Search This Blog

25.10.10

பெரியாரின் சிந்தனைகள் உலகை ஆள வேண்டும்

பெரியாரின் சிந்தனைகள் உலகை ஆள வேண்டும் என்று நினைக்கின்ற முதல் பெரியார் தொண்டன் நான்!
சென்னை சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

பெரியாரின் சிந்தனைகள் உலகை ஆளவேண்டும் என்று நினைக்கின்ற பெரியாரின் முதல் தொண்டன் என்று தன்னைப் பற்றிக் கூறி விளக்கவுரையாற்றினார், திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார்திடலில் 21.9.2010 அன்று பெரியாரின் இலக்கியப் பார்வை புதுவெள்ளம் புதுநோக்கு என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

தமிழை காட்டுமிராண்டி மொழி என்று....!

பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் சார்பாக அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய 132ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, அவர்களுடைய அரிய தனித்தன் மையான கருத்துகளைப்பற்றி ஒரு நல்ல ஆளுமையை நம்முடைய தோழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே தந்தை பெரியார் அவர்கள் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார், என்று சொல்லி நம்முடைய இன எதிரிகள் சொல்லுவார்கள் அவர்களுக்கும் தமிழுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தமிழ் வளரக்கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு ஏதோ திடீரென்று தமிழ்ப்பற்று வந்துவிட்டதைப்போல தந்தை பெரியார் அவர்கள் கூறிய தன்மையை முற்றிலும் மாற்றியாக வேண்டும் என்ற தன்மையில் இதை ஒரு சூழ்ச்சிப் பொறியாகக் கையாளுகிற வர்கள் உண்டு. துவக்கத்தில் சில பேர் பதற்ற மடைந்தால் கூட, பின்னாலே சிந்திக்கச் சிந்திக்க தெளிவாகும்.

பெரியார் மறைத்துப் பேசக்கூடியவர் அல்லர்

தந்தை பெரியார் அவர்கள் எதையும் மறைத்துப் பேசக்கூடியவர் அல்லர். தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஒரு தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று சொன்னால், உலக சிந்தனையாளர்களிலேயே தந்தை பெரியாருக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லை என்பதை அவருடைய அறிவுரையை ஆய்வு செய்கிற நேரத்திலே நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தை விட, இன்றைக்கு உலகம் முழுவதும் அவருடைய மண்டைச் சுரப்பைத் தொழக்கூடிய அளவிலே இருக்கிறது.

பெரியாருடைய கருத்துகள் எந்தத்துறையாக இருந்தாலும்....!

தந்தைபெரியாருடைய கருத்துகள் அது மொழித்துறையாக இருக்கட்டும், அல்லது சமுதாயத் துறையாக இருக்கட்டும்; அல்லது பொரு ளாதாரத் துறையாக இருக்கட்டும். வேறு எந்தத் துறையாக இருந்தாலும் மனிதவாழ்விற்கு எவை எவை எல்லாம் பயன்படுகின்றனவோ, தொடர்பு டையதோ அவை அத்துணைத் துறைகளிலும் தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை பாயாத இடமில்லை. அவரது மூச்சுக்காற்று நுழையாத இடமே இல்லை.

தந்தை பெரியார் அவர்கள் எல்லாத்துறையிலும் சிந்தித்திருக்கின்றார். காரணம் அவர் பள்ளிக் கூடத்திலிருந்தோ, கல்லூரியிலிருந்தோ வந்தவரல்லர்.

அவருடைய பட்டறிவு, பகுத்தறிவு, உலக ஞானம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மனிதர்களுடன் பழகி, அவர்களுடைய பட்டறிவிற்கு ஏற்ப பிரச் சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமே என்ற ஒரு நாணயமான, அக்கறையும், கவலையும் கொண்ட மாமனிதர் தந்தை பெரியார் அவர்கள்.

ஓய்வறியா உழைப்பு

எனவே, அவர்களுடைய உழைப்பைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ஓய்வறியா உழைப்பு. 95 ஆண்டு காலம் வரையிலே அய்யா அவர்கள் அவருக்கு ஏற்பட்ட உபாதை, அதற்காக அவர்கள் ஏற்பாடு செய்துகொண்ட மருத்துவமுறை அவை எல்லாம் உங்களுக்குத் தெரியும். இந்த அரங்கத்திற்கு அதை விளக்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசிய மில்லை.

ஓய்வெடுத்துக்கொள்கிறேன்!

90 வயதைத் தாண்டியநிலை. எனவே, அவர்கள் நான் ஓய்வெடுத்துக்கொள்கின்றேன், உட்கார்ந்து கொள்கின்றேன் என்று அவர் நினைத்திருந்தால், சொல்லியிருந்தால் யாரும் குற்றம் சொல்லியிருக்க மாட்டார்கள்.

ஒரு சாதாரண உடல்நலக்குறைவு என்று சொன்னாலே மக்களை சந்திப்பதற்குக் கூச்சப்படு கின்றவர்கள் நாம். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

இறுதி மூச்சு அடங்குகிறவரை தொண்டறம்

பிளாஸ்டிக் வாளியில், கண்ணாடி பாட்டிலில் ஒரு ரப்பர் குழாயை இணைத்து அந்தக் குழாயை தனது உடலிலே ஓர் உறுப்பாக வைத்துக்கொண்டு ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல; அய்ந்தாண்டு காலம் இந்த மக்களுக்கு இடையறாமல் தொண்டறம் செய்தவர்.

