலங்களில் தமிழர்கள் போன்ற வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், மகாராட்டிரத்தில் பீகாரிகளுக்கும் கூடப் பாதுகாப்பான சட்டம்தான்.

இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந் தாலும் மதக் கலவரம் நாட்டில் நடைபெற வேண்டும் என்ற நஞ்சை கன்னத்தில் அடக்கி வைத்திருக்கக் கூடியவர்களே ஆவர்! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/72198.html#ixzz2nk1r5a00

தமிழ் ஓவியா said...


நீதிபதி கங்குலியின் கீழ்தரச் செயல்கள்


பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞரின் பரபரப்புத் தகவல்கள்

புதுடில்லி, டிச.17- நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பெண் வழக்குரைஞர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு விவரத்தை மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் வெளி யிட்டார்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய பெண் வழக்குரைஞர் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக கூறிய உச்சநீதி மன்றம், ஏ.கே.கங்குலி நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புகார் குறித்து விசாரணை நடத்த முடியாது என்று அறிவித்தது.ஆனால் பாலியல் புகா ரை திட்டவட்டமாக மறுத்த, முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் குழு தலைவர் பதவியில் இருந்தும் விலக மறுத்தார். ஏ.கே.கங்குலி மீது சட்டப்படி விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் வலி யுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் நேற்று டில்லியில் கூறுகையில், முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அப்படி விலக மறுத்தால் அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

பெண் வழக்குரைஞர் அளித்த புகார்

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில், பெண் வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாண வாக்குமூலத்தையும் இந்திரா ஜெய்சிங் வெளியிட்டார். அதில் நீதிபதி கங்குலி மீது பெண் வழக்குரைஞர் அளித்த புகார் விவரம் வருமாறு:

தமிழ் ஓவியா said...


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி இரவில் (கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்தையதினம்), நீதிபதி கங்குலி தன்னை தொலைபேசி மூலம் அழைத்தார். நான் ஓட்டல் அறைக்கு சென்றதும் அங்கு மேலும் ஒரு பெண் உதவியாளரும், அகில இந்திய கால்பந்து சங்கம் தொடர்பாக ஒரு ஆணும் இருந்தனர்.அவர்களை நீதிபதி எனக்கு அறிமுகம் செய்துவைத்து, அகில இந்திய கால்பந்து சங்கம் வழக்கு தொடர்பான அறிக்கையை மறுநாள் காலை தாக்கல் செய்ய வேண்டும். எனவே இரவு முழுவதும் வேலை இருப்பதால், அங்கு தங்க வேண்டியது இருக்கும் என்று நீதிபதி கூறினார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணும் அவருடன் இருந்த ஆணும் அங்கிருந்து சென்று விட்டனர்.

நான் நீதிபதியிடம், வேலையை விரைந்து முடித்துவிட்டு திரும்பி விடுவதாக தெரிவித் தேன். அப்போது வலைத்தளம் வேலை செய்யாததை நீதிபதியிடம் தெரிவித்தேன். ஒரு கட்டத்தில் நீதிபதி கங்குலி, மது பாட்டிலை வெளியில் எடுத்து கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஓட்டல் நிர்வாகத்தினர் கொடுத்த அன்பளிப்பு என்றும் நான் மது சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது என்றும் கூறினார். மது அருந்திய அவர் என்னையும் அருந்துமாறு கட்டாயப்படுத் தினார். வேறு வழி இல்லாமல் நானும் சிறிது அளவு சாப்பிட்டேன்.

பின்னர் சாப்பிட வருமாறு அழைத்தார். அங்கு இருக்கையில் அமரமுயன்றபோது எனது பின்பகுதியை நீதிபதி தொட்டு, எனக்கு உதவி செய்ய வந்ததற்கு நன்றி என்று கூறினார். நீதிபதியின் விபரீத போக்கை உணர்ந்து கொண்ட நான் அவரிடமிருந்து விலக முயன்றேன். அப்போதும் நீதிபதி என் அருகில் வந்து என் தலை மீது கை வைத்து நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூறி என்னை படுக்கை அறைக்குள் அழைத்து, வா... இருவரும் சற்று ஓய்வாக இருப்போம் என்று அழைத்தார். அது எனக்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. பதற்றமாகவும் மன நிலையை குலைப்பதாகவும் இருந்தது.

தொடர்ந்து அவர் எனது கையை பிடித்து, உன்னால் நான் மிகவும் ஈர்க்கப் பட்டுள்ளேன். உண்மையில் நான் உன்னை விரும்புகிறேன். நான் உன்னை நேசிக்கிறேன் என்று கூறியபடி நீதிபதி என்னை நெருங் கினார். நான் அவரது பிடியில் இருந்து விலகி வெளியேற முயன்றபோது, நீதிபதி எனது கை மணிக்கட்டில் முத்தமிட்டார். என்னை மிகவும் நேசிப்பதாக மறுபடி மறுபடி கூறினார்.

தமிழ் ஓவியா said...

நான் அவரை தள்ளிவிட்டு, எனது கணினியையும், பையையும் எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து வெளி யேறினேன். அவர் என்னை தொடர்ந்து வந்து, போகாதே போகாதே, நான் உனக்கு தொல்லை தருகிறேனா? என்னை விட்டு போகாதே, இப்போது எனக்கு உன்னுடைய உதவி வேண்டும். அகில இந்திய கால்பந்து வழக்கு அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்றார். நான் பதில் ஏதும் சொல்லாமல் வெளியேறினேன்.

ஓட்டல் வரவேற்பு அறை வரை நீதிபதி எனது பின்னால் வந்தார். அங்கு நான் செல்வதற்கு கார் இல்லாததால், நீதிபதி தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யாரிடமோ பேசினார். அப்போது அங்கு ஒருவர் வந்தார். அவர் கால்பந்து சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்று நீதிபதி என்னிடம் அறிமுகம் செய்தார்.தொடர்ந்து தனியாக நின்ற நீதிபதி, வேலையை முடித்துத் தருமாறு என்னிடம் வேண்டி னார். நான் பதில் ஏதும் கூறவில்லை. பின்னர் இரவு 10.30 மணிக்கு கார் வந்ததும் நான் அங்கிருந்து திரும்பிவிட்டேன். நான் எனது விடுதிக்கு திரும்பியதும், நீதிபதி எனக்கு போன் செய்து, போய் சேர்ந்து விட்டாயா? என்று கேட்டார். அதற்கு நான் ஆம் என்று பதில் அளித்ததும் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

மறுநாள் காலையில் இருந்து அடிக்கடி எனக்கு நீதிபதி போன் செய்தார். ஆனால் நான் அந்த போன்களை எடுக்கவில்லை. அன்று இரவு 9 மணிக்கு நான், நீதிபதிக்கு போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினேன். அதில் முதல் நாள் இரவு நடந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்ததாகவும், மேலும் எனது பணியை தொடர விரும்பவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவித்து இருந்தேன். பதிலுக்கு நீதிபதி வருத்தம் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பினார். அதற்கு நான் பதில் அனுப்பவில்லை. பின் னரும் அடிக்கடி போன் செய்தார். அவரு டன் பேசுவதை, நான் தவிர்த்துவிட்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெண் வழக்குரைஞர் கொடுத்த புகார் அறிக்கை வெளியானதற்கு, முன்னாள் நீதிபதி கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் அமர்வு முன்பு அளிக்கப் பட்ட ரகசிய அறிக்கையை எப்படி வெளி யிடலாம் என்றும் அவர் கேள்வி விடுத்தார்.

போராட்டம்

இதற்கிடையில் மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் குழு தலைவர் பதவியில் இருந்து ஏ.கே.கங்குலி உடனடியாக விலகக் கோரி, கொல்கத்தா அலிபூரில் உள்ள அந்த அலுவலகம் முன்பு எதிர்ப்பாளர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.கறுப்பு பட்டை அணிந்திருந்த அவர்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர். கோரிக்கை வாசகங்கள் எழுதிய அட்டைகளையும் ஏந்தி இருந் தனர். நீதிபதி கங்குலியின் உருவபொம்மை யையும் அவர்கள் கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/72172.html#ixzz2nmqlIzXz

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.- காங்கிரசுடன் கூட்டணி இல்லை தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சென்னை, டிச.18- பி.ஜே.பி. மற்றும் காங் கிரசுடன் கூட்டணி கிடையாது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பேட்டி விவரம் வருமாறு:

கலைஞர் அவர்கள் நேற்று (17.12.2013) காலை தமது இல்லத்திலிருந்து அண்ணா அறிவாலயத்திற்குப் புறப்பட்டபோது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர்: லோக்பால் மசோதா இன்றையதினம் (17.12.2013) நாடாளுமன் றத்தில் விவாதிக்கப்படுகிறது. அந்த மசோதாவை தி.மு. கழகம் ஆதரிக்குமா? கலைஞர்: நாடாளுமன்ற தி.மு.கழகக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, இந்த மசோதா விவாதத்திற்கு வருகின்ற நேரத் தில் எப்படி முடிவெடுக்க வேண்டு மென்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அந்த முடிவு எடுத்த பிறகு உங்களுக்கும் தெரியும்.

செய்தியாளர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் இன்று (17.12.2013) அளித்த பேட்டியில், தமிழகத்தில் உங்கள் தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: மகிழ்ச்சி.

செய்தியாளர்: நேற்றையதினம் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞான தேசிகன் அளித்த பேட்டியின்போது, தி.மு.கழகம் அய்க்கிய முற்போக்குக் கூட் டணியிலே தற்போது இல்லை என்றும் ஏற்கெனவே விலகி விட்டதாகவும், வரு கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க.விற்கு ஆதரவு கேட்டு எந்தவித மான கடிதமும் தான் எழுதவில்லை என்றும் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: அதிலிருந்தே நீங்களே தெரிந்து கொண்டிருக்கலாம். காங்கிரசை விட்டு விலகியதற்கு வேறு காரணம் தேவையில்லை என்று ஞானதேசிகன் அவர்களே சொல்லிவிட்டதற்காக நன்றி.

செய்தியாளர்: தமிழகத்தில் காங் கிரஸ், பா.ஜ.க.வுடன் சேராது, தி.மு.கழகம் தனித்துப் போட்டியிடப் போகிறதா?

கலைஞர்: ஆமாம். ஏற்கெனவே எங் களுடன் உள்ள தோழமைக் கட்சி களுடன் சேர்ந்து போட்டியிடுவோம்.

செய்தியாளர்: பா.ஜ.க. சார்பில் நேற்றைய தினம் பேட்டியளித்த நிர்மலா சீத்தாராமன், தி.மு.கழகம் கூட்டணிக் காக அழைப்பு விடுத்தால் பரிசீலிப்போம் என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: பா.ஜ.க.வை நாங்கள் அழைப்பது என்று எதுவும் முடிவு செய்யவில்லை.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/72203.html#ixzz2nptN7FRt

தமிழ் ஓவியா said...


செய்தியும், சிந்தனையும்!


பற்றாக்குறை

இந்தியாவில் 9.55 இலட்சம் செவி லியர்கள் பற்றாக்குறை

(படித்துவிட்டு வேலையில்லாத செவிலியர்கள் ஏராளம் இருக்கும் போது, இந்தப் பற்றாக்குறையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண் டாமா?).

குழந்தைகளுக்கு

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நிதி திரட்டிட ஜனவரி 5 ஆம் தேதி சென்னையில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு.

(கர்ம பலன் என்று நினைக் காமல், இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வோர்க்குப் பாராட்டுகள், வெற்றி பெற வாழ்த்துகள்!)

வெட்டு-குத்து

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த மாநிலக் கல்லூரி மாணவர்களை வெட்டிய பச்சையப்பன் கல்லூரி மாண வர்கள் கைது.

(மாணவர்கள் படிக்கச் செல்கிறார் களா? அல்லது ரவுடிசத்தை அரங் கேற்றச் செல்கிறார்களா? நம் நாட்டின் கல்வி முறைகள் ரவுடிசத்தைத்தான் வளர்க்கிறதோ? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும்!)

நீதிமன்ற அவமதிப்பு

ஆயுள் கைதி ஒருவரை விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றம் உத்தர விட்டும், விடுதலை செய்யாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு ஆளாகி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தாக்கீது (நோட்டீசு) அனுப்பியுள்ளது.

(வேலியே பயிரை மேய்கிறது என் பார்களே, அது இதுதானோ! அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி!)

பார்வையற்றோர்

அண்ணா மேம்பாலச் சந்திப்பு அருகே நடைபாதையில் திடீர் என்று முளைத்த கட்-அவுட்டுகளால் பார்வையிழந்தோர் தடுக்கி விழுந்து காயமடைந்தனர்.

(ஆளும் கட்சி சார்பான கட்-அவுட்டு களுக்கு கெட்-அவுட் கிடையாது. அர சாங்கத்தின் கோழி முட்டை, குடிமக் களின் குழவிக் கல்லையும் உடைக்குமே!).

கொடி கட்டி

பண்ருட்டியையடுத்த ஆ.நத்தம் பகுதி யில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யினர் கொடிக்கம்பம் அமைத்தபோது வன்னிய சமுதாயத்தினர் எதிர்த்தனர்.

(தாழ்த்தப்பட்டவரும், பிற்படுத்தப் பட்டவரும் ஒன்றிணைந்து போரா டினால்தான் சமூகநீதி பாதுகாக்கப் படும் என்ற அடிப்படையை, தலை வர்கள் போதிக்கவேண்டாமா? இங்கு எங்களுக்கு மட்டும்தான் கொடிகட்டிப் பறக்கிறது என்று எண்ணலாமா?).

யானைகள் முகாம்

புதுச்சேரி நாகூர் தர்கா யானை களும், யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்படுகின்றன.

(பரவாயில்லை, இதிலாவது மதச் சார்பின்மை கடைப்பிடிக்கப்படுகிறதே! ஆனாலும், கஜேந்திரா பக்தி சமாச் சாரம் இதற்குள் புதைந்து கிடக்கிறது. ஆன்மீக தி.மு.க. ஆட்சியல்லவா!)

கும்பாபிஷேகம்

115 ஆண்டு வயதுள்ள சென்னை சட்டக் கல்லூரி கட்டடம் சேதமடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது.

(அதனால் என்ன, குழவிக் கல்லு சாமி குடியிருக்கும் கோவில்களைப் புனரமைத்து க்ஷிரணத் தோரண பூர்ண கும்பாபிஷேகம்தானே முக்கி யம், அவசியம், அவசரம்!)

Read more: http://viduthalai.in/e-paper/72205.html#ixzz2nptZ7OEa

தமிழ் ஓவியா said...


சபாஷ், சரியான நடவடிக்கை!


உயர்நீதிமன்ற நுழைவாயிலில் உள்ள அம்மன் கோயிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை,டிச.18- உயர் நீதிமன்ற நுழைவாயிலில் உள்ள அம்மன் கோயிலை இடிக்க நீதிபதிகள் உத் தரவிட்டனர்.

சென்னையில் உள்ள சாலையோரக் கோயில் களை இடிக்கக் கோரி யும், உயர்நீதிமன்ற நுழை வாயிலில் சாலையோரம் உள்ள ஒரு மாரியம்மன் கோயிலை இடிக்கக் கோரியும் டிராபிக் ராம சாமி என்பவர் உயர்நீதி மன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய் தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து, சாலையோ ரக் கோயில்களை இடிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அம் மன் கோயிலை இடிக் கும்படி அதன் அறங் காவலர் காந்தா சீனிவா சனுக்கு மாநகராட்சி தாக்கீது அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி காந்தா சீனிவா சன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வரும்போது அவர் குணமடைய இந்த அம்மன் கோயில் கட் டப்பட்டது. அதன்பிறகு அவர் குணமடைந்து சென்னை வந்தார். அவர் நினைவாக இந்தக் கோயில் உள்ளது. இதை இடிக்கக் கூடாது. மாநக ராட்சி அனுப்பிய தாக் கீதை ரத்து செய்யவேண் டும் என்று கூறியிருந் தார்.

இந்த வழக்கை நீதி பதிகள் அக்னிகோத்ரே, சசிதரன் ஆகியோர் விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:

சாலை யோரம் உள்ள அனைத்துக் கோயில் களை யும் இடிக்க உத் தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப் படையில் தான் மனுதார ருக்கு மாநகராட்சி தாக் கீது அனுப்பியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். இந்தக் கோயிலை மாநக ராட்சி இடிக்கலாம்.
இந்தக் கோயில் அனு மதியில்லாமல் கட்டப் பட்டுள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது. உயர்நீதிமன்ற வளாகத் தின் சுற்றுச்சுவரை யொட்டி கோயில் உள் ளது. கோயில், மசூதி, கிறிஸ்தவ கோவில் ஆகியவற்றை தனியார் இடத்தில் வைக்க உரி மையுள்ளது. பொதுமக் களை பாதிக்கும் வகை யில் வைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள் ளது. மதரீதியான கட்ட டங்களை பொது இடத் தில் கட்ட யாருக்கும் உரிமையில்லை. எனவே இந்த வழக்கை தள்ளு படி செய்கிறோம்.
- இவ்வாறு நீதிபதி கள் தீர்ப்பில் கூறியுள் ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72204.html#ixzz2nptlqmPB

தமிழ் ஓவியா said...


மலேசியாவில் தமிழர் தலைவரின் நிகழ்ச்சிகள்



கோலாலம்பூர், டிச.18- மலேசியத் திராவிடர் கழகத் தின் சார்பில் 67 ஆம் மூவாண்டு தேசியப் பேராளர் மாநாடு வரும் 21, 22 ஆகிய தேதிகளில், கோலாலம்பூர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகிறார். டிசம்பர் 21 இல் தொடங்கும் மாநாட்டை, ம.இ.கா தேசியத் தலைவரும், இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோசிறீ ஜி.பழனிவேல் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியின் தொடக்கமாக காலை 9 மணி அமர்வில், தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். தொடர்ந்து ம.இ.கா தேசியத் உதவித் தலைவர் டத்தோசிறீ சி.பாலகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

அதேநாளின் பிற்பகல் நிகழ்ச்சிகள் இரவு 7 மணி யளவில் டைனாஸ்டி தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ம.இ.கா. தேசியத் துணைத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோ சிறீ டாக்டர் எஸ்.சுப்பிர மணியம் தொடங்கி வைக்கிறார். நிகழ்வில் மலேசிய இந்திய தெற்காசிய நாடு களுக்கான கட்டமைப்புச் சிறப்புத் தூதர் டத்தோசிறீ உத்தாமா ச.சாமிவேலு, மருத முத்து அவர்களின் படத்தைத் திறந்து வைத்து உரை நிகழ்த்துகிறார். மக்கள் ஓசை பத்திரிகையின் நிர்வாக இயக் குநரும், ம.இ.கா. மத்திய செய லவை உறுப்பினருமான சுந்தர் சுப்பிரமணியம் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

