Search This Blog

12.12.13

ஏற்காடு தேர்தல் பற்றி கி.வீரமணி,


ஏற்காடு தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் ஆளும் கட்சியின் அத்துமீறல்களையும் கடந்து பெறப்பட்டவை
தோல்வி என்பது புதிய அனுபவம் எனும் எடிசன்
கருத்தை மனதிற் கொண்டு தி.மு.க. லட்சியப் பயணத்தைத் தொடரட்டும்!
வீசியது மோடி அலை அல்ல - வலை!  காங்கிரஸ் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளட்டும்!
நடந்து முடிந்த ஏற்காடு தேர்தல் முடிவினை மய்யப்படுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றி என்பது தோல்விக்குச் சமமானது என்று கூறி, அதே நேரத்தில் ஆளும் கட்சியின் அத்துமீறல்களையும் கடந்து தி.மு.க. பெற்ற கணிசமான வாக்குகள் பாராட்டத்தக்கவை; தோல்வி என்பது புதிய அனுபவம் என்ற தாமஸ் ஆல்வா எடிசனின் கருத்தை உள்வாங்கி தி.மு.க. தமது இலட்சிய  பயணத்தைத் தொடர வேண்டும் என்றும் தமது  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்; அறிக்கை வருமாறு:

ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்; நேரடியான போட்டியால் ஆளுங் கட்சி பண பலம், அதிகார பலம், பல்வேறு  வகை அதிகார அத்துமீறல்கள், பொய் வழக்குகள் - இவைகளையெல்லாம் எதிர்கொண்டு தி.மு.க. கணிசமான அளவில் வாக்குகளைப் பெற்றிருக்கிறது!

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்த பல அறிக்கைகளில் அவ்வப்போது நடைபெற்ற சட்டமீறல்கள், அராஜக நிகழ்வுகள் பற்றியும் அறிக்கைகள் தந்து வந்தார்; இறுதியில் தேர்தல் முடிவு இப்படி வந்ததற்கான காரணங்களையும்கூறி, விளக்கியிருந்தார்கள்.

பாராட்டிப் போற்றத்தக்க வெற்றியா?

மனசாட்சியோடும், நடுநிலை உணர்வோடும் இந்த முடிவை நோக்கும் எவருக்கும் ஆளுங் கட்சியின் இந்த வெற்றி உண்மையிலேயே பாராட்டிப் போற்றத்தக்க வெற்றியா என்பது புரியும்.

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. ஞலசசாஉ ஏஉவடிசல என்று இதற்குப் பொருள்; பெருமைப்பட முடியாத வெற்றி அல்லது தோல்விக்குச் சமமான வெற்றி என்பதே!

தி.மு.க.வின் துணிச்சல்

நாம் விடுத்த முந்தைய அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளோம்; போட்டி சம போட்டி அல்ல; என்றாலும் மற்ற கட்சிகள் அஞ்சி தயங்கி பின்வாங்கிய நிலையில், தி.மு.க. துணிந்து களத்தில் இறங்கி, எதிர்நீச்சல் அடிப்பதுபோல் தேனீக்களாகி அத்தொகுதியில் பணியாற்ற முன்வந்ததன்மூலம் அதற்குள்ள உறுதியை உலகத்திற்கு அறிவித்தது!

எந்த வசதி வாய்ப்புகள் கூடுதலாக ஆளுங் கட்சிக்கு இருந்தது என்பதை நாம் பட்டியலிடத் தேவையில்லை. உலகறிந்த உண்மைகள் அவை!
அவையெல்லாம் மீறிய நிலையில்,வாக்கு இந்தளவு திமுக பெற்றது என்றால் அது எளிதானதல்ல.

தி.மு.க. பொருளாளர் தளபதி  மு.க. ஸ்டாலின் அவர்கள், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப, மிகக் கடுமையாக உழைத்தார்; கழகப் பொறுப்பாளர்களும் உழைக்க, நல்லதோர் பயிற்சியைத் தந்து ஒரு முன்னோட்டத்தை தந்தார்!

2014 மக்களவைத் தேர்தலில்

உண்மையான எதிர்க்கட்சி தமிழ்நாட்டில் தி.மு.க. தான் என்று உலகத்திற்கே நிரூபித்துக் காட்டப்பட்டுவிட்டது. இன்னும் 5 மாதங்களில் வருகின்ற 2014 மக்களவைத் தேர்தலுக்கு, பொதுத் தேர்தலுக்கு இது ஓர் ஒத்திகை - அவ்வளவே!

என்னதான் பணபலம், அதிகார பலத்தை ஆளும் அணி நம்பினாலும், பொதுத் தேர்தலில் பல கட்சி அணிகள் போட்டியிட இருக்கும் நிலையில், தி.மு.க. தனித்து நின்றாலும் தன்னுடைய உறுதியான நிலையில் தோழமைக் கட்சிகளோடு நின்று வென்று காட்டும் என்பது உறுதி.

அதன் வெள்ளி முளைத்த விடியல் துவங்கி விட்டது; தேவையற்ற சுமைகளையோ, அல்லது 2016இல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலும் நிலைத்த வெற்றியைப் பெற தடையான பழிகள் சூழாமலும் தம்பிஉடையான் படைக்கஞ்சான் என்பதாலும், கட்டுப்பாடு காத்தால் வெற்றிதானே வந்து கதவைத் தட்டும் என்ற இயல்பான வரலாற்றாலும் வாகை சூடிடுவது உறுதி! உறுதி!!


