Search This Blog

11.12.13

சென்னையில் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம்! ஆதிக்கம்!!

சென்னையில் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம்! ஆதிக்கம்!!
மேலும்இருபார்ப்பனபெண்நீதிபதிகளா?
சமூகநீதிகோரி 16ஆம் தேதி சென்னையிலும், மதுரையிலும் ஆர்ப்பாட்டம்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள சமூகநீதிக்கான அறிக்கை
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே பார்ப்பன நீதிபதிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ள நிலையில், பெண் நீதிபதிகள் என்ற பெயரால் மேலும் இரண்டு பார்ப்பனப் பெண்கள் நியமனம் செய்யப்பட இருப்பதை எதிர்த்து, நீதிபதிகள் நியமனத்தில் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 16ஆம் தேதி சென்னையிலும், மதுரையிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப் பட்டுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 60ஆகும்.

இதில் தற்போது - ஓய்வு பெற்ற நீதிபதிகள் நீங்கலாக - காலியாக உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆகும்.

மூத்த உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் தலைமை நீதிபதியும் இணைந்த 3 நீதிபதிகள்தான் கொலிஜியம் என்ற முறையில், தங்களுக்குத் தாங்களே (அரசியல் சட்ட விதிகளில் இல்லை என்றாலும் எப்படியோ, நீதிமன்ற அறிவுரை, ஆலோசனை கருத்துரைகள் என்ற கொல்லைப் புற வழியே இது உருவாக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது) தேர்வு செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வெளி மாநிலங்களிலிருந்து தலைமை நீதிபதி வருபவராக உள்ளார்; அவருடன் மூத்த (சீனியர்) உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் இணைந்து கொலி ஜியம் ஆகி, காலியாகும் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை செய்கின்றனர்.

மாநில முதல் அமைச்சர்கள் ஒப்புதல் முக்கியம் அல்லவா?

சட்டப்படி - உயர்நீதிமன்றத்தின் செலவுக்குப் பணம் - நிதி தரும் (தமிழக) மாநில அரசின் தலைமையான முதல் வருக்கே கூடத் தெரியாத அளவுக்கு இந்த நீதிபதிகளின் நியமனப் பரிந்துரைப் பட்டியல் நேரே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது. அங்கே கொலிஜியம் முதல் நான்கு நீதிபதிகளாக இருந்து அவர்களின் ஏற்புதலுக்குப் பிறகு மத்திய அரசுக்கு - குடி அரசுத் தலைவருக்குச் செல்லுகிறது. பழைய முறையில், அரசியல் சட்டத்தின் விதிமுறைப்படி மாநில ஆட்சித்தலைமையிடம் ஒப்புதல் பெற வேண்டும்;
பிறகு ஒப்புதல் தேவையில்லை - கலந்து ஆலோசித் தால் போதும் என்றாக்கப்பட்டது;

Instead of “Concurrence” “Consulting” என்பதாக மாற்றப்பட்ட சில உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மூலம் இந்த கொலிஜியம் முறையில், நியமனம் நடைமுறைக்கு வந்து விடுகிறது.

இதனால் வெளி மாநிலத்திலிருந்து வரும் தலைமை நீதிபதிகளுக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள வழக்குரை ஞர்கள், பற்றியோ அல்லது மாவட்ட நீதிபதிகள் பற்றியோ சரியான புரிதலுக்குரிய வாய்ப்பு மிகவும் குறைவு.

இன்றுள்ள நடைமுறை சரிதானா?

இங்குள்ள மூத்த நீதிபதிகள் இருவரின் பரிந்துரை களே பெரிதும் நியமனத்திற்குரிய காரணியாக அமைந்து விடுகின்றன.

இதில் மூத்தவர்கள் என்ற முறையில் அந்த இருவரும்கூட வெளி மாநில நீதிபதிகளாக அமைந்துள்ள நிலைதான் சென்னை உயர்நீதிமன்றத்திலேயே உள்ளது. இங்கே கொலிஜியம் எப்படி அமைந்துள்ளது என்றால்

1. தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் திரு அகர்வால் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்.
2. ஜஸ்டீஸ் சதீஷ் அக்னிஹோத்திரி, வெளிமாநிலத்தவர்.
3. ஜஸ்டிஸ்  திருமதி சித்ரா வெங்கட்ராமன் ஆகியோர்.
மூன்று நீதிபதிகளில் இரண்டு பேர் பார்ப்பன நீதிபதிகள்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகளின் ஆதிக்கம்

தமிழ்நாட்டு நீதிமன்றத்தில் சமூகநீதி ஏற்கெனவே முந்தைய பரிந்துரைப் பட்டியலிலேயே புறக்கணிக்கப்பட்ட நிலைதான்!

8 பேர்களை பரிந்துரை செய்ததில் அது கடும் விமர் சனத்திற்கு ஆளாகியது; பிறகு வந்த நியமன ஆணை களில்கூட (மொத்தம் 6,7 பேர் என்ற நிலையில்) 2 பார்ப்பனர்கள் நீதிபதிகளாகி விட்டனர்!

ஏற்கெனவே பார்ப்பன நீதிபதிகளின் எண்ணிக்கை அவர்களது விகிதச்சாரத்திற்கு மேல் பன்மடங்கு அதிகம் உள்ள நிலையில், இந்த இரண்டும்கூடச் சேர்ந்து ஆறு பார்ப்பனர்கள் நீதிபதிகளாக உள்ளனர்!

மலைவாழ் மக்கள், மீனவர் சலவையாளர், மருத்துவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

தமிழ்நாட்டில் இதுவரை நீதிபதிகளாகவே பிரதிநிதித் துவம் இல்லாத ஒடுக்கப்பட்ட சமுதாயமான மீனவர், சலவையாளர், மருத்துவர், தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் (S.T) போன்றவர்களில் பல திறமைவாய்ந்த வழக்குரைஞர்கள் இருந்தும்கூட அவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகவே தெரியவில்லை.

உச்சநீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகளில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்து நீதிபதிகூட இல்லாததும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நீதிபதிகளும் போதிய அளவுக்கு (Adequate Representation)  இல்லாத தும் சமூக அநீதி அல்லவா?

உயர்நீதிமன்றங்களில் மூத்த நீதிபதிகள் S.C.யில் இருக்கின்றனரே; தமிழ்நாட்டில் உள்ளனரே;  அவர்களுக்கு வாய்ப்புத் தரலாமே!

அதுபோலவே பிற்படுத்தப்பட்ட நீதிபதிகளும், உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு நியமனம் செய்யப்படுதல் வேண்டும்.

இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், மத்திய அரசும் சரியான பரிகாரம் தேடிடவும், சம வாய்ப்பும், சமூக நீதியும் அனைத்து சமூகத்தவருக்கும் இடம் கிடைக்கவும் வாய்ப் புகள் புதிய நியமனப் பரிந்துரைகளில் கிட்ட வேண்டும்.

மேலும்  இரு பார்ப்பனப் பெண் நீதிபதிகளா?

புதிதாக 5,6 நீதிபதிப் பதவிகளை நிரப்பத் தயாரிக்கப் பட்டுள்ள புதுப் பட்டியலில் ஏற்கெனவே இருந்த பார்ப்பன  நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் மதுரையிலிருந்து ஒரு பார்ப்பன  அம்மையார், டில்லியி லிருந்து மற்றொரு பார்ப்பன அம்மையார் ஆகிய இருவ ரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக, உயர்நீதிமன்ற வட்டாரங்களில் பேச்சுகள் பலமாக உலவுகின்றன!

ஏற்கெனவே 6 பேர்; மேலும் இரண்டு பார்ப்பனர்களா?

இது உண்மையாக இருந்தால், அது சமூகநீதியாளர் களின் உண்மையான கண்டனத்திற்குரியது; எதிர்ப்புக் காட்டி சமூக அநீதியைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

சென்னையிலும், மதுரையிலும் ஆர்ப்பாட்டம்

முதற்கட்டமாக, வருகிற 16ஆம் தேதி அன்று சென்னையிலும், மதுரையிலும், நீதித்துறையில் சமூக நீதியை நிலை நாட்டும் வண்ணம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பெண்கள் என்றால் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட - இதுவரை வாய்ப்பு தரப்படாத சமூகங்கள், ஜாதிகளைச் சார்ந்த அனுபவம் மிக்க பெண் வழக்குரைஞர்களுக்கா பஞ்சம்? பின் ஏன் மீண்டும் இரண்டு பார்ப்பனப் பெண்கள் சிபாரிசு? கேட்க நாதி இல்லையா? உடனே இதில் சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டு நீதி வழங்க முன்வர வேண்டும்.


-------------------------கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்  சென்னை 10.12.2013

23 comments:

தமிழ் ஓவியா said...


பெரியாரியல் பெண்ணியப் பயிற்சிப் பட்டறை

கழகக் குடும்பத்தினருக்கு, வணக்கம்!

நம் இயக்கக் கொள்கைகளை, நாடெங்கிலும் பரப்பி, பகுத்தறிவு சமுதாயம் படைக்க, பெண் பேச்சாளர்களை உருவாக்கும் நோக்கில் டிசம்பர் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில், 15 முதல் 25 வயதிற்குட்பட்ட இளம் பெண்களுக்கு சென்னை பெரியார் திடலில் சிறந்த சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்டு பேச்சுப் பயிற்சிப் பட்டறை நடத்துவதெனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் பங்குபெற்று தங்கள் பேச்சுத் திறனைப் பட்டை தீட்டிக்கொள்ள விரும்பும் இளம் பெண்கள் தங்கள் பெயரைக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். மின்னஞ்சல் maniammaidaisy@gmail.com

தொடர்பு எண்கள்:

வி.டெய்சி மணியம்மை 9884851997, உமா செல்வராசு 9444868564, த.மரகதமணி 9841936691

அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர்), வி.டெய்சி மணியம்மை (மாநில செயலாளர், மகளிர் பாசறை), அ.கலைச்செல்வி (மாநில செயலாளர், மகளிரணி)

Read more: http://viduthalai.in/page-8/71785.html#ixzz2n7PCVFIw

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்க அழுத்தமான வாதங்களை முன் வைக்க வேண்டும் தமிழக அரசுக்கு சிபிஎம் வேண்டுகோள்

சென்னை, டிச. 10 -சிதம்பரம் நடராஜர் கோவில்நிர்வாகம் அரசின் கட்டுப்பாட் டிலேயே நீடித்திட வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண் டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சி யின் மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச் சினை நீண்ட காலமாக நீதிமன்ற வழக்குகளில் நீடித்து வருகிறது.

