Search This Blog

13.12.13

பிராமணாள் ஒழியவில்லையா? - பெரியார்

”ஜாதி ஒழிய வேண்டுமென்று நாங்கள் சொல்லி வருகிறோம். அதற்குப் பார்ப்பனர்கள் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது! எல்லா பத்திரிகைகளும் எதிர்த்து நிற்கின்றன!

இந்தியாவின் படத்தின் தலைப்பில் என்னுடைய பொம்மை போட்ட தீப்பெட்டியை வைத்து, எதிரில் ஆச்சாரியாரைப் பிச்சை எடுப்பது போன்ற வேஷம் போட்டு

'ஜனநாயகமே! அது பொய்யடா! வெறும் காற்றடைந்த பையடா! ஜாதியும் ஒரு பேயடா; நான் சொல்லிவிட்டேன் இது மெய்யடா!" என்று அவர் பாடிக்கொண்டே பிச்சை எடுக்கிறதாக 'ஆனந்த விகடனே' படம் போட்டுக் காட்டுகிறது என்றால் நாம் நினைப்பது எப்படித் தவறாக முடியும்? அரசமைப்புச் சட்டம் ஒழியாதவரை ஜாதி ஒழியாது என்பதை நாம் உணர்ந்து விட்டோம்.

அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த அரசமைப்புச் சட்டத்தை வைத்துக் கொண்டு ஆள்கிற வட நாட்டான் சம்பந்தம் நமக்கு வேண்டாம் எங்களுடைய ஆட்சி எங்களுக்கு வேண்டும் என்பதற்கு அறிகுறியாக இந்தியாவின் படத்தை எரிப்போம் என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டோம். அதற்காக ஒரு மாநாடு நடத்தப் போகிறோம்.

சட்டத்தை எரித்து சிறைசென்றது நாலாயிரம் என்றால் இதில் நாற்பதினாயிரம் பேர் என்று கணக்கு வரவேண்டும்! விடுதலை கணக்கு வர வேண்டும்! விடுதலை நாளிதழில் ஒவ்வொருவர் பெயரும் வந்து கொண்டே இருக்க வேண்டும். போலீஸ்காரன் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்து நம்மைப் பிடிக்க வேண்டும்.

மக்களுக்கு இந்த ஆட்சி பிடிக்கவில்லை. ஜாதி பிடிக்காமல், மதம் பிடிக்காமல் செய்கிற கிளர்ச்சியில் பார்ப்பனர்கள் டில்லியை நோக்கி வருகிறார்கள் என்ற நிலைமை வரட்டுமே! அப்படிச் செய்தால் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்படலாம்! அவ்வளவுதானே? நீ என்ன யோக்கியமான முறையில் ஆட்சியில் இருக்கிறாய்? சட்டத்தை மீறி நெருப்பு வைத்து, வெடிகுண்டு வீசி, வெள்ளைக்காரனுடைய சாமான்களை எல்லாம் நாசப்படுத்தி மந்திரியாக வந்த சதிக்காரக் கும்பல்தானே? அல்லது 'எனக்குத் தனித்த யோக்கியதை இருக்கிறது திறமை இருக்கிறது இந்த நாட்டை ஆள' என்று சொல்ல முடியுமா?


நான் கேட்கிறேன்: ராஜேந்திர பிரசாத்துக்கும் இந்த நேருவுக்கும் என்ன தகுதி இருக்கிறது? அல்லது காமராசர் சுப்ரமணியம் பக்தவத்சலம் கக்கன் போன்றவர்கள் எங்கிருக்க வேண்டியவர்கள்? இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? எல்லோரும் காலித்தனம் செய்து குழப்பம் உண்டாக்கித்தானே போனார்கள்? அதைத்தான் நாங்களும் செய்கிறோம்.

காங்கிரஸ்காரர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றால், போஸ்டாஃபிசுக்கு (அஞ்சல் நிலையம்) நெருப்பு வைக்கிறது, தந்திக் கம்பியை அறுப்பது, இரயிலுக்கு வெடி வைப்பது என்பதில் நமக்கு நம்பிக்கையில்லை. போலீசுக்காரனுக்குக்கூட ஒரு அடி விழாமல் நாங்கள் உஷாராக இருந்து காரியம் செய்து கொண்டு வருகிறோம். எங்களைவிட இந்த நாட்டில் பொறுப்பை உணர்ந்து எந்தக் கட்சிக்காரர்கள் கிளர்ச்சி செய்கிறார்கள்?

நேரு தமிழ்நாடு வந்தபோது செருப்பை வீசினான். அவர்களை ஒன்றும் செய்யவில்லை! எவனோ ஒருவன் திராவகத்தை வீசினான். வீசினான் என்பதற்காகத் திராவிடர் கழகத்தார்களை இல்லாத பாடெல்லாம் படுத்தினார்கள். யாரோ சிலர் மீது பொய்க் கேஸ் (வழக்கு) கொண்டு வந்தார்கள். ருசு (நிரூபணம்) ஆகவில்லை ஏன்று கேசைத்தான் விட்டார்கள்! அதுபோலவே பூணூல் அறுப்பு கேசும் (வழக்கு) ஆகும்.

நாங்கள் செய்கிற காரியத்தினால் ஒன்றும் ஆகாது என்று நினைக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நாம் சொல்கிற, செய்கிற காரியம் வெற்றி தரும் என்று உறுதியான எண்ணமும் அதன்மேல் எழும், அதைவிட உறுதியும் இருக்கிறது.

பார்ப்பான் ஓட்டல் முன்பு மறியல் செய்த போது இது உன்னால் முடியாது என்று சொன்னார்கள். நான் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும்போது ஒருவர் வந்து சொன்னார். இரவோடு இரவாக எடுத்து விட்டுச் சங்கராச்சாரியார் சொன்னதாகச் சொல்கிறார் என்றார்கள். கேட்டுச் சிரித்தேன் நான் சொல்லாமல் சங்கராச்சாரியார் மேல் சொல்கிறாரே இவரைவிட அவர் வீரர் என்பதனால்.

---------------------------------------- 15.08.1958-அன்று சென்னையில்பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: -”விடுதலை” 22.08.1958


35 comments:

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/71973.html#ixzz2nMT85blY

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

பிறந்தநாளில் கேக் வெட்டும் பொழுது அதில் மெழுகுவர்த்தியை ஏற்றுகிறார்கள் - பிறந்த நாள் யாருக்குக் கொண் டாடப்படுகிறதோ, அவரை விட்டு ஊதச் செய்கிறார் கள். மெழுகு வர்த்தியின் துகள்கள் கேக்கில் விழு கின்றன. இது உடல் நலனுக்குக் கேடு என்று கண்டறியப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/71961.html#ixzz2nMTLyuW1

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் கோயிலுக்குச் சென்ற அய்யப்பப் பக்தர்கள் 19 பேர் நெஞ்சுவலி காரணமாக பரிதாப மரணம்


அந்தோ பரிதாபம்!

அய்யப்பா! - உன்னை நம்பியோர் கெதி இப்படியாப்பா?

அய்யப்பன் கோயிலுக்குச் சென்ற அய்யப்பப் பக்தர்கள்

19 பேர் நெஞ்சுவலி காரணமாக பரிதாப மரணம்

மதுரை மீனாட்சியின் கோயில் மின்னல் தாக்கி கோபுரம் தூள்

திருவனந்தபுரம், டிச.13- கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநி லங்களில் இருந்தும் பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி செல்கி றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பம்பையில் இருந்து நடந்தே சபரிமலை செல் வது வழக்கம். அவ்வாறு போகும்போது மலை யில் ஏறும்போது ஏற்படும் ரத்த அழுத்தம் காரணமாகவும் உடல் நலக்குறைவு ஏற்படுவது வழக்கம். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெருவழி நடை பாதை முழுவதும் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு நோய் வாய்ப்படும் பக்தர்களுக்கு உடனே முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பெரிய மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இம்முறை சபரி மலையில் கோவில் நடை திறந்த பின்பு வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ள னர். ஆனால் எப்போதும் இருப்பதை விட இம் முறை கேரளாவில் பருவ மழையும், குளிரும் நில வியதால் பக்தர்கள் பல ரும் பாதிக்கப்பட்டனர்.

நெஞ்சுவலி ஏற்பட் டும், மூச்சுதிணறலாலும் பாதிக்கப்பட்ட அவர் களுக்கு அய்யப்ப சேவா சங்கத்தினர் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் இது வரை 19 பேர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் 2 பேர் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பலியாகி விட்டனர்.

இவர்களின் உடல் களை அய்யப்ப சேவா சங்கத்தினர் அவரவர் ஊர்களுக்கு எடுத்து சென்று உறவினர்களி டம் ஒப்படைத்தனர்.

மின்னல் தாக்கி கோபுரம் தூள்! மதுரை மாநகரில் நேற்று இரவு 9 மணி யளவில் இடி-மின்ன லுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின் னல் தாக்கியதில் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில் சேதம் ஏற் பட்டது.

கிழக்கு ராஜ கோபுரத்தின் உச்சியில் இருந்த வடக்கு நாசி தலத்தின் ஒரு பகுதியை மின்னல் தாக்கியது. இதனால் அதன் ஒரு பகுதி கீழே விழுந்தது. தகவலறிந்த கோவில் இணை ஆணையர் செய ராமன் மற்றும் அதி காரிகள் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். கிழக்கு கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களி லும் இடிதாங்கி பொருத் தப்பட்டு இருந்ததால் பெருத்த சேதம் தவிர்க்கப் பட்டது.