அந்த நிலையிலே தனது இறுதி மூச்சு அடங்குகிற வரை உரையாற்றிய பெருமை உலகத்தில் வேறு எந்தத் தலைவரும் பெறாத ஒரு தொண்டறமாகும்.

ஒப்புவமை இல்லாத சிந்தனை

எனவே, ஓய்வறியா உழைப்பு, ஒப்புவமை இல்லாத சிந்தனை அவருடைய சிந்தனை என்பது இரவல் வாங்கப்பட்டதோ, அல்லது மற்றவர் களிடமிருந்து காப்பி அடிக்கப்பட்டதோ அல்ல.

மாறாக ஒப்பற்ற சுயசிந்தனையாளர். அதனால்தான் அவர் மறைந்த பிற்பாடு இன்றைக்கு உலகம் உள்ளளவுக்கும் பேசப்படுகின்றார். அதிக மான அளவுக்கு தந்தை பெரியாரைப்பற்றி ஆய்வு செய்கின்றனர்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலே, ஒவ்வொரு இடத்தில், ஒவ்வொரு வகையான மனிதர்கள் மத்தியிலே பதிவுகள் நடந்து கொண்டி ருக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட நிலையிலே ஒப்புவமை இல்லாத சிந்தனை.

துணிவு இருக்குமா? உலகத்தில் இந்த இரண்டு அம்சங்கள் உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஓய்வறியாமல் உழைக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அதே போல ஒப்புவமை இல்லாத சிந்தனையாளர் களாகவும் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட வர்கள்கூட உண்மையை அஞ்சாது கூறத்துணிவு உள்ளவர்களாக இருப்பார்களா, என்று சொன் னால், இருக்க மாட்டார்கள்.

அய்யா அவர்களே அடிக்கடி பேசும்பொழுது சொல்லுவார். எனக்குத் தெரிந்த இந்தச் செய்தி. எனக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக் காதீர்கள்.

என்னை விட அதிகமாக செய்தி தெரிந்தவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் அப்படி சொன்னால் நம்முடைய சுயநலத்திற்குக் கேடு என்று கூட அஞ்சுவார்கள். பயப்படுவார்கள்.

நான் எதைப்பற்றியும் கவலைப்படாதவன்

நான் எதைப் பற்றியும் கவலைப்படாதவன். இழப்பதற்கு எனக்கு ஒன்றுமில்லை. காரணம், நான் எதையும் விரும்புகிறவன்அல்ல.ன் விரும்புகிறவர்கள் தான் இழப்பதற்காக வருத்தப்பட வேண்டுமே தவிர, விரும்பாதவர்களுக்கு இழப்பதற்கு என்ன இருக்கிறது என்ற ஒரு தலைசிறந்த தத்துவ ஞானியாக தந்தை பெரியார் அவர்கள் திகழ்ந்தார்கள்.

ஆகவே, உண்மைகளை அஞ்சாது வெளியிடும் துணிவு பெற்றவர், தன்னலம் சிறிதும் புகாத தன்னேரில்லா தலைவர்.

சிலருக்குப் பொதுத் தொண்டு

சிலருக்குப் பொதுத் தொண்டு தன்னலம் கலந்த ஒன்று. ஆனால் தந்தை பெரியார் அவர்களுடைய பொதுத்தொண்டை நீங்கள் எந்தக் கோணத்தி லிருந்து பார்த்தாலும் அதில் கொஞ்சம் கூட, சுயநலம், தன்னலம் குறுக்கிட்டதே கிடையாது. எனவே தந்தை பெரியாரின் தொண்டு தன்னிக ரில்லாத தொண்டு. இது நான்காவது அம்சம்.

அய்ந்தாவதைத் தெளிவாகச் சொல்ல வேண்டு மானால், அவர் ஒரு முழுப் பகுத்தறிவுவாதி. மனித நேயம்தான் அவருடைய சிந்தனைக்கே அடிப்படை. சிறு குழந்தைப் பிராயத்திலிருந்து தன்னுடைய உற்றத்து நிகழ்வுகளிலேயிருந்து எல்லாவற்றிலும் தந்தை பெரியார் அவர்கள் மனிதநேயத்துடன் கொண்டு சென்றார்.

அவர் ஒரு பூரண பகுத்தறிவுவாதி

எதையும் வெட்கப்படாமல், கூச்சப்படாமல் உண்மைகளை நிர்வாணத் தன்மையிலே பார்த்த தலைசிறந்த ஒரு பகுத்தறிவுவாதி. தன்னை அறிமுகப்படுத்தும்பொழுது தந்தை பெரியார் தன்னை ஒரு பூரண பகுத்தறிவுவாதி என்று சொன்னார்.

