Search This Blog

19.12.13

பார்ப்பனர் கூறும் ஜாதி ஒழிப்பின் ரகசியம்!



"ஹிந்து சமூகத்தில் ஜாதி, வர்ணம் வகுப்பு சம்பந்தமான வேற்றுமைகளுக்கு அங்கீகாரம் கொடுத்தலாகாது என்ற நோக்கத்தைக் கொண்டு" தோழர் (தென்னேட்டி) விஸ்வநாதம் என்பார் (இவர் ஆந்திரப் பார்ப்பனர். இட ஒதுக்கீடு அரசு ஆணை கூட்டத்தில் ஜி.ஓ. கூடாது என்று சட்ட மன்றத்தில் வாதாடிய தெலுங்குப் பார்ப்பனர் ஆவார்) இவர். சட்டசபையில் ஒரு மசோதாவைக் கொண்டு வருவதற்கு நோட்டீஸ் கொடுத்திருப்பதாக அறிகிறோம். "எந்த ஹிந்துவும் தனது பெயருடன் ஜாதியைக் குறிக்கும் வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும், ஜாதியின் காரணமாக அணுகூலம் தேடுகிறவரோ, கொடுப்பவரோ, ஒரு மாத வெறுங்காவல் அல்லது 1.000 ரூபாய் அபராதம் தண்டனையாக விதிக்கப்படலாம் என்றும், ரிக்கார்டுகளில் ஜாதியைக் குறிக்கும் வார்த்தைகள் எடுபட்டு விட்டதாகக் கருதப்படும் என்றும், இதற்குச் சட்டத்தில் அங்கீகாரம் கிடையாது" என்றும் இம்மசோதாவில் காணப்படுகிறது.

வாசகர்கள் கீழேயுள்ளதையும் படிக்குமாறு வேண்டுகிறோம்:-

"மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கையை அடியோடு மறுப்பதுடன், அதை ஆதரிக்கின்ற மதம், வேதம், சாஸ்திரம், புராணங்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் பின்பற்றக் கூடாது என்றும்;

வருணாசிரமம் என்ற கொடுமையான கட்டுப்பாட்டையும் சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும்;

மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டுவிட வேண்டும் என்றும்;

ஜாதி அல்லது சமயப்பிரிவுகளைக் காட்டும் குறிகளை யாரும் அணிந்து கொள்ளக்கூடாது என்றும்;

இம்மகாநாடு தீர்மானிக்கிறது"

1929-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17, 18 தேதிகளில் தோழர் சௌந்திரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற செங்கற்பட்டு முதலாவது சுயமரியாதை மாகாண மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 5, 6, 9, 10 ஆகிய நான்கு தீர்மானங்களே மேலே நாம் எடுத்துக் காட்டியிருப்பவை.


அந்தக் காலத்தில் தோழர் விஸ்வநாதம் ஆகட்டும், அவரை ஆதரித்து இன்று பத்தி பத்தியாக எழுதும் "பாரத தேவி" ஆசிரியர் ஆகட்டும், சமுதாயப் பிரச்சனை சம்பந்தப்பட்ட மட்டில் விலாசம் தெரியாத பேர்வழிகள்; அல்லது சுயமரியாதைக்காரர்களை இதே தீர்மானங்களுக்காகக் கல்லாலும் சொல்லாலும் தாக்கிய வைதீகத்திற்குத் துணை நின்ற காங்கிரசில் கலந்தவர்கள்.

தொலையட்டும் இத்தகைய புரட்சிக் கருத்துக்களுக்கு 18 ஆண்டுகளாக விதையூன்றிய ஓர் இயக்கத்திற்கு இப்போதாவது இவர்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறார்களா என்றால், அதுவுமில்லை. சுயமரியாதைப் பற்றுக் கொண்ட பள்ளி ஆசிரியர்கள் மீதும் பொது மக்கள் மீதும் பாணம் தொடுக்கிறார்கள்! காரணம் மத எதிர்ப்புப் பிரசாரமும் நாஸ்தீகப் பிரச்சாரமும் செய்கிறார்களாம்! ஜாதிகளை ஒழிக்கக்கூடாது என்று மதமோ, கடவுளோ கூறுவதாக வைதீகர்கள் ஆதாரம் காட்டுவார்களேயானால், அப்போது தென்னேட்டி விஸ்வநாதம் அவ்வைதீகர்களுக்குப் பதில் கூறுவாரா அல்லது தம் மசோதாவை நழுவ விட்டு விடுவாரா? பதில் கூறுவாரேயானால் வருணாசிரம தர்மத்தை வற்புறுத்தும் பகவத் கீதையை மறுத்துக் கூறுவாரா? "தஸ்யூக்கள் (திராவிடர்கள்) தலையில் இடியைப் போடு. ஓ, இந்திரனே!" என்று கூறும் வேதத்தைத் தீயிலிட்டப் பொசுக்க வேண்டும் என்று கூறத் துணிவாரா?

"பிராமணன் சம்பளம் கொடுத்தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம்; ஏனெனில் சூத்திரன் பிராமணனுக்குத் தொண்டு புரிவதற்காகவே பிராமணனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றானல்லவா?" என்று எட்டாவது அத்தியாயம் 413- வது சுலோகத்தில் கூறும் மனுதர்ம சாஸ்திரத்திற்கு விஸ்வநாதம் என்ன பதில் கூறுவார்? அது அபத்தம், சுத்தப் பித்தலாட்டம், அயோக்கியத்தனம் என்று கூறத் துணிவிருக்குமா? அப்படிக் கூறினால் அவருடைய கூட்டுத் தோழர்களான சகஜானந்த "சாமி"யும் "சர்தார்" வேதரத்தினமும் கொண்டு வரவிருக்கும் மதக் கண்டனத் தடை மசோதாவின்படி தண்டிக்கப்படுவாரே!

தோழர் விஸ்வநாதம் முயற்சியானது உண்மையிலேயே ஜாதியை ஒழிக்கும் நல்லெண்ணத்துடன் கொண்டுவரப்படுவதாக நாம் கருதவேயில்லை. சுப்பிரமணி பாரதியார் பேரனுக்கு விவசாயக் கல்லூரியில் இடங்கிடைக்க கஷ்டமாயிருந்தது என்பதற்காகவும் திருச்சி ஹாலாஸ்யமய்யரின் மகனுக்கு மெடிக்கல் காலேஜில் இடம் கிடைக்கவில்லை யென்பதற்காகவும், அருணாசலமய்யர் (அய்.சி.எஸ்) கூட்டுறவு இலாகா ரிஜிஸ்டரார் பதவியை விட்டுப் போக வேண்டி ஏற்பட்டது என்பதற்காகவும், சென்னை கவர்னர் பதவியை தோழர் ஆச்சாரியாருக்குக் கொடுக்கக்கூடாது என்று தோழர் ஓமத்தூர் ராமசாமியவர்கள் பிடிவாதமாயிருந்தார் என்பதற்காகவும், இம்மாதிரி ஒரு மசோதாவைக் கொண்டு வருகிறாரே தவிர உண்மையில் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருப்பதற்காத் தெரியவில்லை. 

அப்படி இருக்குமேயானால் கீழ்க்கண்ட காரியங்களையும் அவர் சட்டம் மூலம் சாதிக்க வேண்டும்:-

1. எவரும் பூணூல் அணியக்கூடாது.

2. எவரும் ஜாதியைக் குறிக்கும் நெற்றிக் குறியை அணியக்கூடாது.

3. கிருஸ்தவர்களும் ஜாதிப்பட்டங்களை விட்டுவிட வேண்டும்.

4. ஆரியர்கள் திராவிடர் வீடுகளுக்குப் புரோகிதம் வைப்பதன் மூலம் தங்கள் ஜாதி உயர்வை நிலைநாட்டுவதை ஒழிக்க வேண்டும்.

5. ஆரியர்கள் கோவில் மடப்பள்ளி, மூலஸ்தானம் ஆகிய இடங்களை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

6. பிராமண மகா சபை, நாடார் சங்கம், முதலியார் சங்கம், வன்னியர் சங்கம், வன்னியர் சங்கம் போன்ற ஜாதிச் சங்கங்கள் எல்லாம் சட்ட விரோதமாக்கப்பட வேண்டும்.

7. ஒரே ஜாதியில் திருமணம் செய்து கொள்வது சட்டபூர்வாகத் தடுக்கப்பட வேண்டும்.

8. ஜாதியைக் குறிக்கும் பாடம் புத்தகங்கள், கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், மனுதர்மம், பகவத் கீதை போன்ற நூல்கள் யாவும் கொள்ளுத்தப்பட வேண்டும்; அல்லது சட்டம் மூலமாகத் தடுக்கப்பட வேண்டும்.

9. நகரங்களிலும் கிராமங்களிலும் 'அக்கிரகாரங்கள்' என்ற பெயரால் இருந்துவரும் ஆரியச் சேரிகள் காலி செய்யப்பட வேண்டும்; அல்லது அங்கு மற்றவர்களும் கலந்து குடியிருக்க வேண்டும்.

10. ஜாதி உயர்வைப் பாராட்டாமல் ஆரியர்களும் அவர்களைக் காப்பியடிக்கும் "மேல் ஜாதிக்காரர்களும்" மற்றவர்களைப் போலவே சவரத் தொழிலோ, துணி வெளுக்கும் தொழிலோ, பயிர் வேலையோ, வீடு கட்டுவதோ, வண்டியிழுப்பதோ கல்லுடைப்பதோ - எதையும் செய்ய முன்வர வேண்டும்.