இந்த அமர்விலும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கின்றார். தொடர்ந்து மலேசியத் திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் பெரும்பங்காற்றி, கழகத் தின் கட்டடம் உருவாக, உண்டியல் ஏந்தி நன்கொடை பெற்ற தோழர்களுக்குச் சிறப்பு செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 22 ஞாயிறன்று இரண்டாம் நாள் மாநாடு தொடங்குகிறது. இதில் முக்கியத் தீர்மானங்களும், பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன. கழகத்தின் மாபெரும் சொத்தான செராஸ், தாமான் செமிலிங் பெர்காசாவில் உள்ள இயக்கக் கட்டடமான விஸ்மா மருதமுத்து கட்டடத்தை மீட்டுச் சாதனைப் புரிந்த மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் பி.எஸ். மணியம் அவர்கள் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். அவருடன் இணைந்து கே.ஆர்.அன்பழகன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகள் நல்ல வண்ணம் செய்திகள் வெளியிட்டு பரப்புரை செய்து வருகின்றன. தொடர்ந்து டிசம்பர் 23 ஆம் நாளன்று பேராக் மாநிலத்தில் நடைபெறும் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி, மாநிலத் தலைவர் கி.கூத்தரசன் தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார். மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் பி.எஸ்.மணியம், கே.ஆர்.அன்பழகன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் பலர் இதில் பங்கேற்கின்றனர். டிசம்பர் 24 ஆம் நாளன்று பினாங் மாநிலத்தில் நடைபெறும் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி, மாநிலத் தலைவர் ச.தா.அண்ணாமலை தலைமையில் நடைபெறு கிறது. இந்நிகழ்ச்சியிலும் தமிழர் தலைவர் அவர்கள் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். இந்நிகழ்வில் பினாங் மாநிலத் துணை முதலமைச்சர் ப.இராமசாமி, டத்தோ புலவேந்திரன், பி.எஸ்.மணியம், கே.ஆர். அன்பழகன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற் கின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72208.html#ixzz2nptwZ8VG

தமிழ் ஓவியா said...

வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது! ஆசிரியர் தாத்தா பிறந்த நாள் 02.12.2013



மாணவப் பருவத்தில் ஆசிரியர் தாத்தா

எனது நான்காம் படிவம் முதல் ஆறாம் படிவம் வரை எனக்கு அரசு உதவித் தொகையில் சம்பளம் போக இரண்டு ரூபாய்கள் மிஞ்சும். ரூபாய் ஆறரை சம்பளம் போக ரூபாய் இரண்டரை மிஞ்சும். (10 ரூபாய் சம்பள ஸ்காலர்ஷிப்) எங்கள் பள்ளியின் கடைநிலை ஊழியர் தோழர் தனபால் அந்த மாத காசோலையை (செக்கினை) உதவித் தொகைக்காக வங்கியில் மாற்றி வருவார்.

அவருக்கும் ஒரு சிறு தொகை தவறாது அதில் கொடுப்பேன் -மனமுவந்து.- அவர் தொடக்கத்தில் மறுத்தாலும்கூட - இந்த உதவித்தொகை எனக்குக் கிடைக்க என்னுடைய ஆசிரியர், தலைமையாசிரியர் பரிந்துரை காரணம் என்றாலும், பலர் போட்டியிட இதனை ஒரேயொரு மாணவருக்குத் தந்ததற்கு ஒரு நிகழ்ச்சி காரணம் என்று சொல்ல வேண்டும்.

ஒரு நாள் (D.E.O) மாவட்டக் கல்வி அதிகாரி சோதனை (இன்ஸ்பெக்ஷன்); அவர் தமிழ் மொழி இனப்பற்றாளர் - திரு. முருகேச முதலியார் என்பது அவரது பெயர். சென்னையிலிருந்து வந்தவர். ஒவ்வொரு வகுப்புகளையும் சுற்றிப் பார்ப்பார்!

சில வகுப்புகளுக்குள்ளும் சென்று ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கண்காணிக்க சிறிது நேரம் தங்கி மாணவர்களையும், ஆசிரியரையும் கேள்வி கேட்டு வெளியேறும் கடமை வீரர் அவர். எல்லா ஆசிரியரின் வகுப்பறைகளும், துப்புரவாகவும், துடிதுடிப்புடனும், எச்சரிக்கையுடனும் அவரது வருகையை எதிர்நோக்கியிருந்தன.

இரண்டு நாள் தொடர் இன்ஸ்பெக்ஷன். இரண்டாவது நாள் அவர் எங்கள் வகுப்பிற்கு வந்தார்.- உள்ளூர் பிரமுகர் திரு. அழகானந்த முதலியார் கட்டித் தந்த அழகானந்த கூடம்.

அந்த வகுப்பறையில் எங்கள் தமிழாசிரியர் திரு. பழனியாண்டி (முதலியார்) தமிழ் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.

(டர்பனுடன் இருப்பார் ஆசிரியர்) நுழைந்தார் கல்வி அதிகாரி. அமர்ந்தார் நாற்காலியில். வகுப்பு நடைபெறுவதைத் தொடரச் சொன்னார். முன்பே நடத்திய பாடத்தையே நடத்தினார் எங்கள் ஆசிரியர்; கேள்வி கேட்டாலும் மாணவர்கள் தெளிவாகப் பதில் சொல்ல வாய்ப்பு அதனால் சிறப்பாக ஏற்படுமென்பதால்!

கல்வி அதிகாரி திடீரென்று மாணவர்களாகிய எங்களை நோக்கி திருக்குறளில் எத்தனை குறள்கள் உங்களுக்குத் தெரியும்? தெரிந்த மாணவர்கள் யாரேனும் சொல்லுங்கள் என்றார். ஓர் நிமிடம் அமைதி. தமிழாசிரியரேகூட எதிர்பார்க்காத கேள்விக்கணை அது! ஆசிரியர் எங்களைப் பார்த்தார்; உடனே அச்சமின்றி, துணிவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, சில குறள்பாக்களை மடமடவென்று உரத்த குரலில், மேடையில் பேசுவது போல சொல்லத் தொடங்கினேன்.

அப்போது எனக்கு எந்தத் திருக்குறள் அதிகாரமும் முறையாக 10 தொடர்ந்து தெரியாது என்றாலும், நான் நமது மேடைகளில் பல சொற்பொழிவாளர்கள் கூறுவதைக் கேட்டும் குடியரசு, திராவிட நாடு, விடுதலை போன்ற நமது கொள்கை ஏடுகளில் வரும் கட்டுரையின் மேற்கோள்களைப் படித்து மனத்தில் பதிய வைத்திருந்தவற்றையே ஒப்புவித்தேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் என்னும் குறள், எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் என்ற குறள்,

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் என்ற குறள்-, இப்படி சில குறள்களைக் கூறினேன்.

மகிழ்ந்தார்; பாராட்டினார்; போதுமென்றார்; என்னைக் காப்பாற்றினார் மாவட்டக் கல்வி அதிகாரி! வகுப்பிலுள்ள மற்ற மாணவர்கள் மவுனமாகிவிட்ட நிலையில், பளிச்சென்று எழுந்து நான் குறள்பாக்களைக் கூறியது பற்றி எங்கள் தமிழாசிரியர் அவர்களுக்கும் மெத்த மகிழ்ச்சி.

மாவட்டக் கல்வி அதிகாரி திரு. முருகேச முதலியார் உடனே உன் பெயர் என்னவென்று கேட்டார். பிறகு சென்றுவிட்டார். அவர் சென்ற நிலையில் அடுத்த நாள் எங்கள் பள்ளி மாணவர் உதவித்தொகை பற்றிய குறிப்புகள் கொண்ட கோப்புகளை அவர் காண நேர்ந்தது;

அவர் முடிவெடுக்க வேண்டிய அதிகாரி என்பதால் -எனது பெயரை அவர் மிக நன்றாக நினைவில் கொண்டதன் பேரிலும், எனக்கே அந்த உதவித்தொகையை (ஸ்காலர்ஷிப்) அளிக்க ஆணை பிறப்பித்தார்.

நான்காம் படிவத்திலிருந்து பள்ளியிறுதி வகுப்பான 6ஆ-வது படிவம் (S.S.L.C. Sixth form) வரை மூன்று ஆண்டுகளும்- அது தொடர்ந்து கிடைத்தது. காரணம், ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்த மாணவன் என்ற கூடுதல் தகுதியும் அதற்குரியவனாக என்னை ஆக்கிற்று. வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது; அதற்கு மூல காரணம் திராவிட இயக்கச் சார்பே ஆகும்.

நூல்: அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம்-1

தமிழ் ஓவியா said...

முதல் மதிப்பெண்ணுக்கு மோதாதீர்!

- சிகரம்

முதல் மதிப்பெண் மோகம், வேகம், தாகம், கிடைக்காவிடின் சோகம் என்பவை பெற்றோர், நிர்வாகம், மாணவர் என்ற முத்தரப்பிலும் முனைந்து நிற்கும் முதன்மை உணர்வு.

சில நிர்வாகமும், சில பெற்றோரும் இதற்காக மாணவர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியும், நிம்மதிச் சிதைப்பும், உளைச்சலும், உதையும், வதையும் ஏராளம்!

100க்கு 97 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டாள். காரணம், முதல் மதிப்பெண் பெற 1 மதிப்பெண் குறைந்துவிட்டதாம்! எவ்வளவு கொடுமையான முட்டாள்தனம்; மூளைச்சலவை; மூடநம்பிக்கை பாருங்கள்!

ஒரு மதிப்பெண்தான் வாழ்வா? 97 மதிப்பெண் பெற்றது என்ன சாதாரண சாதனையா? சாதாரண உழைப்பா? அதைவிட ஒரு மாணவர் என்ன சாதிக்க வேண்டும்?

