Search This Blog

18.12.13

ஆருத்ரா தரிசனக் கூத்து!

          ஆருத்ரா தரிசனமாம்


ஏடுகளை எடுத்தால் இந்த ஆருத்ரா தரிசனக் கூத்துதான் - இணைப்பு இதழ்கள் (Supplementary)  வேறு.

அச்சுப் போட்டு வெளியிடுகின்ற முதலாளிகளுக்கும் சரி, பத்திரிகை ஆசிரியர்களுக்கும் சரி - இந்தப் புராணக் கதைகள் அக்மார்க் முத்திரைப் பொய் சரக்கு என்பது வெகு நன்றாகவே தெரியும்.

ஆனாலும், நாய் விற்ற காசு குரைக்காது என்ற பழமொழியை முற்றும் உணர்ந்த (அஞ்)ஞானிகளாக இந்தக் கேடுகெட்ட தொழிலைச் செய்கின்றனர். உண்மையைச் சொல்லவேண்டுமானால், நாணயமான அரசுகள் இங்கு நடக்குமானால், மக்களிடம் பொய்யை விற்று கோணிப் பைகளில் பணத்தைத் திணித்துக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தைக் கைது செய்து நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டும்.

விண்ணில் 27 நட்சத்திரங்களில், திரு என்ற அடைமொழிக்கு உரியவை இரண்டே இரண்டு நட்சத்திரங்களாகும். ஒன்று திருவோணம், இன்னொன்று திருவாதிரையாம். திருவோணம் திருமாலுக்கும், திருவாதிரை நடராசருக்கும் உகந்த திருநாள்களாம். (எதிலும் சைவ, வைணவப் போட்டிகளே!).

தொடக்கத்திலேயே ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். விண்ணில் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எழுதுகிறார்களே - அப்படி எழுதுவதற்குக் கொஞ்சமாவது வெட்கப்படவேண் டாமா? விண்ணில் இலட்சசோப லட்சம் நட்சத்திரங்கள் இருக்கின்றன.

இந்தப் புராண புளியோதரை பத்திரிகை முதலாளிகளும், ஆசிரியர்களும் 27 நட்சத்திரங்கள் இருப்ப தாகக் கூறுகிறார்களே - இதைப் படிக்கும் மக்கள் எள்ளி நகையாடவேண்டாமா?

மார்கழி மாதத்தில் இந்தத் திருவாதிரை நாளில் நடராசக் கடவுள் திருநடனம் ஆடுவதுதான் இந்த ஆருத்ரா தரிசனமாம். அந்நாளில் நோன்பு இருந்து நடராஜனைத் தரிசித்தால் நல்லது நடக்குமாம்.

வருடாவருடம் இந்த ஆருத்ரா தரிசனம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பக்தர்களும் உண்ணா நோன்பிருந்து நடராஜனை வழிபட்டுத்தான் வரு கிறார்கள். நோய்கள் தீர்ந்ததா? வறுமைதான் ஒழிந்ததா? நடராஜக் கடவுள் உள்ள சிதம்பரத்திலே நோய்கள் தீர்க்கும் மருத்துவமனைகளோ, மருந்துக் கடைகளோ இருக்கலாமா? அப்படி இருந்தால் அவை நடராஜக் கடவுளை அவமதிப்பது அல்லாமல் வேறு என்னவாம்?

இந்தக் கோணத்தில் எந்தப் பக்தர் சிந்திக்கிறார் சொல்லுங்கள் பார்ப்போம்.

சிதம்பரம் நடராஜன், அய்ந்தொழிலையும் செய்யக் கூடியவராம். படைத்தல், காத்தல், அழித்தல், நிறுத்தல், விடுத்தல் இவைதான் அவன் செய்யும் அய்ந்தொழில்களாம்.

இந்த அய்ந்துத் தொழில்களையும் சிவனாகிய நடராஜன் செய்வது உண்மை என்றால், அதிலும் குறிப்பாகக் காத்தல் தொழிலை செய்வது நிசமே என்றால், மக்கள் பசி, பட்டினியில் கிடந்து உழலுவது ஏன்? நோய் நொடிகளில் கிடந்து தவிப்பது ஏன்? அப்படி என்றால், இந்தக் கடவுள் தனது காத்தல் தொழிலைச் செய்யத் தவறிய குற்றவாளி என்று ஆகிவிடவில்லையா?

இதில் உள்ள முரண்பாட்டையும் கவனிக்கத் தவறக்கூடாது.

காத்தல் தொழிலைச் செய்வது கடவுள் செயல் என்றால், அவனே எப்படி அழித்தல் தொழிலைச் செய்ய முடியும்? ஒரு பொருளை செய்தவனே, அதனை உடைத்துக் கொண்டு இருந்தால் அவனுக்குப் பெயர் கிறுக்கன் அல்லது பைத்தியக் காரன் என்றுதானே சொல்லவேண்டும்.

இதே ஆன்மீகவாதிகள் இன்னொன்றையும் சொல்கிறார்கள். படைத்தல் தொழிலைச் செய்பவன் பிரம்மன் என்றும், காத்தல் தொழிலைச் செய்பவன் விஷ்ணு என்றும், அழித்தல் தொழிலைச் செய்பவன் சிவன் என்றும் எழுதி வைத்துள்ளனர்.

ஆனால், இந்த ஆருத்ரா சங்கதியின் கதையோ இவற்றையெல்லாம் சிவன் மட்டுமேதான் செய்கிறான் என்று ஏகபோக உரிமையைச் சிவனுக்கே கொடுத் துள்ளனர்.

சிவனின் இந்தக் கதையை வைணவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா? என்பதைக் கேட்டுச் சொல் லுங்கள்.

அட முரண்பாடே, உன் பெயர்தான் அர்த்தமுள்ள இந்து மதமா? ஆருத்ரா விழா சிதம்பரத்தில் விசேஷம் தான். அந்த சிதம்பரம் கோவில் உரிமைப் பிரச் சினையை நீதிமன்றம்தானே தீர்க்கவேண்டியுள்ளது.

ஆருத்ரா கதாநாயகனான நடராஜன் நிலை பரிதாபமே!

பக்தர்களை நினைத்து இரங்கவும் வேண்டி யுள்ளது

                            ------------------------------------”விடுதலை” தலையங்கம் 18-12-2013


28 comments:

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.- காங்கிரசுடன் கூட்டணி இல்லை தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சென்னை, டிச.18- பி.ஜே.பி. மற்றும் காங் கிரசுடன் கூட்டணி கிடையாது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பேட்டி விவரம் வருமாறு:

கலைஞர் அவர்கள் நேற்று (17.12.2013) காலை தமது இல்லத்திலிருந்து அண்ணா அறிவாலயத்திற்குப் புறப்பட்டபோது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர்: லோக்பால் மசோதா இன்றையதினம் (17.12.2013) நாடாளுமன் றத்தில் விவாதிக்கப்படுகிறது. அந்த மசோதாவை தி.மு. கழகம் ஆதரிக்குமா? கலைஞர்: நாடாளுமன்ற தி.மு.கழகக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, இந்த மசோதா விவாதத்திற்கு வருகின்ற நேரத் தில் எப்படி முடிவெடுக்க வேண்டு மென்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அந்த முடிவு எடுத்த பிறகு உங்களுக்கும் தெரியும்.

செய்தியாளர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் இன்று (17.12.2013) அளித்த பேட்டியில், தமிழகத்தில் உங்கள் தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: மகிழ்ச்சி.

செய்தியாளர்: நேற்றையதினம் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞான தேசிகன் அளித்த பேட்டியின்போது, தி.மு.கழகம் அய்க்கிய முற்போக்குக் கூட் டணியிலே தற்போது இல்லை என்றும் ஏற்கெனவே விலகி விட்டதாகவும், வரு கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க.விற்கு ஆதரவு கேட்டு எந்தவித மான கடிதமும் தான் எழுதவில்லை என்றும் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: அதிலிருந்தே நீங்களே தெரிந்து கொண்டிருக்கலாம். காங்கிரசை விட்டு விலகியதற்கு வேறு காரணம் தேவையில்லை என்று ஞானதேசிகன் அவர்களே சொல்லிவிட்டதற்காக நன்றி.

செய்தியாளர்: தமிழகத்தில் காங் கிரஸ், பா.ஜ.க.வுடன் சேராது, தி.மு.கழகம் தனித்துப் போட்டியிடப் போகிறதா?

கலைஞர்: ஆமாம். ஏற்கெனவே எங் களுடன் உள்ள தோழமைக் கட்சி களுடன் சேர்ந்து போட்டியிடுவோம்.

செய்தியாளர்: பா.ஜ.க. சார்பில் நேற்றைய தினம் பேட்டியளித்த நிர்மலா சீத்தாராமன், தி.மு.கழகம் கூட்டணிக் காக அழைப்பு விடுத்தால் பரிசீலிப்போம் என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: பா.ஜ.க.வை நாங்கள் அழைப்பது என்று எதுவும் முடிவு செய்யவில்லை.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/72203.html#ixzz2nptN7FRt

தமிழ் ஓவியா said...


செய்தியும், சிந்தனையும்!


பற்றாக்குறை

இந்தியாவில் 9.55 இலட்சம் செவி லியர்கள் பற்றாக்குறை

(படித்துவிட்டு வேலையில்லாத செவிலியர்கள் ஏராளம் இருக்கும் போது, இந்தப் பற்றாக்குறையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண் டாமா?).

குழந்தைகளுக்கு

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நிதி திரட்டிட ஜனவரி 5 ஆம் தேதி சென்னையில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு.

(கர்ம பலன் என்று நினைக் காமல், இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வோர்க்குப் பாராட்டுகள், வெற்றி பெற வாழ்த்துகள்!)

வெட்டு-குத்து

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த மாநிலக் கல்லூரி மாணவர்களை வெட்டிய பச்சையப்பன் கல்லூரி மாண வர்கள் கைது.

(மாணவர்கள் படிக்கச் செல்கிறார் களா? அல்லது ரவுடிசத்தை அரங் கேற்றச் செல்கிறார்களா? நம் நாட்டின் கல்வி முறைகள் ரவுடிசத்தைத்தான் வளர்க்கிறதோ? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும்!)

நீதிமன்ற அவமதிப்பு

ஆயுள் கைதி ஒருவரை விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றம் உத்தர விட்டும், விடுதலை செய்யாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு ஆளாகி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தாக்கீது (நோட்டீசு) அனுப்பியுள்ளது.

(வேலியே பயிரை மேய்கிறது என் பார்களே, அது இதுதானோ! அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி!)

பார்வையற்றோர்

அண்ணா மேம்பாலச் சந்திப்பு அருகே நடைபாதையில் திடீர் என்று முளைத்த கட்-அவுட்டுகளால் பார்வையிழந்தோர் தடுக்கி விழுந்து காயமடைந்தனர்.

(ஆளும் கட்சி சார்பான கட்-அவுட்டு களுக்கு கெட்-அவுட் கிடையாது. அர சாங்கத்தின் கோழி முட்டை, குடிமக் களின் குழவிக் கல்லையும் உடைக்குமே!).

கொடி கட்டி

பண்ருட்டியையடுத்த ஆ.நத்தம் பகுதி யில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யினர் கொடிக்கம்பம் அமைத்தபோது வன்னிய சமுதாயத்தினர் எதிர்த்தனர்.

(தாழ்த்தப்பட்டவரும், பிற்படுத்தப் பட்டவரும் ஒன்றிணைந்து போரா டினால்தான் சமூகநீதி பாதுகாக்கப் படும் என்ற அடிப்படையை, தலை வர்கள் போதிக்கவேண்டாமா? இங்கு எங்களுக்கு மட்டும்தான் கொடிகட்டிப் பறக்கிறது என்று எண்ணலாமா?).

யானைகள் முகாம்

புதுச்சேரி நாகூர் தர்கா யானை களும், யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்படுகின்றன.

(பரவாயில்லை, இதிலாவது மதச் சார்பின்மை கடைப்பிடிக்கப்படுகிறதே! ஆனாலும், கஜேந்திரா பக்தி சமாச் சாரம் இதற்குள் புதைந்து கிடக்கிறது. ஆன்மீக தி.மு.க. ஆட்சியல்லவா!)

கும்பாபிஷேகம்

115 ஆண்டு வயதுள்ள சென்னை சட்டக் கல்லூரி கட்டடம் சேதமடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது.

(அதனால் என்ன, குழவிக் கல்லு சாமி குடியிருக்கும் கோவில்களைப் புனரமைத்து க்ஷிரணத் தோரண பூர்ண கும்பாபிஷேகம்தானே முக்கி யம், அவசியம், அவசரம்!)

Read more: http://viduthalai.in/e-paper/72205.html#ixzz2nptZ7OEa

தமிழ் ஓவியா said...