இவ்வளவும் நிகழ்ந்தாலொழிய ஜாதி ஒழியாது. இவைகள் நிகழும் போது இந்து மதம் சவக்குழியில் சவக்குழியில் கிடக்கும்; அதன்மீது புல் முளைத்திருப்பதைக் காணலாம். இதைதான் சு.ம.காரர்களும் கூறி வருகின்றனர். இவர்களைத் தான் முட்ட வருகின்றன. வைதீகப் பிறவிகள். தோழர் விஸ்வநாதம் அவர்களின் ஜாதி ஒழிப்பு மசோதாவானது ஜாதி ஒழிப்பதற்குப் பயன்படவே படாது என்பதை பொது மக்கள் கல்மீது செதுக்கி வைத்துக் கொள்ளலாம். திராவிடர்கள் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி ஆரியர்கள் சர்க்கார் பதவிகளில் அமர்வதற்கும் ஆரிய மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளை ஆக்கிரமித்து கொண்டிருந்தது போல இனியும் ஆக்கிரமித்துக் கொள்ளவதற்குத்தான் பயன்படும்.

மேற்குறிய நம் ஆலோசனைகளை ஏற்காவிடில் இந்த மசோதவைத் திராவிடர்களாகப் பிறந்த யாவரும் எதிர்த்து மண்டையிலடித்தே தீர வேண்டும். அதையும் மீறி சட்டமாக்கப்படுமானால் அந்தச் சட்டத்தை மீறி சட்டமாக்கப்படுமானால் அந்தச் சட்டத்தை மீறி சிறைக் கூடங்களை நிரப்புவதுதான் திராவிட இனத்தில் பிறந்தவர்களின் முதல் வேலையாயிருக்க வேண்டும்.


------------------------------ தந்தைபெரியார் - “விடுதலை” தலையங்கம், 05.08.1947

28 comments:

தமிழ் ஓவியா said...


ஆருத்ரா


மாயேந்திரன்: (வேலைக்காரன் வெள் ளையைப் பார்த்து) கடை வீதியிலே யாருட்டயோ சொன்னியாமே - எங்க எஜமான் ஊருக்கு நல் லது தான் செய்றாரு. ஆனா கோயிலில் இருக் கிறதெல்லாம் கல்லுன்னு சொல்றாருன்னு சொன்னி யாமே! அப்படியா சொன்னே.. கோயில்லே கல் இல்லாம வேற என்னடா இருக்கு?

வெள்ளை: சாமிதா னுங்க எஜமான் இருக்கு.

மாயே: சாமியா? இங்கே வாடா! (வருகி றான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்கடா.. கையை இப்படி வைடா (நடராஜர் சிதம்பரத்திலி ருப்பது போல் நிற்கச் செய்கிறார்;

நிற்கிறான் வெள்ளை); பத்திரிகை படித்துக் கொண்டிருக் கிறார் மாயேந்திரன், வெள்ளை காலை ஊன்று கிறான். டேய் தூக்குடா காலை, நில்லுடா என்கி றார் எஜமான் மாயேந் திரன் (மறுபடியும் தூக்கி சிறிது நேரம் நின்று விட்டு காலை ஊன்று கிறான்). டேய், ஏண்டா ஊண்டுன... தூக்குடா காலை - என்கிறார் எஜமான்.
வெள்ளை: கால் வலிக்குதுங்க எஜமான்.

மாயே: ஏண்டா ரெண்டு நிமிஷம் நிக்கிற துக்கே கால் வலிக்கு துன்னு சொல்றீயே - அப்ப தூக்கின காலை இன்னும் கீழே ஊன்றாம இருக்குதேடா...

வெள்ளை: எங்கே எஜமான்!
மாயே: சிதம்பரத்திலே

வெள்ளை: அது கல்லு எஜமான்.

மாயே: என்ன அது கல்லா? ஏண்டா கல் லுன்னா சொன்ன? கல்லை கல்லுன்னு நீ சொன்னா என்ன - நான் சொன்னா என்ன? நான் சொன்னா எங்க எஜமான் கல்லுன்னுசொல்றாருன்னு எல்லார் கிட்டேயும் போய் சொல்ற....

வெள்ளை: இனிமே சொல்ல மாட்டேனுங்க எஜமான். மேலே கண்ட உரை யாடல் சாட்சாத் அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட சந்திரோத யம் நாடகத்தின் ஒரு காட்சி.

கல்லுன்னு பக்தன் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறார் அறிஞர் அண்ணா.. இந்த உண்மையை மறுக்க முடியுமா?

சிதம்பரத்திலே ஆருத்ரா தரிசனம் பற்றி தடபுடலாக விளம்பரங் கள் செய்யப்படும் இந்தக் கால கட்டத்தில் இந்தச் சிந்தனைப் பொறி பெரி யார் திடலிலிருந்து கிளம் புகிறது பக்தர்களே சிந் திப்பீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72278.html#ixzz2nv04b4zJ

தமிழ் ஓவியா said...


அவசியம்


மூடநம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம். - (விடுதலை, 12.10.1967)

Read more: http://viduthalai.in/page-2/72262.html#ixzz2nv0lXBay

தமிழ் ஓவியா said...


வகுப்புரிமைப் போராட்டம்

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்.

மாணவர் பருவந்தொட்டு அவருடைய வாழ்க்கைச் சூழல் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைப் பக்கம் ஈர்த்தது.

தந்தை பெரியார் அவர்களின் மெய்க் காவலர் என்று கணிக்கப்பட்ட மாயவரம் சி. நடராசன் அவர்கள் நெருங்கிய உறவினர் என்பது மட்டுமல்ல; அவரது தந்தையார் அவர்களே நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தின்பால் தீவிரப் பற்றுதலும் செயல்பாடும் கொண்டவர்.

இந்தப் பின்னணி அவருக்குப் பலமாகவே இருந்து வந்திருக்கிறது. இன்று வரையிலும் அவருடைய ஒவ்வொரு சொற்பொழிவிலும் திராவிடர் இயக்கத்தின் பாய்ச்சலும், சுயமரியாதை இயக்கத்தின் சூடும் அப்படியே கண கண என்று தணியாமல் கொழுந்துவிட்டு நிற்பதைக் காண முடியும். புதிய தலைமுறையினருக்கு வகுப்புக்கான நற்பாடங்களாக அவை திகழும்.

அவரால் எழுதப்பட்ட ஒவ்வொரு நூலும் ஆழமான கருத்துடையவை. அரிய தகவல்களின் கருவூலங்கள் ஆகும்.

குறிப்பாக அவரின் வகுப்புரிமைப் போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) எனும் நூல் 1951இல் முதல் பதிப்பாக வெளி வந்தது. அதன் இரண்டாம் பதிப்பை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது (2013)

இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடு சமூக நீதியில் நிகரின்றிப் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் திராவிடர் இயக்கத்தின் தனிப் பெரும் சாதனையே! இந்தியாவில் கூட சமூக நீதிக்குப் பெரும் அளவு ஈர்ப்பு இன்று ஏற்பட்டுள்ளது என்றால் அதற்குக் காரணம் திராவிடர் இயக்கத்தின் வீச்சே!

இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாக திருத்தப்பட்டதற்குக் காரணம் என்று வருகின்ற போது தந்தை பெரியார் முதல் வரிசையில் கம்பீரமாக நிற்கிறார்.

அதேபோல வகுப்புரிமை ஆணை முதன் முதலாக பிறப்பிக்கப்பட்டதும் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற சென்னை மாநில ஆட்சியில்தான் (1927) இன்றைக்கு சென்னை பல்கலைக் கழகத்தில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் 89 விழுக்காடு என்று அப்பல்கலைக் கழகத் துணை வேந்தராகயிருந்த முனைவர் திருவாசகம் கூறி னார். (சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நீதிக்கட்சி 95ஆம் ஆண்டு விழாவில் - நாள் 20.11.2010).

மேலும் அவ்விழாவில் அவர் தெரிவித்த புள்ளி விவரங்கள் இன்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் பார்ப்பனர் அல்லாதார் நிலவரம் பற்றிய தகவல் இதோ:
செனட் - 90 விழுக்காடு

ஆசிரியர் - 92 விழுக்காடு
ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் - 91 விழுக்காடு
80 துறைகளுக்கான பணியாளர்கள் (3380) - 95%
கல்லூரி மாணவர்கள் - 1,45,450 (89%)

திராவிடர் இயக்கத்தைப் பற்றி வாய்ப்புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று பேசும் அரை வேக்காடுகள் இந்தப் புள்ளி விவரங்களைக் கண்ணுற வேண்டும் - கருத்தூன்ற வேண்டும்.

பேராசிரியர் அவர்களின் வகுப்புரிமைப் போராட்டம் நூலில் அந்தக் காலக் கட்டத்தில் புள்ளி விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றோடு இதனை ஒப்பிட்டுப் பார்க்கட்டும்.

இந்த வளர்ச்சியின் பின்புலத்தை, வரலாற்றை பார்ப்பனர் அல்லாதார் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று பிறந்த நாள் விழா காணும் பெருமகனார் இனமானப் பேராசிரியர் க. அன்பழகனார் அவர்களின் வகுப்புரிமை போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) என்னும் நூலை, இளைஞர் உலகினரின் சிந்தனைக்குக் காணிக்கையாக்குகிறோம்.

மற்றவர்களைவிட திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் படிப்பார்களாக!

இந்த உணர்வு வளர்ந்தால் அதுவே இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு அளிக்கப்படும் மகத்தான பரிசாக இருக்கும்; வாழ்க பேராசிரியர்! வளர்க அவர்தம் எதிர்பார்ப்புகள்!

Read more: http://viduthalai.in/page-2/72264.html#ixzz2nv0tHyVy

தமிழ் ஓவியா said...


இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு இதுவரை உறுதியான நடவடிக்கை எடுத்திடவில்லை


கவிஞர் கனிமொழி குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.19- இலங்கைச் சிறையில் வாடி வரும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களை மீட்டுவர, உறுதியான நடவடிக்கை எதையும் மத்திய அரசு இதுவரை எடுத்திடவில்லை என மாநிலங் களவை தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்படும் இந்தியர்களைக் காத்திட வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் நேற்று (18.12.2013) பேசிய கவிஞர் கனிமொழி, அமெரிக்காவில் இந்திய பெண் அய்.எஃஎஸ் அதிகாரி தேவயானி கைவிலங்கிடப் பட்டு அவமரியாதை செய்யப்பட்டதை குறிப் பிட்டதோடு ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் என்பதாலேயே அவருக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்கா தனது செயலை நியாயப்படுத்தி யிருப்பதற்கும் கண்டனம் தெரிவித்தார்.

பெண் அதிகாரி அவமானப்படுத்தப்பட்ட விவகாரம், நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதையும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பல எதிர் நடவடிக்கைகளை எடுத்திருப் பதையும் கவிஞர் கனிமொழி சுட்டிக் காட்டினார்.
இந்திய அரசியல் தலைவர்கள் பலர் அமெரிக்காவில் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதையும் அவர் நினைவூட்டினார். இதேபோல், இலங்கைக் கடற்படையால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், அந்நாட்டு சிறையில் வாடி வருவது தெரிந்தும், அவர்களை மீட்க மத்திய அரசு இது வரை உறுதியான நட வடிக்கை எடுக்க வில்லை யே ஏன்? என்றும் கவிஞர் கனிமொழி கேள்வி எழுப் பினார்.
பாதிக்கப்படும் இந்தியர் களைக் காத்திட வெளி யுறவுக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் கவிஞர் கனிமொழி வலியுறுத்தினார்.
இலங்கையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் சிறையில் வாடி வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகார மட்டத்தில் பேச்சு வார்த்தையும் நடத்த வில்லை. யாருமே இதனை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை, என்றும் குறிப்பிட்டார்.
நமது உரிமைகளுக்காக நாம் போராடவும் இல்லை. இதில் தீர்வு காண்பதற்கு பதிலாக இந்திய அரசு பணிந்து போய் கொண்டிருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியர்களை பாதுகாக்கும் வகையில் வெளி நாட்டுக் கொள்கைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது என்று கவிஞர் கனிமொழி குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/72313.html#ixzz2nv1AmIy4

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


பார்ப்பனீயம்!

செய்தி: கால்பந்து தர வரிசையில் உலகில் 154ஆம் இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

சிந்தனை: விளையாட்டுத்துறையில் புகுந்த பார்ப்பனீய சிந்தனையால் கிரிக்கெட் உயர்ந்து, உண்மை உழைப்புத் திறன் விளையாட்டான கால்பந்து, ஹாக்கிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன.

Read more: http://viduthalai.in/e-paper/72361.html#ixzz2o1b0UY1k

தமிழ் ஓவியா said...


ஏவுகணை சாதனை விஞ்ஞானி டாக்டர் சிவதாணுப் பிள்ளைக்கு வாழ்த்துக்கள்


பிரம்மோஸ் அதி வேக ஏவுகணைத் திட் டத்தை வெற்றிகர மாகச் செயல்படுத்திய விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் (டீசனநச டிக ஆநசவை) என்ற ருஷ்ய நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் வழங்கினார் என்ற செய்தி அறிந்து, நாம் எல்லையற்ற மகிழ்ச்சியையும் பெருமிதத்தினையும் அடைகிறோம்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும், இடையே உள்ள உறவு மேலும் வலுவடைந்ததைத் தொடர்ந்தே இவ்விருது அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.

பிரபல ஏவுகணை விஞ்ஞானி திரு. சிவதாணுப்பிள்ளை அவர்களுக்கு ரஷ்யா அனுப்பியுள்ள செய்தியில், நீங்கள் இரு நாடு களின் கூட்டுத் திட்டம், அமைதி ஒத்துழைப்பு, புரிதல் மற்றும் நட்பை வலுப்படுத்துவதற்கு பெரும் பங்காற்றியதை பெருமைப்படுத்தும் விதத்திலேயே இவ்விருது வழங்கப்பட்டுள் ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் நாஞ்சில் நாட்டு தமிழர்; பெரும் சாதனையாளர்; இவரது ஆற்றல் வியக்கத்தக்க சாதனைகள் மூலம் வெளிப்படுகின்றன. அவரது புகழ் மேலும் பரவி, உலக விஞ்ஞானிகளில் ஒருவராகி உயர்ந்து நிற்பதைக் காணும்போதும் தமிழினம், திராவிடர் சமுதாயமும் இந்தியத் திருநாடும் பெரும் மகிழ்ச்சியை அடைகிறது.

அவருக்குத் தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

அவர் தஞ்சை - வல்லம் பெரியார் - மணியம்மை பல்கலைக் கழக மதிவுரைஞர்களில் ஒருவர் என்றெண்ணும்போது, அம்மகிழ்ச்சி பல மடங்கு பெருகுகிறது!

வாழ்க சிவதாணுப்பிள்ளை!

கி.வீரமணி
தலைவர், திராவிடர்கழகம்

முகாம்

சிங்கப்பூர் 20.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/72362.html#ixzz2o1bBgBGn

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு வீடணன்


இலங்கையில் தான் இராவணனும் பிறந்தான் - உடன் பிறந்தே கொல்லும் வீடண னும் அங்குதான் பிறந்தான்.

இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவது தான் - என்றாரே தந்தை பெரியார் (பெரியார் 90ஆவது பிறந்த நாள் விடுதலை மலர் 17.9.1969).

விபீஷணன் பிறந்த அந்த இலங்கையிலேதான் முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் விளையாட்டுக் காரரும் பிறந்துள்ளார்; தமிழன்தான் - சென்னை தான் அவர் மாமனார் - மாமியார் வீடும் கூட!

வாயைத் திறக்காமல் - இருந்தாலாவது அவரைப் பற்றிக் கொஞ்சம் மரியாதை மிஞ்சி இருக்கும். வாயைத் திறந்து தன் விபீஷணப் புத்தியையல்லவா தனக்குத் தானே அம்பலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

முப்பது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பிப் போராட்டம் நடத்துவ தனால் குற்றச்சாட்டுகள் உண்மையாகி விடாது. இந்த மக்களும் பிழையாக வழி நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளார் (குமுதம் 4.12.2013).

இலங்கைத் தீவில் தமிழினத்து இளைஞர்கள் காணாமற் போனது குறித்து விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்று அய்.நா. வரை கோரிக்கை சென் றுள்ளது.

இலங்கை அரசு தமக்குத் தானே நிரூபித்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. என்ற அமைப் புக்கூட காணாமற் போன வர்கள் தொடர்பான விசா ரணைகளுக்குப் பரிந்துரை செய்துள்ள நிலையில், தமி ழனாகப் பிறந்த முத்தையா முரளிதரன் ராஜபக்சே மொழியில் பேசுகிறார்.

எந்த அளவுக்குச் சென் றுள்ளார் இந்த முரளிதரன் தெரியுமா? 30 வருடப் பிரச் சினையை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்ஷேவுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போராளிகளை காட்டிக் கொடுத்த கருணா ராஜ பக்சே அமைச்சரவையில் அமைச்சராகவே ஆகி விட்டார். முத்தையா முரளி தரனுக்கும்கூட ஏதாவது முடிசூட்டு விழா விரைவில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

அண்ணனைக் காட்டிக் கொடுத்த காரணத்தால் தானே சாதாரண விபீஷண னுக்கு ஆழ்வார் பட்டம் கிடைத்தது; நாட்டை ஆளும் ஆட்சிப் பொறுப்பும் கிடைத்தது.

முத்தையா முரளிதரனை நோக்கி ஒரு கேள்வி உள் ளது. இலங்கைக் கிரிக்கெட் அணியில் விளையாடி சுழற் பந்துவீச்சில் உலக சாதனையை நிகழ்த்தியவர் தானே அவர்?

இலங்கை அணி பலமுறை வெற்றி பெற் றதற்குக் காரணமாக இருந்தவர்கூட!

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த விளை யாட்டு வீரர்தானே!

குறைந்த பட்சம் அந்த அணியின் துணைத் தலைவராகவாவது (Vice Captain) நியமிக்கப் பட்டாரா?

ஏன் நியமிக்கப்பட வில்லை? சிந்தித்துப் பார்த் தால் அவர் தோளில் தூக்கி வைத்துக் கொள்ளும் ராஜபக்சேவின் இனவெறிக் கண்ணோட்டம் தெரிய வரும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72359.html#ixzz2o1bKifh5

தமிழ் ஓவியா said...


சட்டம் குறட்டை விடுகிறதா?


கோயில்கட்டபொதுப்பணித்துறை ஆலோசனைக்கூட்டமாம்

இதோ ஆதாரம் பாரீர்!

பட்டுக்கோட்டை, டிச.20- அரசுத் துறை வளாகங்களில் எந்த மத சம்பந்தமான கோயில் களுக்கும் அனுமதி யில்லை என்று தெளி வான அரசாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் பட்டுக்கோட்டையில் பொதுப் பணித்துறை வளாகத்தில் உள்ள கோயில் புதுப்பித்தல் மற்றும் குடமுழுக்கு நடைபெற துறை அதி காரிகள் கூட்டம் நடை பெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது அரசு அதிகாரிகளே அரசா ணையை மீறிய செய லாகும்.

இது தொடர்பாக அறிவிப்பும் அதை நிறுத்த எழுதிய விவரங்கள் வரு மாறு:

அறிவிப்பு:

அன்புடையீர்,

வணக்கம். நமது பொதுப்பணித்துறை வளாகத்தில் அமைந் துள்ள சிறீகற்பக விநாய கர் ஆலய கும்பாபிஷே கம் 2015ஆம் ஆண்டு நடைபெற வேண்டி உள் ளதால் கோவில் புதுப் பித்தல் தொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆலோ சனைக் கூட்டம் எதிர் வரும் 19.07.2013 வெள் ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பொதுப் பணித் துறை வளாகத் தில் உள்ள விவசாயிகள் கூட்ட அரங்கில் நடை பெறவள்ளது. அது சமயம் அனைத்துப் பொறியாளர்களும், அலுவலர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க கேட்டுக் கொள் கிறோம்.