இங்கு அவள் ஆயுளைப் பறித்தது எது? அறியாமையா? வறட்டுப் பெருமையா? மானப் பிரச்சனையா? பெற்றோர் கொடுத்த உளைச்சலா? விசாரித்தபோது பெற்றோர் திட்டியதுதான் காரணம் என்று தெரிந்தது. இப்படி ஒரு படிப்பாளிப் பெண்ணைப் பாராட்டுவார்களா? பழிப்பார்களா?

படிக்காத பெற்றோர் யாரும் இப்படிச் செய்வதில்லை; படித்த முட்டாள்கள் படுத்தும் பாடுதான் இது! முதல் மதிப்பெண்ணில்தான் தன் மானமும், மரியாதையும் அடங்கியிருப்பதாக அலையும் அவலம்.

40 மாணவர்களில் முதன்மை வந்தால், நாலு பள்ளிகளில் முதன்மை இல்லை; மாவட்டத்தில் முதன்மை வந்தால் மாநிலத்தில் முதன்மை இல்லை.

மாநிலத்தில் முதன்மை வந்தவர் மேற்படிப்பில் முதன்மை இல்லை! இதுதானே யதார்த்த நிலை? இதற்கா இத்தனைப் போட்டி? பொறாமை?

பகுத்தறிவின்பாற்பட்ட முயற்சி எது என்றால், நாம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அதற்கேற்ற தகுதி மதிப்பெண்ணை அடைய உழைப்பதே! சரியான அணுகுமுறை அதுவே!

நமக்குத் தேவையான உணவை உண்பதுதானே உடல்நலம் காக்கும் அறிவுடைய செயல்? அடுத்தவனைவிட ஒரு உருண்டை கூடுதலாகச் சாப்பிட வேண்டும் என்று முனைவது முறையா? அதுதானே மதிப்பெண்ணுக்கும்!

பணிக்குப் போகும்போதும், படிக்கப் போகும்போதும், அவை கிடைக்க என்ன மதிப்பெண் தேவையோ அதைப் பெற திட்டமிட்டு முயலுவது என்ற செயல்திட்டமே சிறந்தது, உகந்தது; சமூக நல்லிணக்கம், மனிதநேயம், நட்பு இவற்றிற்கு ஏற்றது. மற்றபடி போட்டியிட்டு மோதுவது மூடத்தனம் என்பதை பெற்றோர் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கில் தன் பள்ளி முதலிடம் பெறவேண்டும் என்ற சுயநலத்தில், மாணவர்களை வாட்டி வதைப்பது கண்டிக்கத்தக்கது.

ஒரு மாணவனை முதல் மதிப்பெண் வாங்க வைக்க அலைவதைத் தவிர்த்து, 100 மாணவர்களைத் தரமாக உருவாக்க முயற்சிப்பதே உண்மையான கல்விச் சேவை. தன் பிள்ளைக்குத் தேவையான மதிப்பெண் கிடைக்க பிள்ளைக்கு வேண்டிய கடமைகளைச் செய்வதே பெற்றோரின் பொறுப்பு.

தன் எதிர்காலத் திட்டத்திற்கு - இலக்கிற்கு ஏற்ற மதிப்பெண்ணைப் பெறப் பாடுபடுவதே படிப்போர்க்குச் சிறப்பு. அதை விடுத்து முதல் மதிப்பெண்ணுக்காக மோதுவதும், சாவதும் முட்டாள்தனம்; மூடத்தனம்! எனவே, பெற்றோரும், நிர்வாகத்தினரும், மாணவரும் இந்த மூடத்தனத்திலிருந்து முதலில் விலக வேண்டும்.

முயற்சிக்கு ஓர் உந்துதல் வேண்டாமா? சிலர் கேட்பர். முதல் மதிப்பெண்தான் உந்துதலா?

அது போட்டிக்கும் பொறாமைக்குமே வழிவகுக்கும். தனக்குத் தேவையான மதிப்பெண் இவ்வளவு. அதைப் பெறவேண்டும் என்றால் உந்துதல் வராதா?

கல்வி என்பது விளையாட்டுப் போட்டியோ, பந்தயமோ அல்ல. அது அறிவுத் தெளிவு; ஆற்றல் வளர்ப்பு.

ஓட்டப் பந்தயத்தில்தான் முதல், இரண்டு, மூன்று என்பதெல்லாம். படிப்பில் மதிப்பெண்ணில் அல்ல.

விளையாட்டில் போட்டி ஆர்வம் தரும்; கல்வியில் போட்டி உளைச்சல் தரும்.

98% மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று உண்மையில் மகிழ்வதற்குப் பதில், 99% இன்னொருவன் பெற்று முதலிடம் வந்து விட்டானே! என்று ஏங்கிக் கவலைப்படுவது அறிவிற்கு அழகா?

98% பெறும் அளவிற்கு நாம் படிப்பாளி என்று பெருமை கொள்ளமுடியாமல் செய்வது முதல் மதிப்பெண் மோகம் என்றால், அது மூடத்தனம் அல்லவா?

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் மரண சாசனம்


எனவே தோழர்களே! நம் முடைய நிலைமை உலகத்திலே பெரிய மானக்கேடான நிலைமை. 2000 வருடமாக இருக்கிற முட்டாள்தனத்தைவிட இந்தச் சட்டத்திலே இருக்கிற, இந்து லாவிலேயும், அரசியல் சட்டத் திலும் அது பெரிய முட்டாள்தனம். முதலிலே இதை மாற்றச் சொல் லாமல், இந்த ஆட்சியிலே குடிமகனாக இருக்கிறோமே, அது மகா மகா முட்டாள்தனம். பொறுக்கித்தின்பவனுக்கு இந்த ஆட்சி வேண்டும். மானத்தோடு பொழைக்கிறவனுக்கு இந்த ஆட்சியை ஒழித்துத்தானே ஆக ணும்? உன்னைப்போல் நான், என்னைப்போல் நீ மாற்றுகிறாயா? இல்லை. மூட்டை கட்டுகிறாயா என்று தானே கேட்க வேண்டும்? இல்லாவிட்டால் வழி? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்போம் என்று என்ன நிச்சயம்? நான் இறந்தால் நாளைக்கே மாறிவிடுவான்.

கலைஞரின் தீர்மானம்!

நமது கலைஞர் கருணாநிதி அவர்கள், கல்லுதான் - யார் வேண்டுமானாலும் பூஜை செய்ய லாம், இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று எல்லோருக் கும் அனுமதி கொடுத்தார். பார்ப்பான் கோர்ட். சுப்ரீம் கோர்ட் என்றால் பார்ப்பான் கோர்ட் என்று பெயர் (சிரிப்பு) சிரிக்காதீர்கள்; அதிலே தமிழ னுக்கு இடமே இல்லை. போனா லும் அவனுடைய அடிமைதான் அங்கு போவான், அவன் சாஸ்திரத்தைப் பார்த்துத்தான் தீர்ப்புச் சொல்வான். இந்த ஜனம் கோயிலுக்குள் போவது தப்பு; அது சாஸ்திர விரோதம். அட முட்டாள்களே! சாஸ்திரம் என்றால் எது? எப்ப எழுதியது? எவன் எழுதினான்! எவனை யாவது சொல்லச் சொல்லு, ஆகமத்தின்படி எழுதினான் என்கிறான். அய்கோர்ட் ஜட்ஜ் பார்ப்பான் ஆதிக்கமுள்ளது. பார்ப்பாத்தியால் நியமிக்கப்பட் டவர்கள் அவர்கள். அவர்கள் அப்படித்தானே எழுதுவார்கள்? எனவே, நமது இழிவு ஒழிந்தாக வேண்டும்; அதுதான் முக்கியம்.

தேங்காது! இப்போது நாம் கஷ்டப்பட் டால், பிறகு வட்டியும் முதலுமாய் உயரலாம். நமது நாட்டு முன் னேற்றம் ஒன்றும் தேங்கிப் போய்விடாது. எனவே இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து கேட்ட உங்களுக்கு எனது நன் றியைத் தெரிவித்து, எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.

சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் தம் வாழ்வின் இறுதி உரையாக (19.12.1973) - மரண சாசனமாக ஆற்றிய உரையின் முடிவுப் பகுதி இது.

Read more: http://viduthalai.in/e-paper/72294.html#ixzz2nuzwBRnl

தமிழ் ஓவியா said...


நமது இனமானப் பேராசிரியர் வாழ்க! வாழ்கவே!! கழகத் தலைவர் வாழ்த்து!

நமது இனமானப் பேராசிரியர் அவர்களுக்கு 92 ஆவது பிறந்த நாள் விழா இன்று!

இது நமக்கெல்லாம் இனமானத் திருவிழா - பெருவிழா.

நமது இனமானப் பேராசிரியர் அவர்கள் தி.மு.க.வின் பொதுச் செயலாளர்; அது மட்டுமல்ல நமது இனத்தின் தன்மானப் பெருங் குரல், உரிமைக் குரல்!

மனதிற்பட்டதை ஒளிவு மறைவின்றிப் பேசிடும் உண்மையின் உலா அவர்!

கொள்கை, லட்சியங்களையே முன்னிறுத்தி பதவி, பொறுப்புகளை பின்னிறுத்தும் லட்சியத்தின் ஒளி காட்டும் கலங்கரை விளக்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அவருக்கு பேரா சிரியராக உயர்ந்திட உதவியது.

அய்யாவும், அண்ணாவும் அவரை இனமானப் பேரா சிரியராக செதுக்கியவர்கள்.
92 வயது இளைஞர்!

உடல் நலம் சீராகி, சிறு கால ஓய்வுக்குப் பின் அவர்தம் இனமானப் பணி இன்றுமுதல் புத்தாக்கத்துடன், புத்தெழுச்சியுடன் புறப்படுகிறது.
92 வயது இளைஞர் அவர் - உணர்வால்!

அவர் பிறந்த இந்நாள் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி நாள் என்றே கொள்ள வேண் டும். தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் நமக்கெல்லாம் இனமானம் போதித்த ஆசான், தன் இறுதி முழக் கத்தை முடித்துக் கொண்ட இந்நாள் (19 டிசம்பர்) பேராசிரியரின் பிறந்த நாள்!

திராவிடர் இயக்கத்தின் முழக்கம் தொய்வடையாது தொடரும் என்பதற்கான சரித்திரச் சான்று என்றும் கொள்ளலாம்!

தாய்க் கழகம் வாழ்த்துகிறது

நல்ல உடல்நலத்துடன் நமது இனமானப் பேரா சிரியரின் நூற்றாண்டு விழாவை மானமிகு கலைஞரும், தி.மு.க.வும், தாய்க் கழகமாம் திராவிடர் கழகமும் அவரை வைத்தே கொண்டாடுவோம் என்ற நம்பிக்கையோடு, நல்லெண்ண வாழ்த்தைக் கூறு கிறோம்!

மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் இது நியாயமான ஆசையே தவிர, பேராசை அல்ல.

இனமானப் பேராசிரியர் வாழ்க,

அவர் பணி தொடர்க வெல்க!

கி.விரமணி
தலைவர்,திராவிடர்கழகம்

முகாம் சிங்கப்பூர்

19 டிசம்பர் 2013

Read more: http://viduthalai.in/e-paper/72293.html#ixzz2nv0CUBv1

தமிழ் ஓவியா said...


எடுத்துக் கொடுக்கிறது இந்து

எடுத்துக் கொடுக்கிறது இந்து

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மோடி லேசாகக் கோடி காட்டினால், தமிழ்நாட்டுக் கட்சிகள் பலவும், தமிழ்த் தேசியக் கட்சிகள் சிலவேனும், அவருக் குப் பச்சைக் கொடி காட்டும் சாத்தியம் வலுவாகத் தெரி கிறது.

- தி இந்து (தமிழ்) 18.12.2013



எடுத்துக் கொடுக்கிறது கல்கி

மக்கள்மீது மற்றொரு தேர்தலையும் செலவு களையும் திணிக்காமல், அதிக இடங்களைப் பெற்றுள்ள பா.ஜ.க. டில்லியில் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும். முழு மெஜாரிட்டி இல்லை; அதனால் எதிர்க்கட்சி இருக்கையில் அமர்ந்து கொள்கிறேன் என்று பா.ஜ.க.. முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்தன் பேசுவது கோழைத் தனம். சிறுபான்மை அரசை அமைத்து சீரான கொள்கை செயல்பாடு அடிப்படையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெற்று ஆட்சி நடத்துவதே மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்த தாகும். நல்லாட்சிக்கு ஆதரவு மறுக்க எதிர்க் கட்சிகளால் கூட முடியாது.

- கல்கி தலையங்கம் 22.12.2013



எடுத்துக் கொடுக்கிறது துக்ளக்

கேள்வி: பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி அமையாது; பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியும் அமையாது. ஆனால் பா.ஜ.க. - தே.மு.தி.க., ம.தி.மு.க. கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். அப்படி அமைந் தால் தாங்கள் கூறும் அறிவுரை என்ன? (நழுவாமல் பதில் தர வேண்டும்.).

பதில்: இதில் நான் யாருக்கு அறிவுரை கூறுவது? தே.மு.தி.க.விற்கும், ம.தி.மு.க.விற்கும் நான் வாழ்த்துக் கூறலாம். அவர்கள் வழக்கமாக வாங்கக் கூடிய ஓட்டுக்களை விடச் சற்று அதிகமான ஓட்டுக்களைப் பெறுவார்கள். அதற்கு வாழ்த்துக்கள். பா.ஜ.க., தான் எதிர்பார்க்கிற வெற்றியைப் பெறாது என்பதால் அதற்கு ஆறுதல் கூறலாம். இப்படி எதையாவது சொல்லலாமே தவிர, வேறு என்ன அறிவுரை கூறுவது?

- துக்ளக் 25.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/72297.html#ixzz2nv0O65os

தமிழ் ஓவியா said...

பக்தர்கள் பலி




கொழிஞ்சாம்பாறை, டிச.19- கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கடவளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணீஸ் (வயது 28), ராஜன் (49), சுதாகர் (35), முகேஷ் (29), உண்ணி (35), சுஜா (30) ஆகிய 6 பேர் கடவளூரில் உள்ள சிவன் கோவிலில் நடைபெற்ற திருவா திரை விழாவுக்கு நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு புறப்பட்டனர். கோவில் அருகே வந்த போது பக் தர்கள் கூட்டத்தில் அவர்கள் கலந் தனர்.

அந்த நேரத்தில் திருச்சூரில் இருந்து கோழிக்கோட்டுக்கு டேங்கர் லாரி வந்தது. எதிரே கோழிக் கோட்டில் இருந்து திருச்சூருக்கு லாரி ஒன்று வந்தது. கோவில் அருகே 2 லாரியும் வந்தபோது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதின.

கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மணீஸ், ராஜன், சுதாகர், முகேஷ், உண்ணி, சுஜா ஆகியோர் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உண்ணி, சுஜாவை தவிர மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். உண்ணியும், சுஜாவும் படுகாயம டைந்து உயிருக்கு போராடினர். இதை பார்த்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி யடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் திருச்சூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

உயிருக்கு போராடிய உண்ணி யையும், சுஜாவையும் மீட்டு கடவ ளூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். இறந்த 4 பேரின் உடல்களையும் பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவிலில் பூட்டை உடைத்து ரூ.24 ஆயிரம் கொள்ளை

சேலம், டிச 19- சேலம் அருகில் உள்ளது உடையாப்பட்டி. இங் குள்ள செல்வநகரில் ராஜகணபதி திருக்கோவில் உள்ளது. இந்த கோவி லுக்கு உடையாப்பட்டி மற்றும் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து சாமியை வணங்கி செல்வார்கள்.

இந்த கோவில் பூசாரி நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள் சிலர் வந்தனர். அப்பேது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி கோவில் பூசா ரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே கோவிலுக்கு வந்து பார்த்தார்.

கோவிலில் பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை. ஆனால் கோவிலில் இருந்த பீரோவை காணவில்லை. இந்த பீரோவை திருடர்கள் எங்கு தூக்கி சென்றனர் என அக்கம் பக்கம் அனைவரும் தேடினர்.

அப்பேது இந்த பீரோ கோவில் அருகில் உள்ள ரயில் தண்டவாளம் பகுதியில் கிடந்தது. இதன் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரொக்கம் ரூ.24ஆயிரத்தை திருடர்கள் திருடிச் சென்று இருந்தனர். பின்னர் பொது மக்கள் இந்த பீரோவை கோவிலுக்கு தூக்கி வந்தனர். கோவிலில் வேறு ஏதும் பொருட்கள் திருடு போக வில்லை. இந்த துணிகர திருட்டு குறித்து கோவில் பூசாரி பகவதி வீரா ணம் காவல்துறையில் புகார் செய் தார். இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-2/72267.html#ixzz2nv0chIYj

தமிழ் ஓவியா said...


அவசியம்


மூடநம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம். - (விடுதலை, 12.10.1967)

Read more: http://viduthalai.in/page-2/72262.html#ixzz2nv0lXBay

தமிழ் ஓவியா said...


வகுப்புரிமைப் போராட்டம்

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்.

மாணவர் பருவந்தொட்டு அவருடைய வாழ்க்கைச் சூழல் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைப் பக்கம் ஈர்த்தது.

தந்தை பெரியார் அவர்களின் மெய்க் காவலர் என்று கணிக்கப்பட்ட மாயவரம் சி. நடராசன் அவர்கள் நெருங்கிய உறவினர் என்பது மட்டுமல்ல; அவரது தந்தையார் அவர்களே நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தின்பால் தீவிரப் பற்றுதலும் செயல்பாடும் கொண்டவர்.

இந்தப் பின்னணி அவருக்குப் பலமாகவே இருந்து வந்திருக்கிறது. இன்று வரையிலும் அவருடைய ஒவ்வொரு சொற்பொழிவிலும் திராவிடர் இயக்கத்தின் பாய்ச்சலும், சுயமரியாதை இயக்கத்தின் சூடும் அப்படியே கண கண என்று தணியாமல் கொழுந்துவிட்டு நிற்பதைக் காண முடியும். புதிய தலைமுறையினருக்கு வகுப்புக்கான நற்பாடங்களாக அவை திகழும்.

அவரால் எழுதப்பட்ட ஒவ்வொரு நூலும் ஆழமான கருத்துடையவை. அரிய தகவல்களின் கருவூலங்கள் ஆகும்.

குறிப்பாக அவரின் வகுப்புரிமைப் போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) எனும் நூல் 1951இல் முதல் பதிப்பாக வெளி வந்தது. அதன் இரண்டாம் பதிப்பை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது (2013)

இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடு சமூக நீதியில் நிகரின்றிப் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் திராவிடர் இயக்கத்தின் தனிப் பெரும் சாதனையே! இந்தியாவில் கூட சமூக நீதிக்குப் பெரும் அளவு ஈர்ப்பு இன்று ஏற்பட்டுள்ளது என்றால் அதற்குக் காரணம் திராவிடர் இயக்கத்தின் வீச்சே!

இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாக திருத்தப்பட்டதற்குக் காரணம் என்று வருகின்ற போது தந்தை பெரியார் முதல் வரிசையில் கம்பீரமாக நிற்கிறார்.

அதேபோல வகுப்புரிமை ஆணை முதன் முதலாக பிறப்பிக்கப்பட்டதும் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற சென்னை மாநில ஆட்சியில்தான் (1927) இன்றைக்கு சென்னை பல்கலைக் கழகத்தில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் 89 விழுக்காடு என்று அப்பல்கலைக் கழகத் துணை வேந்தராகயிருந்த முனைவர் திருவாசகம் கூறி னார். (சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நீதிக்கட்சி 95ஆம் ஆண்டு விழாவில் - நாள் 20.11.2010).

மேலும் அவ்விழாவில் அவர் தெரிவித்த புள்ளி விவரங்கள் இன்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் பார்ப்பனர் அல்லாதார் நிலவரம் பற்றிய தகவல் இதோ:
செனட் - 90 விழுக்காடு

ஆசிரியர் - 92 விழுக்காடு
ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் - 91 விழுக்காடு
80 துறைகளுக்கான பணியாளர்கள் (3380) - 95%
கல்லூரி மாணவர்கள் - 1,45,450 (89%)

திராவிடர் இயக்கத்தைப் பற்றி வாய்ப்புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று பேசும் அரை வேக்காடுகள் இந்தப் புள்ளி விவரங்களைக் கண்ணுற வேண்டும் - கருத்தூன்ற வேண்டும்.

பேராசிரியர் அவர்களின் வகுப்புரிமைப் போராட்டம் நூலில் அந்தக் காலக் கட்டத்தில் புள்ளி விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றோடு இதனை ஒப்பிட்டுப் பார்க்கட்டும்.

இந்த வளர்ச்சியின் பின்புலத்தை, வரலாற்றை பார்ப்பனர் அல்லாதார் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று பிறந்த நாள் விழா காணும் பெருமகனார் இனமானப் பேராசிரியர் க. அன்பழகனார் அவர்களின் வகுப்புரிமை போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) என்னும் நூலை, இளைஞர் உலகினரின் சிந்தனைக்குக் காணிக்கையாக்குகிறோம்.

மற்றவர்களைவிட திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் படிப்பார்களாக!

இந்த உணர்வு வளர்ந்தால் அதுவே இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு அளிக்கப்படும் மகத்தான பரிசாக இருக்கும்; வாழ்க பேராசிரியர்! வளர்க அவர்தம் எதிர்பார்ப்புகள்!

Read more: http://viduthalai.in/page-2/72264.html#ixzz2nv0tHyVy

தமிழ் ஓவியா said...


கடவுளின் கையாலாகத்தனத்தை மூடி மறைக்கும் மோடி மஸ்தான் வேலை!


கோவில்பட்டி அருகே கார்மீது பஸ் மோதியதில் பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த 5 மின்வாரிய ஊழியர்கள் பலியானார்கள். விபத்தில் சிக்கிய கார் சின்னாபின்னமாகி கிடப்பதை படத்தில் காணலாம். திருச்செந்தூர் முருகனைக் கும்பிடச் சென்றவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டம் சின்னைய பாளையத்தைச் சேர்ந்தவர் அனந்த பத்பநாபன் (58).

சபரிமலைக்குச் செல்ல மாலை அணிந்து இருந்தார். திருப்பதிக்குச் சாமி கும்பிட வந்தார். ஏழுமலை யானை தரிசிக்க வரிசையில் நின்றவர் சுருண்டு விழுந்த மரணம் அடைந் தார். (நமது அனுதாபம் உரியதாகுக) கோயில் முன் பகுதியில் பக்தர் மரணம் அடைந்ததால் பரிகாரப் பூஜை நடத்தப் பட்டது. ஆகமவிதிப்படி கோயில் தூய்மைப்படுத்தப்பட்டது. தோஷ நிவாரணப் பூஜைகள் நடந்தன. அதில் அர்ச்சகர்களும், பண்டிதர்களும் கலந்து கொண்டனர். இதன் காரண மாக கோயில் முன் பகுதியில் நடந்த சகஸ்ரதீப அலங்கார சேவை 10 நிமிடங்கள் பாதிக்கப்பட்டன (மாலை மலர் 19.12.2013 பக்.4).

இது செய்தி ஆனால் அதன் பின் னணியில் சிந்திக்கப்பட வேண்டிய துண்டு.

கோயிலுக்குச் சென்றார் ஒரு பக்தர். அதுவும் எந்த கோயிலுக்கு? தீராத வினைகளை எல்லாம் தீர்த்து வைப்பார் கோவிந்தம் என்று பக்தக் கோடிகள் - போற்றித் துதிக்கும் ஏழு மலையான் கோயிலுக்குச் சென்றி ருக்கிறார்.

எந்த கோலத்தில்? அய்யப்பன் பக்தர் கோலத்தில்! ஆக இரண்டு கடவுள்களின் பக்தராகச் சென்று இருக்கிறார்.

கடவுளைக் கும்பிட்டால் வழிபட் டால் நல்லது நடக்கும் - குடும்பக் கஷ்டங்கள் தீரும் - கெட்ட வினை எல் லாம் ஓடி மறையும் என்ற நம்பிக் கையில் தானே ஏழுமலையானைத் தரிசிக்க வரிசையில் நின்றார்.

ஆனால் என்ன நடந்தது? வினையைத் தீர்ப்பான் ஏழுமலையான் என்ற எண்ணத்தில் நின்றவனின் வினை உயிர் அல்லவா பறிபோனது!

இதன் பொருள் என்ன? கடவுளா வது கத்திரிக்காயாவது! அது வெறும் கல்லு என்ற நாம் சொல்லி வருவது உண்மை - உண்மையிலும் உண்மை என்பது நிரூபணம் ஆகிவிட்டதா இல்லையா? சில நாட்களுக்குமுன் பூவிருந்த வல்லியிலிருந்து திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்கச் சென்ற அய்ந்து பக்தர்கள் சாலை விபத்தில் பலியானார்களே - அதன் பொருளும் இதுதானே!

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்; இவ்வளவும் நடந்ததற்குப் பிறகு - எங்கே கடவுள் பக்தி குன்றிப் போய் விடுமோ என்ற கவலை- கவ லைக்குக் காரணம் பக்தி பறி போனால் அதை வைத்துப் பிழைக்கும் ஒரு சுரண்டல் கூட்டத்தின் வயிற் றிலடித்த கதையாக முடிந்து விடுமே!

உடனே என்ன செய்கிறார்கள்? கோயில் முன் பகுதியில் மரணம் ஏற்பட்டு விட்டதாம். அதற்காகப் பரிகாரப் பூசையில் ஈடுபட்டார்களாம் - தோஷங்கள் கழித்தார்களாம் - சடங்குகளைச் செய்தார்களாம் - அங்கே அர்ச்சகர்களும், பண்டிதர் களும் இருந்தார்களாம்.

இதன் பொருள் - கோயிலைச் சுற்றி எது நடந்தாலும், பக்தியின் பெயரால் எது நடந்தாலும், அது க்ஷீரணத் தோரண பூர்ண கும்பாபி ஷேகமாக இருந்தாலும், இதுபோல பக்தர்கள் மரணம் அடைந்தாலும் - எப்படியும் அதன் ஒட்டு மொத்த நிகர லாபம் என்பது பார்ப்பனர்களுக்கு இலாபகரமாக அமைந்து விடுவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

கோயில் என்பது சுரண்டல் கேந்திரம் என்று சுயமரியாதை இயக்கம் சொன்னது - திராவிடர் கழகம் இன்று சொல்லி வருவது எத்தகைய உண்மை என்பதைப் பார்ப்பனரல்லாத பக்தர்களே அறிந்து கொள்வீர்!

தந்தை பெரியாரின் முத்திரையடி

கடவுளும், மதமும் கெட்டாக வேண்டுமானால் பார்ப்பான் கெட்டாக வேண்டும். (இல்லாமல் போக வேண்டும்) அவன் கெட்ட இடம்தான் கடவுள், மதம் கெட்ட இடமாகும்.

- தந்தை பெரியார் (விடுதலை 24.4.1967)

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/72363.html#ixzz2o1aRl865

தமிழ் ஓவியா said...


ஏவுகணை சாதனை விஞ்ஞானி டாக்டர் சிவதாணுப் பிள்ளைக்கு வாழ்த்துக்கள்


பிரம்மோஸ் அதி வேக ஏவுகணைத் திட் டத்தை வெற்றிகர மாகச் செயல்படுத்திய விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் (டீசனநச டிக ஆநசவை) என்ற ருஷ்ய நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் வழங்கினார் என்ற செய்தி அறிந்து, நாம் எல்லையற்ற மகிழ்ச்சியையும் பெருமிதத்தினையும் அடைகிறோம்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும், இடையே உள்ள உறவு மேலும் வலுவடைந்ததைத் தொடர்ந்தே இவ்விருது அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.