மீனாட்சி அம் மன் கோவிலில் உள்ள 4 ராஜ கோபுரங்களில் கிழக்கு கோபுரம் மிகவும் பழமையானது. மாற வர்மன் சுந்தரபாண்டி யன் என்ற அரசனால் கடந்த 1216-1238 ஆண்டுக் குள் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக நம்பப் படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/71962.html#ixzz2nMTU6hS9

தமிழ் ஓவியா said...


சிந்தனைக்குத் தடை


பகுத்தறிவுக்கு எதிரிகள் நம்நாட்டில் தான் எப்பொழுதும் இருந்து கொண்டு வருகிறார்கள் என்பதில்லை. உலகெங்கும் மதத்தரகர்களின் தாக்கு தல்களுக்கு பகுத்தறிவாளர்கள் இலக்காகிக் கொண்டே இருந்துவர நேர்ந்துள்ளது.

சுயசிந்தனையாளர்கள் கிளர்ந்தெழாமல் மதப்பிடியில் சிக்கித் தவிக்க நேரிட்டது. ஒரு சுய சிந்தனையாளன் என்பவன் யார் என்று பொருள் கூறுமிடத்து மதத்தை மறுப்பவன்; நாத்திகவாதி என்று அகராதிகளில் குறிப் பிடப்பட்டுள்ளது. மதத்தின் கோரப்பிடியில் உலகின் மிகப் பெரும் சுயசிந்தனையாளர்கள் எல்லாம் சிக்கி உழன்று விடுபட பெரும்பாடுபட நேர்ந்தது.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் தந்தை சிறு குழந்தையான ரஸ்ஸல் மூட நம்பிக்கை இல்லாதவராக வளர இரண்டு சுயசிந்தனையாளர்கள் (பகுத்தறிவாளர்கள்) அவரை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டு மறைந்தார். அதற்காக இரண்டு சிந்தனையாளர்களையும் நியமித்தார்.

ஆனால் இவ்வாறு நியமித்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தோடு கிறிஸ்து மத நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரை வளர்த்து வர வேண்டும் என்றும் ஆணையிட்டது.

Read more: http://viduthalai.in/page-7/71941.html#ixzz2nMUmTSBy

தமிழ் ஓவியா said...


மதம்


பிறருக்கு உழைத்து உழைத்து உருக்குலையும் மக்களை உற்பத்தி செய்யவும், அவர்களை விடுதலை அடைய வொட்டாமல் அழுத்தி வைக்கப் பயன்படுகிற ஆபத்தான ஆயுதங்களில் மிக முக்கியமானது மதம். - லெனின்

Read more: http://viduthalai.in/page-7/71944.html#ixzz2nMUyfrIF

தமிழ் ஓவியா said...

பூதங்களின் வேலையாம்!

இலேசான பாத்திரம் ஒன்றையும், கனமான பாத்திரம் ஒன்றையும் உயரமான ஒரு இடத்திலிருந்து கீழே போட்டால், கனமான பாத்திரம் சீக்கிரம் கீழே விழுந்து விடும் என்றும், இலேசான பாத்திரம் கீழேவிழ அதிக நேரம் பிடிக்கும் என்றும் மக்கள் கருதி வந்தார்கள்.

15, 16ஆம் நூற்றாண்டுவாக்கில், கலிலியோ என்ற இத்தாலிய விஞ்ஞானி இத்தாலியில் உள்ள சாய்வுக் கோபுரத்தின் மேல் ஏறி நின்று இலேசான பாத்திரம் ஒன்றையும் கனமான பாத்திரம் ஒன்றையும் ஒரே நேரத்தில் கீழே போட்டுக் காட்டி இரண்டும் ஒரே சமயத்தில்தான் விழுகின்றன என்று நிரூபித்துக் காட்டினார்.

ஆனால் மதவாதிகள் இதைக் கண்டு அஞ்சி நடுங்கினர். கனமானதும், இலே சானதும் ஒரே நேரத்தில் வீழ்வது ஏதோ பூதங்களின் வேலைதான் என்று அஞ்சி னார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/71944.html#ixzz2nMV6ji8n

தமிழ் ஓவியா said...

ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் குற்ற வாளிகளல்ல; ஜாதி புனித மானது என்ற உணர்ச்சியை உண்டு பண்ணிய மதமே உண் மையிலே குற்றவாளி.

ஆதலால் ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் உங்கள் எதிரிகளல்ல. ஜாதி ஆச்சாரங்களைப் புனித மென்று வற்புறுத்தும் சாஸ்திரங்களே உங்கள் எதிரி. எனவே அந்த எதிரியைத் தான் நீங்கள் ஒழிக்க முயற்சிக்க வேண்டும். - டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page-7/71944.html#ixzz2nMVCSWv3

தமிழ் ஓவியா said...


பூசாரிகளின் யோக்கியதை!


இந்துமத அறக்கட்டளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் ஆண்டு நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக்கையை 1962ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காணப்படும் பூசாரிகள் பற்றி விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படுகின்றன.

நாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத்தது.

அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர். அல்லது அரைகுறை யாக படித்தவர்களாக இருக்கின்றனர்; இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற்சில சிறப்பான விதிவிலக்குகள் உள்ளன. இந்த விதிவிலக்குகள் வடக்கைவிட தெற்கேதான் அதிகம் - இவ்வாறுதான் தோன்றுகிறது.

பொருளறியாத புலம்பலே மந்திரம்!

அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந்தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது வருந்துதற்குரியது.

தெய்வத்தின் கருணையைப் பெறுவதற்காக கோயில் களுக்கு வரும் பக்தர்களிடத்திலும் வழிபடுவோரிடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக் கூடிய நிலை யில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை.

சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?

ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழி பாடு கொஞ்சம் கூட போதாது என்று கூறப்படு கிறது, தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதுகூட பூசாரிகளில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்று கிறது. தெய்வத்துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர் களுக்குத் தெரியவில்லை.

மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததைக் கண்டதாக திரு.ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார். தெய்வங்கள் பெயர்கள்கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை, எந்தவகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதும் அச்சிறுவனுக்கு தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-7/71947.html#ixzz2nMVKDl2f

தமிழ் ஓவியா said...

சீட்டுக்கட்டில் மதம் ஒழிப்பு

ஆரம்ப காலத்தில் மதம் ஒழிக்கும் பிரச்சாரத்தை ருசியா ஒரு நூதன முறையில் கையாண்டு வந்தது. ஒரு புதுவகையான சீட்டுக் கட்டுகள் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு சீட்டிலும் ஒவ்வொரு மதத்தைப் பற்றிக் கிண்டல் செய்யப்பட்டிருக்கும். ஆடுதன் என்று சொல்லப் படும் சீட்டில் ஒரு பாதிரியார் ஒரு பெண் மீது காமம் கொண்டு உருகுவது போலவும், டயமன் சீட்டில் யூதர்களின் மதச் சடங்கை கேலி செய்தும் சித்தரிக்கப் பட்டு இருக்கும்.

ருசியாவில் உள்ள கிறிஸ்தவ மதத்தைப் பழிக்கும் சித்திரம் ஸ்பேட் சீட்டுகளிலும் கீழ் நாட்டு மதங்களை எள்ளி நகையாடும் படம் கிளவர் சீட்டிலும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

மத இருளால் மக்கள் அல்லல் உற்றதையும், நாத்திகத்தால் அவர்கள் நலம் பெற்றதையும் சித்தரிக் கும் படம் ஆஸ் சீட்டில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இச்சீட்டின் ஒரு பகுதியின் பாதியில் காட்டுமிராண்டி வேஷங் கொண்டவர்கள் தம்பட்டம் அடித்து, தம் மதக் கொள்கைகளை ஏற்காதவர்களைத் தண்டிக்க சவுக்குகளும், கழு மரங்களும் தயார் செய்வது போலவும், இன்னொரு பாதியில் விஞ்ஞான சின்னங்களான இயந்திரங்கள் முதலியனவும்,

பள்ளிக் கூடங்கள், விளையாட்டுக் கருவிகள் இவைகளை குறிக்கும் பொம்மைகளும் அச்சிடப்பட்டிருந்தன. இச்சீட்டின் ஒரு முனையில் முன் அவ்வாறு இருந்தது என்றும் இன் னொரு முனையில் இனி இங்ஙனமிருக்கும் என்றும் எழுதப்பட்டிருந்தது.

Read more: http://viduthalai.in/page-7/71947.html#ixzz2nMVT4X4m

தமிழ் ஓவியா said...


செம்மொழி என்றாலே ஆட்சிக்கு ஒவ்வாமை! கலைஞர் பேட்டி


சென்னை, டிச.13- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் களை அவரது இல்லத்தில் நியூஸ் சைரன் வார இத ழின் சிறப்பு ஆசிரியர் ராவ், ஆசிரியர் எஸ்.சரவணக் குமார் ஆகியோர் சிறப்புப் பேட்டி கண்டனர். அப்பேட்டியில் கலைஞர் கூறியதாவது:

கேள்வி: செம்மொழி மாநாட்டை ஒரு தனி மனிதராக - எவ்வளவோ வேலை பளுக்களுக்கு இடையில் - தமிழ் உலகம் திரும்பிப் பார்க்குமாறு நடத்தினீர்கள். அதன் முழுப் பலனும் தமிழுக்குக் கிடைத்ததா?

கலைஞர்: கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி வேண்டும் என்பதற்காகப் பெரு முயற்சி மேற் கொண்டேன்; கிடைத்தது. செம்மொழித் தமி ழாய்வு மய்யத்தினைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென்று பாடுபட்டேன்; வந்தது. கோவையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பல அறிவிப்புகள் செய்யப் பட்டன.

அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் ஆட்சி மாறியது. இன்றைக்கு செம் மொழி என்றாலே ஆட்சியினருக்கு ஓர் ஒவ் வாமை! செம்மொழிப் பூங்காவைக் கூட பரா மரிக்க ஆட்சியினருக்கு மனம் இல்லை. செம் மொழி உயராய்வுப் பணிகளை ஊக்குவித்திடவேண்டும் எனும் நோக்கில், என்னுடைய சொந்தப் பணத்திலே ஒரு கோடி ரூபாயை செம்மொழி ஆய்வு நிறுவனத்திற் காக ஒப்படைத்து, அதிலே கிடைக்கும் வட்டித் தொகையிலி ருந்து ஆண்டுதோறும் தமிழ் ஆய்வில் தலைசிறந்த வல்லு நருக்கு விருது வழங்கக் கேட்டுக் கொண்டேன்.அந்தப் பணியைக்கூடச் சரியாகச் செய்ய யாரும் இப்போது முன்வரவில்லை.

கேள்வி: எப்போதும் தோழர்களுடன் வலம் வரும் நீங்கள், யாருமே இல்லாத ஒரு அறையில் தனிமையில் உட்கார்ந்து யோசித்த அனுபவம் உண்டா? எதைப்பற்றி?

கலைஞர்: காலை 10 மணிமுதல், இரவு 10.20 மணிவரை தோழர்களுடன்தான் வலம் வருகி றேன்; பல்வேறு பிரச்சினைகள் குறித்து அள வளாவுகிறேன். அந்த நேரம் தவிர, தனிமையில் இருக்கின்ற நேரங்களில், அடுத்த நாள் எதை எழுதலாம் என்று யோசிக்கிறேன். கடந்த காலங் களில் அவ்வாறு தனிமை கிடைத்த நேரங்களில் யோசித்தவைதான் பல நூல்களாக வெளி வந்தவை.

- இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டி யளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/71958.html#ixzz2nMVfoDL7

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கைகளை தடை செய்யும் சட்டம் மகாராஷ்டிரா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது


மும்பை, டிச.14-பில்லி, சூனியம், மந்திரம் போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடி வந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் என்பவர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி புனேயில் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, மூட நம்பிக்கைகளை பரப்பி வருவோரை சிறையில் அடைக்கும் சட்டத்தை மகாராஷ்டிரா அரசு அறிமுகப்படுத்தியது. மும்பை புறநகர் ரயில்களில் பில்லி, சூனியம், மந்திரம் தொடர்பாக விளம்பரப்படுத்த ரயில்வே நிர்வாகமும் தடை விதித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் மகாராஷ்டிர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மந்திரம், பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை தடை செய்யும் புதிய சட்டம் நேற்று (13.12.2013) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேல்சபையின் ஒப்புதலை பெற்றபின்னர் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்.

Read more: http://viduthalai.in/e-paper/71999.html#ixzz2nS6DmCGz

தமிழ் ஓவியா said...


பெண்களின் பாதுகாப்பிற்காக மொபைலில் அலாரம் பட்டன்' மத்திய அரசு திட்டம்

புதுடில்லி, டிச.14- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டில்லியில் மருத் துவ மாணவி ஓடும் பேருந் தில் பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையை உலுக்கி யது. இதனையடுத்து நாட்டில் பெண்களின் பாதுகாப்பை பலப் படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது, மொபைல் போன்களில் அலாரம் பட்டனை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத் தகைய வசதி கொண்ட மெபைல் போன்களைப் பயன்படுத்தும் பெண் கள், அவசர காலத்தில் இந்த பட்டனை அழுத்தி தங்களை காத்துக் கொள்ளலாம். அலாரம் பொருத்தப்பட்ட மொபைல்கள் தற்போது ஜெய்பூரில் பயன்பாட் டிற்கு வந்துள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அய்.டி துறை சார்பில் நடத்தப் பட்ட கூட்டத்தின் போது, இந்தப் புதிய அலாரம் முறையை அறிமுகம் செய்யும் முடிவை மத்திய நிதியமைச்சர் சிதம்பரத் திடம் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்க ளின் பாதுகாப்பிற்காக இந்தப் புதிய முறையை கொண்டு வரவும் அவர் கள் யோசனை தெரிவித் தனர். இது தொடர்பாக அய்டி அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறுகை யில், தற்போது சோதனை முறையாக இத்தகைய வசதி கொண்ட மொபைல் கள் புழக்கத்தில் விடப் பட்டுள்ளன; இது குறித்த விவரங்களை விரைவில் அமைச்சர் முறையாக அறிவிப்பார் என கூறி உள்ளார். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பெண் கள், இத்தகைய வசதியை பதிவிறக்கம் (டவுன் லோட்) செய்து கொள்ள லாம் எனவும், புதிய மாடல் மெபைல்களில் இந்த புதிய அலாரம் பட்டன் பெருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/72000.html#ixzz2nS6Uja43

தமிழ் ஓவியா said...


ஜெர்மன் தீர்ப்பாயமும் கூறி விட்டது!

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, ராஜபக்சே தலைமையிலான இலங்கை சிங்கள இன வெறி அரசு படுகொலை செய்தது -

உண்மைதான் என்று ஜெர்மன் நாட்டில் ப்ரமன் நகரில் கூடிய, மக்கள் தீர்ப்பாயம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. (10.12.2013)

தமிழகத்திலிருந்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், ஜெர்மன் தீர்ப்பாயத்திடம் கொடுத்த புகாரின் பேரில், இந்த விசாரணை நடைபெற்றது. மூன்று நாள் விசாரணையை நடத்திய, அந்தத் தீர்ப்பாயம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு கூறியுள்ளது.

1) ஈழத் தமிழர்களை, தனித் தனியாகக் கொலை செய்யாமல், தமிழர் என்ற இன அடிப்படையில், அந்த இனத்தின் அடையாளமே இல்லாமல் அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த இனப்படுகொலை நடந்திருக்கிறது.

2) விடுதலைப்புலிகளோடு அரசு நடத்திய போருக்கு முன்பாகவே, நீண்ட காலமாகவே இனப் படுகொலையை இலங்கை அரசு மேற்கொண்டு வந்தது. போருக்குப் பிறகும்கூட, இன அழிப்பை இலங்கை அரசு தொடர்ந்து கொண்டே இருந்தது.

3) உலக நாடுகளின் உதவியோடே இந்த இனப்படுகொலையை இலங்கை செய்தது என்றும், திட்டவட்டமாக ஜெர்மனி தீர்ப்பாயம் தெளிவுபடுத்தி விட்டது.

இந்தத் தீர்ப்பாயத்தில் உள்ள நீதிபதிகளில் ஒருவரான டென்னிஸ் ஹாலிடே யார் தெரியுமா? அய்.நா.வின் துணைத் தலைவராக இருந்தவர் ஆவார். என்னதான் இலங்கை அதிபர் தில்லுமுல்லு களையும் சூழ்ச்சிகளையும் பின்னினாலும் உலக மக்கள் மத்தியிலே ஓர் இனப்படுகொலையாளன் ராஜபக்சே என்கிற குரூர உருவம் சித்திரமாகத் தீட்டப்பட்டு விட்டது - அதை மாற்ற முடியவே முடியாது.

இந்தோனேசியா அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர், மார்ச்சுகி தாருஸ்மான் தலைமை யில், அமெரிக்காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரெட்னர், தென்னாப்பிரிக்க வல்லுநர் யாஷ்மின் சூக்கா, ஆகிய மூவர் அடங்கிய குழு இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புத் தொடர்பான அறிக்கையை, அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்-கீ- மூனிடம் அளித்தது (13.4.2011).

சிங்கள இனவாத அரசோ, ஒரே வரியில் இந்த அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறியது!

கிளிநொச்சி, முல்லைத் தீவுகளில் வாழ்ந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 ஆகும். இதனைத் தெரிவித்தது சிறீலங்கா அரசின் கச்சேரி (Local Govt Office) என்ற அமைப்பாகும்.

இந்தத் தமிழர்களின் எண்ணிக்கையில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 தமிழர்களே சிறீலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதாக அய்.நா.வின் ஒச்சா அமைப்பின் கணிப்புக் கூறுகிறது.

எஞ்சிய ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் என்ன ஆனார்கள்? என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய - குருதியை உறைய வைக்கக் கூடிய வினாவாகும்.

மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், விசரர் சூசை அடிகளார், சேவியர் குலூஸ் அடிகளார் ஆகியோர் இந்தத் தகவல்களை ராஜபக்சே தமக்குத்தாமே அமைத்துக் கொண்ட விசாரணைக் குழுவிடம் (LLRC) தெரிவித்தனரே!

இவ்வளவு நடந்தும், ஜெனீவா உலக மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டும், ராஜபக்சே எந்தக் குற்றமும் செய்யாத பெரு மகன் போலவே திரிந்து கொண்டுள்ளார்; போதும் - போதாதற்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராகவே ஆகிவிட்டார்.

ஆம் நாதுராம் கோட்சே நீதிபதி நாற்காலியில் அமர்ந்து காந்தியாரை விசாரிக்கிறார் - என்ன கொடுமையடா இது!

ராஜபக்சேவைத் தண்டிக்காவிட்டால், இந்தக் கால கட்டத்தில் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுமே குற்றவாளியாகத்தான் கருதப்பட நேரும் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/72002.html#ixzz2nS6qpMq3

தமிழ் ஓவியா said...


மொழியைப்பற்றி...

தமிழனைப்பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் மொழியைப்பற்றி நான் எவ்விதப் பிடிவாதம் கொண்ட வனுமல்ல.

