Search This Blog

13.12.13

தந்தை பெரியாரும் நெல்சன் மண்டேலாவும்





நெல்சன் மண்டேலா தந்தைபெரியார் போலவே 95 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளார்.

இந்தஇரு பெரும் தலைவர்களுக்கும் அடிப் படையில் ஒற்றுமைகள் உண்டு. இருவரும் பிறப்பின் அடிப்படை யிலான பேதத்தை எதிர்த்துப் போராடி யவர்கள்.

நிறவெறி என்பதும் ஜாதி வெறி என்பதும் பிறப்பின் அடிப்படையில் நிச்சயிக்கப்பட்டவை.

ஒரு கட்டத்தில் மண்டேலா ஆயுதப் போராட் டத்தைத் தொடங்கி இருந்தாலும் அதனை ஒரு தற்காலிக அணுகு முறையாகத்தான் கைக் கொண்டார். அது ஒரு கவன ஈர்ப்பு என்கிற வகையில் பயன்படுத்தினார். பிறகு அமைதி வழியே நிரந் தரமான தீர்வு என்ற நோக்கில் செயல்பட்டார். மண்டேலாவின் இந்த அணுகுமுறையோடு முரண் பாட்டுள்ள பல அமைப்புகள் அங்கு தோன்றியதும் உண்டு.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை வன்முறையில் நம்பிக்கை கொண்டவரல்ல; எந்த ஒரு போராட்டத்தை நடத்துவதாக இருந்தாலும் அது குறித்து விரிவான பிரச்சாரத்தை நடத்தி, மக்களை அதன் அவசியத்தை உணரும்படிச் செய்து, அதிர்ச்சி யூட்டும் போராட்டங்களை நடத்தினார் - எதிலும் துரும்பளவு வன்முறைகூட தலை தூக்கியதில்லை.

இவ்வளவுக்கும் சட்ட எரிப்புப் போராட்டம் வரை சென்றவர்; தேசியக் கொடி  எரிப்புப் போராட்டத்தை அறிவித்தவர்; விநாயகர் பொம்மைகளை சாலையில் போட்டு உடைத்தவர்.

மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று முதல் அமைச்சராகயிருந்த ராஜாஜி மறைமுகமாகத் தூண்டியபோதும்கூட தந்தை பெரியார் உணர்ச்சி வயப்பட்டு, எதிர் தாக்குதலுக்குத் தோழர்களைத் தயாரிக்கவில்லை.

குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து, தீப்பெட்டியும், பெட்ரோலும் தயாராக இருக்கட்டும் என்று சொன்னதுகூட, ஒரு எச்சரிக்கைதான். அவசரப் படாதீர்கள் - நாள் குறிப்பிடுவேன் என்றுதான் கூறினார். அதற்குப் பலன் கிடைத்தது; ஆச்சாரியார் பதவியை விட்டே விலகும்படிச் செய்தார்.

இந்த இரு தலைவர்களும் சமூகநீதிக்காகக் குரல் கொடுத்தவர்கள். வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது தென்னாப்பிரிக்கா அதிபராக நெல்சன் மண்டேலா இந்தியாவுக்கு வருகை தந்தவர். அவருக்கு பாரத ரத்னா விருது அளித்து பெருமை சேர்க்கப்பட்டது.
 
செய்தியாளர்கள் மண்டல் குழுப் பரிந்துரைபற்றி மண்டேலாவிடம் கேள்வி கேட்ட போது அதனை நான் வரவேற்கிறேன்! என்றார். பார்ப்பன ஊடகத்தார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

தென்னாப்பிரிக்காவில் இன்றைய தினம் கிரிக்கெட்டில் கூட இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யப் பட்டுள்ளது. ஆனாலும் வெள்ளைக்காரர்களில் மிச்ச சொச்சம் என்ற முறையில் அவர்களின் ஆதிக்கம் இன்னும் இருந்து கொண்டே தான்  உள்ளது. இந்திய முதலாளிகள் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு கூடாது என்று இந்தியாவில் சொல்கிறார்கள் - இடஒதுக்கீட்டால் தகுதி திறமை பாதிக்கப்படும், உற்பத்தித் திறன் பாதிக்கப்படும் என்று எதிர்க்கிறார்கள் அல்லவா!

தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு அளித்தால் 12 சதவீத வளர்ச்சியை அடைய முடியாது என்று இந்தியாவில் தொழில் கூட்டமைப்பினர் கூறுகின் றனர் அல்லவா! (தினமலர் 20.4.2006).

இதே முதலாளிகள் தென்னாப்பிரிக்காவில் தொழில் தொடங்கும்போது அங்கு என்ன நிலைமை தெரியுமா?

தென்னாப்பிரிக்க உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க ஒப்புதல் அளித்தாக வேண்டும்.

ஒரு தொழில் நிறுவனத்தில் கறுப்பர் ஒருவர் தலைமைச் செயல் அலுவலராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு விழுக்காட்டினராக கறுப்பர்கள் மேலாண்மையினராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு தான் இந்தியப் பெரு முத லாளிகள் டாட்டா போன்ற  நிறுவனங்கள் தென்னாப் பிரிக்காவில் தொழில்களைத் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாரும், நெல்சன் மண்டேலாவும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு எப்படித் தேவைப் படுகின்றனர் என்பது இதன் மூலம் எளிதில் விளங்கும்.

                 --------------------------------"விடுதலை” தலையங்கம் 13-12-2013

35 comments:

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/71973.html#ixzz2nMT85blY

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் கோயிலுக்குச் சென்ற அய்யப்பப் பக்தர்கள் 19 பேர் நெஞ்சுவலி காரணமாக பரிதாப மரணம்


அந்தோ பரிதாபம்!

அய்யப்பா! - உன்னை நம்பியோர் கெதி இப்படியாப்பா?

அய்யப்பன் கோயிலுக்குச் சென்ற அய்யப்பப் பக்தர்கள்

19 பேர் நெஞ்சுவலி காரணமாக பரிதாப மரணம்

மதுரை மீனாட்சியின் கோயில் மின்னல் தாக்கி கோபுரம் தூள்

திருவனந்தபுரம், டிச.13- கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநி லங்களில் இருந்தும் பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி செல்கி றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பம்பையில் இருந்து நடந்தே சபரிமலை செல் வது வழக்கம். அவ்வாறு போகும்போது மலை யில் ஏறும்போது ஏற்படும் ரத்த அழுத்தம் காரணமாகவும் உடல் நலக்குறைவு ஏற்படுவது வழக்கம். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெருவழி நடை பாதை முழுவதும் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு நோய் வாய்ப்படும் பக்தர்களுக்கு உடனே முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பெரிய மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இம்முறை சபரி மலையில் கோவில் நடை திறந்த பின்பு வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ள னர். ஆனால் எப்போதும் இருப்பதை விட இம் முறை கேரளாவில் பருவ மழையும், குளிரும் நில வியதால் பக்தர்கள் பல ரும் பாதிக்கப்பட்டனர்.

நெஞ்சுவலி ஏற்பட் டும், மூச்சுதிணறலாலும் பாதிக்கப்பட்ட அவர் களுக்கு அய்யப்ப சேவா சங்கத்தினர் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் இது வரை 19 பேர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் 2 பேர் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பலியாகி விட்டனர்.

இவர்களின் உடல் களை அய்யப்ப சேவா சங்கத்தினர் அவரவர் ஊர்களுக்கு எடுத்து சென்று உறவினர்களி டம் ஒப்படைத்தனர்.

மின்னல் தாக்கி கோபுரம் தூள்! மதுரை மாநகரில் நேற்று இரவு 9 மணி யளவில் இடி-மின்ன லுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின் னல் தாக்கியதில் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில் சேதம் ஏற் பட்டது.

கிழக்கு ராஜ கோபுரத்தின் உச்சியில் இருந்த வடக்கு நாசி தலத்தின் ஒரு பகுதியை மின்னல் தாக்கியது. இதனால் அதன் ஒரு பகுதி கீழே விழுந்தது. தகவலறிந்த கோவில் இணை ஆணையர் செய ராமன் மற்றும் அதி காரிகள் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். கிழக்கு கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களி லும் இடிதாங்கி பொருத் தப்பட்டு இருந்ததால் பெருத்த சேதம் தவிர்க்கப் பட்டது.

மீனாட்சி அம் மன் கோவிலில் உள்ள 4 ராஜ கோபுரங்களில் கிழக்கு கோபுரம் மிகவும் பழமையானது. மாற வர்மன் சுந்தரபாண்டி யன் என்ற அரசனால் கடந்த 1216-1238 ஆண்டுக் குள் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக நம்பப் படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/71962.html#ixzz2nMTU6hS9

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகம் ஒருபேராசிரியையின் நன்றிஉள்ளம்!


பேராசிரியை தந்த அதிர்ச்சி: காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில்பணியாற்றி ஒய்வு பெற்ற பேராசிரியை திருமதி வி.பி.ஆவுடையம்மாள் அவர்கள் நமது இயக்க நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதோடு நமது இயக்க ஏடுகளையும் தவறாமல் வாங்கி வாசிப்பபவர்.அந்த அடிப்படையில் பெரியார் உலகம் அமைக்க நன்கொடை வசூலிக்க தலைமைக் கழகத்தில் அச்சிட்டுள்ள விவரத்தை கொடுத்து வசூல் பணி நடைபெறுவதை சொன்னோம்.அவர்களும் கேட்டுவிட்டு ரூ 1000/-நன்கொடை தருகிறேன்என்று சொன்னார்கள்.உள்ளபடியே நாங்கள் எதிர்பார்த்து போகவில்லை.

வாங்கி வந்து சிறிது நேரத்தில் எங்களை செல்போனில் தொடர்பு கொண்ட அம்மையார் நாளை காலை வீட்டிற்கு வாருங்கள் நன்கொடையை ரூ 5000/-மாக தருகிறேன் என்று சொன்னார்கள்.சரி என்று நாங்களும் காலை வீட்டில் சந்தித்து அந்த தொகையை வாங்க செல்லும்போது எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்!

ரூ.1000/-த்தை தந்து,பிறகு ரூ.5000/-திற்கு காசோலையாக தருகிறேன் என சொல்லிவிட்டு நேரில் வரச்சொல்லி ரூ.25,000/-த்திற்கான காசோலையை தந்தபோது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அதை பெற்றுக்கொண்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி அவர்கள் நன்றி தெரிவித்துவிட்டு இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு மாற்றம் எப்படியம்மா? என கேட்டதற்கு அம்மையார் சொன்ன பதில் இருக்கிறதே! எங்களை கண்கலங்கச் செய்தது என்றுதான் சொல்லவேண்டும். அவர் சொன்னார்,நேற்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. எவ்வளவு பெரிய பணி யாரால் இதைச் செய்யமுடியும்? அதுவும் பெண்களின் இன்றைய வாழ்க்கை வளர்ச்சிக்கு 95 வயது வரை உழைத்த தந்தை பெரியாருக்கு 95அடி உயரத்தில் அப்பாடா! நினைக்கவே பிரமாண்டமாகவும்,மலைப்பாகவும் இருந்தது; எனக்கு கிடைத்த ஒவ்வொரு ரூபாயும் தந்தை பெரியார் தந்தது என்று உணர்கின்றேன் .

உடனே எனது கணவரும் நானும் அப்போதே முடிவு செய்து ஒரு பவுனுக்கான தொகையை கொடுத்துவிடுவோம் என தீர்மானித்தோம். இந்தத் தொகையை எனது மகளுக்கு பிறந்தநாள் பரிசாக தங்க நகை வாங்கிக் தரத்தான் வைத்திருந்தேன்.

பரவாயில்லை அடுத்த மாதம் வாங்கிக் கொடுத்துவிடுவேன் என்று சொன்னபோது நாங்கள் அந்த மலைப்பிலிருந்து விடுபட, அவர்களே சென்று தேநீர் போட்டு கொடுத்து உபசரித்ததை எண்ணிப் பார்க்கும்போது அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் தொண்டு எந்த அளவிற்கு இந்த இனத்திற்கு,குறிப்பாக மகளிர் சமுதாயத்திற்கு பயன்பட்டிருக்கிறது என்று எண்ணி எண்ணி மகிழ்வுற்றோம்.

நமது தலைவர் ஆசிரியர் அடிக்கடி சொல்வார்களே!

அய்யா அவர்களை பற்றி சொல்லுங்கள்,மக்கள் தர தயாராக இருப்பார்கள் என்று.! மிகச்சரியாக இருக்கின்றது. தமிழர் தலைவர் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை!ஆம்!

"நம்மால் முடியாதது யாராலும் முடியாது

யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்"

தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட கழக செயலாளர்,காரைக்குடி

Read more: http://viduthalai.in/e-paper/71970.html#ixzz2nMTwk8Ll

தமிழ் ஓவியா said...


ஏழை நாடா நம் நாடு? - ஊசி மிளகாய்

அய்.எப்.அய். (IFI) ன்ற பன்னாட்டு நிதி அமைப்பு ஒன்று 2002 முதல் 2011 வரை, வளரும் நாடுகளில் தடுக்கப்படட நிதி உள்ளீடுகள் என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையைத் தந்துள்ளது.

அதன்தலைவர் ரேமெண்ட் பேக்கர் என்பவர் கூற்றுப்படி,

2002 முதல் 2011 வரை வளரும் நாடு களில் இதுவரை கணக்கில் வராது, பதுக்கி வைக்கப்பட்ட பணம் வெளிநாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன;

அதன் எண்ணிக்கை 2002இல் 270 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் என்றால் 100 கோடி).

அதுவே 2011-இல் 946 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது! குறிப்பாக 2010இல் 832 பில்லியன் டாலர் இருந்தது அடுத்த ஆண்டில் 13 சதவிகிதம் உயர்ந் துள்ளதாம்!

வளரும் நாடுகள் தங்கள் நாட்டிற்கு வருவாயாக வர வேண்டிய 59 டிரில்லியன் டாலரை இழந்துள்ளனவாம். (ஒரு டிரில் லியன் என்பது ஓராயிரம் பில்லியன்). இந்த கறுப்புப் பண பதுக்கலில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா - இந்த நாடு 1.08 டிரில்லியன் டாலர் பதுக்கி யுள்ளதாம்! அடுத்து ரஷ்யா - இரண்டாவது இடம். பதுக்கியுள்ளது - 880.96 பில்லியன் டாலர்.

மூன்றாவது மெக்சிகோ (461.86 பில்லியன் டாலர்)

மலேசியா (370.38 பில்லியன் டாலர்).

இந்தியா - 5ஆவது இடத்தில் (உலக அளவில் (343.04 பில்லியன் கோடி டாலர் களை முறைகேடாக ஏற்றுமதி செய்துள் ளது)

பிறகு வரிசையாக இந்தோனேசியா, தாய்லாந்து, போலந்து போன்ற நாடுகள்!

இந்த ஞானபூமியில் வறுமையே வெளியேறு (கரிபீஹட்டாவோ) என்று கோஷம் கொடுத்து எத்தனை ஆண்டு காலம் ஆகிறது?

வறுமையா வெளியேறியது? இல்லையே மாறாக, நம் நாட்டு (கறுப்புப்) பணம் அல்லவா வெளியேறி முதலைகளையும், முதலாளித்துவ திமிங்கலங்களையும் செழிப்பாக வாழ வைக்கிறது!

இந்தியா ஏழை நாடா? ஏழைகள் வாழும் பணக்காரா நாடா?

உலக மயம், தாராள மயம், தனியார் மயம் என்பதன் விளைவு... இதுதானா?

சமதர்மம் என்ற பீடிகையோடு நம் அரசியல் சட்டம் முடிந்து விட வேண்டியதா?

சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது மீட்டு வரப்பட்டதா? இல்லையே!

திருப்பதி வெங்கடாஜலபதி, திருவனந்த புரம் பத்மநாபசுவாமி கோயில், குருவா யூரப்பன், கிருஷ்ணன் கோயில், சபரிமலை அய்யப்பன் கோயில், போன்றவைகளில் பதுக்கப்பட்டுள்ள அல்லது முடக்கப்பட் டுள்ள தங்கமும், மற்றவைகளும் பல லட்சம் கோடிகள் அல்லவா?

ஆனால், நம் நாட்டில் கல்வி இன்னமும் இருபாலருக்கும் போதிய அளவில் இல்லை.

சுகாதாரமோ சொல்லும்படியாக இல்லை; கழிப்பறையே இல்லாத கிராமங்கள் இன்னமும் பல லட்சம்; மனிதக் கழிவை மனிதனே சுமக்கும் அவலம்! அசிங்கம் அருவருப்பான நிலை! - தொடருகிறது!

இவைகளுக்கு விடியல் எப்போது? ஆட்சியின் கதாநாயகர் மாற்றத்தால் மட்டும் மாறுமா?

பழைய கள் புது மொந்தை என்றால் அதற்குப் பெயர் என்ன?

பதுக்கும் பலர் நம் நாட்டில் கோடி ஈஸ்வரர்கள் - கடவுளுக்குப் பக்கத்திலேயே சீட் போடப்பட்டுள்ளது.

இதுதான் ஞான பூமியாம்! வெங்காயம்! (அதுகூட விலை ஏறி விட்டது!)

Read more: http://viduthalai.in/e-paper/71969.html#ixzz2nMU5ENfL

தமிழ் ஓவியா said...


சிந்தனைக்குத் தடை


பகுத்தறிவுக்கு எதிரிகள் நம்நாட்டில் தான் எப்பொழுதும் இருந்து கொண்டு வருகிறார்கள் என்பதில்லை. உலகெங்கும் மதத்தரகர்களின் தாக்கு தல்களுக்கு பகுத்தறிவாளர்கள் இலக்காகிக் கொண்டே இருந்துவர நேர்ந்துள்ளது.

சுயசிந்தனையாளர்கள் கிளர்ந்தெழாமல் மதப்பிடியில் சிக்கித் தவிக்க நேரிட்டது. ஒரு சுய சிந்தனையாளன் என்பவன் யார் என்று பொருள் கூறுமிடத்து மதத்தை மறுப்பவன்; நாத்திகவாதி என்று அகராதிகளில் குறிப் பிடப்பட்டுள்ளது. மதத்தின் கோரப்பிடியில் உலகின் மிகப் பெரும் சுயசிந்தனையாளர்கள் எல்லாம் சிக்கி உழன்று விடுபட பெரும்பாடுபட நேர்ந்தது.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் தந்தை சிறு குழந்தையான ரஸ்ஸல் மூட நம்பிக்கை இல்லாதவராக வளர இரண்டு சுயசிந்தனையாளர்கள் (பகுத்தறிவாளர்கள்) அவரை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டு மறைந்தார். அதற்காக இரண்டு சிந்தனையாளர்களையும் நியமித்தார்.

ஆனால் இவ்வாறு நியமித்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தோடு கிறிஸ்து மத நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரை வளர்த்து வர வேண்டும் என்றும் ஆணையிட்டது.

Read more: http://viduthalai.in/page-7/71941.html#ixzz2nMUmTSBy

தமிழ் ஓவியா said...


மதம்


பிறருக்கு உழைத்து உழைத்து உருக்குலையும் மக்களை உற்பத்தி செய்யவும், அவர்களை விடுதலை அடைய வொட்டாமல் அழுத்தி வைக்கப் பயன்படுகிற ஆபத்தான ஆயுதங்களில் மிக முக்கியமானது மதம். - லெனின்

Read more: http://viduthalai.in/page-7/71944.html#ixzz2nMUyfrIF

தமிழ் ஓவியா said...

பூதங்களின் வேலையாம்!

இலேசான பாத்திரம் ஒன்றையும், கனமான பாத்திரம் ஒன்றையும் உயரமான ஒரு இடத்திலிருந்து கீழே போட்டால், கனமான பாத்திரம் சீக்கிரம் கீழே விழுந்து விடும் என்றும், இலேசான பாத்திரம் கீழேவிழ அதிக நேரம் பிடிக்கும் என்றும் மக்கள் கருதி வந்தார்கள்.

15, 16ஆம் நூற்றாண்டுவாக்கில், கலிலியோ என்ற இத்தாலிய விஞ்ஞானி இத்தாலியில் உள்ள சாய்வுக் கோபுரத்தின் மேல் ஏறி நின்று இலேசான பாத்திரம் ஒன்றையும் கனமான பாத்திரம் ஒன்றையும் ஒரே நேரத்தில் கீழே போட்டுக் காட்டி இரண்டும் ஒரே சமயத்தில்தான் விழுகின்றன என்று நிரூபித்துக் காட்டினார்.

ஆனால் மதவாதிகள் இதைக் கண்டு அஞ்சி நடுங்கினர். கனமானதும், இலே சானதும் ஒரே நேரத்தில் வீழ்வது ஏதோ பூதங்களின் வேலைதான் என்று அஞ்சி னார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/71944.html#ixzz2nMV6ji8n

தமிழ் ஓவியா said...


பூசாரிகளின் யோக்கியதை!


இந்துமத அறக்கட்டளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் ஆண்டு நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக்கையை 1962ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காணப்படும் பூசாரிகள் பற்றி விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படுகின்றன.

நாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத்தது.

அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர். அல்லது அரைகுறை யாக படித்தவர்களாக இருக்கின்றனர்; இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற்சில சிறப்பான விதிவிலக்குகள் உள்ளன. இந்த விதிவிலக்குகள் வடக்கைவிட தெற்கேதான் அதிகம் - இவ்வாறுதான் தோன்றுகிறது.

பொருளறியாத புலம்பலே மந்திரம்!

அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந்தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது வருந்துதற்குரியது.

தெய்வத்தின் கருணையைப் பெறுவதற்காக கோயில் களுக்கு வரும் பக்தர்களிடத்திலும் வழிபடுவோரிடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக் கூடிய நிலை யில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை.

சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?

ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழி பாடு கொஞ்சம் கூட போதாது என்று கூறப்படு கிறது, தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதுகூட பூசாரிகளில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்று கிறது. தெய்வத்துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர் களுக்குத் தெரியவில்லை.

மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததைக் கண்டதாக திரு.ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார். தெய்வங்கள் பெயர்கள்கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை, எந்தவகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதும் அச்சிறுவனுக்கு தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-7/71947.html#ixzz2nMVKDl2f

தமிழ் ஓவியா said...


செம்மொழி என்றாலே ஆட்சிக்கு ஒவ்வாமை! கலைஞர் பேட்டி


சென்னை, டிச.13- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் களை அவரது இல்லத்தில் நியூஸ் சைரன் வார இத ழின் சிறப்பு ஆசிரியர் ராவ், ஆசிரியர் எஸ்.சரவணக் குமார் ஆகியோர் சிறப்புப் பேட்டி கண்டனர். அப்பேட்டியில் கலைஞர் கூறியதாவது:

கேள்வி: செம்மொழி மாநாட்டை ஒரு தனி மனிதராக - எவ்வளவோ வேலை பளுக்களுக்கு இடையில் - தமிழ் உலகம் திரும்பிப் பார்க்குமாறு நடத்தினீர்கள். அதன் முழுப் பலனும் தமிழுக்குக் கிடைத்ததா?