இப்படிக்கு,
கோவில் நிர்வாகிகள்
சிறீ கற்பக விநாயகர் ஆலயம், பட்டுக்கோட்டை

கழகத்தின் சார்பில் கடிதம்

பட்டுக்கோட்டை திராவிடர் கழக நகர தலைவர் அ. காளிதாசன் 19.12.2013 அன்று பட்டுக் கோட்டை செயற்பொறி யாளர் அவர்களுக்கு எழுதிய கடிதம் விவரம்:

தஞ்சாவூர் மாவட் டம், பட்டுக்கோட்டை வட்டம், நகரம் பொதுப் பணித் துறை அலுவலக வளாகத்தில் கல்லணை கால்வாய் உபகோட்டம் பிரிவு -2 அலுவலகம் அருகில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் பொதுப்பணித்துறை யினரால் குறிப்பாக கல் லணை கால்வாய் உப கோட்டம் - 2 அலுவலக ஊழியர்களால் பிள்ளை யார் கோவில் கட்டப் பட்டு வருகிறது. அரசுக் குச் சொந்தமான நிலத் தில் எந்த மத சின்னங் களும், கோயில்களும், வழிபாட்டுத் தளங் களும் கட்டக் கூடாது என்று அரசு ஆணையும், நீதிமன்ற உத்தரவும் இருந்த போதிலும் தற் போது சட்டத்தை மீறி மேற்கண்டவாறு பிள்ளை யார் கோவில் கட்டி வருவது சட்ட விரோத மாகும். இதனால் மதக் கலவரங்களும், ஜாதியப் பிரச்சினையும், பொது மக்களுக்கு இடையூறும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகவே அய்யா அவர் கள், பொதுப்பணித் துறை அலுவலக வளா கத்தில் கட்டப்பட்டு வரும் பிள்ளையார் கோயில் கட்டுமானப் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தியும் கட்டப்பட்ட அஸ்திவா ரத்தை அப்புறப்படுத்தி யும், சட்டத்திற்குப் புறம் பாக கோயில் கட்ட காரணமாக இருந்த பொதுப் பணித்துறை யினர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இதன் நகல்

தமிழக முதலமைச்ச ரின் தனிப் பிரிவு, தஞ்சை மாவட்ட ஆட்சியர், தலைமைப் பொறியா ளர், பொதுப்பணித் துறை ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.

காவல் நிலையத்தில் யாகமா? ஆய்வாளர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலையத்தில் அந்த சரகத்தில் சமீப காலமாக கொலை கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதி கரித்து விட்டன என் றும் அதற்குக் காரணம் கெட்ட ஆவிகளின் நடமாட்டம் தான் என் றும் அந்த ஆவிகளை விரட்ட யாகம் ஒன்று காவல் நிலைய ஆய் வாளர் தலைமையில் நடைபெற்றதாக தின கரன் நாளிதழில் 15.11.2013 அன்று புகைப்படத் துடன் செய்தி வெளி யிடப்பட்டிருந்தது. இந்த செயல் அரசி யல் சட்டத்துக்கு முர ணானது என்றும் தமி ழக அரசு மற்றும் மத் திய அரசின் ஆணை களை மீறிய செயல் என்றும், ஏற்கெனவே மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இரண்டு நீதி பதிகளைக் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப் புக்கு முரணானது என் றும் மேற்படி ஆய்வா ளர்மீது தக்க நடவ டிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பணி நிறைவு பெற்ற நீதிபதியும், திராவிடர் கழக சட்டத்துறை துணைத்தலைவருமான பொ.நடராசன் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேற்படி வழக்கு 19.12.2013 அன்று நீதியர சர்கள் திரு. ஆர். சுதா கரன் மற்றும் திரு. வைத் தியநாதன் ஆகியோர் களைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப் பில் வழக்கறிஞர்கள் ந.தமிழ்மணி, மற்றும் ந. இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இரு தரப்பு வாதங் களைக் கேட்ட நீதியரசர் கள் காவல் நிலையத்தில் யாகம் நடத்திய காவல் ஆய்வாளர் மாரிமுத்து அவர்களை வருகிற 06.01.2014 அன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72360.html#ixzz2o1bs8aWm

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/72354.html#ixzz2o1cSunMA

தமிழ் ஓவியா said...


பிஜேபியோடு கூட்டணியா?: பத்திரிகை செய்திகளுக்கு கலைஞர் மறுப்பு


சென்னை, டிச.20- தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க. பற்றி தவறான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:-

தி.மு.கழகப் பொதுக்குழுவில் தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு, இறுதியாக நான் உரையாற்றும் போது, முக்கியமாக காங்கிரஸ் கட்சியுடனும், பா.ஜ.க. வுடனும் தி.மு. கழகம் கூட்டணி கிடையாது என்று நான் வெளிப்படையாகப் பேசி, அந்தப் பேச்சினைப் பத்திரிகைகளுக்கும் கொடுத்த பிறகு, மோடியின் ஆதரவாளர்களாகவோ, அல்லது காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகளாகவோ உள்ள ஒரு சிலர் வேண்டுமென்றே என்னுடைய அந்தக் கருத்தைத் திரித்து, நான் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்ததைப் போலப் பேசி வருகிறார்கள்.

ஒரு சில ஏடுகள் அந்தக் கருத்தோடு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்கள் அவ்வாறு ஒருதலைப்பட்சமாக செய்திகளைப் பரப்புவது ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் என்னை மிகவும் வருந்தச் செய்வதாகும். ஏன் கண்டிக்கத்தக்க செயலும் ஆகும். எனவே பத்திரிகை யாளர்கள் கழகப் பொதுக்குழுவிலே நான் பேசிய கருத்தினை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங் களுக்குச் சாதகமாகவோ, கழகத்தின் நிலைப் பாடுகளுக்கு பாதகமாகவோ செய்திகளை வெளியிடுவதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Read more: http://viduthalai.in/page-2/72369.html#ixzz2o1dFoVYR

தமிழ் ஓவியா said...


நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மாத்திரைகள் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்



லண்டன், டிச. 20-இந்தி யாவின் மிகப்பெரிய மருத்துவ சவால்களுள் ஒன்றாக நீரிழிவு நோய் இருந்து வருகின்றது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இந்தி யாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டக்கூடும் என்று கணக் கிடப்பட்டுள்ளது. இது முன்னர் கணக்கிடப்பட்ட 87 மில்லியன் என்பதைவிட அதிகமாகும். டைப்-1 என்ற வகை நோய்க்குறைபாடு, உடலில் தேவையான இன்சுலின் சுரக்காதபோது ஏற்படும் ஒன்றாகும். உடலில் உள்ள இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுகோசைக் கரைக்கா விடில் டைப்-2 எனப்படும் நோய்த் தாக்கம் தோன்றும். இது கடுமை யான பிரச்சினைகளை உருவாக் கக்கூடியதாகும்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண் டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இன்சுலின் மருந்து இந்த நோய் கண்ட ஏராளமான மக்களுக்கு உயிர் காக்கும் மருந்தாகப் பயன் பட்டு வருகின்றது. ஆயினும், இந்த மருந்தை தினமும் ஊசி மூலம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் வலி தராத மாத்திரை வடிவத்தில் இந்த மருந்தினைப் பெற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயன்று வந்தனர்.

1930 ஆம் ஆண்டிலிருந்து ஆய்வில் இருக்கும் இந்த முயற்சி யில் தற்போது இந்திய விஞ் ஞானிகள் வெற்றி பெற்றுள்ள விபரம் அமெரிக்கன் கெமிகல் சொ சைட்டி இதழில் வெளிவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு நிரூபிக்கப் பட்டு பயன்பாட்டுக்கு வருமேயா னால் பாதுகாப்பற்ற ஊசிகளால் ஏற்படும் பின்விளைவுகளில் இருந் தும், தினமும் ஊசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் வலிகளி லிருந்தும் நீரிழிவு நோயாளிகள் நிவாரணம் பெறமுடியும்.

மாத்திரை வடிவில் பெறப்படும் இன்சுலின் மருந்துகள் நீரிழிவு நோயாளிகளின் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இன்னும் அதிக அளவிலான பரி சோதனைகள் இந்த கண்டுபிடிப் பில் தேவைப்படும்போதும் இந்த மாத்திரைகள் பயன்பாட்டிற்கு வரும் காலத்தை எதிர்நோக்குவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த நீரிழிவு நோய் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லிப்பி டோவ்லிங் தெரிவிக்கின்றார்

Read more: http://viduthalai.in/page-2/72370.html#ixzz2o1dOrDDF

தமிழ் ஓவியா said...


சிரிக்க... சிந்திக்க!


ஆஸ்திகன்: (மகனை நோக்கி) ஏய் தம்பி, நரசிம்மா! கொல்லைக் கதவைத் தாளிட்டியா? குறுக்குத் தாழ்ப் பாளைப் பார்த்தியா? தெருக்கதவைத் தாளிட்டியா? ஜன்னலை ஒழுங்காக மூடுனியா? சாவிக் கொத்தை தலைகாணிக்கு அடியில் ஜாக்ரதையா வைச்சிட்டுயா? ஏன் னா ஊரெல்லாம் ஒரே திருட்டுப் பயம்!

மகன்: என்னப்பா இப்படி பயப்படுறேள்? நம்ப ஜாக்ரதையிலே என்ன இருக்கு? எல்லாம் எமை ஆளும் ஈசன் செயல்! என்னதான் பாதுகாத்தாலும், எப்படியும் போறது போவத்தான் செய்யும்! நீங்கள் அடிக்கடி சொல்ற மாதிரி...

ஆஸ்திகன்: ஊம் வாயை மூடு! என் பிரசங்கத்தை என்னிடமே காட்டுறியா? அதிகப் பிரசங்கி! அதெல் லாம் முட்டாப் பசங்களுக்குச் சொல்றப் பேச்சு! கதவைத் திறந்து போட்டுண்டு, எல்லாம் கடவுள் செயலுன்னு தூங்குற ஒரு பக்தனைக் காட்டு என்னிடம். பைத்தியக் காரா! கடவுளுக்கே பூட்டும் சாவியும் வேண்டி இருக் குடா - அதுவும் பூசணிக்காய்ப் பெரிசுலே!

@@@@@@@@@@@@

காவலர்: திருடினதுதான் திருடினாய், சாமி நகையைத் திருடலாமா?

திருடன்: பற்றற்றவனாயிற்றே பகவான்! அவனுக்கு எதற்கு இந்த நகை என்று திருடிவிட்டேன்.

காவலர்: பகவான் நகையை உன் மனைவி கழுத்தில் சூட்டலாமோ?

திருடன்: பற்றுள்ளவளாயிற்றே அவள். பற்றற்ற திலிருந்து கிளம்பி பற்றை நோக்கிச் செல்வதுதானே ஆத்மார்த்தம்!

@@@@@@@@@@@@

புலி: கடவுளே! உன் கருணையே கருணை! என்னையும் படைத்து, இந்த ஆட்டையும் படைத்தாயே! இல்லாட்டிப் போனா என் வயிறு என்னாவறது? ஈசனே, உன்னைப் போற்றுகிறேன்; உன் புத்தியை மெச்சு கிறேன்!

ஆடு: நாசமாய்ப் போன கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? கருத்தில்லையா? என்னைத்தான் படைத்தாய்; இந்தப் பாழாய்ப் போன புலியையும் ஏன் படைத்தாய்? உன்னை போயும் போயும் கருணாமூர்த்தி என்கிறார்களே - இந்தக் கபோதிகள்! வெட்கக்கேடு! அசல் வெட்கக்கேடு!!

Read more: http://viduthalai.in/page-7/72348.html#ixzz2o1dsvFqs

தமிழ் ஓவியா said...


மோ(ச)டிமீது விசாரணை ஆணையம்


புதுடில்லி, டிச.20- நரேந்திர மோடி உத்தரவுப்படி இளம்பெண்ணை குஜராத் காவல்துறையினர் உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை இம் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் உளவு பார்த்ததாக கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு பத்திரிகை தகவல் வெளியிட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக மோடியின் நெருங்கிய நண்பரும், குஜராத் உள்துறை முன்னாள் அமைச்சருமான அமித் ஷா காவல்துறை அதிகாரி சிங்கால் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய சி.டி.யையும் வெளியிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேற்று (19.12.2013) அளித்த பேட்டியில், இளம்பெண்ணை உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, பல தொண்டு அமைப்பு களும், பெண்கள் அமைப்புகளும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத் துள்ளன.

குடியரசுத் தலைவர் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் அதை பரிசீலித்து வருகிறது. இது எந்தக் கட்சிக்கும் எதிரான நட வடிக்கை இல்லை. குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தால், இது தொடர்பாக விரைவில் விசாரணைக்கு உத்தர விடப்படும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத் தில், விசாரணை ஆணை யம் அமைக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கோரப்படும், உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே சம் மந்தப்பட்ட பெண்ணின் தந்தை, தேசிய மகளிர் ஆணையத்துக்கும், குஜராத் மாநில மகளிர் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், தனது மகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அவர் எந்தப் புகாரும் தர விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/72326.html#ixzz2o1e5tWCc

தமிழ் ஓவியா said...


குறும்பா

இயற்கை..
இறைவன்
ஆனது...!

கல்லு...
கடவுளானது!

மாண்டவன்
ஆண்டவன்
ஆனான்...!

அனைத்தும்
ஒன்றே...!

இறுதியில்
எல்லாமே
பூஜியம்!!!

######

நிரூபணம்!

தமக்கு 95 வயது வரை பெரியார் கடவுளைத் திட்டினாரே...!

கடவுள் ஏன் கோபித்துக் கொள்ளவேயில்லை...?

அவர் இல்லை என்பதை நிரூபித்து விட்டார்!

- கோ. கலியபெருமாள், மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page2/72381.html#ixzz2o6qeSTbP

தமிழ் ஓவியா said...


ராமேஸ்வரம்: கோவில் தீர்த்தமா? கழிவு நீர்த் தொட்டியா?


உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குழு அறிக்கை

மதுரை, டிச.21- ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தப் பகுதி, புனித நீராட தகுதியான, தூய்மை யான இடமாக இல்லை. கால்களைக்கூட நனைக்க முடியாது. மாசடைந்துள்ளது' என, வழக்குரைஞர் குழுவினர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கோவை வழக்குரைஞர் வெண்ணிலா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு விவரம் வருமாறு: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலைச்சுற்றி, கழிவுகள் தேங்கியுள்ளன. கழிவுகள் அக்னி தீர்த்தப் பகுதியில் கலக்கின்றன. 22 இடங்களில் தீர்த்தமாட, தரகர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அக்னி தீர்த்தத்தை சுத்தப்படுத்த வேண்டும். கோயில் புனிதத் தன்மையை காக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக் குரைஞர் குழுவினை, உயர்நீதிமன்றம் நியமித் திருந்தது. நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்திய நாதன் அடங்கிய, அமர்வுமுன், வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குரைஞர் குழுவினர், அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அதில் கூறப்பட் டுள்ளதாவது: அக்னி தீர்த்தப் பகுதியில் தேங்கிய நீர், பழுப்பு நிறமாக, துர் நாற்றம் வீசுகிறது. பழைய துணிகள் தேங்கி யுள்ளன. பக்தர்கள், புனித நீராட முடிய வில்லை, என்றனர். விடுதி கள், ஓட்டல்கள், கடை களின் கழிவுநீர் கலப்ப தாக மக்கள் கூறினர். மொத்தத்தில், புனித நீராட தகுதியான, தூய் மையான இடமாக இல்லை; கால்களைக் கூட நனைக்க முடியாது. இடையூறாக, தெரு நாய்கள், மாடுகள் திரிகின்றன. பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகம். கழிவுகளைச் சுத்திகரித்து, கடலில் விடுவதாக ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் தெரிவித்தார். அப்பணி, பெயரளவில் நடக்கிறது. சுத்திகரிக்கப்படும் கழிவுநீரை, தொலை தூர பகுதிக்கு கடத்தி, கடலில் விடலாம்.

கோயிலுக் குள் தீர்த்தமாடும் பகுதியிலும் தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை, ஜனவரி 3 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72403.html#ixzz2oA0hNHQ2

தமிழ் ஓவியா said...


மலிவான விளம்பரங்கள்!


மலிவான விளம்பரங்களால் மக்கள் மத்தியில் மலிவாக இடம்பிடிக்கலாம் என்கிற யுக்தியில் மோடி ஈடுபட்டு வருகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் இளைஞர்களை ஈர்ப்ப தற்காக அனைத்து இடங்களிலும் கிராமப் பஞ்சாயத்து முதல் மாநகரங்கள்வரை கிரிக்கெட் போட்டிகளை பி.ஜே.பி. நடத்துகிறது. போட்டியைக் காணவரும் பார்வையாளர்களுக்கு மோடி உருவம் பொறிக்கப்பட்ட காவி நிறச் சட்டை இலவசம் என்று அறிவித்து மக்களை திரட்டுகின்றனர்.

மோடி தொடக்கத்தில் தேநீர்க் கடையில் பணியாற்றியதால், அதைக் குறியீடாக்கி மகாராட்டிர மாநிலத்தில் அவர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு 10 ஆயிரம் தேநீர்க் கடைக்காரர்கள் திரட்டப்படுகிறார்களாம்.

காந்தியார் பிறந்த நாளில் குஜராத் முதலமைச்சர் மோடி என்ன செய்தார் தெரியுமா? காந்தியார் பிறந்த நாளில் (அக்டோபர் 2 இல்) காந்தி குல்லா 25 சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனை என்று விளம்பரம் செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், ஷாகாக்களின்போது அணியும் குல்லாவைத்தான் காந்திக் குல்லாய் என்று சொல்லி தள்ளுபடி விலையில் விற்றனர் - இதற்குப் பெயர் மோடி குல்லாய் என்று பெயர் சூட்டியிருப்பது எவ்வளவுப் பெரிய மோசடி! அரசுப் பணத்தில் இப்படி ஒரு பிரச்சாரம்!

மோடி குர்தா என்ற ஒரு சட்டையை விளம்பரப் படுத்தி வருகின்றனர். பருத்தி குர்தா ரூ.1895; லினன் குர்தா ரூ.1900.

முஸ்லிம்கள் அணிவது போன்ற தோற்றம் - முஸ்லிம் மக்களை ஏமாற்றிட!

(இதே மோடிதான் அவர் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் போரா பிரிவைச் சேர்ந்த ஒருவர், அன்பால் கொடுத்த குல்லாவை அணிய மறுத்தவர் என்பதை மறந்திடக் கூடாது!)
நமோ தேநீர்க் கடைகள், நமோ இனிப்புக் கடைகள் என்று தொடங்கப்பட்டுள்ளன. (நமோ என்றால் ந-நரேந்திர; மோ - மோடி என்று பொருளாம்).

இப்படியெல்லாம் விளம்பரம் செய்வதற்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தோடு (Apcoworld in
India) ஒப்பந்தம் செய்து பன்னூறு கோடி ரூபாய்கள் கொட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

டுவிட்டர் தேடுதலில் அமெரிக்க அதிபர் ஒபாமாவைத் தாண்டிவிட்டதாகக் கிளப்பப்பட்ட பொய்த்திரை கிழிக்கப்பட்டதையும் இந்த இடத்தில் நினைவு கொள்க!

