Search This Blog

20.12.13

கம்பன் கவிதைகளிலே காமரசம் பற்றி...அன்று அண்ணாவிடம் கேட்ட ???

(திராவிட நாடு ஏட்டிலே அறிஞர் அண்ணா அவர்கள் கேள்வியும் பதிலும் என்ற பகுதியிலே வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடுத்த முக்கிய பதில்கள். ஆதாரம்: 21.11.1947, திராவிட நாடு)

கல்லூரி மாணவர்கள், மக்கள் மனதிலே பதிய  பகுத்தறிவு இயக்கத்துக்கு எந்த வகையில் பணியாற்ற முடியும்?

கட்சிமாச்சரியங்களை மறந்து, பகுத்தறிவு பரவ வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காக கூடி, நமது நாட்டு மக்களின் வாழ்க்கையிலே ஊறிப்போயுள்ள பழைய, பயனற்ற, கேடுதரும், எண்ணங்களை அகற்றும் வகையிலே பேசுவது, பாடுபடுவது, ஓவியங்கள் தீட்டுவது, பொருட் காட்சிகள் நடத்துவது, நாடகங்கள் நடத்துவது, விஞ் ஞானிகள், வீரர்கள், அறிஞர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கதை வடிவில் கூறுவது, உலகிலே எங்கெங்கு, என்னென்ன வகையான மூட நம்பிக்கைகள் இருந்து வந்ததை அவைகள் எப்படி அகற்றப்பட்டன என்பவற்றை விளக்குவது - இவ்விதமாகப் பணியாற் றலாம் - பலன் உண்டு.

கூடுமானவரையில் நடைமுறை அரசியல் பூசல்களிலிருந்து ஒதுங்கியிருந்து நடத்துவதே நல்லது. பெரிய நகர்களிலே நடத்தப்படுவதைவிட, கிராமங்களில் இந்தப் பிரச்சாரம் நடைபெற வேண்டும். எழுச்சியூட்டும் சொற்பொழிவு விழாக்களாக மட்டுமே அமையாமல் மக்கள் மனதிலே பதியக் கூடிய விதமான உரையாடல்களாக அமைவது நல்லது.

கம்பன் கவிதைகளிலே காமரசம் பற்றி...

கம்பன் கவிதைகளிலே காமரசம் அதிகம் என்று கண்டித்து எழுதிவிட்டு, ரோமாபுரி ராணிகள் என்ற புத்தகத்தில் காமரசத்தைக் கலக்கியது சரியா?

சரியல்ல, கலக்கி இருந்தால்! காமரசக் களஞ்சியம், அந்த அரசிகளின் வாழ்க்கை அதன்பயனாக அரசு அழிந்தது என்பதை முன்னுரையில் கூறிவிட்டு, வெறும் போக போக்கியத்தில் மிருக இயல்புடன் புரள்வோர் நாடாள்வோராக இருக்கக்கூடாதென்று எச்சரிக்கவே இப்புத்தகம் தீட்டுகிறேன் என்பதை விளக்கினேன். எனவே காமரசத்தைக் கலக்கிய குற்றம் என்பாலில்லை.



அது போலவே, அந்த ரசத்தைப் போற்றியதாகவோக, பாராட்டுவதாகவோ, அதனை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டுமென்று சிபாரிசு செய்வதாகவோ என்மீது குற்றம் சுமத்தக்காரணம் இல்லை. குற்றம் ஏதேனும் சுமத்தலாம் என்று தேடிடும் போது இது மட்டுமா இன்னும் உருவற்ற பலனற்ற பல கிடைக்கும் தேவையுள்ளோர் அந்தத் திருப்பணியில் தாராளமாக ஈடுபடட்டும்.
நிற்க! ரோமாபுரி ராணிகள், கம்பன் ஏடுபோல, கடவுள் கதை அல்ல, பஜனை ஏடல்ல, புண்ணிய கதையாகவும், பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் பெரும் துணையாகவும், பெருமானின் பொருளைப் பெற்றுத் தரவல்ல புனித ஏடாகவும் கூறப்படும் இராம கதையிலே ஏன் காமரசம் கலக்கினார் கம்பர் என்பது என்கேள்வி.

அந்தக் கேள்வியும் கண்டனமும், நான் ரோமாபுரி ராணிகள் வெளியிட்டதால் பயனற்றுப் போய்விடாது, பழி கூறு படலத்துக்குப் பரபரப்புடன் சிலபல தேடுவோர், என்மீது பழுதையை வீசிவிட்டு, பாம்பை வீசிவிட்டோம் என்று களிப்பதிலே, எனக்கோர் நஷ்டமும் இல்லை. அவர்கள் ஆசையும் தீர்ந்து போகட்டுமே, நமக்கென்ன நஷ்டம், என்ற கைவல்ய வாக்கியந்தான் கவனத்திற்கு வருகிறது.

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், என்று பகுத்தறிவுவாதிகளாகிய நீங்கள் கருதுகிறீர்கள்?

மாயப் பிரபஞ்சம் - நீர்மேற்குமிழி என்பன போன்ற கருத்துக்களை விரும்பாத பகுத்தறிவாளர்கள், வாழ்க் கையைப் பற்றிக் கொண்டுள்ள கருத்து, வெறும் மிருக இச்சை பூர்த்திதான் என்ற தப்புப் பிரச்சாரம் பரவி இருக்கம் இந்நாளில், இந்தக் கேள்வி கேட்கப்பட்டது பற்றி மிக மகிழ்ச்சி - உண்மையை விளக்க ஓர் வாய்ப்பு ஏற்படுவதால்.

இவ்வுலகில் உயிரோடு இருப்பது மட்டுமல்ல வாழ்க்கை - கல்வி கேள்விகளில் சிறந்து, மக்களை மக்களாக மதித்து நடந்து, சோம்பித்திரியாது சுறுசுறுப்பாக உழைத்து, செல்வத்தைப் பெருக்கி, தேவைக்கேற்ற அளவு பெற்று, இன்பம் பயக்கும் பல சாதனங்களையும் கண்டு வாழ்வதுதான் - மனித வாழ்வின் முடிந்த லட்சியம் என் பதை நாம் ஒவ்வொருவரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

இந்த உயர்ந்த வாழ்வு நினைத்த மாத்திரத்தில் நினைப்புக் கொள்வதால் மட்டும் சித்தியாகிவிடாது. எடுத்து விளக்குவது முக்கியமாயினும், வெறும் விளக்க உரையால் மட்டும் சாத்தியமாகக் கூடியதென்று இந்த லட்சியத்தைப் பெறுவதற்காக நம்மில் பலரின் சுகபோகங்களை - கிடைத்தற்கரிய உயிர்களைப் பணயம் வைக்க வேண்டும்.

ஒரே நாளில் வெற்றிப் பெற்று விடக் கூடியதுமன்று. இந்த இன்ப வாழ்வைப் பெறமுடியாமல், மனிதனின் அறி வையும், முயற்சியையும் குலைப்பதற்கு அவனுக்குப் பூட்டப்பட்டுள்ள விலங்குகளோ அனைத்தும் வன்மை மிக்கது.  ஒவ்வொன்றாகத் தான் நொறுக்க முடியும் ஒரு விலங்கு ஒடிந்ததும், எதிர்பார்த்த லட்சியம் கூடவில் லையே என  மனச் சோர்வுக்கு இடங்கொடாமல் மேலும் மேலும் விலங்கொடிக்கும் வேலையில், முன்னிலும் மும்முரமாகப் பங்கு கொள்ள வேண்டும்.

இத்தகைய பணி எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறுகிய கால அளவில் முடிவுற்றாலும் முடியலாம் - நாள் கூடினாலும் கூடலாம் எதற்கும் இப்போராட்டத்தில் சம்மந்தப் பட்டுள்ள சக்தி - எதிர்ச் சக்தியின் பலத்தைப் பொறுத்திருக்கிறது.

அவதிக்குக் காரணம்

வாழ்க்கை இன்பம் சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய அவ்வளவு பொருள் பஞ்சம் பூமியில் இல்லை. அறிவுப் பஞ்சம் கூட அல்ல, இன்றுள்ள அவதிக்குக் காரணம் தன்னலம், பிறர் நலத்துடன் பிணைந் திருக்கிறது என்ற பேருண்மையை உணராததாலேயே, சுரண்டல் முறை வளருகிறது.
அதன் விளைவாக பெரும்பாலோர் வாழ்வு தேய்கிறது. தேயும் வாழ்வினருக்கு, எதையேனும் கூறித் திருப்தியைத் திணிக்க விரும்பும் தத்துவார்த்திகள் கிளம்பி, வாழ்க்கை வானவில் போன்றது, பொம் மலாட்டம் என்ற சில பல கூறி, வாழ்க்கையின் அடிப்படை உண்மையை மறைக்கின்றனர்.

23 comments:

தமிழ் ஓவியா said...


ஏவுகணை சாதனை விஞ்ஞானி டாக்டர் சிவதாணுப் பிள்ளைக்கு வாழ்த்துக்கள்


பிரம்மோஸ் அதி வேக ஏவுகணைத் திட் டத்தை வெற்றிகர மாகச் செயல்படுத்திய விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் (டீசனநச டிக ஆநசவை) என்ற ருஷ்ய நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் வழங்கினார் என்ற செய்தி அறிந்து, நாம் எல்லையற்ற மகிழ்ச்சியையும் பெருமிதத்தினையும் அடைகிறோம்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும், இடையே உள்ள உறவு மேலும் வலுவடைந்ததைத் தொடர்ந்தே இவ்விருது அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.

பிரபல ஏவுகணை விஞ்ஞானி திரு. சிவதாணுப்பிள்ளை அவர்களுக்கு ரஷ்யா அனுப்பியுள்ள செய்தியில், நீங்கள் இரு நாடு களின் கூட்டுத் திட்டம், அமைதி ஒத்துழைப்பு, புரிதல் மற்றும் நட்பை வலுப்படுத்துவதற்கு பெரும் பங்காற்றியதை பெருமைப்படுத்தும் விதத்திலேயே இவ்விருது வழங்கப்பட்டுள் ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் நாஞ்சில் நாட்டு தமிழர்; பெரும் சாதனையாளர்; இவரது ஆற்றல் வியக்கத்தக்க சாதனைகள் மூலம் வெளிப்படுகின்றன. அவரது புகழ் மேலும் பரவி, உலக விஞ்ஞானிகளில் ஒருவராகி உயர்ந்து நிற்பதைக் காணும்போதும் தமிழினம், திராவிடர் சமுதாயமும் இந்தியத் திருநாடும் பெரும் மகிழ்ச்சியை அடைகிறது.

அவருக்குத் தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

அவர் தஞ்சை - வல்லம் பெரியார் - மணியம்மை பல்கலைக் கழக மதிவுரைஞர்களில் ஒருவர் என்றெண்ணும்போது, அம்மகிழ்ச்சி பல மடங்கு பெருகுகிறது!

வாழ்க சிவதாணுப்பிள்ளை!

கி.வீரமணி
தலைவர், திராவிடர்கழகம்

முகாம்

சிங்கப்பூர் 20.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/72362.html#ixzz2o1bBgBGn

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு வீடணன்


இலங்கையில் தான் இராவணனும் பிறந்தான் - உடன் பிறந்தே கொல்லும் வீடண னும் அங்குதான் பிறந்தான்.

இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவது தான் - என்றாரே தந்தை பெரியார் (பெரியார் 90ஆவது பிறந்த நாள் விடுதலை மலர் 17.9.1969).

விபீஷணன் பிறந்த அந்த இலங்கையிலேதான் முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் விளையாட்டுக் காரரும் பிறந்துள்ளார்; தமிழன்தான் - சென்னை தான் அவர் மாமனார் - மாமியார் வீடும் கூட!

வாயைத் திறக்காமல் - இருந்தாலாவது அவரைப் பற்றிக் கொஞ்சம் மரியாதை மிஞ்சி இருக்கும். வாயைத் திறந்து தன் விபீஷணப் புத்தியையல்லவா தனக்குத் தானே அம்பலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

முப்பது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பிப் போராட்டம் நடத்துவ தனால் குற்றச்சாட்டுகள் உண்மையாகி விடாது. இந்த மக்களும் பிழையாக வழி நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளார் (குமுதம் 4.12.2013).

இலங்கைத் தீவில் தமிழினத்து இளைஞர்கள் காணாமற் போனது குறித்து விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்று அய்.நா. வரை கோரிக்கை சென் றுள்ளது.

இலங்கை அரசு தமக்குத் தானே நிரூபித்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. என்ற அமைப் புக்கூட காணாமற் போன வர்கள் தொடர்பான விசா ரணைகளுக்குப் பரிந்துரை செய்துள்ள நிலையில், தமி ழனாகப் பிறந்த முத்தையா முரளிதரன் ராஜபக்சே மொழியில் பேசுகிறார்.

எந்த அளவுக்குச் சென் றுள்ளார் இந்த முரளிதரன் தெரியுமா? 30 வருடப் பிரச் சினையை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்ஷேவுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போராளிகளை காட்டிக் கொடுத்த கருணா ராஜ பக்சே அமைச்சரவையில் அமைச்சராகவே ஆகி விட்டார். முத்தையா முரளி தரனுக்கும்கூட ஏதாவது முடிசூட்டு விழா விரைவில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

அண்ணனைக் காட்டிக் கொடுத்த காரணத்தால் தானே சாதாரண விபீஷண னுக்கு ஆழ்வார் பட்டம் கிடைத்தது; நாட்டை ஆளும் ஆட்சிப் பொறுப்பும் கிடைத்தது.

முத்தையா முரளிதரனை நோக்கி ஒரு கேள்வி உள் ளது. இலங்கைக் கிரிக்கெட் அணியில் விளையாடி சுழற் பந்துவீச்சில் உலக சாதனையை நிகழ்த்தியவர் தானே அவர்?

இலங்கை அணி பலமுறை வெற்றி பெற் றதற்குக் காரணமாக இருந்தவர்கூட!

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த விளை யாட்டு வீரர்தானே!

குறைந்த பட்சம் அந்த அணியின் துணைத் தலைவராகவாவது (Vice Captain) நியமிக்கப் பட்டாரா?

ஏன் நியமிக்கப்பட வில்லை? சிந்தித்துப் பார்த் தால் அவர் தோளில் தூக்கி வைத்துக் கொள்ளும் ராஜபக்சேவின் இனவெறிக் கண்ணோட்டம் தெரிய வரும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72359.html#ixzz2o1bKifh5

தமிழ் ஓவியா said...


சட்டம் குறட்டை விடுகிறதா?


கோயில்கட்டபொதுப்பணித்துறை ஆலோசனைக்கூட்டமாம்

இதோ ஆதாரம் பாரீர்!

பட்டுக்கோட்டை, டிச.20- அரசுத் துறை வளாகங்களில் எந்த மத சம்பந்தமான கோயில் களுக்கும் அனுமதி யில்லை என்று தெளி வான அரசாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் பட்டுக்கோட்டையில் பொதுப் பணித்துறை வளாகத்தில் உள்ள கோயில் புதுப்பித்தல் மற்றும் குடமுழுக்கு நடைபெற துறை அதி காரிகள் கூட்டம் நடை பெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது அரசு அதிகாரிகளே அரசா ணையை மீறிய செய லாகும்.

இது தொடர்பாக அறிவிப்பும் அதை நிறுத்த எழுதிய விவரங்கள் வரு மாறு:

அறிவிப்பு:

அன்புடையீர்,

வணக்கம். நமது பொதுப்பணித்துறை வளாகத்தில் அமைந் துள்ள சிறீகற்பக விநாய கர் ஆலய கும்பாபிஷே கம் 2015ஆம் ஆண்டு நடைபெற வேண்டி உள் ளதால் கோவில் புதுப் பித்தல் தொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆலோ சனைக் கூட்டம் எதிர் வரும் 19.07.2013 வெள் ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பொதுப் பணித் துறை வளாகத் தில் உள்ள விவசாயிகள் கூட்ட அரங்கில் நடை பெறவள்ளது. அது சமயம் அனைத்துப் பொறியாளர்களும், அலுவலர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க கேட்டுக் கொள் கிறோம்.

இப்படிக்கு,
கோவில் நிர்வாகிகள்
சிறீ கற்பக விநாயகர் ஆலயம், பட்டுக்கோட்டை

கழகத்தின் சார்பில் கடிதம்

பட்டுக்கோட்டை திராவிடர் கழக நகர தலைவர் அ. காளிதாசன் 19.12.2013 அன்று பட்டுக் கோட்டை செயற்பொறி யாளர் அவர்களுக்கு எழுதிய கடிதம் விவரம்:

தஞ்சாவூர் மாவட் டம், பட்டுக்கோட்டை வட்டம், நகரம் பொதுப் பணித் துறை அலுவலக வளாகத்தில் கல்லணை கால்வாய் உபகோட்டம் பிரிவு -2 அலுவலகம் அருகில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் பொதுப்பணித்துறை யினரால் குறிப்பாக கல் லணை கால்வாய் உப கோட்டம் - 2 அலுவலக ஊழியர்களால் பிள்ளை யார் கோவில் கட்டப் பட்டு வருகிறது. அரசுக் குச் சொந்தமான நிலத் தில் எந்த மத சின்னங் களும், கோயில்களும், வழிபாட்டுத் தளங் களும் கட்டக் கூடாது என்று அரசு ஆணையும், நீதிமன்ற உத்தரவும் இருந்த போதிலும் தற் போது சட்டத்தை மீறி மேற்கண்டவாறு பிள்ளை யார் கோவில் கட்டி வருவது சட்ட விரோத மாகும். இதனால் மதக் கலவரங்களும், ஜாதியப் பிரச்சினையும், பொது மக்களுக்கு இடையூறும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகவே அய்யா அவர் கள், பொதுப்பணித் துறை அலுவலக வளா கத்தில் கட்டப்பட்டு வரும் பிள்ளையார் கோயில் கட்டுமானப் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தியும் கட்டப்பட்ட அஸ்திவா ரத்தை அப்புறப்படுத்தி யும், சட்டத்திற்குப் புறம் பாக கோயில் கட்ட காரணமாக இருந்த பொதுப் பணித்துறை யினர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இதன் நகல்

தமிழக முதலமைச்ச ரின் தனிப் பிரிவு, தஞ்சை மாவட்ட ஆட்சியர், தலைமைப் பொறியா ளர், பொதுப்பணித் துறை ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.

காவல் நிலையத்தில் யாகமா? ஆய்வாளர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலையத்தில் அந்த சரகத்தில் சமீப காலமாக கொலை கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதி கரித்து விட்டன என் றும் அதற்குக் காரணம் கெட்ட ஆவிகளின் நடமாட்டம் தான் என் றும் அந்த ஆவிகளை விரட்ட யாகம் ஒன்று காவல் நிலைய ஆய் வாளர் தலைமையில் நடைபெற்றதாக தின கரன் நாளிதழில் 15.11.2013 அன்று புகைப்படத் துடன் செய்தி வெளி யிடப்பட்டிருந்தது. இந்த செயல் அரசி யல் சட்டத்துக்கு முர ணானது என்றும் தமி ழக அரசு மற்றும் மத் திய அரசின் ஆணை களை மீறிய செயல் என்றும், ஏற்கெனவே மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இரண்டு நீதி பதிகளைக் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப் புக்கு முரணானது என் றும் மேற்படி ஆய்வா ளர்மீது தக்க நடவ டிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பணி நிறைவு பெற்ற நீதிபதியும், திராவிடர் கழக சட்டத்துறை துணைத்தலைவருமான பொ.நடராசன் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேற்படி வழக்கு 19.12.2013 அன்று நீதியர சர்கள் திரு. ஆர். சுதா கரன் மற்றும் திரு. வைத் தியநாதன் ஆகியோர் களைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப் பில் வழக்கறிஞர்கள் ந.தமிழ்மணி, மற்றும் ந. இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இரு தரப்பு வாதங் களைக் கேட்ட நீதியரசர் கள் காவல் நிலையத்தில் யாகம் நடத்திய காவல் ஆய்வாளர் மாரிமுத்து அவர்களை வருகிற 06.01.2014 அன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72360.html#ixzz2o1bs8aWm

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/72354.html#ixzz2o1cSunMA

தமிழ் ஓவியா said...


டிசம்பர் 24 - திரள்வீர்!



உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி -தன்னிடம் பயிற்சியாளராக வந்த பெண் வழக்குரைஞரிடம் நடந்து கொண்ட கேவலமான போக்கு நாற்றமெடுத்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்த மூவர் பேர்கள் கொண்ட குழுவும் விசாரணை நடத்தி குற்றச்சாற்றில் உண்மை இருக்கிறது என்று கூறி விட்டது. கங்குலி ஓய்வு பெற்று விட்டதால் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றமோ கையை விரித்து விட்டது.

சரி, அது போகட்டும்; மேற்கு வங்க அரசு என்ன செய்திருக்க வேண்டும்? வழக்கைப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட வேண்டாமா?
மேற்கு வங்க முதல் அமைச்சரின் கடமை வெறும் கண்டனத்தோடு நின்று விட்டால் போதுமா? அவர் அதிகாரத்தின் கீழ் தானே அம்மாநிலக் காவல்துறை இருக்கிறது?

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும்கூட பொதுவாக அவாளுக்கே உரிய குணத்தோடு - இறுமாப்போடு நடந்து கொள்வதைக் கவனிக்க வேண்டும்.

மேற்கு வங்க மாநில மனித உரிமைக் குழுவின் தலைவராக இருக்கும் அவர் அந்தப் பதவியிலி ருந்து தார்மீக ரீதியாக விலகி இருக்க வேண் டாமா? முதல் அமைச்சர் விலகுமாறு கோரிக்கை வைத்தும் பதவி விலக முடியாது! என்று கண்டிப் பாகக் கூறி மார்க்கண்டயர் போல பதவி நாற் காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள் ளாரே - இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி என்பது!

இதில் ஒரு வெட்கக்கேடு - முன்னால் மக்களவைத் தலைவரும் மார்க்சியவாதியுமான சோம்நாத் சட்டர்ஜி ஏ.கே. கங்குலிக்கு வக்காலத்து வாங்குவதுதான்.

குற்றம் சுமத்தப்பட்டதாலேயே கங்குலி விலக வேண்டுமா? அப்படி விலகினால், குற்றத்தை ஒப்புக் கொண்டதாகி விடுமே என்று வக்காலத்து வாங்குகிறார். அவரா பேசுகிறார்? அவரின் பூணூல் பாசம்அவ்வாறு பேசச் செய்கிறது. தனது பேரனுக்கே அச்சுப் போட்டு அழைப்பிதழ் அடித்து, பூணூல் கல்யாணத்தை சாங்கோ பாங்கமாக நடத்தியவர் ஆயிற்றே! அவர் அப்படித்தான் நடந்து கொள்வார்.

2ஜி வழக்கில்கூட ஆ. ராஜாமீது குற்றப் பத்திரிக்கைதான் தாக்கல் செய்யப்பட்டது.

அவர்மீதான வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படவில்லையே! அப்படி இருக்கும்போது இன்னும் ராஜா எப்படி அமைச்சராக நீடிக்கலாம்? என்ற கேள்வியை எழுப்பியவர் அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த இதே ஏ.கே.கங்குலிதான்.
இவர்கள் மனு தர்மச் சிந்தனையாளர்கள் ஆயிற்றே! ஒரு குலத்துக்கொரு நீதி என்ற மனப்பான்மை அவர்களின் குருதியிலேயே குடிகொண்டதாயிற்றே! அதனால்தான் ராஜாவுக்கு ஒரு நீதி - கங்குலிக்கு இன்னொரு நீதி.

ஆந்திர மாநிலத்தில் ஆளுநராக இருந்த என்.டி. திவாரி (87) என்ற பார்ப்பனரும் ஆளுநர் மாளி கையிலேயே கிருஷ்ண லீலைகளை நடத்தினார். பிரச்சினை பூகம்பமாக வெடித்துக் கிளம்பியது; அப்பொழுதுகூட தானாக முன் வந்து பதவி விலகவில்லை.

அழுத்தம் கொடுக்கப்பட்டதற்குப் பிறகுதான் அந்தப் பதவி நாற்காலியை விட்டு எழுந்திருந்தார்.

சட்டப்படி மேலும் நடவடிக்கைகளை எடுத் திருக்க வேண்டாமா!

இவ்வளவு நடந்திருந்தும் பார்ப்பன ஊடகங்கள் கங்குலி பிரச்சினையில் கமுக்கமாகவே நடந்து கொண்டு வருகின்றன. நிகழ்கால நடவடிக்கை களை அந்தந்த வாரமே அலசும் துக்ளக் இதழில், கங்குலி பற்றிய ஒரு நிகழ்வே நடந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

கொலை வழக்கில் சிக்கிய சங்கராச்சாரியார் பிரச்சினையில் பார்ப்பன ஏடுகள் எப்படி நடந்து கொண்டன என்பதைத் தெரிந்து கொண்டால் இந்த 2013ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் பூணூல் பாசத்தோடும், நோக்கத்தோடும்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை எளிதில் அறியலாம்.

இந்த உண்மைகள் எல்லாம் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் பிசிறு இன்றித் துல்லிய மாகப் புலப்படும்; பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள ஏ.கே.. கங்குலிமீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி தந்தை பெரியார் நினைவு நாளன்று காலை 11 மணிக்கு சென்னை விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திரள்வீர்! திரள்வீர்!!

Read more: http://viduthalai.in/page-2/72355.html#ixzz2o1cbwLrR

தமிழ் ஓவியா said...


நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மாத்திரைகள் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்



லண்டன், டிச. 20-இந்தி யாவின் மிகப்பெரிய மருத்துவ சவால்களுள் ஒன்றாக நீரிழிவு நோய் இருந்து வருகின்றது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இந்தி யாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டக்கூடும் என்று கணக் கிடப்பட்டுள்ளது. இது முன்னர் கணக்கிடப்பட்ட 87 மில்லியன் என்பதைவிட அதிகமாகும். டைப்-1 என்ற வகை நோய்க்குறைபாடு, உடலில் தேவையான இன்சுலின் சுரக்காதபோது ஏற்படும் ஒன்றாகும். உடலில் உள்ள இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுகோசைக் கரைக்கா விடில் டைப்-2 எனப்படும் நோய்த் தாக்கம் தோன்றும். இது கடுமை யான பிரச்சினைகளை உருவாக் கக்கூடியதாகும்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண் டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இன்சுலின் மருந்து இந்த நோய் கண்ட ஏராளமான மக்களுக்கு உயிர் காக்கும் மருந்தாகப் பயன் பட்டு வருகின்றது. ஆயினும், இந்த மருந்தை தினமும் ஊசி மூலம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் வலி தராத மாத்திரை வடிவத்தில் இந்த மருந்தினைப் பெற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயன்று வந்தனர்.

1930 ஆம் ஆண்டிலிருந்து ஆய்வில் இருக்கும் இந்த முயற்சி யில் தற்போது இந்திய விஞ் ஞானிகள் வெற்றி பெற்றுள்ள விபரம் அமெரிக்கன் கெமிகல் சொ சைட்டி இதழில் வெளிவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு நிரூபிக்கப் பட்டு பயன்பாட்டுக்கு வருமேயா னால் பாதுகாப்பற்ற ஊசிகளால் ஏற்படும் பின்விளைவுகளில் இருந் தும், தினமும் ஊசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் வலிகளி லிருந்தும் நீரிழிவு நோயாளிகள் நிவாரணம் பெறமுடியும்.

மாத்திரை வடிவில் பெறப்படும் இன்சுலின் மருந்துகள் நீரிழிவு நோயாளிகளின் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இன்னும் அதிக அளவிலான பரி சோதனைகள் இந்த கண்டுபிடிப் பில் தேவைப்படும்போதும் இந்த மாத்திரைகள் பயன்பாட்டிற்கு வரும் காலத்தை எதிர்நோக்குவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த நீரிழிவு நோய் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லிப்பி டோவ்லிங் தெரிவிக்கின்றார்

Read more: http://viduthalai.in/page-2/72370.html#ixzz2o1dOrDDF

தமிழ் ஓவியா said...


கடவுளுக்கு ஏது முகவரி?

- சிவகாசி மணியம்

வரும் ஆனா வராது என்ற ரெண்டும் கெட்டான் வசனத்தைக் கேட்டுச் சிரித்தவர்கள் உண்டு. ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்கென சொல்லப்பட்டது. பத்திரிகைகளிலும் இதுபோன்ற சொல்லாடல்கள் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு.

கடவுள் இருக்கிறாரா? என்பது கேள்வி. பெரியார் மொழியில் சொல்வதானால் இல்லவே இல்லை என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும். ஆனால் குமுதம் அரசு (18.12.2013) இருக்கிறார். ஆனால் முகவரி இல்லை என்கிறார்.

சிரிப்பவர்களுக்கு வேலை இருக்கலாம். சிந்திப்பவர்களுக்கு? அண்ட சராசரங்களையும் ஆட்டிப் படைப்பதாகச் சொல்லப்படும் ஆண்டவனுக்கா அட்ரஸ் இல்லை? அறிவுக்கும், உண்மைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? வெட்டு ஒன்று. துண்டு இரண்டு! இதுதான் பகுத்தறிவு, படித்தவரின் எதிர்பார்ப்பு!

இல்லை என்பான் யாரடா? தில்லையிலே வந்து பாரடா? என்று பாடியவர்கள் இப்போது இல்லை. ஆனாலும் அதில் கடவுளின் முகவரி இருக்கிறதே.

நடராஜப் பெருமான், காலைத் தூக்கி நின்றாடும் தெய்வம், சிதம் பரம், கடலூர் மாவட்டம் சரிதானே! இதோ இன்னொரு கடவுளின் முகவரி: மணிகண்டன் என்ற அய் யப்பன் தாய் தந்தை பெயர் விஷ்ணு, சிவன், சபரிமலை, கேரள மாநிலம். இதுபோல வெங்கடாசலபதி, பணத்தை வாரி வழங்கும் கடவுள், திருப்பதி, ஆந்திர மாநிலம்! மீனாட்சி க/பெ சொக்கன், மதுரை. முருகன் என்ற ஆண்டி, பழனி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாமே.

தூணிலும் இருப்பான், துரும் பிலும் இருப்பானாமே, அப்படி யானால் மிஸ்டர் கடவுள், இருப்புத் தூண் அல்லது துரும்பு என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப லாமே? கைலாயமும், வைகுண்டமும் கடவுள்கள் குடியிருப்பு என்பதை மறக்கலாமா! கோகுலமும், துவார கையும், பிருந்தாவனமும், யமுனை ஆற்றங்கரையும் குழலூதும் கண்ணன் வளையவரும் இடமா யிற்றே! திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட சிறீமன் நாராயணனும் முகவரி இல்லாதவன் தானா? பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே என்கிறார்களே அதுகூட பித்தலாட்டம்தானா? பரலோக சாம்ராஜ்யம் என்பதெல்லாம் தேவர்கள் நடமாட்டமில்லாத வெறும் பாலைவனம்தானா?

கண்ணீர் அஞ்சலி சுவரொட் டிகளில் இறைவனடி சேர்ந்தார் என்று எழுதுகிறார்களே அவர்க ளெல்லாம் அட்ரஸ் இல்லாதவன் காலடியிலா அடைக்கலம் ஆகிறார்கள்?

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற வர்களே. என்னிடத்தில் வாருங்கள். எல்லோருக்கும் இளைப்பாறுதல் தருகிறேன் என்ற கர்த்தர் அழைப்பை ஏற்று அவரிடத்தில் போகிறவர்கள், அட்ரஸ் இல்லாத இலக்கை நோக்கியா இன்று வரை போய்க் கொண்டிருக்கிறார்கள்? கண் மூடிப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிப் போன பக்தர்களை விட்டு விடுவோம்.

வரிசையில் நின்று, காத்துக் கிடந்து வாக்களித்து தேர்ந்தெடுக்கும் மக்கள். அவசியம் ஏற்படும் போது அரசு அலுவலகப் படிக்கட்டுகளில் ஏறினால், அடையாள அட்டை எடு, ஆதார் அட்டை காட்டு, குடும்ப அட்டை எங்கே என்றெல்லாம் கேட்கும் ஆட்சி அதிகாரத்திலுள்ள வர்கள் முகவரியே இல்லாத கடவுளை மட்டும் சந்தேகத்திற்கிட மின்றி நம்பிக் கிடக்கிறார்களே அது எப்படி? முகவரி இல்லாதவன் இருந்தென்ன இல்லாமல் போனால்தான் என்ன?

Read more: http://viduthalai.in/page2/72380.html#ixzz2o6qT3mHF

தமிழ் ஓவியா said...


குறும்பா

இயற்கை..
இறைவன்
ஆனது...!

கல்லு...
கடவுளானது!

மாண்டவன்
ஆண்டவன்
ஆனான்...!

அனைத்தும்
ஒன்றே...!

இறுதியில்
எல்லாமே
பூஜியம்!!!

######

நிரூபணம்!

தமக்கு 95 வயது வரை பெரியார் கடவுளைத் திட்டினாரே...!

கடவுள் ஏன் கோபித்துக் கொள்ளவேயில்லை...?

அவர் இல்லை என்பதை நிரூபித்து விட்டார்!

- கோ. கலியபெருமாள், மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page2/72381.html#ixzz2o6qeSTbP

தமிழ் ஓவியா said...


ராமேஸ்வரம்: கோவில் தீர்த்தமா? கழிவு நீர்த் தொட்டியா?


உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குழு அறிக்கை

மதுரை, டிச.21- ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தப் பகுதி, புனித நீராட தகுதியான, தூய்மை யான இடமாக இல்லை. கால்களைக்கூட நனைக்க முடியாது. மாசடைந்துள்ளது' என, வழக்குரைஞர் குழுவினர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கோவை வழக்குரைஞர் வெண்ணிலா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு விவரம் வருமாறு: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலைச்சுற்றி, கழிவுகள் தேங்கியுள்ளன. கழிவுகள் அக்னி தீர்த்தப் பகுதியில் கலக்கின்றன. 22 இடங்களில் தீர்த்தமாட, தரகர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அக்னி தீர்த்தத்தை சுத்தப்படுத்த வேண்டும். கோயில் புனிதத் தன்மையை காக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக் குரைஞர் குழுவினை, உயர்நீதிமன்றம் நியமித் திருந்தது. நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்திய நாதன் அடங்கிய, அமர்வுமுன், வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குரைஞர் குழுவினர், அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அதில் கூறப்பட் டுள்ளதாவது: அக்னி தீர்த்தப் பகுதியில் தேங்கிய நீர், பழுப்பு நிறமாக, துர் நாற்றம் வீசுகிறது. பழைய துணிகள் தேங்கி யுள்ளன. பக்தர்கள், புனித நீராட முடிய வில்லை, என்றனர். விடுதி கள், ஓட்டல்கள், கடை களின் கழிவுநீர் கலப்ப தாக மக்கள் கூறினர். மொத்தத்தில், புனித நீராட தகுதியான, தூய் மையான இடமாக இல்லை; கால்களைக் கூட நனைக்க முடியாது. இடையூறாக, தெரு நாய்கள், மாடுகள் திரிகின்றன. பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகம். கழிவுகளைச் சுத்திகரித்து, கடலில் விடுவதாக ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் தெரிவித்தார். அப்பணி, பெயரளவில் நடக்கிறது. சுத்திகரிக்கப்படும் கழிவுநீரை, தொலை தூர பகுதிக்கு கடத்தி, கடலில் விடலாம்.

கோயிலுக் குள் தீர்த்தமாடும் பகுதியிலும் தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை, ஜனவரி 3 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72403.html#ixzz2oA0hNHQ2

தமிழ் ஓவியா said...


மலிவான விளம்பரங்கள்!


மலிவான விளம்பரங்களால் மக்கள் மத்தியில் மலிவாக இடம்பிடிக்கலாம் என்கிற யுக்தியில் மோடி ஈடுபட்டு வருகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் இளைஞர்களை ஈர்ப்ப தற்காக அனைத்து இடங்களிலும் கிராமப் பஞ்சாயத்து முதல் மாநகரங்கள்வரை கிரிக்கெட் போட்டிகளை பி.ஜே.பி. நடத்துகிறது. போட்டியைக் காணவரும் பார்வையாளர்களுக்கு மோடி உருவம் பொறிக்கப்பட்ட காவி நிறச் சட்டை இலவசம் என்று அறிவித்து மக்களை திரட்டுகின்றனர்.

மோடி தொடக்கத்தில் தேநீர்க் கடையில் பணியாற்றியதால், அதைக் குறியீடாக்கி மகாராட்டிர மாநிலத்தில் அவர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு 10 ஆயிரம் தேநீர்க் கடைக்காரர்கள் திரட்டப்படுகிறார்களாம்.

காந்தியார் பிறந்த நாளில் குஜராத் முதலமைச்சர் மோடி என்ன செய்தார் தெரியுமா? காந்தியார் பிறந்த நாளில் (அக்டோபர் 2 இல்) காந்தி குல்லா 25 சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனை என்று விளம்பரம் செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், ஷாகாக்களின்போது அணியும் குல்லாவைத்தான் காந்திக் குல்லாய் என்று சொல்லி தள்ளுபடி விலையில் விற்றனர் - இதற்குப் பெயர் மோடி குல்லாய் என்று பெயர் சூட்டியிருப்பது எவ்வளவுப் பெரிய மோசடி! அரசுப் பணத்தில் இப்படி ஒரு பிரச்சாரம்!

மோடி குர்தா என்ற ஒரு சட்டையை விளம்பரப் படுத்தி வருகின்றனர். பருத்தி குர்தா ரூ.1895; லினன் குர்தா ரூ.1900.

முஸ்லிம்கள் அணிவது போன்ற தோற்றம் - முஸ்லிம் மக்களை ஏமாற்றிட!

(இதே மோடிதான் அவர் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் போரா பிரிவைச் சேர்ந்த ஒருவர், அன்பால் கொடுத்த குல்லாவை அணிய மறுத்தவர் என்பதை மறந்திடக் கூடாது!)
நமோ தேநீர்க் கடைகள், நமோ இனிப்புக் கடைகள் என்று தொடங்கப்பட்டுள்ளன. (நமோ என்றால் ந-நரேந்திர; மோ - மோடி என்று பொருளாம்).

இப்படியெல்லாம் விளம்பரம் செய்வதற்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தோடு (Apcoworld in
India) ஒப்பந்தம் செய்து பன்னூறு கோடி ரூபாய்கள் கொட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

டுவிட்டர் தேடுதலில் அமெரிக்க அதிபர் ஒபாமாவைத் தாண்டிவிட்டதாகக் கிளப்பப்பட்ட பொய்த்திரை கிழிக்கப்பட்டதையும் இந்த இடத்தில் நினைவு கொள்க!

மும்பையைச் சேர்ந்த அய்.டி.அய். நிபுணர் ஒருவர் எப்படியெல்லாம் இணைய தளத்தைப் பயன்படுத்தி மோடிக் கும்பல் பொய்ப் பிரச்சாரம் செய்கிறது என்பதை தொழில்நுட்ப ரீதியாக அம்பலப்படுத்தினார்; - இதற்காகவெல்லாம் இந்துத்துவாவாதிகள் வெட்கப்படமாட்டார்கள்.

கழிவறையைச் சுத்தம் செய்வதுபோல மோடியின் படத்தை வெளியிட்டு, கழிவறையைச் சுத்தம் செய்தவர் இப்பொழுது நாட்டைச் சுத்தம் செய்ய வருகிறார் என்று விளம்பரப்படுத்து கின்றனர்.

ஜப்பானில் உள்ள பேருந்து நிலையத்தின் படத்தைப் போட்டு இது குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் அகமதாபாத்தில் உள்ள பேருந்து நிலையத்தின் படம் என்று மோசடிப் பிரச்சாரம் செய்வதை என்னவென்று சொல்ல!

அவருடைய அருமைச் சகோதரர் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சவுகானோ, ஸ்பெயினில் தென்னாப்பிரிக்காவில் உள்ள சாலையையும், ரூர்கேலாவில் உள்ள சாலையையும், மத்தியப் பிரதேசத்தில் உள்ளதாக விளம்பரம் செய்து மலிவாக மக்கள் வாக்குகளைப் பறிக்கவும் செய்தார்.

இந்த மோசடிக் கும்பல்தான் இந்தியாவை ஆளவேண்டுமா? வெகுமக்கள் சிந்திக்கட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/72408.html#ixzz2oA14NwXP

தமிழ் ஓவியா said...


பொதுத் தொண்டு வேண்டின்


ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்தமட்டில்தான் மானத்தையும், காலத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத் தொண்டுக்கு வந்துவிட்டால், இவை இரண்டையும் பார்க்கக் கூடாது. - (குடிஅரசு, 30.9.1944)

Read more: http://viduthalai.in/page-2/72407.html#ixzz2oA1SYego

தமிழ் ஓவியா said...


மகாத்மாவைப்பற்றி தமிழ்நாடுவின் கவலை


மகாத்மாவைப்பற்றி தமிழ்நாடுவின் கவலை

தமிழ்நாடு பத்திரிகையானது 16-12-1927ஆம் தேதி உபதலையங்கத்தில் கண்ணோட்டம் என்னும் தலைப்பின் கீழ் ஒரு வியாசம் எழுதி இருக்கின்றது. அதில் ஸ்ரீமான் காந்தி அவர்களை மகாத்மா என்று சொல்லாமல், வெறும் காந்தி என்று சொல்வதால் தனக்குப் பெரிய கவலை ஏற்பட்டு விட்டதாகக் காட்ட வெளிவந்து, உலகம் போற்றும் உத்தமர்களில் மகாத்மா காந்தி ஒருவர் என்றும், அதை மறுப்பவர் ஒன்று இழி குணம்படைத்தவராக இருக்கவேண்டும் அல்லது மதியற்றவர்களாக இருக்கவேண்டும் என்றும் எழுதி யிருக்கிறது.

மகாத்மா காந்தி என்பவரை ஸ்ரீமான் காந்தி என்று சொல்வதால் இழிகுணப் பட்டமும், மதியற்ற பட்டமும் வந்தாலும் வரட்டும் நமக்கு அதைப்பற்றிக் கவலை யில்லை.
ஸ்ரீமான் காந்தி என்றைய தினம் மக்களுக்குள் வருணம் நான்கு உண்டு. அதுவும் அவைகள் பிறவியில் ஏற்படுகின்றன. அந்தந்த வருணத்தானுக்கும் ஒவ்வொரு தர்மம் உண்டு. அதைத்தான் அவனவன் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார் என்பதாக நாம் உணர்ந்தோமோ, அன்றே அவரிடம் மகாத்மா தன்மை அங்கு இல்லையென்று தீர்மானித்துவிட்டோம். அதிலும் சூத்திரன் என்பவன் அடுத்த ஜென்மத்தில், தான் பிராமணனாய் பிறக்கலாம் என்கின்ற அவருடைய தீர்ப்பு சுத்தசுத்தமாய் நம்மை மாற்றியது. மகாத்மா பட்டம் ஒருவரின் அபிப்பிராயத்தையும், நடவடிக்கை யையும் பொருத்துத்தான் வழங்கப்படுவதே தவிர, வெறும் உருவத்திற்காக வழங்கப்படுவதல்ல என்பதை உணர்ந்தவர்களுக்கு இவ்விஷயத்தில் கவலை ஏற்பட நியாயமில்லை. மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்கி நாம் எழுத ஆரம்பித்து இன்றைக்கு சுமார் இரண்டு மாதம் ஆகின்றது. இதுவரையும் சகித்துக் கொண்டிருந்த தமிழ் நாட்டிற்கு இந்த வாரம் திடீரென்று கவலை தோன்றி நமது, இழிகுணத்தையும் மகிமையையும் கண்டு பிடித்து எழுதியிருப்பதற்கு இரகசியமான காரணம் இல்லாமல் போக வில்லை. அதைத் தக்க சமயம் வெளியிடுவோம்.

ஒவ்வொரு பட்டமும் அவரவர்கள் அபிப்பிராயத் தாலோ, நடவடிக்கைகளாலோ ஏற்படுவதும், அவைகள் மாறும்போது மறைபடுவதும் வழக்கமாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் சிலருக்குப் பட்டம் மக்களின் அறியாமையினால் ஏற்படுவதும், விஷயம் தெரிந்த உடன் மறைந்துபோவதும் வழக்கமாக இருக்கின்றது. இது வரையில் எத்தனை பேர்கள் தலைவர்களாகி மறுபடியும் நினைப்பதற்கே அருகற்றவர்களாய்ப் போயிருக் கின்றார்கள் என்பதை யோசித்துப் பார்த்திருந்தால் தமிழ்நாடுவுக்கு இவ்விஷயத்தில் இவ்வளவு கவலை ஏற்பட்டிருக்க நியாயமே இருந்திருக்காது.

தவிர, கடவுளின் அவதாரமாகவும், மகான் தோன்றின தாகச் சொல்லப்பட்ட கிருஷ்ணன் என்பவன் கடைசி காலத்தில் ஒரு காட்டில் ஒரு வேடனால் கொல்லப்பட்டு அழுவாரற்றுச் செத்து நாறிக்கிடந்ததாக வுள்ள விஷயங்களை அறிந்திருந்தால், இம்மாதிரி காரியத்திற் காக ஒருவரை இழிகுணம் என்றும், மதியீனம் என்றும் எழுத நியாயம் கிடைத்திருக்காது என்போம். ஆனாலும், நம்முடைய இந்த சமாதானமெல்லாம் தமிழ்நாடு பத்திரிகைக்கல்ல. ஏனெனில், அது பழைய குப்பையைத் தேடிப் பார்த்து குற்றங்கள் கண்டுபிடிக்கின்ற வேலையில் முனைந்து இருக்கின்றது. ஆதலால், அதற்கு இச்சமாதானங்கள் ஒரு உணர்ச்சியையும் கொடுக்காது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதைக் கண்ணுற்றவர்கள் ஏமாறாதிருக்கவே இதை எழுதுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 25.12.1927

Read more: http://viduthalai.in/page-7/72426.html#ixzz2oA1z7wU7

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் துவேஷமாம்!

சென்னை கார்ப்பரேஷன்காரர் காங்கிரஸ் பொருட்காட்சிக்கு ரூபாய் கொடுக்கக்கூடாதென்று ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சேபித்ததற்காக அவர்களை காங்கிரஸ் துவேஷிகள் என்று பார்ப்பனப் பத்திரிகைகள் விஷமப் பிரச்சாரம் செய்கின்றன. காங்கிரஸ் பொருள் காட்சியென்ற பெயர் வைத்துக்கொண்டு, காங்கிரஸ் பெயரால் வெள்ளைக்காரர்கள் பொருள்களைக் காட்சி சாலை வைப்பதாக வெள்ளைக்கார கம்பெனியிடம் ரகசியமாய் ஒப்பந்தம் பேசி லஞ்சம் வாங்கிக் கொண்டு இவர்கள் நடத்தும் பொருட்காட்சிக்குப் பணம் கொடுக்கா விட்டால் அதற்குப் பெயர் காங்கிரஸ் துவேஷம் என்றால் அதற்கு நாம் பயப்படுவதா என்கின்றோம். பட்டாஸ் வெடி விற்றுத்தருவதாகவும், கற்பூரம் விற்றுத்தருவதாகவும் சைனாக்காரரிடம் ஒப்பந்தம் பேசி கூலி வாங்கிக்கொண்டு பண்டிகையும் பூசையும் பார்ப்பனர் ஏற்படுத்தி இருந்தால், பட்டாசு வாங்காதீர்கள் கற்பூரம் கொளுத்தி புகையாக்காதீர்கள், என்று நாம் சொன்னால் அது மததுவேஷமும் சாமி துவேஷமும் ஆகுமா என்று கேட்கின்றோம். இந்தப் பார்ப்பனர்கள் இப்படியே நம்மை மிரட்டி ,மிரட்டி கை கண்டுவிட்டாலும் நம்மில் சில கேனர்களும் வயிற்றுச் சோற்று ஆசாமிகளும் அவர்களுடன் சேர்ந்து திரிவதாலும் பார்ப்பனர் சொல்வதெல்லாம் செலாவணியாகி வருகிறது. இன்னும் அப்படி நடக்கப் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றீர்களா? சுயமரியாதைக்காக உயிர் விடப்போகிறீர்களா என்று கேட்கின்றோம்.
- குடிஅரசு - கட்டுரை - 11.12.1927

Read more: http://viduthalai.in/page-7/72426.html#ixzz2oA2Ismgw

தமிழ் ஓவியா said...

இவர்கள்தான் சாமியார்கள்

கும்பமேளாவில் கூடிய சாதுக்களிடம் காணப்பட்ட பொதுவான அம்சம் யாதெனில் சோறு, தண்ணீர், தூக்கம்கூட இல்லாமல் இருந்து விடுவர். ஆனால், நீள்போதை தரும் கஞ்சாவை புகைக்காமல் இருக்க மாட்டார்கள்.

-தினமலர் 4.3.2013 பக்கம் 16

தமிழ் ஓவியா said...


முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம்


2ஆவது மனைவி ஜீவனாம்சம் பெறத் தகுதியானவரே உச்சநீதிமன்றம் தீர்ப்பு

முதல் திருமணத்தை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணம் சட்ட விரோதமானது என்றா லும், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்காக இந்து திருமணச் சட்டப்படி இரண்டாவது மனைவி யையும் சட்டபூர்வமானவராகவே கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்திருந்த முந்தைய தீர்ப்பானது, முதல் திருமணம் குறித்த தகவலை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணத்திற்கு பொருந்தாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

"இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படா விட்டால் அது மனைவியை ஏமாற்றும் கணவனுக்கு அளிக்கப்படும் சலுகையாக ஆகிவிடும்.

எனவே, ஜீவனாம்சம் பெறுவதற்காகவாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-இன்படி (ஜீவனாம்சம்) பாதிக்கப்பட்ட பெண் சட்ட பூர்வமான மனைவியாகவே கருதப்பட வேண்டும்'' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதவ்-சபிதா பென் வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்புக்கு மாறானதாக மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-அய் உறுதியான நோக்கத்திற்காக செயல்படுத்தும் வகையில் இப்படி விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

ஆதவ் ஏற்கெனவே திருமணமானவர் என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு சபிதா பென் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண் டுள்ளார். ஆதலால், இந்து திருமணச் சட்டப்படி அந்த திருமணம் செல் லாது என தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதிகள் விளக்கம் கூறினர்.

- சட்டக்கதிர் - 2013 - டிசம்பர் பக்கம், 59

Read more: http://viduthalai.in/page3/72048.html#ixzz2oA3ZY2WD

தமிழ் ஓவியா said...

தொழிலாளி என்பவன் தன்னுடைய உடல் உழைப்பை
வயிற்றுப் பிழைப்பிற்காக விற்பவன்.

தன்னுடைய உழைப்பைத் தன்னுடைய இச்சைப்படித் தன் காரியங்களுக்கேற்ற வசதிப்படி
நடத்துபவன் முதலாளி.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


பொன்மொழிகள்


தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல் வியுறுவான். - நெப்போலியன்

###

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

###

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும், அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page5/72385.html#ixzz2oA4KlMPF

தமிழ் ஓவியா said...


ஒழிக்கப்பட வேண்டியவை


1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page5/72387.html#ixzz2oA4X8AO1

தமிழ் ஓவியா said...


தவிப்பு

எழுபத்து மூன்று திசம்பரில் எந்தை

அழவைத்தார் துன்பில் அமிழ்ந்து (24.12.1973-இல் பெரியார் இயற்கை எய்தினார்)

நெக்குருகி நெஞ்சம் நினைவுதடு மாறினரே

திக்கெட்டும் மக்கள் திகைத்து நாடே கலங்கியன்று நாற்றிசையும் துன்பத்தின்

ஊடே உழன்ற(து) உணர். முடிப்பு

இன்றில்லை நம்பெரியார்! ஏக்கப் பெருமூச்சில்

நின்றிருக் கின்றோம் நினைந்து நான்குபத்(து) ஆண்டுகளா நம்பெரி யார்மறைந்து?

கூன்நிமிர்ந் தோமாநாம் கூறு பெரியார் பெரியாரே! பேசுவோம் யாண்டும்

உரியார் நமக்கவரே! ஓர் கருஞ்சட்டைப் போர்படை கண்டார் பெரியார்

செருக்கோ டிருக்கச் செறிந்து வழுவாப் பகுத்தறிவார்! வாய்த்தாரே நம்மின்

எழுச்சிக்கும் வித்தவரே! ஏத்து அறிந்துணர்ந் தென்றும் அகத்துள் பெரியார்

நெறிநிற்போம் வாரீர்! நிலைத்து பிறந்தநாள் இன்று பெரியார்க்கு! வாரீர்!

சிறக்கவே வாழ்த்துவோம் சேர்ந்து

- பெரியார் பெருங்கவிஞர் கருவூர்பாரி

Read more: http://viduthalai.in/page5/72388.html#ixzz2oA5EcMtu

தமிழ் ஓவியா said...

தோழர் தா.பா.வும் தோழர் ஜி.ஆரும் என்ன செய்தார்களாம்?



தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா பேசிய இந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்டு) தமிழ் மாநில செயலாளர் தோழர் ஜி. இராமகிருட்டிணன் ஆகியோரும் அந்தக் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்களே - முதல் அமைச்சர் ஜெயலலிதா சொன்ன கருத்து அவர்களையும் சேர்த்துத்தானே?

மார்க்சும் - ஏங்கல்சும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அவர்கள் வெற்றி பெறவில்லையா? அந்த இடத்தில் முதல் அமைச்சருக்குப் பதில் கூற வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கலாம். அவர்கள் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு களானஜனசக்தி தீக்கதிரில் முதல் அமைச்சர் கருத்துக்கு மறுப்புக் கூறுவார்களா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/e-paper/72465.html#ixzz2oCph9LI2

தமிழ் ஓவியா said...


அஞ்சல் மூலம் ஆசீர்வாதமாம்


திருமலை ஏழுமலை யானின் ஆசீர்வாதத்தை அஞ்சல் மூலம் பெறும் திட்டத்தை அஞ்சல்துறை மீண்டும் தொடங்கியுள்ளது.

திருமலை ஏழுமலையா னுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் இனி அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

இத்திட்டம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் செயல் அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற பெயரில் பணவிடை (மணியார்டர்) அனுப்பினால் பக்தர்களின் காணிக்கைகள் திருமலையை அடைந்தவு டன் 3 நாள்களுக்கு பின் மணியார்டர் பெறப்பட்டதற் கான ரசீதும், ஏழுமலையா னின் திருவுருவப் படமும், கல்யாண உற்சவ அட்சதை யும் தேவஸ்தான கவரில் அனுப்பி வைக்கப்படும். இதற் காக தலைமை அஞ்சலகத் தில் ஆசீர்வாதம் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை ஆண்டு களாக சரிவர செயல்படாமல் இருந்த இந்த திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ள னர். மேலும் மாவட்ட வாரி யாக செயல்பட்ட இந்த திட் டம் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங் களுக்கும் விரிவுபடுத்தப்பட் டுள்ளது. முன்னர் 10 ஆயிரம் பக்தர்கள் பயன் பெற்ற இந்த திட்டத்தின்மூலம் தற்போது 40 ஆயிரம் பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.

மேலும் திருப்பதிக்கு அருகில் உள்ள ஸ்ரீகாள ஹஸ்தி கோயிலிலும் வெகு விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர் - என்று செய்தி தினமணியில் வெளி வந்துள்ளது (21.12.2013).

பக்தி என்பது ஒரு வியாபாரம், சுரண்டல் என்பது அதன் தொழில் என்று நாம் சொன்னால் பற்களை நறநற வென்று கடிப்போர் உண்டு.

இப்பொழுது திருப்பதி தேவஸ்தானம் இந்தச் செய லுக்கு என்ன நாமகரணம் சூட்டப் போகிறதோ!

துக்ளக் இதழில் திருவாளர் சோ ராமசாமி எழுதிய பதில்தான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

கேள்வி: சென்னை தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலை யான் சீனிவாச திருக்கல்யா ணம் உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக் கான பக்தர்கள் பங்கு பெற் றது பற்றியும் தங்கள் கருத்து?

சோ பதில்: இவ்வளவு கட்டணம் செலுத்தினால் வெங்கடேஸ்வரப் பெரு மாளை உங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்ற ஒரு புதிய திட்டம் வராத ஒன்றுதான் குறை! (துக்ளக் 23.4.2008 பக்கம் 17) என்று அவரே வெட்கத்தை விட்டு எழுதினாரே அதுதான் நினைவிற்கு வருகிறது.

இதையும் தாண்டி காஞ்சி (மாஜி) சங்கராச்சாரி யார் காஞ்சிபுரத்தில் 1976 மே மாதத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் ஒரு உண்மையை ஒப்புக் கொண் டார்.
கோயிலுக்குப் போவதை மக்கள் ஒரு ஃபேஷனாகக் கருதுகிறார்கள் பெரும்பா லோரிடம் வர்த்தக மனப் பான்மை காணப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

நமக்கு ஏன் வீண் வம்பு? அவாளே ஒப்புக் கொண்டு விட்டனர்.

கடைசியாக ஒரு கேள்வி இப்படி வெள்ளைக்காரன் கண்டுபிடித்த அஞ்சல் முறை யில் எல்லாம் பணம் வசூ லித்து பிரசாதம் அனுப்புவது அவாளின் எந்த ஆகமத்தில் எத்தனையாவது அத்தியா யத்தில் இருக்கிறதாம்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72461.html#ixzz2oCq0LTU4

தமிழ் ஓவியா said...


100 கோடிக்கும் அதிகமான சூரியன்களை படம் பிடிக்கும் செயற்கைக்கோள்


பாரீஸ், டிச. 22- விண்வெளியில் கோள் கள் மற்றும் சூரியன் களை ஆய்வு செய்ய அய்ரோப்பிய யூனியன் ஹப்பிள் என்ற செயற் கைக்கோளை விண் ணுக்கு அனுப்பியது. அது விண்வெளியின் அதிசயங்களை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வந்தது.

இந்த நிலையில், ஹப் பிள் செயற்கைக்கோள் தனது செயல்பாட்டை இழந்து விட்டது. எனவே, அதை காட்டிலும் பல மடங்கு சக்தி வாய்ந்த கையா என்ற செயற் கைக்கோளை அய்ரோப் பிய யூனியன், விண்ணில் செலுத்தியுள்ளது.

அந்த செயற்கைக் கோளுடன் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இது 100 கோடிக்கும் அதி கமான சூரியன்களை துல்லியமாக படம் பிடித்து அதன் தகவல் களை பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டது.

சக்தி வாய்ந்த கையா செயற்கைக்கோள் கோயுஸ் ராக்கெட் மூலம் பிரெஞ்ச் கயானா வில் உள்ள ஏவு தளத்தில் இருந்து நேற்று முன் தினம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இந்த செயற்கை கோளை உருவாக்க 1991இல் முடிவெடுக்கப் பட்டது. ஆனால், 2006ஆம் ஆண்டு தான் இதன் கட்டுமான பணி களுக்கு மற்ற நாடுகளு டன் ஒப்பந்தம் ஏற்பட் டது. உலகம் முழுவதும் உள்ள 16 நாடுகளைச் சேர்ந்த 70 தொழிற் சாலைகள் கட்டுமான பணியில் ஈடுபட்டன.

கையா செயற்கைக் கோள் ஹப்பிள் செயற்கை கோளை விட பல மடங்கு அதிக தூரத் தில் நிலை நிறுத்தப்படு கிறது.

Read more: http://viduthalai.in/e-paper/72464.html#ixzz2oCqDuLTm

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை! இவர்களை அடையாளம் காண்பீர்! ராமராஜ்யத்தைஏற்படுத்தவேண்டுமாம்! நரேந்திரமோடி கூறுகிறார்


வாரணாசி, டிச.22- நாட்டில் ராம ராஜ் யத்தை ஏற்படுத்த வேண் டும் என்றும், அதற்கு மக்களைவைத் தேர்த லில் சரியான கட்சியைத் தேர்வு செய்ய உத்தரப் பிரதேச மக்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெள்ளிக்கி ழமை வேண்டுகோள் விடுத்தார்.

உத்தரபிரதேச மாநி லம் வாரணாசியில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசிய தாவது:

மத்தியில் சரியான அரசு அமையாததற்கு உத்தரப் பிரதேச மக் களின் பங்களிப்பில் ஏற் பட்ட குறைதான் கார ணம். (நாட்டிலேயே அதி கமாக 80 மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதே சம் என்பதை கருத்தில் கொண்டு அவர் இவ் வாறு தெரிவித்தார்).

நீங்கள் ஒருநாள் சரியான அரசை தேர்வு செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக் கிறது. அப்படி தேர்வு செய்வீர்கள் என்றால், அன்றுதான் ராம ராஜ் யம் நடைமுறைக்கு வரும்.

கங்கை நதியை சுத்தப் படுத்தும் பணிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செல விடப்பட்டது. ஆனால் இன்னும் கங்கை நதி, மாசுபட்டதாகத்தான் காணப்படுகிறது.

கங்கை நதியை சுத்தப் படுத்தும் திட்டத்துக் காக எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செல விடப்பட்டது என்பது குறித்து பிரதமர் விளக்க வேண்டும் என்று பேசினார்.

ராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலையை மோடி தெளிவுபடுத்த வேண்டும்: விஹெச்பி

ராமர் கோயில் விவ காரத்தில் நரேந்திர மோடி தனது நிலையை தெளிவு படுத்திய பிறகே, பாஜகவுக்கு ஆதரவு தருவோம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரி வித்துள்ளது.

இதுகுறித்து உத்த ரப்பிரதேசத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப் பின் தலைவர் பிரவீண் தொகாடியா செய்தியா ளர்களிடம் வியாழக் கிழமை கூறியதாவது:

ராமர் கோயில் கட்டு வது குறித்து உறுதி யளிக்கும் கட்சிக்கே, விஷ்வ ஹிந்து பரிஷத் ஆதரவு அளிக்கும். ராமர் கோயில் கட்டுவது குறித்து தேர்தல் அறிக் கையில் பாஜக வெளி யிட வேண்டும்.

எங்கள் அமைப்பின் ஆதரவை விரும்பினால், இந்த விஷ யத்தில் மோடி தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் பிர சாரங்களில் ராமர் கோயில் குறித்த விவ ரங்களை மோடி பேசா மல் இருப்பது வருத்த மளிக்கிறது என்று பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/72466.html#ixzz2oCqUpAPZ