அதனால் வெற்றி பெற்றவர்களை முந்திக் கொண்டு, மக்களுக்கு நன்றியறிவிப்பை வேட்பாளர் மாறன் தொடங்கி, 17ஆம் தேதி தளபதியும் கலந்து கொண்டு நன்றி கூறும் எடுத்துக்காட்டான ஏற்பாடு!
தி.மு.க. தோழர்கள் சோர்வோ, களைப்போ கொள்ளத் தேவையில்லை.

தோல்வியல்ல - புதிய அனுபவம்

தோல்வி அல்ல; ஒரு புதிய அனுபவம் என்று தாமஸ் ஆல்வா எடிசன் கூறுவார். அதை தி.மு.க. தோழர்கள் நினைவுபடுத்திக் கொண்டு தங்களது லட்சியப் பயணத்தை, கட்டுப்பாடு காத்து வேக நடை போட்டால் வெற்றி புரியை எளிதில் அடையலாம்.

----------------------------கி.வீரமணி, தலைவர்,   திராவிடர் கழகம். சென்னை  12.12.2013


18 comments:

தமிழ் ஓவியா said...


செய்திக்குப் பின்னால்.....

இந்தியாவில் ரசாயனம் கலந்த குடிநீரால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4.21 கோடி என்று மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை இணை யமைச்சர் பரத்சிங் சோலங்கி தெரிவித்துள்ளார்.

(இதைச் சொல்லுவதற்கு ஓர் அமைச்சர் தேவையா? மனித உயிர் என்பது மிகவும் மலிவானது என்ற நினைப்பா?).

விபத்துகள்

ஒரு நாளில் மட்டும் ஒட்டன்சத்திரம் அருகில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் சாவு.

(ஒட்டன் சத்திரம் காவல் நிலையத்தில் விரைவாக யாகம் நடத்தப்படும் என்று எதிர் பார்க்கலாம்.)

மக்கள் நீதிமன்றம்

மாநில அரசுகளின் ஊழல்பற்றி விசாரிக்கும் மக்கள் நீதிமன்றம் (லோக் ஆயுக்தா) அமைக்கப் படுகிறது. ஆனால், குஜராத்தைப் பொறுத்தவரை 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதற்கான நீதிபதி நியமிக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதி டி.பி.புச் நியமிக்கப்பட்டுள்ளார்.

(ஊழலற்ற உத்தமபுத்திரன் என்று மோடி பற்றி தம்பட்டம் அடித்தார்களே, அப்படிப் பட்டவர் ஆட்சியில் ஏன் இத்தனை ஆண்டு களாக இந்த நீதிமன்றம் செயல்படவில்லை? மடியில் கனமோ!)

கங்குலியாயிற்றே!

பாலியல் புகாரில் சிக்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து இன்னும் விலகவில்லை.

(கங்குலி ஆயிற்றே! மனுதர்மத்தில் இது குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கலாம்.)

அன்னா ஹசாரே!

நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, தனது சொந்த கிராமத்தில் அன்னா ஹசாரே சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

(டில்லியில் இவர் நடத்திய போராட்டத்தின் லாபத்தை இன்னொருவர் அபகரித்துவிட்டாரே! ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்?).

அமெரிக்க இராணுவத்தில் சீக்கியருக்குத் தடை!

அமெரிக்க இராணுவத்தில் அமெரிக்கவாழ் சீக்கியர்களை மத நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, இராணுவப் பணிகளில் நிராகரிப்பது குறித்து சர்ச்சை அமெரிக்காவில் எழுந்துள்ளது.

(இந்தியாவில் காவல்துறையில் அய்யப்பன் வேடம் போட்டுக் கொண்டே அதிகாரிகள் முதற் கொண்டு பணி புரியவில்லையா? தலைப் பாகை மதச் சின்னம் என்றால், பூணூல் அணி கிறார்களே, அது எந்த சின்னம்?).

கிரிக்கெட்

ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் ஜாகீர்கானைச் சேர்த்திருக்கவேண்டும். - தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் நிட்னி.

(சர்மாக்கள் இருக்கும்போது ஜாகீர்கான்கள் கண்களில் படுவார்களா?)

Read more: http://viduthalai.in/e-paper/71865.html#ixzz2nGeXMptJ

தமிழ் ஓவியா said...


ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது!



கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை மதுரவாயலில் கடந்த (2.12.2013) திங்களன்று கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் லாவன்யா, சதீஷ், கேமரா மேன்கள் விமல் காளிதாஸ் உட்பட ஏழு பேர் தனியார் பள்ளி வேன் ஓட்டுநர்களால் தாக்கப்பட்டனர். தாக்கியவர்களின்மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யக்கோரி போராட்டம் நடத்திய சக பத்திரிகையாளர்கள் 80க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இரவு முழுவதும் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் காலை 9.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனராம்.

அதனை தொடர்ந்து ஆணையர் அலுவலகத்தில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள்மீதே வழக்கு தொடர மதுரவாயல் காவல்துறையினர் முயற்சிப்பதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது வரை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் கைது செய்யப்படவில்லை என்பது முறையல்ல - வருந்தத்தக்கதுமாகும்.

செய்தியாளர்கள் என்பவர்கள், ஒரு நாட்டுத் தூதுவர் போன்று, செய்திகளை சேகரித்து தருபவர்கள்; அவர்களை தாக்குவது அறம் அல்ல. தாக்கியோர்மீது உரிய நடவடிக்கை உடனடியாகத் தேவை.

இன்றேல் ஜனநாயகத்தின் 4ஆவது தூண் (ஊடக உலகம்) நிலைக்காது என்பதால் அனைவரும் கவலைப்பட வேண்டிய செய்தி.