பிரபல ஏவுகணை விஞ்ஞானி திரு. சிவதாணுப்பிள்ளை அவர்களுக்கு ரஷ்யா அனுப்பியுள்ள செய்தியில், நீங்கள் இரு நாடு களின் கூட்டுத் திட்டம், அமைதி ஒத்துழைப்பு, புரிதல் மற்றும் நட்பை வலுப்படுத்துவதற்கு பெரும் பங்காற்றியதை பெருமைப்படுத்தும் விதத்திலேயே இவ்விருது வழங்கப்பட்டுள் ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் நாஞ்சில் நாட்டு தமிழர்; பெரும் சாதனையாளர்; இவரது ஆற்றல் வியக்கத்தக்க சாதனைகள் மூலம் வெளிப்படுகின்றன. அவரது புகழ் மேலும் பரவி, உலக விஞ்ஞானிகளில் ஒருவராகி உயர்ந்து நிற்பதைக் காணும்போதும் தமிழினம், திராவிடர் சமுதாயமும் இந்தியத் திருநாடும் பெரும் மகிழ்ச்சியை அடைகிறது.

அவருக்குத் தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

அவர் தஞ்சை - வல்லம் பெரியார் - மணியம்மை பல்கலைக் கழக மதிவுரைஞர்களில் ஒருவர் என்றெண்ணும்போது, அம்மகிழ்ச்சி பல மடங்கு பெருகுகிறது!

வாழ்க சிவதாணுப்பிள்ளை!

கி.வீரமணி
தலைவர், திராவிடர்கழகம்

முகாம்

சிங்கப்பூர் 20.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/72362.html#ixzz2o1bBgBGn

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு வீடணன்


இலங்கையில் தான் இராவணனும் பிறந்தான் - உடன் பிறந்தே கொல்லும் வீடண னும் அங்குதான் பிறந்தான்.

இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவது தான் - என்றாரே தந்தை பெரியார் (பெரியார் 90ஆவது பிறந்த நாள் விடுதலை மலர் 17.9.1969).

விபீஷணன் பிறந்த அந்த இலங்கையிலேதான் முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் விளையாட்டுக் காரரும் பிறந்துள்ளார்; தமிழன்தான் - சென்னை தான் அவர் மாமனார் - மாமியார் வீடும் கூட!

வாயைத் திறக்காமல் - இருந்தாலாவது அவரைப் பற்றிக் கொஞ்சம் மரியாதை மிஞ்சி இருக்கும். வாயைத் திறந்து தன் விபீஷணப் புத்தியையல்லவா தனக்குத் தானே அம்பலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

முப்பது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பிப் போராட்டம் நடத்துவ தனால் குற்றச்சாட்டுகள் உண்மையாகி விடாது. இந்த மக்களும் பிழையாக வழி நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளார் (குமுதம் 4.12.2013).

இலங்கைத் தீவில் தமிழினத்து இளைஞர்கள் காணாமற் போனது குறித்து விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்று அய்.நா. வரை கோரிக்கை சென் றுள்ளது.

இலங்கை அரசு தமக்குத் தானே நிரூபித்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. என்ற அமைப் புக்கூட காணாமற் போன வர்கள் தொடர்பான விசா ரணைகளுக்குப் பரிந்துரை செய்துள்ள நிலையில், தமி ழனாகப் பிறந்த முத்தையா முரளிதரன் ராஜபக்சே மொழியில் பேசுகிறார்.

எந்த அளவுக்குச் சென் றுள்ளார் இந்த முரளிதரன் தெரியுமா? 30 வருடப் பிரச் சினையை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்ஷேவுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போராளிகளை காட்டிக் கொடுத்த கருணா ராஜ பக்சே அமைச்சரவையில் அமைச்சராகவே ஆகி விட்டார். முத்தையா முரளி தரனுக்கும்கூட ஏதாவது முடிசூட்டு விழா விரைவில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

அண்ணனைக் காட்டிக் கொடுத்த காரணத்தால் தானே சாதாரண விபீஷண னுக்கு ஆழ்வார் பட்டம் கிடைத்தது; நாட்டை ஆளும் ஆட்சிப் பொறுப்பும் கிடைத்தது.

முத்தையா முரளிதரனை நோக்கி ஒரு கேள்வி உள் ளது. இலங்கைக் கிரிக்கெட் அணியில் விளையாடி சுழற் பந்துவீச்சில் உலக சாதனையை நிகழ்த்தியவர் தானே அவர்?

இலங்கை அணி பலமுறை வெற்றி பெற் றதற்குக் காரணமாக இருந்தவர்கூட!

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த விளை யாட்டு வீரர்தானே!

குறைந்த பட்சம் அந்த அணியின் துணைத் தலைவராகவாவது (Vice Captain) நியமிக்கப் பட்டாரா?

ஏன் நியமிக்கப்பட வில்லை? சிந்தித்துப் பார்த் தால் அவர் தோளில் தூக்கி வைத்துக் கொள்ளும் ராஜபக்சேவின் இனவெறிக் கண்ணோட்டம் தெரிய வரும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72359.html#ixzz2o1bKifh5

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/72354.html#ixzz2o1cSunMA

தமிழ் ஓவியா said...


டிசம்பர் 24 - திரள்வீர்!



உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி -தன்னிடம் பயிற்சியாளராக வந்த பெண் வழக்குரைஞரிடம் நடந்து கொண்ட கேவலமான போக்கு நாற்றமெடுத்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்த மூவர் பேர்கள் கொண்ட குழுவும் விசாரணை நடத்தி குற்றச்சாற்றில் உண்மை இருக்கிறது என்று கூறி விட்டது. கங்குலி ஓய்வு பெற்று விட்டதால் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றமோ கையை விரித்து விட்டது.

சரி, அது போகட்டும்; மேற்கு வங்க அரசு என்ன செய்திருக்க வேண்டும்? வழக்கைப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட வேண்டாமா?
மேற்கு வங்க முதல் அமைச்சரின் கடமை வெறும் கண்டனத்தோடு நின்று விட்டால் போதுமா? அவர் அதிகாரத்தின் கீழ் தானே அம்மாநிலக் காவல்துறை இருக்கிறது?

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும்கூட பொதுவாக அவாளுக்கே உரிய குணத்தோடு - இறுமாப்போடு நடந்து கொள்வதைக் கவனிக்க வேண்டும்.

மேற்கு வங்க மாநில மனித உரிமைக் குழுவின் தலைவராக இருக்கும் அவர் அந்தப் பதவியிலி ருந்து தார்மீக ரீதியாக விலகி இருக்க வேண் டாமா? முதல் அமைச்சர் விலகுமாறு கோரிக்கை வைத்தும் பதவி விலக முடியாது! என்று கண்டிப் பாகக் கூறி மார்க்கண்டயர் போல பதவி நாற் காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள் ளாரே - இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி என்பது!

இதில் ஒரு வெட்கக்கேடு - முன்னால் மக்களவைத் தலைவரும் மார்க்சியவாதியுமான சோம்நாத் சட்டர்ஜி ஏ.கே. கங்குலிக்கு வக்காலத்து வாங்குவதுதான்.

குற்றம் சுமத்தப்பட்டதாலேயே கங்குலி விலக வேண்டுமா? அப்படி விலகினால், குற்றத்தை ஒப்புக் கொண்டதாகி விடுமே என்று வக்காலத்து வாங்குகிறார். அவரா பேசுகிறார்? அவரின் பூணூல் பாசம்அவ்வாறு பேசச் செய்கிறது. தனது பேரனுக்கே அச்சுப் போட்டு அழைப்பிதழ் அடித்து, பூணூல் கல்யாணத்தை சாங்கோ பாங்கமாக நடத்தியவர் ஆயிற்றே! அவர் அப்படித்தான் நடந்து கொள்வார்.

2ஜி வழக்கில்கூட ஆ. ராஜாமீது குற்றப் பத்திரிக்கைதான் தாக்கல் செய்யப்பட்டது.

அவர்மீதான வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படவில்லையே! அப்படி இருக்கும்போது இன்னும் ராஜா எப்படி அமைச்சராக நீடிக்கலாம்? என்ற கேள்வியை எழுப்பியவர் அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த இதே ஏ.கே.கங்குலிதான்.
இவர்கள் மனு தர்மச் சிந்தனையாளர்கள் ஆயிற்றே! ஒரு குலத்துக்கொரு நீதி என்ற மனப்பான்மை அவர்களின் குருதியிலேயே குடிகொண்டதாயிற்றே! அதனால்தான் ராஜாவுக்கு ஒரு நீதி - கங்குலிக்கு இன்னொரு நீதி.

ஆந்திர மாநிலத்தில் ஆளுநராக இருந்த என்.டி. திவாரி (87) என்ற பார்ப்பனரும் ஆளுநர் மாளி கையிலேயே கிருஷ்ண லீலைகளை நடத்தினார். பிரச்சினை பூகம்பமாக வெடித்துக் கிளம்பியது; அப்பொழுதுகூட தானாக முன் வந்து பதவி விலகவில்லை.

அழுத்தம் கொடுக்கப்பட்டதற்குப் பிறகுதான் அந்தப் பதவி நாற்காலியை விட்டு எழுந்திருந்தார்.

சட்டப்படி மேலும் நடவடிக்கைகளை எடுத் திருக்க வேண்டாமா!

இவ்வளவு நடந்திருந்தும் பார்ப்பன ஊடகங்கள் கங்குலி பிரச்சினையில் கமுக்கமாகவே நடந்து கொண்டு வருகின்றன. நிகழ்கால நடவடிக்கை களை அந்தந்த வாரமே அலசும் துக்ளக் இதழில், கங்குலி பற்றிய ஒரு நிகழ்வே நடந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

கொலை வழக்கில் சிக்கிய சங்கராச்சாரியார் பிரச்சினையில் பார்ப்பன ஏடுகள் எப்படி நடந்து கொண்டன என்பதைத் தெரிந்து கொண்டால் இந்த 2013ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் பூணூல் பாசத்தோடும், நோக்கத்தோடும்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை எளிதில் அறியலாம்.