- (குடிஅரசு, 26.1.1946)

Read more: http://viduthalai.in/page-2/72001.html#ixzz2nS6y7Suk

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி

எவ்வளவோ காலமாய் பார்ப்பனர்களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச ஞானமும் உதயமாகி நீக்கப்பட்டது என்று சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம். இன்னமும் இதுபோல் மலையாளத்திலும், தமிழ்நாட்டிலும் நடக்கக் கூடாததும், கிட்டே அணுகக் கூடாததுமான எத்தனையோ தெருக்கள் இருந்து கொண்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் வெள்ளைக்காரர்கள் வாய் மூலமாய்த் தீர்ப்பை எதிர்பார்க்கின்றார்களே ஒழிய, ஒரு பார்ப்பனருக்காவது புத்தி வந்து தாங்களாகவே அனுமதித்தார்களென்று சொல்லிக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றது. இனியாவது, சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த தலைவர்களுக்காவது திருவாங்கூர் அரசாங்கத்திற்காவது புத்தி வருமோ என்று கேட்கின்றோம். - குடிஅரசு - கட்டுரை - 27.11.192

Read more: http://viduthalai.in/page-7/72015.html#ixzz2nS7bq1tW

தமிழ் ஓவியா said...


காட்சிப்பிழை


பசுவின் கண்களில் கடவுள் தெரிகிறார்... வேப்பமர வேரில் கடவுள் காட்சியளிக்கிறார் என்று புரளிகள் கிளம்பும் போதெல்லாம், குடும்பத்துடன் சென்று மக்கள் கும்பிட்டு மகிழ்வார்கள். சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் கிளியின் உடலிலிருந்து திருநீறு கொட்டுகிறது என்று புரளி பரவி, அது கிளியோபாட்ரா அளவுக்குப் புகழ்பெற்றுவிடும். கடைசியில், மக்களின் தொந்தரவைத் தாங்க முடியாமல், மேற்கூரையிலிருந்து சிந்திய சுண்ணாம்புதான் அது என்று கிளியே சொல்லிவிடும்.

ஒரு கட்டத்தில் திருநீறு என்பதைப் பொடுகாக மாற்றிவிட்டார்கள் விளம்பரத்தை எடுத்தவர்கள். உலகெங்கும் இதுபோன்ற கட்டுக்கதைகள் பரவிப் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அவற்றில் மிக முக்கியமானவை யூஎஃப்ஓ எனப்படும் பறக்கும் தட்டுகள் பற்றிய வதந்திகள். ஆனால், அதுபோன்ற வீடி யோக்கள் என்னவோ ஏடிஎம் சிசிடிவி கேமராவில் எடுக்கப் பட்டதுபோல், கொசகொசவென்று இருக்கும். பெரும்பாலும் சைனீஸ் லேண்டர்ன் எனப்படும் வானில் பறக்க விடப்படும் ஒரு வித விளக்குகள், வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட ராணுவ விமானங்கள் போன்றவற்றைப் பறக்கும் தட்டுகளாகக் கற்பனைசெய்துவிடுகின்றனர்.

அதே போல பெரிய அளவிலான சம்பவங்கள் நடக்கும்போது, ஆர்வத்தைத் தூண்டும் பல விஷயங்கள் தீ போலப் பரவும். விமானங்களை வைத்தே உலக வர்த்தக மய்ய இரட்டை கோபுரங்களை அல்-கொய்தா தீவிரவாதிகள் தகர்த்த சம்பவத்தைத் தொடர்ந்து பல வதந்திகள் பரவின. அந்த விமானங்களில் ஒன்றின் எண் னி33ழிசீ என்றும் அந்த எண்ணை எம்எஸ்-வேர்டில் (விஷி கீஷீக்ஷீபீ) உள்ளிட்டு அதை விண்டிங்ஸ் (கீவீஸீபீஷீஷ்) என்ற எழுத்துருவுக்கு மாற்றினால் ஒரு விமானம், இரண்டு கட்டடங்கள், ஒரு மண்டையோடு இறுதியாக ஒரு நட்சத்திரம் தெரியும் என்றும் ஒரு வதந்தி பரவியது. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவே இதுகுறித்து ஒருமுறை எழுதியிருந்தார். அந்த எண்ணை விண்டிங்ஸ் எழுத்துருவுக்கு மாற்றினால் விமானம், இரண்டு கட்டடங்கள், மண்டையோடு, நட்சத்திரம் தெரிவதெல்லாம் உண்மைதான். ஆனால், அந்த விமானங்களில் ஒன்றுக்குக்கூட னி33ழிசீ என்ற எண் இல்லை என்பது பின்னால் தெரியவந்தது.

தற்போது, அதே 9/11 சம்பவத்தை வைத்து பரபரப்பூட்டும் செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. முதல் விமானம் மோதிய பின்னர், அந்தக் கட்டடத்தில் இருந்து கிடைத்த இரும்புத் தூண் ஒன்றில் மனித முகம் தெரிவதாக ஒரு செய்தி. பயங்கரமான அந்த நிகழ்வைக் கண்டு துயரமும், பதற்றமும் அடைந்தது போன்ற முகபாவனையுடன் இருக்கும் அந்த முகத்தை 9/11 தேவதைஎன்று அழைக்கிறார்கள். எனினும், குறிப்பிட்ட கோணம் மற்றும் ஒளியமைப்பில் பார்த்தால்தான் அது மனிதமுகம் போல் தெரிகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

- வெ.சந்திரமோகன்- தி இந்து 6.12.2013

Read more: http://viduthalai.in/page7/72055.html#ixzz2nUzaXHAh

தமிழ் ஓவியா said...


வாக்குப்பதிவு இயந்திரம்


எடிசன் தன் முதல் கண்டுபிடிப்பாக 1868-இல் பதிவு செய்த வாக்குப்பதிவு இயந் திரம் அரசினால் ஏற் றுக் கொள்ளப்பட வில்லை. தந்தி மற்றும் பங்குச்சந்தை சாதனங் களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததும் உலகமே இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோ கிராப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வரனாக்கியது. ஒலியைப் போலவே, ஒளியையும் பதிவு செய்ய முடியும் என சினிமாவைக் கண்டுபிடித்ததும், கண்டு பிடிப்புகளின் தந்தை எனப் புகழாரம் கிடைத்தது...!
1914-ஆம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட் டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து, தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்... ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில் கலந்துவிட்டேன் என்பதை, 67-ஆவது வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த தோல்வியும் எனக்குப் படிப்பினையே என்றார் எடிசன் சிரித்தபடி.

தனது 81-ஆவது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புகளை எடிசன் பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்வி களை வீழ்ச்சியாகக் கருதாத இவரது தன்மையே...

- த. பூபாலன், பணங்கொடம்

Read more: http://viduthalai.in/page2/72045.html#ixzz2nV01D4aq

தமிழ் ஓவியா said...


சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி


மின்சாரம் சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங் குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.

பூமியை பொறுத்தவரை எப்போ தும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது.

எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உள்ள ஷிமிஷூ கார்ப்பரேசன் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் சோலார் பேனல் தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட் டுள்ளது. அதற்கு ஜனாரிங் என பெயரிட்டுள்ளனர்.

இதன் மூலம் 13 ஆயிரம் டெரா வாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியும். ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் ஆகும். இந்த திட்டத்தின் கட்டுமான பணி வருகிற 2035ஆம் ஆண்டில் தொடங் கப்பட உள்ளது.
தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன.

சந்திரனில் சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின் கலன்கள் அமைக்கும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலை யங்களில் இணைக்கப்படும். பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும்.

Read more: http://viduthalai.in/page3/72047.html#ixzz2nV0bkT9t

தமிழ் ஓவியா said...


நீதிக்கட்சியால் ஏற்பட்ட நன்மைகள்


பிரிட்டிஷ் ஜனநாயகக் கொள் கைகளைப் பின்பற்றி (British liberalism) பெயரிலேயே Liberal
- என்கிற சொல்லையும் சேர்த்து தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) இணைத்து துவங்கியவர்கள் டி.எம்.நாயரும், தியாகராயரும்!.

அவர்கள் சாதாரண மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய பிரெஞ்சு நாட்டுத் தீவிரவாதக் குடி யரசுக் கட்சியில் இலட்சியங்களால் (Radical Republicans) ஈர்க்கப்பட் டவர்கள்; அதனால்தான் கிளமென் சோவைப் பின்பற்றித் தங்கள் நாளேட்டிற்கு யிவீநீமீ - என்று பெயர் வைத்தார்கள். பிராமணரல்லாதார் என்கிற எதிர்மறைப் பெயரில் அந்த உயிர் இல்லை - என்பதற்காக; அந்த உயிரைக் கொடுத்து உணர்வுகளைத் தட்டி எழுப்புவதற்கு இந்தச் சமுதாயத் திற்கு திராவிடர் என்கிற பெயரைக் கொடுத்தார்கள்; அதற்கு அடையாள மாகத் தங்கள் தமிழ் ஏட்டிற்கும் திரா விடன் என்கிற பெயரை வைத்தார்கள்!

ஒரு இனத்திற்கு தன்னுணர்வு ஊட்டி னார்கள்!

றீ அந்த நீதிக்கட்சியின் ஆட்சியி லேதான் நாடாளுமன்ற நடைமுறை களுக்கான அடித்தளம் இங்கே நாட்டப் பட்டது.

றீ இன்று தமிழ்நாடு நன்கு நிர்வகிக் கப்படும் மாநிலமாக இருக்கிறதென் றால் அதற்குக் காரணம் அன்று நீதிக்கட்சி தந்த பயிற்சிதான்!(321)

3321. “That Madras today is and is regarded as a well administered state in India. is due to the political education and experience gained here in operating dyarchy”
- S.Saraswathi. ‘Dyarchy in Madras’ P-20

அந்த நீதிக்கட்சியின் ஆட்சி யிலேதான் இந்தியாவிலேயே முதல் முறையாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது!(322)

322: 1919-ஆம் ஆண்டுச் சட்டப்படி பெண்களுக்கு வாக்குரிமை கொடுப்பது மாகாண சட்டசபைகளின் முடிவிற்கு விடப்பட்டது.

1921, ஏப்ரல் முதல் நாள் ஒரு தீர்மானத்தின் மூலம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

அந்த நீதிக்கட்சியின் ஆட்சி யிலேதான் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியும், இலவசப் புத் தகங்களும்,இலவச ஆடைகளும், இலவச மதிய உணவும் வழங்கப் பட்டன!

-- - க.பழனிசாமி (தெ.புதுப்பட்டி) திராவிட இயக்க வரலாறு (1912 - 1921) முரசொலிமாறன் 414-ஆம் பக்கம்.

Read more: http://viduthalai.in/page4/72050.html#ixzz2nV1Tp8Ee

தமிழ் ஓவியா said...


இல்லவே இல்லை


ஒரு பக்தன்: நீங்களெல்லாம் கடவுள் இல் லேன்னு ஊர் பூராவும் சொல்கிறவனுங்க தானய்யா!

ஒரு பெரியார் தொண்டன்: அப்படியல்ல.

பக்தன்: நீங்கள் அப்படித்தானே சொல்லிக் கிட்டுத் திரியறீங்க.

ஒரு பெரியார் தொண்டன்: கடவுள் இல்லேன்னு சொல்லமாட்டோம். கடவுள் இல்லவே இல்லேன்னுதான் சொல்லுவோம் பக்தன்???

Read more: http://viduthalai.in/page8/72058.html#ixzz2nV2SmMex

தமிழ் ஓவியா said...


விருதுகள் விவரம்



இந்தியாவின் மிக உயர்ந்த விருது - பாரத ரத்னா
1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது.
அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது
மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது.
மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது
மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது
மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது
மிக உயர்ந்த கௌரவ ராணுவ விருது - ஃபீல்ட் மார்ஷல் விருது
மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜீனா விருது
மிக உயர்ந்த விளையாட்டு பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யா விருது
மிக உயர்ந்த வீரதீர விருது- மஹாவீர் சக்ரா
மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது
மிக உயர்ந்த வேளாண்மை விருது - க்ருஷி பண்டிட் விருது
மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

Read more: http://viduthalai.in/page8/72057.html#ixzz2nV2eOpEn

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


வைக்கம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் - சிறையில் கைவிலங்கு பூட்டி வைக்கப்பட்டிருந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

மண்டேலா வாழ்க்கைக் குறிப்பு


1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார்.

தெம்பு அரச குடும்பத்தைச் சார்ந்த பரம்பரையில் வந்த மண்டேலாவின் தந்தையின் பெயர் காட்லா ஹென்றி. தாயின் பெயர் நோஸ் கெனிபேனி.

இளம் வயதிலேயே குத்துச் சண்டை வீரராக அறியப்பட்ட மண்டேலா ஆடு மாடு மேய்த்துக்கொண்டே பள்ளியில் படித்தார்.

லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து பட்டப் படிப்பையும் சட்டப்படிப்பையும் முடித்தார்.

கருப்பர் இன மக்களுக்கு எதிரான வெள்ளையர்களின் நிறவெறியை எதிர்த்து 1939ஆம் ஆண்டு போராடத் தொடங்கினார்.

வெள்ளையர் இன அரசுக்கு எதிராகப் புரட்சி செய்ததாகக் கூறி 1956ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலையான பின் தீவிரமாகப் போராடினார்.

1961ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப் படைத் தலைவர் ஆனார்.

1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி வெள்ளையர் அரசால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் 1964ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி ஆயுள் தண்டனைக் கைதியானார்.

18 ஆண்டுகள் ராபன் தீவில் தனிமைச் சிறைவாசம் அனுபவித்தார். பின் 1982ஆம் ஆண்டு போல்ஸ்மூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

உலக வரலாற்றில் தொடர்ந்து 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் மண்டேலாதான்.

1990ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

1990ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ஆம் தேதி சர்வதேச மண்டேலா தினமாக அய்.நா.சபை அறிவித்துள்ளது.

1994ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தார்.

1994ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி கருப்பர் இனத்தின் முதல் அதிபரானார்.

1999ஆம் ஆண்டில் முதுமை காரணமாக அதிபர் பதவியிலிருந்து விலகினார்.

2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொது வாழ்விலிருந்து ஓய்வு பெற்ற மண்டேலா 2013, டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.

ஈவிலின் மேசே, வின்னி, கிரேகா மேச்சல் என மூன்று மனைவிகள்.

பள்ளி ஆசிரியர் நெல்சன் என்ற பெயர் சூட்டினார். முழுப்பெயர் நெல்சன் ரோலிஹ்லாலா (Nelson Rolihlahla).

தமிழ் ஓவியா said...

ஓங்கி ஒலித்த உரிமைக் குரல்

உலகம் பல போராளிகளைப் பார்த்துள்ளது. அவர்களின் விடுதலை உணர்ச்சி முழக்கங்களைக் கேட்டுள்ளது. அவற்றில் மண்டேலாவின் முழக்கம் வித்தியாசமானது. மண்டேலா பல்வேறு நிகழ்வுகளில் ஒலித்த உரிமைக் குரல் இதோ:-

வெள்ளை ஆதிக்கத்தின் நேரடி விளைவுதான் ஆப்பிரிக்கர்கள் அனுபவிக்கும் இழிநிலை. வெள்ளை ஆதிக்கம் என்பது கருப்பர்கள் தாழ்வானவர்கள் என்பதையே குறிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஒழிசலான வேலைகள் என்பவை ஆப்பிரிக்கர்களால் மட்டுமே செய்யப்படுகின்றன. எதையாவது தூக்கிச் செல்ல வேண்டுமென்றாலோ எதையாவது சுத்தம் செய்ய வேண்டுமென்றாலோ ஒரு வெள்ளையர் சுற்றும்முற்றும் யாராவது கருப்பினத்தவர் தென்படுகிறாரா என்றுதான் பார்ப்பார், அவர் தனது வேலையாளாக இல்லாவிட்டாலும்கூட. இது போன்ற அணுகுமுறையால்தான் வெள்ளையர்கள் ஆப்பிரிக்கர்களை ஏதோ தனிவகை ஜந்து என்ற விதத்தில் பார்க்கிறார்கள். கருப்பர்களுக்கும் குடும்பம் இருக்கும் என்றோ அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும் என்றோ, வெள்ளையர்களைப் போலவே அவர்களுக்கும் காதல் ஏற்படும் என்றோ வெள்ளையர்கள் உணர்வதில்லை. வெள்ளையர்கள் தங்கள் மனைவியருடனும் குழந்தைகளுடனும் இருக்க விரும்புவதைப் போலவே கருப்பர்களும் விரும்புவார்கள் என்று அவர்கள் உணர்வதில்லை; தங்கள் குடும்பத்தை நல்லபடி நடத்தவும், உணவு, துணிமணிகள் போன்ற தேவைகளை நிறைவேற்றவும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் தேவையான அளவுக்குச் சம்பாதிக்கக் கருப்பர்கள் விரும்புவார்கள் என்று வெள்ளையர்கள் உணர்வதில்லை.

எமது மக்கள் கண்டுள்ள முன்னேற்றங்கள், அவர்களின் தெள்ளத் தெளிந்த பேச்சு, அவர்கள் இங்கே பெற்று வரும் வெற்றிகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஈட்டி வரும் அங்கீகாரம் ஆகியவை எல்லாம் ஒருவிதத்தில் எனது உழைப்பின் விளைவே என்று கூறி வருகிறார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். பெரியதொரு படையில் இடம் பெற்றிருப்பவர்களில் யானும் ஒருவன். வெற்றி அல்லது சாதனை என்று ஏதாவது உண்டென்றால் அதற்கான பெருமை இந்தப் படையில் இருக்கிற எல்லாரையும் சாரும். முன்னேற்றத்துக்குக் காரணம் எனது உழைப்பு மட்டுமே அன்று. எனது தோழர்களும் நானும் _ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் _ ஆற்றியுள்ள கூட்டுப் பணியின் விளைவாகவே முன்னேற்றம் கண்டுள்ளோம்.

தண்டனையை ஏற்கத் தயாராய் இருக்கிறேன். இந்த நாட்டின் சிறைச்சாலைகளில் ஓர் ஆப்பிரிக்கரின் நிலைமை எவ்வளவு கொடியது, எவ்வளவு அவலமானது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் தண்டனையை ஏற்கத் தயாராய் இருக்கிறேன். இந்தச் சிறைகளில் ஏற்கெனவே இருந்துள்ளேன். சிறைச் சுவர்களுக்குள்ளேயும்கூட ஆப்பிரிக்கர்களுக்கு எதிரான பாகுபாடு எவ்வளவு அப்பட்டமானது, வெள்ளைக் கைதிகளைக் காட்டிலும் ஆப்பிரிக்கக் கைதிகள் எவ்வளவு மோசமாய் நடத்தப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் இந்தக் காரணங்கள் எல்லாம் நான் தேர்ந்தெடுத்திருக்கிற பாதையிலிருந்து என்னை விலகச் செய்திட முடியாது; என்னைப் போன்ற ஏனையோரையும் விலகச் செய்திட முடியாது.