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
12.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/71858.html#ixzz2nGejzmQr

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு, அமெரிக்கா எச்சரிக்கை! கலைஞர் கருத்து


சென்னை டிச.12- ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசு பற்றி அமெரிக்கா கூறியுள்ள கருத்து குறித்து திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:

கேள்வி :- இலங்கை அரசின் நடவடிக் கைகள் பற்றி காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட காமரூன் தெரிவித்த கருத்துகளை பல நாளேடுகளும் வெளியிட் டன. பிரான்ஸ் நாட்டின் கருத்தினைத் தாங்களே வெளியிட்டிருந்தீர்கள். தற் போது அமெரிக்க நாடு கூட இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக ஒரு செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர் :- உண்மைதான்! இலங்கை உள்நாட்டுப் போரில் ராணுவத்தின் அட்டூழியம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்கா விட்டால், சர்வதேச சமூகம் இனியும் பொறுமை யாக இருக் காது என்று தெற்காசிய விவகாரங்களுக் கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் கூறி யிருக்கிறார்.

போர்க் குற்றங்கள் தொடர் பாக இலங்கை அரசின் நடவடிக்கையில், வரும் மார்ச் மாதத்துக்குள் எந்த முன்னேற் றமும் இல்லாவிட்டால், அய்.நா. தலைமை யிலான விசாரணை கோருவோம் என்று இங்கிலாந்துப் பிரதமர் கூறிய கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்கா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் இத்தாலியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, இலங்கை ராணுவத்தின் மீதான போர்க் குற்றம் தொடர்பான வழக்கு விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்காக ஜெர்மனியில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/71864.html#ixzz2nGf7NxId

தமிழ் ஓவியா said...


சிறப்பு


விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடை யோர்க்கே சென்றவிடமெல்லாம் சிறப்பு. - (விடுதலை, 12.3.1965)

Read more: http://viduthalai.in/page-2/71870.html#ixzz2nGfMmDBY

தமிழ் ஓவியா said...


பெரும் முதலாளிகள் வாங்கிய கடனை வசூலிப்பதில் பாராமுகம் - கல்விக் கடன் வாங்கும் மாணவர்களிடம் கிடுக்குப்பிடி ஏன்?


தி.மு.க தலைவர் கலைஞர் கேள்வி

சென்னை, டிச.12- கோடிக்கணக்கில் கடன் வாங்கும் முதலாளிகளிடம் இருந்து கடன் வசூலிப் பதில் பாராமுகம், கல்வி கடன் வாங்கும் மாணவர் களிடம் கெடுபிடி ஏன் என்ற நியாமான வினாவை தொடுத்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர். விவரம் வருமாறு:-

கேள்வி :- ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கில் வங்கிகளிலே கடன் வாங்குபவர்களை கிட்டி கட்டி வசூலிக்கும் வங்கிகள், கோடிக் கணக்கிலே கடன் பெற்றவர்களைக் கண்டு கொள்வதில்லையாமே?

கலைஞர் :- மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதற்காக அவர்களின் புகைப்படங்களை வங்கியின் வாசலில் வைத்தது பற்றி நான் சில மாதங்களுக்கு முன்பு அது தவறு என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். 2008ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள வங்கிகளின் மொத்த வராக் கடன் 39 ஆயிரத்து 30 கோடி ரூபாய். 2012இல் இந்தத் தொகை 1 இலட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. 2013 மார்ச் 31ஆம் தேதியன்று பொதுத் துறை வங்கிகளுக்கான மொத்த வராக் கடன் 1 இலட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய். இந்தக் கடன்களை பாக்கியாக வைத்திருப்பவர் களில் முக்கியமானவர்கள், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (விஜய் மல்லையா) 2,673 கோடி ரூபாய்; விஸ்டம் டைமன்ட்ஸ் அண்ட் ஜுவல்லரி நிறுவனம் 2,660 கோடி ரூபாய்; எலெக்ட்ரோ தேர்ம் இந்தியா நிறுவனம் 2,211 கோடி ரூபாய்; ஸும் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் 1,810 கோடி ரூபாய்; ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் 1,732 கோடி ரூபாய்; எஸ். குமார்ஸ் நேஷன்வைடு லிமிட் 1,692 கோடி ரூபாய்; சூர்யா வினாயக் இண்டஸ்ட்ரீஸ் லிமிட் 1,446 கோடி ரூபாய்; கார்ப்பரேட் இஸ்பட் அலாய்ஸ் லிமிடெட் 1,360 கோடி ரூபாய்; போரவர் பிரிசியஸ் ஜுவல்லரி அண்ட் டைமன்ட்ஸ் 1,254 கோடி ரூபாய்; ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்ஸ் லிமிட் 1,197 கோடி ரூபாய்; வருண் இண்டஸ்ட்ரீஸ் லிமிட் 1,129 கோடி ரூபாய். டெக்கான் க்ரோனிக்கல் ஹோல் டிங்ஸ் நிறுவனம் வைத்துள்ள பாக்கி 700 கோடி ரூபாய். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்கிட் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் வைத்துள்ள கடன் பாக்கி 938 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு மத்திய அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கிப் பாராட்டியிருக்கிறதாம். (குடியரசுத் தலைவருக்குத் தான் வெளிச்சம்) வங்கியில் ஒருவர் வாங்கிய கட னைத் திருப்பிச் செலுத்த வசதியிருந்தும் செலுத்த வில்லை என்றால் கிரிமினல் குற்றமாகும். ஆனால் இத்தனை கோடி ரூபாய் வங்கிகளிலே கடன் பெற்று பாக்கி வைத்திருப்போர் மீது நடவடிக்கை இன்றி, சலுகை காட்டப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-3/71892.html#ixzz2nGfqYjhq

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவிப்பு


இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவிப்பு

ரோம், டிச.12- 2009ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் மீது நடந்தது இனப்படு கொலையே என நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டில் இலங் கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணு வத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் போர் விதி முறை களை மீறி படுகொலை செய்யப்பட்டனர்.