சபாஷ், சரியான நடவடிக்கை!


உயர்நீதிமன்ற நுழைவாயிலில் உள்ள அம்மன் கோயிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை,டிச.18- உயர் நீதிமன்ற நுழைவாயிலில் உள்ள அம்மன் கோயிலை இடிக்க நீதிபதிகள் உத் தரவிட்டனர்.

சென்னையில் உள்ள சாலையோரக் கோயில் களை இடிக்கக் கோரி யும், உயர்நீதிமன்ற நுழை வாயிலில் சாலையோரம் உள்ள ஒரு மாரியம்மன் கோயிலை இடிக்கக் கோரியும் டிராபிக் ராம சாமி என்பவர் உயர்நீதி மன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய் தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து, சாலையோ ரக் கோயில்களை இடிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அம் மன் கோயிலை இடிக் கும்படி அதன் அறங் காவலர் காந்தா சீனிவா சனுக்கு மாநகராட்சி தாக்கீது அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி காந்தா சீனிவா சன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வரும்போது அவர் குணமடைய இந்த அம்மன் கோயில் கட் டப்பட்டது. அதன்பிறகு அவர் குணமடைந்து சென்னை வந்தார். அவர் நினைவாக இந்தக் கோயில் உள்ளது. இதை இடிக்கக் கூடாது. மாநக ராட்சி அனுப்பிய தாக் கீதை ரத்து செய்யவேண் டும் என்று கூறியிருந் தார்.

இந்த வழக்கை நீதி பதிகள் அக்னிகோத்ரே, சசிதரன் ஆகியோர் விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:

சாலை யோரம் உள்ள அனைத்துக் கோயில் களை யும் இடிக்க உத் தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப் படையில் தான் மனுதார ருக்கு மாநகராட்சி தாக் கீது அனுப்பியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். இந்தக் கோயிலை மாநக ராட்சி இடிக்கலாம்.
இந்தக் கோயில் அனு மதியில்லாமல் கட்டப் பட்டுள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது. உயர்நீதிமன்ற வளாகத் தின் சுற்றுச்சுவரை யொட்டி கோயில் உள் ளது. கோயில், மசூதி, கிறிஸ்தவ கோவில் ஆகியவற்றை தனியார் இடத்தில் வைக்க உரி மையுள்ளது. பொதுமக் களை பாதிக்கும் வகை யில் வைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள் ளது. மதரீதியான கட்ட டங்களை பொது இடத் தில் கட்ட யாருக்கும் உரிமையில்லை. எனவே இந்த வழக்கை தள்ளு படி செய்கிறோம்.
- இவ்வாறு நீதிபதி கள் தீர்ப்பில் கூறியுள் ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72204.html#ixzz2nptlqmPB

தமிழ் ஓவியா said...


மலேசியாவில் தமிழர் தலைவரின் நிகழ்ச்சிகள்



கோலாலம்பூர், டிச.18- மலேசியத் திராவிடர் கழகத் தின் சார்பில் 67 ஆம் மூவாண்டு தேசியப் பேராளர் மாநாடு வரும் 21, 22 ஆகிய தேதிகளில், கோலாலம்பூர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகிறார். டிசம்பர் 21 இல் தொடங்கும் மாநாட்டை, ம.இ.கா தேசியத் தலைவரும், இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோசிறீ ஜி.பழனிவேல் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியின் தொடக்கமாக காலை 9 மணி அமர்வில், தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். தொடர்ந்து ம.இ.கா தேசியத் உதவித் தலைவர் டத்தோசிறீ சி.பாலகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

அதேநாளின் பிற்பகல் நிகழ்ச்சிகள் இரவு 7 மணி யளவில் டைனாஸ்டி தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ம.இ.கா. தேசியத் துணைத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோ சிறீ டாக்டர் எஸ்.சுப்பிர மணியம் தொடங்கி வைக்கிறார். நிகழ்வில் மலேசிய இந்திய தெற்காசிய நாடு களுக்கான கட்டமைப்புச் சிறப்புத் தூதர் டத்தோசிறீ உத்தாமா ச.சாமிவேலு, மருத முத்து அவர்களின் படத்தைத் திறந்து வைத்து உரை நிகழ்த்துகிறார். மக்கள் ஓசை பத்திரிகையின் நிர்வாக இயக் குநரும், ம.இ.கா. மத்திய செய லவை உறுப்பினருமான சுந்தர் சுப்பிரமணியம் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

இந்த அமர்விலும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கின்றார். தொடர்ந்து மலேசியத் திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் பெரும்பங்காற்றி, கழகத் தின் கட்டடம் உருவாக, உண்டியல் ஏந்தி நன்கொடை பெற்ற தோழர்களுக்குச் சிறப்பு செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 22 ஞாயிறன்று இரண்டாம் நாள் மாநாடு தொடங்குகிறது. இதில் முக்கியத் தீர்மானங்களும், பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன. கழகத்தின் மாபெரும் சொத்தான செராஸ், தாமான் செமிலிங் பெர்காசாவில் உள்ள இயக்கக் கட்டடமான விஸ்மா மருதமுத்து கட்டடத்தை மீட்டுச் சாதனைப் புரிந்த மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் பி.எஸ். மணியம் அவர்கள் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். அவருடன் இணைந்து கே.ஆர்.அன்பழகன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகள் நல்ல வண்ணம் செய்திகள் வெளியிட்டு பரப்புரை செய்து வருகின்றன. தொடர்ந்து டிசம்பர் 23 ஆம் நாளன்று பேராக் மாநிலத்தில் நடைபெறும் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி, மாநிலத் தலைவர் கி.கூத்தரசன் தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார். மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் பி.எஸ்.மணியம், கே.ஆர்.அன்பழகன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் பலர் இதில் பங்கேற்கின்றனர். டிசம்பர் 24 ஆம் நாளன்று பினாங் மாநிலத்தில் நடைபெறும் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி, மாநிலத் தலைவர் ச.தா.அண்ணாமலை தலைமையில் நடைபெறு கிறது. இந்நிகழ்ச்சியிலும் தமிழர் தலைவர் அவர்கள் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். இந்நிகழ்வில் பினாங் மாநிலத் துணை முதலமைச்சர் ப.இராமசாமி, டத்தோ புலவேந்திரன், பி.எஸ்.மணியம், கே.ஆர். அன்பழகன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற் கின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72208.html#ixzz2nptwZ8VG

தமிழ் ஓவியா said...


பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள்


புதுடில்லி, டிச.18- பழங் குடியினர் பட்டியலில் நரிக்குறவர் ஜாதியைச் சேர்க்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்கள வையில் செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்யப் பட்டது. இந்த மசோ தாவை மத்திய பழங்குடி யினர் விவகாரத் துறை அமைச்சர் கிஷோர்சந் திர தேவ் அறிமுகம் செய்தார்.

இந்த சட்டத் திருத்த மசோதாவில், பழங்குடி யினர் பட்டியலில் தமி ழகத்தில் இருந்து நரிக் குறவர் ஜாதியும், சட் டீஸ்கரில் இருந்து தனு ஹர், தனுவார் ஆகிய இரு ஜாதிகளும் சேர்க் கப்பட்டுள்ளன.

இதையடுத்து, முறைப் படி இந்த மசோதா மக்களவையிலும், அதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, குடியரசுத் தலை வர் அதற்கு ஒப்புதல் தெரிவிப்பார். அதன் பிறகு, மேற்கண்ட மூன்று ஜாதிகளும் பழங்குடியி னர் பட்டியலில் சேர்க் கப்படுவதற்கான ஆணை மத்திய அரசிதழில் வெளியாகும்.

தற்போது தமிழகத் தில் பழங்குடியினர் பட் டியலில் 36 ஜாதிகளும், சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டி யலில் 42 ஜாதிகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/72207.html#ixzz2npu7bQ8X

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேட்டி


சென்னை, டிச. 18- தி.மு.கழகத் துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி தொடரும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநி லத் தலைவர் பேராசிரியர் கே. எம்.காதர் மொய்தீன் அவர்கள் கூறியுள் ளார்.

திமுக தலைவர் கலைஞர் அவர் களை நேற்று (17.12.2013) காலை அவரது இல்லத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் சந்தித்தார்.

அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் வடக்கு கோட்டை யார் வ.மு.செய்யது அஹமது, மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், திருப்பூர் எம்.ஏ.சத்தார், கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர்கள் மில் லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மா யில், ஆப்பனூர் ஜபருல்லா, எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கீ, வட சென்னை மாவட்டத் தலைவர் எம். ஜெய்னுல் ஆப்தீன், செய லாளர் ஏ.எச்.முஹம்மது இஸ் மாயில், தென்சென்னை மாவட் டத் தலைவர் பூவை எம்.எஸ். முஸ்தபா, செயலாளர் எச்.ஹைதர் அலிகான், தேசிய கவுன்சில் உறுப்பினர் கே.டி.கிஸர் முஹம் மது ஆகியோர் உடன் இருந்த னர்.

15ஆம் தேதி தி.மு.க. பொதுக் குழு எடுத்த முடிவிற்கும், நிறை வேற்றிய தீர்மானங்களுக்கும், கலைஞர் ஆற்றிய உரைக்கும் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் நன்றி தெரிவித்து, திராவிட முன்னேற்றக் கழகத் தோடு இந்திய யூனியன் முஸ் லிம் லீக் நேற்றும் இருந்தது - இன்றும் இருக்கிறது - நாளை யும் இருக்கும் என உறுதி கூறினார்.

இதற்கு பதிலளித்த கலைஞர், தி.மு.க. பொதுக் குழு முடிவிற்கு பின் எங்களை முதலில் சந்தித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்த கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

நடைபெறவுள்ள நாடாளு மன்றத் தேர்தலில் தமிழக முஸ் லிம் சமுதாயத்தை ஒருமுகப் படுத்தும் நோக்கோடு, வரும் 28ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மஹல்லா ஜமாஅத் துக்கள், பள்ளி வாசல் முத்தல் லிகள், அரபிக் கல்லூரிகளின் பேராசிரியர்கள், இமாம்கள், உலமாக்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் நோக்கோடு திருச்சியில் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்க உள் ளோம் என பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் குறிப்பிட் டார். அம்மாநாட்டிற்கு கலை ஞர் வாழ்த்துத் தெரிவித்தார்.

கலைஞரைச் சந்தித்து விட்டு வெளியில் வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரை பத்தி ரிகையாளர்கள் பேட்டி கண் டனர். அவர்கள் கேட்ட கேள்வி களுக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அளித்த பதில் கள் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்த நோக்கம் என்ன?

பதில்:- தி.மு.க. பொதுக் குழு 15ஆம் தேதிகூடி நிறை வேற்றிய தீர்மானத்திற்கு வாழ்த்துக்களை சொல்வதற்காக இங்கு வந் தோம். கலைஞருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தோம். அவர் அதற்கு நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...

கேள்வி:- பா.ஜ.க. வோடு தி.மு.க. செல்லாது என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூட்டணி குறித்து பேசுவதற்கு குழு அமைத்திருப் பதாகவும், அது இந்த விஷயம் குறித்து முடிவெடுக்கும் என்று சொன்னாரே?

பதில்:- தி.மு.க. பொதுக் குழு கூட்டத்தில் கலைஞர் தெளி வாக அறிவித்து விட்டார். காங் கிரஸோடும், பாரதீய ஜனதா கட்சியோடும் கூட்டு இல்லை என்று. வாஜ்பாய் பதவியில் இருந்த காலத்தோடு பா.ஜ.க. உடனான உறவு முடிந்துவிட் டது என தெளிவாக அறிவித்த பின்பும் இந்த சந்தேகம் தேவை யில்லாதது. சிலர் ஆசைப்படு வதுபோல், கனவு காணுவதைப் போல் தி.மு.க., பா.ஜ.க. உறவு நிச்சயம் ஏற்படாது.

கேள்வி:- காங்கிரசோடு உறவு இல்லை என்று தி.மு.க. முடிவு அறிவித்துவிட்டது. ஆனால் அந்த காங்கிரசோடு நீங்கள் உறவு சேர்வது உங்களு டைய கட்சியின் நிலைப்பாட் டிற்கு மாற்றமில்லையா; ஏனெ னில் உங்களுடைய தேசிய தலை வர் இ.அகமது மத்தியில் காங் கிரஸ் தலைமையிலான கூட் டணி அரசில் அமைச்சராக அங்கம் வகிக்கிறாரே?

பதில்:- இதில் எந்த குழப்ப மும் இல்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய கட் சியாக இருந்தாலும் தேர்தல்கள் குறித்து மாநில அளவில்தான் கூட்டணி குறித்து முடிவெடுத்து வருகிறது. அந்த அடிப்படை யில் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியி லும், தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியி லும் நாங்கள் இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்தி வந் துள்ளோம். எங்களுடைய தேசி யத் தலைவர் மத்திய அமைச்சர் இ.அஹமது கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர். ஆகவே இதில் எந்த பாதிப்பும், பிரச்சினையும் இல்லை.

கேள்வி:- நான்கு மாநில தேர் தலில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றதே. இது மோடி அலை தானே. இந்த வெற்றி, நாடாளு மன்றத் தேர்தலில் ஒரு தாக் கத்தை ஏற்படுத்தாதா?

பதில்:- மோடி அலை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. பா.ஜ.க. பிறந்து வளர்ந்து காலூன்றிய மாநிலங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. இது நாடாளுமன்றத் தேர்தலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

கேள்வி:- தி.மு.க. தலைமை யில் மூன்றாவது அணி அமை யுமா?

பதில்:- தமிழகத்தை பொறுத் தவரையில் தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரண்டு அணிகள்தான். அகில இந்திய அளவில் மூன்றா வது அணி அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. டில்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் தனது முதல்வர் வேட்பாளரை அறிவித் தது.

பா.ஜ.க.வும் தனது முதல்வர் வேட்பாளரை அறிவித்தது; ஆனால் யாரும் எதிர்பாராமல் ஆம் ஆத்மி கட்சித் தலைவரை முதல்வராக்க காங்கிரசும், பா.ஜ. க.வும் இன்று வலியுறுத்துகின் றன. இந்த நிலைதான் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஏற்படும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-8/72254.html#ixzz2nsfGwyRW

தமிழ் ஓவியா said...

வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது! ஆசிரியர் தாத்தா பிறந்த நாள் 02.12.2013



மாணவப் பருவத்தில் ஆசிரியர் தாத்தா

எனது நான்காம் படிவம் முதல் ஆறாம் படிவம் வரை எனக்கு அரசு உதவித் தொகையில் சம்பளம் போக இரண்டு ரூபாய்கள் மிஞ்சும். ரூபாய் ஆறரை சம்பளம் போக ரூபாய் இரண்டரை மிஞ்சும். (10 ரூபாய் சம்பள ஸ்காலர்ஷிப்) எங்கள் பள்ளியின் கடைநிலை ஊழியர் தோழர் தனபால் அந்த மாத காசோலையை (செக்கினை) உதவித் தொகைக்காக வங்கியில் மாற்றி வருவார்.

அவருக்கும் ஒரு சிறு தொகை தவறாது அதில் கொடுப்பேன் -மனமுவந்து.- அவர் தொடக்கத்தில் மறுத்தாலும்கூட - இந்த உதவித்தொகை எனக்குக் கிடைக்க என்னுடைய ஆசிரியர், தலைமையாசிரியர் பரிந்துரை காரணம் என்றாலும், பலர் போட்டியிட இதனை ஒரேயொரு மாணவருக்குத் தந்ததற்கு ஒரு நிகழ்ச்சி காரணம் என்று சொல்ல வேண்டும்.

ஒரு நாள் (D.E.O) மாவட்டக் கல்வி அதிகாரி சோதனை (இன்ஸ்பெக்ஷன்); அவர் தமிழ் மொழி இனப்பற்றாளர் - திரு. முருகேச முதலியார் என்பது அவரது பெயர். சென்னையிலிருந்து வந்தவர். ஒவ்வொரு வகுப்புகளையும் சுற்றிப் பார்ப்பார்!

சில வகுப்புகளுக்குள்ளும் சென்று ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கண்காணிக்க சிறிது நேரம் தங்கி மாணவர்களையும், ஆசிரியரையும் கேள்வி கேட்டு வெளியேறும் கடமை வீரர் அவர். எல்லா ஆசிரியரின் வகுப்பறைகளும், துப்புரவாகவும், துடிதுடிப்புடனும், எச்சரிக்கையுடனும் அவரது வருகையை எதிர்நோக்கியிருந்தன.

இரண்டு நாள் தொடர் இன்ஸ்பெக்ஷன். இரண்டாவது நாள் அவர் எங்கள் வகுப்பிற்கு வந்தார்.- உள்ளூர் பிரமுகர் திரு. அழகானந்த முதலியார் கட்டித் தந்த அழகானந்த கூடம்.

அந்த வகுப்பறையில் எங்கள் தமிழாசிரியர் திரு. பழனியாண்டி (முதலியார்) தமிழ் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.

(டர்பனுடன் இருப்பார் ஆசிரியர்) நுழைந்தார் கல்வி அதிகாரி. அமர்ந்தார் நாற்காலியில். வகுப்பு நடைபெறுவதைத் தொடரச் சொன்னார். முன்பே நடத்திய பாடத்தையே நடத்தினார் எங்கள் ஆசிரியர்; கேள்வி கேட்டாலும் மாணவர்கள் தெளிவாகப் பதில் சொல்ல வாய்ப்பு அதனால் சிறப்பாக ஏற்படுமென்பதால்!

கல்வி அதிகாரி திடீரென்று மாணவர்களாகிய எங்களை நோக்கி திருக்குறளில் எத்தனை குறள்கள் உங்களுக்குத் தெரியும்? தெரிந்த மாணவர்கள் யாரேனும் சொல்லுங்கள் என்றார். ஓர் நிமிடம் அமைதி. தமிழாசிரியரேகூட எதிர்பார்க்காத கேள்விக்கணை அது! ஆசிரியர் எங்களைப் பார்த்தார்; உடனே அச்சமின்றி, துணிவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, சில குறள்பாக்களை மடமடவென்று உரத்த குரலில், மேடையில் பேசுவது போல சொல்லத் தொடங்கினேன்.

அப்போது எனக்கு எந்தத் திருக்குறள் அதிகாரமும் முறையாக 10 தொடர்ந்து தெரியாது என்றாலும், நான் நமது மேடைகளில் பல சொற்பொழிவாளர்கள் கூறுவதைக் கேட்டும் குடியரசு, திராவிட நாடு, விடுதலை போன்ற நமது கொள்கை ஏடுகளில் வரும் கட்டுரையின் மேற்கோள்களைப் படித்து மனத்தில் பதிய வைத்திருந்தவற்றையே ஒப்புவித்தேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் என்னும் குறள், எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் என்ற குறள்,

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் என்ற குறள்-, இப்படி சில குறள்களைக் கூறினேன்.

மகிழ்ந்தார்; பாராட்டினார்; போதுமென்றார்; என்னைக் காப்பாற்றினார் மாவட்டக் கல்வி அதிகாரி! வகுப்பிலுள்ள மற்ற மாணவர்கள் மவுனமாகிவிட்ட நிலையில், பளிச்சென்று எழுந்து நான் குறள்பாக்களைக் கூறியது பற்றி எங்கள் தமிழாசிரியர் அவர்களுக்கும் மெத்த மகிழ்ச்சி.

மாவட்டக் கல்வி அதிகாரி திரு. முருகேச முதலியார் உடனே உன் பெயர் என்னவென்று கேட்டார். பிறகு சென்றுவிட்டார். அவர் சென்ற நிலையில் அடுத்த நாள் எங்கள் பள்ளி மாணவர் உதவித்தொகை பற்றிய குறிப்புகள் கொண்ட கோப்புகளை அவர் காண நேர்ந்தது;

அவர் முடிவெடுக்க வேண்டிய அதிகாரி என்பதால் -எனது பெயரை அவர் மிக நன்றாக நினைவில் கொண்டதன் பேரிலும், எனக்கே அந்த உதவித்தொகையை (ஸ்காலர்ஷிப்) அளிக்க ஆணை பிறப்பித்தார்.

நான்காம் படிவத்திலிருந்து பள்ளியிறுதி வகுப்பான 6ஆ-வது படிவம் (S.S.L.C. Sixth form) வரை மூன்று ஆண்டுகளும்- அது தொடர்ந்து கிடைத்தது. காரணம், ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்த மாணவன் என்ற கூடுதல் தகுதியும் அதற்குரியவனாக என்னை ஆக்கிற்று. வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது; அதற்கு மூல காரணம் திராவிட இயக்கச் சார்பே ஆகும்.

நூல்: அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம்-1

தமிழ் ஓவியா said...

முதல் மதிப்பெண்ணுக்கு மோதாதீர்!

- சிகரம்

முதல் மதிப்பெண் மோகம், வேகம், தாகம், கிடைக்காவிடின் சோகம் என்பவை பெற்றோர், நிர்வாகம், மாணவர் என்ற முத்தரப்பிலும் முனைந்து நிற்கும் முதன்மை உணர்வு.

சில நிர்வாகமும், சில பெற்றோரும் இதற்காக மாணவர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியும், நிம்மதிச் சிதைப்பும், உளைச்சலும், உதையும், வதையும் ஏராளம்!

100க்கு 97 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டாள். காரணம், முதல் மதிப்பெண் பெற 1 மதிப்பெண் குறைந்துவிட்டதாம்! எவ்வளவு கொடுமையான முட்டாள்தனம்; மூளைச்சலவை; மூடநம்பிக்கை பாருங்கள்!

ஒரு மதிப்பெண்தான் வாழ்வா? 97 மதிப்பெண் பெற்றது என்ன சாதாரண சாதனையா? சாதாரண உழைப்பா? அதைவிட ஒரு மாணவர் என்ன சாதிக்க வேண்டும்?

இங்கு அவள் ஆயுளைப் பறித்தது எது? அறியாமையா? வறட்டுப் பெருமையா? மானப் பிரச்சனையா? பெற்றோர் கொடுத்த உளைச்சலா? விசாரித்தபோது பெற்றோர் திட்டியதுதான் காரணம் என்று தெரிந்தது. இப்படி ஒரு படிப்பாளிப் பெண்ணைப் பாராட்டுவார்களா? பழிப்பார்களா?

படிக்காத பெற்றோர் யாரும் இப்படிச் செய்வதில்லை; படித்த முட்டாள்கள் படுத்தும் பாடுதான் இது! முதல் மதிப்பெண்ணில்தான் தன் மானமும், மரியாதையும் அடங்கியிருப்பதாக அலையும் அவலம்.

40 மாணவர்களில் முதன்மை வந்தால், நாலு பள்ளிகளில் முதன்மை இல்லை; மாவட்டத்தில் முதன்மை வந்தால் மாநிலத்தில் முதன்மை இல்லை.

மாநிலத்தில் முதன்மை வந்தவர் மேற்படிப்பில் முதன்மை இல்லை! இதுதானே யதார்த்த நிலை? இதற்கா இத்தனைப் போட்டி? பொறாமை?

பகுத்தறிவின்பாற்பட்ட முயற்சி எது என்றால், நாம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அதற்கேற்ற தகுதி மதிப்பெண்ணை அடைய உழைப்பதே! சரியான அணுகுமுறை அதுவே!

நமக்குத் தேவையான உணவை உண்பதுதானே உடல்நலம் காக்கும் அறிவுடைய செயல்? அடுத்தவனைவிட ஒரு உருண்டை கூடுதலாகச் சாப்பிட வேண்டும் என்று முனைவது முறையா? அதுதானே மதிப்பெண்ணுக்கும்!

பணிக்குப் போகும்போதும், படிக்கப் போகும்போதும், அவை கிடைக்க என்ன மதிப்பெண் தேவையோ அதைப் பெற திட்டமிட்டு முயலுவது என்ற செயல்திட்டமே சிறந்தது, உகந்தது; சமூக நல்லிணக்கம், மனிதநேயம், நட்பு இவற்றிற்கு ஏற்றது. மற்றபடி போட்டியிட்டு மோதுவது மூடத்தனம் என்பதை பெற்றோர் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கில் தன் பள்ளி முதலிடம் பெறவேண்டும் என்ற சுயநலத்தில், மாணவர்களை வாட்டி வதைப்பது கண்டிக்கத்தக்கது.

ஒரு மாணவனை முதல் மதிப்பெண் வாங்க வைக்க அலைவதைத் தவிர்த்து, 100 மாணவர்களைத் தரமாக உருவாக்க முயற்சிப்பதே உண்மையான கல்விச் சேவை. தன் பிள்ளைக்குத் தேவையான மதிப்பெண் கிடைக்க பிள்ளைக்கு வேண்டிய கடமைகளைச் செய்வதே பெற்றோரின் பொறுப்பு.

தன் எதிர்காலத் திட்டத்திற்கு - இலக்கிற்கு ஏற்ற மதிப்பெண்ணைப் பெறப் பாடுபடுவதே படிப்போர்க்குச் சிறப்பு. அதை விடுத்து முதல் மதிப்பெண்ணுக்காக மோதுவதும், சாவதும் முட்டாள்தனம்; மூடத்தனம்! எனவே, பெற்றோரும், நிர்வாகத்தினரும், மாணவரும் இந்த மூடத்தனத்திலிருந்து முதலில் விலக வேண்டும்.