கலைஞர்: கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி வேண்டும் என்பதற்காகப் பெரு முயற்சி மேற் கொண்டேன்; கிடைத்தது. செம்மொழித் தமி ழாய்வு மய்யத்தினைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென்று பாடுபட்டேன்; வந்தது. கோவையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பல அறிவிப்புகள் செய்யப் பட்டன.

அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் ஆட்சி மாறியது. இன்றைக்கு செம் மொழி என்றாலே ஆட்சியினருக்கு ஓர் ஒவ் வாமை! செம்மொழிப் பூங்காவைக் கூட பரா மரிக்க ஆட்சியினருக்கு மனம் இல்லை. செம் மொழி உயராய்வுப் பணிகளை ஊக்குவித்திடவேண்டும் எனும் நோக்கில், என்னுடைய சொந்தப் பணத்திலே ஒரு கோடி ரூபாயை செம்மொழி ஆய்வு நிறுவனத்திற் காக ஒப்படைத்து, அதிலே கிடைக்கும் வட்டித் தொகையிலி ருந்து ஆண்டுதோறும் தமிழ் ஆய்வில் தலைசிறந்த வல்லு நருக்கு விருது வழங்கக் கேட்டுக் கொண்டேன்.அந்தப் பணியைக்கூடச் சரியாகச் செய்ய யாரும் இப்போது முன்வரவில்லை.

கேள்வி: எப்போதும் தோழர்களுடன் வலம் வரும் நீங்கள், யாருமே இல்லாத ஒரு அறையில் தனிமையில் உட்கார்ந்து யோசித்த அனுபவம் உண்டா? எதைப்பற்றி?

கலைஞர்: காலை 10 மணிமுதல், இரவு 10.20 மணிவரை தோழர்களுடன்தான் வலம் வருகி றேன்; பல்வேறு பிரச்சினைகள் குறித்து அள வளாவுகிறேன். அந்த நேரம் தவிர, தனிமையில் இருக்கின்ற நேரங்களில், அடுத்த நாள் எதை எழுதலாம் என்று யோசிக்கிறேன். கடந்த காலங் களில் அவ்வாறு தனிமை கிடைத்த நேரங்களில் யோசித்தவைதான் பல நூல்களாக வெளி வந்தவை.

- இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டி யளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/71958.html#ixzz2nMVfoDL7

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கைகளை தடை செய்யும் சட்டம் மகாராஷ்டிரா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது


மும்பை, டிச.14-பில்லி, சூனியம், மந்திரம் போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடி வந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் என்பவர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி புனேயில் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, மூட நம்பிக்கைகளை பரப்பி வருவோரை சிறையில் அடைக்கும் சட்டத்தை மகாராஷ்டிரா அரசு அறிமுகப்படுத்தியது. மும்பை புறநகர் ரயில்களில் பில்லி, சூனியம், மந்திரம் தொடர்பாக விளம்பரப்படுத்த ரயில்வே நிர்வாகமும் தடை விதித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் மகாராஷ்டிர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மந்திரம், பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை தடை செய்யும் புதிய சட்டம் நேற்று (13.12.2013) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேல்சபையின் ஒப்புதலை பெற்றபின்னர் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்.

Read more: http://viduthalai.in/e-paper/71999.html#ixzz2nS6DmCGz

தமிழ் ஓவியா said...


பெண்களின் பாதுகாப்பிற்காக மொபைலில் அலாரம் பட்டன்' மத்திய அரசு திட்டம்

புதுடில்லி, டிச.14- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டில்லியில் மருத் துவ மாணவி ஓடும் பேருந் தில் பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையை உலுக்கி யது. இதனையடுத்து நாட்டில் பெண்களின் பாதுகாப்பை பலப் படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது, மொபைல் போன்களில் அலாரம் பட்டனை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத் தகைய வசதி கொண்ட மெபைல் போன்களைப் பயன்படுத்தும் பெண் கள், அவசர காலத்தில் இந்த பட்டனை அழுத்தி தங்களை காத்துக் கொள்ளலாம். அலாரம் பொருத்தப்பட்ட மொபைல்கள் தற்போது ஜெய்பூரில் பயன்பாட் டிற்கு வந்துள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அய்.டி துறை சார்பில் நடத்தப் பட்ட கூட்டத்தின் போது, இந்தப் புதிய அலாரம் முறையை அறிமுகம் செய்யும் முடிவை மத்திய நிதியமைச்சர் சிதம்பரத் திடம் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்க ளின் பாதுகாப்பிற்காக இந்தப் புதிய முறையை கொண்டு வரவும் அவர் கள் யோசனை தெரிவித் தனர். இது தொடர்பாக அய்டி அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறுகை யில், தற்போது சோதனை முறையாக இத்தகைய வசதி கொண்ட மொபைல் கள் புழக்கத்தில் விடப் பட்டுள்ளன; இது குறித்த விவரங்களை விரைவில் அமைச்சர் முறையாக அறிவிப்பார் என கூறி உள்ளார். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பெண் கள், இத்தகைய வசதியை பதிவிறக்கம் (டவுன் லோட்) செய்து கொள்ள லாம் எனவும், புதிய மாடல் மெபைல்களில் இந்த புதிய அலாரம் பட்டன் பெருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/72000.html#ixzz2nS6Uja43

தமிழ் ஓவியா said...


ஜெர்மன் தீர்ப்பாயமும் கூறி விட்டது!

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, ராஜபக்சே தலைமையிலான இலங்கை சிங்கள இன வெறி அரசு படுகொலை செய்தது -

உண்மைதான் என்று ஜெர்மன் நாட்டில் ப்ரமன் நகரில் கூடிய, மக்கள் தீர்ப்பாயம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. (10.12.2013)

தமிழகத்திலிருந்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், ஜெர்மன் தீர்ப்பாயத்திடம் கொடுத்த புகாரின் பேரில், இந்த விசாரணை நடைபெற்றது. மூன்று நாள் விசாரணையை நடத்திய, அந்தத் தீர்ப்பாயம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு கூறியுள்ளது.

1) ஈழத் தமிழர்களை, தனித் தனியாகக் கொலை செய்யாமல், தமிழர் என்ற இன அடிப்படையில், அந்த இனத்தின் அடையாளமே இல்லாமல் அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த இனப்படுகொலை நடந்திருக்கிறது.

2) விடுதலைப்புலிகளோடு அரசு நடத்திய போருக்கு முன்பாகவே, நீண்ட காலமாகவே இனப் படுகொலையை இலங்கை அரசு மேற்கொண்டு வந்தது. போருக்குப் பிறகும்கூட, இன அழிப்பை இலங்கை அரசு தொடர்ந்து கொண்டே இருந்தது.

3) உலக நாடுகளின் உதவியோடே இந்த இனப்படுகொலையை இலங்கை செய்தது என்றும், திட்டவட்டமாக ஜெர்மனி தீர்ப்பாயம் தெளிவுபடுத்தி விட்டது.

இந்தத் தீர்ப்பாயத்தில் உள்ள நீதிபதிகளில் ஒருவரான டென்னிஸ் ஹாலிடே யார் தெரியுமா? அய்.நா.வின் துணைத் தலைவராக இருந்தவர் ஆவார். என்னதான் இலங்கை அதிபர் தில்லுமுல்லு களையும் சூழ்ச்சிகளையும் பின்னினாலும் உலக மக்கள் மத்தியிலே ஓர் இனப்படுகொலையாளன் ராஜபக்சே என்கிற குரூர உருவம் சித்திரமாகத் தீட்டப்பட்டு விட்டது - அதை மாற்ற முடியவே முடியாது.

இந்தோனேசியா அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர், மார்ச்சுகி தாருஸ்மான் தலைமை யில், அமெரிக்காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரெட்னர், தென்னாப்பிரிக்க வல்லுநர் யாஷ்மின் சூக்கா, ஆகிய மூவர் அடங்கிய குழு இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புத் தொடர்பான அறிக்கையை, அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்-கீ- மூனிடம் அளித்தது (13.4.2011).

சிங்கள இனவாத அரசோ, ஒரே வரியில் இந்த அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறியது!

கிளிநொச்சி, முல்லைத் தீவுகளில் வாழ்ந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 ஆகும். இதனைத் தெரிவித்தது சிறீலங்கா அரசின் கச்சேரி (Local Govt Office) என்ற அமைப்பாகும்.

இந்தத் தமிழர்களின் எண்ணிக்கையில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 தமிழர்களே சிறீலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதாக அய்.நா.வின் ஒச்சா அமைப்பின் கணிப்புக் கூறுகிறது.

எஞ்சிய ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் என்ன ஆனார்கள்? என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய - குருதியை உறைய வைக்கக் கூடிய வினாவாகும்.

மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், விசரர் சூசை அடிகளார், சேவியர் குலூஸ் அடிகளார் ஆகியோர் இந்தத் தகவல்களை ராஜபக்சே தமக்குத்தாமே அமைத்துக் கொண்ட விசாரணைக் குழுவிடம் (LLRC) தெரிவித்தனரே!

இவ்வளவு நடந்தும், ஜெனீவா உலக மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டும், ராஜபக்சே எந்தக் குற்றமும் செய்யாத பெரு மகன் போலவே திரிந்து கொண்டுள்ளார்; போதும் - போதாதற்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராகவே ஆகிவிட்டார்.

ஆம் நாதுராம் கோட்சே நீதிபதி நாற்காலியில் அமர்ந்து காந்தியாரை விசாரிக்கிறார் - என்ன கொடுமையடா இது!

ராஜபக்சேவைத் தண்டிக்காவிட்டால், இந்தக் கால கட்டத்தில் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுமே குற்றவாளியாகத்தான் கருதப்பட நேரும் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/72002.html#ixzz2nS6qpMq3

தமிழ் ஓவியா said...


மொழியைப்பற்றி...

தமிழனைப்பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் மொழியைப்பற்றி நான் எவ்விதப் பிடிவாதம் கொண்ட வனுமல்ல.

- (குடிஅரசு, 26.1.1946)

Read more: http://viduthalai.in/page-2/72001.html#ixzz2nS6y7Suk

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு

தமிழ்நாடு பத்திரிகையானது மறுபடியும் சென்னை பார்ப்பன தெய்வங்களுக்குள் இரண்டறக்கரையத் தீர்மானித்துவிட்டதாக நினைக்க வேண்டி இருக்கிறது. அதன் முழுக்கவனம் ராயல் கமிஷனை பகிஷ்கரிப்பதில் மாத்திரம் இல்லாமல், பெசண்டம்மையை தலைவியாக்கு வதிலும், அரசியல் பார்ப்பனர்களைக் காப்பாற்றுவதிலும் கவலை எடுத்துக் கொண்டிருக்கின்றதாகத் தெரிகிறது. கமிஷன் பகிஷ்காரத்தைப்பற்றி அவரவர்கள் அரசியல் அபிப்பிராயம் என்று சமாதானம் செய்து கொண்டு வாதாடலாமாயினும், பெசண்டம்மையாரை தலை வியாக்க ஆசைப்படுவதில் பார்ப்பனர்களுடன் போட்டி போடுவதான இரகசியம் நமக்கு விளங்கவில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும் என்று தள்ளி விடுவதா னாலும், பார்ப்பனரல்லாருக்கு கடுந்துரோகிகளாகிய அரசியல் பார்ப்பனர்களுடன் குலாவுவதும், அவர்களைக் காப்பாற்றுவதும் பற்றி காரணம் அறியாமலிருக்க முடியவில்லை. சென்னை கார்ப்பரேஷன் தேர்தல் விஷயத்தில் அரசியல் பார்ப் பனர்கள் நடந்து கொண்ட விஷயத்தைப்பற்றி தமிழ்நாடு பத்திரிகை தனது அபிப் பிராயமாக ஒரு வரிகூட எழுத முடியாத நிர்ப்பந்தம் இப்போது திடீரென்று அதற்கு ஏற்பட்ட காரணம் என்ன என்று கேட்கின்றோம்.

பார்ப்பன அரசியல்வாதிகள் தமிழ்நாடு பத்திரிகை ஆபீசுக்கு வந்து எவ்வளவு தூரம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகின்றார்களோ, அவ்வளவு தூரம் அவர்கள் மற்ற எல்லாப் பத்திரிகை ஆபீசுகளுக்கும் தான் போய் கெஞ்சுகின்றார்கள், பார்ப்பனப் பத்திரிகைகளாகிய இந்து சுதேசமித்திரன் சுயராஜ்ஜியா முதலியவைகளும், பார்ப்பனரல்லாத பத்திரிகைகளாகிய ஜஸ்டிஸ் திரா விடன் அய்ரோப்பிய பத்திரிகைகளாகிய மெயில் முதலியவைகளும் தைரியமாய் தமது அபிப்பிராயத்தை எழுதி இருக்கும்போது தமிழ்நாடுக்கு மாத்திரம் ஏற்பட்ட தட்ட முடியாத தாட்சண்யம் என்ன என்று கேட்கின்றோம். பார்ப்பன தயவை எதிர்பார்க்கும் நிலை ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியாரைவிட தமிழ்நாடுக்கு அதிகமாய் ஏற்பட்டு விட்டதா? ஸ்ரீமான் வெங்கடாசலம் செட்டியாரே எலக்ஷன் விஷயத்தில் தைரியமாய் பார்ப்பன சூழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கும் போது தமிழ்நாடு மாத்திரம் ஏன் பயப்படவேண்டும்?

பார்ப்பன சூழ்ச்சிக்கும், பார்ப்பன வகுப்புவாதத்திற்கும் சென்னை தேர்தலை விட சரித்திரத்தில் எழுதத் தகுந்த தான வேறு ஆதாரம் என்ன வேண்டும்? திடீர் திடீர் என்று இம்மாதிரி துப்பாக்கியைக் கீழே போட்டு எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடுவதால் எவ்வளவு காரியம் கெட்டுப் போய் விடுகிறது. முதலாவது, பார்ப் பனர்கள்கூட இப்பத்திரிகைக்கு பயப்படமாட்டார்கள், மதிக்கவும் மாட்டார்கள். ஏனெனில், நேரில் போய் சரிப்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஒரு தைரியம் அவர்களுக்கு உண்டாய் விடும். இரண்டாவதாக, அடிக்கடி இம்மாதிரி அயர்ந்து விடுவதால் மக்களுக்கும் அதனிடத்தில் அதிக மதிப்பு இருக்காது என்கின்ற தைரியமும் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும். இதைத் தமிழ்நாடு பத்திரிகை உணராதது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது.

- குடிஅரசு - கட்டுரை - 20.11.1927

Read more: http://viduthalai.in/page-7/72015.html#ixzz2nS7WOsYa

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி

எவ்வளவோ காலமாய் பார்ப்பனர்களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச ஞானமும் உதயமாகி நீக்கப்பட்டது என்று சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம். இன்னமும் இதுபோல் மலையாளத்திலும், தமிழ்நாட்டிலும் நடக்கக் கூடாததும், கிட்டே அணுகக் கூடாததுமான எத்தனையோ தெருக்கள் இருந்து கொண்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் வெள்ளைக்காரர்கள் வாய் மூலமாய்த் தீர்ப்பை எதிர்பார்க்கின்றார்களே ஒழிய, ஒரு பார்ப்பனருக்காவது புத்தி வந்து தாங்களாகவே அனுமதித்தார்களென்று சொல்லிக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றது. இனியாவது, சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த தலைவர்களுக்காவது திருவாங்கூர் அரசாங்கத்திற்காவது புத்தி வருமோ என்று கேட்கின்றோம். - குடிஅரசு - கட்டுரை - 27.11.192

Read more: http://viduthalai.in/page-7/72015.html#ixzz2nS7bq1tW

தமிழ் ஓவியா said...


வாக்குப்பதிவு இயந்திரம்


எடிசன் தன் முதல் கண்டுபிடிப்பாக 1868-இல் பதிவு செய்த வாக்குப்பதிவு இயந் திரம் அரசினால் ஏற் றுக் கொள்ளப்பட வில்லை. தந்தி மற்றும் பங்குச்சந்தை சாதனங் களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததும் உலகமே இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோ கிராப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வரனாக்கியது. ஒலியைப் போலவே, ஒளியையும் பதிவு செய்ய முடியும் என சினிமாவைக் கண்டுபிடித்ததும், கண்டு பிடிப்புகளின் தந்தை எனப் புகழாரம் கிடைத்தது...!
1914-ஆம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட் டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து, தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்... ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில் கலந்துவிட்டேன் என்பதை, 67-ஆவது வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த தோல்வியும் எனக்குப் படிப்பினையே என்றார் எடிசன் சிரித்தபடி.

தனது 81-ஆவது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புகளை எடிசன் பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்வி களை வீழ்ச்சியாகக் கருதாத இவரது தன்மையே...

- த. பூபாலன், பணங்கொடம்

Read more: http://viduthalai.in/page2/72045.html#ixzz2nV01D4aq

தமிழ் ஓவியா said...


ஆன்மீகத்தால் அழிந்த மாவீரன்

நெப்போலியன் மாவீரன் என்றாலும் அவர் ஒரு மடத்தனமான ஆன்மீகவாதி, தன்னுடைய ஒவ்வோரு சாதாரண வெற்றியிலும் கடவுள் அருள் தன்னுடன் இருப்பதாகவே நினைத்துக் கொண்டான். 1812-ஆம் வ்ருடம் ரஷிய உடன்பாடு முறிந்த தன் காரணமாக ரசியாவுடன் படையெடுத்து ரசிய தலைநகரான மாஸ்கோவைக் கைப்பற்றினான். கடவுளின் பேரருள் தன்னுள் இருப்பதாக வும் விரைவில் தன்னை இந்த பரந்த அய்ரோப்பிய கண்டத்தின் அதிபதியாக கடவுள் நியமிப்பார் என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.

மாஸ்கோ வெற்றியை அடுத்து அவனின் கடவுள் பக்தி மேலும் அதிகமாகிப் போனது; விளைவு அவனுடைய செயல்களில் உத்வேகம் குறைந்தது. திட்டமிடாமை, எதிர் கால சிந்தனையின்மை, அலட்சியம், மற்றும் சோம் பேறித்தனம் அதிகமானது, இதைக் கவனத்தில் கொண்ட சிலர் அவனிடம் கடவுள் பெயரைச்சொல்லி நல்ல பெயரும், செல்வமும் குவிக்கும் நோக்கில் அளவிற்கு அதிக மாக புகழந்து விட்டனர். விளைவு மாஸ்கோவிலேயே புகழ் போதையில் தங்கிவிட்டான், அங்கிருந்து தான் அவனுக்கு கேடு ஆரம்பித்தது, அதாவது குளிர் காலம் துவங்கிவிட்டது, ரஷ்யாவின் குளிரைத்தாங்காமல் லட்சக்கணக்கான பிரென்சு படைவீரர்கள் மாண்டுவிட தப்பிப்பிழைத்தவர்கள் வெகுசிலரே! இதை எதிர்பார்த்துகாத்திருந்த ஆஸ்திரியா, பின்லாந்து, இதர அய்ரோப்பிய மன்னாராட்சி நாடுகள் பிரிட்டனின் ஆலோசனையில் பேரில் களைத்துத் திரும்பி பிரென்சு படைகளை தாக்க துவங்கினர், விளைவு கடுமை யான தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது, நெப்போலியன் கைது செய்யப்பட்டு இத்தாலியில் உள்ள எல்பாதீவில் சிறை வைக்கப்பட்டார். அங்கும் பக்திப் போதை விடவில்லை, கடவுளின் அனுக்கிரகம் தனக்கிருக்கிறது என்று கூறிக்கொண்டு சிறைக்காவலர்களுக்குப் பணம் கொடுத்துத் தப்பித்து பிரெஞ்சு திரும்பினான். 1813 மீண்டும் பிரெஞ்சு அரியணை ஏறினான். அப்போது பிரெஞ்சு தலைநகர் பாரிஸ் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தது, அவனும் இந்த பொருளாதார நெருக்கடியை போரின் மூலம் நாம் மீட்டுவிடலாம் என்ற பொய்யான மாயையை மக்களிடம் உருவாக்கி மீண்டும் போருக்குத் தயாரானான். த கிரேட் வாட்டர் லூ போர் எரிமலை என்று என்று தெரிந்தும் குதித்த ஒரு புத்திசாலியின் செயல் என வரலாற்று அறிஞர்கள் இன்றும் நெப்போலியனின் செயலைப்பற்றி குறிப்பிடுவார்கள், அறிவார்ந்த அறிஞர்களின் எந்த ஒரு அறிவுரையையும் ஏற்கவில்லை, இவன் செயலால் பல தத்துவ ஞானிகளும் மேதைகளும் இத்தாலிக்கும், ஜெர்மனுக்கும், பிரிட்டனுக்கும் சென்றுவிட இவனிடம் இருப்பவர்கள் எல்லாம் கடவுள் பெயரைச்சொல்லி பிழைப்பவர்கள் மாத்திரமே,

எதிரியின் பலம் என்னவென்று சரியாக எடுத்துக்கூற ஆள் இல்லாமல் சரியான போர்த்தளவாடங்கள், திட்டமிடல் என எதுவுமோ இல்லாமல் வாட்டர் லூ போரைத் துவக்கினான். பிரஞ்சுப் படையில் லட்சக்கணக்கானோர் இருந்தார்கள், ஆனால் எதிரே பல அய்ரோப்பிய நாடுகள் சரியான திட்டமிடல் மேலும் கடற்படையில் பிரிட்டனின் வலிமை எல்லாம் இணைந்து ஒன்றாக நெப்போலியனை எதிர்த்து, இந்தப் போரில் சுமார் 6 லட்சம் பிரெஞ்சுப் போர் வீரர்கள் அநியாயமாகப் கொல்லப்பட காரணமாக இருந்தான், இறுதியில் பிரிட்டீஷ் கடற்படை நெப்போலியனை சிறைபிடித்து செயின்ட் ஹெலினா தீவில் சிறைவைத்தது, சிறையில் சுகாதாரமான உணவு மற்றும் நல்ல சூழ்நிலையில்லாததால் காயங்களில் புரையேறி அது புற்று நோயாய் மாறி 1821 மே மாதம் உயிர்விட்டான்.
கடவுள் பெயரால் உலகை ஆளுவேன் என்று மமதை யுடன் திரிந்து மனித அறிவை செயலாக்க மறந்தான். விளைவு, வரலாற்று மாவீரன் என்று பெயரெடுத்தும் கடுமையான தோல்விகளைச் சந்தித்து நோய்க்கு மருந் திடக்கூட உதவிக்கு ஆளில்லாமல் மரணமடைந்தான்.

- சரவணா இராசேந்திரன்

Read more: http://viduthalai.in/page2/72046.html#ixzz2nV09Yd5W

தமிழ் ஓவியா said...


முஸ்லிம்களின் நிலை


இந்தியாவில் உள்ள 28 மாநிலங் களில் 13 மாநிலங்களில் உள்ள அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் கூட அமைச்சராக நியமிக்கப்பட வில்லை என்பது மிகவும் வேதனைக் குரிய செய்தி. இந்த முஸ்லிம் விரோத போக்கிற்கு முஸ்லிம் வாக்குகளுக்காக தந்திரங்களை கையாளும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவுக்கு சளைத்ததில்லை என நிரூபித்துள்ளது.

தற்போது தேசியம், வளர்ச்சி என்று போலி முகமூடி அணிந்து பேசிவரும் மோடி ஆளும் மாநிலமான குஜராத் உட்பட, பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரே ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ. கூட பாஜகவுக்கு இல்லாததன் மூலம் அக்கட்சியின் தீவிர முஸ்லிம் விரோதப் போக்கை அதன் கொள்கையில் மட்டு மின்றி அதன் அரசியல் செயல்பாடு களிலும் காணமுடிகிறது.

இந்தியாவில் 28 மாநிலங்களில் 609 அமைச்சர்கள் உள்ளனர். இதில் மொத் தம் 57 பேர் முஸ்லிம்கள். வெறும் 9.35 விழுக்காடு மட்டுமே. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.34 சதவீதம் ஆகும். 57 அமைச்சர்களில் 18 பேர் ஜம்மு-கஷ்மீர் அமைச்சர்கள் ஆவர்.

பா.ஜ.க ஆளும் குஜராத்தில் 9.06 சதவீதம் முஸ்லிம்கள் வாழுகின்றனர், சத்தீஷ்கரில் 1.97சதவீதம் முஸ்லிம்களும், கோவாவில் 6.84 சதவீதம் முஸ்லிம் களும், மத்தியப் பிரதேசத்தில் 6.37 சதவீதம் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். ஆனால் இங்கெல்லாம் பா.ஜ.கவுக்கு ஒரே ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ கூட இல்லை.
பஞ்சாபை ஆளும் பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான அகாலிதளத்திற்கு மலேர்கோட்லா தொகுதியில் இருந்து ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ உள்ளார். காரணம் அத்தொகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்றார்கள்.

காங்கிரஸ் ஆளும் உத்தரகாண்டில் 11.92 சதவீத முஸ்லிம்கள் வாழுகின்றனர். ஆனால், முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த எந்த பிரதிநிதியும் அமைச் சரவையில் இடம்பெறவில்லை. முஸ்லிம் மக்கள் தொகை 10 சதவீதம் கொண்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள் பல ஆண்டு கள் ஆட்சி புரிந்த ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 37 காங்கிரஸ் அமைச்சர் களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம் ஆவார். காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை. 5.78 சதவீதம் முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட காங் கிரஸ் ஆளும் அரியானா மாநிலத்தில் ஒரேவொரு முஸ்லிம் அமைச்சர் உள்ளார். ஜம்மு-கஷ்மீரை அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழும் அஸ்ஸாமில் (30.90 சதவீதம் முஸ்லிம்கள்) காங்கிரஸ் கட்சி 3 முஸ்லிம்களை மட்டுமே அமைச் சரவையில் இடம்பெறச் செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தில்தான் அதிக முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். 18.55 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் உ.பி.யில் 51 அமைச்சர்களில் 10 பேர் முஸ்லிம்கள் ஆவர். இங்கு சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. 24.6 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி புரிகிறது .இங்கு 20 அமைச்சர்களில் 5 பேர் முஸ்லிம்கள் ஆவர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்குவங்காளத்தில் 25 சதவீத முஸ்லிம்கள் வாழுகின்றனர். அங்கு 44 அமைச்சர்களில் அய்வர் மட்டுமே முஸ்லிம்கள்ஆவர். பீகாரில் நிதிஷ்குமார் அமைச்சரவையில் 2 முஸ்லிம்கள் உள் ளனர். கர்நாடகா காங்கிரஸ் அமைச் சரவையில் 2 முஸ்லிம்கள் உள்ளனர்.

Read more: http://viduthalai.in/page2/72044.html#ixzz2nV0LI7y3

தமிழ் ஓவியா said...


சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி


மின்சாரம் சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங் குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.

பூமியை பொறுத்தவரை எப்போ தும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது.

எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உள்ள ஷிமிஷூ கார்ப்பரேசன் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் சோலார் பேனல் தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட் டுள்ளது. அதற்கு ஜனாரிங் என பெயரிட்டுள்ளனர்.

இதன் மூலம் 13 ஆயிரம் டெரா வாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியும். ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் ஆகும். இந்த திட்டத்தின் கட்டுமான பணி வருகிற 2035ஆம் ஆண்டில் தொடங் கப்பட உள்ளது.
தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன.

சந்திரனில் சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின் கலன்கள் அமைக்கும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலை யங்களில் இணைக்கப்படும். பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும்.

Read more: http://viduthalai.in/page3/72047.html#ixzz2nV0bkT9t

தமிழ் ஓவியா said...


விருதுகள் விவரம்



இந்தியாவின் மிக உயர்ந்த விருது - பாரத ரத்னா
1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது.
அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது
மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது.
மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது
மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது
மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது
மிக உயர்ந்த கௌரவ ராணுவ விருது - ஃபீல்ட் மார்ஷல் விருது
மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜீனா விருது
மிக உயர்ந்த விளையாட்டு பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யா விருது
மிக உயர்ந்த வீரதீர விருது- மஹாவீர் சக்ரா
மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது
மிக உயர்ந்த வேளாண்மை விருது - க்ருஷி பண்டிட் விருது
மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

Read more: http://viduthalai.in/page8/72057.html#ixzz2nV2eOpEn

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


வைக்கம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் - சிறையில் கைவிலங்கு பூட்டி வைக்கப்பட்டிருந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

மண்டேலா வாழ்க்கைக் குறிப்பு


1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார்.

தெம்பு அரச குடும்பத்தைச் சார்ந்த பரம்பரையில் வந்த மண்டேலாவின் தந்தையின் பெயர் காட்லா ஹென்றி. தாயின் பெயர் நோஸ் கெனிபேனி.

இளம் வயதிலேயே குத்துச் சண்டை வீரராக அறியப்பட்ட மண்டேலா ஆடு மாடு மேய்த்துக்கொண்டே பள்ளியில் படித்தார்.

லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து பட்டப் படிப்பையும் சட்டப்படிப்பையும் முடித்தார்.

கருப்பர் இன மக்களுக்கு எதிரான வெள்ளையர்களின் நிறவெறியை எதிர்த்து 1939ஆம் ஆண்டு போராடத் தொடங்கினார்.

வெள்ளையர் இன அரசுக்கு எதிராகப் புரட்சி செய்ததாகக் கூறி 1956ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலையான பின் தீவிரமாகப் போராடினார்.

1961ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப் படைத் தலைவர் ஆனார்.

1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி வெள்ளையர் அரசால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் 1964ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி ஆயுள் தண்டனைக் கைதியானார்.

18 ஆண்டுகள் ராபன் தீவில் தனிமைச் சிறைவாசம் அனுபவித்தார். பின் 1982ஆம் ஆண்டு போல்ஸ்மூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

உலக வரலாற்றில் தொடர்ந்து 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் மண்டேலாதான்.

1990ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

1990ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ஆம் தேதி சர்வதேச மண்டேலா தினமாக அய்.நா.சபை அறிவித்துள்ளது.

1994ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தார்.

1994ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி கருப்பர் இனத்தின் முதல் அதிபரானார்.

1999ஆம் ஆண்டில் முதுமை காரணமாக அதிபர் பதவியிலிருந்து விலகினார்.

2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொது வாழ்விலிருந்து ஓய்வு பெற்ற மண்டேலா 2013, டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.

ஈவிலின் மேசே, வின்னி, கிரேகா மேச்சல் என மூன்று மனைவிகள்.

பள்ளி ஆசிரியர் நெல்சன் என்ற பெயர் சூட்டினார். முழுப்பெயர் நெல்சன் ரோலிஹ்லாலா (Nelson Rolihlahla).

தமிழ் ஓவியா said...

ஓங்கி ஒலித்த உரிமைக் குரல்

உலகம் பல போராளிகளைப் பார்த்துள்ளது. அவர்களின் விடுதலை உணர்ச்சி முழக்கங்களைக் கேட்டுள்ளது. அவற்றில் மண்டேலாவின் முழக்கம் வித்தியாசமானது. மண்டேலா பல்வேறு நிகழ்வுகளில் ஒலித்த உரிமைக் குரல் இதோ:-

வெள்ளை ஆதிக்கத்தின் நேரடி விளைவுதான் ஆப்பிரிக்கர்கள் அனுபவிக்கும் இழிநிலை. வெள்ளை ஆதிக்கம் என்பது கருப்பர்கள் தாழ்வானவர்கள் என்பதையே குறிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஒழிசலான வேலைகள் என்பவை ஆப்பிரிக்கர்களால் மட்டுமே செய்யப்படுகின்றன. எதையாவது தூக்கிச் செல்ல வேண்டுமென்றாலோ எதையாவது சுத்தம் செய்ய வேண்டுமென்றாலோ ஒரு வெள்ளையர் சுற்றும்முற்றும் யாராவது கருப்பினத்தவர் தென்படுகிறாரா என்றுதான் பார்ப்பார், அவர் தனது வேலையாளாக இல்லாவிட்டாலும்கூட. இது போன்ற அணுகுமுறையால்தான் வெள்ளையர்கள் ஆப்பிரிக்கர்களை ஏதோ தனிவகை ஜந்து என்ற விதத்தில் பார்க்கிறார்கள். கருப்பர்களுக்கும் குடும்பம் இருக்கும் என்றோ அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும் என்றோ, வெள்ளையர்களைப் போலவே அவர்களுக்கும் காதல் ஏற்படும் என்றோ வெள்ளையர்கள் உணர்வதில்லை. வெள்ளையர்கள் தங்கள் மனைவியருடனும் குழந்தைகளுடனும் இருக்க விரும்புவதைப் போலவே கருப்பர்களும் விரும்புவார்கள் என்று அவர்கள் உணர்வதில்லை; தங்கள் குடும்பத்தை நல்லபடி நடத்தவும், உணவு, துணிமணிகள் போன்ற தேவைகளை நிறைவேற்றவும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் தேவையான அளவுக்குச் சம்பாதிக்கக் கருப்பர்கள் விரும்புவார்கள் என்று வெள்ளையர்கள் உணர்வதில்லை.

எமது மக்கள் கண்டுள்ள முன்னேற்றங்கள், அவர்களின் தெள்ளத் தெளிந்த பேச்சு, அவர்கள் இங்கே பெற்று வரும் வெற்றிகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஈட்டி வரும் அங்கீகாரம் ஆகியவை எல்லாம் ஒருவிதத்தில் எனது உழைப்பின் விளைவே என்று கூறி வருகிறார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். பெரியதொரு படையில் இடம் பெற்றிருப்பவர்களில் யானும் ஒருவன். வெற்றி அல்லது சாதனை என்று ஏதாவது உண்டென்றால் அதற்கான பெருமை இந்தப் படையில் இருக்கிற எல்லாரையும் சாரும். முன்னேற்றத்துக்குக் காரணம் எனது உழைப்பு மட்டுமே அன்று. எனது தோழர்களும் நானும் _ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் _ ஆற்றியுள்ள கூட்டுப் பணியின் விளைவாகவே முன்னேற்றம் கண்டுள்ளோம்.

தண்டனையை ஏற்கத் தயாராய் இருக்கிறேன். இந்த நாட்டின் சிறைச்சாலைகளில் ஓர் ஆப்பிரிக்கரின் நிலைமை எவ்வளவு கொடியது, எவ்வளவு அவலமானது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் தண்டனையை ஏற்கத் தயாராய் இருக்கிறேன். இந்தச் சிறைகளில் ஏற்கெனவே இருந்துள்ளேன். சிறைச் சுவர்களுக்குள்ளேயும்கூட ஆப்பிரிக்கர்களுக்கு எதிரான பாகுபாடு எவ்வளவு அப்பட்டமானது, வெள்ளைக் கைதிகளைக் காட்டிலும் ஆப்பிரிக்கக் கைதிகள் எவ்வளவு மோசமாய் நடத்தப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் இந்தக் காரணங்கள் எல்லாம் நான் தேர்ந்தெடுத்திருக்கிற பாதையிலிருந்து என்னை விலகச் செய்திட முடியாது; என்னைப் போன்ற ஏனையோரையும் விலகச் செய்திட முடியாது.

எனது மக்களுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்தேன். நான் நிரபராதி என்றும், இந்த நீதிமன்றத்தில் கூண்டிலேற வேண்டிய குற்றவாளிகள் ஃபெர்வூடும்(பிரதமர்) அவரது அமைச்சர்களுமே என்றும் வருங்காலம் தீர்ப்பளிக்கும் _ இதில் எனக்குத் துளியும் அய்யமில்லை.

விடுதலை செய்யப்படும்போது, அநீதிகளை அகற்றுவதற்கான போராட்டத்தைத் தொடர்வேன். அநீதிகள் பூண்டோடு ஒழியும் வரை தொடர்ந்து போராடுவேன்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் போராட்டம் அன்னியர்கள் அல்லது கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலால் நடைபெறுவதாக அரசு ஏற்படுத்தி வரும் எண்ணம் முற்றிலும் தவறானது. தனி மனிதன் என்ற முறையிலும் எனது மக்களின் தலைவர்களில் ஒருவன் என்ற முறையிலும் நான் என்ன செய்திருந்தாலும் சரி, தென் ஆப்பிரிக்காவில் நான் பெற்ற அனுபவத்தின் காரணத்தாலும், நான் பெருமையாகக் கருதுகிற எனது ஆப்பிரிக்கப் பின்னணியின் காரணத்தாலும் செய்தேனே தவிர, யாரோ வெளிநாட்டார் ஏதோ சொன்னார் என்கிற காரணத்தால் அல்ல.

நாசவேலைக்குத் திட்டம் தீட்டியதை நான் மறுக்கவில்லை. வருவது வரட்டும் என்ற மனநிலையிலோ, வன்முறையின்பால் காதல் கொண்டோ அப்படிச் செய்யவில்லை. எனது மக்கள் பல்லாண்டு காலமாய் வெள்ளையரின் கொடுங்கோன்மைக்கும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகி வருவதால் தோன்றியுள்ள அரசியல் நிலைமையை அமைதியாகவும் நிதானமாகவும் மதிப்பீடு செய்ததன் விளைவாகவே நாசவேலைக்குத் திட்டம் தீட்டினேன்

தமிழ் ஓவியா said...

புத்தர் பிறப்பு கி.மு. 6ஆம் நூற்றாண்டில்...



புதிய ஆய்வுத் தகவல்

புத்தர் கி.மு.3ஆம் நூற்றாண்டில் பிறந்தவர், 4ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்று பல கருத்துகள் நிலவிவரும் நிலையில், புத்தரின் பிறப்பிடமான நேபாளத்தில் மிகப் பழைமையான புத்த விகாரை (கோவில்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபின் கன்னிங்ஹம் தலைமையிலான தொல்லியல் குழுவினர் மேற்கொண்ட அகழ்வாய்வில், செங்கற்களால் கட்டப்பட்ட தொடர் புத்த விஹாரைகளின் கீழ் கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தாலான விஹாரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மய்யப்பகுதியில் வெற்று இடம் உள்ளது. இந்த வெற்றிடத்தின் மய்யத்தில் மரம் இருந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பழமையான மரத்தின் வேர்கள் அந்த இடத்தில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. லும்பினி தோட்டத்தில் மரத்தின் கிளையைப் பிடித்தபடி ராணி மாயாதேவி புத்தரைப் பிரசவித்த கதையுடன் இதற்குத் தொடர்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இதிலிருந்து, புத்தர் மரத்தடியில் பிறந்திருக்கலாம் என்ற வரலாறு உண்மை என்பதும் அவர் பிறந்த இடமான மரம் புனிதமாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

பொன்மொழி

செய்யக் கூடியதைச் செய்யாமல் இருப்பவன் சோம்பேறி. செய்யக் கூடியதைச் செய்து முடிப்பவன் உழைப்பாளி. செய்யக் கூடியதை வேகமாகவும் அதிகமாகவும் செய்பவன் திறமைசாலி. செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவனே சாதனையாளி.

- இந்தியா

தமிழ் ஓவியா said...


துளிச் செய்திகள்

இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி 53 சதவிகித பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதில் 88.6 சதவிகித குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே வன்முறைக்கு ஆளாகின்றனர்.

அமெரிக்காவில் மருத்துவக் கல்விப் பாடத் திட்டத்தில் மாற்று மருத்துவச் சிகிச்சை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் 6 மாதம் மாற்று மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்துப் பயில வேண்டும். நிலவின் சுற்றுவட்டப் பாதையில் செல்லும் ஜேட் ராபிட் என்ற புதிய தொழில்நுட்பம் இணைந்த செயற்கைக் கோளினை டிசம்பர் 2 அன்று சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் டிசம்பர் 3 அன்று டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வாய்ஸ் 17பி என்ற கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருப்பது அமெரிக்கா அனுப்பிய ஹப்பிள் தொலைநோக்கி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி டிசம்பர் 7ஆம் தேதி முதல் 10 வரை விசாரணை நடத்தி 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் வகையில் ஜெர்மனியில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

கருத்து

சென்னையில் பல இடங்களில் தெருவிலும், சாலை ஓரங்களிலும் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை இன்றும் பார்க்கலாம். ஏன் அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை? எதிர்காலத்தில் திருட்டுகள், பிக் பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடும் வாய்ப்பு இந்தச் சிறுவர்களுக்கு அதிகம் உள்ளது.

- எஸ். ராஜேஸ்வரன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

மக்களை இழுத்தடிப்பதை அரசு அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். மக்கள்தான் ஜனநாயகத்தின் நாயகர்கள். அதிகாரிகள் எல்லோரும் அவர்களுக்கு ஊழியர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரசு என்பது மக்களுக்காகத் தானே தவிர அவர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது.

- கே.கே.சசீதரன்,
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

இலங்கை தங்கள் நாட்டு சட்டதிட்டங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவ்வாறு நடந்துகொள்ளும் என்றும் நம்புகிறோம். மேலும், போருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் இனியும் பொறுமையாக இருக்காது.

- நிஷா பிஸ்வால், அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர்

தமிழ் ஓவியா said...


சிறந்த நூலிலிருந்து சில கவிதைகள்



துளிரத் தொடங்கும் எங்களுக்கான தேசம்!

நூல்: வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு

ஆசிரியர்: ரகசியன் | செல்பேசி: 9445182142

வெளியீடு: பொன்னி,
2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவன்யூ, மடிப்பாக்கம், சென்னை-91

பக்கங்கள்: 88 | விலை: ரூ.60/-

ஒருவரியேனும்

உங்களோடு சேர்ந்து வாக்களிக்கிறேன்
உங்களோடு சேர்ந்து திரைப்படம் பார்க்கிறேன் அவ்வப்போது
உங்களோடு சேர்ந்து மது அருந்துகிறேன்

உங்கள் விரல்களில் இருக்கும் வெண்சுருட்டை
போதை நிறைந்த அப்பொழுதில்
புகைக்கவும் செய்கிறேன்
என்பதினால்
நீங்களாக நான் எப்போதும் ஆனதில்லை

என்றாவது மலர்கள் மொழிந்ததுண்டா
உங்களிடம்?
நிலவின் இதழ் உங்கள் கன்னம்
தீண்டியிருக்கிறதா?

இப்பெரிய நீலம்
உம் கண்களில் நிரம்பி வழிந்திருக்கிறதா?

வெட்டு வாங்கிய மரங்கள்
உம்மிடம் சொல்லி அழுதிருக்கின்றனவா?

தோண்டப்பட்ட மலையில் வழியும்
இரத்தக் கவிச்சியை உணர்ந்திருக்கிறீரா நீவீர்?

நீ இளைப்பாறும் இந்நிழல்
நீரே நட்டு வளர்ந்த மரமா?
சுவைக்கும் கனியும் அப்படியோ?

நீரில்லா இம்மணல் வெளியில்
நதியின் கண்ணீர் ஓடுகின்றதைக் கண்டீரா? வியர்வைக்கு நியாயமான விலை கேட்டதற்கு
உம் சகமனிதன் கொளுத்தப்பட்டான்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்

உம் சகமனிதனின் தலைமையைப்
பொறுத்துக் கொள்ளாமல்
அவனை வெட்டி முண்டமாக்கினர்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்

உம் சக மனிதனின் வாயில்
பீ திணித்தார்கள்
பார்த்துக் கொண்டிருந்தீர்கள்

அற்புதமாக எழுதும் நீங்கள்
இம்மானிட இழிவுக்கு எதிராக
ஒருவரியேனும் எழுதியதுண்டா?

ஓசோன் படலம் கிழிந்துவிட்டது
பூமி வெப்பம் அடைந்துவிட்டது
ஆயிரமாண்டின் பண்பாடு
அழியத் தொடங்குகிறது

என்று புலம்பும் வாயிலிருந்து
இந்த இழிசெயல்கள் மேல்
காறி உமிழ எச்சில்
ஏன் இல்லை?

இதயத்தில் கசிவில்லை

எறும்புகள் புழுவை
வதைப்பது போல்
மக்களை வதைக்கிறது பசி

பைத்தியத்தின் திமிரில் வரும்
உம் சொற்கள் அல்லது
செயல்கள்
இம்மண்ணின் இதயங்களைக்
கருக வைக்கின்றன
கவின்மிகு பூக்கள் தீயில்
கருகுவது போல்

சன்னல் வழி சொட்டும்
இவ்வழகிய மழை தான்
குடிசை மக்களைத் துன்புறுத்துகிறது

தும்பிகள் பிடிக்க வேண்டிய
விரல்களைச் சுடுகிறது
கண்ணாடிக் குவளை வழி தேனீர்

இன்னும் பல யாவும் கண்டும்
எந்தக் கசிவுமில்லை இருதயத்தில்

இப்பெரும் கடலில் நீலம்
கொட்டிக்கிடப்பது போலவே
இவையாவும் என்றெண்ணி
ஒரே அலைவரிசையில் பயணம் செய்கிறோம்

நம் எழுத்துக்காரர்களைப் போல்
நம் கூத்துக்காரர்களைப் போல்
நம் ஆட்சிக்காரர்களைப் போல்

கொடும் விலங்கொன்று

பசியையும் தீண்டாமையையும்
தின்று வளர்கிறது
கொடும் விலங்கொன்று
குடிசை ஒவ்வொன்றிலும்

ஆழிப்பேரலையையும்
அடங்கா பெரும் காற்றையும்
எங்கள் திசைகளில்
திருப்புகின்றாய்

புயல்களைச் சுவாசித்தே
ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்
ஆயிரம் ஆண்டுகளாய்
வடிகட்டிய மென்காற்றைத் தின்று
வாழ்கிறாய்

ஆரவாரமாய், அமைதியாய், திமிராய்
கட்டப்பட்டுள்ள அவ்விலங்கு
கட்டுக்கடங்காமல் அறுத்துக்கொண்டு
உன் அமைதியை ஆரவாரத்தை திமிரை குதறும்

அந்நாள் வரை துய்
எம் மகிழ்வை அமைதியை
மென்காற்றை

துளிரும் தேசம்

ஒருவருக்கு மலம் திணிக்கிறீர்

எல்லோரும் கொதிக்கிறோம்
நெருப்புக் குளம்பாய்

எங்கள் தாய்களையும்
சகோதரிகளையும் பலாத்காரம் செய்கிறீர்

கருவுருகிறோம்
ஆயுதங்களோடு

எரித்த எம் குடிசைகளின் தீக்களாலே
சூரியன்கள் பல காய்த்திருக்கிறோம்

உங்களின் ஒதுக்குதல்களில் இருந்து
துளிரத் தொடங்கும் எங்களுக்கான தேசம்

வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு

தெரிந்த வழி எல்லாம்
பயணிக்கிறோம்
எங்கும் காணவில்லை

வளர்ந்து வரும்
நம் எழுத்தின் கைகளுக்கும்
உறுமும் நம் பேச்சின் பேரொலிக்கும்
துளிர்க்கும் நம் அரசியலுக்கும்
தொடரும் உரையாடலுக்கும் மசியவில்லை

தேவைப்படுகிறது
இன்னும் பல ஆயுதங்கள்
வண்ணங்களை விழுங்கிப்
பெருத்துக் கொண்டிருக்கும்
இருட்டினுள் இருக்கிறது அது

ஆயிரமாண்டின் இதயங்களைக்
கழற்றி எறிந்து விட்டு
அப்பெரும் இருட்டினுள்
பாய்வோம் சூரியனாய்

அறிவின் வாளில்

சாதி கழித்த மலத்தினுள்
புதைந்திருக்கிறது தாய் நிலம்

மலத்தில் பிறந்த மிருகம்
வேட்டையாடிக் கொண்டிருக்கின்றது
மக்களை

ஞானத்தின் கூரிய வாள்
வாய்மையின்
தலைமேல் தொங்கிக் கொண்டிருக்கிறது

மதம் காக்க தெய்வத்தின்
பிணத்திற்கு அரிதாரம் பூசி
ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

ஆயிரங்கள் ஆகிப்போன
நான்கு வர்ணங்களைக் கட்டிக் காக்கிறது
பூணூல்

பிரிக்கப்படாமலிருக்கும்
மந்திரக்கட்டுகள் அறுத்தெறியப்படும்
கூரேறிக் கொண்டிருக்கும்
அறிவின் வாளில்

தமிழ் ஓவியா said...

ராஜராஜன் மேல் மரியாதை இல்லை!

கேள்வி: தஞ்சாவூரில் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறீர்கள். பெரிய கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா?

பதில்: பெரிய கோவிலின் புல்வெளியில் இருக்கும் புல் ஒவ்வொன்றும் என்னை அறியும். ஆனால், ராஜராஜன் மேல் மட்டுமல்ல, எந்த மன்னன் மேலும் எனக்கு மரியாதை இல்லை. இன்னொரு நாட்டின் மேல் படையெடுத்து, அந்நாட்டு மக்களின் அமைதியைக் கெடுத்து, பெண்களை அடிமையாக்கி, பொருள்களைக் கொள்ளையடித்து வாழ்ந்த மன்னர்கள் என்பவர்கள் கிரிமினல்கள். அவர்கள் புகழப்படுவது, தவறு. பிரமாண்டமாக ஒன்றைச் செய்வது (கோவில் கட்டுவதுபோல), மக்கள் வரிப்பணம் ஊதாரித்தனமாகச் செலவழிக்கப்பட்டது மட்டுமல்ல... அது எளிமையை அழிக்கிற ஆணவச் செயல்பாடு, ஏழ்மை, இல்லாமை, தேவைகளோடு வாழ்கிற மக்களை, இந்தப் பிரமாண்டம் அவமானப்படுத்துகிறது. தன்னைப் பிரமாண்டமாகக் கருதுவது மனிதத்தனம் அல்ல. கோவில், கலையை வளர்த்தது உண்மை. ஆனால், அது யாருக்கான கலை? கோவிலுக்குள் எல்லா ஜாதி மக்களும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா? யாருக்காக அத்தனை பெரிய கட்டடம்? யார் தொழ, யார் ஆசி பெற இந்தக் கோவில்? கோவிலுக்குள் இருக்கும் இறைவன் எனக்குள் இருக்க மாட்டானா என்ன?

- பிரபஞ்சன்,

நன்றி: ஆனந்தவிகடன், 4-.12.2013

தமிழ் ஓவியா said...

அய்யர் மலையில் ஆரியம்’


பார்ப்பான்
இன்னமும் பல்லக்கில்
பாழும் தமிழனின்
தோள்களில் அய்யர் - மலை ஏற்றம்.?!

கோவிலுக்குள்
அழுக்குப் பிசுக்கின்
அலாதி நாற்றம்.
சமாளிக்க
சாம்பிராணியும்
ஊதுபத்தியும்
தெய்வீக மணம்.?!

ஓயாமல் உச்சரிக்கப்பட்ட
சமக்கிருத மந்திரங்களில்
ஓரிடத்தில் தவறு!
உச்சரித்தவர்களுக்கு மட்டுமே
அது புரிகிறது;
அவர்களின் அசட்டுச் சிரிப்பில்
நமக்கும்!

ஒரு வார்த்தை கூட
புரியவில்லை
பூசையில் சமக்கிருதம்...
முடிந்ததும்,
உணவு வருகிறது...
பாழும் வயிற்றுக்குக் கூட
புரிந்துவிடுகிறது.

பக்திப்பெருக்கில்
பக்தனுக்கு
கண்ணீர் வடிகிறது.
ஓமப் புகையின் உதவியோடு?

பால், தயிர், மோர்,
பேரிச்சம்பழம்,
எலுமிச்சைச் சாறு,
சந்தனம், திராட்சைச் சாறு
இன்னும் சில...

அண்டாக்களில்
நிறைந்து கிடக்கிறது
கருங்கல்லின்மீது சொரியப்பட!

ஈசன் கோவில் பூசையில்
சமக்கிருத மந்திரம்
இங்கு தமிழிலும்
அர்ச்சனை செய்யப்படும்
என்ற பலகையின் சாட்சியுடன்.

கோவிலின் உள்பிரகாரத்தில் ஆங்காங்கே எடிசனின் அறிவு பளிச்சிடுகிறது.
ஆகம விதிகளிலும்
அறிவியலின் ஊடுருவல்!

- உடுமலை வடிவேல்

தமிழ் ஓவியா said...

வலிப்பு வந்தால் கையில் சாவி கொடுக்கலாமா?

- டாக்டர் கனகசபை
சென்னை, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைத் தலைவர்

மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்துப் பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது. குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வர வாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது.

வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியைக் கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியைக் கொடுக்கின்றனர்.

வலிப்பு நோய்க்கு சாவி கொடுப்பதன் மூலம் எவ்விதப் பயனும் இல்லை. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

வலிப்பு வந்தவுடன், அவரை உடனடியாக இடது பக்கம் திரும்பிப் படுக்க வைக்க வேண்டும். அவர் பற்களைக் கடித்துக் கொள்ளாமல் பாதுகாக்க ரப்பர் பந்துகளை வாயில் வைக்க வேண்டும். கட்டையை வாயில் வைத்தால், பற்கள் உடைந்துவிடும்.

அதன்பின், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதலில் அடிக்கடி வரும் வலிப்பு நோய் குறையும். அதன்பின், வலிப்பு நோய் முழுவதுமாக குணமடையும்.

வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது.

தமிழ் ஓவியா said...

கொலை வழக்கில் ஜோதிட சாமியார்


வக்கிர எண்ணமும், குற்றச்செயல்களின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணமும் சில மனிதர்களுக்கு ஏற்படுவது பழங்கதைதான். ஆனால், அதற்கு அவர்கள் போட்டுக் கொள்ளும் முகமூடிகளாக மதமும், கடவுள் பக்தியும், ஜோதிடமும் இருப்பதுதான் இந்தியாவின் சிறப்பம்சம்.

வடநாடு தொடங்கி தென்னகம் வரை சாமியார்கள் செய்யும் அட்டகாசங்களும் அநியாயங்களும் தொடர்கதைகளாகி வருகின்றன. கடவுள் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் மக்கள் இவர்களின் பிடிக்குள் சிக்கி மானத்தையும், பொருளையும், அறிவையும் இழப்பதோடு மட்டுமல்லாமல் உயிரையும் இழப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

மீண்டும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. திருச்சியில் பிரபல ஜோதிடராக வலம் வந்த ஒரு சாமியார் கொலை செய்யும் அளவுக்குப் போயுள்ளார்.

அந்தச் சாமியாரின் பெயர் கண்ணன். சிறீரங்கத்தைச் சேர்ந்தவர். 9ஆம் வகுப்புவரை படித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் ஒரு சாமியாரிடம் மந்திரம் என்ற பெயரில் ஏமாற்று வித்தைகளைக் கற்றுக் கொண்டுள்ளார். அப்போது, கண் அசைவிலேயே தான் நினைக்கும் செயலினை மற்றவர்களின் மூளையை இயங்கச் செய்து செயலாற்ற வைக்கும் நோக்கு வர்மக் கலையிலும் தேர்ச்சி பெற்றாராம்(?). பின்னர், அங்கிருந்து திருச்சிக்கு வந்து ஜோதிடத்தையும் சாமியார் தொழிலையும் செய்து வந்துள்ளார். அப்போது, திருச்சி திருவானைக்காவைச் சேர்ந்த வைர வியாபாரி தங்கவேல், தொழிலில் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபட மனைவி யமுனாவுடன் சாமியார் கண்ணனிடம் சென்றுள்ளார். பரிகாரம் என்ற பெயரில் அடிக்கடி வந்து சென்றதில் யமுனாவுக்கும் சாமியாருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தங்கவேல் கண்டித்ததால் அவரைக் கொலை செய்துள்ளனர். அடுத்து, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் யமுனாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்த துரைராஜ் என்பவரைக் கொலை செய்ததுடன் அவரது ஓட்டுனர் சக்திவேலையும் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்ணன் கூறியுள்ளார். மேலும், யமுனாவின் மகனுக்கும் மகளுக்கும் இவர்களது அந்தரங்கம் தெரியவர அவர்களது கதையையும் முடித்துள்ளனர். பெற்ற பிள்ளைகளையே கொல்வதற்கு உடந்தையாக இருந்து வேடிக்கை பார்த்துள்ளார் யமுனா.

இப்போது சாமியார் கண்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலை செய்துவிட்டு எவரும் தப்பமுடியாது என்கிற நிலையை நமது காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. அந்த நம்பிக்கை இன்னும் மக்களிடம் இருக்கிறதுதான். ஆனால், குற்றம் நடந்து முடிந்தவுடன் குற்றவாளிகளைப் பிடிப்பது என்பது மட்டும் போதுமானதா? குற்றத்தை நடக்கவிடாமல் தடுக்க முன் முயற்சிகளை காவல்துறை எடுக்க வேண்டாமா? பொதுவாக சமூக விரோதிகளைக் கண்காணிக்கும் பணியைக் காவல்துறை தொடர்ந்து செய்துவருகிறது. அதுபோல ஜோதிடம், மாந்திரீகம், பில்லி, சூனியம் செய்யும் சாமியார்களையும் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை இந்த திருச்சி சம்பவம் உணர்த்திவிட்டது.

சாமியார் கண்ணனைப் பிடிக்க வேண்டிய காவல்துறை, அவரிடமே குறி கேட்கும் மூடத்தனத்தையும் செய்துள்ளதுதான் வேடிக்கையின் உச்சகட்டம்.

மதச்சார்பின்மையின் மீது அமைக்கப்பட்டுள்ள நமது அரசியல் சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய காவல்துறையினர், தமது மத நம்பிக்கைகளை பணியிடங்களில் திணிக்கும் சட்டமீறலைச் செய்கின்றனர். காவல் நிலையங்களிலேயே கடவுளர் படங்களை மாட்டிவைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் சரஸ்வதி -ஆயுத பூஜைகளைக் கொண்டாடினால், அதே மத நம்பிக்கையின் மூலம் தொழில் நடத்தும் திருச்சி கண்ணனைப் போன்றோர் அதனைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்களா? காவல்துறையினரையும் தமது பக்திப் பிரசங்கங்களின் மூலம் ஏய்த்துவிடலாம் என்று கருதுவதால்தான் இத்தகைய சாமியார்கள் எளிதில் தமது குற்றச்செயல்களை அரங்கேற்றுகின்றனர்.
சாமியார்கள் கடவுளின் தூதுவர்கள் என்று கருதும் காவல்துறையினர் இவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவுதான் இத்தனைக் கொலைகளும் நடக்குமளவுக்குச் சென்றுவிட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது சாமியார்களைக் கண்காணிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்குத் துணை செய்யும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை தமிழக அரசு விரைந்து இயற்றவேண்டிய சரியான தருணம் இதுதான்.

- சமன்

தமிழ் ஓவியா said...


சங்கராபுரம் ஆஞ்சநேயன் எங்கே போனான்?


சங்கராபுரம், டிச.15-சங்கரா புரத்தை அடுத்த காட்டு வண்ணஞ்சூ ரில் புதிதாக ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. கடந்த சில நாட் களுக்கு முன்பு இந்த கோவில் குட முழுக்கு நடந்தது. நேற்று இரவு பூசாரி வெங்கடேசன் வழக்கம்போல் பூஜை கள் செய்தார். பிறகு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இரவில் அடையாள தெரியாத மனிதர்கள் அந்த கோவில் வளாக சுவர் ஏறி குதித்தனர். கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். சில நாட்களுக்கு முன்பு குடமுழுக்கு நடந்திருந்ததால் உண்டியலில் பக்தர் கள் ஏராளமாக காணிக்கை செலுத்தி யிருந்தனர். அந்த பணத்தை கொள் ளையர்கள் அள்ளி மூட்டை போட்டு கொண்டு தப்பி சென்று விட்டனர்.

நேற்று (14.12.2013) காலையில் கோவிலை திறக்க பூஜாரி வெங்கடே சன் வந்தார். கோவிலை திறந்து உள்ளே சென்றபோது உண்டியலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப் பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த் தனர். இதனால் அந்த பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி சங்கராபுரம் காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டது. உடனே ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவல் நிலையத்தில் தடய வியல் நிபுணருடன் கோவிலுக்கு விரைந்து சென்றனர்.

ஆஞ்சநேயர் கோவிலில் பதிவாகி யிருந்த ரேகைகள் மற்றும் தடயங் களை சேகரித்தனர். துணிகர கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72080.html#ixzz2nayHMSjl

தமிழ் ஓவியா said...


நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. பலமான அணியாக இருக்கும் நெஞ்சுக்கு நீதி புத்தகம் வெளியீட்டு விழாவில் கலைஞர்


சென்னை, டிச.15- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. பலமான அணியாக இருக்கும் என்றும், கூட்டணி குறித்து பொதுக்குழுவில் விவாதிப்போம் என்றும் நெஞ்சுக்கு நீதி புத்தக வெளியீட்டு விழா வில் கலைஞர் உரையாற்றினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி (6 ஆவது பாகம்) புத்தக வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு, தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமை தாங்கினார்.

புத்தகத்தை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் வெளி யிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். நிறைவாக தி.மு.க. தலைவர் கலைஞர் ஏற்புரையாற் றினார். அப்போது அவர் உரையாற்றியதாவது:-

நெஞ்சுக்கு நீதி புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் அன்பழகன் கலந்துகொண்டது சந் தோஷமாக உள்ளது. அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவாரோ?, வரமாட்டாரோ? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. தற்போது, சந்தோஷமாக இருக்கிறது.

துன்பங்கள் என்னையும், தி.மு.க.வையும் தொட்ட போது, கவிஞர் வைரமுத்து நம்மோடு இருப்பாரா? என்று பலரும் கேட்டதுண்டு. அவர்களிடம் நிச்சயம் இருப்பார் என்று கூறினேன். பொதுவாக இந்த இயக்கத்தில் இருந்து கவிஞர்கள் காணாமல் போய்விடுவதுண்டு. அப்படி போனவர்கள் திரும்பி வந்ததும் உண்டு.

நான் பிறந்த 1924 ஆம் ஆண்டு முதல் 1969 வரை நெஞ்சுக்கு நீதி முதல் பாகமும், 1969 முதல் 1976 ஆம் ஆண்டு வரை நடந்த நிகழ்வுகளை 2 ஆம் பாகமாகவும் தொகுத்துள்ளேன்.

1976 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப் பட்டது. இலங்கை தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தோம் என்று காரணம் காட்டி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதேபோல், சந்திரசேகர் பிரத மராக இருந்தபோதும் விடுதலைப் புலிகளுக்கு தி.மு.க. அரசு உதவியதாக கூறி, தி.மு.க. ஆட்சி கலைக் கப்பட்டது.

அப்போது, தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று தூண்டிவிட்டவர் யார் என்பதை நான் சொல்ல தேவையில்லை. ஆளுநரின் கருத்து கேட் காமலேயே ஆட்சி அப்போது கலைக்கப்பட்டது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இலங்கை தமிழர் பிரச்சினையில் நாங்கள் எதையும் செய்யவில்லை என்று இங்கே சில பேர் சொல் கிறார்களே, அவர்களுக்காகத்தான் இதை சொல் கிறேன்.

நெஞ்சுக்கு நீதி 6 ஆம் பாகமாக வந்துள்ளது. 7 ஆவது பாகம் உண்டா என்பது எனக்கு தெரியாது. இயற்கைக்குத்தான் தெரியும். இயற்கை வழி கொடுத்தால் 8, 9 ஆம் பாகம் கூட வெளிவரும்.

நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டபோதெல்லாம் சட்டசபைக்குப் போய் வந்துள்ளேன். ஆனால், கடந்த ஓரிரு ஆண்டு காலமாகத்தான் நடக்க முடியாத காரணத்தால், சட்டசபையில் எனக்கு இடவசதி செய்து கொடுக் காததால் என்னால் சட்டசபைக்குச் செல்லமுடிய வில்லை.

இருப்பினும் மக்கள் தொண்டு ஆற்றிவருகிறேன். இந்தத் தொண்டு தொடரும். சட்டசபைக்குச் சென்று பேசினால் குண்டு கட்டாக தூக்கிப்போடக் கூடிய நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல, கழகத் தோழர்கள் இதன் மூலம் கொதிப்பும், வேதனையும் அடைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

தமிழகத்தில் அரசியல் நாகரிகம் எப்படி இருக்கிறது என்பதை கோபாலபுரம் வந்து பார்த்தால் உங்களுக்கு தெரியும். அங்குள்ள விளம்பரப் பதாகைகளை நீங்கள் பார்த்து அரசியல் நாகரிகத்தை தெரிந்துகொள்ளலாம்.

நாங்கள் மக்களைப் பற்றி கவலைப்படுகிறோம். ஆனால், நீ யார் கவலைப்பட என்று கேட்கிறார்கள். ஆனால், மக்கள் பணி ஆற்றுவதில் எங்களை பிரித்து விட முடியாது. ஒரு சமுதாய இயக்கமாக உருவாகி, அரசியல் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது. அரசியல் இயக்கம் என்று சொல்லும் போதே நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி, யாருடன் சேர்வீர்கள் என்ற கேள்விகளும் கேட்கத் தோன்றும்.

யாருடன் சேர வேண்டும், யாருடன் சேரக் கூடாது என்பதை கடந்த கால நிகழ்வை சிந்தித்து பார்த்து பொதுக்குழுவில் விவாதிப்போம். பொதுக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை 21 ஆம் தேதி முதல் மாவட்டத் தலைநகரங்களில் கூட்டம் நடத்தி மக்கள் மத்தியில் விளக்கி பேச வேண்டும். யாருடன் கூட்டு என்று கேட்பவர்களுக்கு அணி உண்டு, எந்த அணி என்று இப்போது சொன்னால் பிணியாகிவிடும். ஆனால், தி.மு.க. பலமான அணியாக இருக்கும்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-5/72087.html#ixzz2naz09lQd

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மூடநம்பிக்கை உச்சத்துக்குப் போகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி எச்சரிக்கை


திருப்பூர், டிச.15- இந் துத்துவ மதவெறி அடிப் படையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் மூடநம்பிக்கை உச்சத்துக்குப் போகும் என்று திருப்பூரில் நடை பெற்ற மக்கள் கோரிக்கை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத் தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.

திருப்பூர் அரிசிக் கடை வீதியில் நடை பெற்ற மாநாட்டில் உ.வாசுகி பேசியதாவது:

உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் இந்திய நாட்டு மக்களுக்கு எதிரானது

உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் இந்தியா உணவு மானி யத்தைக் குறைக்க வேண் டும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் நிர்ப்பந் தித்துள்ளது. அமெரிக் காவில் விவசாயிகளுக்கு 385 கிலோ மானியம் வழங்கும் அந்த நாட்டு அரசு இந்தியாவில் 60 கிலோ மானியம் வழங் குவதை அநியாயம் என்று அதை வெட்டச் சொல்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடு கள் எதிர்ப்புத் தெரி வித்த அடிப்படையில் இந்த உத்தரவை நான் காண்டு காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர். உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் உருவான போதே அது இந்திய நாட்டு மக்களுக்கு எதி ரானது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது.

நரேந்திர மோடி அலை என்ற தில்லுமுல்லு மோசடிகளை....

நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுவ தாகச் சொல்கிறார்கள். ஆனால் டில்லியில் அவ ரது அலையால் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை ஏன்? கடலில் அலை வரும் போகும், ஆனால் கரை பலமாக இருந்தால் எந்த அலையாலும் அதை உடைக்க முடியாது. நரேந்திர மோடி அலை என்ற தில்லுமுல்லு மோசடிகளை, மக்கள் ஒற்றுமை என்ற வலு வான கரையைக் கொண்டு தடுத்து நிறுத்த முடியும்.

நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக் கிறார். ஆனால் காங் கிரஸ் கட்சியின் கொள் கைகளை அவர் விமர் சிப்பது கிடையாது. டில்லியில் இளம்பெண் பாலியல் வன்கொடு மைக்கு ஆளான சம் பவம் நடந்தபோது, சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்களைப் பார்த்து சகோதரனே என்று கெஞ்சியிருந்தால், சரஸ்வதி மந்திரம் உச் சரித்திருந்தால் தப்பி யிருக்கலாம் என்று ஆசாராம் பாபு என்ற சாமியார் சொன்னார்.

சரஸ்வதி மந்திரம் பலிக்கவில்லை போலும்!

ஆனால் அவரது ஆசி ரமத்தில் வேலை செய்த இளம் பெண்களையே அவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கி இப்போது சிறையில் இருக்கிறார். அங்கெல் லாம் சரஸ்வதி மந்திரம் பலிக்கவில்லை போலும். மேலும் இந்த சாமியா ருக்கு பாதுகாப்பாக குரல் கொடுத்தது யார் தெரியுமா? பாஜகவுக்கு நெருக்கமான இந்துத் துவ அமைப்பான விசுவ இந்து பரிஷத் தலை வர்கள் தான் ஆசாராம் பாபுக்கு ஆதரவாக இருந்தனர்.

எனவே பெண் களுக்கு எதிரானவர்கள் இவர்கள். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மூட நம்பிக்கை உச்சத்துக்குப் போகும். - இவ்வாறு உ. வாசுகி உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-8/72084.html#ixzz2nb0EfJ9e