எனவே, இலங்கை போர்க்குற்றம் புரிந்த தாகவும், விசாரணை நடத்த வலியுறுத்தியும் அய்.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றியது. இந்த நிலையில், இத்தாலி தலைநகர் ரோமை தலைமையகமாக கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடைபெற்றது. மனித படுகொலையே என தீர்ப்பளித்தது. கடந்த 2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த இறுதிகட்ட போர் தொடர்பாக சர்வதேச மனித உரிமை ஒன்றியம் மற்றும் இலங்கை சமாதானத்திற்கான அய்ரில் போரம் ஆகியவை கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன. அதைத் தொடர்ந்து நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது உண்மை. மேலும், இறுதிகட்ட போரின் போது மனித படுகொலை நடந் துள்ளது என்றும் தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பாயத்தின் அறிக்கை சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப் படுவது வழக்கம். இருந்தாலும் வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ள அய்க்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மா நாட்டில் இந்த அறிக்கை சமர்பிக்கப்படு மா? என்பது பற்றி எதையும் உறுதியாக கூற முடியாது என மக்கள் தீர்ப்பாய பிரதி நிதிகள் இலங்கை வானொலிக்கு தெரிவித் துள்ளனர். மேலும், விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீரர்களாகவோ அல் லது பயங்கரவாதி களாகவோ அடை யாளப்படுத்த முடியாது என்றும் கூறி யுள்ளனர்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் குறித்து சர்வதேச நீதிமன்றம் ஒன்று முதல் தடவையாக இது போன்ற தீர்ப்பளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: http://viduthalai.in/page-3/71897.html#ixzz2nGg2tVK7

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

பிறந்தநாளில் கேக் வெட்டும் பொழுது அதில் மெழுகுவர்த்தியை ஏற்றுகிறார்கள் - பிறந்த நாள் யாருக்குக் கொண் டாடப்படுகிறதோ, அவரை விட்டு ஊதச் செய்கிறார் கள். மெழுகு வர்த்தியின் துகள்கள் கேக்கில் விழு கின்றன. இது உடல் நலனுக்குக் கேடு என்று கண்டறியப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/71961.html#ixzz2nMTLyuW1

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகம் ஒருபேராசிரியையின் நன்றிஉள்ளம்!


பேராசிரியை தந்த அதிர்ச்சி: காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில்பணியாற்றி ஒய்வு பெற்ற பேராசிரியை திருமதி வி.பி.ஆவுடையம்மாள் அவர்கள் நமது இயக்க நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதோடு நமது இயக்க ஏடுகளையும் தவறாமல் வாங்கி வாசிப்பபவர்.அந்த அடிப்படையில் பெரியார் உலகம் அமைக்க நன்கொடை வசூலிக்க தலைமைக் கழகத்தில் அச்சிட்டுள்ள விவரத்தை கொடுத்து வசூல் பணி நடைபெறுவதை சொன்னோம்.அவர்களும் கேட்டுவிட்டு ரூ 1000/-நன்கொடை தருகிறேன்என்று சொன்னார்கள்.உள்ளபடியே நாங்கள் எதிர்பார்த்து போகவில்லை.

வாங்கி வந்து சிறிது நேரத்தில் எங்களை செல்போனில் தொடர்பு கொண்ட அம்மையார் நாளை காலை வீட்டிற்கு வாருங்கள் நன்கொடையை ரூ 5000/-மாக தருகிறேன் என்று சொன்னார்கள்.சரி என்று நாங்களும் காலை வீட்டில் சந்தித்து அந்த தொகையை வாங்க செல்லும்போது எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்!

ரூ.1000/-த்தை தந்து,பிறகு ரூ.5000/-திற்கு காசோலையாக தருகிறேன் என சொல்லிவிட்டு நேரில் வரச்சொல்லி ரூ.25,000/-த்திற்கான காசோலையை தந்தபோது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அதை பெற்றுக்கொண்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி அவர்கள் நன்றி தெரிவித்துவிட்டு இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு மாற்றம் எப்படியம்மா? என கேட்டதற்கு அம்மையார் சொன்ன பதில் இருக்கிறதே! எங்களை கண்கலங்கச் செய்தது என்றுதான் சொல்லவேண்டும். அவர் சொன்னார்,நேற்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. எவ்வளவு பெரிய பணி யாரால் இதைச் செய்யமுடியும்? அதுவும் பெண்களின் இன்றைய வாழ்க்கை வளர்ச்சிக்கு 95 வயது வரை உழைத்த தந்தை பெரியாருக்கு 95அடி உயரத்தில் அப்பாடா! நினைக்கவே பிரமாண்டமாகவும்,மலைப்பாகவும் இருந்தது; எனக்கு கிடைத்த ஒவ்வொரு ரூபாயும் தந்தை பெரியார் தந்தது என்று உணர்கின்றேன் .

