Search This Blog

22.10.10

சீரடி சாய்பாபா ஆசிரமத்தில் பார்டான்ஸ் ஆட்டக்காரப் பெண்கள்

சீரடி பாபா

சீரடி சாய்பாபாபற்றி ஒரு காலத்தில் பேசப்பட்ட துண்டு. பெரிதாகப் பேசப் பட்டவர்தான் சாய்பாபா புகையிலை வரை வியாபாரத்துக்கு வந்ததுண்டு. புட்டபர்த்தி சாய்பாபா வந்த வுடன் இந்த சீரடி சாய்பாபா காணாமல் போய்விட்டார்.

புட்டபர்த்தி செய்யும் சித்து - தந்திர விளை யாட்டுகளுக்கு முன் அந்த ஆசாமிபற்றிய அளப்புகள் எடுபடாமல் போயிற்று.

புட்டபர்த்தியின் மவுசு கொஞ்சம் மங்க ஆரம்பித்தவுடன், சீரடி சாய்பாபாவை வைத்து சிலர் போனி பண்ணலாம் என்று நினைக்கி றார்கள் என்று தெரிகிறது.

திடீரென்று ஒரு தகவலை ஊடகங்களில் கசிய விட்டனர். சேலம் சூரமங்கலம் முல்லை நகரில் சீரடி சாய்பாபா கோயில் ஒன்று இருக்கிறது. விஜயதசமியன்று சாய்பாபா சிலையில் இருந்து திடீரென்று விபூதி கொட்ட ஆரம்பித்தது என் பதுதான் அந்தச் செய்தி. இந்தத் தகவலை வெளியிலே பரப்பியதுதான் தாமதம் வழக்கம்போல பக்திப் பாமரத் தன்மைக்குப் பலியாகும் ஆசாமிகள் குவியத் தொடங்கிவிட்டனராம். (உண்டியல் வசூல்பற்றி தகவல் இல்லை).

புட்டபர்த்தி சாய்பாபா பற்றியும் தொடக்கத்தில் இப்படிதான் கிளப்பிவிட் டார்கள். சாய்பாபா படம் உள்ள கண்ணாடிச் சட்டத்திலிருந்து திருநீறு கொட்டோ கொட்டென்று கொட்டியது என்று கிளப்பி விட்டார்கள். அந்தக் கதை கொஞ்ச நாள் போனியானது; உண்மையாக இருந்தால்தானே தாக்குப் பிடிக்கும்? சில நாள்களிலேயே அதன் சாயம் வெளுத்து நமத்தும் போய்விட்டது!

அதற்குப் பின் வேறு சில யுக்திகளைக் கையாண்டார்; லிங்கம் கக்க ஆரம்பித்தார். நமது திராவிடர் கழக தந்திரக் கலைஞர்கள் பொதுக்கூட்ட மேடைகளில் மிகச் சர்வசாதாரணமாக லிங்கம் கக்கிக் காட்டினார்கள். அந்தக் கப்சாவும் காணாமல் போய்விட்டது.

இப்பொழுது புட்ட பர்த்தி சாய்பாபா வயோதிகத்தின் தலைமாட்டில், நோய்களின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறார் (அவர் நலமாக இருக்கட்டும் - நமக்கு அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை).

இதுதான் தருணம் என்று சீரடி காலடி வைக்கப் பார்க்கிறது. வடநாட்டு ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று (ஹெட்லைன்ஸ்) ஒரு தகவலை ஒளிபரப்பியது (24.9.2010).

சீரடி சாய்பாபா ஆசிரமத்தில் கணபதி விழா கொண்டாட்டத்தில் பொம்மைகளைக் கரைப்பதற்கு முன் பார்டான்ஸ் ஆட்டக்காரப் பெண்களைவிட்டு ஆடவிட்டார்களாம்! எல்லாம் ஒரு கவர்ச்சிதான்!

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு மாடல் பெண்கள் அரை குறை உடையுடன் ஆட வில்லையா? அதே நிலை சீரடி சாய்பாபா ஆசிரமத்துக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

பேஷ்! பேஷ்!! இது அல்லவோ பக்தியின் பரிணாம வளர்ச்சி!

---------- மயிலாடன் அவர்கள் 22-10-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

RAJA RAJA RAJAN said...

இது மட்டும் தானா...?

நம்மூரில் இன்னும் கூட நடக்கும்...!

Chittoor Murugesan said...

அம்மா!
காதல் புனிதமானது
காதலர்கள் தான் துரோகம் செய்கிறார்கள்.

நட்பு புனிதமானது
நண்பர்கள் தான் துரோகிகளாக மாறுகிறார்கள்.

ஆன்மீகமும் இப்படித்தான். ஆன்மீகவாதிகள் அதை நாறடிக்கிறார்கள்.

இது போன்ற மூட நம்பிக்கைகளை கிழியுங்கள். நானும் கிழிக்கிறேன்.

ஏற்கெனவே பல முறை ( ஹி ஹி ஓரிரண்டு முறை) சொல்லியிருக்கிறேன்.

இறை நம்பிக்கையாளர்களையும், மூட நம்பிக்கையாளர்களையும் பிரித்து மேயுங்கள்.

நல்ல பலன் உண்டு. பெரியாரின் பகுத்தறிவுக்கு ஆன்மீகத்தில் மிக்க அவசியம் உண்டு.

அதனை கடைபிடிக்க சொல்லி எஜுக்கேட் செய்யுங்கள்.

மூட நம்பிக்கையாளர்களை மன்னிக்கவே கூடாது.

இறை நம்பிக்கையாளர்களை மன்னித்து தான் ஆகவேண்டும்.

அவர்கள் இறைவனை நம்பினாலும்
மனுதர்மம் இத்யாதி பீலாக்களை நம்புவதில்லை. அவர்களை திருத்தப்பாருங்கள்.

உங்கள் எழுத்துக்களில் இருந்து துரத்திவிடாதீர்கள்

kaja nazimudeen said...

"சீரடி சாய் பாபா ஆசிரமத்தில் பார் டான்ஸ் ஆட்ட பெண்கள்" - பக்தியின் பரிணாம வளர்ச்சி என்று தான் நினைக்க தோன்றுகிறது.