சிறந்த பாரம்பரிய மிக்கதும், ஏராளமான நிலம், சொத்துக்கள், நகைகள் மற்றும் அன்றாட பக்தர் களிடமிருந்து பெறப் படும் வருமானம் போன்ற அனைத்தையும் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நிர்வா கிக்க வேண்டுமென நூறாண்டுகளுக்கு மேலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இத்தகைய முயற்சிகள் அனைத் தையும் இழுத்தடித்து தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள பொது தீட்சிதர்கள் நீதிமன்றங் களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பகுதியாக தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாகச் சீர் கேடுகள் மற்றும் சொத் துக்கள் பராமரிப்பில் ஏற்பட்ட முறைகேடுகள் காரண மாகவும் அவை களை முறைப்படுத்திட 1982ம் ஆண்டு தனி நிர்வாக அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தர விட் டது.

வழக்கம் போல் இதனை எதிர்த்து தீட்சி தர்கள் சார்பில் பல கட்ட வழக்குகள் நடந்து, அர சின் உத்தரவை நீதி மன்றங்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், தற் போது தீட்சிதர்கள் சார் பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்துள்ளன. இருப்பினும் எழுத்துப் பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க மேலும் அவ காசத்தை உச்சநீதிமன் றம் வழங்கியுள்ளது.

இவ்வழக்கிற்கு அரசு போதுமான அழுத்தம் கொடுக்க வேண்டும். எனவே தற்போதுள்ள அவகாசத்தை பயன் படுத்தி கோயில் நிர்வா கத்தை தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்கும் வகையில் அழுத்தமாக தனது வாதங்களை முன்வைக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத் துகிறது. கோயில் நிர்வா கம் அரசின் கட்டுப் பாட்டில் நீடிக்கும் போது தான் சொத்துக் கள், கோயில் பாரம் பரியம் போன்றவற்றை பாதுகாத்திட முடியும்.

மேலும் சுமார் 1000 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டுள்ள கலை சிற்ப கட்டுமானங்களை பாதுகாக்கவும், பராம ரிக்கவும் இயலும். கோயில் நிர்வாகத்தை அரசு மேற்கொள்ளும் அதே நேரத்தில் வழி பாட்டு முறைகளை தீட் சிதர்களே மேற்கொள்ள வழியுள்ளதால் பொது தீட்சதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் அரசு கணக்கில் கொண்டு - கோவில் நிர்வாகம் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் நீடித் திட தேவையான அனைத்து முயற்சிகளை யும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு வலியுறுத்துகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/71757.html#ixzz2n7PT3bIV

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.

(குடிஅரசு, 8.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/71759.html#ixzz2n7PtZVgx

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் கோயிலும் வேதவிதிமுறையும்


பார்ப்பனர்கள் தங்கள் சுரண்டல் தொழிலுக்கான கேந்திரங்களாகக் கோயில்களைப் பயன்படுத்தி வருவது பெரும் உண்மையே! போட்டிக் கடை வைத்து விளம்பரம் செய்வதுபோல ஒவ்வொரு கோயிலுக்கும் தவப் புராணங்களை எழுதி வைத்துக் கொண்டு பக்திப் போதையில் சிக்கியுள்ள - படித்த மற்றும் படிக்காத பாமர மக்களை தத்தம் கோயில்களின் பக்கம் கவர்ந்து இழுக்கிறார்கள்.

இந்த விளம்பர யுக்தியில் சிதம்பரம் நடராஜன் கோயிலைத் தட்டிக் கொள்ள முடியாது. அந்த அள வுக்குப் புளுகு மூட்டைகளை அள்ளி விட்டுள்ளனர்.

சைவக் கோயில்களில், கோயில் என்று சொன் னாலே அது சிதம்பரம் நடராஜன் கோயிலைத்தான் குறிக்குமாம். அப்படியென்றால் மற்ற கோயில்கள் எல்லாம் குட்டிச் சுவர்களா?

பொதுவாக சைவக் கோயில்களில் லிங்க வழிபாடு என்பது மிகவும் முக்கியம். சிதம்பரத்திலே அது கிடையவே கிடையாது, அதற்கு முக்கியத்துவமும் இல்லை.

இது தொடர்பாகப் பிரச்சினை வரும் போது மிகவும் சாமர்த்தியமாக ஆகாசலிங்கமாக இருப்பதாகக் கதை கட்டி விட்டார்கள்.
ஆகமம் ஆகமம் என்று எதற்கெடுத்தாலும் கூச்சல் போடுகிறார்களே - சிதம்பரம் கோயிலில் ஆகம விதி முறைகள் பின்பற்றப்படுவதில்லை; மாறாக வேத முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.

இது குறித்து பிரபல ஆன்மிகப் பழமான காஞ்சி புரம் அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறியது கவனிக்கத் தக்கதாகும்.

வழிபாட்டு முறைகளுக்காக உண்டாக்கப்பட்டது தான் ஆகமம்; அதாவது வைஷ்ணவத்தில் பாஞ்சராத் ஆகமம் வைகனாஸ ஆகமம்னு ரெண்டு இருக்கு. சைவத்திற்கு சிவாகமம்னு பேர். இந்த ஆகமத்தை அதாவது வழிபாட்டு முறையைப் புறக்கணிச்சுட்டு வேதம் சொன்னபடிதான் வழிபாடு நடத்துவோம்னு சொல்பவர்கள்தான் தீட்சிதர்கள்.

வேதத்துக்குப் பிறகான காலங்களில் தோன்றியது தான் ஆகமம் ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள யாகங்களில் முக்கியமானது பல பொருட்கள், அதாவது மாடுகள், ஆடுகள், குதிரைகள் ஆகிய வற்றைப் பலி கொடுக்க வேண்டும்.

அதனால் சிதம்பரத்திலுள்ள ஒவ்வொரு தீட்சிதரும் இன்று வரை பசுக்களைப் பலி கொடுக்கும் சோம யாகம் முதலியவற்றைச் செய்து வர வேண்டும் என்பது அய்தீகம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் கோயிலுக்கு வெளியே பசுக்கள் பலியிடப்படும் யாகங்கள் நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன், இன்று அப்படியெல்லாம் செய்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.

வேத வழிபாடு என்றால் பூஜை மொழியும், வேதம் சொன்ன வட மொழியில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லித் தான் தமிழுக்கு எதிராக மல்லுக்கு நிற்கிறார்கள் என்று அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறியுள்ளார் (ஜூனியர்விகடன் 12.3.2008 பக்கம் 18)

சொல்லுவது யார் என்பதைப் பார்க்க வேண்டும்; திராவிடர் கழகத் தலைவர் இதனை சொல்லவில்லை, வேதம் மற்றும் ஆகமங்களில் கரை கண்டவர் அத்துப்படியானவர் என்று அவாள் வட்டாரத்திலேயே ஏற்றுக் கொள்ளப்படுபவர் - மறைந்த பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு அத்தியந்தமாக இருந்தவர்; இன்னும் சொல்லப் போனால் அவருக்கு ஆலோசகராக இருந்த வரும்கூட!

சம்பிரதாயங்களை, கோயில் வழிமுறைகளை அப்படியே துல்லியமாக - கறாராகக் கடைப்பிடித்தே தீர வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள், அதற்காக உச்சநீதிமன்றம் வரை செல்லக் கூடியவர்கள் அவர்கள் கடைப்பிடிக்கும் வேதமுறைப்படியான வழிபாட்டு முறைப்படி ஏன் உயிர்களைப் பலியிடுவ தில்லை?

அரசு காரணம் என்றால், அதன் பொருள்,கோயில் பிரச்சினைகளில் அரசு தலையிடும் அதிகாரம் படைத்தது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது சிதம்பரம் நடராஜன் கோயிலை அந்த முறைப்படி எடுத்துக் கொள்ளும்போது அதனை எதிர்த்து ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும்?

இன்னொரு கேள்வியும் இருக்கிறது. தில்லைக் கூத்தன் ஆடுவதால்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் கூறுவது உண்மையானால், அதில் அந்தரங்க சுத்தியான நம்பிக்கை அவர்களுக்கு இருக்குமேயானால், அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுவதற்குப் பதிலாக அந்த ஞானக் கூத்தனாகிய நடராஜப் பெரும் மானிடம்தானே முறையிட வேண்டும் ஏன் அவ்வாறு செய்யவில்லை? அவர்களுக்கே அந்தக் கடவுள்மீது நம்பிக்கை இல்லை என்று தானே பொருள்? பக்தர்கள் சிந்திப்பார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/71761.html#ixzz2n7Q4CRoT

தமிழ் ஓவியா said...

இயந்திர இணைப்பு இளைஞர்களுக்கு எச்சரிக்கை! - 2


டேனியல்கோல்மென் அவர்களது புதிய புத்தகம் ‘Focus’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளதில் உள்ள இளைய தலைமுறையினர், டிஜிட்டல் - இயந்திர மனிதர்களாகவே சதா சர்வ காலமும் ஆகி விடுவதால் ஏற்படும் இழப்புகள் குறித்து எச்சரிக்கை செய்வதுபோல் பல அனுபவ பூர்வமான அறிவுச் செறிவு மிக்க கருத்துக்களை அந்நூலில் வழங்கியுள்ளார்.

‘Focus’ என்றால் குவியம் என்று தமிழில் குறிப்பிட லாம். (ஒரு அகராதியில் அப்படித்தான் குறிப்பிடப்பட் டுள்ளது, அதாவது ஒரு முனைப்படுத்தல் என்பதுதான் அந்த குவியம் - வேறில்லை).

எதிலும் கவனத்தை மய்யப்படுத்துதல் ஒரு வகை தசைக்குப் பயிற்சி அளித்து பலப்படுத்துவது போன்ற ஒருவித முக்கியப் பணியாகும்.

இதில் கவனம் செலுத்தாமல் இருந்தால் நம் அறிவு மிகவும் குறைந்த அளவே இருக்கும்; அதில் குறியாய் இருந்தால் வளரும்; கவனமற்று ஏனோ தானோ என்று இருந்தால் அந்த ஆற்றல், தானே மறைந்துவிடக் கூடிய அபாயமும் உண்டு.

மூவகைக் குவியம் - ஒரு முனைப்படுத்துதல் என்று உண்டு.

1. உள் மனத்தினை மய்யப்படுத்துதல்.

2. மற்ற மக்களுடன் பழகுவதற்குப் பயன்படுமான குவியம்

இது அவர்களை எப்படி நடத்துகிறோம்? அவர்கள் எப்படி நம்மிடம் நடந்து கொள்ளுகிறார்கள்? என்பதை அறிய உதவும்.

மூன்றாவது (3) இந்த உலகத்தில் நாம் எப்படி நடந்து கொள்ளுவது என்பதற்கான - ஒரு முனைப்படுத்தி, பல வற்றை நோக்கி அதற்கேற்ப முடிவுகளை எடுத்தல்.

வாழ்க்கைக் கப்பலுக்கு அது சுக்கானாக அமையும்.

அடிக்கடி டிஜிட்டல் கருவிகளோடு தங்கள் பொழுதை கழிக்கும் இளையவர்கள் தனிமையும், மற்றவர்களிட மிருந்து விலகியே இருக்கும் ஒரு வகையான விசித்திர நிலையை உருவாக்கி விடுகிறது.

வகுப்பில்கூட அத்தகையோர் சக மாணவர்களிடம் சரியாக கலந்து பேசிப் பழகி, கலகலப்பாக தங்களது கல்லூரி வாழ்க்கையை அமைத்து கொள்ளாது, தங்களைத் தாங்களே தனிமைச் சிறையில் பூட்டிக் கொள்ளு கின்றனர்!

தமிழ் ஓவியா said...

அந்தப் பருவத்தில் இப்படி இருப்பது ஒருவகை செயற்கைத்தனம் - ஜீவனற்ற வாழ்வு அல்லவா? அவர் கணினி உலகம், இணையதளம், டிவிட்டர், கூகுள், யூ டியூப் என்றே செலவழித்து, வகுப்பறை, நண்பர்கள், பெற் றோர்கள், உற்றார்களை மறந்து விட்டு வாழுவது கொடு மையல்லவா?

இது போதை மருந்து எடுத்தவன் தனி உலகத்தில் மிதந்து - மற்றவைகளை மறந்து விழுவது போன்றதல்லவா என்று அவனது அல்லது அப்பெண்ணுடைய நண்பர்களோ, தோழிகளோகூட எண்ண மாட்டார்களா?

இதனால் பேசிப் பழகி, விவாதித்து தம் அறிவை, ஆற்றலைப் பெருக்கிடும் வாய்ப்பு மிகவும் குறைந்து விடுகின்றதல்லவா?

ஒரு பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து நண்பர்களுடன் மகிழ்வோடு, உரையாடுவது, ஒரு இசைக் கச்சேரியில் கலந்து கலகலப்பாக தமது இளைப்பாறுதல் (Relaxation) விரிவுபடுத்துதல், ஜாலியாக வெளியில் சுற்றி நண்பர்களிடம் அடித்த அரட்டை அதன் மூலம் கற்கும் நகைச்சுவை உணர்வு, ஒரு தேநீர் விருந்தில் கலந்து வாழ்த்துக் கூறும் Toast Master அனுபவம், பேச்சுக் கலை இவை எல்லாவற்றையும் இழந்து, சிற்பி செதுக்கிய பேசாத நடமாடும் சிலையாகிப் போனால் ஏற்படும் நட்டம் இவருக்கே அல்லாது நண்பர்களுக்கோ, இவர் சாதி சமூகத்திற்கோ, உலகத்திற்கோ அல்ல, அல்லவே அல்ல.

இளைஞர்கள் எண்ணிப் பார்த்து தங்களை மாற்றி கலகலப்பும், கலாய்த்துப் பழக அதில் (வரம்பு மீறாமல்) இருந்து தமது (மூளை) வளத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். தைவான், கொரியா போன்ற பல ஆசிய நாடுகளில் இந்த இணையதளப் போதையாளர்கள் பலரும் உண்டு அதிலேயே விளையாட்டு: வீடியோ கேம்ஸ் என்பது ஒருவரே பலராக கற்பனை செய்து விளையாடிடும் விளையாட்டு தானே!

அதுவே கால்பந்து, கைப்பந்து என்று பலருடன் - குழுவில் சேர்ந்து விளையாடிடுவது தானே! இவரது மனிதவளச் சிந்தனை ஆற்றலைப் பெருக்கித் தரும் - உடல் நலமும்கூட ஊளைச் சதை - கொலஸ்டாரல் இள வயதிலே கூடிடும் அபாயம் - 50-க்குப் பிறகு வர வேண்டிய சர்க்கரை வியாதி அதன் விளைவான பல நோய்களும் கட்டிளம் காளைப் பருவத்திலேயே ஊடுருவி விடும் அபாயம் ஏற்படுமே!

திருமணம் செய்து தாம்பத்திய வாழ்வை இளமையில் சுவைத்து வாலிப முறுக்குடன் வாழ வேண்டிய பலரும்கூட ஒருவகை ஏமாற்றமும், வெறுமையின் தாக்கமும், வேதனைப்பட வேண்டிய உள்ள நிலையும் - அதனால் ஏற்படும் மணமுறிவுகளும்கூட ஆரம்பத்தில் போட்ட இயந் திரத்தன விதை - ஆல மரம் போல் உள்ளுக்குள் வளர்ந் தோங்கி, வாழ்க்கையில் படர்ந்ததின் தீய விளைவாகவும் மாறி விடுகிறதே!

இறுதியாக ஒரு செய்தி, அமெரிக்காவில் சான்ஸ்பிரான் சிஸ்கோவில் கலிபோர்னியா பகுதியில் உள்ள பிரபல சிலிகான் வேலி - பள்ளத் தாக்கு என்ற கணினிப் பணிமனைகள் பண்ணை களின் பகுதியில் உள்ள சில பணி மனைகளில் லேப்டாப், மொபைல் ஃபோன்கள், ‘wifi’ என்ற வயர்லஸ் கருவிகள் மூலம் தகவல் பரிமாற்றம், போன்றவைகளை கம்பெனி கூட்டங்களில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திடுவதால் ஏற்படும் முக்கிய கருத்துக் களைக் கவனித்து மனதில் பதிய வைக்க முடியாமல் இருப்பதால் - முக்கிய கூட்டங்களில் தவிர்க்கு மாறும் அறிவுறுத்தப்பட்டுள் ளனராம்!

எதுவும் அளவிற்கு மிஞ்சினால் ஆபத்தும், இழப்பும் தானே!

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் - குறள் (479)

இது கையில் உள்ள செல்வத்திற்கு என்று முன்பு கூறப்பட்டது. இப்போது 21ஆம் நூற்றாண்டில் நமக்குக் கிடைத்துள்ள டிஜிட்டல் பொருள்களைப் பயன்படுத்து தலுக்குகூட கூறலாமே! - பொருந்துமே! இல்லையா?

Read more: http://viduthalai.in/page-2/71763.html#ixzz2n7QHUODX

தமிழ் ஓவியா said...


தென்னாப்பிரிக்க - வர்ணவெறி எதிர்ப்புப் போராளி நெல்சன் மண்டேலா

- வீ.குமரேசன்

உலகில் மனிதரைப் பாகுபடுத்திப் பார்க்கும் சமுதாயக் கூறுகள் பலப் பல. மனிதரிடையே பாகுபாட்டினை ஏற்படுத் திடும் அத்தகைய சமூகக் கூறுகள் நாட்டுக்கு நாடு மாறுபட்டுள்ளது. கருப்பின மக்களை அவர்களது உடல் நிறத்தின் அடிப்படையில் பாகுபடுத்திப் பார்க்கும் போக்கு அந்த இன மக்கள் பூர்வீகமாக வாழும் இடங்களிலும் மற்றும் வாழ்விடம் தேடிச் சென்ற இடங்களிலும், இன்றளவும் நீடித்துவரும் அவல நிலையாகும்.

தென் னாப்பிரிக்கா நாட்டில் பூர்வீகமாக வாழும் கருப்பின மக்களை அரசியல் அடிப் படையில் அடிமைப்படுத்தி இருந்த நிலை கண்டு, வெகுண்டெழுந்து, தொடர்ந்து போராடி, நெடுநாள் சிறைப்பட்டு அரசியல் அதிகார ஆளும் உரிமையினை பெற்றுத் தந்த நிறவெறி எதிர்ப்புப் போராளி நெல்சன் மண்டேலா 2013 டிசம்பர் 5 ஆம் நாளில் தனது 95-ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

சமூக அடக்குமுறை மற்றும் மனிதரைப் பாகுபடுத்தும் போக்கினை எதிர்த்து எத் தனையோ தலைவர்கள் மனித சமுதாயத் தில் வாழ்ந்து மறைந்தாலும் நெல்சன் மண்டேலாவின் பொது வாழ்க்கை மாறு பட்ட ஒன்றாகும். தமது வாழ்நாளில் பெரும் பகுதியை - 27 ஆண்டுகள் சிறையிலேயே கழித்து இறுதியில் தனது லட்சியப் பய ணத்தில் வெற்றி கண்ட மகத்தான மனித உரிமைப் போர் நாயகர் நெல்சன் மண் டேலா ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

தென்னாப்பிரிக்க நாட்டின் டிரான்ஸ்கி பகுதியில் மோவிசோ கிராமத்தில் நோன்கு வாப்கி நோஸ்கேனி-நிகோஸிமேப்ரா கான் யிஸ்வா காட்லா மண்டேலா தம்பதியரின் மகனாக 1918 ஜூலை 18-ஆம் நாள் நெல்சன் மண்டேலா பிறந்தார். அவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ரோலிஹ்லாலா மண்டேலா.இதில் மண்டேலா என்பது தாய் வழி மரபுப் பெயர். ரோலிஹ்லாலா என்ப தற்கு கலகக்காரன் என்பது பொருள்.

அந்தப் பகுதியின் தெம்பு இன மன்னரின் முதன்மை ஆலோசகராக மண்டேலாவின் தந்தை பணியாற்றினார். மண்டேலா தனது 9ஆம் வயதில் தந்தையை எதிர்பாராவித மாகப் பறி கொடுத்த பொழுது தெம்பு மன்னர் மண்டேலாவை தத்தெடுத்துக் கொண்டு தனது பராமரிப்பில் வளர்த்தார். கியூணு பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மண்டேலா சேர்க்கப்பட்ட பொழுது அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் கிறிஸ்தவ முறைப்படி அவருக்கு நெல்சன் எனப் பெயரிட்டனர்.

பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் போர்ட் ஹாரி பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்தார். அப் பொழுது நடைபெற்ற மாணவர் போராட் டத்தில் பங்கேற்றதால் நெல்சன் மண் டேலாவை பல்கலைக்கழக நிர்வாகம் வெளி யேற்றியது. பின்னர் தென்னாப்பிரிக்க பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பினை முடித்தார்.

முதுகலைப் படிப்பிற்காக மீண்டும் போர்ட் ஹாரி பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இந்நிலையில் தனது வளர்ப்பு மகன் மண்டேலாவிற்கு திருமணம் செய்திட தெம்பு மன்னர் ஏற்பாடு செய்த வேளையில், அதனை விரும்பாத மண்டேலா ஜோகன்னஸ்பர்க் நகருக்கு தப்பியோடினார். அங்கு நிலக்கரி சுரங்க பாதுகாப்பு அதிகாரி உள்பட பல்வேறு வேலைகளில் சேர்ந்து பணியாற்றினார்.

1948ஆம் ஆண்டில் விட்வாட்டர்ஸ் ராண்ட் பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்பில் சேர்ந்தார். படிப்பை நிறைவு செய்ய வில்லை. 1989ஆம் ஆண்டில் தனது சிறை வாசத்தின் பொழுதுதான் தென்னாப்பிரிக்க பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.

1942 முதல் மண்டேலா அரசியலில் பங்கேற்கத் தொடங்கினார். 1944-ல் அவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் முறைப்படி சேர்ந்து தென்னாப்பிரிக்காவை ஆண்ட நிறவெறி அரசுக்கு எதிராக தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். 1960-ஆம் ஆண்டு ஷர்ப்வில்லை பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 69 அப்பாவிகள் உயிரிழந்தனர். அதுவரை அமைதி வழியில் போராடிய மண்டேலா அன்றுமுதல் கொரில்லா யுத்தமுறையில் ஆயுதப் போராட்டத்தையும் தொடங்கினார்.

1956ஆம் ஆண்டில் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட் டார். வழக்கு நான்கு ஆண்டு காலம் நடந் தது. 1962 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறியதாக கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். 1964ஆம் ஆண்டில், ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாகக் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண் டனை விதிக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக 27 ஆண்டுகள் மண்டேலா சிறை வாழ்க் கையில் இருந்தார்.

தமிழ் ஓவியா said...


உலக நாடுகள் தென்னாப்பிரிக்க வெள்ளைக்கார அரசுக்கு கொடுத்த நெருக் கடி, விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக அவரது 71-ஆவது வயதில் 1990-இல் மண்டேலா விடுதலை செய்யப் பட்டார். அவரது தன்னலமற்ற ஈகத்தைப் பாராட்டி 1993-ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

80 ஆண்டு கால நிறவெறி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் கறுப்பின அதிபராக 1994-இல் மண்டேலா பதவி யேற்றார். 1999ஆம் ஆண்டு பதவிக் காலம் முடிந்தபின்னர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை. பொதுச் சேவையில் ஈடுபட்டார். உடல் நலக் குறைவு காரணமாக 2004ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து முழுமையான ஓய்வு பெற்றார்.

இந்திய அரசு மரியாதை

நெல்சன் மண்டேலாவின் பொது வாழ்க்கைப் பணிக்கு மரியாதை அளிக்கும் வகையில் 1990ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் உயரிய பாரத ரத்னா பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. வெளிநாட்டில் நிலவும் நிறவெறி எதிர்ப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் போக்கு உள்ள நேரத்தில் இந் நாட்டில் மத அடிப்படையிலான வர்ணபேதம் சட்ட ரீதியாகப் பாதுகாக்கப்பட்டு வரும் முரண்பட்ட நிலையும் நீடித்து நிலவுகிறது.

தந்தை பெரியாரும் நெல்சன் மண்டேலாவும் மனித பாகுபாட்டை எதிர்த்துப் போராடிய செயல்பாட்டுத் தளங்கள்

மனிதனைப் பாகுபடுத்தல், அதனால் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும் சமுதாயக் கூறுகளை தந்தை பெரியாரும், நெல்சன் மண்டேலாவும் எதிர்த்துப் போராடி னாலும் போராட்டக் களங்கள், கடைப்பிடித்த அணுகுமுறைகள் மாறுபட்டவை. நெல்சன் மண்டேலா எதிர்த்துப் போராடிய மனிதப் பாகுபாடு அரசியல் அடிப்படையை முதன் மையாகக் கொண்டது. தந்தை பெரியார் எதிர்த்துப் போராடிய சமூகத்தில் நிலவும் பாகுபாடு மதம், கடவுள் சார்ந்தது.

மண் டேலாவின் போராட்டம் அரசியல் அதிகாரம் பற்றியது. அவர்கள் கடைப்பிடித்த மதம் மனிதரை பாகுபடுத்திப் பார்க்கவில்லை. தந்தை பெரியார் மத அடிப்படையில் மனிதர் பாகுபடுத்தப்படுவது கண்டு, வெகுண்டு எழுந்து போராட்டம் கண்டார் தென்னாப் பிரிக்காவில் நிலவிய வர்ண (அ) தர்மத்தை எதிர்த்து நெல்சன் மண்டேலா போராடினார்.

தமிழ் ஓவியா said...


இந்நாட்டில் நிலவிய மத அடிப்படையிலான நிறவெறி பாகுபாட்டை எதிர்த்து தந்தை பெரியார் போராடினார். இந்த இருபெரும் மனிதநேயத் தலைவர்கள் 95 ஆண்டு காலம், வாழ்ந்து மானிடம் மேம்படப் பாடுபட்டனர். அரசியல் அதிகாரம் அடைதலை எல்லை யாகக் கொண்டுக் மண்டேலா போராடினார். அரசியல் அதிகாரம் பக்கம் போகாமல் சமத்துவம் நிலவிட சமூக விடுதலைக்குப் தந்தை பெரியார் பாடுபட்டார்.

அகிம்சையை மதித்த மண்டேலா
அகிம்சை அணுகுமுறையாளர் அல்ல!

பாகுபாடு மற்றும் அடக்கு முறையினை எதிர்த்துப் போராடும்பொழுது அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறே போராட்டக் காரர்கள் தங்களது போராட்டக் கருவிகளை வடிவமைக்க நேரிடும். ஆயுதம் எடுப்பது தவறான செயல் அல்ல. தென்னாப்பிரிக்க நிறவெறி அரசின் அடக்கு முறையினை எதிர்த்து ஆயுதம் தாங்கி, கொரில்லா தாக்குதல் நடத்த வேண்டிய நிலை நெல்சன் மாண்டேலாவிற்கு ஏற்படடது.

நாச வேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு 1964-ஆம் ஆண்டு நடந்த விசாரணையின் பொழுது நெல்சன் மாண்டேலா ஆற்றிய உரைப்பகுதி அவர் கடைப்பிடித்த அணுகுமுறையினை பறை சாற்றுவதாக அமையும்:

வன்முறை என்ற விசயத்தைப் பற்றியும் நான் பேசியாக வேண்டும். நாச வேலைகளுக்குத் திட்டம் தீட்டியது நான் தான் என்பதை நான் மறுக்கப்போவ தில்லை. கண்மூடித்தனமாகவோ, வன் முறையின் மீதுள்ள விருப்பத்தாலோ நான் இந்த திட்டத்தைத் தீட்டவில்லை.

வெள் ளையர்களால் என் மக்கள் அனுபவித்து வந்த கொடுங்கோன்மை, சுரண்டல், அடக்குமுறை ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்டிருந்த அரசியல் சூழ்நிலையை நிதானமாகவும், ஆழ்ந்தும் மதிப்பிட்ட பிறகே நான் இந்த திட்டத்தைத் தீட்டி னேன் என மண்டேலா விளக்கியுள்ளார்,

தமிழ் ஓவியா said...

இப்படி தனது போராட்ட அணுகு முறையின் தன்மையினை காரண காரியங் களுடன் விளக்கும் நெல்சன் மண்டேலாவை காந்திய வழியில் பொது வாழ்க்கையில் இருந்தவர் என போற்றுவது மண்டேலாவை பற்றி உண்மையாக எடுத்துச் சொல்வதாக இருக்காது. மேலும் அரசியல் விடுதலையை, அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் வெற்றி கண்டு அந்த அரசியல் அதிகாரத்தில் அங்கம் வகித்து ஆட்சி புரிந்தார்.

ஆனால் காந்தியார் அரசியல் அதிகாரத்தை நோக்கிப் போராடினாலும் விடுதலை பெற்ற பின் அதிகாரத்தில் தான் பங்கேற்க மாட்டேன் எனக்கூறி தன்னுடன் இருந்தவர்களை அரசியல் அதிகாரத்தில் அமர்த்திட ஒப்புதல் அளித்தவர் ஆவார். நெல்சன் மண்டேலா வின் போராட்ட அணுகுமுறை அகிம்சை சார்ந்தது அல்ல.

மண்டல் குழு பரிந்துரைகள் பற்றிய மண்டேலாவின் பாராட்டு!

தனது நாடான தென்னாப்பிரிக்க சமூ கக் சூழலுக்கு அரசியல் விடுதலையினை முன்னிறுத்தி போராட்டத்தை நடத்திய நெல்சன் மண்டேலா, பிற நாடுகளில் நில வும் மனிதரைப் பாகுபடுத்தும் கூறுகளைக் களைய மேற்கொள்ளப்பட வேண்டிய உரிய போராட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண் டிய அணுகு முறைகள் பற்றிய சிந்தனைத் தெளிவு உள்ளவராகவும் இருந்தார்.

குறிப்பாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கான மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறை வடிவம் காண்ப தற்கு முன்பே அந்தப் பரிந்துரைகளை வெகுவாக பாராட்டியவர் நெல்சல் மண் டேலா. இந்தியாவின் சமூக நீதிக்கான விடிவு எப்படி ஏற்படும் என்பது பற்றிய சிந்தனைத் தெளிவு மிக்கவராக நெல்சன் மண்டேலா விளங்கினார்.

ஒட்டு மொத்தத்தில் மானிட சமத்துவம், மேம்பாடு பற்றிய சிந்தனையில் ஒன்றாக இருந்த நிலைகள் தந்தை பெரியாரிடமும், நெல்சன் மண்டேலாவிடமும் தென்பட்டன. செயல்பாடு, முன்னுரிமை என்ற அளவில் அந்தத் தலைவர்கள் போராடிய களங்களில் சமூகச் சூழலுக்கு ஏற்றவகையில் மாறு பாடு தென்படலாம். ஆனால் அவை வேறு பாடுகள் அல்ல. போராட்டக்களத்திற்கு ஏற்ற வகையிலான மாறுபாடு மட்டுமே அவர்களிடம் தென்பட்டது.

டிசம்பர் முதல் வாரம் முக்கியத்துவம்!

இந்நாட்டு சமூக விடுதலைக்கு போராடிய தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்காரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர் ஆவர். அண்ணல் அம்பேத்கர் மறைந்த டிசம்பர் 6-ஆம் நாளின் முக்கியத்துவத்தை குலைத்திடும் வகையில் பாபர் மசூதி இடிப்பிற்கான நாளாக திட்டமிட்டு அந்த நாளை மத வெறிக்கூட்டம் தெரிந்தெடுத்தது. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் - டிசம்பர் 5-ஆம் நாளில் நிறவெறி எதிர்ப்புப் போராளி நெல்சன் மண்டேலாவும் மறைந்துள்ளார்.

சமூக விடுதலை போராளிகள் மறைந் தது ஒரே வாரத்தில் என்பதை பெருமையாக கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் பேராளிகளின் நினைவு நாளில் அவர்களது சிந்தனை, கொள்கைகளை எடுத்துச் சொல்லிப் பரப்பிட வேண்டிய அணுகுமுறை என்ற அளவில் நெல்சன் மண்டேலாவின் டிசம்பர் 5ஆம் நாள் மறைவு முக்கியத்துவத்தை பெறுகிறது.

மானிடம் போற்றப்படும் நாள் அந்த நாள் என்பதை எடுத்துச் சொல்லவேண்டிய பணியோடு மானிடத்தின் மாண்பினை உலக அரங்கில் குறைத்திடும் வகையில் பாபர்மசூதி இடிக்கப்பட்ட அக்கிரமச் செயல்களை தோலுரித்து மனித நேயம் காப்பது மனிதநேய ஆர்வலர் அனைவரது கடமையாகும். வாழ்க நெல்சன் மண்டேலா! வளர்க மானிட சமத்துவம்!

(இன்று (10.12.2013) மாலை சென்னை - பெரியார் திடலில் நிறவெறி எதிர்ப்புப் போராளி நெல்சன் மண்டேலாவிற்கு பெரியார் இயக்கத்தின் சார்பாக நினை வேந்தல் நடைபெறுகிறது. தமிழர் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் பலர் நினைவேந்தலில் பங்கேற் கின்றனர்.)

Read more: http://viduthalai.in/page-2/71762.html#ixzz2n7QTRngt

தமிழ் ஓவியா said...


இன்று (டிச.10): சர்வதேச மனித உரிமைகள் தினம்


ஒவ்வொரு மனிதனும், தான் வாழ்வதுடன், பிற ரையும் வாழவிட வேண் டும் என்பதை வலியுறுத் தும் விதமாக டிச., 10ஆம் தேதி, மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக் கும் வலியுறுத்துவதே இதன் நோக்கம். 1948, டிச.10ஆம் தேதி அய்க் கிய நாடுகளின் பொது சபையால் உலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை, பெருமைப்படுத்தும் விதத் தில் 1950இல் இத்தினம் தொடங்கப்பட்டது.

உல கில் வாழும் அனைத்து மனிதர்களும் சமமான வர்களே. ஒருவரிடமி ருந்து நாம் எவ்வித உரி மையை எதிர்பார்க்கி றோமோ, அதே உரி மையை மற்றவர்களுக் கும் வழங்க வேண்டும். யாரும் யாரையும் அடி மைப்படுத்தக் கூடாது.

ஒருவர் பிறக்கும் போதே, அவருக்கான மனித உரிமைகள் வந்து விடுகின்றன. உயிர் வாழ் வதற்கான உரிமைகள், கருத்து சுதந்திரம், மனி தன் சுதந்திரமாக வாழ் வதற்கான கல்வி, மருத் துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் ஒரு மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம். இது அனைத்து மக்களும் அங்கீகரிக்கக்கூடிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றவை.

இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் 1991, அக். 13இல் இந்திய மனித உரிமைகள் பாது காப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-3/71800.html#ixzz2n7QzMXyo

தமிழ் ஓவியா said...


கேரளாவில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தமிழர்களை வெளியேற்றுவதா?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, சோலையூர், புதூர், அகழி, பாலூர், சாவடியூர் போன்ற கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் பல ஆண்டுகளாக விவசாயத்தினை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு உழைக்கும் மக்கள் ஆவார்கள். அவர்கள் கேரள மாநில வாசிகளே!

இவர்கள் பழங்குடி மக்களிடமிருந்து நிலத்தை முறையாகப் பெற்று (விலை கொடுத்து வாங்கி) பத்திரப் பதிவும் செய்து வரி செலுத்தி வந்தனர். 1986 இல் அந்த நிலங்களை வாங்கியது செல்லாது என கேரள அரசு அறிவித்தது.

அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். ஆதரவுடன் பெரிய அறப்போர் வெடித்தது; அப்போது பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது.

இப்போது கேரள அரசின் கெடுபிடி காரணமாக அவர்கள் நிலங்களை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கேரளாவாழ் அட்டப்பாடி தமிழர்கள் ஒருங்கிணைந்த போராட்டத்தை - அறவழிப்பட்ட எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்!

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனே தலையிட்டு, கேரள முதலமைச்சருக்குக் கடிதம் எழுதிடவும், தேவைப்பட்டால், தொலைப்பேசிமூலம் பேசி, இப்பிரச்சினையை சுமூகமாக, முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் முடிவுக்குக் கொண்டு வந்ததுபோல செய்யவேண்டும்!

மத்திய அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டு, கேரள அரசுடன் பேசவேண்டும்; அவசரம், அவசியம்!

இரண்டு மாநில மக்களின் நல்லுறவு பாதிக்கப்படாமல் வாழை இலை முள்ளை அகற்றுவதுபோன்று, மென்மையும், உறுதியும் கலந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்து அதன்மூலம் நல்ல பயன் கிடைக்கச் செய்யவேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்தமிழர்களின் உடைமைகள் அவை

எனவே, நியாய அடிப்படையில் அவர்களை வெளியேற்றுவது மிகப்பெரிய தவறு; சமூகநீதி அவர்களுக்கும் தேவை.

பழங்குடியினருக்கான நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துவிட்டு, பல தலைமுறைகளாக அந்தப் பகுதியைத் தம் உழைப்பின்மூலம் வளப்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களை வெளியேற்றுவது எந்த வகையில் நியாயமாகும்? பழங்குடி மக்களுக்கு நியாயம் வழங்க எத்தனையோ வழிகள் உண்டு; அதுபற்றி கேரள அரசு சிந்திக்கட்டும்!

ஒரு பக்கத்தில் ஒருமைப்பாடு பேசிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் அதற்கு உலை வைப்பது தேசியமா? என்பதும் முக்கியமான கேள்வியாகும்.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை 11.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/71806.html#ixzz2nAvtzpxL

தமிழ் ஓவியா said...


பாராட்டத் தக்க நியமனம்


டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக டாக்டர் வணங்காமுடி நியமனம்

சென்னை, டிச. 11- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் முனைவர் வணங்காமுடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் புதன்கிழமை (டிச. 11) பல்கலைக் கழகத்தின் 6 ஆவது துணை வேந்தராக பதவி ஏற்றார்.

திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டியில் விவசாயக்குடும்பத்தில் பிறந்த இவர் 2 எம்.ஏ., எம்.எல். முடித்து 2 ஆராய்ச்சிப் படிப்புகளை (பிஎச்.டி.) நிறைவு செய்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியராகப் பணியாற்றியதோடு, பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி சமாதானம் அரசு பள்ளி ஆசிரியர். மகள் அன்பரசி சிங்கப்பூரில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/71829.html#ixzz2nAwXwNcA

தமிழ் ஓவியா said...


2ஜி கூட்டுக்குழு அறிக்கை: கலைஞர் கருத்து

சென்னை, டிச.11- 2ஜி தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்த கருத்து வருமாறு:

கேள்வி :- அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு, பா.ஜ.க., மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித் திருக்கி றார்களே?

கலைஞர் :- குற்றம் சாட்டப்பட்டவரையே விசாரிக்காமல் - அவர் தன்னை விசாரிக்க வேண்டு மென்று கோரிக்கை வைத்த பிறகும் அவரை அழைக்காமல் - அந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையை தி.மு. கழகம் மட்டுமல்ல; விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்படவில்லை என்றும், நாடாளுமன்ற வரலாற்றில் இன்று மோசமான நாள் என்றும், அது பற்றிப் பேசவே வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா கூறியிருக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், இந்த அறிக்கையை நாங்கள் புறக்கணிக்கிறோம், இது திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட மோசடி அறிக்கை, பிரதமர் உள்ளிட்டோரைத் தப்பிக்கச் செய்வதற்காக திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசும்போது, பி.சி. சாக்கோ அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யானது முழுமையற்ற, வேண்டுமென்றே தன்னிச்சை யாக, உரிய ஆவணங்கள் இன்றி தயாரிக்கப்பட்ட அரைகுறையான அறிக்கை. இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து கொண்டி ருக்கும் ஆ.ராஜா இந்தக் குழுவில் சாட்சிய மளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறியதோடு, இந்த அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதை எதிர்த்து கழக உறுப்பினர்கள் வெளி நடப்புச் செய்திருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-3/71846.html#ixzz2nAxCxhkd

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும் சட்டம் ஒழுங்கு படும்பாடு!


கேள்வி :- சட்டம், ஒழுங்கு இன்று (10-12-2013) ஒரு நாளில் மட்டும்?

கலைஞர் :- 10-12-2013 ஒரு நாளில் மாத்திரம் ஏடுகளில் வந்துள்ள சட்டம் ஒழுங்கு பற்றிய செய்திகளின் தலைப்புகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

தாயைக் காப்பாற்ற முயன்ற மகன் செங்கத்தில் சுட்டுக் கொலை. சென்னையில் மூன்று இடங்களில் போலீசார்போல வேடமணிந்து செயின் பறிப்பு. பெண்ணாகரத்தில் போதையில் மூன்று போலீசார். அரசு நிலத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் அலுவலகம். திருவண்ணாமலை யில் கலெக்டர் அலுவலகம் முன் நான்கு பேர் தீக்குளிக்க முயற்சி.

நடிகர் மயில்சாமியிடம் 50 ஆயிரம் கேட்டு மிரட்டல். துரைப்பாக்கத்தில் பெண்ணிடம் 12 சவரன் அபேஸ். சென்னைத் தெருக்களில் தண்ணீர் புகுந்து மீனவர்களின் 2 வீடுகள் இடிந்தன. மது விருந்தில் தகராறு - ஒருவருக்கு பீர் பாட்டில் குத்து. மீனம்பாக்கத்தில் இஞ்சினீயரிடம் 20 சவரன் கொள்ளை. ஆலந்தூரில் பெண் ஊழியரைத் தாக்கி நகை பறிப்பு.

வீட்டு மனை வழங்க 2000 ரூபாய் லஞ்சம். ஆவடியில் மூதாட்டியிடம் 23 சவரன் கொள்ளை. சோழவரத்தில் தம்பதியரிடம் நகை பறிப்பு. திருப்போரூர் அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் நள்ளிரவில் பயங்கரத் தீ - பெட்ரோல் ஊற்றி எரித்ததாகப் புகார். ரயிலில் 25 சவரன் நகை பறித்த நான்கு பெண்கள்.

இன்ஸ்பெக்டருக்கு எதிராக பா.ஜ.க. திடீர் போர்க்கொடி. அய்யப்ப பக்தர்கள்போல் கொள்ளையர்கள் ஊடுருவல். தூத்துக்குடி அருகே பெண் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டுக் கொலை. வேலூர் சிறையில் மோதல். பெரவள்ளூரில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து இரண்டரை லட்சம் ரூபாய் கொள்ளை. கோயம்பேட்டில் பால் விற்கும் பெண் உரிமை யாளரைத் தாக்கிக் கொள் ளை.

இந்தப் பட்டியல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்கிறது சட்டம் ஒழுங்கு!

- தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையிலிருந்து
(முரசொலி, 11.12.2013)

Read more: http://viduthalai.in/page-5/71813.html#ixzz2nAxQGugi

தமிழ் ஓவியா said...


இலங்கைக் கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பதா? நாடாளுமன்றத்தில் தி.மு.க. எதிர்ப்பு

புதுடில்லி, டிச.11-இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பது குறித்து டில்லி மாநிலங் களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சினை எழுப்பினர்.

இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பது குறித் தும், இந்திய மீனவர்கள் தொ டர்ந்து இலங்கையால் சிறை பிடிக்கப்படுவது குறித்தும் விவா திக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி, மாநிலங் களவை தலைவருக்கு மனு அளித் திருந்தார்.

ஆனால், இதற்கு நேரம் ஒதுக்க மறுத்ததால், கனிமொழி தலைமையில் தி.மு.க. உறுப்பி னர்கள் பிரச்சினை எழுப்பினர்.

இலங்கைக் கடற்படைக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த எதிர்ப்புகளையும் மீறி கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பது நிறுத்தப்படவில்லை. இதேபோல, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து இலங்கை சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்த மீனவர்களை விடுவிக் கவும், மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென்று, கனிமொழி எழுப்பிய கோரிக்கையை மாநிலங் களவை தலைவர் ஏற்க மறுத்தார். இதையொட்டி, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையில் முழக்கங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தலைமை செயலாளருக்கு 193ஆம் பிரிவின் கீழ் ஆ.ராசா ஒரு மனு அளித்தார்.

அதில், அரைகுறையாகவும், நடைமுறைக்கு ஒவ்வாத வகை யிலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த கூட்டுக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் முன் வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் நாடாளு மன்ற விதிமுறைகளில் வரை யறுக்கப்பட்டுள்ள நடைமுறை களுக்கு எதிராகவும், தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் முன்வைக்கப் பட்டுள்ளதால் இந்த அறிக்கை குறித்து அவையில் விரிவாக விவா திக்க வேண்டும் என்று கூறியுள் ளார்.

193ஆம் விதியின் கீழ் நடை பெறும் விவாதத்தில் வாக்கெடுப்பு கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. மாநிலங்களவை துணைத் தலைவரான பா.ஜனதா எம்.பி. ரவிசங்கர் பிரசாத்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான கூட்டுக்குழு அறிக்கை விவாத மின்றி ஏற்றுக் கொண்டது தவறு என்று குற்றம்சாட்டினார்.

Read more: http://viduthalai.in/page-5/71810.html#ixzz2nAxYQicR

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டவர் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., ஆகலாம்; அர்ச்சகர் ஆகக்கூடாதா?
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் அடித்த கொள்ளை போதாதா?
சிதம்பரத்தில் சி.பி.எம். ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் முழக்கம்!

சிதம்பரம், டிச.11- சிதம்பரம் நடராஜன் கோயி லில் தீட்சிதர்கள் அடித்த கொள்ளையைத் தடுத்து நிறுத்த அக்கோயில் அரசின் கட்டுப் பாட்டில் தொடரவேண்டும் என்றார் சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.பால கிருஷ்ணன்.

சிதம்பரம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காந்திசிலை அருகில் 9.12.2013 திங் களன்று நகர சி.பி.எம். செயலாளர் தலைமையில் சிதம்பரம் நடராசர் கோயிலை அரசே தொடர்ந்து நிர்வகிக்க வேண்டுமென ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிதம் பரம் தொகுதி மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப் பினர் க.பாலகிருட்டிணன் சிறப்புரையாற்றினார். அவர் உரையில்...

சிதம்பரம் கோயிலை அரசு ஏற்றவுடன் வைக்கப்பட்ட உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய் சேர்ந்துள்ளது. இதற்கு முன் தீட்சிதர்கள் காட்டிய கணக்கு வெறும் நாற்பதாயிரம் ரூபாய் தான். மூன்று ஆண்டுகளில் கோடிக்கணக்கான பணம் என்றால் கடந்த ஆண்டுகளில் எத்தனை கோடியிருக்கும். தற்பொழுது வெளிநாட்டைச் சார்ந்த ஒரு குடும்பம் மூன்றரைக் கோடி மதிப் புள்ள பவழ மாலை நன்கொடை கொடுத் துள்ளதாக செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது.

தற்பொழுது கோயில் நிர்வாக அதிகாரி நு.டீ. அது குறித்து தீட்சிதர்களுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளார். இச்செய்தி எப் படியோ வெளியே வந்துள்ளது. இச்செய்தி தெரியாமல் போயிருந்தால் என்னவாகியிருக் கும்? தீட்சிதர்கள் சார்பில் ஒரு மூட்டை சிமெண் டாவது செலவு செய்து பராமரிப்பு செய்துள் ளீர்களா? என்னென்ன நகைகள் உள்ளன என்ற பட்டியல் வெளியிட்டு இருக்கிறீர்களா?

கோடிக் கணக்கான சொத்துக்களை, பல ஏக்கர் நிலங் களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு தனிப்பட்ட குழுவிடம் இருப்பது சரியா? இந்த தீட்சிதர்கள் துரத்தி அடித்ததால்தானே வள்ளலார் வடலூருக்கு ஓடினார். தீட்சிதர்கள் அவரை விரட்ட வில்லை என்றால் இங்குதானே இருந்திருப்பார்.

பெருமாளைத் தரிசிக்க உள்ளே போக முடியுமா?

சிதம்பரம் கோயிலின் உள்ளே கோவிந்தராஜ பெருமாள் கோயில் நிர்வாகம் சட்டப்படி தீட்சி தர்களுக்குச் சென்றுவிட்டால், நாங்கள் எங்கள் பெருமாள் கோயிலுக்குச் செல்வதை தீட்சிதர்கள் தடுத்தால், என்னசெய்வது என்று அவர்கள் கேட் கிறார்கள், தமிழில் பாடினால், ஆறுமுகசாமி ஓதுவார் தேவாரம் பாடினால் தீட்டாகிவிடு மென்றால், பிறகு எதற்குக் கோயில்? தமிழ்நாட் டில் தமிழுக்கு இடமில்லையென்றால் தமிழர் களுக்கு என்ன மரியாதை? யோக்கியதை?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் இவர்களுக்கு என்ன வந்தது? அதற்கும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு; சிதம்பரம் கோயில் விவகா ரத்திலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு. உச்ச நீதிமன்றம் என்ன இவர்களுக்கு மட்டும் சொந் தமா? ஒருவர் அய்.ஏ.எஸ். ஆகலாம்; அய்.பி.எஸ். ஆகலாம் ஆனால் அர்ச்சகர் ஆகமுடியாது என்றால், இந்த நிலை நீடிக்கவிடக் கூடாது.

சிதம்பரம் கோயிலை அரசு ஏற்பது என்பது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபொழுதே நடைபெற்ற முயற்சி; தந்தை பெரியார் பிறந்த மண்ணில் - திராவிட இயக்கங்களின் ஆட்சியில் - சிதம்பரம் கோயிலை அரசு ஏற்கவில்லை என்றால், வேறு எந்த ஆட்சியில் நடைபெறும்?

தமிழக முதல்வருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்து மதத்திற்கே தலைவர் என்ற காஞ்சி சங்கராச்சாரியையே சிறையில் அடைத்த உங்களுக்கு தீட்சிதர்களின் ஆணவத்தை அடக்குவது பெரிய வேலையில்லை.

ஒருவேளை தீர்ப்பு நமக்குச் சாதகமாக இல்லையென்றாலும்கூட தமிழக அரசின் முயற்சி தொடரவேண்டும். இனிமேலாவது சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும். வர்ணாசிரம தர்ம ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சிறப்புரையாற் றினார்.

நிகழ்ச்சியில் சி.பி.அய். நகர செயலாளர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய லாளர் வ.க.செல்லப்பன், மாநில ப.க. அமைப்புச் செயலாளர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மற்றும் பலர் உரையாற்றினர்.

Read more: http://viduthalai.in/page-8/71847.html#ixzz2nAxxTrzW

தமிழ் ஓவியா said...


செய்திக்குப் பின்னால்.....

இந்தியாவில் ரசாயனம் கலந்த குடிநீரால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4.21 கோடி என்று மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை இணை யமைச்சர் பரத்சிங் சோலங்கி தெரிவித்துள்ளார்.

(இதைச் சொல்லுவதற்கு ஓர் அமைச்சர் தேவையா? மனித உயிர் என்பது மிகவும் மலிவானது என்ற நினைப்பா?).

விபத்துகள்

ஒரு நாளில் மட்டும் ஒட்டன்சத்திரம் அருகில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் சாவு.

(ஒட்டன் சத்திரம் காவல் நிலையத்தில் விரைவாக யாகம் நடத்தப்படும் என்று எதிர் பார்க்கலாம்.)

மக்கள் நீதிமன்றம்

மாநில அரசுகளின் ஊழல்பற்றி விசாரிக்கும் மக்கள் நீதிமன்றம் (லோக் ஆயுக்தா) அமைக்கப் படுகிறது. ஆனால், குஜராத்தைப் பொறுத்தவரை 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதற்கான நீதிபதி நியமிக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதி டி.பி.புச் நியமிக்கப்பட்டுள்ளார்.

(ஊழலற்ற உத்தமபுத்திரன் என்று மோடி பற்றி தம்பட்டம் அடித்தார்களே, அப்படிப் பட்டவர் ஆட்சியில் ஏன் இத்தனை ஆண்டு களாக இந்த நீதிமன்றம் செயல்படவில்லை? மடியில் கனமோ!)

கங்குலியாயிற்றே!

பாலியல் புகாரில் சிக்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து இன்னும் விலகவில்லை.

(கங்குலி ஆயிற்றே! மனுதர்மத்தில் இது குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கலாம்.)

அன்னா ஹசாரே!

நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, தனது சொந்த கிராமத்தில் அன்னா ஹசாரே சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

(டில்லியில் இவர் நடத்திய போராட்டத்தின் லாபத்தை இன்னொருவர் அபகரித்துவிட்டாரே! ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்?).

அமெரிக்க இராணுவத்தில் சீக்கியருக்குத் தடை!

அமெரிக்க இராணுவத்தில் அமெரிக்கவாழ் சீக்கியர்களை மத நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, இராணுவப் பணிகளில் நிராகரிப்பது குறித்து சர்ச்சை அமெரிக்காவில் எழுந்துள்ளது.

(இந்தியாவில் காவல்துறையில் அய்யப்பன் வேடம் போட்டுக் கொண்டே அதிகாரிகள் முதற் கொண்டு பணி புரியவில்லையா? தலைப் பாகை மதச் சின்னம் என்றால், பூணூல் அணி கிறார்களே, அது எந்த சின்னம்?).

கிரிக்கெட்

ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் ஜாகீர்கானைச் சேர்த்திருக்கவேண்டும். - தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் நிட்னி.

(சர்மாக்கள் இருக்கும்போது ஜாகீர்கான்கள் கண்களில் படுவார்களா?)

Read more: http://viduthalai.in/e-paper/71865.html#ixzz2nGeXMptJ

தமிழ் ஓவியா said...


வெளிச்சத்துக்கு வரும் சாமியார் ஆசாராம் மகனின் கேவலங்கள்


பாலியல் வழக்கில் கைதான ஆசாராமின் மகன் நாராயண்சாயி கடந்த வாரம் அரியானாவில் மாறுவேடத்தில் இருந்த போது கைதானான். பஞ்சாபியரைப்போல் வேடமிட்டு வெளிநாட் டிற்கு தப்பிச்செல்ல இருந்த நேரத்தில் அரியானா மாநில எல்லையில் பிடிபட்ட அவன் பல பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினேன் என்றும், அவர்கள் உண்மையைச் சொல்லாமலிருக்க படமெடுத்து மிரட்டினேன் என்றும் உண்மை யைக்கூறினான், இதை குஜராத் காவல் துறையினர் உறுதிசெய்துள்ளனர். சூரத் காவல்துறை ஆய்வாளர் ராகேஷ் அஸ்தனா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, கடந்த வாரம் வன் கொடுமை வழக்கில் கைதான ஆசாராமின் மகன் நாராயண் சாயியை காவல்துறை பொறுப்பில் எடுத்து விசாரித்தோம், அப்போது அவன் தன் மீதானகுற்றத்தை ஒப்புக்கொண்டான்

பல பெண்களிடம் உறவு

மேலும் அவர் வாக்குமூலத்தில் கூறியதாவது நான் என்னுடைய 8 பெண் சீடர்களுடன் தொடர்ந்து உடல் ரீதியான தொடர்பிலிருந்தேன், அதில் இருவருக்கு என் மூலமாக குழந்தை பிறந்தது, அதை மறைத்து பரோடாவைச் சேர்ந்த எனது சீடர் ஒருவருக்கு எனது தந்தையின் ஆலோசனைப்படி திருமணம் செய்து வைத்தேன். ஆசிரமத்திற்கு வருகைதரும் பல பெண்களிடம் உறவு வைத் துள்ளேன். என் தந்தையின் செல்வாக்கை பயன் படுத்தி அனைவரையும் மிரட்டி வைத்துவிடுவேன், சிலர் ஒன்றும் சொல்வதில்லை, ஆனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு புகார் கூறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றான்

மேலும் தலைமறைவாக இருந்த 58 நாட்கள் எங்கு தங்கி இருந்தேன், யார் யார் எனக்கு உதவி செய்தார்கள் என்பதையும் கூறினான். ஒடிசா அல்லது ஆந்திரா சென்று கடல் மார்க்கமாக சிங்கப்பூர் சென்று அங்கிருந்து கனடா செல்ல திட்டமிட்டதையும் அதற்கான ஏற்பாடுகள் செய்து தருபவர் தாமதமாகிக்கொண்டு வந்ததால் பஞ்சாப் சென்று தரை மார்க்கமாக பாகிஸ் தானுக்கு செல்லும் திட்டம் இருந்ததாக கூறினார்.

நீதிமன்றம் இன்று மாலை வரை காவல் துறையின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இன்று மாலையோடு காவல்துறை பொறுப்பு முடிவதால் நாளை காலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்.

Read more: http://viduthalai.in/e-paper/71867.html#ixzz2nGewp4UR

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு, அமெரிக்கா எச்சரிக்கை! கலைஞர் கருத்து


சென்னை டிச.12- ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசு பற்றி அமெரிக்கா கூறியுள்ள கருத்து குறித்து திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:

கேள்வி :- இலங்கை அரசின் நடவடிக் கைகள் பற்றி காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட காமரூன் தெரிவித்த கருத்துகளை பல நாளேடுகளும் வெளியிட் டன. பிரான்ஸ் நாட்டின் கருத்தினைத் தாங்களே வெளியிட்டிருந்தீர்கள். தற் போது அமெரிக்க நாடு கூட இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக ஒரு செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர் :- உண்மைதான்! இலங்கை உள்நாட்டுப் போரில் ராணுவத்தின் அட்டூழியம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்கா விட்டால், சர்வதேச சமூகம் இனியும் பொறுமை யாக இருக் காது என்று தெற்காசிய விவகாரங்களுக் கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் கூறி யிருக்கிறார்.

போர்க் குற்றங்கள் தொடர் பாக இலங்கை அரசின் நடவடிக்கையில், வரும் மார்ச் மாதத்துக்குள் எந்த முன்னேற் றமும் இல்லாவிட்டால், அய்.நா. தலைமை யிலான விசாரணை கோருவோம் என்று இங்கிலாந்துப் பிரதமர் கூறிய கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்கா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் இத்தாலியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, இலங்கை ராணுவத்தின் மீதான போர்க் குற்றம் தொடர்பான வழக்கு விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்காக ஜெர்மனியில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/71864.html#ixzz2nGf7NxId

தமிழ் ஓவியா said...


சிறப்பு


விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடை யோர்க்கே சென்றவிடமெல்லாம் சிறப்பு. - (விடுதலை, 12.3.1965)

Read more: http://viduthalai.in/page-2/71870.html#ixzz2nGfMmDBY

தமிழ் ஓவியா said...


ஒரே நேரத்தில் 107 தமிழக மீனவர்கள் கைது!


கோடியக்கரை நடுக்கடலில், மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள், 107 பேர்களை இலங்கை சிங்களக் கடற்படையினர் கைது செய்து, இலங்கைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், கல்லார், சாமந்தான் பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, வேளங்கண்ணி பகுதிகளைச் சேர்ந்த 215 தமிழின மீனவர்கள் 32 விசைப் படகுகளில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி, சட்ட விரோதமாக, தமிழக மீனவர்களின் விசைப் படகுகளைச் சுற்றி வளைத்து, இந்த வேலையைச் செய்துள்ளனர்.

இந்திய அதிகாரிகள், ஏன் இந்திய அமைச்சர்கள் கூட பழுதடைந்த கிராமபோன் தட்டுப்போல, ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொல்லி வருவது வாடிக்கையும், விஷமம் கலந்த வேடிக்கையுமாகும்.

தமிழக மீனவர்கள் எல்லைகளைக் கடந்து, இலங்கை கடற்பகுதிக்குள் என்று மீன்பிடிப்ப தால்தான், இலங்கைக் கடற்படை சிறைப்பிடிக்கிறது, என்பது தான் பச்சைப் பொய்யான பல்லவியாகும். அது அப்பட்டமான பொய் என்பதற்கு நேற்று நடந்த நிகழ்வே போதுமான சாட்சியமாகும். நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களைத்தான் சிங்களக் கடற்படை சுற்றி வளைத்துச் சிறைபிடித் திருக்கிறது.

சர்வதேச சட்டப்படி கூட கடற்பகுதியிலிருந்து 12 மைல் தூரம் அந்த நாட்டுக்குச் சொந்தமானதாகும். கச்சத் தீவைப் பொறுத்தவரை இராமேசுவரத்தி லிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது; இலங்கைக் கடற்கரைப் பகுதியிலிருந்தோ 13 மைல் தூரத்தில் உள்ளது. இந்தச் சர்வதேச சட்டப்படி பார்த்தாலும்கூட கச்சத் தீவுப் பகுதியில் மீன்பிடிக்க இலங்கை மீனவர்களைவிட தமிழின மீனவர்களுக்குத்தான் உரிமை அதிகம் ஆகும்.

1983 முதல் இன்று வரை 600 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

எந்த அளவுக்கு, இந்தக் கொடுமை நீண்டு இருக்கிறது என்றால் - இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப்பட்டு, இழுத்துச் செல்லப் படுகிற தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி, இந்தியத் தேசியக் கொடியைக் கோவணமாகக் கட்டச் செய்து கெக்கலி கொட்டுகின்றனராம்.

பொதுவாக, பார்ப்பன ஏடுகளும் சரி, இந்திய அதிகாரிகளும் சரி, இந்திய மீனவர்கள் என்றுகூடக் குறிப்பிடுவதில்லை; மாறாக தமிழக மீனவர்கள் என்றுதான் குறிப்பிடுவது வழக்கம்.

நாம் இவ்வாறு சொன்னால், பிரிவினை வாடை வீசுகிறது என்று பேசும் அந்த 22 காரட் தேசிய வாதிகள், மீனவர்கள் பிரச்சினை என்று வரும் பொழுது மட்டும், அவர்களே பிரிவினைவாதிகள் ஆகி விடுகின்றனரே!

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டு இருக்கும், கொன்று குவித்துக் கொண்டி ருக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு, இந்திய இராணுவம் பயிற்சி கொடுக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

இந்தியத் தேசியக் கொடியைக் கோவணமாகக் கட்டச் செய்கிறார்கள் என்ற நிலையில்கூட இந்திய அரசுக்குத் தார்மீக ரீதியான சினம் சீறி எழவில்லையே!

தமிழின மீனவர்கள் அல்லாமல் இந்தியாவின் சீக்கியர்களுக்கோ, வங்காளிகளுக்கோ இப்படி வன்கொடுமைகள் நடந்திருந்தால் என்ன நடந் திருக்கும் என்பதை பொதுவான நிலையில் உள்ள வர்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும்.

தமிழ்நாடு அமைதி காக்கிறது; நிதானத்தை கடைபிடிக்கிறது, மத்திய அரசு உரியதைச் செய்யும் என்று நினைத்தால் அதனைத் தமிழர்களின் கோழைத்தனம் என்று இந்திய அரசு கருதுகிறது.

டாடா நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்கள், ஆழ்கடலில் மீன்பிடிக் கிறார்கள்; அவர்களிடத்தில் சிங்களக் கடற்படை வாலை ஆட்டுவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆக ஊருக்கு இளைத்தவர்கள் தமிழக மீனவர்கள்தான் என்ற நிலை நீடிப்பது சரியானதல்ல. மிதிக்க மிதிக்கப் புழுவும் புலியாகும் என்பதை மறந்து விட வேண்டாம்!

தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்பதுதான்.

தமிழ்நாட்டு மக்கள் அரசியலைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, தமிழின உணர்வோடு, அல்லது மனிதநேய உணர்வோடு ஒன்று சேரட்டும் - ஒரு நொடியில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்து விடுமே!

Read more: http://viduthalai.in/page-2/71874.html#ixzz2nGfWSzpv

தமிழ் ஓவியா said...


பெரும் முதலாளிகள் வாங்கிய கடனை வசூலிப்பதில் பாராமுகம் - கல்விக் கடன் வாங்கும் மாணவர்களிடம் கிடுக்குப்பிடி ஏன்?


தி.மு.க தலைவர் கலைஞர் கேள்வி

சென்னை, டிச.12- கோடிக்கணக்கில் கடன் வாங்கும் முதலாளிகளிடம் இருந்து கடன் வசூலிப் பதில் பாராமுகம், கல்வி கடன் வாங்கும் மாணவர் களிடம் கெடுபிடி ஏன் என்ற நியாமான வினாவை தொடுத்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர். விவரம் வருமாறு:-

கேள்வி :- ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கில் வங்கிகளிலே கடன் வாங்குபவர்களை கிட்டி கட்டி வசூலிக்கும் வங்கிகள், கோடிக் கணக்கிலே கடன் பெற்றவர்களைக் கண்டு கொள்வதில்லையாமே?

கலைஞர் :- மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதற்காக அவர்களின் புகைப்படங்களை வங்கியின் வாசலில் வைத்தது பற்றி நான் சில மாதங்களுக்கு முன்பு அது தவறு என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். 2008ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள வங்கிகளின் மொத்த வராக் கடன் 39 ஆயிரத்து 30 கோடி ரூபாய். 2012இல் இந்தத் தொகை 1 இலட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. 2013 மார்ச் 31ஆம் தேதியன்று பொதுத் துறை வங்கிகளுக்கான மொத்த வராக் கடன் 1 இலட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய். இந்தக் கடன்களை பாக்கியாக வைத்திருப்பவர் களில் முக்கியமானவர்கள், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (விஜய் மல்லையா) 2,673 கோடி ரூபாய்; விஸ்டம் டைமன்ட்ஸ் அண்ட் ஜுவல்லரி நிறுவனம் 2,660 கோடி ரூபாய்; எலெக்ட்ரோ தேர்ம் இந்தியா நிறுவனம் 2,211 கோடி ரூபாய்; ஸும் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் 1,810 கோடி ரூபாய்; ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் 1,732 கோடி ரூபாய்; எஸ். குமார்ஸ் நேஷன்வைடு லிமிட் 1,692 கோடி ரூபாய்; சூர்யா வினாயக் இண்டஸ்ட்ரீஸ் லிமிட் 1,446 கோடி ரூபாய்; கார்ப்பரேட் இஸ்பட் அலாய்ஸ் லிமிடெட் 1,360 கோடி ரூபாய்; போரவர் பிரிசியஸ் ஜுவல்லரி அண்ட் டைமன்ட்ஸ் 1,254 கோடி ரூபாய்; ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்ஸ் லிமிட் 1,197 கோடி ரூபாய்; வருண் இண்டஸ்ட்ரீஸ் லிமிட் 1,129 கோடி ரூபாய். டெக்கான் க்ரோனிக்கல் ஹோல் டிங்ஸ் நிறுவனம் வைத்துள்ள பாக்கி 700 கோடி ரூபாய். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்கிட் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் வைத்துள்ள கடன் பாக்கி 938 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு மத்திய அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கிப் பாராட்டியிருக்கிறதாம். (குடியரசுத் தலைவருக்குத் தான் வெளிச்சம்) வங்கியில் ஒருவர் வாங்கிய கட னைத் திருப்பிச் செலுத்த வசதியிருந்தும் செலுத்த வில்லை என்றால் கிரிமினல் குற்றமாகும். ஆனால் இத்தனை கோடி ரூபாய் வங்கிகளிலே கடன் பெற்று பாக்கி வைத்திருப்போர் மீது நடவடிக்கை இன்றி, சலுகை காட்டப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-3/71892.html#ixzz2nGfqYjhq