உடனே எனது கணவரும் நானும் அப்போதே முடிவு செய்து ஒரு பவுனுக்கான தொகையை கொடுத்துவிடுவோம் என தீர்மானித்தோம். இந்தத் தொகையை எனது மகளுக்கு பிறந்தநாள் பரிசாக தங்க நகை வாங்கிக் தரத்தான் வைத்திருந்தேன்.

பரவாயில்லை அடுத்த மாதம் வாங்கிக் கொடுத்துவிடுவேன் என்று சொன்னபோது நாங்கள் அந்த மலைப்பிலிருந்து விடுபட, அவர்களே சென்று தேநீர் போட்டு கொடுத்து உபசரித்ததை எண்ணிப் பார்க்கும்போது அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் தொண்டு எந்த அளவிற்கு இந்த இனத்திற்கு,குறிப்பாக மகளிர் சமுதாயத்திற்கு பயன்பட்டிருக்கிறது என்று எண்ணி எண்ணி மகிழ்வுற்றோம்.

நமது தலைவர் ஆசிரியர் அடிக்கடி சொல்வார்களே!

அய்யா அவர்களை பற்றி சொல்லுங்கள்,மக்கள் தர தயாராக இருப்பார்கள் என்று.! மிகச்சரியாக இருக்கின்றது. தமிழர் தலைவர் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை!ஆம்!

"நம்மால் முடியாதது யாராலும் முடியாது

யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்"

தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட கழக செயலாளர்,காரைக்குடி

Read more: http://viduthalai.in/e-paper/71970.html#ixzz2nMTwk8Ll

தமிழ் ஓவியா said...


சிந்தனைக்குத் தடை


பகுத்தறிவுக்கு எதிரிகள் நம்நாட்டில் தான் எப்பொழுதும் இருந்து கொண்டு வருகிறார்கள் என்பதில்லை. உலகெங்கும் மதத்தரகர்களின் தாக்கு தல்களுக்கு பகுத்தறிவாளர்கள் இலக்காகிக் கொண்டே இருந்துவர நேர்ந்துள்ளது.

சுயசிந்தனையாளர்கள் கிளர்ந்தெழாமல் மதப்பிடியில் சிக்கித் தவிக்க நேரிட்டது. ஒரு சுய சிந்தனையாளன் என்பவன் யார் என்று பொருள் கூறுமிடத்து மதத்தை மறுப்பவன்; நாத்திகவாதி என்று அகராதிகளில் குறிப் பிடப்பட்டுள்ளது. மதத்தின் கோரப்பிடியில் உலகின் மிகப் பெரும் சுயசிந்தனையாளர்கள் எல்லாம் சிக்கி உழன்று விடுபட பெரும்பாடுபட நேர்ந்தது.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் தந்தை சிறு குழந்தையான ரஸ்ஸல் மூட நம்பிக்கை இல்லாதவராக வளர இரண்டு சுயசிந்தனையாளர்கள் (பகுத்தறிவாளர்கள்) அவரை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டு மறைந்தார். அதற்காக இரண்டு சிந்தனையாளர்களையும் நியமித்தார்.

ஆனால் இவ்வாறு நியமித்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தோடு கிறிஸ்து மத நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரை வளர்த்து வர வேண்டும் என்றும் ஆணையிட்டது.

Read more: http://viduthalai.in/page-7/71941.html#ixzz2nMUmTSBy

தமிழ் ஓவியா said...

பூதங்களின் வேலையாம்!

இலேசான பாத்திரம் ஒன்றையும், கனமான பாத்திரம் ஒன்றையும் உயரமான ஒரு இடத்திலிருந்து கீழே போட்டால், கனமான பாத்திரம் சீக்கிரம் கீழே விழுந்து விடும் என்றும், இலேசான பாத்திரம் கீழேவிழ அதிக நேரம் பிடிக்கும் என்றும் மக்கள் கருதி வந்தார்கள்.

15, 16ஆம் நூற்றாண்டுவாக்கில், கலிலியோ என்ற இத்தாலிய விஞ்ஞானி இத்தாலியில் உள்ள சாய்வுக் கோபுரத்தின் மேல் ஏறி நின்று இலேசான பாத்திரம் ஒன்றையும் கனமான பாத்திரம் ஒன்றையும் ஒரே நேரத்தில் கீழே போட்டுக் காட்டி இரண்டும் ஒரே சமயத்தில்தான் விழுகின்றன என்று நிரூபித்துக் காட்டினார்.

ஆனால் மதவாதிகள் இதைக் கண்டு அஞ்சி நடுங்கினர். கனமானதும், இலே சானதும் ஒரே நேரத்தில் வீழ்வது ஏதோ பூதங்களின் வேலைதான் என்று அஞ்சி னார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/71944.html#ixzz2nMV6ji8n

தமிழ் ஓவியா said...

ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் குற்ற வாளிகளல்ல; ஜாதி புனித மானது என்ற உணர்ச்சியை உண்டு பண்ணிய மதமே உண் மையிலே குற்றவாளி.

ஆதலால் ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் உங்கள் எதிரிகளல்ல. ஜாதி ஆச்சாரங்களைப் புனித மென்று வற்புறுத்தும் சாஸ்திரங்களே உங்கள் எதிரி. எனவே அந்த எதிரியைத் தான் நீங்கள் ஒழிக்க முயற்சிக்க வேண்டும். - டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page-7/71944.html#ixzz2nMVCSWv3

தமிழ் ஓவியா said...


செம்மொழி என்றாலே ஆட்சிக்கு ஒவ்வாமை! கலைஞர் பேட்டி


சென்னை, டிச.13- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் களை அவரது இல்லத்தில் நியூஸ் சைரன் வார இத ழின் சிறப்பு ஆசிரியர் ராவ், ஆசிரியர் எஸ்.சரவணக் குமார் ஆகியோர் சிறப்புப் பேட்டி கண்டனர். அப்பேட்டியில் கலைஞர் கூறியதாவது:

கேள்வி: செம்மொழி மாநாட்டை ஒரு தனி மனிதராக - எவ்வளவோ வேலை பளுக்களுக்கு இடையில் - தமிழ் உலகம் திரும்பிப் பார்க்குமாறு நடத்தினீர்கள். அதன் முழுப் பலனும் தமிழுக்குக் கிடைத்ததா?

கலைஞர்: கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி வேண்டும் என்பதற்காகப் பெரு முயற்சி மேற் கொண்டேன்; கிடைத்தது. செம்மொழித் தமி ழாய்வு மய்யத்தினைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென்று பாடுபட்டேன்; வந்தது. கோவையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பல அறிவிப்புகள் செய்யப் பட்டன.

அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் ஆட்சி மாறியது. இன்றைக்கு செம் மொழி என்றாலே ஆட்சியினருக்கு ஓர் ஒவ் வாமை! செம்மொழிப் பூங்காவைக் கூட பரா மரிக்க ஆட்சியினருக்கு மனம் இல்லை. செம் மொழி உயராய்வுப் பணிகளை ஊக்குவித்திடவேண்டும் எனும் நோக்கில், என்னுடைய சொந்தப் பணத்திலே ஒரு கோடி ரூபாயை செம்மொழி ஆய்வு நிறுவனத்திற் காக ஒப்படைத்து, அதிலே கிடைக்கும் வட்டித் தொகையிலி ருந்து ஆண்டுதோறும் தமிழ் ஆய்வில் தலைசிறந்த வல்லு நருக்கு விருது வழங்கக் கேட்டுக் கொண்டேன்.அந்தப் பணியைக்கூடச் சரியாகச் செய்ய யாரும் இப்போது முன்வரவில்லை.

கேள்வி: எப்போதும் தோழர்களுடன் வலம் வரும் நீங்கள், யாருமே இல்லாத ஒரு அறையில் தனிமையில் உட்கார்ந்து யோசித்த அனுபவம் உண்டா? எதைப்பற்றி?

கலைஞர்: காலை 10 மணிமுதல், இரவு 10.20 மணிவரை தோழர்களுடன்தான் வலம் வருகி றேன்; பல்வேறு பிரச்சினைகள் குறித்து அள வளாவுகிறேன். அந்த நேரம் தவிர, தனிமையில் இருக்கின்ற நேரங்களில், அடுத்த நாள் எதை எழுதலாம் என்று யோசிக்கிறேன். கடந்த காலங் களில் அவ்வாறு தனிமை கிடைத்த நேரங்களில் யோசித்தவைதான் பல நூல்களாக வெளி வந்தவை.

- இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டி யளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/71958.html#ixzz2nMVfoDL7

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கைகளை தடை செய்யும் சட்டம் மகாராஷ்டிரா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது


மும்பை, டிச.14-பில்லி, சூனியம், மந்திரம் போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடி வந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் என்பவர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி புனேயில் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, மூட நம்பிக்கைகளை பரப்பி வருவோரை சிறையில் அடைக்கும் சட்டத்தை மகாராஷ்டிரா அரசு அறிமுகப்படுத்தியது. மும்பை புறநகர் ரயில்களில் பில்லி, சூனியம், மந்திரம் தொடர்பாக விளம்பரப்படுத்த ரயில்வே நிர்வாகமும் தடை விதித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் மகாராஷ்டிர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மந்திரம், பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை தடை செய்யும் புதிய சட்டம் நேற்று (13.12.2013) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேல்சபையின் ஒப்புதலை பெற்றபின்னர் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்.

Read more: http://viduthalai.in/e-paper/71999.html#ixzz2nS6DmCGz

தமிழ் ஓவியா said...


பெண்களின் பாதுகாப்பிற்காக மொபைலில் அலாரம் பட்டன்' மத்திய அரசு திட்டம்

புதுடில்லி, டிச.14- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டில்லியில் மருத் துவ மாணவி ஓடும் பேருந் தில் பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையை உலுக்கி யது. இதனையடுத்து நாட்டில் பெண்களின் பாதுகாப்பை பலப் படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது, மொபைல் போன்களில் அலாரம் பட்டனை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத் தகைய வசதி கொண்ட மெபைல் போன்களைப் பயன்படுத்தும் பெண் கள், அவசர காலத்தில் இந்த பட்டனை அழுத்தி தங்களை காத்துக் கொள்ளலாம். அலாரம் பொருத்தப்பட்ட மொபைல்கள் தற்போது ஜெய்பூரில் பயன்பாட் டிற்கு வந்துள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அய்.டி துறை சார்பில் நடத்தப் பட்ட கூட்டத்தின் போது, இந்தப் புதிய அலாரம் முறையை அறிமுகம் செய்யும் முடிவை மத்திய நிதியமைச்சர் சிதம்பரத் திடம் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்க ளின் பாதுகாப்பிற்காக இந்தப் புதிய முறையை கொண்டு வரவும் அவர் கள் யோசனை தெரிவித் தனர். இது தொடர்பாக அய்டி அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறுகை யில், தற்போது சோதனை முறையாக இத்தகைய வசதி கொண்ட மொபைல் கள் புழக்கத்தில் விடப் பட்டுள்ளன; இது குறித்த விவரங்களை விரைவில் அமைச்சர் முறையாக அறிவிப்பார் என கூறி உள்ளார். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பெண் கள், இத்தகைய வசதியை பதிவிறக்கம் (டவுன் லோட்) செய்து கொள்ள லாம் எனவும், புதிய மாடல் மெபைல்களில் இந்த புதிய அலாரம் பட்டன் பெருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/72000.html#ixzz2nS6Uja43

தமிழ் ஓவியா said...


ஜெர்மன் தீர்ப்பாயமும் கூறி விட்டது!

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, ராஜபக்சே தலைமையிலான இலங்கை சிங்கள இன வெறி அரசு படுகொலை செய்தது -

உண்மைதான் என்று ஜெர்மன் நாட்டில் ப்ரமன் நகரில் கூடிய, மக்கள் தீர்ப்பாயம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. (10.12.2013)

தமிழகத்திலிருந்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், ஜெர்மன் தீர்ப்பாயத்திடம் கொடுத்த புகாரின் பேரில், இந்த விசாரணை நடைபெற்றது. மூன்று நாள் விசாரணையை நடத்திய, அந்தத் தீர்ப்பாயம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு கூறியுள்ளது.

1) ஈழத் தமிழர்களை, தனித் தனியாகக் கொலை செய்யாமல், தமிழர் என்ற இன அடிப்படையில், அந்த இனத்தின் அடையாளமே இல்லாமல் அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த இனப்படுகொலை நடந்திருக்கிறது.

2) விடுதலைப்புலிகளோடு அரசு நடத்திய போருக்கு முன்பாகவே, நீண்ட காலமாகவே இனப் படுகொலையை இலங்கை அரசு மேற்கொண்டு வந்தது. போருக்குப் பிறகும்கூட, இன அழிப்பை இலங்கை அரசு தொடர்ந்து கொண்டே இருந்தது.

3) உலக நாடுகளின் உதவியோடே இந்த இனப்படுகொலையை இலங்கை செய்தது என்றும், திட்டவட்டமாக ஜெர்மனி தீர்ப்பாயம் தெளிவுபடுத்தி விட்டது.

இந்தத் தீர்ப்பாயத்தில் உள்ள நீதிபதிகளில் ஒருவரான டென்னிஸ் ஹாலிடே யார் தெரியுமா? அய்.நா.வின் துணைத் தலைவராக இருந்தவர் ஆவார். என்னதான் இலங்கை அதிபர் தில்லுமுல்லு களையும் சூழ்ச்சிகளையும் பின்னினாலும் உலக மக்கள் மத்தியிலே ஓர் இனப்படுகொலையாளன் ராஜபக்சே என்கிற குரூர உருவம் சித்திரமாகத் தீட்டப்பட்டு விட்டது - அதை மாற்ற முடியவே முடியாது.

இந்தோனேசியா அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர், மார்ச்சுகி தாருஸ்மான் தலைமை யில், அமெரிக்காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரெட்னர், தென்னாப்பிரிக்க வல்லுநர் யாஷ்மின் சூக்கா, ஆகிய மூவர் அடங்கிய குழு இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புத் தொடர்பான அறிக்கையை, அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்-கீ- மூனிடம் அளித்தது (13.4.2011).

சிங்கள இனவாத அரசோ, ஒரே வரியில் இந்த அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறியது!

கிளிநொச்சி, முல்லைத் தீவுகளில் வாழ்ந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 ஆகும். இதனைத் தெரிவித்தது சிறீலங்கா அரசின் கச்சேரி (Local Govt Office) என்ற அமைப்பாகும்.

இந்தத் தமிழர்களின் எண்ணிக்கையில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 தமிழர்களே சிறீலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதாக அய்.நா.வின் ஒச்சா அமைப்பின் கணிப்புக் கூறுகிறது.

எஞ்சிய ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் என்ன ஆனார்கள்? என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய - குருதியை உறைய வைக்கக் கூடிய வினாவாகும்.

மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், விசரர் சூசை அடிகளார், சேவியர் குலூஸ் அடிகளார் ஆகியோர் இந்தத் தகவல்களை ராஜபக்சே தமக்குத்தாமே அமைத்துக் கொண்ட விசாரணைக் குழுவிடம் (LLRC) தெரிவித்தனரே!

இவ்வளவு நடந்தும், ஜெனீவா உலக மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டும், ராஜபக்சே எந்தக் குற்றமும் செய்யாத பெரு மகன் போலவே திரிந்து கொண்டுள்ளார்; போதும் - போதாதற்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராகவே ஆகிவிட்டார்.

ஆம் நாதுராம் கோட்சே நீதிபதி நாற்காலியில் அமர்ந்து காந்தியாரை விசாரிக்கிறார் - என்ன கொடுமையடா இது!

ராஜபக்சேவைத் தண்டிக்காவிட்டால், இந்தக் கால கட்டத்தில் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுமே குற்றவாளியாகத்தான் கருதப்பட நேரும் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/72002.html#ixzz2nS6qpMq3

தமிழ் ஓவியா said...


மொழியைப்பற்றி...

தமிழனைப்பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் மொழியைப்பற்றி நான் எவ்விதப் பிடிவாதம் கொண்ட வனுமல்ல.

- (குடிஅரசு, 26.1.1946)

Read more: http://viduthalai.in/page-2/72001.html#ixzz2nS6y7Suk

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு

தமிழ்நாடு பத்திரிகையானது மறுபடியும் சென்னை பார்ப்பன தெய்வங்களுக்குள் இரண்டறக்கரையத் தீர்மானித்துவிட்டதாக நினைக்க வேண்டி இருக்கிறது. அதன் முழுக்கவனம் ராயல் கமிஷனை பகிஷ்கரிப்பதில் மாத்திரம் இல்லாமல், பெசண்டம்மையை தலைவியாக்கு வதிலும், அரசியல் பார்ப்பனர்களைக் காப்பாற்றுவதிலும் கவலை எடுத்துக் கொண்டிருக்கின்றதாகத் தெரிகிறது. கமிஷன் பகிஷ்காரத்தைப்பற்றி அவரவர்கள் அரசியல் அபிப்பிராயம் என்று சமாதானம் செய்து கொண்டு வாதாடலாமாயினும், பெசண்டம்மையாரை தலை வியாக்க ஆசைப்படுவதில் பார்ப்பனர்களுடன் போட்டி போடுவதான இரகசியம் நமக்கு விளங்கவில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும் என்று தள்ளி விடுவதா னாலும், பார்ப்பனரல்லாருக்கு கடுந்துரோகிகளாகிய அரசியல் பார்ப்பனர்களுடன் குலாவுவதும், அவர்களைக் காப்பாற்றுவதும் பற்றி காரணம் அறியாமலிருக்க முடியவில்லை. சென்னை கார்ப்பரேஷன் தேர்தல் விஷயத்தில் அரசியல் பார்ப் பனர்கள் நடந்து கொண்ட விஷயத்தைப்பற்றி தமிழ்நாடு பத்திரிகை தனது அபிப் பிராயமாக ஒரு வரிகூட எழுத முடியாத நிர்ப்பந்தம் இப்போது திடீரென்று அதற்கு ஏற்பட்ட காரணம் என்ன என்று கேட்கின்றோம்.

பார்ப்பன அரசியல்வாதிகள் தமிழ்நாடு பத்திரிகை ஆபீசுக்கு வந்து எவ்வளவு தூரம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகின்றார்களோ, அவ்வளவு தூரம் அவர்கள் மற்ற எல்லாப் பத்திரிகை ஆபீசுகளுக்கும் தான் போய் கெஞ்சுகின்றார்கள், பார்ப்பனப் பத்திரிகைகளாகிய இந்து சுதேசமித்திரன் சுயராஜ்ஜியா முதலியவைகளும், பார்ப்பனரல்லாத பத்திரிகைகளாகிய ஜஸ்டிஸ் திரா விடன் அய்ரோப்பிய பத்திரிகைகளாகிய மெயில் முதலியவைகளும் தைரியமாய் தமது அபிப்பிராயத்தை எழுதி இருக்கும்போது தமிழ்நாடுக்கு மாத்திரம் ஏற்பட்ட தட்ட முடியாத தாட்சண்யம் என்ன என்று கேட்கின்றோம். பார்ப்பன தயவை எதிர்பார்க்கும் நிலை ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியாரைவிட தமிழ்நாடுக்கு அதிகமாய் ஏற்பட்டு விட்டதா? ஸ்ரீமான் வெங்கடாசலம் செட்டியாரே எலக்ஷன் விஷயத்தில் தைரியமாய் பார்ப்பன சூழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கும் போது தமிழ்நாடு மாத்திரம் ஏன் பயப்படவேண்டும்?

பார்ப்பன சூழ்ச்சிக்கும், பார்ப்பன வகுப்புவாதத்திற்கும் சென்னை தேர்தலை விட சரித்திரத்தில் எழுதத் தகுந்த தான வேறு ஆதாரம் என்ன வேண்டும்? திடீர் திடீர் என்று இம்மாதிரி துப்பாக்கியைக் கீழே போட்டு எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடுவதால் எவ்வளவு காரியம் கெட்டுப் போய் விடுகிறது. முதலாவது, பார்ப் பனர்கள்கூட இப்பத்திரிகைக்கு பயப்படமாட்டார்கள், மதிக்கவும் மாட்டார்கள். ஏனெனில், நேரில் போய் சரிப்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஒரு தைரியம் அவர்களுக்கு உண்டாய் விடும். இரண்டாவதாக, அடிக்கடி இம்மாதிரி அயர்ந்து விடுவதால் மக்களுக்கும் அதனிடத்தில் அதிக மதிப்பு இருக்காது என்கின்ற தைரியமும் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும். இதைத் தமிழ்நாடு பத்திரிகை உணராதது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது.

- குடிஅரசு - கட்டுரை - 20.11.1927

Read more: http://viduthalai.in/page-7/72015.html#ixzz2nS7WOsYa

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி

எவ்வளவோ காலமாய் பார்ப்பனர்களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச ஞானமும் உதயமாகி நீக்கப்பட்டது என்று சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம். இன்னமும் இதுபோல் மலையாளத்திலும், தமிழ்நாட்டிலும் நடக்கக் கூடாததும், கிட்டே அணுகக் கூடாததுமான எத்தனையோ தெருக்கள் இருந்து கொண்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் வெள்ளைக்காரர்கள் வாய் மூலமாய்த் தீர்ப்பை எதிர்பார்க்கின்றார்களே ஒழிய, ஒரு பார்ப்பனருக்காவது புத்தி வந்து தாங்களாகவே அனுமதித்தார்களென்று சொல்லிக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றது. இனியாவது, சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த தலைவர்களுக்காவது திருவாங்கூர் அரசாங்கத்திற்காவது புத்தி வருமோ என்று கேட்கின்றோம். - குடிஅரசு - கட்டுரை - 27.11.192

Read more: http://viduthalai.in/page-7/72015.html#ixzz2nS7bq1tW