மும்பையைச் சேர்ந்த அய்.டி.அய். நிபுணர் ஒருவர் எப்படியெல்லாம் இணைய தளத்தைப் பயன்படுத்தி மோடிக் கும்பல் பொய்ப் பிரச்சாரம் செய்கிறது என்பதை தொழில்நுட்ப ரீதியாக அம்பலப்படுத்தினார்; - இதற்காகவெல்லாம் இந்துத்துவாவாதிகள் வெட்கப்படமாட்டார்கள்.

கழிவறையைச் சுத்தம் செய்வதுபோல மோடியின் படத்தை வெளியிட்டு, கழிவறையைச் சுத்தம் செய்தவர் இப்பொழுது நாட்டைச் சுத்தம் செய்ய வருகிறார் என்று விளம்பரப்படுத்து கின்றனர்.

ஜப்பானில் உள்ள பேருந்து நிலையத்தின் படத்தைப் போட்டு இது குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் அகமதாபாத்தில் உள்ள பேருந்து நிலையத்தின் படம் என்று மோசடிப் பிரச்சாரம் செய்வதை என்னவென்று சொல்ல!

அவருடைய அருமைச் சகோதரர் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சவுகானோ, ஸ்பெயினில் தென்னாப்பிரிக்காவில் உள்ள சாலையையும், ரூர்கேலாவில் உள்ள சாலையையும், மத்தியப் பிரதேசத்தில் உள்ளதாக விளம்பரம் செய்து மலிவாக மக்கள் வாக்குகளைப் பறிக்கவும் செய்தார்.

இந்த மோசடிக் கும்பல்தான் இந்தியாவை ஆளவேண்டுமா? வெகுமக்கள் சிந்திக்கட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/72408.html#ixzz2oA14NwXP

தமிழ் ஓவியா said...


பொதுத் தொண்டு வேண்டின்


ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்தமட்டில்தான் மானத்தையும், காலத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத் தொண்டுக்கு வந்துவிட்டால், இவை இரண்டையும் பார்க்கக் கூடாது. - (குடிஅரசு, 30.9.1944)

Read more: http://viduthalai.in/page-2/72407.html#ixzz2oA1SYego

தமிழ் ஓவியா said...


மகாத்மாவைப்பற்றி தமிழ்நாடுவின் கவலை


மகாத்மாவைப்பற்றி தமிழ்நாடுவின் கவலை

தமிழ்நாடு பத்திரிகையானது 16-12-1927ஆம் தேதி உபதலையங்கத்தில் கண்ணோட்டம் என்னும் தலைப்பின் கீழ் ஒரு வியாசம் எழுதி இருக்கின்றது. அதில் ஸ்ரீமான் காந்தி அவர்களை மகாத்மா என்று சொல்லாமல், வெறும் காந்தி என்று சொல்வதால் தனக்குப் பெரிய கவலை ஏற்பட்டு விட்டதாகக் காட்ட வெளிவந்து, உலகம் போற்றும் உத்தமர்களில் மகாத்மா காந்தி ஒருவர் என்றும், அதை மறுப்பவர் ஒன்று இழி குணம்படைத்தவராக இருக்கவேண்டும் அல்லது மதியற்றவர்களாக இருக்கவேண்டும் என்றும் எழுதி யிருக்கிறது.

மகாத்மா காந்தி என்பவரை ஸ்ரீமான் காந்தி என்று சொல்வதால் இழிகுணப் பட்டமும், மதியற்ற பட்டமும் வந்தாலும் வரட்டும் நமக்கு அதைப்பற்றிக் கவலை யில்லை.
ஸ்ரீமான் காந்தி என்றைய தினம் மக்களுக்குள் வருணம் நான்கு உண்டு. அதுவும் அவைகள் பிறவியில் ஏற்படுகின்றன. அந்தந்த வருணத்தானுக்கும் ஒவ்வொரு தர்மம் உண்டு. அதைத்தான் அவனவன் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார் என்பதாக நாம் உணர்ந்தோமோ, அன்றே அவரிடம் மகாத்மா தன்மை அங்கு இல்லையென்று தீர்மானித்துவிட்டோம். அதிலும் சூத்திரன் என்பவன் அடுத்த ஜென்மத்தில், தான் பிராமணனாய் பிறக்கலாம் என்கின்ற அவருடைய தீர்ப்பு சுத்தசுத்தமாய் நம்மை மாற்றியது. மகாத்மா பட்டம் ஒருவரின் அபிப்பிராயத்தையும், நடவடிக்கை யையும் பொருத்துத்தான் வழங்கப்படுவதே தவிர, வெறும் உருவத்திற்காக வழங்கப்படுவதல்ல என்பதை உணர்ந்தவர்களுக்கு இவ்விஷயத்தில் கவலை ஏற்பட நியாயமில்லை. மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்கி நாம் எழுத ஆரம்பித்து இன்றைக்கு சுமார் இரண்டு மாதம் ஆகின்றது. இதுவரையும் சகித்துக் கொண்டிருந்த தமிழ் நாட்டிற்கு இந்த வாரம் திடீரென்று கவலை தோன்றி நமது, இழிகுணத்தையும் மகிமையையும் கண்டு பிடித்து எழுதியிருப்பதற்கு இரகசியமான காரணம் இல்லாமல் போக வில்லை. அதைத் தக்க சமயம் வெளியிடுவோம்.

ஒவ்வொரு பட்டமும் அவரவர்கள் அபிப்பிராயத் தாலோ, நடவடிக்கைகளாலோ ஏற்படுவதும், அவைகள் மாறும்போது மறைபடுவதும் வழக்கமாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் சிலருக்குப் பட்டம் மக்களின் அறியாமையினால் ஏற்படுவதும், விஷயம் தெரிந்த உடன் மறைந்துபோவதும் வழக்கமாக இருக்கின்றது. இது வரையில் எத்தனை பேர்கள் தலைவர்களாகி மறுபடியும் நினைப்பதற்கே அருகற்றவர்களாய்ப் போயிருக் கின்றார்கள் என்பதை யோசித்துப் பார்த்திருந்தால் தமிழ்நாடுவுக்கு இவ்விஷயத்தில் இவ்வளவு கவலை ஏற்பட்டிருக்க நியாயமே இருந்திருக்காது.

தவிர, கடவுளின் அவதாரமாகவும், மகான் தோன்றின தாகச் சொல்லப்பட்ட கிருஷ்ணன் என்பவன் கடைசி காலத்தில் ஒரு காட்டில் ஒரு வேடனால் கொல்லப்பட்டு அழுவாரற்றுச் செத்து நாறிக்கிடந்ததாக வுள்ள விஷயங்களை அறிந்திருந்தால், இம்மாதிரி காரியத்திற் காக ஒருவரை இழிகுணம் என்றும், மதியீனம் என்றும் எழுத நியாயம் கிடைத்திருக்காது என்போம். ஆனாலும், நம்முடைய இந்த சமாதானமெல்லாம் தமிழ்நாடு பத்திரிகைக்கல்ல. ஏனெனில், அது பழைய குப்பையைத் தேடிப் பார்த்து குற்றங்கள் கண்டுபிடிக்கின்ற வேலையில் முனைந்து இருக்கின்றது. ஆதலால், அதற்கு இச்சமாதானங்கள் ஒரு உணர்ச்சியையும் கொடுக்காது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதைக் கண்ணுற்றவர்கள் ஏமாறாதிருக்கவே இதை எழுதுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 25.12.1927

Read more: http://viduthalai.in/page-7/72426.html#ixzz2oA1z7wU7

தமிழ் ஓவியா said...

மனுதர்ம சாஸ்திரம்

சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு மக்களுக்கு எங்கு பார்த்தாலும் மனிதரின் சுயமரியாதைக்கு விரோதமான ஆதாரங்களை ஒழிப்பதில் கவலையும், ஊக்கமும் அதிகமாகி வருகின்றது. சென்னை, வட ஆற்காடு, சேலம், தஞ்சை, திருநெல்வேலி, மதுரை முதலிய இடங்களில் கூடிய பல மகாநாடுகளில் வர்ணாசிரம தர்மம் என்பதைக் கண்டித்திருப்பதுடன், அதற்கு ஆதாரமான புஸ்தகங்களையும் பகிஷ்கரிக்கத் தீர்மானங்களும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. சில மகாநாடுகள் மனுதர்ம சாஸ் திரத்தை நெருப்பில் கொளுத்தி சாம்பலைக் கரைத்தும் வந்திருக்கின்றன.
அரசாங்கமும் சட்டசபை மெம்பர்களும் இதைக் கவனிக்கப் போகிறார்களா என்று தீர்மானிக்க முடியவில்லை. பழைய காலமாயிருந்திருக்குமானால் இம்மாதிரி பெரும்பான்மையான மக்களுக்கேற்பட்டிருக் கும் உணர்ச்சியை மதித்து அரசாங்கமானது வருணா சிரமத்தை அழித்துச் சட்டம் செய்திருக்கும் என்பதோடு வருணாசிரமக் கொள்கைக்காரர்களை கழுவிலேற்றி இருக்கும் என்றுங்கூட சொல்லலாம். ஏனெனில், நிரபராதிகளான 8,000 சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக சொல்லும் சரித்திரத்தைப் பார்க்கும்போது இவ்வளவு அக்கிரமும், ஜீவகாருண் யமும் அறிவும் அற்ற தன்மையான கொடுமையை சகித்துக் கொண்டிருக்கும் என்றும் யாரும் சொல்ல முடியாது. நமது அரசாங்கங்கள் பழையகால அரசாங்கங் களைப் பின்பற்றிக் கழுவேற்றாவிட்டாலும் சட்டமூலம் கொடுமைகளை ஒழிக்கவாவது உதவவேண்டாமா என்று கேட்கின்றோம். ஒருக்கால் மத விஷயத்தில் தலை யிடமுடியாது என்று சொல்வார்களானால், மத விஷயங் களையாவது கவனித்து மதத்தில் எப்படி சொல்லியிருக் கின்றதோ யார் யாருக்கு என்ன என்ன வேலை இடப்பட்டிருக்கின்றதோ, யார் யாரின் நடத்தை எப்படி இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றதோ அப்படியாவது நடக்கும்படி பார்க்கவேண்டும். அப்படியும் இல்லாமல் இப்படியுமில்லாமல் பார்ப்பானும் வெள்ளைக்காரனும் மாத்திரம் பிழைக்க என்ன என்ன மாதிரி நடக்க வேண்டுமோ, எப்படி எப்படி சீர்திருத்தம் செய்யவேண்டுமோ அப்படியெல்லாம் சூழ்ச்சிகள் செய்துகொண்டு மதவிஷயத்தில் பிரவேசிக்க மாட்டோம் என்று சொல்வது வடிகட்டின அயோக்கியத்தனமாகு மென்றே சொல்லுவோம்.

இச்சூழ்ச்சிகளைப் பார்க்கும்பொழுது, இது சமயம் மகம்மதிய அரசாங்கத்தில் வாழும் யோக்கியதையாவது நமக்குக் கிடைக்காதா என்று ஆசைப்பட வேண்டிய தாயிருக்கின்றது. காரணமென்னவென்றால், வீரர் கமால்பாட்சா அவர்கள் ஒரு அரச விசாரணைக்கு குரானை ஆதரவாக காட்டியபோது அது அக்காலத்து சங்கதி இக்காலத்திற்கு செல்லாது என்று அதைப் பிடுங்கி வீசி எறிந்தாராம். குரான் வாக்கியம் செதுக்கப் பட்ட இடங்களையெல்லாம் அழித்து சுயமரியாதை யையும், கைத்தொழிலையும் கவனியுங்கள் என்று எழுதிவருகிறாராம். மகம்மதியரைவிட வெள்ளைக் காரருக்கும் பார்ப்பனர்களுக்கும் மத பக்தியிருக்கின்றது என்று சொன்னால் எந்த பைத்தியக்காரராவது நம்பமுடியுமா என்று கேட்கின்றோம்.

எனவே, மதம் என்கிற புரட்டுகளையும், மதாச் சாரியர்கள் என்கின்ற அயோக்கியர்களையும் சாஸ்திரம், வேதம், புராணம் என்பவைகளாகிய அதர்ம அக்கிரம, ஆதாரங்களையும் குருட்டுத்தனமாய் பின்பற்றாமல் அன்பு, ஜீவ காருண்யம், அறிவு, சத்தியம் என்பவைகளை ஆதாரமாய் வைத்து அவற்றிற்கு விரோதமாய் உள்ளவை களையெல்லாம் அடியோடு ஒழிப்பதற்கு முற்பட வேண்டியது தான் பகுத்தறிவுள்ள மனிதனின் கடமை, ஆதலால், அதற்கு ஒவ்வொருவரும் முற்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் 04.12.1927

Read more: http://viduthalai.in/page-7/72426.html#ixzz2oA2ObGke

தமிழ் ஓவியா said...

இவர்கள்தான் சாமியார்கள்

கும்பமேளாவில் கூடிய சாதுக்களிடம் காணப்பட்ட பொதுவான அம்சம் யாதெனில் சோறு, தண்ணீர், தூக்கம்கூட இல்லாமல் இருந்து விடுவர். ஆனால், நீள்போதை தரும் கஞ்சாவை புகைக்காமல் இருக்க மாட்டார்கள்.

-தினமலர் 4.3.2013 பக்கம் 16

தமிழ் ஓவியா said...


சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி


மின்சாரம் சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங் குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.

பூமியை பொறுத்தவரை எப்போ தும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது.

எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உள்ள ஷிமிஷூ கார்ப்பரேசன் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் சோலார் பேனல் தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட் டுள்ளது. அதற்கு ஜனாரிங் என பெயரிட்டுள்ளனர்.

இதன் மூலம் 13 ஆயிரம் டெரா வாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியும். ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் ஆகும். இந்த திட்டத்தின் கட்டுமான பணி வருகிற 2035ஆம் ஆண்டில் தொடங் கப்பட உள்ளது.
தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன.

சந்திரனில் சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின் கலன்கள் அமைக்கும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலை யங்களில் இணைக்கப்படும். பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும்.

Read more: http://viduthalai.in/page3/72047.html#ixzz2oA3NtXZv

தமிழ் ஓவியா said...


முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம்


2ஆவது மனைவி ஜீவனாம்சம் பெறத் தகுதியானவரே உச்சநீதிமன்றம் தீர்ப்பு

முதல் திருமணத்தை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணம் சட்ட விரோதமானது என்றா லும், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்காக இந்து திருமணச் சட்டப்படி இரண்டாவது மனைவி யையும் சட்டபூர்வமானவராகவே கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்திருந்த முந்தைய தீர்ப்பானது, முதல் திருமணம் குறித்த தகவலை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணத்திற்கு பொருந்தாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

"இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படா விட்டால் அது மனைவியை ஏமாற்றும் கணவனுக்கு அளிக்கப்படும் சலுகையாக ஆகிவிடும்.

எனவே, ஜீவனாம்சம் பெறுவதற்காகவாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-இன்படி (ஜீவனாம்சம்) பாதிக்கப்பட்ட பெண் சட்ட பூர்வமான மனைவியாகவே கருதப்பட வேண்டும்'' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதவ்-சபிதா பென் வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்புக்கு மாறானதாக மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-அய் உறுதியான நோக்கத்திற்காக செயல்படுத்தும் வகையில் இப்படி விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

ஆதவ் ஏற்கெனவே திருமணமானவர் என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு சபிதா பென் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண் டுள்ளார். ஆதலால், இந்து திருமணச் சட்டப்படி அந்த திருமணம் செல் லாது என தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதிகள் விளக்கம் கூறினர்.

- சட்டக்கதிர் - 2013 - டிசம்பர் பக்கம், 59

Read more: http://viduthalai.in/page3/72048.html#ixzz2oA3ZY2WD

தமிழ் ஓவியா said...

தொழிலாளி என்பவன் தன்னுடைய உடல் உழைப்பை
வயிற்றுப் பிழைப்பிற்காக விற்பவன்.

தன்னுடைய உழைப்பைத் தன்னுடைய இச்சைப்படித் தன் காரியங்களுக்கேற்ற வசதிப்படி
நடத்துபவன் முதலாளி.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


பொன்மொழிகள்


தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல் வியுறுவான். - நெப்போலியன்

###

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

###

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும், அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page5/72385.html#ixzz2oA4KlMPF

தமிழ் ஓவியா said...


ஒழிக்கப்பட வேண்டியவை


1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page5/72387.html#ixzz2oA4X8AO1

தமிழ் ஓவியா said...


தவிப்பு

எழுபத்து மூன்று திசம்பரில் எந்தை

அழவைத்தார் துன்பில் அமிழ்ந்து (24.12.1973-இல் பெரியார் இயற்கை எய்தினார்)

நெக்குருகி நெஞ்சம் நினைவுதடு மாறினரே

திக்கெட்டும் மக்கள் திகைத்து நாடே கலங்கியன்று நாற்றிசையும் துன்பத்தின்

ஊடே உழன்ற(து) உணர். முடிப்பு

இன்றில்லை நம்பெரியார்! ஏக்கப் பெருமூச்சில்

நின்றிருக் கின்றோம் நினைந்து நான்குபத்(து) ஆண்டுகளா நம்பெரி யார்மறைந்து?

கூன்நிமிர்ந் தோமாநாம் கூறு பெரியார் பெரியாரே! பேசுவோம் யாண்டும்

உரியார் நமக்கவரே! ஓர் கருஞ்சட்டைப் போர்படை கண்டார் பெரியார்

செருக்கோ டிருக்கச் செறிந்து வழுவாப் பகுத்தறிவார்! வாய்த்தாரே நம்மின்

எழுச்சிக்கும் வித்தவரே! ஏத்து அறிந்துணர்ந் தென்றும் அகத்துள் பெரியார்

நெறிநிற்போம் வாரீர்! நிலைத்து பிறந்தநாள் இன்று பெரியார்க்கு! வாரீர்!

சிறக்கவே வாழ்த்துவோம் சேர்ந்து

- பெரியார் பெருங்கவிஞர் கருவூர்பாரி

Read more: http://viduthalai.in/page5/72388.html#ixzz2oA5EcMtu

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் என்ன கூறுகிறார்?

தேவாரம் படித்த, பாடிவரும் ஒரு தலித் தமிழச்சிக்கு அரசு உத்தரவு கிடைத்தும் ஓதுவார் பணிக்கு செல்ல இயலாமல் தடுமாறும் நிலையில்... அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவைப்பற்றி... வேதவிற்பன்னரும் தமிழ் அர்ச்சனைக்காக பல்லாண்டு காலம் போராடி வருபவருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம் கேட்டோம். மகாஜனஹா ஏன கதாஹா சபந்தஹா - என்கிறது வேதம் அதாவது... பொதுஜனம் என்ன சொல்கிறார்களோ, கேட்கிறார்களோ அதன்படி செல் என அர்த்தம். அதுப்படி பார்த்தால் பொதுஜனங்கள் இப்போது தேர்ந்தெடுத்திருக்கிற கருணாநிதி மந்திரிசபை எல்லா ஜாதிக்காரர்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என முடிவெடுத்து அறிவித்திருப்பது வேதவாக்கு. ஆகமத்தைச் சொல்லி மற்ற ஜாதிக்காரர்களை பிராமணர்கள் கோயிலுக்குள் விடாமல் இருந்தார்கள் ஆனால் உண்மை என்னவென்றால் பிராமணனுக்கும் ஆகமத்துகுமே முரண்பாடு தான்.

ஆகமம் உருவ வழிபாட்டைச் சொல்கிறது. ஆனால், பிராமணனுக்கு வேதம் சொன்னது உருவ வழிபாடு அல்ல. இயற்கை வழிபாடுதான். அருகம்புல் முதல் சூரியன் வரை பிராமணனின் வழிபாடுகள் எல்லாம் இயற்கை வழிபாடே. அப்படிப்பட்ட பிராமணன் தனக்கு எதிரான ஆகமத்தின் பெயரைச் சொல்லியே மற்ற ஜாதிக்காரர்களை உள்ளே விட மறுத்து வந்தான். ஆனால் உண்மையில் பாஞ்சராத்ர ஆகமப்படி ஜாதி தத்துவமே இல்லை. பிராமணர்கள் வேதத்தை எதிர்த்த ஆகமத்தையே, தங்களுக்காக பயன்படுத்திக் கொண்டனர். அதனால் ஆகமப்படியே பார்த்தாலும், யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம், பிராமணர் இதையே தன் தொழிலாக்கிக் கொண்டதால் மற்ற யாரையும் உள்ளே விடவில்லை. ராமசாமி நாயக்கர் அந்தக்காலத்தில் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டார். தாத்தாச்சாரியாரே எங்க கையால ஒரு பூவை எடுத்து உங்க சாமிக்கு போடக்கூடாதாய்யா? என்று அந்தப்பூவை இப்போது கருணாநிதி எடுத்துப் போட வைத்திருக்கார். இது வரவேற்க வேண்டிய ஒரு சீர்திருத்த விஷயம். இதை யாராவது ஆட்சேபித்தால் அவர்கள் மக்கள் முன்னேற்றத்தை தடுக்கிறார்கள்னு அர்த்தம். அவர்களுக்கு நாம்தான் நல்ல புத்தி சொல்லி திருத்த வேண்டும் என்று கையை உயர்த்தி இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார் தாத்தாச்சாரியார்.

- ஆரா, நக்கீரன் 27.05.2006, பக்கம் 25

Read more: http://viduthalai.in/page5/72400.html#ixzz2oA5qLRS0

Unknown said...

நீங்க சொல்லிக் கேட்பவர்கள்தான் அறிவார்களா. நாங்க சொன்னா எழுதமாட்டீங்களா,

தமிழனை அறிவாளிகளாக்க் எத்தனையோ வழிகள் உள்ளன. கொவிலில் அர்ச்சகர்கள் ஆனவுடனே வர்ணாசிரமத்தை ஒழித்துவிட்டோஒம். இனி இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லி விடுவீர்களா,சாதியைப்பற்றிப் பேசிப்பிழைப்பதை விட்டு தமிழர்களை அறிவாளிகளாகக முயற்சி செய்யுங்கள்


ஒரு TV சேனலில் பத்துக்கு ஏழு மாணவர்கள் விலையில்லா மடிக்கணினி முதல்வர் வழங்கியாதக் கூறினார்கள். அது அரசு மக்கள் பணத்திலிருந்து வழங்கியது என்றுகூட பத்தாவது படித்த மாணர்வர்க்குத் தெரியவில்லை. காரணம் எங்கும் எதிலும் தலைவி படமும் பெயரும்தான். இதை அழிப்பதற்கு உங்கள் பகுத்தறிவுப் பணியை உபயோகிக்கலாமே. தின்மும் தொலைக்காட்சியில் வரும் ஒரு ஆளும்கட்சி பேச்சாளர் இன்றுவரை முதல்வர் பெயரை உச்சரிக்கவில்லை.முதல்வரும் அதை ரசிக்கிறார். அவரது பார்ப்பனத்திமிர் என்றாவது சொல்லுங்களேன். (திரு வீரமணி/பேராசிரியர் ஜக வீர?பாண்டியன்)

ஒரு தொலைகாட்சியில் ஆசிரியர் பணியில் இட ஒதுக்கீடு கூடாது என்ற, என்போன்றோர் கூறும் கருத்தை ஒருவர் வெளியிடும்போது ஒரு ஆசிரியர் 2000 வருடம் தாழ்த்தப்பட்டிறுக்கிறோம் என்று பேசுகிறார். இது என்ன தன்மானமோ/பகுத்தறிவோ தெரியவில்லை.

பெரியார் எல்லா சாதித்தவறுகளுக்கும் பார்ப்பனர்கள்தான் காரணம் என்று வாதிட்டு தமழகத்தை சுடுகாடாக ஆக்கிக்கொண்டிருக்கிறார். யாரும் தாழ்த்தப்படுவதை என்போன்றோர் விரும்புவதில்ல்லை. அதற்காக ஒரு சாதியினரைப் பழிக்காதீர்கள். பார்ப்பனர்கள் கொவிலில் பூசாரியாக இருந்தால் உழைக்க்காமல் சாப்பிடுகிறான் என்பதும் . படித்து முன்னுக்கு வந்தால் எங்களைத் தாழ்த்தி விட்டு முன்னுக்கு வந்தான் என்று பேசுவதில் பகுத்தறிவு நேர்மை இரண்டும் எங்கே. பல வடுடம் அன்னிய மாநிலங்களில் இருந்ததால் இங்குள்ள நாத்திகவாதிகள் மக்களை முட்டாளாக்கிப் பிழைப்பது புரிகிறது.

பெரியார் பெரிய அறிவாளி என்று இன்றும் என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. நான் ஒன்பது வயதுச்சிறுவனாக இருந்தபோது அம்மாவிடம் ஒரு தீபாவளியன்று நரகாசுரன் இருந்ததெல்லாம் உண்மையா என்று கேட்டேன். அதற்கு அவர் அதையெல்லாம் பற்றியோசிக்காதே.ஏழைகளுக்குவருடத்துக்கு ஒருநாளாவது நல்ல உணவு கிடைக்கிறதே என்றார். (அதன்பிறகு நாங்கள் ஏழையானபோது அவர் பேசியதின் அர்த்த்த்தைப் புரிந்துகொண்டேன்) எனது ஆத்திகம் இப்படித்தான் வளர்ந்தது. என் பாட்டி விதவையான்பின்னும் அவரது மூன்று பெண்களை 8ஆவதுவரை படிக்க வைத்தார்.மற்ற சாதியினர் எங்கள் வீட்டுப் பெண்கள் வெளியே போகமாட்டார்கள் என்று பெருமைப்பட்டார்கள். எனது பரம்பரையில் முதலில் நான் கல்லூரியைப்பார்த்தேன்

நான் சிறுவனாக இருந்தபோது அதிக நேரம் நூலகத்தில் இருந்து பெரியார் நூல்கள் படித்திருக்கிறேன். அப்போது அவர்கூறிய கருத்துக்கள் - கொவிலுக்குப் பூட்டு எதற்கு, சாத்திரங்கள் பொய் என்பதெல்லாம் உண்மை என்று தொன்றியது. பிறகு அவரது பார்ப்பன எதிர்ப்பு அவர் காசிக்குப் போனபோது நடந்ததின் விளைவு என்று தெரிந்துகொண்டேன். இப்போது அதில் அவரது ஈகொதான் தெரிகிறது. ஏழையாக இருந்து படித்து உழைத்து முன்னுக்கு வந்த என் போன்ற பார்ப்பனர்களைப்பழித்துப் பிழைப்பு நடத்துவதை விட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியும் அறிவும் வளரப் பாடுபடுங்கள்.எங்களுக்கு எதிராகப் பேசினால் உங்கள் சாதியை பழிப்போம் என்ர முன்னாள் முதல்வரின் பாணியைக் கடைப்பிடிக்காதீர்கள்.

நான் பிறந்து வளர்ந்த தமிழகம் இப்பொது ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிரது. டைம்ஸ் நௌ ஆங்கில சானெல் இந்தியிலேயே உள்ள ஊழல் மிக்க நகரம் சென்னை என்று கூறுகிற்து பார்ப்பனர்களை தமிழக அரசுப்பணிகளிலிருந்து அகற்றி சாதித்தது என்ன. பணிக்குச் சேர்ந்து ஆறு மாதமே ஆனவர் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொள்கிறார். நேர்மையை வளர்ப்பதர்க்கு நீங்கள் இதுவரை செய்தது என்ன.பார்ப்பனர்கள் அயோக்கியர்கள் என்று தம்பட்டம்பொட்டு மற்ற சாதி இளைஞர்களை அதில் சேர்த்துவிட்டீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் 80 வயது மனிதரிடம் பார்ப்பனர்கள் இருந்தகாலத்தில் இதுபோன்று தடந்ததுண்டா என்றும் அப்போதிருந்த ஆசிரியர்களிடம் இதுபோன்ற் வன்முறை அப்போதைய மாணவர்களிடம் இருந்ததா என்று விசாரித்துப் பாருங்கள் பலர் பார்ப்பனரை இன்று மதிப்பதற்கு இதுபோன்ற தலைமுறைதான் காரணம்.அதுபோன்ற நேர்மையான சமூகத்தை தமிழகத்தில் உருவாக்க முயலுங்கள். பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்தை மக்கள் தாமாகவே புரிந்துகொள்ளும் காலம் வரும்வரை பொறுத்திருங்கள்.


இப்போதுள்ள பார்ப்பன இளைஞர்கள் ஆசாரங்களையும் சாதியையும் சேர்த்து விட்டுவிட்டார்கள். அவர்களையாவது பழிக்காதீர்கள். (இது எல்ல பகுத்தறிவுவாதிகளுக்கும்)


நான் சொன்னது தமிழ் ஒவியாவுக்குப் புரிந்தால் மகிழ்ச்சி அடைவேன். மற்றவர்கள் பிழைக்க சாதி உதவுகிரது. உங்களுக்கு ?

தமிழக மக்க்ள் உண்மையான, அறிவு புகட்டும் பகுத்தறிவுடன் வளரட்டும்..


கோபாலன்


நான் சொன்னதெல்லாம் உண்மை.