எனது மக்களுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்தேன். நான் நிரபராதி என்றும், இந்த நீதிமன்றத்தில் கூண்டிலேற வேண்டிய குற்றவாளிகள் ஃபெர்வூடும்(பிரதமர்) அவரது அமைச்சர்களுமே என்றும் வருங்காலம் தீர்ப்பளிக்கும் _ இதில் எனக்குத் துளியும் அய்யமில்லை.

விடுதலை செய்யப்படும்போது, அநீதிகளை அகற்றுவதற்கான போராட்டத்தைத் தொடர்வேன். அநீதிகள் பூண்டோடு ஒழியும் வரை தொடர்ந்து போராடுவேன்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் போராட்டம் அன்னியர்கள் அல்லது கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலால் நடைபெறுவதாக அரசு ஏற்படுத்தி வரும் எண்ணம் முற்றிலும் தவறானது. தனி மனிதன் என்ற முறையிலும் எனது மக்களின் தலைவர்களில் ஒருவன் என்ற முறையிலும் நான் என்ன செய்திருந்தாலும் சரி, தென் ஆப்பிரிக்காவில் நான் பெற்ற அனுபவத்தின் காரணத்தாலும், நான் பெருமையாகக் கருதுகிற எனது ஆப்பிரிக்கப் பின்னணியின் காரணத்தாலும் செய்தேனே தவிர, யாரோ வெளிநாட்டார் ஏதோ சொன்னார் என்கிற காரணத்தால் அல்ல.

நாசவேலைக்குத் திட்டம் தீட்டியதை நான் மறுக்கவில்லை. வருவது வரட்டும் என்ற மனநிலையிலோ, வன்முறையின்பால் காதல் கொண்டோ அப்படிச் செய்யவில்லை. எனது மக்கள் பல்லாண்டு காலமாய் வெள்ளையரின் கொடுங்கோன்மைக்கும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகி வருவதால் தோன்றியுள்ள அரசியல் நிலைமையை அமைதியாகவும் நிதானமாகவும் மதிப்பீடு செய்ததன் விளைவாகவே நாசவேலைக்குத் திட்டம் தீட்டினேன்

தமிழ் ஓவியா said...

புத்தர் பிறப்பு கி.மு. 6ஆம் நூற்றாண்டில்...



புதிய ஆய்வுத் தகவல்

புத்தர் கி.மு.3ஆம் நூற்றாண்டில் பிறந்தவர், 4ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்று பல கருத்துகள் நிலவிவரும் நிலையில், புத்தரின் பிறப்பிடமான நேபாளத்தில் மிகப் பழைமையான புத்த விகாரை (கோவில்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபின் கன்னிங்ஹம் தலைமையிலான தொல்லியல் குழுவினர் மேற்கொண்ட அகழ்வாய்வில், செங்கற்களால் கட்டப்பட்ட தொடர் புத்த விஹாரைகளின் கீழ் கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தாலான விஹாரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மய்யப்பகுதியில் வெற்று இடம் உள்ளது. இந்த வெற்றிடத்தின் மய்யத்தில் மரம் இருந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பழமையான மரத்தின் வேர்கள் அந்த இடத்தில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. லும்பினி தோட்டத்தில் மரத்தின் கிளையைப் பிடித்தபடி ராணி மாயாதேவி புத்தரைப் பிரசவித்த கதையுடன் இதற்குத் தொடர்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இதிலிருந்து, புத்தர் மரத்தடியில் பிறந்திருக்கலாம் என்ற வரலாறு உண்மை என்பதும் அவர் பிறந்த இடமான மரம் புனிதமாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

பொன்மொழி

செய்யக் கூடியதைச் செய்யாமல் இருப்பவன் சோம்பேறி. செய்யக் கூடியதைச் செய்து முடிப்பவன் உழைப்பாளி. செய்யக் கூடியதை வேகமாகவும் அதிகமாகவும் செய்பவன் திறமைசாலி. செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவனே சாதனையாளி.

- இந்தியா

தமிழ் ஓவியா said...


துளிச் செய்திகள்

இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி 53 சதவிகித பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதில் 88.6 சதவிகித குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே வன்முறைக்கு ஆளாகின்றனர்.

அமெரிக்காவில் மருத்துவக் கல்விப் பாடத் திட்டத்தில் மாற்று மருத்துவச் சிகிச்சை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் 6 மாதம் மாற்று மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்துப் பயில வேண்டும். நிலவின் சுற்றுவட்டப் பாதையில் செல்லும் ஜேட் ராபிட் என்ற புதிய தொழில்நுட்பம் இணைந்த செயற்கைக் கோளினை டிசம்பர் 2 அன்று சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் டிசம்பர் 3 அன்று டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வாய்ஸ் 17பி என்ற கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருப்பது அமெரிக்கா அனுப்பிய ஹப்பிள் தொலைநோக்கி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி டிசம்பர் 7ஆம் தேதி முதல் 10 வரை விசாரணை நடத்தி 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் வகையில் ஜெர்மனியில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

கருத்து

சென்னையில் பல இடங்களில் தெருவிலும், சாலை ஓரங்களிலும் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை இன்றும் பார்க்கலாம். ஏன் அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை? எதிர்காலத்தில் திருட்டுகள், பிக் பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடும் வாய்ப்பு இந்தச் சிறுவர்களுக்கு அதிகம் உள்ளது.

- எஸ். ராஜேஸ்வரன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

மக்களை இழுத்தடிப்பதை அரசு அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். மக்கள்தான் ஜனநாயகத்தின் நாயகர்கள். அதிகாரிகள் எல்லோரும் அவர்களுக்கு ஊழியர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரசு என்பது மக்களுக்காகத் தானே தவிர அவர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது.

- கே.கே.சசீதரன்,
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

இலங்கை தங்கள் நாட்டு சட்டதிட்டங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவ்வாறு நடந்துகொள்ளும் என்றும் நம்புகிறோம். மேலும், போருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் இனியும் பொறுமையாக இருக்காது.

- நிஷா பிஸ்வால், அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர்

தமிழ் ஓவியா said...


சிறந்த நூலிலிருந்து சில கவிதைகள்



துளிரத் தொடங்கும் எங்களுக்கான தேசம்!

நூல்: வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு

ஆசிரியர்: ரகசியன் | செல்பேசி: 9445182142

வெளியீடு: பொன்னி,
2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவன்யூ, மடிப்பாக்கம், சென்னை-91

பக்கங்கள்: 88 | விலை: ரூ.60/-

ஒருவரியேனும்

உங்களோடு சேர்ந்து வாக்களிக்கிறேன்
உங்களோடு சேர்ந்து திரைப்படம் பார்க்கிறேன் அவ்வப்போது
உங்களோடு சேர்ந்து மது அருந்துகிறேன்

உங்கள் விரல்களில் இருக்கும் வெண்சுருட்டை
போதை நிறைந்த அப்பொழுதில்
புகைக்கவும் செய்கிறேன்
என்பதினால்
நீங்களாக நான் எப்போதும் ஆனதில்லை

என்றாவது மலர்கள் மொழிந்ததுண்டா
உங்களிடம்?
நிலவின் இதழ் உங்கள் கன்னம்
தீண்டியிருக்கிறதா?

இப்பெரிய நீலம்
உம் கண்களில் நிரம்பி வழிந்திருக்கிறதா?

வெட்டு வாங்கிய மரங்கள்
உம்மிடம் சொல்லி அழுதிருக்கின்றனவா?

தோண்டப்பட்ட மலையில் வழியும்
இரத்தக் கவிச்சியை உணர்ந்திருக்கிறீரா நீவீர்?

நீ இளைப்பாறும் இந்நிழல்
நீரே நட்டு வளர்ந்த மரமா?
சுவைக்கும் கனியும் அப்படியோ?

நீரில்லா இம்மணல் வெளியில்
நதியின் கண்ணீர் ஓடுகின்றதைக் கண்டீரா? வியர்வைக்கு நியாயமான விலை கேட்டதற்கு
உம் சகமனிதன் கொளுத்தப்பட்டான்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்

உம் சகமனிதனின் தலைமையைப்
பொறுத்துக் கொள்ளாமல்
அவனை வெட்டி முண்டமாக்கினர்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்

உம் சக மனிதனின் வாயில்
பீ திணித்தார்கள்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்

அற்புதமாக எழுதும் நீங்கள்
இம்மானிட இழிவுக்கு எதிராக
ஒருவரியேனும் எழுதியதுண்டா?

ஓசோன் படலம் கிழிந்துவிட்டது
பூமி வெப்பம் அடைந்துவிட்டது
ஆயிரமாண்டின் பண்பாடு
அழியத் தொடங்குகிறது

என்று புலம்பும் வாயிலிருந்து
இந்த இழிசெயல்கள் மேல்
காறி உமிழ எச்சில்
ஏன் இல்லை?

இதயத்தில் கசிவில்லை

எறும்புகள் புழுவை
வதைப்பது போல்
மக்களை வதைக்கிறது பசி

பைத்தியத்தின் திமிரில் வரும்
உம் சொற்கள் அல்லது
செயல்கள்
இம்மண்ணின் இதயங்களைக்
கருக வைக்கின்றன
கவின்மிகு பூக்கள் தீயில்
கருகுவது போல்

சன்னல் வழி சொட்டும்
இவ்வழகிய மழை தான்
குடிசை மக்களைத் துன்புறுத்துகிறது

தும்பிகள் பிடிக்க வேண்டிய
விரல்களைச் சுடுகிறது
கண்ணாடிக் குவளை வழி தேனீர்

இன்னும் பல யாவும் கண்டும்
எந்தக் கசிவுமில்லை இருதயத்தில்

இப்பெரும் கடலில் நீலம்
கொட்டிக்கிடப்பது போலவே
இவையாவும் என்றெண்ணி
ஒரே அலைவரிசையில் பயணம் செய்கிறோம்

நம் எழுத்துக்காரர்களைப் போல்
நம் கூத்துக்காரர்களைப் போல்
நம் ஆட்சிக்காரர்களைப் போல்

கொடும் விலங்கொன்று

பசியையும் தீண்டாமையையும்
தின்று வளர்கிறது
கொடும் விலங்கொன்று
குடிசை ஒவ்வொன்றிலும்

ஆழிப்பேரலையையும்
அடங்கா பெரும் காற்றையும்
எங்கள் திசைகளில்
திருப்புகின்றாய்

புயல்களைச் சுவாசித்தே
ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்
ஆயிரம் ஆண்டுகளாய்
வடிகட்டிய மென்காற்றைத் தின்று
வாழ்கிறாய்

ஆரவாரமாய், அமைதியாய், திமிராய்
கட்டப்பட்டுள்ள அவ்விலங்கு
கட்டுக்கடங்காமல் அறுத்துக்கொண்டு
உன் அமைதியை ஆரவாரத்தை திமிரை குதறும்

அந்நாள் வரை துய்
எம் மகிழ்வை அமைதியை
மென்காற்றை

துளிரும் தேசம்

ஒருவருக்கு மலம் திணிக்கிறீர்

எல்லோரும் கொதிக்கிறோம்
நெருப்புக் குளம்பாய்

எங்கள் தாய்களையும்
சகோதரிகளையும் பலாத்காரம் செய்கிறீர்

கருவுருகிறோம்
ஆயுதங்களோடு

எரித்த எம் குடிசைகளின் தீக்களாலே
சூரியன்கள் பல காய்த்திருக்கிறோம்

உங்களின் ஒதுக்குதல்களில் இருந்து
துளிரத் தொடங்கும் எங்களுக்கான தேசம்

வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு

தெரிந்த வழி எல்லாம்
பயணிக்கிறோம்
எங்கும் காணவில்லை

வளர்ந்து வரும்
நம் எழுத்தின் கைகளுக்கும்
உறுமும் நம் பேச்சின் பேரொலிக்கும்
துளிர்க்கும் நம் அரசியலுக்கும்
தொடரும் உரையாடலுக்கும் மசியவில்லை

தேவைப்படுகிறது
இன்னும் பல ஆயுதங்கள்
வண்ணங்களை விழுங்கிப்
பெருத்துக் கொண்டிருக்கும்
இருட்டினுள் இருக்கிறது அது

ஆயிரமாண்டின் இதயங்களைக்
கழற்றி எறிந்து விட்டு
அப்பெரும் இருட்டினுள்
பாய்வோம் சூரியனாய்

அறிவின் வாளில்

சாதி கழித்த மலத்தினுள்
புதைந்திருக்கிறது தாய் நிலம்

மலத்தில் பிறந்த மிருகம்
வேட்டையாடிக் கொண்டிருக்கின்றது
மக்களை

ஞானத்தின் கூரிய வாள்
வாய்மையின்
தலைமேல் தொங்கிக் கொண்டிருக்கிறது

மதம் காக்க தெய்வத்தின்
பிணத்திற்கு அரிதாரம் பூசி
ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

ஆயிரங்கள் ஆகிப்போன
நான்கு வர்ணங்களைக் கட்டிக் காக்கிறது
பூணூல்

பிரிக்கப்படாமலிருக்கும்
மந்திரக்கட்டுகள் அறுத்தெறியப்படும்
கூரேறிக் கொண்டிருக்கும்
அறிவின் வாளில்

தமிழ் ஓவியா said...

விருதுகள் இப்படி


தயான் சந்த் என்பவரைத் தெரியுமா?

விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில்லை என்று தயான் சந்த்தை நிராகரித்த இந்திய அரசுதான் இன்று சச்சின் டெண்டுல்கரைத் தேடிக் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, யார் அந்த தயான் சந்த் என்பதைப் பார்க்கலாம். விதிகளை மாற்றி விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என்றால் முதல் விருது தயான் சந்த்துக்குத்தான் தரப்பட வேண்டும் என்கிறது அவரது சாதனைப் பட்டியல்.

ஹாக்கி விளையாட்டு வீரரான இவர்தான் இந்தியாவுக்கு 3 ஒலிம்பிக் தங்கம் வாங்கிக் கொடுத்தவர். இவர் தலைமையில் சென்ற இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தோற்றதே இல்லை.

1932இல் 37 போட்டிகளில் 133 கோல், 1934_35இல் 43 போட்டிகளில் 201 கோல் என இவர் ஆடிய ஆட்டத்தை முறியடிக்க இன்னும் ஒருவர் பிறக்கவில்லை. இவரது ஆட்டத்தைப் பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன், ஹாக்கி வீரர் என்று சொல்லி ஒரு கிரிக்கெட் வீரரை ஹாக்கி அணியில் சேர்த்து விட்டார்கள்! கிரிக்கெட்டில் ரன்கள் எடுப்பது போல் அல்லவா கோல்கள் அடிக்கிறார்! என்று சொன்னாராம்.

அன்றைய பன்னாட்டுப் பத்திரிகைகள் இவர் மட்டையில் பசையைத் தடவி வைத்திருக்கிறாரோ? பந்து அவர் மட்டையுடனே செல்கிறதே! என்று எழுதினவாம்!

ஆஸ்திரிய நாட்டில் இவருக்குச் சிலை வைத்துள்ளார்கள். எப்படித் தெரியுமா? நான்கு கைகளுடன் இருப்பது போல சிலை அமைத்து, அந்த நான்கு கைகளும் தலா ஒரு ஹாக்கி மட்டையைக் கையில் பிடித்த வண்ணம் இருக்கும்!

1905இல் பிறந்து 1979இல் மறைந்த தயான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதிதான் இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது! ஹாலந்து நாட்டில் இவரது ஹாக்கி மட்டையை உடைத்து அதில் காந்தம் ஏதும் உள்ளதா என சோதித்தார்களாம்.

ஒருமுறை ஹாக்கிப் போட்டியில் விளையாடியபோது, தயான் சந்த்தினால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லையாம்; இவர் அடித்த கோல்கள் இலக்கினுள் விழவில்லை. பின்னர் நடுவரிடம் சென்ற தயான் சந்த், இரு கோல் கம்பங்களுக்கு இடையே உள்ள தூரம் சரியான அளவில் அமைக்கப்படவில்லை என்று முறையிட்டுள்ளார். இதனை ஏற்று அளவெடுத்துப் பார்த்துள்ளார்கள். அப்போது, பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூர அளவு சரியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அனைவரும் வியந்துவிட்டனர்.

தயான் சந்த்தின் திறமையைப் பார்த்த ஹிட்லர், ஜெர்மன் குடியுரிமையுடன் ராணுவத்தில் கலோனல் பதவியும் தருவதாகச் சொல்லி இருக்கிறார்! ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்டார் தயான் சந்த்!

பன்னாட்டு ஹாக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ள தயான் சந்த்துக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது; விளையாட்டு அமைச்சகமும் பரிந்துரை செய்தது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா கொடுக்கப்படுவதில்லை என்பதால் அதை அரசு நிராகரித்துவிட்டது.

இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் 3 முறை தங்கம் வாங்கிக்கொடுத்த தயான் சந்த்துக்கு வழங்காத பாரத ரத்னா, தனது சொந்த சாதனைக்காக விளையாடியதோடு மட்டுமல்லாமல், விளையாட்டை வைத்து கோடிகளில் சம்பாதித்தவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்பற்றுக்கும், உழைப்புக்கும் இந்தியாவில் மதிப்பு இவ்வளவுதானா?

- விளையாட்டுப்பிள்ளை

தமிழ் ஓவியா said...

ராஜராஜன் மேல் மரியாதை இல்லை!

கேள்வி: தஞ்சாவூரில் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறீர்கள். பெரிய கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா?

பதில்: பெரிய கோவிலின் புல்வெளியில் இருக்கும் புல் ஒவ்வொன்றும் என்னை அறியும். ஆனால், ராஜராஜன் மேல் மட்டுமல்ல, எந்த மன்னன் மேலும் எனக்கு மரியாதை இல்லை. இன்னொரு நாட்டின் மேல் படையெடுத்து, அந்நாட்டு மக்களின் அமைதியைக் கெடுத்து, பெண்களை அடிமையாக்கி, பொருள்களைக் கொள்ளையடித்து வாழ்ந்த மன்னர்கள் என்பவர்கள் கிரிமினல்கள். அவர்கள் புகழப்படுவது, தவறு. பிரமாண்டமாக ஒன்றைச் செய்வது (கோவில் கட்டுவதுபோல), மக்கள் வரிப்பணம் ஊதாரித்தனமாகச் செலவழிக்கப்பட்டது மட்டுமல்ல... அது எளிமையை அழிக்கிற ஆணவச் செயல்பாடு, ஏழ்மை, இல்லாமை, தேவைகளோடு வாழ்கிற மக்களை, இந்தப் பிரமாண்டம் அவமானப்படுத்துகிறது. தன்னைப் பிரமாண்டமாகக் கருதுவது மனிதத்தனம் அல்ல. கோவில், கலையை வளர்த்தது உண்மை. ஆனால், அது யாருக்கான கலை? கோவிலுக்குள் எல்லா ஜாதி மக்களும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா? யாருக்காக அத்தனை பெரிய கட்டடம்? யார் தொழ, யார் ஆசி பெற இந்தக் கோவில்? கோவிலுக்குள் இருக்கும் இறைவன் எனக்குள் இருக்க மாட்டானா என்ன?

- பிரபஞ்சன்,

நன்றி: ஆனந்தவிகடன், 4-.12.2013

தமிழ் ஓவியா said...

அய்யர் மலையில் ஆரியம்’


பார்ப்பான்
இன்னமும் பல்லக்கில்
பாழும் தமிழனின்
தோள்களில் அய்யர் - மலை ஏற்றம்.?!

கோவிலுக்குள்
அழுக்குப் பிசுக்கின்
அலாதி நாற்றம்.
சமாளிக்க
சாம்பிராணியும்
ஊதுபத்தியும்
தெய்வீக மணம்.?!

ஓயாமல் உச்சரிக்கப்பட்ட
சமக்கிருத மந்திரங்களில்
ஓரிடத்தில் தவறு!
உச்சரித்தவர்களுக்கு மட்டுமே
அது புரிகிறது;
அவர்களின் அசட்டுச் சிரிப்பில்
நமக்கும்!

ஒரு வார்த்தை கூட
புரியவில்லை
பூசையில் சமக்கிருதம்...
முடிந்ததும்,
உணவு வருகிறது...
பாழும் வயிற்றுக்குக் கூட
புரிந்துவிடுகிறது.

பக்திப்பெருக்கில்
பக்தனுக்கு
கண்ணீர் வடிகிறது.
ஓமப் புகையின் உதவியோடு?

பால், தயிர், மோர்,
பேரிச்சம்பழம்,
எலுமிச்சைச் சாறு,
சந்தனம், திராட்சைச் சாறு
இன்னும் சில...

அண்டாக்களில்
நிறைந்து கிடக்கிறது
கருங்கல்லின்மீது சொரியப்பட!

ஈசன் கோவில் பூசையில்
சமக்கிருத மந்திரம்
இங்கு தமிழிலும்
அர்ச்சனை செய்யப்படும்
என்ற பலகையின் சாட்சியுடன்.

கோவிலின் உள்பிரகாரத்தில் ஆங்காங்கே எடிசனின் அறிவு பளிச்சிடுகிறது.
ஆகம விதிகளிலும்
அறிவியலின் ஊடுருவல்!

- உடுமலை வடிவேல்

தமிழ் ஓவியா said...

வலிப்பு வந்தால் கையில் சாவி கொடுக்கலாமா?

- டாக்டர் கனகசபை
சென்னை, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைத் தலைவர்

மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்துப் பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது. குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வர வாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது.

வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியைக் கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியைக் கொடுக்கின்றனர்.

வலிப்பு நோய்க்கு சாவி கொடுப்பதன் மூலம் எவ்விதப் பயனும் இல்லை. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

வலிப்பு வந்தவுடன், அவரை உடனடியாக இடது பக்கம் திரும்பிப் படுக்க வைக்க வேண்டும். அவர் பற்களைக் கடித்துக் கொள்ளாமல் பாதுகாக்க ரப்பர் பந்துகளை வாயில் வைக்க வேண்டும். கட்டையை வாயில் வைத்தால், பற்கள் உடைந்துவிடும்.

அதன்பின், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதலில் அடிக்கடி வரும் வலிப்பு நோய் குறையும். அதன்பின், வலிப்பு நோய் முழுவதுமாக குணமடையும்.

வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது.

தமிழ் ஓவியா said...

வலிப்பு வந்தால் கையில் சாவி கொடுக்கலாமா?

- டாக்டர் கனகசபை
சென்னை, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைத் தலைவர்

மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்துப் பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது. குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வர வாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது.

வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியைக் கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியைக் கொடுக்கின்றனர்.

வலிப்பு நோய்க்கு சாவி கொடுப்பதன் மூலம் எவ்விதப் பயனும் இல்லை. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

வலிப்பு வந்தவுடன், அவரை உடனடியாக இடது பக்கம் திரும்பிப் படுக்க வைக்க வேண்டும். அவர் பற்களைக் கடித்துக் கொள்ளாமல் பாதுகாக்க ரப்பர் பந்துகளை வாயில் வைக்க வேண்டும். கட்டையை வாயில் வைத்தால், பற்கள் உடைந்துவிடும்.

அதன்பின், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதலில் அடிக்கடி வரும் வலிப்பு நோய் குறையும். அதன்பின், வலிப்பு நோய் முழுவதுமாக குணமடையும்.

வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது.

தமிழ் ஓவியா said...

கொலை வழக்கில் ஜோதிட சாமியார்


வக்கிர எண்ணமும், குற்றச்செயல்களின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணமும் சில மனிதர்களுக்கு ஏற்படுவது பழங்கதைதான். ஆனால், அதற்கு அவர்கள் போட்டுக் கொள்ளும் முகமூடிகளாக மதமும், கடவுள் பக்தியும், ஜோதிடமும் இருப்பதுதான் இந்தியாவின் சிறப்பம்சம்.

வடநாடு தொடங்கி தென்னகம் வரை சாமியார்கள் செய்யும் அட்டகாசங்களும் அநியாயங்களும் தொடர்கதைகளாகி வருகின்றன. கடவுள் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் மக்கள் இவர்களின் பிடிக்குள் சிக்கி மானத்தையும், பொருளையும், அறிவையும் இழப்பதோடு மட்டுமல்லாமல் உயிரையும் இழப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

மீண்டும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. திருச்சியில் பிரபல ஜோதிடராக வலம் வந்த ஒரு சாமியார் கொலை செய்யும் அளவுக்குப் போயுள்ளார்.

அந்தச் சாமியாரின் பெயர் கண்ணன். சிறீரங்கத்தைச் சேர்ந்தவர். 9ஆம் வகுப்புவரை படித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் ஒரு சாமியாரிடம் மந்திரம் என்ற பெயரில் ஏமாற்று வித்தைகளைக் கற்றுக் கொண்டுள்ளார். அப்போது, கண் அசைவிலேயே தான் நினைக்கும் செயலினை மற்றவர்களின் மூளையை இயங்கச் செய்து செயலாற்ற வைக்கும் நோக்கு வர்மக் கலையிலும் தேர்ச்சி பெற்றாராம்(?). பின்னர், அங்கிருந்து திருச்சிக்கு வந்து ஜோதிடத்தையும் சாமியார் தொழிலையும் செய்து வந்துள்ளார். அப்போது, திருச்சி திருவானைக்காவைச் சேர்ந்த வைர வியாபாரி தங்கவேல், தொழிலில் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபட மனைவி யமுனாவுடன் சாமியார் கண்ணனிடம் சென்றுள்ளார். பரிகாரம் என்ற பெயரில் அடிக்கடி வந்து சென்றதில் யமுனாவுக்கும் சாமியாருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தங்கவேல் கண்டித்ததால் அவரைக் கொலை செய்துள்ளனர். அடுத்து, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் யமுனாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்த துரைராஜ் என்பவரைக் கொலை செய்ததுடன் அவரது ஓட்டுனர் சக்திவேலையும் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்ணன் கூறியுள்ளார். மேலும், யமுனாவின் மகனுக்கும் மகளுக்கும் இவர்களது அந்தரங்கம் தெரியவர அவர்களது கதையையும் முடித்துள்ளனர். பெற்ற பிள்ளைகளையே கொல்வதற்கு உடந்தையாக இருந்து வேடிக்கை பார்த்துள்ளார் யமுனா.

இப்போது சாமியார் கண்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலை செய்துவிட்டு எவரும் தப்பமுடியாது என்கிற நிலையை நமது காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. அந்த நம்பிக்கை இன்னும் மக்களிடம் இருக்கிறதுதான். ஆனால், குற்றம் நடந்து முடிந்தவுடன் குற்றவாளிகளைப் பிடிப்பது என்பது மட்டும் போதுமானதா? குற்றத்தை நடக்கவிடாமல் தடுக்க முன் முயற்சிகளை காவல்துறை எடுக்க வேண்டாமா? பொதுவாக சமூக விரோதிகளைக் கண்காணிக்கும் பணியைக் காவல்துறை தொடர்ந்து செய்துவருகிறது. அதுபோல ஜோதிடம், மாந்திரீகம், பில்லி, சூனியம் செய்யும் சாமியார்களையும் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை இந்த திருச்சி சம்பவம் உணர்த்திவிட்டது.

சாமியார் கண்ணனைப் பிடிக்க வேண்டிய காவல்துறை, அவரிடமே குறி கேட்கும் மூடத்தனத்தையும் செய்துள்ளதுதான் வேடிக்கையின் உச்சகட்டம்.

மதச்சார்பின்மையின் மீது அமைக்கப்பட்டுள்ள நமது அரசியல் சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய காவல்துறையினர், தமது மத நம்பிக்கைகளை பணியிடங்களில் திணிக்கும் சட்டமீறலைச் செய்கின்றனர். காவல் நிலையங்களிலேயே கடவுளர் படங்களை மாட்டிவைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் சரஸ்வதி -ஆயுத பூஜைகளைக் கொண்டாடினால், அதே மத நம்பிக்கையின் மூலம் தொழில் நடத்தும் திருச்சி கண்ணனைப் போன்றோர் அதனைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்களா? காவல்துறையினரையும் தமது பக்திப் பிரசங்கங்களின் மூலம் ஏய்த்துவிடலாம் என்று கருதுவதால்தான் இத்தகைய சாமியார்கள் எளிதில் தமது குற்றச்செயல்களை அரங்கேற்றுகின்றனர்.
சாமியார்கள் கடவுளின் தூதுவர்கள் என்று கருதும் காவல்துறையினர் இவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவுதான் இத்தனைக் கொலைகளும் நடக்குமளவுக்குச் சென்றுவிட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது சாமியார்களைக் கண்காணிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்குத் துணை செய்யும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை தமிழக அரசு விரைந்து இயற்றவேண்டிய சரியான தருணம் இதுதான்.

- சமன்