Search This Blog

30.10.10

சாமியோவ் பொய்யப்பா!


பொய்யப்பா!

இன்றைக்குச் சபரிமலை அய்யப்பன் என்று வழக்கப்படும் கோயில், கடவுள் என்பதெல்லாம் ஒரு காலத்தில் புத்தர், புத்தர் விகார் என்று சொன்னால் சில ருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மையாகும்.

அய்யப்பனை சாத்தன் என் றும், சாத்தனார் என்றும் கூறுகிறார்கள். சாத்திரத்தை முற்றும் கற்றறிந்தவன் என்று பொருள். இந்தப் பெயர்கள் புத்தருக்கு உரியவையே!

பவுத்த நூலாகிய மணிமேகலையை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார் என்னும் பெயருடையவர் என்பதைக் கவனிக்கவேண் டும்.

சாத்தன் என்பதன் பொருள் அய்யன் என்பதாகும். அய்யன் என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்ற பொருள்கள் உண்டு. இந்த வகையில் சாத்த னாக அய்யனாக இருந்த புத்தர், புத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு அதே பெயர்களில் இந்து மதக் கடவுள்களாக, கோயில்களாக ஆக்கப் பட்டனர் என்பதுதான் ஆய்வாளர் களின் கூற்றாகும்.

பவுத்தமும் - தமிழும் என்னும் அரிய நூலில் ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி இதனை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இருந்த சாத்தன் (புத்தன்) உருவத்தைப் பல ஆண்டு களுக்குமுன் கோபிநாதராயர் அவர்கள் கண்டுபிடித்து, அதைப் படம் பிடித்து வெளியிட்டார்கள். அந்த உருவத்தைச் சில ஆண்டுகளுக்குமுன்பு கச்சிக் காமக் கோட்டத்தில் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அது சுமார் அய்ந்தடி உயரமுள்ள கருங்கற் சிலை உருவம் - புத்தர் பெருமான் நின்ற வண்ணம் உபதேசம் செய்வதுபோல் அமைந்துள்ளது. இந்தப் புகழ் வாய்ந்த காமக் கோட்டத்துப் புத்தர் உருவச் சிலையை இப்பொழுது சென்னை அரசாங்கத்துப் பொருட்காட்சிச் சாலையில் கொண்டு போய் வைத்துவிட்டு, அஃது இருந்த இடத்தில் அய்யப்பன் உருவத்தைப் புத்தம் புதிதாகச் செய்து வைத்திருக்கிறார்கள் (மேற்கண்ட நூல் பக்கம் 175).

இதேபோல, புத்தருக்கு விநாயகன் என்ற பெயருண்டு. புத்தர் கோயில்கள் பிற்காலத்தில் விநாயகர் (பிள்ளையார்) கோயில்களாக்கப்பட்டன. கும்பகோணம் நாகேசுவரசுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள ஒரு புத்தர் உருவம் இருக்கிறது. தஞ்சை ஜில்லாவில் உள்ள பட்டீச்சரம் சிவன் கோயி லுக்கு வெளியே பெரியதோர் புத்தர் உருவச் சிலையொன்று இருக்கிறது என்று நீண்ட பட்டியலையே தருகிறார் ஆய்வாளர் மயிலை சீனி வேங்கடசாமி.

இன்னொரு தகவலும் முக் கியமானது.

இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டதுபோலவே, மற்றொரு பிரிவாகிய சைவ சமயமும் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது. சாஸ்தா அல்லது அய்யனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த் துக்கொண்டு பின்னர், முருகர் அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது. புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர்கள் உள்ளன. இப்பெயர்களை நிகண்டுகளிலும் காணோம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பவுத்தக் கோயில்களை பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்ச பாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றி விட்டனர். அதுபோலவே விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளையார்) கோயிலாகவும் மாற்றிவிட்டார்கள் (அதே நூல் பக்கம் 77).

இதைவிட இன்னொரு திடுக்கிடும் தகவல் உண்டு. சபரிமலை அய்யப்பன் கோயில் ஒரு காலத்தில் புத்தர் கோயிலே என்று கேரள அரசாங்கமே உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு விட்டது என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல்.

சபரிமலைக் கோயிலில் பெண்களை அனுமதிக்கலாமா என்பது பற்றி உச்சநீதிமன்றத்தில் தொட ரப்பட்ட வழக்கில் 7.2.2008 அன்று கேரள அரசாங்கம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கேரள மாநிலத்தின் பழைய வரலாற்றை எழுதிய சில அறிஞர்கள் சபரிமலை சாஸ்தா கோயில் ஒரு காலத்தில் புத்த மத வழிபாட்டுக் கோயிலாக இருந்தது என்று கேரள அரசு தெரிவித்திருந்தது.

அர்த்தமுள்ள இந்து மதத் தின் இந்த உருட்டல், புரட்டல், பித்தலாட்டத்தைப் பார்த்தீர்களா?

சாமியோவ் பொய்யப்பா!

-------------- மயிலாடன் அவர்கள் 30-10-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

சகாதேவன் said...

பொய்யப்போ என்று படித்ததும் ஒருநாள் ஐயப்போ ஐயப்போ என்று சொல்லிக்கொண்டே பக்தர்கள் ஒட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தனர். என் நண்பன் பையப்போ பையப்போ என்றது நினைவு வந்தது.

சகாதேவன்