முயற்சிக்கு ஓர் உந்துதல் வேண்டாமா? சிலர் கேட்பர். முதல் மதிப்பெண்தான் உந்துதலா?

அது போட்டிக்கும் பொறாமைக்குமே வழிவகுக்கும். தனக்குத் தேவையான மதிப்பெண் இவ்வளவு. அதைப் பெறவேண்டும் என்றால் உந்துதல் வராதா?

கல்வி என்பது விளையாட்டுப் போட்டியோ, பந்தயமோ அல்ல. அது அறிவுத் தெளிவு; ஆற்றல் வளர்ப்பு.

ஓட்டப் பந்தயத்தில்தான் முதல், இரண்டு, மூன்று என்பதெல்லாம். படிப்பில் மதிப்பெண்ணில் அல்ல.

விளையாட்டில் போட்டி ஆர்வம் தரும்; கல்வியில் போட்டி உளைச்சல் தரும்.

98% மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று உண்மையில் மகிழ்வதற்குப் பதில், 99% இன்னொருவன் பெற்று முதலிடம் வந்து விட்டானே! என்று ஏங்கிக் கவலைப்படுவது அறிவிற்கு அழகா?

98% பெறும் அளவிற்கு நாம் படிப்பாளி என்று பெருமை கொள்ளமுடியாமல் செய்வது முதல் மதிப்பெண் மோகம் என்றால், அது மூடத்தனம் அல்லவா?

தமிழ் ஓவியா said...

அறிஞர்களின் வாழ்வில்...


எடுத்துக்காட்டு


தாகூர்

இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றவர் தாகூர். ஆரம்பத்தில் தாகூர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் கல்கத்தா பல்கலைக்கழகம் நடத்திய மெட்ரிகுலேசன் தேர்வில் இலக்கணப் பிழை திருத்துவதற்காக மாணவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி என்னும் நாவலினை, முதலில் தாகூர் வங்க மொழியில் எழுதினார். பின்னர் அவரே ஆங்கில மொழியாக்கம் செய்தார். ஆங்கில மொழிபெயர்ப்பினைப் படித்த அய்ரிஸ் கவிஞர் ஏட்ஸ் பாராட்டியதுடன், இங்கிலாந்தின் மேக்மில்லன் கம்பெனி மூலம் (ஆங்கிலம்) வெளியிட ஏற்பாடு செய்தார்.

தாகூரின் கட்டுரைகளை இலக்கணப் பிழை திருத்த மாணவர்களிடம் கொடுத்த கல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தாகூருக்கு சர் பட்டம் கொடுத்தனர்.

பஞ்சாபிலுள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் வெள்ளை ராணுவ தளபதி டயர் இந்தியர்களைச் சுட்டுக் கொன்றார். பிரிட்டிஷாரின் காட்டுமிராண்டிப் போக்கைக் கண்டித்தார் தாகூர். படுகொலைக்குக் காரணமான ஆட்சியினர் கொடுத்த சர் பட்டத்தை இனியும் வைத்திருப்பது சுயமரியாதையுள்ள தேசபக்தனுக்கு இழுக்கு என நினைத்து ராஜினாமா செய்தார்.

அப்போதைய பிரிட்டிஷ் வைஸ்ராய்க்கு அவர் எழுதிய கடிதம் உணர்ச்சிமிக்க ஆங்கில நடைக்கு இன்றும் ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

போருக்கு நடுவே...


வாஷிங்டன்

இங்கிலாந்து நாட்டின் பிடியிலிருந்து வெளிவந்த அமெரிக்கர்கள் சுதந்திரப் போராட்டம் நடத்தினர். அப்போது, அமெரிக்க விடுதலைப் படைத்தளபதியாக வாஷிங்டன் இருந்தார். அமெரிக்காவை அடக்க அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் படைத்தளபதியாக சர் வில்லியம் ஹோ இருந்தார். இரு முகாம்களும் அருகருகே அமைக்கப்பட்டிருந்தன.

பலம் மிக்க பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து எப்படிப் போர் செய்வது என்பது பற்றிய ஆலோசனையினை இரவில் நடத்திக் கொண்டிருந்தார் வாஷிங்டன். அப்போது ஒரு நாய் வாஷிங்டனின் கூடாரத்தினுள் நுழைந்தது. நாயின் கழுத்துப் பட்டையைப் பார்த்த வாஷிங்டன், இது எதிரி நாட்டுப் படைத்தளபதி ஹோவினுடையது என தெரிந்து கொண்டார்.

போர்க்காலச் சூழலில் தங்களிடமே நாயை வைத்துக் கொள்வது கௌரவப் பிரச்சினை என நினைத்தார். ஹோ, நாய் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு உடையவர் என்பது வாஷிங்டனுக்குத் தெரியும்.

வெள்ளைக் கொடியுடன் சில வீரர்கள் சூழ நாயை அனுப்பி வைத்தார். அப்போது, ஜெனரல் ஹோ அவர்களுக்கு வாஷிங்டனின் வணக்கம். எங்கள் பாசறைக்கு வழி தவறி வந்த நாய் தங்களுடையதுதான் என்பதைக் கழுத்துப் பட்டையிலிருந்து அறிந்து கொண்டேன். எனவே, திருப்பி அனுப்பியுள்ளேன் என்று எழுதிய கடிதமும் கொடுத்தனுப்பினார். பரவசப்பட்ட ஹோ, நன்றி கூறி கடிதம் கொடுத்தனுப்பினார். இச்செயலால் போரின் போக்குக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

தமிழ் ஓவியா said...

நடுநிலை தவறாதவர்


டோஜா

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்தவர் அட்மிரல் டோஜா. போரில் தோற்ற டோஜா யுத்தக் கைதிகளுள் ஒருவரானார். டோக்கியோவில் போர்க்கைதிகள் விசாரணை மன்றத்தின் முன் விசாரணை நடைபெற்றது. குறுக்கு விசாரணையின் போது, எதையும் மறைக்காமல், வருத்தம் தெரிவிக்கும்படிக் கேட்காமல், மன்னிக்கும்படிக் கூறாமல் தனது திறமையால் வாதாடினார் டோஜா.

ஜப்பான் நடத்தியது தற்காப்பு யுத்தம் என்றும் பேர்ல் துறைமுகம் மீது ஜப்பான் நடத்திய திடீர்த் தாக்குதல் நியாயமானது என்றும் கூறி, பிரதமர் என்ற முறையில் முழுப் பொறுப்பையும் தானே ஏற்பதாக திறமையாக வாதாடினார். இவரது வாதத் திறமை வழக்குரைஞர்களையே திணற வைத்தது.

ஜப்பான் நாட்டு மக்களிடையே செல்வாக்குக் குறைந்திருந்த டோஜா, குறுக்கு விசாரணையின்போது நடைபெற்ற வாதத் திறமையால் மக்களிடம் செல்வாக்குப் பெற்றார். விசாரணை என்ற ஒன்று நடைபெற்றதே தவிர, டோஜாவுக்கு மரண தண்டனை என்பது முன்பே எழுதப்பட்ட தீர்ப்பாக இருந்தது.

டோஜாவை விசாரித்த நீதிபதி குழுவில் பால் என்ற இந்தியரும் இடம் பெற்றிருந்தார். இவரது தீர்ப்பு வரலாற்றுப் பிரசித்தி பெற்றதாக அமைந்தது. மற்ற நீதிபதிகளால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட டோஜாவுக்கு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என எழுதினார் நீதிபதி பால்.

ஹேன்கீ பிரபு எழுதிய அரசியல், விசாரணை, தவறுகள் என்னும் நூலில் பால் எழுதிய தீர்ப்பு பாராட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக வரலாற்றின் மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் நடுநிலை தவறாதவர் இந்திய நீதிபதி என்று நிரூபித்த பெருமைக்குரியவர் பால்.

ஒற்றுமை


லிங்கன் மற்றும் கென்னடி

அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் பதவியில் இருக்கும்போதே சுட்டுக் கொல்லப்பட்டதைப் போலவே அமெரிக்க அதிபர் கென்னடியும் பதவியில் இருக்கும்போதே சுட்டுக் கொல்லப்பட்டவர்.

இரு அதிபர்களின் துயர முடிவுகளுக்கு ஒற்றுமை இருப்பதைப் போலவே வேறு பல ஒற்றுமைகள் இருவருக்கும் உண்டு.

1. லிங்கன் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு: 1860.கென்னடி அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு 1960.

2. ஃபோர்டு திரையரங்கில் நடைபெற்ற நாடகத்துக்குச் செல்ல வேண்டாம் என்று லிங்கனுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அலட்சியப்படுத்திவிட்டு நாடகம் பார்க்கச் சென்றார்; சுட்டுக் கொல்லப்பட்டார்.

டல்லாஸ் நகர் செல்ல வேண்டாம் என நண்பர்கள் கென்னடியிடம் கேட்டுக் கொண்டனர். மீறிச் சென்றார்; சுட்டுக் கொல்லப்பட்டார்.

3. இரு அதிபர்களின் மரணமும் வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இருவரும் மனைவி அருகிலிருக்கும்போதுதான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருவரையும் சுட்டவர்கள் பின்னாலிருந்து சுட்டுள்ளனர். இருவரின் தலைகளிலும் குண்டு பாய்ந்துள்ளது.

4. லிங்கன் இறந்தபின் அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர் ஆன்ட்ரூ ஜான்சன் (1808).
கென்னடி இறந்தபின் அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர் லிண்டன் ஜான்சன் (1908).

5. இருவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். தென் மாநிலத்தார். முன்னாள் செனேட்டர்கள்.

6. லிங்கனைச் சுட்டவன் திரையரங்கில் சுட்டான்; கடையில் பிடிபட்டான்.
கென்னடியைச் சுட்டவன் கடையிலிருந்து சுட்டான்; திரையரங்கில் பிடிபட்டான்.

7. இரு அதிபர்களைச் சுட்டவர்களும் விசாரணைக்கு வரும் முன்பே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் மரண சாசனம்


எனவே தோழர்களே! நம் முடைய நிலைமை உலகத்திலே பெரிய மானக்கேடான நிலைமை. 2000 வருடமாக இருக்கிற முட்டாள்தனத்தைவிட இந்தச் சட்டத்திலே இருக்கிற, இந்து லாவிலேயும், அரசியல் சட்டத் திலும் அது பெரிய முட்டாள்தனம். முதலிலே இதை மாற்றச் சொல் லாமல், இந்த ஆட்சியிலே குடிமகனாக இருக்கிறோமே, அது மகா மகா முட்டாள்தனம். பொறுக்கித்தின்பவனுக்கு இந்த ஆட்சி வேண்டும். மானத்தோடு பொழைக்கிறவனுக்கு இந்த ஆட்சியை ஒழித்துத்தானே ஆக ணும்? உன்னைப்போல் நான், என்னைப்போல் நீ மாற்றுகிறாயா? இல்லை. மூட்டை கட்டுகிறாயா என்று தானே கேட்க வேண்டும்? இல்லாவிட்டால் வழி? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்போம் என்று என்ன நிச்சயம்? நான் இறந்தால் நாளைக்கே மாறிவிடுவான்.

கலைஞரின் தீர்மானம்!

நமது கலைஞர் கருணாநிதி அவர்கள், கல்லுதான் - யார் வேண்டுமானாலும் பூஜை செய்ய லாம், இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று எல்லோருக் கும் அனுமதி கொடுத்தார். பார்ப்பான் கோர்ட். சுப்ரீம் கோர்ட் என்றால் பார்ப்பான் கோர்ட் என்று பெயர் (சிரிப்பு) சிரிக்காதீர்கள்; அதிலே தமிழ னுக்கு இடமே இல்லை. போனா லும் அவனுடைய அடிமைதான் அங்கு போவான், அவன் சாஸ்திரத்தைப் பார்த்துத்தான் தீர்ப்புச் சொல்வான். இந்த ஜனம் கோயிலுக்குள் போவது தப்பு; அது சாஸ்திர விரோதம். அட முட்டாள்களே! சாஸ்திரம் என்றால் எது? எப்ப எழுதியது? எவன் எழுதினான்! எவனை யாவது சொல்லச் சொல்லு, ஆகமத்தின்படி எழுதினான் என்கிறான். அய்கோர்ட் ஜட்ஜ் பார்ப்பான் ஆதிக்கமுள்ளது. பார்ப்பாத்தியால் நியமிக்கப்பட் டவர்கள் அவர்கள். அவர்கள் அப்படித்தானே எழுதுவார்கள்? எனவே, நமது இழிவு ஒழிந்தாக வேண்டும்; அதுதான் முக்கியம்.

தேங்காது! இப்போது நாம் கஷ்டப்பட் டால், பிறகு வட்டியும் முதலுமாய் உயரலாம். நமது நாட்டு முன் னேற்றம் ஒன்றும் தேங்கிப் போய்விடாது. எனவே இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து கேட்ட உங்களுக்கு எனது நன் றியைத் தெரிவித்து, எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.

சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் தம் வாழ்வின் இறுதி உரையாக (19.12.1973) - மரண சாசனமாக ஆற்றிய உரையின் முடிவுப் பகுதி இது.

Read more: http://viduthalai.in/e-paper/72294.html#ixzz2nuzwBRnl

தமிழ் ஓவியா said...


ஆருத்ரா


மாயேந்திரன்: (வேலைக்காரன் வெள் ளையைப் பார்த்து) கடை வீதியிலே யாருட்டயோ சொன்னியாமே - எங்க எஜமான் ஊருக்கு நல் லது தான் செய்றாரு. ஆனா கோயிலில் இருக் கிறதெல்லாம் கல்லுன்னு சொல்றாருன்னு சொன்னி யாமே! அப்படியா சொன்னே.. கோயில்லே கல் இல்லாம வேற என்னடா இருக்கு?

வெள்ளை: சாமிதா னுங்க எஜமான் இருக்கு.

மாயே: சாமியா? இங்கே வாடா! (வருகி றான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்கடா.. கையை இப்படி வைடா (நடராஜர் சிதம்பரத்திலி ருப்பது போல் நிற்கச் செய்கிறார்;

நிற்கிறான் வெள்ளை); பத்திரிகை படித்துக் கொண்டிருக் கிறார் மாயேந்திரன், வெள்ளை காலை ஊன்று கிறான். டேய் தூக்குடா காலை, நில்லுடா என்கி றார் எஜமான் மாயேந் திரன் (மறுபடியும் தூக்கி சிறிது நேரம் நின்று விட்டு காலை ஊன்று கிறான்). டேய், ஏண்டா ஊண்டுன... தூக்குடா காலை - என்கிறார் எஜமான்.
வெள்ளை: கால் வலிக்குதுங்க எஜமான்.

மாயே: ஏண்டா ரெண்டு நிமிஷம் நிக்கிற துக்கே கால் வலிக்கு துன்னு சொல்றீயே - அப்ப தூக்கின காலை இன்னும் கீழே ஊன்றாம இருக்குதேடா...

வெள்ளை: எங்கே எஜமான்!
மாயே: சிதம்பரத்திலே

வெள்ளை: அது கல்லு எஜமான்.

மாயே: என்ன அது கல்லா? ஏண்டா கல் லுன்னா சொன்ன? கல்லை கல்லுன்னு நீ சொன்னா என்ன - நான் சொன்னா என்ன? நான் சொன்னா எங்க எஜமான் கல்லுன்னுசொல்றாருன்னு எல்லார் கிட்டேயும் போய் சொல்ற....

வெள்ளை: இனிமே சொல்ல மாட்டேனுங்க எஜமான். மேலே கண்ட உரை யாடல் சாட்சாத் அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட சந்திரோத யம் நாடகத்தின் ஒரு காட்சி.

கல்லுன்னு பக்தன் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறார் அறிஞர் அண்ணா.. இந்த உண்மையை மறுக்க முடியுமா?

சிதம்பரத்திலே ஆருத்ரா தரிசனம் பற்றி தடபுடலாக விளம்பரங் கள் செய்யப்படும் இந்தக் கால கட்டத்தில் இந்தச் சிந்தனைப் பொறி பெரி யார் திடலிலிருந்து கிளம் புகிறது பக்தர்களே சிந் திப்பீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72278.html#ixzz2nv04b4zJ

தமிழ் ஓவியா said...


எடுத்துக் கொடுக்கிறது இந்து

எடுத்துக் கொடுக்கிறது இந்து

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மோடி லேசாகக் கோடி காட்டினால், தமிழ்நாட்டுக் கட்சிகள் பலவும், தமிழ்த் தேசியக் கட்சிகள் சிலவேனும், அவருக் குப் பச்சைக் கொடி காட்டும் சாத்தியம் வலுவாகத் தெரி கிறது.

- தி இந்து (தமிழ்) 18.12.2013



எடுத்துக் கொடுக்கிறது கல்கி

மக்கள்மீது மற்றொரு தேர்தலையும் செலவு களையும் திணிக்காமல், அதிக இடங்களைப் பெற்றுள்ள பா.ஜ.க. டில்லியில் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும். முழு மெஜாரிட்டி இல்லை; அதனால் எதிர்க்கட்சி இருக்கையில் அமர்ந்து கொள்கிறேன் என்று பா.ஜ.க.. முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்தன் பேசுவது கோழைத் தனம். சிறுபான்மை அரசை அமைத்து சீரான கொள்கை செயல்பாடு அடிப்படையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெற்று ஆட்சி நடத்துவதே மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்த தாகும். நல்லாட்சிக்கு ஆதரவு மறுக்க எதிர்க் கட்சிகளால் கூட முடியாது.

- கல்கி தலையங்கம் 22.12.2013



எடுத்துக் கொடுக்கிறது துக்ளக்

கேள்வி: பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி அமையாது; பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியும் அமையாது. ஆனால் பா.ஜ.க. - தே.மு.தி.க., ம.தி.மு.க. கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். அப்படி அமைந் தால் தாங்கள் கூறும் அறிவுரை என்ன? (நழுவாமல் பதில் தர வேண்டும்.).

பதில்: இதில் நான் யாருக்கு அறிவுரை கூறுவது? தே.மு.தி.க.விற்கும், ம.தி.மு.க.விற்கும் நான் வாழ்த்துக் கூறலாம். அவர்கள் வழக்கமாக வாங்கக் கூடிய ஓட்டுக்களை விடச் சற்று அதிகமான ஓட்டுக்களைப் பெறுவார்கள். அதற்கு வாழ்த்துக்கள். பா.ஜ.க., தான் எதிர்பார்க்கிற வெற்றியைப் பெறாது என்பதால் அதற்கு ஆறுதல் கூறலாம். இப்படி எதையாவது சொல்லலாமே தவிர, வேறு என்ன அறிவுரை கூறுவது?

- துக்ளக் 25.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/72297.html#ixzz2nv0O65os

தமிழ் ஓவியா said...

பக்தர்கள் பலி




கொழிஞ்சாம்பாறை, டிச.19- கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கடவளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணீஸ் (வயது 28), ராஜன் (49), சுதாகர் (35), முகேஷ் (29), உண்ணி (35), சுஜா (30) ஆகிய 6 பேர் கடவளூரில் உள்ள சிவன் கோவிலில் நடைபெற்ற திருவா திரை விழாவுக்கு நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு புறப்பட்டனர். கோவில் அருகே வந்த போது பக் தர்கள் கூட்டத்தில் அவர்கள் கலந் தனர்.

அந்த நேரத்தில் திருச்சூரில் இருந்து கோழிக்கோட்டுக்கு டேங்கர் லாரி வந்தது. எதிரே கோழிக் கோட்டில் இருந்து திருச்சூருக்கு லாரி ஒன்று வந்தது. கோவில் அருகே 2 லாரியும் வந்தபோது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதின.

கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மணீஸ், ராஜன், சுதாகர், முகேஷ், உண்ணி, சுஜா ஆகியோர் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உண்ணி, சுஜாவை தவிர மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். உண்ணியும், சுஜாவும் படுகாயம டைந்து உயிருக்கு போராடினர். இதை பார்த்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி யடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் திருச்சூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

உயிருக்கு போராடிய உண்ணி யையும், சுஜாவையும் மீட்டு கடவ ளூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். இறந்த 4 பேரின் உடல்களையும் பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவிலில் பூட்டை உடைத்து ரூ.24 ஆயிரம் கொள்ளை

சேலம், டிச 19- சேலம் அருகில் உள்ளது உடையாப்பட்டி. இங் குள்ள செல்வநகரில் ராஜகணபதி திருக்கோவில் உள்ளது. இந்த கோவி லுக்கு உடையாப்பட்டி மற்றும் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து சாமியை வணங்கி செல்வார்கள்.

இந்த கோவில் பூசாரி நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள் சிலர் வந்தனர். அப்பேது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி கோவில் பூசா ரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே கோவிலுக்கு வந்து பார்த்தார்.

கோவிலில் பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை. ஆனால் கோவிலில் இருந்த பீரோவை காணவில்லை. இந்த பீரோவை திருடர்கள் எங்கு தூக்கி சென்றனர் என அக்கம் பக்கம் அனைவரும் தேடினர்.

அப்பேது இந்த பீரோ கோவில் அருகில் உள்ள ரயில் தண்டவாளம் பகுதியில் கிடந்தது. இதன் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரொக்கம் ரூ.24ஆயிரத்தை திருடர்கள் திருடிச் சென்று இருந்தனர். பின்னர் பொது மக்கள் இந்த பீரோவை கோவிலுக்கு தூக்கி வந்தனர். கோவிலில் வேறு ஏதும் பொருட்கள் திருடு போக வில்லை. இந்த துணிகர திருட்டு குறித்து கோவில் பூசாரி பகவதி வீரா ணம் காவல்துறையில் புகார் செய் தார். இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-2/72267.html#ixzz2nv0chIYj

தமிழ் ஓவியா said...


அவசியம்


மூடநம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம். - (விடுதலை, 12.10.1967)

Read more: http://viduthalai.in/page-2/72262.html#ixzz2nv0lXBay

தமிழ் ஓவியா said...


வகுப்புரிமைப் போராட்டம்

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்.

மாணவர் பருவந்தொட்டு அவருடைய வாழ்க்கைச் சூழல் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைப் பக்கம் ஈர்த்தது.

தந்தை பெரியார் அவர்களின் மெய்க் காவலர் என்று கணிக்கப்பட்ட மாயவரம் சி. நடராசன் அவர்கள் நெருங்கிய உறவினர் என்பது மட்டுமல்ல; அவரது தந்தையார் அவர்களே நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தின்பால் தீவிரப் பற்றுதலும் செயல்பாடும் கொண்டவர்.

இந்தப் பின்னணி அவருக்குப் பலமாகவே இருந்து வந்திருக்கிறது. இன்று வரையிலும் அவருடைய ஒவ்வொரு சொற்பொழிவிலும் திராவிடர் இயக்கத்தின் பாய்ச்சலும், சுயமரியாதை இயக்கத்தின் சூடும் அப்படியே கண கண என்று தணியாமல் கொழுந்துவிட்டு நிற்பதைக் காண முடியும். புதிய தலைமுறையினருக்கு வகுப்புக்கான நற்பாடங்களாக அவை திகழும்.

அவரால் எழுதப்பட்ட ஒவ்வொரு நூலும் ஆழமான கருத்துடையவை. அரிய தகவல்களின் கருவூலங்கள் ஆகும்.

குறிப்பாக அவரின் வகுப்புரிமைப் போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) எனும் நூல் 1951இல் முதல் பதிப்பாக வெளி வந்தது. அதன் இரண்டாம் பதிப்பை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது (2013)

இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடு சமூக நீதியில் நிகரின்றிப் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் திராவிடர் இயக்கத்தின் தனிப் பெரும் சாதனையே! இந்தியாவில் கூட சமூக நீதிக்குப் பெரும் அளவு ஈர்ப்பு இன்று ஏற்பட்டுள்ளது என்றால் அதற்குக் காரணம் திராவிடர் இயக்கத்தின் வீச்சே!

இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாக திருத்தப்பட்டதற்குக் காரணம் என்று வருகின்ற போது தந்தை பெரியார் முதல் வரிசையில் கம்பீரமாக நிற்கிறார்.

அதேபோல வகுப்புரிமை ஆணை முதன் முதலாக பிறப்பிக்கப்பட்டதும் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற சென்னை மாநில ஆட்சியில்தான் (1927) இன்றைக்கு சென்னை பல்கலைக் கழகத்தில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் 89 விழுக்காடு என்று அப்பல்கலைக் கழகத் துணை வேந்தராகயிருந்த முனைவர் திருவாசகம் கூறி னார். (சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நீதிக்கட்சி 95ஆம் ஆண்டு விழாவில் - நாள் 20.11.2010).

மேலும் அவ்விழாவில் அவர் தெரிவித்த புள்ளி விவரங்கள் இன்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் பார்ப்பனர் அல்லாதார் நிலவரம் பற்றிய தகவல் இதோ:
செனட் - 90 விழுக்காடு

ஆசிரியர் - 92 விழுக்காடு
ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் - 91 விழுக்காடு
80 துறைகளுக்கான பணியாளர்கள் (3380) - 95%
கல்லூரி மாணவர்கள் - 1,45,450 (89%)

திராவிடர் இயக்கத்தைப் பற்றி வாய்ப்புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று பேசும் அரை வேக்காடுகள் இந்தப் புள்ளி விவரங்களைக் கண்ணுற வேண்டும் - கருத்தூன்ற வேண்டும்.

பேராசிரியர் அவர்களின் வகுப்புரிமைப் போராட்டம் நூலில் அந்தக் காலக் கட்டத்தில் புள்ளி விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றோடு இதனை ஒப்பிட்டுப் பார்க்கட்டும்.

இந்த வளர்ச்சியின் பின்புலத்தை, வரலாற்றை பார்ப்பனர் அல்லாதார் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று பிறந்த நாள் விழா காணும் பெருமகனார் இனமானப் பேராசிரியர் க. அன்பழகனார் அவர்களின் வகுப்புரிமை போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) என்னும் நூலை, இளைஞர் உலகினரின் சிந்தனைக்குக் காணிக்கையாக்குகிறோம்.

மற்றவர்களைவிட திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் படிப்பார்களாக!

இந்த உணர்வு வளர்ந்தால் அதுவே இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு அளிக்கப்படும் மகத்தான பரிசாக இருக்கும்; வாழ்க பேராசிரியர்! வளர்க அவர்தம் எதிர்பார்ப்புகள்!

Read more: http://viduthalai.in/page-2/72264.html#ixzz2nv0tHyVy

தமிழ் ஓவியா said...


இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு இதுவரை உறுதியான நடவடிக்கை எடுத்திடவில்லை


கவிஞர் கனிமொழி குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.19- இலங்கைச் சிறையில் வாடி வரும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களை மீட்டுவர, உறுதியான நடவடிக்கை எதையும் மத்திய அரசு இதுவரை எடுத்திடவில்லை என மாநிலங் களவை தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்படும் இந்தியர்களைக் காத்திட வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் நேற்று (18.12.2013) பேசிய கவிஞர் கனிமொழி, அமெரிக்காவில் இந்திய பெண் அய்.எஃஎஸ் அதிகாரி தேவயானி கைவிலங்கிடப் பட்டு அவமரியாதை செய்யப்பட்டதை குறிப் பிட்டதோடு ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் என்பதாலேயே அவருக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்கா தனது செயலை நியாயப்படுத்தி யிருப்பதற்கும் கண்டனம் தெரிவித்தார்.

பெண் அதிகாரி அவமானப்படுத்தப்பட்ட விவகாரம், நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதையும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பல எதிர் நடவடிக்கைகளை எடுத்திருப் பதையும் கவிஞர் கனிமொழி சுட்டிக் காட்டினார்.
இந்திய அரசியல் தலைவர்கள் பலர் அமெரிக்காவில் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதையும் அவர் நினைவூட்டினார். இதேபோல், இலங்கைக் கடற்படையால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், அந்நாட்டு சிறையில் வாடி வருவது தெரிந்தும், அவர்களை மீட்க மத்திய அரசு இது வரை உறுதியான நட வடிக்கை எடுக்க வில்லை யே ஏன்? என்றும் கவிஞர் கனிமொழி கேள்வி எழுப் பினார்.
பாதிக்கப்படும் இந்தியர் களைக் காத்திட வெளி யுறவுக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் கவிஞர் கனிமொழி வலியுறுத்தினார்.
இலங்கையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் சிறையில் வாடி வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகார மட்டத்தில் பேச்சு வார்த்தையும் நடத்த வில்லை. யாருமே இதனை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை, என்றும் குறிப்பிட்டார்.
நமது உரிமைகளுக்காக நாம் போராடவும் இல்லை. இதில் தீர்வு காண்பதற்கு பதிலாக இந்திய அரசு பணிந்து போய் கொண்டிருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியர்களை பாதுகாக்கும் வகையில் வெளி நாட்டுக் கொள்கைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது என்று கவிஞர் கனிமொழி குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/72313.html#ixzz2nv1AmIy4

தமிழ் ஓவியா said...


கடவுளின் கையாலாகத்தனத்தை மூடி மறைக்கும் மோடி மஸ்தான் வேலை!


கோவில்பட்டி அருகே கார்மீது பஸ் மோதியதில் பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த 5 மின்வாரிய ஊழியர்கள் பலியானார்கள். விபத்தில் சிக்கிய கார் சின்னாபின்னமாகி கிடப்பதை படத்தில் காணலாம். திருச்செந்தூர் முருகனைக் கும்பிடச் சென்றவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டம் சின்னைய பாளையத்தைச் சேர்ந்தவர் அனந்த பத்பநாபன் (58).

சபரிமலைக்குச் செல்ல மாலை அணிந்து இருந்தார். திருப்பதிக்குச் சாமி கும்பிட வந்தார். ஏழுமலை யானை தரிசிக்க வரிசையில் நின்றவர் சுருண்டு விழுந்த மரணம் அடைந் தார். (நமது அனுதாபம் உரியதாகுக) கோயில் முன் பகுதியில் பக்தர் மரணம் அடைந்ததால் பரிகாரப் பூஜை நடத்தப் பட்டது. ஆகமவிதிப்படி கோயில் தூய்மைப்படுத்தப்பட்டது. தோஷ நிவாரணப் பூஜைகள் நடந்தன. அதில் அர்ச்சகர்களும், பண்டிதர்களும் கலந்து கொண்டனர். இதன் காரண மாக கோயில் முன் பகுதியில் நடந்த சகஸ்ரதீப அலங்கார சேவை 10 நிமிடங்கள் பாதிக்கப்பட்டன (மாலை மலர் 19.12.2013 பக்.4).

இது செய்தி ஆனால் அதன் பின் னணியில் சிந்திக்கப்பட வேண்டிய துண்டு.

கோயிலுக்குச் சென்றார் ஒரு பக்தர். அதுவும் எந்த கோயிலுக்கு? தீராத வினைகளை எல்லாம் தீர்த்து வைப்பார் கோவிந்தம் என்று பக்தக் கோடிகள் - போற்றித் துதிக்கும் ஏழு மலையான் கோயிலுக்குச் சென்றி ருக்கிறார்.

எந்த கோலத்தில்? அய்யப்பன் பக்தர் கோலத்தில்! ஆக இரண்டு கடவுள்களின் பக்தராகச் சென்று இருக்கிறார்.

கடவுளைக் கும்பிட்டால் வழிபட் டால் நல்லது நடக்கும் - குடும்பக் கஷ்டங்கள் தீரும் - கெட்ட வினை எல் லாம் ஓடி மறையும் என்ற நம்பிக் கையில் தானே ஏழுமலையானைத் தரிசிக்க வரிசையில் நின்றார்.

ஆனால் என்ன நடந்தது? வினையைத் தீர்ப்பான் ஏழுமலையான் என்ற எண்ணத்தில் நின்றவனின் வினை உயிர் அல்லவா பறிபோனது!

இதன் பொருள் என்ன? கடவுளா வது கத்திரிக்காயாவது! அது வெறும் கல்லு என்ற நாம் சொல்லி வருவது உண்மை - உண்மையிலும் உண்மை என்பது நிரூபணம் ஆகிவிட்டதா இல்லையா? சில நாட்களுக்குமுன் பூவிருந்த வல்லியிலிருந்து திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்கச் சென்ற அய்ந்து பக்தர்கள் சாலை விபத்தில் பலியானார்களே - அதன் பொருளும் இதுதானே!

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்; இவ்வளவும் நடந்ததற்குப் பிறகு - எங்கே கடவுள் பக்தி குன்றிப் போய் விடுமோ என்ற கவலை- கவ லைக்குக் காரணம் பக்தி பறி போனால் அதை வைத்துப் பிழைக்கும் ஒரு சுரண்டல் கூட்டத்தின் வயிற் றிலடித்த கதையாக முடிந்து விடுமே!

உடனே என்ன செய்கிறார்கள்? கோயில் முன் பகுதியில் மரணம் ஏற்பட்டு விட்டதாம். அதற்காகப் பரிகாரப் பூசையில் ஈடுபட்டார்களாம் - தோஷங்கள் கழித்தார்களாம் - சடங்குகளைச் செய்தார்களாம் - அங்கே அர்ச்சகர்களும், பண்டிதர் களும் இருந்தார்களாம்.

இதன் பொருள் - கோயிலைச் சுற்றி எது நடந்தாலும், பக்தியின் பெயரால் எது நடந்தாலும், அது க்ஷீரணத் தோரண பூர்ண கும்பாபி ஷேகமாக இருந்தாலும், இதுபோல பக்தர்கள் மரணம் அடைந்தாலும் - எப்படியும் அதன் ஒட்டு மொத்த நிகர லாபம் என்பது பார்ப்பனர்களுக்கு இலாபகரமாக அமைந்து விடுவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

கோயில் என்பது சுரண்டல் கேந்திரம் என்று சுயமரியாதை இயக்கம் சொன்னது - திராவிடர் கழகம் இன்று சொல்லி வருவது எத்தகைய உண்மை என்பதைப் பார்ப்பனரல்லாத பக்தர்களே அறிந்து கொள்வீர்!

தந்தை பெரியாரின் முத்திரையடி

கடவுளும், மதமும் கெட்டாக வேண்டுமானால் பார்ப்பான் கெட்டாக வேண்டும். (இல்லாமல் போக வேண்டும்) அவன் கெட்ட இடம்தான் கடவுள், மதம் கெட்ட இடமாகும்.

- தந்தை பெரியார் (விடுதலை 24.4.1967)

- கருஞ்சட்டை

Read more: http://viduthalai.in/e-paper/72363.html#ixzz2o1aRl865

தமிழ் ஓவியா said...


ஏவுகணை சாதனை விஞ்ஞானி டாக்டர் சிவதாணுப் பிள்ளைக்கு வாழ்த்துக்கள்


பிரம்மோஸ் அதி வேக ஏவுகணைத் திட் டத்தை வெற்றிகர மாகச் செயல்படுத்திய விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் (டீசனநச டிக ஆநசவை) என்ற ருஷ்ய நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் வழங்கினார் என்ற செய்தி அறிந்து, நாம் எல்லையற்ற மகிழ்ச்சியையும் பெருமிதத்தினையும் அடைகிறோம்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும், இடையே உள்ள உறவு மேலும் வலுவடைந்ததைத் தொடர்ந்தே இவ்விருது அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.

பிரபல ஏவுகணை விஞ்ஞானி திரு. சிவதாணுப்பிள்ளை அவர்களுக்கு ரஷ்யா அனுப்பியுள்ள செய்தியில், நீங்கள் இரு நாடு களின் கூட்டுத் திட்டம், அமைதி ஒத்துழைப்பு, புரிதல் மற்றும் நட்பை வலுப்படுத்துவதற்கு பெரும் பங்காற்றியதை பெருமைப்படுத்தும் விதத்திலேயே இவ்விருது வழங்கப்பட்டுள் ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் நாஞ்சில் நாட்டு தமிழர்; பெரும் சாதனையாளர்; இவரது ஆற்றல் வியக்கத்தக்க சாதனைகள் மூலம் வெளிப்படுகின்றன. அவரது புகழ் மேலும் பரவி, உலக விஞ்ஞானிகளில் ஒருவராகி உயர்ந்து நிற்பதைக் காணும்போதும் தமிழினம், திராவிடர் சமுதாயமும் இந்தியத் திருநாடும் பெரும் மகிழ்ச்சியை அடைகிறது.

அவருக்குத் தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

அவர் தஞ்சை - வல்லம் பெரியார் - மணியம்மை பல்கலைக் கழக மதிவுரைஞர்களில் ஒருவர் என்றெண்ணும்போது, அம்மகிழ்ச்சி பல மடங்கு பெருகுகிறது!

வாழ்க சிவதாணுப்பிள்ளை!

கி.வீரமணி
தலைவர், திராவிடர்கழகம்

முகாம்

சிங்கப்பூர் 20.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/72362.html#ixzz2o1bBgBGn

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு வீடணன்


இலங்கையில் தான் இராவணனும் பிறந்தான் - உடன் பிறந்தே கொல்லும் வீடண னும் அங்குதான் பிறந்தான்.

இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவது தான் - என்றாரே தந்தை பெரியார் (பெரியார் 90ஆவது பிறந்த நாள் விடுதலை மலர் 17.9.1969).

விபீஷணன் பிறந்த அந்த இலங்கையிலேதான் முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் விளையாட்டுக் காரரும் பிறந்துள்ளார்; தமிழன்தான் - சென்னை தான் அவர் மாமனார் - மாமியார் வீடும் கூட!

வாயைத் திறக்காமல் - இருந்தாலாவது அவரைப் பற்றிக் கொஞ்சம் மரியாதை மிஞ்சி இருக்கும். வாயைத் திறந்து தன் விபீஷணப் புத்தியையல்லவா தனக்குத் தானே அம்பலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

முப்பது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பிப் போராட்டம் நடத்துவ தனால் குற்றச்சாட்டுகள் உண்மையாகி விடாது. இந்த மக்களும் பிழையாக வழி நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளார் (குமுதம் 4.12.2013).

இலங்கைத் தீவில் தமிழினத்து இளைஞர்கள் காணாமற் போனது குறித்து விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்று அய்.நா. வரை கோரிக்கை சென் றுள்ளது.

இலங்கை அரசு தமக்குத் தானே நிரூபித்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. என்ற அமைப் புக்கூட காணாமற் போன வர்கள் தொடர்பான விசா ரணைகளுக்குப் பரிந்துரை செய்துள்ள நிலையில், தமி ழனாகப் பிறந்த முத்தையா முரளிதரன் ராஜபக்சே மொழியில் பேசுகிறார்.

எந்த அளவுக்குச் சென் றுள்ளார் இந்த முரளிதரன் தெரியுமா? 30 வருடப் பிரச் சினையை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்ஷேவுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போராளிகளை காட்டிக் கொடுத்த கருணா ராஜ பக்சே அமைச்சரவையில் அமைச்சராகவே ஆகி விட்டார். முத்தையா முரளி தரனுக்கும்கூட ஏதாவது முடிசூட்டு விழா விரைவில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

அண்ணனைக் காட்டிக் கொடுத்த காரணத்தால் தானே சாதாரண விபீஷண னுக்கு ஆழ்வார் பட்டம் கிடைத்தது; நாட்டை ஆளும் ஆட்சிப் பொறுப்பும் கிடைத்தது.

முத்தையா முரளிதரனை நோக்கி ஒரு கேள்வி உள் ளது. இலங்கைக் கிரிக்கெட் அணியில் விளையாடி சுழற் பந்துவீச்சில் உலக சாதனையை நிகழ்த்தியவர் தானே அவர்?

இலங்கை அணி பலமுறை வெற்றி பெற் றதற்குக் காரணமாக இருந்தவர்கூட!

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த விளை யாட்டு வீரர்தானே!

குறைந்த பட்சம் அந்த அணியின் துணைத் தலைவராகவாவது (Vice Captain) நியமிக்கப் பட்டாரா?

ஏன் நியமிக்கப்பட வில்லை? சிந்தித்துப் பார்த் தால் அவர் தோளில் தூக்கி வைத்துக் கொள்ளும் ராஜபக்சேவின் இனவெறிக் கண்ணோட்டம் தெரிய வரும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/72359.html#ixzz2o1bKifh5

தமிழ் ஓவியா said...


சட்டம் குறட்டை விடுகிறதா?


கோயில்கட்டபொதுப்பணித்துறை ஆலோசனைக்கூட்டமாம்

இதோ ஆதாரம் பாரீர்!

பட்டுக்கோட்டை, டிச.20- அரசுத் துறை வளாகங்களில் எந்த மத சம்பந்தமான கோயில் களுக்கும் அனுமதி யில்லை என்று தெளி வான அரசாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் பட்டுக்கோட்டையில் பொதுப் பணித்துறை வளாகத்தில் உள்ள கோயில் புதுப்பித்தல் மற்றும் குடமுழுக்கு நடைபெற துறை அதி காரிகள் கூட்டம் நடை பெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது அரசு அதிகாரிகளே அரசா ணையை மீறிய செய லாகும்.

இது தொடர்பாக அறிவிப்பும் அதை நிறுத்த எழுதிய விவரங்கள் வரு மாறு:

அறிவிப்பு:

அன்புடையீர்,

வணக்கம். நமது பொதுப்பணித்துறை வளாகத்தில் அமைந் துள்ள சிறீகற்பக விநாய கர் ஆலய கும்பாபிஷே கம் 2015ஆம் ஆண்டு நடைபெற வேண்டி உள் ளதால் கோவில் புதுப் பித்தல் தொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆலோ சனைக் கூட்டம் எதிர் வரும் 19.07.2013 வெள் ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பொதுப் பணித் துறை வளாகத் தில் உள்ள விவசாயிகள் கூட்ட அரங்கில் நடை பெறவள்ளது. அது சமயம் அனைத்துப் பொறியாளர்களும், அலுவலர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க கேட்டுக் கொள் கிறோம்.

இப்படிக்கு,
கோவில் நிர்வாகிகள்
சிறீ கற்பக விநாயகர் ஆலயம், பட்டுக்கோட்டை

கழகத்தின் சார்பில் கடிதம்

பட்டுக்கோட்டை திராவிடர் கழக நகர தலைவர் அ. காளிதாசன் 19.12.2013 அன்று பட்டுக் கோட்டை செயற்பொறி யாளர் அவர்களுக்கு எழுதிய கடிதம் விவரம்:

தஞ்சாவூர் மாவட் டம், பட்டுக்கோட்டை வட்டம், நகரம் பொதுப் பணித் துறை அலுவலக வளாகத்தில் கல்லணை கால்வாய் உபகோட்டம் பிரிவு -2 அலுவலகம் அருகில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் பொதுப்பணித்துறை யினரால் குறிப்பாக கல் லணை கால்வாய் உப கோட்டம் - 2 அலுவலக ஊழியர்களால் பிள்ளை யார் கோவில் கட்டப் பட்டு வருகிறது. அரசுக் குச் சொந்தமான நிலத் தில் எந்த மத சின்னங் களும், கோயில்களும், வழிபாட்டுத் தளங் களும் கட்டக் கூடாது என்று அரசு ஆணையும், நீதிமன்ற உத்தரவும் இருந்த போதிலும் தற் போது சட்டத்தை மீறி மேற்கண்டவாறு பிள்ளை யார் கோவில் கட்டி வருவது சட்ட விரோத மாகும். இதனால் மதக் கலவரங்களும், ஜாதியப் பிரச்சினையும், பொது மக்களுக்கு இடையூறும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகவே அய்யா அவர் கள், பொதுப்பணித் துறை அலுவலக வளா கத்தில் கட்டப்பட்டு வரும் பிள்ளையார் கோயில் கட்டுமானப் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தியும் கட்டப்பட்ட அஸ்திவா ரத்தை அப்புறப்படுத்தி யும், சட்டத்திற்குப் புறம் பாக கோயில் கட்ட காரணமாக இருந்த பொதுப் பணித்துறை யினர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இதன் நகல்

தமிழக முதலமைச்ச ரின் தனிப் பிரிவு, தஞ்சை மாவட்ட ஆட்சியர், தலைமைப் பொறியா ளர், பொதுப்பணித் துறை ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.

காவல் நிலையத்தில் யாகமா? ஆய்வாளர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலையத்தில் அந்த சரகத்தில் சமீப காலமாக கொலை கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதி கரித்து விட்டன என் றும் அதற்குக் காரணம் கெட்ட ஆவிகளின் நடமாட்டம் தான் என் றும் அந்த ஆவிகளை விரட்ட யாகம் ஒன்று காவல் நிலைய ஆய் வாளர் தலைமையில் நடைபெற்றதாக தின கரன் நாளிதழில் 15.11.2013 அன்று புகைப்படத் துடன் செய்தி வெளி யிடப்பட்டிருந்தது. இந்த செயல் அரசி யல் சட்டத்துக்கு முர ணானது என்றும் தமி ழக அரசு மற்றும் மத் திய அரசின் ஆணை களை மீறிய செயல் என்றும், ஏற்கெனவே மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இரண்டு நீதி பதிகளைக் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப் புக்கு முரணானது என் றும் மேற்படி ஆய்வா ளர்மீது தக்க நடவ டிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பணி நிறைவு பெற்ற நீதிபதியும், திராவிடர் கழக சட்டத்துறை துணைத்தலைவருமான பொ.நடராசன் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேற்படி வழக்கு 19.12.2013 அன்று நீதியர சர்கள் திரு. ஆர். சுதா கரன் மற்றும் திரு. வைத் தியநாதன் ஆகியோர் களைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப் பில் வழக்கறிஞர்கள் ந.தமிழ்மணி, மற்றும் ந. இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இரு தரப்பு வாதங் களைக் கேட்ட நீதியரசர் கள் காவல் நிலையத்தில் யாகம் நடத்திய காவல் ஆய்வாளர் மாரிமுத்து அவர்களை வருகிற 06.01.2014 அன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72360.html#ixzz2o1bs8aWm

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/72354.html#ixzz2o1cSunMA

தமிழ் ஓவியா said...


டிசம்பர் 24 - திரள்வீர்!



உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி -தன்னிடம் பயிற்சியாளராக வந்த பெண் வழக்குரைஞரிடம் நடந்து கொண்ட கேவலமான போக்கு நாற்றமெடுத்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்த மூவர் பேர்கள் கொண்ட குழுவும் விசாரணை நடத்தி குற்றச்சாற்றில் உண்மை இருக்கிறது என்று கூறி விட்டது. கங்குலி ஓய்வு பெற்று விட்டதால் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றமோ கையை விரித்து விட்டது.

சரி, அது போகட்டும்; மேற்கு வங்க அரசு என்ன செய்திருக்க வேண்டும்? வழக்கைப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட வேண்டாமா?
மேற்கு வங்க முதல் அமைச்சரின் கடமை வெறும் கண்டனத்தோடு நின்று விட்டால் போதுமா? அவர் அதிகாரத்தின் கீழ் தானே அம்மாநிலக் காவல்துறை இருக்கிறது?

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும்கூட பொதுவாக அவாளுக்கே உரிய குணத்தோடு - இறுமாப்போடு நடந்து கொள்வதைக் கவனிக்க வேண்டும்.

மேற்கு வங்க மாநில மனித உரிமைக் குழுவின் தலைவராக இருக்கும் அவர் அந்தப் பதவியிலி ருந்து தார்மீக ரீதியாக விலகி இருக்க வேண் டாமா? முதல் அமைச்சர் விலகுமாறு கோரிக்கை வைத்தும் பதவி விலக முடியாது! என்று கண்டிப் பாகக் கூறி மார்க்கண்டயர் போல பதவி நாற் காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள் ளாரே - இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி என்பது!

இதில் ஒரு வெட்கக்கேடு - முன்னால் மக்களவைத் தலைவரும் மார்க்சியவாதியுமான சோம்நாத் சட்டர்ஜி ஏ.கே. கங்குலிக்கு வக்காலத்து வாங்குவதுதான்.

குற்றம் சுமத்தப்பட்டதாலேயே கங்குலி விலக வேண்டுமா? அப்படி விலகினால், குற்றத்தை ஒப்புக் கொண்டதாகி விடுமே என்று வக்காலத்து வாங்குகிறார். அவரா பேசுகிறார்? அவரின் பூணூல் பாசம்அவ்வாறு பேசச் செய்கிறது. தனது பேரனுக்கே அச்சுப் போட்டு அழைப்பிதழ் அடித்து, பூணூல் கல்யாணத்தை சாங்கோ பாங்கமாக நடத்தியவர் ஆயிற்றே! அவர் அப்படித்தான் நடந்து கொள்வார்.

2ஜி வழக்கில்கூட ஆ. ராஜாமீது குற்றப் பத்திரிக்கைதான் தாக்கல் செய்யப்பட்டது.

அவர்மீதான வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படவில்லையே! அப்படி இருக்கும்போது இன்னும் ராஜா எப்படி அமைச்சராக நீடிக்கலாம்? என்ற கேள்வியை எழுப்பியவர் அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த இதே ஏ.கே.கங்குலிதான்.
இவர்கள் மனு தர்மச் சிந்தனையாளர்கள் ஆயிற்றே! ஒரு குலத்துக்கொரு நீதி என்ற மனப்பான்மை அவர்களின் குருதியிலேயே குடிகொண்டதாயிற்றே! அதனால்தான் ராஜாவுக்கு ஒரு நீதி - கங்குலிக்கு இன்னொரு நீதி.

ஆந்திர மாநிலத்தில் ஆளுநராக இருந்த என்.டி. திவாரி (87) என்ற பார்ப்பனரும் ஆளுநர் மாளி கையிலேயே கிருஷ்ண லீலைகளை நடத்தினார். பிரச்சினை பூகம்பமாக வெடித்துக் கிளம்பியது; அப்பொழுதுகூட தானாக முன் வந்து பதவி விலகவில்லை.

அழுத்தம் கொடுக்கப்பட்டதற்குப் பிறகுதான் அந்தப் பதவி நாற்காலியை விட்டு எழுந்திருந்தார்.

சட்டப்படி மேலும் நடவடிக்கைகளை எடுத் திருக்க வேண்டாமா!

இவ்வளவு நடந்திருந்தும் பார்ப்பன ஊடகங்கள் கங்குலி பிரச்சினையில் கமுக்கமாகவே நடந்து கொண்டு வருகின்றன. நிகழ்கால நடவடிக்கை களை அந்தந்த வாரமே அலசும் துக்ளக் இதழில், கங்குலி பற்றிய ஒரு நிகழ்வே நடந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

கொலை வழக்கில் சிக்கிய சங்கராச்சாரியார் பிரச்சினையில் பார்ப்பன ஏடுகள் எப்படி நடந்து கொண்டன என்பதைத் தெரிந்து கொண்டால் இந்த 2013ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் பூணூல் பாசத்தோடும், நோக்கத்தோடும்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை எளிதில் அறியலாம்.

இந்த உண்மைகள் எல்லாம் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் பிசிறு இன்றித் துல்லிய மாகப் புலப்படும்; பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள ஏ.கே.. கங்குலிமீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி தந்தை பெரியார் நினைவு நாளன்று காலை 11 மணிக்கு சென்னை விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திரள்வீர்! திரள்வீர்!!

Read more: http://viduthalai.in/page-2/72355.html#ixzz2o1cbwLrR

தமிழ் ஓவியா said...


நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மாத்திரைகள் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்



லண்டன், டிச. 20-இந்தி யாவின் மிகப்பெரிய மருத்துவ சவால்களுள் ஒன்றாக நீரிழிவு நோய் இருந்து வருகின்றது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இந்தி யாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டக்கூடும் என்று கணக் கிடப்பட்டுள்ளது. இது முன்னர் கணக்கிடப்பட்ட 87 மில்லியன் என்பதைவிட அதிகமாகும். டைப்-1 என்ற வகை நோய்க்குறைபாடு, உடலில் தேவையான இன்சுலின் சுரக்காதபோது ஏற்படும் ஒன்றாகும். உடலில் உள்ள இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுகோசைக் கரைக்கா விடில் டைப்-2 எனப்படும் நோய்த் தாக்கம் தோன்றும். இது கடுமை யான பிரச்சினைகளை உருவாக் கக்கூடியதாகும்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண் டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இன்சுலின் மருந்து இந்த நோய் கண்ட ஏராளமான மக்களுக்கு உயிர் காக்கும் மருந்தாகப் பயன் பட்டு வருகின்றது. ஆயினும், இந்த மருந்தை தினமும் ஊசி மூலம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் வலி தராத மாத்திரை வடிவத்தில் இந்த மருந்தினைப் பெற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயன்று வந்தனர்.

1930 ஆம் ஆண்டிலிருந்து ஆய்வில் இருக்கும் இந்த முயற்சி யில் தற்போது இந்திய விஞ் ஞானிகள் வெற்றி பெற்றுள்ள விபரம் அமெரிக்கன் கெமிகல் சொ சைட்டி இதழில் வெளிவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு நிரூபிக்கப் பட்டு பயன்பாட்டுக்கு வருமேயா னால் பாதுகாப்பற்ற ஊசிகளால் ஏற்படும் பின்விளைவுகளில் இருந் தும், தினமும் ஊசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் வலிகளி லிருந்தும் நீரிழிவு நோயாளிகள் நிவாரணம் பெறமுடியும்.

மாத்திரை வடிவில் பெறப்படும் இன்சுலின் மருந்துகள் நீரிழிவு நோயாளிகளின் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இன்னும் அதிக அளவிலான பரி சோதனைகள் இந்த கண்டுபிடிப் பில் தேவைப்படும்போதும் இந்த மாத்திரைகள் பயன்பாட்டிற்கு வரும் காலத்தை எதிர்நோக்குவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த நீரிழிவு நோய் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லிப்பி டோவ்லிங் தெரிவிக்கின்றார்

Read more: http://viduthalai.in/page-2/72370.html#ixzz2o1dOrDDF

தமிழ் ஓவியா said...


சிரிக்க... சிந்திக்க!


ஆஸ்திகன்: (மகனை நோக்கி) ஏய் தம்பி, நரசிம்மா! கொல்லைக் கதவைத் தாளிட்டியா? குறுக்குத் தாழ்ப் பாளைப் பார்த்தியா? தெருக்கதவைத் தாளிட்டியா? ஜன்னலை ஒழுங்காக மூடுனியா? சாவிக் கொத்தை தலைகாணிக்கு அடியில் ஜாக்ரதையா வைச்சிட்டுயா? ஏன் னா ஊரெல்லாம் ஒரே திருட்டுப் பயம்!

மகன்: என்னப்பா இப்படி பயப்படுறேள்? நம்ப ஜாக்ரதையிலே என்ன இருக்கு? எல்லாம் எமை ஆளும் ஈசன் செயல்! என்னதான் பாதுகாத்தாலும், எப்படியும் போறது போவத்தான் செய்யும்! நீங்கள் அடிக்கடி சொல்ற மாதிரி...

ஆஸ்திகன்: ஊம் வாயை மூடு! என் பிரசங்கத்தை என்னிடமே காட்டுறியா? அதிகப் பிரசங்கி! அதெல் லாம் முட்டாப் பசங்களுக்குச் சொல்றப் பேச்சு! கதவைத் திறந்து போட்டுண்டு, எல்லாம் கடவுள் செயலுன்னு தூங்குற ஒரு பக்தனைக் காட்டு என்னிடம். பைத்தியக் காரா! கடவுளுக்கே பூட்டும் சாவியும் வேண்டி இருக் குடா - அதுவும் பூசணிக்காய்ப் பெரிசுலே!

@@@@@@@@@@@@

காவலர்: திருடினதுதான் திருடினாய், சாமி நகையைத் திருடலாமா?

திருடன்: பற்றற்றவனாயிற்றே பகவான்! அவனுக்கு எதற்கு இந்த நகை என்று திருடிவிட்டேன்.

காவலர்: பகவான் நகையை உன் மனைவி கழுத்தில் சூட்டலாமோ?

திருடன்: பற்றுள்ளவளாயிற்றே அவள். பற்றற்ற திலிருந்து கிளம்பி பற்றை நோக்கிச் செல்வதுதானே ஆத்மார்த்தம்!

@@@@@@@@@@@@

புலி: கடவுளே! உன் கருணையே கருணை! என்னையும் படைத்து, இந்த ஆட்டையும் படைத்தாயே! இல்லாட்டிப் போனா என் வயிறு என்னாவறது? ஈசனே, உன்னைப் போற்றுகிறேன்; உன் புத்தியை மெச்சு கிறேன்!

ஆடு: நாசமாய்ப் போன கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? கருத்தில்லையா? என்னைத்தான் படைத்தாய்; இந்தப் பாழாய்ப் போன புலியையும் ஏன் படைத்தாய்? உன்னை போயும் போயும் கருணாமூர்த்தி என்கிறார்களே - இந்தக் கபோதிகள்! வெட்கக்கேடு! அசல் வெட்கக்கேடு!!

Read more: http://viduthalai.in/page-7/72348.html#ixzz2o1dsvFqs

தமிழ் ஓவியா said...


மோ(ச)டிமீது விசாரணை ஆணையம்


புதுடில்லி, டிச.20- நரேந்திர மோடி உத்தரவுப்படி இளம்பெண்ணை குஜராத் காவல்துறையினர் உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை இம் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் உளவு பார்த்ததாக கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு பத்திரிகை தகவல் வெளியிட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக மோடியின் நெருங்கிய நண்பரும், குஜராத் உள்துறை முன்னாள் அமைச்சருமான அமித் ஷா காவல்துறை அதிகாரி சிங்கால் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய சி.டி.யையும் வெளியிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேற்று (19.12.2013) அளித்த பேட்டியில், இளம்பெண்ணை உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, பல தொண்டு அமைப்பு களும், பெண்கள் அமைப்புகளும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத் துள்ளன.

குடியரசுத் தலைவர் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் அதை பரிசீலித்து வருகிறது. இது எந்தக் கட்சிக்கும் எதிரான நட வடிக்கை இல்லை. குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தால், இது தொடர்பாக விரைவில் விசாரணைக்கு உத்தர விடப்படும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத் தில், விசாரணை ஆணை யம் அமைக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கோரப்படும், உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே சம் மந்தப்பட்ட பெண்ணின் தந்தை, தேசிய மகளிர் ஆணையத்துக்கும், குஜராத் மாநில மகளிர் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், தனது மகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அவர் எந்தப் புகாரும் தர விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/72326.html#ixzz2o1e5tWCc

தமிழ் ஓவியா said...


கடவுளுக்கு ஏது முகவரி?

- சிவகாசி மணியம்

வரும் ஆனா வராது என்ற ரெண்டும் கெட்டான் வசனத்தைக் கேட்டுச் சிரித்தவர்கள் உண்டு. ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்கென சொல்லப்பட்டது. பத்திரிகைகளிலும் இதுபோன்ற சொல்லாடல்கள் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு.

கடவுள் இருக்கிறாரா? என்பது கேள்வி. பெரியார் மொழியில் சொல்வதானால் இல்லவே இல்லை என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும். ஆனால் குமுதம் அரசு (18.12.2013) இருக்கிறார். ஆனால் முகவரி இல்லை என்கிறார்.

சிரிப்பவர்களுக்கு வேலை இருக்கலாம். சிந்திப்பவர்களுக்கு? அண்ட சராசரங்களையும் ஆட்டிப் படைப்பதாகச் சொல்லப்படும் ஆண்டவனுக்கா அட்ரஸ் இல்லை? அறிவுக்கும், உண்மைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? வெட்டு ஒன்று. துண்டு இரண்டு! இதுதான் பகுத்தறிவு, படித்தவரின் எதிர்பார்ப்பு!

இல்லை என்பான் யாரடா? தில்லையிலே வந்து பாரடா? என்று பாடியவர்கள் இப்போது இல்லை. ஆனாலும் அதில் கடவுளின் முகவரி இருக்கிறதே.

நடராஜப் பெருமான், காலைத் தூக்கி நின்றாடும் தெய்வம், சிதம் பரம், கடலூர் மாவட்டம் சரிதானே! இதோ இன்னொரு கடவுளின் முகவரி: மணிகண்டன் என்ற அய் யப்பன் தாய் தந்தை பெயர் விஷ்ணு, சிவன், சபரிமலை, கேரள மாநிலம். இதுபோல வெங்கடாசலபதி, பணத்தை வாரி வழங்கும் கடவுள், திருப்பதி, ஆந்திர மாநிலம்! மீனாட்சி க/பெ சொக்கன், மதுரை. முருகன் என்ற ஆண்டி, பழனி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாமே.

தூணிலும் இருப்பான், துரும் பிலும் இருப்பானாமே, அப்படி யானால் மிஸ்டர் கடவுள், இருப்புத் தூண் அல்லது துரும்பு என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப லாமே? கைலாயமும், வைகுண்டமும் கடவுள்கள் குடியிருப்பு என்பதை மறக்கலாமா! கோகுலமும், துவார கையும், பிருந்தாவனமும், யமுனை ஆற்றங்கரையும் குழலூதும் கண்ணன் வளையவரும் இடமா யிற்றே! திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட சிறீமன் நாராயணனும் முகவரி இல்லாதவன் தானா? பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே என்கிறார்களே அதுகூட பித்தலாட்டம்தானா? பரலோக சாம்ராஜ்யம் என்பதெல்லாம் தேவர்கள் நடமாட்டமில்லாத வெறும் பாலைவனம்தானா?

கண்ணீர் அஞ்சலி சுவரொட் டிகளில் இறைவனடி சேர்ந்தார் என்று எழுதுகிறார்களே அவர்க ளெல்லாம் அட்ரஸ் இல்லாதவன் காலடியிலா அடைக்கலம் ஆகிறார்கள்?

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற வர்களே. என்னிடத்தில் வாருங்கள். எல்லோருக்கும் இளைப்பாறுதல் தருகிறேன் என்ற கர்த்தர் அழைப்பை ஏற்று அவரிடத்தில் போகிறவர்கள், அட்ரஸ் இல்லாத இலக்கை நோக்கியா இன்று வரை போய்க் கொண்டிருக்கிறார்கள்? கண் மூடிப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிப் போன பக்தர்களை விட்டு விடுவோம்.

வரிசையில் நின்று, காத்துக் கிடந்து வாக்களித்து தேர்ந்தெடுக்கும் மக்கள். அவசியம் ஏற்படும் போது அரசு அலுவலகப் படிக்கட்டுகளில் ஏறினால், அடையாள அட்டை எடு, ஆதார் அட்டை காட்டு, குடும்ப அட்டை எங்கே என்றெல்லாம் கேட்கும் ஆட்சி அதிகாரத்திலுள்ள வர்கள் முகவரியே இல்லாத கடவுளை மட்டும் சந்தேகத்திற்கிட மின்றி நம்பிக் கிடக்கிறார்களே அது எப்படி? முகவரி இல்லாதவன் இருந்தென்ன இல்லாமல் போனால்தான் என்ன?

Read more: http://viduthalai.in/page2/72380.html#ixzz2o6qT3mHF