நாங்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகள்தான். ஆனால் மனஒதுக்கீடு இல்லாமல் மென்ட்டல் ரிசர்வேசன் என்று சொல்லுகிறார்களே, இதைப் பற்றி நம்மை நாமே ஒரு கேள்வி கேட்டுக் கொண்டால் நாம் முழுப்பகுத்தறிவு வாதியா என்றால் அவ்வளவு எளிதாக முழுப்பகுத்தறிவுவாதி என்று சொல்ல முடியாது. பகுத்தறிவாளர்கள் என்று சொல்லுகிறவர்கள் கூட முழு பகுத்தறிவுவாதி என்று சொன்னால் அதற்கு விடை கிடைக்குமா? என்றால் சங்கடமான ஒன்றுதான். நமக்கு ஏதோ ஒரு வகையிலே ஆசாபாசம் இருக்கும். நான் அதைச் சொல்ல முடியவில்லை. மனித நேயத்தோடு....

தந்தை பெரியார் அவர்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. சோதனை செய்கிற மருத்துவர் எந்தவித உணர்ச்சிக்கும் ஆளாகாமல், சோதனைக்கு ஆட்கொண்டிருக்கின்ற நபர் ஆணா, பெண்ணா என்று கவலைப்படாமல், நோயைப் பற்றியே பரிசீலிக்கக் கூடிய மனப்பக்குவத்தை எப்படி பெற்றிருப்பாரோ அதுபோல ஒரு நபரைப் பார்க்காமல் மனிதநேயத்தோடு எந்தப் பிரச்சி னையையும் அணுகுவார்.

இலக்கியம் என்று சொன்னால் என்ன நினைக்கிறார்கள்? யாரோ சில பேர் கூடி படிக்கிறார்கள். புலவர் பட்டம் பெற்று வருவது அல்ல. இலக்கு+இயம்=இலக்கியம். வார்த்தையைக் காப்பாற்றுவதற்கு நம்முடைய புலவர்கள் போராடியிருக்கின்றார்கள்.

இலக்கியம் என்பதே வடமொழி என்று சொல்லியே போராட்டம் ஆரம்பித்துவிட்டது. அதற்குப் பிறகு இலக்கு+இயம்= இலக்கியம்- குறிக்கோள் என்று எல்லாம் வந்துவிட்டது.

ஆனால் அதன்பிறகு இலக்கியம் என்பது ஒரு நூலைப் போட்டுக்கொண்டு ஒரு வளையத்தைப் போட்டுக்கொண்டு ஒரு வட்டத்தை வரைந்து கொண்டிருப்பார்கள்.

இலக்கியம் என்றால் அவர் கவிதை எழுத வேண்டும். இலக்கியம் என்றால் அவர் ஆராய்ச்சி யாளராக இருக்கவேண்டும் என்று நினைப் பார்கள்.

நான் தமிழ் தெரியாதவன்

ஆனால், ரொம்ப பேர் நினைப்பார்கள். நான் தமிழே தெரியாதவன் என்று பெரியார் சொல்லுவார். அவர் மாதிரி உண்மையைப் பேசக்கூடிய தலைவரே கிடையாது. அவர் அடக்கத்திற்காகவும் அய்யா சொல்லவில்லை. அடக்கத்திற்காக சில பேர் பேசுவார்கள்.

ஆனால் அய்யா அவர்கள் இயல்பான அடக்கத்தைப் பெற்றவர்கள். அவர் மாதிரி அடக்க உணர்வு படைத்த தலைவர் உலகத்தில் கிடையாது. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்துவிடும்

என்று வள்ளுவர் சொல்லுவது போன்ற நிலையில் உள்ளவர். பெரியாருக்கு என்ன தமிழ் தெரியும்? என்று கேட்டவர்கள் உண்டு. பெரியார் ஏன் தமிழில் கை வைக்கிறார் என்று சொல்லு வதுண்டு.

பெரியாரின் இரங்கல் இலக்கியம்

மறைந்த புலவர் அய்யா இராமநாதன் அவர்கள் எழுதிய பெரியாரியல் தொகுதி பாடங்களை வெளியிட்டிருக்கின்றோம்.

பெரியாருடைய மொழி எழுத்துச் சீர்திருத்தங்களை தனியே எடுத்து வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும். இரங்கல் இலக்கியம் என்ற ஒரு பகுதியை அய்யா அவர்கள் எழுதியிருக்கின்றார்.

தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்விணையர் நாகம்மையார் மறைவு, அதே மாதிரி அவருடைய தாயார் சின்னத்தாயம்மாள் மறைவு. அவர்களைப் பற்றி பெரியார் என்ன எழுதி யிருக்கின்றார் என்பதைப் படிக்க வேண்டும்.

பெரியார் பற்றி பெரியார் என்ற நூலை எழுத வேண்டும். அவருடைய சுயசரிதையை மற்றவர்கள் எளிதில் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற் காகத்தான் இந்த ஆண்டு இந்த நூலை வெளி யிட்டிருக்கின்றோம்.

இலக்கியம் என்றால் என்ன? மேலை நாட்டு அறிஞர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் அறிவை சுதந்திரமாக விட்டதினாலே அவர் களுடைய விளக்கங்கள், அவர்களுடைய வரையறைகள் தெளிவாக இருக்கும்.

எமர்சன் என்ற அறிஞர் சொன்னார். சிறந்த எண்ணங்களுடைய உயர்ந்த தொகுப்புதான் இலக்கியம்.

அந்த சிறந்த எண்ணம். நல்ல தொகுப்புகளாக அமைகிறதோ அதுதான் இலக்கியம். தனியே மேடை அமைத்து விவாதம் வைத்து இது இலக்கியம், இது இலக்கியம் அல்ல என்று சொல்ல முடியாது.

ஒரு காலத்தில் புதுக்கவிதை எழுதியவர்களை ஒதுக்கித்தான் வைத்திருந்தார்கள். சிறுகதைகள் பற்றி எல்லாம் விவாதங்கள் இருந்தது. ஆகவே, இதில் நுணுக்கமான முறையில் அறிவைப் பெற்றவனோ இல்லை. நான் பெரியாருடைய மாணவன். அவ்வளவுதான் இன்னமும் நான் பெரியாரைப் படித்துக்கொண்டிருக்கின்ற மாணவன். பெரியாருடைய சிந்தனைகள் உலகத்தை ஆள வேண்டும் என்பதில் குறியாக இருக்கிற முதல் தொண்டன் (பலத்த கைதட்டல்).

80 ஆண்டுகளுக்கு முன்னாலே அரசியல் சமுதாய பிரச்சினைகளை கேட்க வேண்டுமென்று நினைத்தால் எப்படியிருக்கும்?

பெரியார் என்ற ஆசிரியர் வகுப்பெடுத்தால்....

தந்தை பெரியார் என்ற ஆசிரியர் வகுப்பெடுத்து மாணவர்கள் கேட்டால் எப்படியிருக்கும் என்பதற்கு ஆதாரம்தான் குடிஅரசு தொகுப்புகள்.

எனவே, யார் யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ அவர்கள் அத்துணை பேர் வீட்டிலும் குடிஅரசு தொகுப்புகள் இருக்கவேண்டும். இருந்தால் மட்டும் போதாது. உங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, வாய்ப்புக் கிடைக்கும்பொழுது குடிஅரசு தொகுப்புகளை கொஞ்சம், கொஞ்சமாகப் படிக்க வேண்டும். இதில் பல்வேறு செய்திகள் இருக்கும்.

ஒரு பெரிய பேரங்காடி. சூப்பர் மார்க்கெட் என்று சொல்லுகிறோம். அல்லவா? அந்தப் பேரங்காடிக்குப் போனால் பல்வேறு பொருள்கள் இருக்கும். யாருக்கு எது தேவையோ அவற்றை வாங்கிக் கொள்கின்றோம்.

சிந்தனைப் பேரங்காடி

தந்தை பெரியாரின் குடிஅரசு தொகுப்புகளைப் பார்த்தால் அது ஒரு சிந்தனைப் பேரங்காடி மாதிரி. பூங்காக்களில் எப்படி பல மலர்கள் இருக்கிறதோ அதுபோல ஏராளமான கருத்துகளைக் கொண்ட மிகச்சிறப்பானதாக இருக்கும்.

குடிஅரசு தொகுதிகளை அச்சிடும்பொழுது எழுத்துப் பிழையோ, மற்றதோ வந்துவிடக்கூடாது என்பதற்காக கவனமாகப் படித்துக்கொண்டிருப்பேன்.

குடிஅரசு தொகுப்பு

இது சமீபத்தில் வந்த குடிஅரசு தொகுப்பு. இதை படித்துக்கொண்டிருக்கின்றபொழுது மிக முக்கியமான செய்திகள் தென்பட்டன.

தந்தை பெரியார் அவர்கள் எழுதியது பாடம் மாதிரி நமக்கு. முதலில் இதைப் புரிந்து கொண்டால், இலக்கியம் மற்றது வரும். 13.1.1936இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி பெரிய மண்டபத்தில் திரு.வி.க தலைமையில் நடைபெற்ற தமிழ்த்திருநாள் (பொங்கல்) விழாவில் தமிழ் வாழ்த்து எனும் பொருளில் தந்தை பெரியார் ஆற்றிய உரை அந்தக் காலத்தில் எல்லாம் அய்யா அவர்களுக்கு செயலாளர்கள் எல்லாம் கிடையாது.

அய்யாவே எழுதிக்கொடுப்பார்

அய்யா அவர்கள் பேசி முடித்துவிட்டு, அவரே இரவோடு இரவாக எழுதி குடிஅரசு அலுவலகத்திற்கு கொடுத்து அவரே புரூஃப் பார்ப்பார். அப்படி உழைத்த மாமேதை அவர்கள்.

முதலில் இதை அடிப்படையாக தெரிந்து கொண்டால் எப்படி அய்யாவின் கருத்துகள் புது வெள்ளம் பாய்கிறது, புது நோக்கு எப்படி அமைகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

-------------------------------தொடரும் "விடுதலை” 23-10-2010



என்னை மகிழ்ச்சியாக வரவேற்றது போல மகிழ்ச்சியாக வழியனுப்ப மாட்டீர்கள்
பெரியார் கூறிய கருத்தை விளக்கி தமிழர் தலைவர் பேச்சு

என்னை வரவேற்ற மாதிரி எனது உபன்யாச முடிவில் எனக்கு மகிழ்ச்சியான வழியனுப்பு செய்யமாட்டார்கள் என்றே நினைக்கிறேன் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தை விளக்கி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்கள்.

சென்னை பெரியார்திடலில் 21.9.2010 அன்று பெரியாரின் இலக்கியப் பார்வை புதுவெள்ளம் புதுநோக்கு என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இந்த செய்திகளை எல்லாம் பதிவு செய்ய வேண்டுமென்று விரும்புகின்றோம். உங்களுக்கு வசதி எப்படி என்பதைப் பார்த்து, எனக்கு வசதியான நாளைப் பார்த்து இதே அமைப்பின் சார்பாக ஒரு தொடர் சொற்பொழிவாக ஆக்குவதற்கு தயாராக இருக்கிறோம். (கைதட்டல்).

இதில் அய்யா அவர்கள் பேசுகிறார். பள்ளி, கல்லூரிகளுக்கே போகாத தந்தை பெரியார் அவர்களுடைய பெயராலே இன்றைக்குப் பல்கலைக்கழகமே அமைந்துவிட்டது.

பெரியாரின் ஒப்பற்ற சுயசிந்தனை

உலகத்தில் ரொம்ப அதிசயமான ஒரு நிலை. தந்தை பெரியார் ஆரம்பப் பள்ளிக் கூடத்திற்குக் கூட ஒழுங்காகப் போனதில்லை. அப்பேர்ப்பட்ட தலைவர் அவர்.

தந்தை பெரியாரின் ஒப்பற்ற சுயசிந்தனைக்கு உலகத்தில் எவ்வளவு பெரிய அங்கீகாரம் என்பதைப் பார்க்க வேண்டும். இன்றைக்கு 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்பத்தில் உச்சக்கட்டம். எப்படி 18ஆம் நூற்றாண்டில் தொழில்புரட்சி ஏற்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் அந்தத் தொழில்புரட்சி விரிவானது. 20ஆம் நூற்றாண்டில் அது வேறு ஒரு உருவத்தை எடுத்தது.

21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பப் புரட்சி

21ஆம் நூற்றாண்டில் மின்னணு தொழில்நுட்ப புரட்சியாக திருப்பம் ஏற்பட்டு வளர்ந்தது. அறிவியல் ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக கேடிசஅயவடி கூநஉடிடடிபல-தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ந்திருக்கிறதோ அதே மாதிரி தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனையில் இருக்கிறது.

அய்யா அவர்கள் பேசுகிறார்: அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர்களே! நீங்கள் இவ்வளவு பெரிய கரகோஷம், ஆரவாரம் செய்து (அந்தக் காலத்தில் பார்த்தீர்களேயானால் கைதட்டல் என்று போடமாட்டார்கள். கர கோஷம் என்றுதான் போடுவார்கள். நமஸ்காரம் தான் இருக்கும். அபேட்சகர் இருப்பார். அய்யா அவர்களின் இயக்கம் திராவிடர் இயக்கம் வந்ததினாலேதான். இவை எல்லாம் மாறியிருக்கின்றன).

எனக்கு மகிழ்ச்சியான வழியனுப்பு செய்யமாட்டார்கள்

என்னை வரவேற்ற மாதிரி எனது உபன்யாச முடிவில் எனக்கு மகிழ்ச்சியான வழியனுப்பு செய்ய மாட்டீர்கள் என்றே நினைக்கின்றேன். (கைதட்டல்).

(அதாவது, ஒழுங்காக அனுப்பப் போவதில்லை என்று அய்யா அவர்களே சொல்லுகின்றார். இந்த மாதிரி சொல்லுகிற தலைவரைப் பார்க்க முடியாது. எல்லோரும் என்ன சொல்லுவார்கள்? நீங்கள் பாராட்டி வழியனுப்பி வைப்பீர்கள் என்று தான் நினைப்பார்கள்) ஏனெனில் தமிழ் பாஷையில் வாழ்த்து கூறுதல் இலேசானதல்ல (இது ஒன்றே போதும் பிஎச்.டி.,க்குரிய தலைப்பாகும். ரொம்ப ஆழமாக சிந்திக்க வேண்டியது (கைதட்டல்)

அதிலும் என்போன்ற தமிழ் பாஷைக்கு வல்லின, இடையின எழுத்து பேதமும், பிரயோகமும் பாஷையின் இலக்கண, இலக்கியத்தை அறியாதவன், (உண்மையை அய்யா அவர்கள் அப்படியே சொல்லுகிறார்கள் பாருங்கள். அய்யா அவர்களுக்கு பெரிய ற ன போடுவதா? சின்ன ர ன போடுவதா? என்பதைப் பற்றிக் கவலை இல்லை. கருத்து போய் சேருகிறதா இல்லையா?

அய்யா அவர்களை கூந சுநஎடிடவ என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடத்தினார். இராமநாதன் அவர்களும், அய்யா அவர்களும் சேர்ந்துதான் நடத்தினார்கள்.

பெரும்பாலும் இராமநாதன் ஆங்கிலத்தில் எழுதுவார். தமிழில் இருக்கின்ற அய்யாவின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார். அய்யா அவர்களுக்கு உதவி ஆசிரியராக இருந்தவர். ஆங்கிலத்தில் நன்றாக எழுதக்கூடியவர்.

ஒரு கட்டம் வரையிலும் கூந சுநஎடிடவஇல் இரண்டு பேருடைய பெயரும் இருக்கும். இராமனாத னுடைய பெயர் அதற்குப் பிறகு இருக்காது. வெறும் அய்யா பெயர் மட்டும்தான் இருக்கும். நு.ஏ.சுயஅயளயஅல என்ற பெயர்தான் இருக்கும். புரூஃப் ரீடிங்கிற்கு ஆள்கேட்டால்.....

அய்யா அவர்களிடம், அய்யா, பத்திரிகைகளில் எழுத்துகள் தவறுதலாக வருகின்றன. இன்னும் கொஞ்சம் புரூஃப் ரீடிங்கிற்கு ஆள் போட வேண்டும் என்று சொல்லுவார்கள்.

பத்திரிகை அதிக அளவுக்குப் போகவில்லை. ஏகப்பட்ட நட்டத்தில் இருக்கிறது. இது தொடருமா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆகவே, இங்கிலீஷ் எழுத்தில் புரூஃப் ரீடிங் சரியில்லை, எழுத்துகள் தவறுதலாக இருக்கிறது என்றுதானே சொல்லுகின்றார்கள்? இங்கிலீஷ் பத்திரிகை உலகம் பூராவும் போறதில்லையா?

அரசாங்கத்தார் படிக்கிறார்களே என்று சொல்லுவதுண்டு. அய்யா அவர்களும் வெள்ளைக் காரர்கள் படிக்க வேண்டும், அரசாங்கம் நமது கருத்துகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கஷ்டப்பட்டு பத்திரிகையை நடத்துகிறேன் என்று அய்யா அவர்கள் சொல்லுவார்கள்.

புரூஃப் ரீடர்ஸ் தேவை என்று அய்யா அவர்களிடம் கேட்டதற்கு அய்யா அவர்கள் சொன்ன பதில் ரொம்ப எதார்த்தமான பதில். இங்கிலீஷ் தெரிந்தவனே கரெக்ட் பண்ணிக் கொள்வான்.

அய்யா சொன்னாராம். இங்கிலீஷ் தெரிந்தவன் அதைக் கரெக்ட் பண்ணி படித்துக்கொள்வான். இதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகின்றீர் என்று சொன்னாராம். (சிரிப்பு-கைதட்டல்).

பத்திரிகை நடத்தும் பொழுது இந்த மாதிரி துணிச்சலாக சொல்லுகிற ஒரு தலைவரைப் பார்க்க முடியாது.) அய்யா சொல்லுகிறார், தமிழ் பாஷைக்கு வல்லின, மெல்லின, இடையின எழுத்து பேதமும், பிரயோகமும், பாஷையும், இலக்கண-இலக்கியம் அறியாதவரும் தமிழ் பாஷையைக் கெடுத்து கொலை செய்து வருபவர் என்ற பழியைப் பெற்றவருமான நான் (அய்யா தன்னைப் பற்றிச் சொல்லுகிறார். இவர்தான் தமிழைக் கொலை செய்கிறவர், தமிழைக் கெடுக்கிறவர் என்று அய்யா அவர்கள் மீது குற்றம் சொல்லுவதை ஒப்புக் கொண்டு சொல்லுகின்றார்).

தமிழ் வாழ்த்துக்கு தகுதிக்கு உடையவனோ என்று பாருங்கள். அன்றியும் தமிழைப் பற்றி அபிப்பிராயங்களில் பண்டிதர்களுக்கும், எனக்கும் எவ்வளவோ வேறுபாடான கருத்துகள் இருந்து வருவதும் அறியாததல்ல.

பண்டிதர்கள் சொல்லுகின்ற கருத்து நேர்எதிரான கருத்து. எனவே, என்னைப் போய் தமிழ் வாழ்த்துக் குரியவன் என்று சொல்லுவது அறியாததா என்று சொல்லுகின்றார்.

பொறுப்பும்-பொருளும் இல்லாத....

நீங்களெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், வாழ்த்துவது என்பதை இவ்வளவு சாதாரணமாகக் கருதுபவன் அல்ல. வாழ்த்துதல் என்றால், பார்ப்பனர்கள் ஏதோ மஞ்சளையும், அரிசியையும் கலந்து, பொறுப்பும், பொருளும் இல்லாத ஒன்றின் பெயரைச் சொல்லி, (அய்யா அவர்கள் பயன்படுத்துகின்ற வார்த்தையை நீங்கள் கவனிக்க வேண்டும். அய்யா அவர்கள் தேவையில்லாமல் ஒரு வார்த்தையைக் கூட பயன்படுத்தமாட்டார்). ஆசிர்வாதம் செய்துவிட்டு ஏதோ பெற்று வயிறு வளர்ப்பது மாதிரி வாழ்க்கையை அவ்வளவு ஏமாற்றமாக நினைப்பவனும் அல்ல. இந்த தத்துவத்தை ரொம்ப பேர் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு அற்புதமான தத்துவம். காலம் காலமாக கல்லில் செதுக்கி வைக்கப்படக் கூடிய ஒரு தத்துவம்.

ஆனால் வாழ்த்துதலின் அவசியத்தையும், அதன் பொருளையும் நான் உணர்ந்தவனே ஆவேன். தகுதியும், பொறுப்பும் உடையவர்களே வாழ்த்த வேண்டும். வாழ்த்துபவர்கள் தங்களுக்குப் பொறுப்பு இருப்பதை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும்

(நீ நன்றாக இரு என்று ஒருவரை சொன்னால் அய்யா அவர்களுடைய எண்ணப்படி- அவர் நன்றாக இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு சொல்கிறவருக்கு இருக்க வேண்டும். (கைதட்டல்).

இவன் நாசமாகப் போக!

இவன் நாசமாகப் போக மாட்டானா என்று நினைத்துக்கொண்டே ரொம்ப பேர் நன்றாக இரு என்று சொல்லுகின்றான். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது சாதாரணம்). தமிழை வாழ்த்திவிட்டு தமிழுக்கு இடுக்கண் ஏற்படும் பொழுது கலையற்றவர்களும், (எவ்வளவு அழகாக அய்யா அவர்கள் சொல்லுகிறார்கள் பாருங்கள்) எவ்வித உதவியும், ஆதரவும் அளிக்கத் தகுதி அற்றவர்கள் வாழ்த்திப் பயன் என்ன? என்று கேட்கின்றார்.

தமிழ் வாழ்க என்று சொன்னால்....

எனவே, தமிழ் வாழ்க என்று நாம் சொன்னால் அதற்கு ஒரு பொறுப்பேற்க வேண்டும். தமிழுக்கு எப்பொழுதுதெல்லாம் இடையூறு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தலை கொடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு விலை கொடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதைத் தடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். இந்த மாதிரி சிந்தனையை யாரும் அவ்வளவு எளிதில் கேட்டிருக்க மாட்டார்கள்.

பெரியார் வாழ்க என்று நாம் சொல்லுகின்றோம்! பொறுப்போடு சொல்லுகின்றோம். சில பேர் எங்களிடம் கூட கேட்பார்கள். என்னங்க, பெரியார் இறந்துவிட்டார், நீங்கள் வாழ்க என்று கோஷம் போடுகிறீர்களே என்ற கேட்பார்கள். பெரியார் இறக்கவில்லை. ஈ.வெ.ராமசாமி என்கிற பெயரில் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஒரு தனி நபர். அவ்வளவுதான்.

பெரியார் என்பது ஒரு தத்துவம்!

பெரியார் என்பது காலம் காலமாக வாழக்கூடிய ஒப்பற்ற ஒரு தத்துவம் (கைதட்டல்). தலைவர்கள் மறைவதுண்டு. தத்துவங்கள் மறைவதில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில் ரொம்ப அழகாக சொல்லுகின்றார். மேலும் சொல்லுகிறார். கட்டளையிடப்பட்டுவிட்டேன்!

ஆகவேதான் இங்கு வாழ்த்துவதற்குத் தகுதியைக் கருதாமல், மூப்பையும், நரையையுமே கருதி கட்டளையிடப்பட்டு விட்டேன் என்று கருதுகின்றேன். (சிரிப்பு கைத்தட்டல்). (அய்யா அவர்கள் தன்னைத் தாழ்த்திக் கொண்டு எப்படி சொல்லுகிறார் பாருங்கள்). எனக்கு வயதாகிப் போய்விட்டது. அதற்காக என்னை வாழ்த்துக்கு கூப்பிட்டிருக்கின்றீர்கள் என்று அய்யா அவர்கள் சொல்லுகின்றார். (சிரிப்பு). அய்யா அவர்கள் எவ்வளவு அடக்க மாகச் சொல்லுகிறார் என்று பாருங்கள். இமயம் போன்ற தலைவர் எப்படிச் சொல்லுகிறார் பாருங்கள். அய்யா உண்மையைச் சொல்லு கின்றார்.

தமிழில் எந்த அளவும் பள்ளியில் பயின்றவன் அல்ல. தமிழைப் பற்றி, தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் வார்த்தையைப் பற்றியே பிடிவாதம் கொண்டவன் அல்ல. தமிழுக்காக எவ்வித தொண்டு புரிந்தவனும் அல்ல. தமிழுக்கு வாழ்த்து கூற தலைவரும் எனது நண்பருமான தோழர் திரு.வி.கலியாணசுந்தரம் முதலியார் அவர்களும், தமிழ்ச் சங்க அமைப்பு தோழர் க.நமச்சிவாய முதலியார் அவர்களும், மற்றும் அவர்கள் போன்ற பெரியோர்களே உண்மையில் தகுதி உள்ளவர்கள். (நான் இல்லை) தலைவர் கலியாணசுந்தர முதலியார் அவர்களின் தமிழ்த்தொண்டை நானே நன்றாய் அறிந்தவன். அவரது தமிழ்த்தொண்டிற்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் நானே ஆவேன். (சிரிப்பு- கைதட்டல்).

அற்புதமான செய்தி

(இது அற்புதமான செய்தி. யாரும் இந்த மாதிரி சொல்ல மாட்டார்கள்). கலியாணசுந்தரனா ருடைய சிறப்பு, பெருமை இவை யாவற்றையும் வேறு யாரும் சொல்ல வேண்டியதில்லை. என்னை மாற்றினார் பாருங்கள், அது தான் சிறப்பு என்று அய்யா அவர்கள் சொல்லுகின்றார். (கைதட்டல்). ஒவ்வொரு வரியும் மிக முக்கியம் இதைவிட இலக்கியச் சுவை வேறொன்றுமே கிடையாது. இதைவிட புதிய வெள்ளத்தை வேறு எங்கும் காண முடியாது. இதைவிட புதிய நோக்கையும் வேறு எங்கும் காண முடியாது.

அதனால்தான் நான் தலைப்பு கொடுக்கும் பொழுது, புது வெள்ளம், புது நோக்கு என்று கொடுத்தேன். தலைவர் கலியாணசுந்தரனார் அவர்களின் தமிழ்த்தொண்டை நானே நன்றாய் அறிந்தவன். அவரது தமிழ்த் தொண்டுக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் நானே ஆவேன்.

நான் தமிழை கொலை புரிவது நான் தமிழ் பேசுவதும், எழுதுவதும், தமிழை கொலை புரிவது மாதிரியானலும், நான் பல பத்திரிகைகள் நடத்துவதும், சுமார் 50, 60 புத்தகங்கள் வெளியிட்டதும் தலைவர் கலியாண சுந்தர முதலியார் அவர்கள் தமிழ் பாஷையில், நவசக்தி முதலிய பத்திரிகைகளின் தொண்டே யாகும். (கைதட்டல்).

திரு.வி.க. வழியாக அவர்களின் தேசபக்தன் பத்திரிகைக்குப் பிறகே தமிழ் அரசியல் மேடைகளை கைப்பற்றிற்று என்றே சொல்லு வேன். தமிழ் எப்பொழுது அரசியல் மேடை களைக் கைப்பற்றியது? திரு.வி.க அவர்களின் தேசபக்தன், மற்றும் நவசக்தி போன்ற பத்திரிகைகளுக்குப் பிறகேயாகும்.

தமிழ் பாஷையை காதில் கேட்டால்...

அப்பத்திரிகைகள் என்னை விட மோசமான வர்களின் தமிழ் பாஷையும், அரசியலை உணரவும், தமிழ் பேசவும் செய்து விட்டதால் தமிழ் பாஷையை காதில் கேட்டால் தோஷம் என்று கருதும் ஜாதியாலும் தமிழில் கலந்து கொள்ளவும் தமிழை வேஷத்திற்காக மதிக்கவு மாகச் செய்துவிட்டது. (சிரிப்பு-கைதட்டல்)

(அவன் உண்மையாக மதிக்கிறானா-இல்லையா என்பது அல்ல. தமிழை மதித்தால்தான் நமக்குப் பெருமை. தமிழைப் பாராட்டினால்தான் நமக்குப் பெருமை என்று ஒரு காலகட்டத்தை உண்டாக் கினார்கள். பார்ப்பனர்களுக்கு உள்ளுக்குள் தமிழ் நீஷ பாஷை. உள்ளுக்குள் துவேஷம், தமிழில் பேசக்கூடாது என்று நினைக்கிற வர்களுக்கு கூட இப்படி ஏற்பட்டிருக்கிறது. அய்யா அவர்கள் மேலும் எவ்வளவு அழகாக சொல்லு கிறார்கள் பாருங்கள்).

தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ்ச் செம்மல்கள்

பெரியார் க.நமச்சிவாய முதலியார் அவர்களது உழைப்பும், தமிழுக்கு மிகப்பெரிய தொண்டும் தமிழர்கள் மறக்க முடியாததுமான தொண் டாகும். பெரியார் க.நமச்சிவாய முதலியாரின் மிகுந்த முயற்சி இல்லாதிருந்திருக்குமேயானால் (இன்றைக்குப் பார்த்தீர்களேயானால் இவர்களை எல்லாம் நினைத்தே பார்ப்பதில்லை. இவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரிவதில்லை. இவர்கள் மாதிரி தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழ்மொழி தொண்டறச் செம்மல்கள், செம்மொழி செம்மல்களை வருகாலத் தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். மற்ற நாட்டு இலக்கியங்களில் அவர்களுடைய அறிஞர்களை எப்படி உயர்த்துகிறார்கள், அவர்களைப் பற்றி ஆய்வு செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

கலைஞர் நிச்சயம் செய்வார்

கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே நிச்சயமாகச் செய்வார்கள் (கைதட்டல்). ஏனென்றால் அவர் இதிலே நுண்மாண் நுழைபுலத்தோடு தெளிவாக நோக்கக் கூடியவர்கள். தமிழ் தாத்தா உ.வே.சா.தான் எல்லாம் செய்தார் என்று சிலர் சொல்லுவார்கள். செய்யலாம்.

க.நமச்சிவாய முதலியாருக்கு என்ன சம்பளம்? மற்றவர்களுக்கு என்ன சம்பளம்? பெரியார் போராடி வாங்கித்தந்தார். இந்தத் தகவலே பல பேருக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா? என்ற புத்தகத்தில் நாங்கள் எடுத்துப்போட்டு, இந்தக் குறிக்கோள்களை எல்லாம் எடுத்துச்சொல்லியிருக்கின்றோம். அய்யா சொல்லுகிறார் பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களின் உழைப்பும், தமிழுக்கு மிகப்பெரிய தொண்டும், தமிழர் மறக்க முடியாததுமான தொண்டாகும்.

பகிரங்கமாக அய்யாவின் கருத்து

பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களின் துணிந்த முயற்சி இல்லாதிருந்திருக்குமேயானால் இன்று தமிழ்ப் பாடப் புத்தகங்கள் பெரிதும் ஆரிய உபாத்தியாயர்களால் ஆரியமும், தமிழும் விபச்சாரித்தனம் செய்து பெற்ற பிள்ளைகளைப் போல இடம்பெற்றிருக்கும். (பகிரங்கமாக அய்யா அவர்கள் அடித்துவிட்டார் பாருங்கள்)

------------(தொடரும்) ---”விடுதலை”- 24-10-2010

0 comments: