Search This Blog

4.11.11

பார்ப்பனர்களின் ஆலகால விஷம்? துவேஷப் புத்தி?



திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: குழந்தைகள் நல மருத்துவமனை கட்ட, சென்னையில் இடங்களா இல்லை? நூலகத்துக்கென வடிவமைக்கப்பட்டதை, மருத்துவமனையாக மாற்றுவதற்கு, மக்களின் வரிப்பணம், பல கோடி செலவாகத்தானே செய்யும்? அது எவ்வகை யில் ஏற்கக் கூடிய ஒன்று?

டவுட் தனபாலு: ஏன்... பிரதமருக்கு படம் காட்டுறதுக்காக, புதிய தலைமைச் செயலகத்துல மூணு கோடி ரூபாய் செலவுல, செட்டிங் டூம் போட்டாங்களே... அதுக்கு செலவானதும் மக்கள் வரிப்பணம்தானே... அதை ஏத்துக்கும்போது, இதை ஏத்துக்க மாட் டீங்களா...?

- (தினமலர் 4.11.2011)

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்பார்களே - அந்தப் பழ மொழி இந்த முடிச்சவிழ்க்கிகளுக்குத் தான் பொருந்தும். தமிழ்மொழி செம் மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா என்று எழுதிய சோற்றுத் துருத்திக் கூட்டமான தினமலர் வகையறாக்கள் இப்படித் தானே எழுதும்?

பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை கலைஞர் திறந்தார் என்றால் துக்ளக்கும் தினமலரும் தங்கள் நல்லபாம்பு நாக்கை நீட்டிக் கொத்தவில்லையா?

பாரதிதாசன் செம்மொழி நூலகத்தின் கெதி என்ன? கோணிப்பைக்குள் முடங்கிக் கிடக்கிறதே நூல்கள்!

சென்னை காமராசர் கடற்கரைசாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் செம்மொழி அலுவலகம் இயங்கும் என்று கலைஞர் ஆட்சியில் ஒரு தகவல் (ஆணையல்ல) கசிந்த நேரத்தில் இதே தினமலர்களும் துக்ளக்குகளும்! எப்படியெல்லாம் சுவர் ஏறிக் குதித்தன? பூணூல் சண்டியாகம் நடத்தின? சத்துரு சம்ஹார யாகங்கள் செய்தன?

அதே அளவுகோல் இப்பொழுது எங்கே போயிற்று?

விவேகானந்தர் பெயரில் இருந்தால் அது மாற்றப்படக் கூடாது! அண்ணா பெயரில் அமைந்திருந்தால் அது எங்கோயாவது போய்த் தொலையட்டும் என்பதுதானே பார்ப்பனர்களின் ஆலகால விஷம்? துவேஷப் புத்தி?

அதுவும் அண்ணா பெயரில் கட்சியையும், ஆட் சியையும் நடத்துபவர்களைக் கொண்டே பார்ப் பன வட்டாரம் சாதித்துக் கொள்கிறது என்கிற போது, அவாளின் பாட்டும் - பரதமும் அவாள் மொழியில் வைகுந்தத்துக்கும் சிவலோகத்துக்கு மாக அல்லவா தாவிக் குதித்து அட்டகாசமாக நடக்கிறது.

நரகாசுரன் வதம் (தீபாவளி) நடந்து முடிந்த கையோடு இப்பொழுது திராவிட வதம் அரங்கேறுகிறது. அய்யாவின் சீடர் அறிஞர் அண்ணா தானே ஆரியர்கள் செய்த வதங்களையெல்லாம் பட்டியலிட்டு அடுக்கிக் காட்டினார்?

இப்பொழுது அதனைத் திருப்பிப் போட்டு அண்ணாவதம் நடத்திக் காட்டுகிறார்கள். திராவிடர்கள் தீ ஜ்வாலையாய் எழ வேண்டிய காலம் இது - ஆம், இதுவே!

------------மயிலாடன் அவர்கள் 4-11-2011 ‘விடுதலை” யில் எழுதிய கட்டுரை

8 comments:

தமிழ் ஓவியா said...

ஒன்றும் தெரியாத பாப்பா(ன்)

தினமும் இந்த நூலகத்துக்கு எவ்வளவு பேர் வருகிறார்கள் என் பதும், இந்த நூலகம் மக்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதும் எனக்குத் தெரியாது. நான் அந்த நூலகத்திற் குள் சென்று பார்த்த தில்லை. அந்தக் கட்ட டத்தை வெளியே இருந் துதான் பார்த்திருக் கிறேன். இது பற்றி அரசு எடுத்துள்ள முடிவு பற்றி கருத்து சொல்லும் நிலை யில் நான் இல்லை.

-இப்படி சொல்லி இருப்பவர் பார்ப்பன விதூடகர் திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாள்தான்.

இவர் தமிழ்நாட்டில்தானே இருக்கிறார்? அறிவு ஜீவி என்று பார்ப்பன வட்டாரம் தம்பட்டம் அடிக்கும் இந்தப் பார்ப்பனர் இந்த நூலகத்திற்குள் சென்றதே கிடையாதாம்.
அவர் எப்படி போவார்? அண்ணா பெயரில் அல்லவா அது இருக்கிறது?

எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத மர்ம அறைக்குள்ளா இவர் பதுங்கிக் கிடக்கிறார்?

அரசு எடுத்துள்ள முடிவு பற்றி கருத்து சொல்லும் நிலையில் அவர் இல்லையாம்! அது என்ன நிலை? மோன நிலையா?மோகன நிலையா? மயக்க நிலையா?

ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அவாள் காரியத்தை அவாள் விட்டுக் கொடுக்க மாட்டாளே!
---"விடுதலை" 4-11-2011

தமிழ் ஓவியா said...

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்கூடாது! தமிழ் எழுத்தாளர்கள் கருத்து!


இதுகுறித்து சாகித்ய அகாடெமி விருது பெற்றவர்கள், மூத்த எழுத்தாளர் கள், பத்திரிக்கையாளர்கள், தமிழறிஞர் கள் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட் டறிக்கையில் கூறியிருப் பதாவது:- அண்ணா நூற்றாண்டு நூலகம் இடம் மாற்றப்பட்டு, குழந்தைகள் நல மருத்துவ மனையாக்கப்போவதாக தமிழக முதல்வர் அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவ மனை அமைப்பது குறித்து மகிழ்ச்சி அடையும் அதேநேரத்தில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவதை கை விட்டு, அதே இடத்தில் சிறப்பாக இயங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி யுள்ளனர்.

எழுத்தாளர்களின் கையெழுத்து

இந்த அறிக்கையில் ச.கந்தசாமி, அசோகமித்திரன், பொன்னீலன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், பிர பஞ்சன், சிற்பி பாலசுப்பிரமணியம், எஸ்.ராமகிருஷ்ணன், ஞானி, ச.தமிழ் செல்வன், மேலாண்மை பொன்னுசாமி ஆ.சிவசுப்பிரமணியன், வாசந்தி, இரா.நடராசன், மனுஷ்யபுத்திரன், கீரனூர் ஜாகிர் ராஜா, சு.வெங்கடேசன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றுவது என்ற அரசின் முடிவு சமுதாய வளர்ச்சியில் நூலகங்களின் தலையாய பங்கு குறித்து அக்கறை கொண்ட அனை வருக்கும் அதிர்ச்சியையும், வேதனை யையும் தருகிறது. வேறொரு பொருத்த மான இடத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை அமைக்க லாம். அரசு தனது முடிவைக் கைவிட்டு நூலகம் சிறப்பாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கவிஞர்கள் கூட்டறிக்கை கவிஞர்கள் அப்துல்ரகுமான், வைர முத்து, ஈரோடு தமிழன்பன், இன்குலாப், மு.மேத்தா, கல்யாண்ஜி, அறிவுமதி, கலாப்பிரியா, தமிழச்சிதங்கப்பாண்டி யன், ம.முத்தையா, இந்திரன், தணிகைச் செல்வன், பா.விஜய், பழனிபாரதி, தாமரை, கபிலன், யுகபாரதி, விவேகா ஆகிய கவிஞர்கள் கூட்டாக வெளி யிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப் பதாவது:-

`அண்ணா நூற்றாண்டு நூலகம், நூலகத்திற்கென்றே வடிவமைக்கப் பட்டதாகும். ஆயிரக்கணக்கான வாசகர் களின் பயன்பாட்டில் உள்ளதுமாகும். மேலும் ஆசியாவின் பெரிய நூலகங் களுள் ஒன்று என்ற பெருமை பெற்றதாகும்.

அண்ணா நூற்றாண்டின் அடை யாளமாகத்திகழ்கிற நூலகத்தை இடம் மாற்றுவதைப் பொதுமக்கள் பலரும் விரும்பவில்லை. மேலும் பெரிய நூலகத் தை சிறிய இடத்தில் மாற்றியமைப்பது சமுத்திரத்தை சங்குக்குள் அடைக்கும் முயற்சியாகும்.

`குழந்தைகள் உயர் நல மருத்துவ மனை' என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் மருத்துவமனையைக் கருத்தில் கொண்டே அதை வடிவமைப்பது தான் சாலச்சிறந்தது.

இருக்கும் சிறப்பை சிதைப்பதைவிட இல்லாத சிறப்பை உருவாக்குவது தான் ஒரு சமுதாய முன்னேற்றத்தின் முதற் படியாகும்.

ஆகவே அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றாமல் குழந் தைகள் உயர் நல மருத்துவமனையை புதிதாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் இரா.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:- அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனை யாக மாற்றாமல் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
அறிவுசார் பூங்கா அமையக்கூடிய இடத்தில் தான் நூலகம் இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வ திற்கில்லை. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் இதை எதிர்த்து போராட்டத்தில் குதிக்கும்.
- இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
---"விடுதலை” 4-11-2011

தமிழ் ஓவியா said...

சிறப்பாகக் கட்டப்பட்டுள்ள அண்ணா நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

குழந்தைகள் மருத்துவமனையை மெரீனாவில் கட்டுவீர்களா?

நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள்!

இடைக்காலத் தடை!

சென்னையில் வேறு இடமா இல்லை?
தலைமை நீதிபதி வினா

சென்னை கோட்டூர் புரத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அண்ணா நூற்றாண்டையொட்டி கட் டப்பட்ட நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் அதிமுக ஆட்சியின் அமைச் சரவைக் கூட்ட முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இடைக்காலத் தடையை விதித்தது. வழக்கறிஞர் ஆர்.பிரபாகரன் தாக்கல் செய்த மனுவில், அண்ணா பல்கலைக் கழகம், சட்ட பல்கலைக்கழகத்தில் நான் கவுரவ விரிவுரை யாளராக பணியாற்று கிறேன். கோட்டூர்புரத்தில் பிரமாண்ட மான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.172 கோடி செலவில் தெற்கு ஆசியா விலேயே பெரிய அளவில் கட்டப்பட்ட கட்டடம் அது.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அங்கு வந்திருந்த போது,

அதை மிகவும் பாராட்டிப் பேசினார். 8 ஏக்கர் நிலப்பரப்பில் 9 தளம் கொண்ட கட்டடமாக அந்த நூலகம் அமைக்கப் பட்டுள்ளது. அங்கு 12 லட்சம் புத்தகங்கள் உள்ளன. அங்கு ஒரே நேரத்தில் 1,250 பேர் அமர்ந்து படிக்க முடியும். தினமும் 1,300 பேர் வந்து செல்கின்றனர்.

அதிக அளவில் மக்கள் பணத்தை செலவழித்து நூலகத்தை கட்டியுள்ளனர். ஆனால் பொதுமக்கள் கருத்தைக் கேட்காமலேயே நூலகத்தை குழந்தை களுக்கான மருத்துவமனையாக மாற்ற அரசு தனிச்சையாக முடிவு செய்துள்ளது. எனவே அரசின் செயல்பாடு, மக்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்துவது போல் உள்ளது.

கோட்டூர்புரம் பகுதியில் பல கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. அங்கு படிக்கும் மாணவர் களுக்கு இந்த நூலகம் மிகுந்த பயனுடையதாக உள்ளது. குழந்தை களுக்கான சிறப்பு சிகிச்சை முறைகளை, அவர்களுக்கென்று ஏற்கெனவே அமைக் கப்பட்டுள்ள மருத்துவமனையை விரிவாக் கம் செய்து கொடுக்கலாம்.

இந்த நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு கடந்த 2ஆம் தேதி தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதை நீதிமன்றம் விசாரிக்க முடியும். நூலகத்தை அமைப்பதற்காகப் பெறப்பட்ட நிபுணர் களின் கருத்து புறக்கணிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தை மாற்றுவதற்கு அரசு எடுத்த முடிவில் உள்நோக்கம் இருப்பதால், நீதிமன்றம் தலையிட்டு கேள்வி எழுப்ப முடியும். எனவே அமைச்சரவை முடிவை ரத்து செய்ய வேண்டும். அந்த நூலக நிருவாகத்தை கண்காணிக்க தனி குழுவை அமைக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

இதுபோன்ற வழக்கறிஞர் பி.புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில், ''அண்ணா நூற்றாண்டு நூலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற அரசுக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இடைக் காலத் தடை!

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவ ஞானம் ஆகியோர் முன்பு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடைவிதித்த நீதிபதி கள், நூலகத்தை மாற்றுவது தொடர்பாக 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குத் தாக்கீது அனுப்பினர்.
மிகச் சிறப்பாகக் கட்டப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட நூலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?
குழந்தைகள் மருத்துவமனையை மெரீனா கடற்கரையில் கட்டுவீர்களா? மருத்துவமனை கட்ட வேறு இடமே இல்லையா? என்று வினா எழுப்பினர் நீதிபதிகள்.

-----”விடுதலை” 4-11-2011

தமிழ் ஓவியா said...

தினமணியின் பார்வையில்....


ரொம்ப ஓவர்தான்!

நூலகம் கட்டி முடிக்கப் பட்டு பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக் காகக் கட்டப் பட்ட அமைப்பை மருத்துவ மனையாக மாற்று வது என்பது - நமது இளை ஞர்களின் பாஷையில் சொல் வதாக இருந்தால், ரொம்ப ஓவர்!

(நன்றி: தினமணி தலையங்கம் 4.11.2011)

தமிழ் ஓவியா said...

அண்ணா நூலகத்தை மாற்றுவதா? தலைவர்கள், அமைப்புகள் கண்டனம்!


தி.மு.க. தலைவர் கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆசியாவி லேயே மிகப் பெரிய நூலகமான பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஜெயலலிதா அரசு அகற்றும் முடி வினைத் தமிழகம் தழுவிய அளவில் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வந்து பார்வையிட்டு, அங்கே உரையாற்றுகிறபோது, இந்த நூலகத்தைப் பாராட்டிச் சொன்னார். ஆசிய கண்டத்திலேயே சிறந்த நூலகமாக இது அமைந் திருக்கின்றது. முந்தைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆட்சியிலே இது அமைக் கப்பட்டது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக, இந்த நூலகத்தை அங்கேயிருந்து அகற்ற முயற்சிப்பது - அகற்ற முடிவெடுத்திருப்பது தான் தோன்றித்தனமான முடிவாகும். இது ஒரு துக்ளக் தர்பார் என்பதற்கு இதைத் தவிர வேறு எந்த உதாரணமும் சொல்ல முடியாது. இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

சென்னை கோட்டூர் புரத்தில் அமைக்கப்பட் டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் விரைவில் மருத்துவமனையாக மாற்றப்படும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பு, தமிழர்களின் நெஞ்சங் களில் அதிர்ச்சி நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறது.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமாக வும், நவீன வசதிகள் அனைத்தையும் கொண்டு அறிவுத் தாகத்தைத் தீர்க்கும் அரங்கமாகவும் எழுந்து நிற்கும் அதனை, எந்த நியாயமான காரணமும் இன்றி இடம் மாற்றுவது ஏற்கத்தக்கதன்று. இடமாற்றம் என்பதுகூட இப்போதைக்குச் சொல் லப்படும் ஒரு சமாதான மாகவே தெரிகிறது.

கலைஞரால் உருவாக்கப்பட்டது என்னும் ஒரே காரணத்திற்காக, அதனை இழுத்து மூடிவிட வேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு இருக்கக் கூடும். ஏற்கனவே கோட்டையில் இருந்து அகற்றப் பட்ட புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்திருந்த செம்மொழி ஆய்வு நூலகத்தின் நூல்கள் எல்லாம் என்ன ஆயின என்று யாருக்கும் தெரியவில்லை.

தமிழ் இனத்தை அறிவார்ந்த கல்வித் துறையில் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு திராவிட இயக்கம் தொடங்கப்பட்டது. இப்போது இந்த நூலகம் முடக்கப்படுவது அந்த நோக்கத்தையே சிதைக்கும் முதல் படியாக உள்ளது.

ஒவ்வொரு துறை சார்ந்த கட்டிடத்திற்கும் ஒவ் வொரு விதமான உள் கட்டமைப்பு உள்ளது. திடீரென்று ஒரு மருத்துவமனையைத் தொடர் வண்டி நிலையமா கவோ, ஒரு பள்ளிக்கூடத்தை பேருந்து நிலைய மாகவோ மாற்றிவிட முடியாது. அப்படி மாற்ற முயல்வதால் கட்டிட ஒழுங்கின் மையும், தேவை யற்ற பொருட்செலவுமே ஏற்படும். இவை குறித்தெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், செம்மொழி, கலைஞர் போன்ற பெயர்களே இல்லாமல் ஆக்கி விட வேண்டும் என்னும் நோக்கில் செயல்படுவது ஓர் அரசின் கொடூர முகத்தையே காட்டுகின்றது.

1981ஆம் ஆண்டு யாழ்ப் பாணத்தில் மாபெரும் நூலகம் ஒன்று சிங்களர்களால் கொளுத்தப்பட்டது. இதோ தமிழகத்தின் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெய லலிதா அரசால் சிதைக்கப் படுகிறது. இதனைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மை யாகக் கண்டிப்ப துடன், இச் செயலை எதிர்த்துப் போராடத் தன் மானமுள்ள தமிழர்களையும், அறிவாளர்களையும் பேரவை அறைகூவி அழைக்கின்றது.

இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அறிக்கையில் கூறியுள்ளார்.

குமரி அனந்தன்

மருத்துவமனைக்கு - மருந்து கொடுப்பதற்கு வேறு இடங்கள் தேடலாம் - கிடைக்கும். ஆனால், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் அதற் கென்றே கட்டப்பட்டுள் ளது. உடல் ஊனமுற்றவர் களும் அவர்களாகவே சென்று படிக்கின்ற அள விற்கு கட்டி, நூலகத்திற் கென்றே கட்டி முடித்திருக் கின்ற அதுவும் அண்ணாவினுடைய நூற்றாண்டு விழாவினையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்ற அந்த நூலகத்தை அதே நிலையிலே, இன்றும் மேம்படுத்துவதற்கு இன்றைய முதல்வர் சிந்திக்க வேண்டுமே தவிர, அதனை வேறு எதற்கும் பயன்படுத்து வது சரியென்று தோன்றவில்லை. மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் கூறினார்.

தமிழ் ஓவியா said...

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

தமிழ்நாட்டில் கலைஞர் செய்த நல்ல செயற்பாடு களை எல்லாம் சீரழித்து, அல்லாத அலங்கோலங் களைச் செய்யும் சர்வாதிகாரக் கடுங்கோல் ஆட்சியாக ஜெயா ஆட்சி உள்ளது.

ஆட்சிக்கு வந்து ஒரு சில திங்களுக்குள் அனைத்துத் துறையிலும் சரிவை ஏற்படுத்தியுள்ள இன்றையத் தமிழக அரசு, கலைஞர் செய்த செயற்கரிய வெற்றிச் சின்னங்களையெல்லாம் அழிக்கும் - அழிவுப் பாதையில் செல்வதைத் தன் மானமிக்க தமிழர் கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆசியாவிலேயே சிறந்த நூலகம் கோட்டூர் புரம் நூலகம், பல லட்சம் நூல்களுக்குமேல் பல் துறை நூல்களும்இடம் பெற்றிருந்த நூலகம், அனைத்து அறிஞர்கள், மாணவர்கள் ஆய்வாளர்களுக்கும் ஒப்பிலாப் பயனளித்த தலைசிறந்த கலைக்கூட நூலகம்.

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா நூலகமாகக் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட நூலகம் ஒப்பரிய அறிஞர் அண்ணா நூலகத்தை மூடுவது அறிஞர் அண்ணாவை அவமதிப்ப தாகும்.

செயற்கரிய செய்யும் ஆற்றல் இல்லாத இன்றைய தமிழ் நாட்டின் அரசு இருக்கும் நல்லதையும் கலைஞர் மீது கொண்ட பொறாமைக் காழ்ப்பால் ஒழித்துக் கட்டுவது நீதியா, நியாயமா?

நல்லது செய்ய ஆற்றீர் ஆயினும் அல்லவை செய் யாது ஓம்புமின் என்ற புறநானூற்றுப்புலவன் கூற்றை நினைவுப்படுத் தினாலும், உணருவார்களா?

சமச்சீர் கல்வியை மறுத்தளிப்பது, உலகமே பாராட் டும் சட்ட பேரவைக் கலைக்கோட்டத்தை மூடுவது, தமிழாண்டை நிராகரிப்பது, போன்ற தமிழர் விரோத நடவடிக்கைகளில் இன்றைய அரசு ஈடு படுவது இவ்வரசு நீடிப்பதற்குக் கேடுவிளை விப்ப தாகவே முடியும்.

அறிவுலகத்தாயான அறிஞர் அண்ணா நூல கத்தை மாற்றும் நடவடிக்கைகளைக் கண்டித்து அனைத்துத் துறை அறிஞர் பெருமக்களும், அனைத்துத் தன்மான மிக்க தமிழ் அமைப்புகளும் போராடுவோம்.

உண்மை அற உணர்வை ஜெயா அரசு எண்ணிப் பார்த்து வாக்களித்த தமிழர்களின் நலன் கருதி, அறிஞர் அண்ணா நூல கத்தை மாற்றும் திட்டத் தைக் கைவிட வேண்டும். - இவ்வாறு பெருங் கவிக்கோ வா.மு.சேது ராமன் தெரிவித்துள்ளார்.
மா.செங்குட்டுவன் (தமிழர் எழுத்தாளர் கழகம்)

தமிழ் உணர்வாளர்களுக்கும் தன்மானத் தமிழர்களுக்கும் சவால் விடுத்தது போல பேரறிஞர் அண்ணா பெயரால் கோட்டூரிலுள்ள நூலகத்தை இடமாற்றம் செய்யப் போவதாக அறிவித் திருக்கிறார், தமிழக முதல்வர் ஜெயலலிதா.

பேரறிஞர் அண்ணா பெயரைக் கட்சியின் பெய ரிலும் அண்ணா படத்தை கட்சியின் கொடியிலும் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது என்றால் இதற்கு என்ன பொருள்?

தலைவர் கலைஞர் மீது கொண்டுள்ள காழ்ப் புணர்ச்சியை அண்ணா மீதுமா காட்டுவது?

அ.தி.மு.க.வுக்கு வாக் களித்து ஆட்சிப் பீடத்தில் ஏற்றி வைத்த தமிழர்கள் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்?

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்த தும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களை யும் செயல்பாடுகளையும் கைவிடவில்லை - மாற்ற வில்லை.

1977 இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் முந் திய கலைஞர் ஆட்சி செய்தவற்றைக் கைவிட வில்லை - மாற்றவில்லை. 1989-ல் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்த தும் முந்தைய எம்.ஜி.ஆர். செய்தவற்றை கை விட வில்லை - மாற்றவில்லை.

ஜெயலலிதா அரசு ஆட்சிக்கு வந்ததும் வராத துமாய் கலைஞர் உருவாக் கிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை பாழடையச் செய்து விட்டார்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனித னையும் கடித்த கதையாக இப்போது ஆசியாவி லேயே பெரிய - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹலாரி கிளிண்டன் அவர்களாலேயே வியந்து பாராட் டப் பெற்ற அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திலும் கை வைக்கத் துணிந்து விட்டார்.

``அறிவு ஜீவிகள் எனப்படும் எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் அறிஞர்களும் ஏனைய பொது மக்களும் ஒருங்கிணைந்து ஒரே குரலாகக் கண் டனக் குரல் எழுப்ப வேண்டாமா?
தமிழ் எழுத்தாளர் கழகம் இந்த எதேச்சதி காரப் போக்கை வன்மை யாகக் கண்டிப்பதுடன் தலைவர் கலைஞர் கூறியபடி தன்மானமுள்ள தமிழர்களும் தமிழறிஞர்களும் ஏனைய தமிழ் அமைப்புகளும் இதனை எதிர்த்துப் போராடுவோம்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
(சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்க நிருவாகி)

ஏற்கனவே செயல் பட்டுக் கொண்டிருக் கின்ற அண்ணா நூற் றாண்டு நூலகத்தில் மருத்துவமனை கொண்டு வருவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. இந்த அரசு எடுத்திருப்பது தவறான முடி வாகும். அதே போல ஏற்கனவே புதிய தலைமைச் செயலகத்தை மாற்றி மருத்துவமனை என்று சொன்னார்கள். அதுவும் சரி - இதுவும் சரி - இவை தவறான முடிவா கும். எங்களுடைய கருத்து இதனை மறு பரி சீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

பழனியப்பன் (கரூர் திருக்குறள் பேரவை)

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமானது, இடமாற்றத்தின் மூலம் முடக்கப்படுகிறது என்ற ஒரு செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகிறது. புதியதாக மருத்துவமனை துவங்குவது என்பது, இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிப்பதற்கு ஒப்பாகும். எனவே இந்தத் திட்டத்தைக் கைவிட்டு, நூலகம் இருக்கிற இடத்தி லேயே செயல்படவும், மருத்துவமனை வேறு இடத்தில் விரிவாக்கத் தோடு துவங்கவும் அரசு முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

இதேபோல் அண்ணா நூலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், புத்தக ஆர்வலர்கள் கூறியதாவது :-

புத்தக ஆர்வலர்கள்

கலைஞர் அவர்கள் செய்த மிகப்பெரிய நல்ல விஷயம் என்னவென்றால், இந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டி நாட்டிற்கு வழங் கியதுதான். இந்த நூலகம் இந்தியாவிலேயே நம்பர் ஒன் என்கிறார்கள்.

அது உண்மைதான். அமெரிக் காவில் இல்லாத புத்தகங்கள்கூட இங்கே இருக் கின்றது என்று அமெரிக்காவில் இருந்து வந்து பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இதைப் போய் ஏன் இந்த அம்மா குழந்தைகள் மருத்துவமனை யாக மாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் எவ்வளவோ இடம் இருக்கிறது. அங் கேயெல்லாம் மாற்றலாம்.

இதை ஏன் மாற்று கிறார்கள்? குழந்தைகள் படிக்க மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதை மாற்றாமல், இதற்கு பதில் வேறு எதையாவது ஆல்டர் நேட்டி வாக செய்யலாம். எது எதற்கோ மக்கள் போராட் டம் நடத்து றாங்க. இதுக்கு யாராவது போராட முன் வந்தால் சந்தோஷமாக இருக்கும் என்ற ஆதங்கத்துடன் குடும்பத் தலைவிஒருவர் கூறினார்.

மாணவர்

நான் இந்த நூலகம் தொடங்கிய காலம் முதல் வந்து கொண்டிருக்கி றேன். இந்தப் புத்தகங் களை எல்லாம் வெளியே எங்கேயும் வாங்க முடியாது. பத்தாயிரம், இருபதாயிரம் என்று விலை மதிப்பில் லாத புத்தகங்கள் எல்லாம் இங்கே இருக்கு. ஏழை எளிய மக்களுக்கு இது ஒரு பெரிய வரப் பிரசாதமாகும். இங்கே நிறைய பேர் படிக்கிறார் கள் என்றார் முதுகலை படிக்கும் மாணவர் ஒருவர்.

ஓய்வு பெற்ற அதிகாரி

அரசு அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் கூறுகையில்,

தமிழகத்தில் இது மாதிரி பார்த்தது கிடை யாது. இந்தக் கட்டடத்தை ஆத்மார்த்தமாகக் கட்டி யிருக்கிறார் கலைஞர். நான் இந்த வயதிலும் இங்கே படிக்க வருவதே இதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இது ஒரு தெய்வம் இருக்கும் இடமாகவும் கோவிலாகவும் இருக்கிறது. புத்தகம் இருக்கும் இடம் கோவில் இருப்பதைப் போன்றதா கும். இங்கே அனைத்து மொழிப் புத்தகங்களும் இருக்கின்றன. அறிவைக் கொடுக்கும் இடமாகும். இந்த நூலகம் தொடர்ந்து இங்கே இருக்க வேண்டும் என்று இந்த அம்மாவைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நூலகத்திற்கு வந்து செல்வோர் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்
---”விடுதலை” 3-11-2011

தமிழ் ஓவியா said...

உலகத் தரம் வாய்ந்த - அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதா?


நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் எண்ணம் ஏன்?
எதிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது விரும்பத்தக்கதல்ல!
முதல் அமைச்சர் மறுபரிசீலனை செய்க! இன்றேல் போராட்டம் வெடித்துக் கிளம்பும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

அண்ணா பெயரில் சென்னை கோட்டூர் புரத்தில் அமைந்துள்ள உலகத் தரம் வாய்ந்த நூலகத்தை வேறு இடத்துக்கு மாற்றும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க. அரசால் உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவ தாகவும், இந்த நூலகம் நுங்கம்பாக்கம் டி.பி.அய். கல்வி வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவித் திருப்பது எவ்வகையிலும், எந்தவித அவசியத்தின் பாற்பட்ட முடிவும் அல்ல, கண்டனத்திற்குரியது!

உலகத் தரம் வாய்ந்த நூலகம் 172 கோடி ரூபாய் செலவில் இந்த நூலகம் முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது; அறிஞர் அண்ணாவைப் பெருமைப்படுத் தக் கூடியது; உலகத்தரம் வாய்ந்த-ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் என்ற அளவில், ஒரே நேரத்தில் 5000 பேர்கள் அமர்ந்து படிக்கவும் வசதிகளைக் கொண்ட- நூலகத்திற்கென்றே திட்டமிட்டு, அதற் கேற்ப நவீன கணினி தொழில் நுட்பங்களைக் கையாண்டும், மாற்றுத்திறனாளிகள் கூட வசதியாக அமர்ந்து படிக்கும் வண்ணமும், தனித்தனிப் பகுதி களைக் கொண்ட நூலகம் என்ற தனிச்சிறப்புடையது இது!

5.5 லட்சம் புத்தகங்களைக் கொண்டதோடு பழைய ஓலைச்சுவடிகளைக்கூட ஆய்வுக்காக சிறப்பாகப் பாதுகாத்துப் பயன்படுத்தும் வசதிகளை உள்ளடக்கி, பிரத்தியேகமாக செயல்படுகின்ற நூலகம் இது. குழந்தைகள், மாணவர்கள் மிகுந்த உற்சாகத் துடனும், ஆர்வத்துடனும் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள தனித்தன்மையான நூலகமும் கூட!

கலைஞர் பெயரில் உள்ளது எல்லாம் மாற்றப்பட வேண்டுமா?

உணவகம், மிகச்சிறந்த அரங்குகள் (அரங்கு களைக்கூட முன்பே பிரித்து, அதை கல்வித்துறையி லிருந்து எடுத்து, தகவல் விளம்பரத் துறைக்கு ஏற்கெனவே விட்டு விட்டதாக அறிகிறோம்.) ஆகிய வைகளை உள்ளடக்கியது.

இதனை மாற்ற வேண்டிய அவசியம் என்ன வென்றே புரியவில்லை. கலைஞர் பெயர் உள்ளதெல் லாம் அன்றைய தி.மு.க அரசு செய்தது என்பதால் மாற்றப்பட வேண்டும் என்பது தவிர, வேறு எந்த உண்மைக்காரணத்தையும் இதற்குக் கூறமுடியாது.

நூலகத்திற்கென்று கட்டப்பட்டுள்ளதை மருத்துவமனையாக மாற்ற முடியுமா?

குழந்தைகள் நலமருத்துவமனை கட்ட சென்னை யில் இடங்களா அரசுக்கு இல்லை? நூலகத்திற்கென வடிவ மைக்கப்பட்டதை மருத்துவமனையாக மாற்று வதற்கு மக்கள் வரிப்பணம் பலகோடி ரூபாய் செல வாகத்தானே செய்யும்? அது எவ்வகையில் ஏற்கக் கூடிய ஒன்று? அண்ணாவை அவமதிக்கும் செயல்!

இது கலைஞர் மீது காழ்ப்பு, எதிர்ப்பு, வெறுப்பு காரணமாக இருந்தாலும், உண்மையாக அறிஞர் அண்ணாவையே அவமதிக்கும் முடிவு இது! அண்ணாவின் பெருமையை சீர்குலைக்கும் முயற்சி இது! உடனே கைவிடப்பட வேண்டும்.

அண்ணா பெயரில் கட்சி நடத்தி, ஆட்சி நடத்து வோர் இப்படி அண்ணாவின் புகழுக்கும், பெருமைக் கும் களங்கத்தை உருவாக்குவதுபோன்று இந்த செயலில் ஈடுபடலாமா?

மறுபரிசீலனை செய்க!

இதனை தமிழக அரசும் முதல்வரும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அண்ணா நூலகம் அதே கட்டடத் தில் தொடரும் வண்ணம் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எதிர்ப்பு வெடித்துக் கிளம்பும்!

பொதுநல ஆர்வலர்களின் எதிர்ப்பு வெடித்துக் கிளம்புவது உறுதி! புதிய அரசு மக்கள் பிரச்சினை களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக இது போன்றவற்றில் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது தேவையா?

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்