இந்த உண்மைகள் எல்லாம் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் பிசிறு இன்றித் துல்லிய மாகப் புலப்படும்; பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள ஏ.கே.. கங்குலிமீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி தந்தை பெரியார் நினைவு நாளன்று காலை 11 மணிக்கு சென்னை விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திரள்வீர்! திரள்வீர்!!

Read more: http://viduthalai.in/page-2/72355.html#ixzz2o1cbwLrR

தமிழ் ஓவியா said...


பிஜேபியோடு கூட்டணியா?: பத்திரிகை செய்திகளுக்கு கலைஞர் மறுப்பு


சென்னை, டிச.20- தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க. பற்றி தவறான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:-

தி.மு.கழகப் பொதுக்குழுவில் தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு, இறுதியாக நான் உரையாற்றும் போது, முக்கியமாக காங்கிரஸ் கட்சியுடனும், பா.ஜ.க. வுடனும் தி.மு. கழகம் கூட்டணி கிடையாது என்று நான் வெளிப்படையாகப் பேசி, அந்தப் பேச்சினைப் பத்திரிகைகளுக்கும் கொடுத்த பிறகு, மோடியின் ஆதரவாளர்களாகவோ, அல்லது காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகளாகவோ உள்ள ஒரு சிலர் வேண்டுமென்றே என்னுடைய அந்தக் கருத்தைத் திரித்து, நான் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்ததைப் போலப் பேசி வருகிறார்கள்.

ஒரு சில ஏடுகள் அந்தக் கருத்தோடு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்கள் அவ்வாறு ஒருதலைப்பட்சமாக செய்திகளைப் பரப்புவது ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் என்னை மிகவும் வருந்தச் செய்வதாகும். ஏன் கண்டிக்கத்தக்க செயலும் ஆகும். எனவே பத்திரிகை யாளர்கள் கழகப் பொதுக்குழுவிலே நான் பேசிய கருத்தினை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங் களுக்குச் சாதகமாகவோ, கழகத்தின் நிலைப் பாடுகளுக்கு பாதகமாகவோ செய்திகளை வெளியிடுவதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Read more: http://viduthalai.in/page-2/72369.html#ixzz2o1dFoVYR

தமிழ் ஓவியா said...


நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மாத்திரைகள் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்



லண்டன், டிச. 20-இந்தி யாவின் மிகப்பெரிய மருத்துவ சவால்களுள் ஒன்றாக நீரிழிவு நோய் இருந்து வருகின்றது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இந்தி யாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டக்கூடும் என்று கணக் கிடப்பட்டுள்ளது. இது முன்னர் கணக்கிடப்பட்ட 87 மில்லியன் என்பதைவிட அதிகமாகும். டைப்-1 என்ற வகை நோய்க்குறைபாடு, உடலில் தேவையான இன்சுலின் சுரக்காதபோது ஏற்படும் ஒன்றாகும். உடலில் உள்ள இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுகோசைக் கரைக்கா விடில் டைப்-2 எனப்படும் நோய்த் தாக்கம் தோன்றும். இது கடுமை யான பிரச்சினைகளை உருவாக் கக்கூடியதாகும்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண் டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இன்சுலின் மருந்து இந்த நோய் கண்ட ஏராளமான மக்களுக்கு உயிர் காக்கும் மருந்தாகப் பயன் பட்டு வருகின்றது. ஆயினும், இந்த மருந்தை தினமும் ஊசி மூலம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் வலி தராத மாத்திரை வடிவத்தில் இந்த மருந்தினைப் பெற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயன்று வந்தனர்.

1930 ஆம் ஆண்டிலிருந்து ஆய்வில் இருக்கும் இந்த முயற்சி யில் தற்போது இந்திய விஞ் ஞானிகள் வெற்றி பெற்றுள்ள விபரம் அமெரிக்கன் கெமிகல் சொ சைட்டி இதழில் வெளிவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு நிரூபிக்கப் பட்டு பயன்பாட்டுக்கு வருமேயா னால் பாதுகாப்பற்ற ஊசிகளால் ஏற்படும் பின்விளைவுகளில் இருந் தும், தினமும் ஊசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் வலிகளி லிருந்தும் நீரிழிவு நோயாளிகள் நிவாரணம் பெறமுடியும்.

மாத்திரை வடிவில் பெறப்படும் இன்சுலின் மருந்துகள் நீரிழிவு நோயாளிகளின் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இன்னும் அதிக அளவிலான பரி சோதனைகள் இந்த கண்டுபிடிப் பில் தேவைப்படும்போதும் இந்த மாத்திரைகள் பயன்பாட்டிற்கு வரும் காலத்தை எதிர்நோக்குவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த நீரிழிவு நோய் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லிப்பி டோவ்லிங் தெரிவிக்கின்றார்

Read more: http://viduthalai.in/page-2/72370.html#ixzz2o1dOrDDF

தமிழ் ஓவியா said...


சிரிக்க... சிந்திக்க!


ஆஸ்திகன்: (மகனை நோக்கி) ஏய் தம்பி, நரசிம்மா! கொல்லைக் கதவைத் தாளிட்டியா? குறுக்குத் தாழ்ப் பாளைப் பார்த்தியா? தெருக்கதவைத் தாளிட்டியா? ஜன்னலை ஒழுங்காக மூடுனியா? சாவிக் கொத்தை தலைகாணிக்கு அடியில் ஜாக்ரதையா வைச்சிட்டுயா? ஏன் னா ஊரெல்லாம் ஒரே திருட்டுப் பயம்!

மகன்: என்னப்பா இப்படி பயப்படுறேள்? நம்ப ஜாக்ரதையிலே என்ன இருக்கு? எல்லாம் எமை ஆளும் ஈசன் செயல்! என்னதான் பாதுகாத்தாலும், எப்படியும் போறது போவத்தான் செய்யும்! நீங்கள் அடிக்கடி சொல்ற மாதிரி...

ஆஸ்திகன்: ஊம் வாயை மூடு! என் பிரசங்கத்தை என்னிடமே காட்டுறியா? அதிகப் பிரசங்கி! அதெல் லாம் முட்டாப் பசங்களுக்குச் சொல்றப் பேச்சு! கதவைத் திறந்து போட்டுண்டு, எல்லாம் கடவுள் செயலுன்னு தூங்குற ஒரு பக்தனைக் காட்டு என்னிடம். பைத்தியக் காரா! கடவுளுக்கே பூட்டும் சாவியும் வேண்டி இருக் குடா - அதுவும் பூசணிக்காய்ப் பெரிசுலே!

@@@@@@@@@@@@

காவலர்: திருடினதுதான் திருடினாய், சாமி நகையைத் திருடலாமா?

திருடன்: பற்றற்றவனாயிற்றே பகவான்! அவனுக்கு எதற்கு இந்த நகை என்று திருடிவிட்டேன்.

காவலர்: பகவான் நகையை உன் மனைவி கழுத்தில் சூட்டலாமோ?

திருடன்: பற்றுள்ளவளாயிற்றே அவள். பற்றற்ற திலிருந்து கிளம்பி பற்றை நோக்கிச் செல்வதுதானே ஆத்மார்த்தம்!

@@@@@@@@@@@@

புலி: கடவுளே! உன் கருணையே கருணை! என்னையும் படைத்து, இந்த ஆட்டையும் படைத்தாயே! இல்லாட்டிப் போனா என் வயிறு என்னாவறது? ஈசனே, உன்னைப் போற்றுகிறேன்; உன் புத்தியை மெச்சு கிறேன்!

ஆடு: நாசமாய்ப் போன கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? கருத்தில்லையா? என்னைத்தான் படைத்தாய்; இந்தப் பாழாய்ப் போன புலியையும் ஏன் படைத்தாய்? உன்னை போயும் போயும் கருணாமூர்த்தி என்கிறார்களே - இந்தக் கபோதிகள்! வெட்கக்கேடு! அசல் வெட்கக்கேடு!!

Read more: http://viduthalai.in/page-7/72348.html#ixzz2o1dsvFqs

தமிழ் ஓவியா said...


மோ(ச)டிமீது விசாரணை ஆணையம்


புதுடில்லி, டிச.20- நரேந்திர மோடி உத்தரவுப்படி இளம்பெண்ணை குஜராத் காவல்துறையினர் உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை இம் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் உளவு பார்த்ததாக கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு பத்திரிகை தகவல் வெளியிட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக மோடியின் நெருங்கிய நண்பரும், குஜராத் உள்துறை முன்னாள் அமைச்சருமான அமித் ஷா காவல்துறை அதிகாரி சிங்கால் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய சி.டி.யையும் வெளியிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேற்று (19.12.2013) அளித்த பேட்டியில், இளம்பெண்ணை உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, பல தொண்டு அமைப்பு களும், பெண்கள் அமைப்புகளும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத் துள்ளன.

குடியரசுத் தலைவர் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் அதை பரிசீலித்து வருகிறது. இது எந்தக் கட்சிக்கும் எதிரான நட வடிக்கை இல்லை. குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தால், இது தொடர்பாக விரைவில் விசாரணைக்கு உத்தர விடப்படும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத் தில், விசாரணை ஆணை யம் அமைக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கோரப்படும், உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே சம் மந்தப்பட்ட பெண்ணின் தந்தை, தேசிய மகளிர் ஆணையத்துக்கும், குஜராத் மாநில மகளிர் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், தனது மகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அவர் எந்தப் புகாரும் தர விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/72326.html#ixzz2o1e5tWCc