Search This Blog

7.10.10

யார்?ஆரியரா?அவர்அடிமைகளா?


யார்?ஆரியரா?அவர்அடிமைகளா?

1.. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்?

2. திராவிட இராவணப் பெரியாரை இராமாவதாரங் கொண்டு கொன்றது யார்?

3. திராவிட சூரபதுமனை முருகனாக வந்து கொன்றது யார்?

4. திராவிட இரணியனை நரசிங்கரூபங் கொண்டு கொன்றது யார்?

5. கம்சனை கிருட்டினனாக வந்து கொன்றது யார்?

6. திராவிட நரகாசுரனை மகாவிஷ்ணு ரூபத்தில் கொன்றது யார்?

7. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?

8. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?

9. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?

10. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவைகளைச் சுட்டுத்தின்று சுராபான மருந்தியது யார்?

11. வருணாச்சிரம தருமத்தை ஆதரிப்பவன் யார்?

12. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?

13. புராண ஆபாசக் கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?

14. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?

15. உயர்ந்த உத்தியோகத்திலிருப்பவர்கள் யார்?

16. மோட்சலோகத்துக்கு வழிகாட்டி டிக்கட்டு கொடுப்பவன் யார்?

17. திவசம், திதி, கருமாதி, கலியாணம் சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?

18. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்துபவன் யார்?

19. திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?

20. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியது யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?

21. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில், சாய்ந்து சாப்பிடுவது யார்?

22. பல ஜாதிகளையும், மதங்களையும் உண்டு பண்ணியது யார்?

23. உடன் கட்டை ஏறும்படி செய்து பெண்களை வஞ்சித்தது யார்?

24. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?

25. திராவிடன் ஆரியப் பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?

26. திராவிடன் ஆரியப் பாஷையைக் காதால் கேட்டிருந்ததற்காகக் காதில் ஈயத்தைக் காய்ச்சி விட்டது யார்?

27. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதிவைத்தவன் யார்?

28. திராவிட சோதரி சூர்ப்ப நகையை மானபங்கம் செய்தவன் யார்?

29. வாலியைக் கொன்று மனைவியை சுக்ரீவனுகுக்குக் கூட்டி வைத்தது யார்?

30. இராவணனைக் கொன்று விபீடணனுக்குப் பட்டம் கட்டியது யார்?

31. சூரனைக் கொன்று சிங்கமுகனுக்குப்பட்ட மளித்தது யார்?

32. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?

33. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவன் யார்?

34. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டு களிப்பவன் யார்?

35. கடவுளைத் தரிசிக்கத்தகாதவனாக இருப்பவன் யார்?

36. ஆரிய சமாசம், ராட்டிர சேவாசங்கம், இந்து மகா சபை, கம்யூனிஸ்ட் கட்சி, சோஷியலிஸ்ட் கட்சி இவைகளுக்குத் தலைவன், காரியதரிசி யார்?

37. வெள்ளையனை வெளியேற்றி, தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?

38. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாதகாரியம் செய்தலைபவன் யார்?

39. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?

40. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடது கையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?

41. பெண்களை ஆடல், பாடல் கற்பித்த சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?

42. தமிழ்நாடு வெறுத்த இராஜாஜியை வங்காளக் கவர்னராக்கியது யார்? இன்று கவர்னர் ஜெனரலாக்கியது யார்?

43. கதர்வேட்டி கட்டி காங்கரசில் தலைமைப் பதவியிலிருப்பவர் யார்?

44. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சங்கேட்கும் பஞ்சாங்கம் யார்?

45. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?

46. நான்கு ஜாதிகளை உண்டு பண்ணியவன் யார்?

47. மதவெறி பிடித்தலையும், மடையனும், முட்டாளும் யார்?

48. முதல் ஜாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?

49. ஜமீன் ஒழிப்பு மசோதாவைத் தடைசெய்தது யார்?

50. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?

51. வில்வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?

52. காப்பி ஓட்டல் முதல் கலெக்டாராபீஸ் வரை உயர்ந்த பதவியிலிருப்பவன் யார்?

53. உலகில் கோடீஸ்வரனாயும், ஜமீன் தாரியாயுமிருப்பவன் யார்?

54. தாசீல் வந்தால் கொம்பு ராசினாமாக் கொடுத்து விட்டால் சொம்பு என்று சொன்னது யார்?

55. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?

56. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?

57. ஹரிஜன சோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவர் யார்?

58. ஜாதி வித்தியாசமேயில்லை எல்லோரும் ஒன்று எனக் கூறுபவன் யார்?

59. ஜாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?

60. ஜாதியைக்கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்துங் கை வாளேந்தும் என்றவன் யார்?

61. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?

62. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?

63. காந்தியார் சாம்பலை நதிகளில் கரைத்துவிட்டது யார்?

64. காந்தியாருக்கு ராம் தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?

65. காந்தியார் மகனுக்குப் பெண் கொடுத்தது யார்?

66. காந்தியாரை மகானாக்கி, மகாத்மாவாக்கியது யார்?

67. காந்தியாருக்கு நிதிதிரட்டி ஏப்பமிடுவது யார்?

68. காந்தியாருக்குக் கோயில் கட்ட ஏற்பாடு செய்வது யார்?

69. காந்தியார் கோயிலுக்கு அர்ச்சகனாக வரப் போகிறவன் யார்?

70. காந்தியார் கொலை வழக்குகளைப் பிரசுரிக்கக் கூடாதென்பவர் யார்?

71. பெரியார் சொன்ன காந்தி சகாப்தம், காந்தி மதம், காந்தி தேசம் வேண்டாமென்றது யார்?

72. திராவிடர் இழிவு நீங்க அணிந்திருந்த கருப்புச் சட்டைகளுக்குத் தடை விதித்தது யார்?

73. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்து விட்டது யார்?

74. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்தரவு போட்டுச் சோதனையிட்டவர் யார்?

75. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?

76. திராவிடனைத் தலையெடுக்காமல் தட்டி விட்டுக்கொண்டிருப்பவன் யார்?

77. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?

78. சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, தினசரிப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் யார்?

79. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?

80. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?

81. உலகம் போற்றும் உத்தமர் காந்தியார் உயிருக்கு உலைவைத்த கூட்டம் எது?

82. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடி யிருந்து குடி கெடுப்பவன் யார்?

83. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?

84. சமணர்களைக் கழுவேற்றியது யார்?

85. சந்திர குப்தனுக்கு சாம்ராச்சியம் கிடைக்கும்படி செய்தது யார்?

86. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?

87. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?

88. வல்லாள மகாராசாவின் மனைவியைப் பெண்டாளக் கேட்டது யார்?

89. அசோக வம்சத்தரசரை அழித்தவன் யார்?

90. சைவனுக்கு கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராமபுராணமும் கட்டியது யார்?

91. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?

92. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பவன் யார்?

93. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியவன் யார்?

94. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?

95. பல காமாந்தகாரக் கடவுளர்களை யுண்டு பண்ணியது யார்?

96. நம்மைப் பல ஜாதிகளாக்கி மொழி, கலை, நாகரிகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?

97. எண்ணத் தொலையாத இறைவனை உண்டாக்கி எழுதியது யார்?

98. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளைக் குட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?

99. எவ்விதத் தொடர்புமின்றிச் சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?

100. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?

----------------------------- “குடிஅரசு” 22.1.1949

0 comments: